Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ள சுற்றுலா பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடு இல்லை ; பிரசன்ன ரணதுங்க (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) கொவிட் தொற்று நிலைமையால் சுற்றுலா வியாபாரிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். புதிய வழிகாட்டலின் பிரகாரம் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தல் செயற்பாடின்றி தமது சுற்றுலாவைத் தொடர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா பயணிகளுக்கு நாட்டை முழுமையாக திறப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்போம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்ப…

  2. யாழில்... மீள் குடியமர்த்தப் படவுள்ள, மக்களின் விபரங்களை திரட்டும் பணி ஆரம்பம் உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில், மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலதிக மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “யாழில் போரினால் இடம்பெயர்ந்து தற்போதும் வேறு பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்களின் விபரங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன. மேலும் பல்வேறு பிரதேசங்கள் மீள்குடிமர்த்துவதற்கு அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மீள்குடியமராத குடும்பங்கள் தொடர்பான விபரங்கள் அவர்கள், தற்போது வசிக்கும் பிரதேச செயலகங்களின…

  3. நாடாளுமன்ற உறுப்பினராக... பசில் நியமிக்கப்பட்டமை, அரசமைப்புக்கு புறம்பானது – CPA குற்றச்சாட்டு! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமையானது, அரசமைப்புக்கும் இறையாண்மைக்கும் முற்றிலும் புறம்பானது என மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சுட்டிக்காட்யுள்ளது. இந்த விடயம் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட ரீதியான வேட்பாளர் பட்டியல் மற்றும் தேசியபட்டியல் ஆகியவற்றில் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்காத பசில் ராஜபக்ஷ, தற்போது வெற்றிடமாகியிருக்கும் தேசியபட்டியல் ஆசன…

  4. நாட்டை ஏலம் கோரி விற்கும் நிலைக்கு சென்றுவிட்ட அரசு: சுரேஷ் தமிழ் மக்களையே அழித்த சிங்கள, பெளத்த மேலாதிக்க சக்திகள் இலங்கையின் இறையாண்மையைக் காப்பதற்காக தமிழ், முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுகின்ற நிலையை நாங்கள் பார்க்கின்றோம். இலங்கையை ஆட்சி செய்த அரசுகள் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்த்திருப்பார் களாயின் இவ்வாறு மண்டியிட வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். நேற்று மதியம் யாழ்.ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்…

  5. தேர்தல் முறை மறுசீரமைப்பு குறித்து 115 முன்மொழிவுகள் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள் வதற்காக நியமிக்கப் பட்டுள்ள பாராளு மன்ற விசேட குழுவுக்கு 115 முன் மொழிவுகள் மற்றும் யோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்தத் தகவலை அக் குழுவின் தலைவரும் சபை முதல்வரும் வெளி நாட்டு அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பாராளு மன்றத்தில் நேற்று இடம் பெற்ற அந்தக் குழுக் கூட்டத்தின் போது தெரிவித்தார். ஏற்றுக் கொள்ளப்பட்ட 7 அரசியல் கட்சிகளின் மூலம் யோசனைகள் முன்வைக்கப் பட்டுள்ளன எனவும், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அந்தக் கட்சிகளுக்கு யோசனைகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். அந்த யோசனைக…

  6. நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் மீதான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ் நகரப்பகுதியில் யாழ் போதனா மருத்துவமனையின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படவேண்டிய ஒன்றரை ஏக்கர் காணி இராணுவத்தினருக்கு வழங்கப்படுவதற்கு சுகாதார அமைச்சின் செயலாளரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. யாழ் போதனா மருத்துவமனையில் உரை நடைபிரிவு அமைக்க காணி இல்லாது இன்றுவரை கட்டிடம் கட்டப்படவில்லை. இதேபோன்று மகப்பேற்று விடுதியில்லை. சிறுவர் சிகிச்சை விடுதியில்லை. கண் சிகிச்சை விடுதியில்லை . இவ்வாறான நிலையில் அந்த ஒன்றரை ஏக்கர் காணி இராணுவத்தினரு…

  7. வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நீர்வேளாண்மை பண்ணைகளை அமைப்பற்கு தேவையான காணிகள் தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளார். வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. இரத்நாயக்காவுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. வனஜீவராசிகள் அமைச்சில் நேற்று (07.07.2021) இடம்பெற்ற சந்திப்பின்போது, வடக்கு மாகாணத்தில் தற்போது வனத்துறையினரினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில், யுத்தத்திற்கு முற்பட்ட காலப் பகுதியில் விவசாய…

  8. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் சகல துறைகளும் இராணுவ மயமாக்கலுக்கு உற்படுத்தப்பட்டு வருவதைப்போல நாட்டின் உயர்கல்வியும் இன்று இராணுவ மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளதெனவும், இன்று முன்னெடுக்கும் இராணுவ மயமாக்களில் உயர் இராணுவ அதிகாரிகளை முனைவர் பட்டம் கொடுத்து ஏனையவர்களை மட்டந்தட்டும் நடவடிக்கைகளே இடம்பெறப்போகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர்கள் இதனை கூறினர். அவர் மேலும் கூறுகையில், 1970களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்…

  9. மஹிந்தவின்... அமைச்சு, பசில் வசம்! நிதி அமைச்சராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். https://athavannews.com/2021/1227332 மஹிந்தவுக்கு புதிய அமைச்சு – ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். …

  10. நீண்ட நாட்களின் பின்னர் பாராளுமன்றம் வந்த சம்பந்தன் July 7, 2021 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நீண்ட நாட்களின் பின்னர் பாராளுமன்றத்துக்கு நேற்று செவ்வாய்க் கிழமை சக்கர நாற்காலியில் வருகை தந்தார். பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க் கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணிக்கு கூடியது. பாராளுமன்றம் கூடிய சிறிது நேரத்தில் இரா.சம்பந்தன் சக்கர நாற்காலியில் பாராளுமன்ற உதவியாளர்களினால் சபைக்குள் அழைத்து வரப்பட்டார். ஆனால் சக்கர நாற்காலியில் வருகை தந்தால் எதிர்க் கட்சி தரப்பில் கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்க முடியும் என்பதனால் தான் தனது ஆசனத்தில் அமர வேண்டுமென சம்பந்தன் கூறியதனால் அவரை வெளியே அழை…

  11. வியாழேந்திரனின்... பாதுகாப்பு உத்தியோகத்தினாரல், கொல்லப் பட்டவருக்கு... நீதி கோரியவர்கள் கைது! தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் இன்றைய தினம்(புதன்கழமை) மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின், இல்லத்திற்கு முன்பாக இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனுக்கான நீதி வேண்டி இன்றைய தினம் அவரது பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மட்டக்களப்பு காந்திப் பூங்காவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்வதற்கு முயற்சித்தனர். இதன்போது அங்கு வருகை தந்த பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தின் படி ஆர…

    • 4 replies
    • 444 views
  12. டியூப் தமிழ் பணிப்பாளர் டிவினியா நிலுசியின் விவகாரம்: சி.ரி.ஐ.டி பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை ( எம்.எப்.எம்.பஸீர்) டியூப் தமிழ் எனும் இணைய ஊடகத்தின் பணிப்பாளர் டிவினியா நிலுசினியின் தடுப்புக்காவல் தொடர்பில் விளக்கமளிக்க எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். டென்மார்கை தலைமையகமாக கொண்டு யாழ்பாணத்தில் இயங்கும் யூ டியூப் அலைவரிசையான டியூப் டமில் இணைய ஊடகத்தின் பணிப்பாளர் டிவினியா நிலுசினியினை கைது செய்து பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தடுப்புக்க…

  13. இராணுவத்தினருக்கு வழங்கவுள்ள காணியை யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கையளிக்க வேண்டும்; செல்வராஜா கஜேந்திரன் எம்.பி (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படவேண்டிய ஒன்றரை ஏக்கர் காணியை இராணுவத்தினருக்கு வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி அந்தக் காணியை யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கையளிக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராஜா கஜேந்திரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் மீதான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில், …

  14. புதிய அமைச்சுக்கான... அதி விசேட, வர்த்தமானி வெளியீடு பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சு என்ற புதிய அமைச்சு அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். அத்தோடு, அவர் அமைச்சுப் பதவியொன்றையும் இன்றையதினம் பெற்றுக்கொள்ளவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய அமைச்சுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1227286

  15. தமிழர்களை... இலங்கையர்களாக, ஏற்க சீனா மறுக்கின்றதா? -மனோ கேள்வி தமிழர்களை இலங்கையர்களாக ஏற்க சீனா மறுக்கின்றதா என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், உதயகுமார் பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதுவர் வினோத் ஜேகப், அரசியல் செயலாளர் பானு பிரகாஷ் உள்ளிட்ட இந்திய தரப்பை இந்திய இல்லத்தில் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவ…

  16. கடல் அரிப்பிற்கு உள்ளாகும் மன்னார் அல்லிராணி கோட்டை July 4, 2021 மன்னார் முசலி பிரதேசத்திற்கு உட்பட்ட அரிப்புத்துறையில் அமைந்துள்ள தமிழர்களின் வரலாற்றை பறை சாற்றி நிற்கும் அல்லிராணி கோட்டையானது கடலரிப்பினால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக அவ்வூர் மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழர்களின் மரபுரிமை வரலாற்று சின்னம் ஒன்று மெல்ல மெல்ல அழிவடைந்து கொண்டிருப்பதை எவரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள். கடல் அரப்பிற்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் அல்லிராணி கோட்டைப் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு கடலரிப்பு ஏற்பட்ட பகுதியில் 100 மீட்டர் அளவில் பாறைகள் போடப்பட்டு கோட்டை பகுதி மட்டும் கடலரிப்பினால் பாதிக்கப்படாமல் தடுப்பணை ஏற்ப…

    • 47 replies
    • 3k views
  17. த.ம.வி.புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தனுக்கு பிணை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அவருக்கு பிணை வழங்கியுள்ளது. கோவிட் 19 அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற் கொண்டு இன்று ஸூம் தொழில்நுட்பத்தின் ஊடாக குறித்த வழக்கு விசாரனைகள் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரசாந்தன் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த மேன்முறையீட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. https://www.meenagam.com/த-ம-வி-புலிகள்-கட்சியின்-ப/

  18. மென்டீஸ் நிறுவனத்திற்கு... வழங்கப்பட்ட அனுமதி, ஜனாதிபதியின் ஆலோசனையை அடுத்து இரத்து அர்ஜுன் அலோசியிற்கு சொந்தமான W.M.மென்டீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, அமைச்சரவை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்து செய்வதற்கான ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மதுபான உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க நிறுவனம் கோரிய பல கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை …

    • 3 replies
    • 301 views
  19. யாழ். பழைய கச்சேரி கட்டிடத்தை... சீனாவிற்கு, விற்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை – பிரதமர் அலுவலக தகவல் பழைய கச்சேரி கட்டிடத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அறிய முடிகின்றது. குறித்த இடத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாக அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார். மேலும் இதன் நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பிரதமரின் மீள்குடியேற்ற செயற்றிட்டத்திற்கான வடக்கு, கிழக்கு மாகாணத்தின் விசேட அதிகாரி கீதனாத் காசிலிங்கம்…

  20. பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான நாடகமே காணாமல் போனோர் அலுவலகம் July 7, 2021 சிறிலங்காவின் நீதித்துறை நம்பகம் அற்றது – பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை புறம் தள்ளி எடுக்கப்படும் முயற்சிகள் ஒரு போதும் நீதியை பெற்றுத் தராது – பொறுப்புக் கூறலுக்கான சர்வதேச அழுத்தங்களில் இருந்து தம்மை பாதுகாப்பதற்காக செய்யப்பட்ட ஒரு அலங்காரமே இந்த காணமற் போனோரை கண்டறிவதற்கான அலுவலகமே. இவை நீதியை பெற்றுக் கொடுக்கப் போவது கிடையாது. – இந்த அலுவலகத்தின் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பொறுப்புக் கூறலில் இம்மியளவும் முன்னேற்றத்தை காட்டாது ஆறு வருடங்களை கடந்த அரசு கடத்த முடிந்தமை இதற்கு ஒரு உதாரணமாகும். இவ்வாறு நேற்று பாராளுமன்றத்தில் கூறியிருக்கின்றார் தமிழ்த் தே…

  21. மன்னாரில்... 777 கிலோ, உலர்ந்த மஞ்சள் பொலிஸாரினால் தீயிட்டு அழிப்பு இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாரிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூட்டைகள், பொலிஸாரினால் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் கட்டி மூட்டைகளே தாராபுரம் காட்டு பகுதியில் வைத்து தீயிட்டு, நேற்று (திங்கட்கிழமை) அழிக்கப்பட்டுள்ளது. அதாவது 28 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட 777 கிலோ 600 கிராம் உலர்ந்த மஞ்சள், சுகாதார நடைமுறையை பின்பற்றி தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1227049 ############ ############# ########…

    • 1 reply
    • 199 views
  22. அமைச்சுப் பதவிக்கு போட்டி – ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே குழப்பம்? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆங்கில ஊடகமொன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வசமுள்ள நிதி அமைச்சுப் பதவியை பசில் ராஜபக்ஷ கேட்டுள்ளார் என்றும் ஆனால் அதை பிரதமரும் அவரது குடும்பத்தினரும் நிராகரித்தனர் என்றும் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஜயந்த கெட்டகொட நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை 8ஆம் திகதி அதாவது நாளைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ப…

  23. ஜே.வி.பியின் முக்கியஸ்தர்கள் இருவர் கைது மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயற்பாட்டாளர்களான சமந்த வித்தியாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன ஆகிய இருவரும் பொலிஸில் சரணடைந்தனர். அதன்பின்னர், அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 1ஆம் திகதியன்று பொரலந்த பகுதியில் இடம்பெற்ற, விவசாய ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே அவ்விருவருக்கும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, பெருந்திரளான மக்களை ஒன்றுதிரட்டி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜ-வ-பயன-மககயஸதரகள-இரவர-கத/175-275778

  24. சீன கம்யூனிஸ்ட் கட்சியின்... 100ஆவது ஆண்டு பூர்த்தி – 1000 ரூபாய் நாணயம் வெளியீடு! இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, புதிதாக 1000 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி.லக்ஷ்மனவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று இந்த நாணயம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நினைவு நாணயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர உறவுகளுக்கான விசேட கௌரவமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் இலங்கை மற்றும் சீனாவின் தேசி…

  25. ஏன்... எமது மக்களை, அச்சுறுத்துகின்றீர்கள் – சாணக்கியன் சபையில் கேள்வி! நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் பொலிஸார் ஊடாக அச்சத்தினை விதைத்து எதனை சாதிக்கப்போகின்றீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மடக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில பொலிஸார் எனது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிப்பது இல்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான எனது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிப்பது இல்லை. அவ்வாறானவர்களின் பெயர்களை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. போதைப்பொருள் கடத்தல் குற்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.