Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒரு மில்லியன்... "சினோபார்ம்" தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும், ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கை ஆரம்பத்தில் 6 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து நன்கொடையாகப் பெற்றது. இந்த தடுப்பூசிகள் ஆரம்பத்தில் இலங்கையில் வசிக்கும் சீன நாட்டினருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் சீன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த பின்னர், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அத…

  2. கொரோனா வைரஸ், பரவலை கட்டுப்படுத்துவதற்கு... 286 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது- அரசாங்கம் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயற்றிட்டத்திற்கு இதுவரை 286 பில்லியன் ரூபாயை, அரசாங்கம் செலவிட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் செயற்றிட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல மேலும் கூறியுள்ளதாவது, ‘அரசாங்கம் தடுப்பூசிக்காகவே பாரிய தொகையினை செலவிட்டுள்ளது. மேலும் நிவாரணப் கொடுப்பனவும் உரியவாறு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் புத்தாண்டு கால…

  3. நாடு ஆபத்தான நிலையை நோக்கி நகர்வதாக GMOA எச்சரிக்கை 15 Views புத்தாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட ‘புத்தாண்டுக் கொத்தணியில்’ இருந்து இதுவரையில் சுமார் 97 ஆயிரம் கோவிட் – 19 தொற்றாளர்கள் இனங்காணப் பட்டிருக்கிறார்கள். அதேபோன்று இதுவரையில் நிகழ்ந்த 1,608 கொரோனா மரணங்களில் சுமார் 974 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் அடையாளங்காணப் பட்டவர்களாவர். எனவே மொத்த கொரோனா மரணங்களில் 60 சதவீதமானவை புத்தாண்டுக் கொத்தணியின் போது இனங்காணப்பட்ட நோயாளர்களை உள்ளடக்கியதாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார். கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண…

  4. பெயர் பலகையில் சிங்களத்தை நீக்கியது இந்தியா 99 Views இலங்கையின் தென்பகுதியை ஆக்கிரமித்துவரும் சீனா அதன் நிறுவனங்கள் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான அறிவித்தல் பலகைகளில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழை நீக்கி சீன மொழியை புகுத்தி வருகின்றது. இந்த நிலையில் சீனாவின் பிரசன்னத்தால் சினமடைந்த இந்தியா யாழில் உள்ள தனது துணைத் தூதரகத்தின் பெயர்பலகையில் இருந்து இலங்கையின் மற்றுமொரு உத்தியோகபூர்வ மொழியான சிங்களத்தை நீக்கி தனது மொழியான இந்தியை புகுத்தியுள்ளது. இது தற்செயலாக மேற்கொள்ளப்பட்டதா அல்லது சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து வடக்கு கிழக்கு மாகாணங்களை காப்பாற்ற இந்தியா முயன்று வருகின்றதா என கொழும்ப…

  5. மட்டக்களப்பு- இருதயபுரத்தில் விசேட தேவையுடைய ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு மட்டக்களப்பு- இருதயபுரம் பகுதியிலுள்ள செவிப்புலனற்றோர் அலுவலகம் ஒன்றிலிருந்து, விசேட தேவையுடைய ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருதயபுரம்- ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் தங்கியிருந்த செபஸ்டியான் ஜெயந்தன் குரூஸ் (49வயது) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மட்டு.மாவட்ட செயலகத்தில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் இவர், செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்…

  6. சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமணம்; வவுனியாவில் மண்டபம் ‘சீல்’ வைக்கப்பட்டது 5 Views வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றமையால் திருமண மண்டபம் சுகாதாரப் பிரிவினரால் நேற்று மாலை ‘சீல்’ வைத்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் மன்னாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி அதிகளவிலான உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டமையுடன், சுகாதார அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், அங்கு …

  7. “எக்ஸ்பிரஸ் பெர்ள்” அனர்த்தம்- பிரித்தானிய தொழிநுட்ப உதவியை இலங்கை கோரியுள்ளது! June 5, 2021 இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், சாரா ஹல்டனுக்கும் (Sarah Hulton)ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இடையிலான சந்திப்பொன்று, நேற்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு பற்றி கருத்துத் தெரிவித்தார். வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சிக்கு, பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் அவதானம் செலுத்த…

  8. கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூட கரைச்சி பிரதேச சபையில் தீர்மானம்! கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு கரைச்சி பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், அடைத் தொழிற்சாலை நிர்வாகம் இதற்கு ஒத்துழைக்காவிடின் நீதிமன்ற்ததை நாடவும் சபை அங்கிகாரம் வழங்கியுள்ளது. கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன. மேலும், கரைச்சி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் ப…

  9. மாகாண மட்டத்தில்... ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமை – கல்வி அமைச்சு பைலட் திட்டத்தின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இத்தகைய பாடசாலைகள் அமைக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். இத்திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில், நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வியை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவர்களின் எண்ண…

  10. தென் அமெரிக்க நாடுகள்... மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்களுக்கு தற்காலிக தடை! கடந்த 14 நாட்களில் தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்தது அனைத்து விமான நிறுவங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தேமிய அபேவிக்கிரம தெரிவித்தார். இம்மாதம் முதலாம் திகதி முதல் விமான நிலையங்கள் அனைத்தும் மீளத் திறக்கப்பட்டன போதும் இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணிகளுக்கு இதற்கு முன்னர் விதித்திருந்த தற்காலிக தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் கொரோனா தொற்ற…

  11. மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட பகுதிகளுக்கு... யாழில் இருந்து மீன் விநியோகம்! மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட பகுதிகளுக்கும் மீன்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் மற்றும் பல பகுதிகளில் உள்ள கடல்களில் இருந்து பிடிக்கப்பட்ட மீன்கள் நீர்கொழும்பில் உள்ள ஒரு மையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மீன்களை மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலில் கப்பல் தீ விபத்துக்குள்ளானதால், நீர்கொழும்பு முதல் பானந்துறை வரையிலான கடற்பரப்பில் மீன் பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் துறை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http…

    • 1 reply
    • 343 views
  12. பயணத்தடையில் பட்டிணியால் தவிக்கும் வவுனியா கற்குளம் மக்கள் 29 Views கொரோனா வைரஸ்தாக்கத்தை தணிக்கும் முகமாக இலங்கை அரசினால் பயணத்தடை முடக்கநிலை அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா பல கிராமப்புறங்களில் வாழும் தினக்கூலி மக்கள் தொழில்வாய்ப்பின்றி குடும்பத்துடன் பட்டிணியால் வாடிவருகின்றனர். வவுனியா பிரதேச செயலகப் பிரிவுற்குட்பட்ட சிதம்பரபுரம் கற்குளம் படிவம் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விறகுவெட்டுதல், மேசன்வேலை, கூலிவேலைகளுக்கு சென்று அதன்மூலம் பெறப்படுகின்ற வருமானத்தில் குடும்பச் செலவை நகர்த்திச் செல்லும் மக்கள் தற்போதைய பயணத்தடை காரணமாக உணவின்றி பட்டிணியால் பெரும் ச…

  13. ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர்-ஜெனிவா உட்பட பல விடயங்கள் ஆராய்வு 160 Views இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், சாரா ஹல்டன் (Sarah Hulton) அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு பற்றி கருத்துத் தெரிவித்தார். வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துவரும் முயற்சிக்கு, பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாகவும்…

  14. பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் இன்று (04) சிலர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த 14 பேரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அவர்களில் சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். -எம்.றொசாந்த் Tamilmirror Online || யாழில் தொழுகையில் ஈடுபட்டவர்க…

  15. கடலில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க, தீ விபத்துக்கு உள்ளான கப்பலின் உரிமையாளர்கள் இணக்கம் கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர்கள் நாட்டின் கடலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் கப்பலில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பெற தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என வணிகக் கப்பல் செயலகத்தின் இயக்குநர் ஜெனரல் அஜித் செனவிரத்ன தெரிவித்தார். இலங்கை அதிகாரிகள் தீயை அணைக்க இடைவிடாமல் போராடினர் என்றும் அவர் குறிப்பிட்டார். மொத்த இழப்பீடு பெற சட்டமா அதிபர் மூலம் கோரிக்கைகள் வைக்கப்படும் என்று…

  16. யாழில்... தொழுகையில் ஈடுபட்ட 14 பேர், தனிமைப்படுத்தலில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் 14 பேர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த விடயம் குறித்து அறிந்த யாழ்ப்பாண பொலிசார் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள், தொழுகையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அதன்படி, சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும…

  17. யாழில்... தொழுகையில் ஈடுபட்ட 14 பேர், தனிமைப்படுத்தலில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் 14 பேர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த விடயம் குறித்து அறிந்த யாழ்ப்பாண பொலிசார் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள், தொழுகையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அதன்படி, சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும…

  18. பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இலங்கை June 4, 2021 கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது. எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட் – டொபாகோ ஆகிய 07 நாடுகளே இவ்வாறு சிவப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் பிரித்தானியப் பிரஜைகள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2021/161886/

  19. இலங்கை உள்ளிட்ட... சில நாடுகளுடன், 25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா திட்டம் 25 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இலங்கையையும் தெரிவு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளுக்கான கோரிக்கைகளை அமெரிக்கா பெற்றுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அமெரிக்கா தனது நன்கொடை தடுப்பூசி அளவுகளில் கால் பகுதியை நேரடியாக தேவைப்படும் நாடுகள், அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்காவிடம் உதவியைக் கோரிய ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளது. அதற்கமைய இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைதீவு, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்…

  20. அரசாங்கத்தின் ஆதரவாளர்களை பாதுகாத்துக்கொண்டிருக்காது, சுகாதார துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை இன்று முன்னெடுத்த நிலையில், அரச தாதியர் சங்கம் உட்பட ஆறு சுகாதார அமைப்புகள் இணைந்து, மட்டக்களப்புக் களுவாஞ்சிகுடியிலும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் போராட்டத்துக்கு ஆதரவை வழங்கியதோடு,“ சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் தங்களது பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளினை முன்வைத்தே பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.“ என்றார். இவர்களின் இந்த கோரிக்கைகளுக்கு அ…

  21. -விஜயரத்தினம் சரவணன், சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள இந்தக் காலப்பகுதியில் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி வளச்சுறண்டல்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய வருகை என்பன இடம்பெறுவதாக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இவ்வாறு பயணக்காட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும,; அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், தற்போதுள்ள கொவிட் -19 அசாதாரண நிலைகாரணமாக நாட்டின் சகல பகுதிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றார். 'இந்நிலையில் இந்தப் பயணக் கட்டுப்பாடுகள…

  22. கடலுணவு உண்பது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் ஏதும் இன்றி, உண்மையைப் பொய்யாகவும் - பொய்யை உண்மையாகவும் புரட்டி புரட்டி போடுகின்ற தொழில் திறனின் அடிப்படையில் பொறுப்பற்ற கருத்தினை சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் "கடலுணவுகளை உட்கொள்தற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை" என்ற கடற்றொழில் அமைச்சரின் கருத்து பொறுப்பற்றது" என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனினால் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக இன்று (03.06.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறித்தவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கப்பல…

  23. இராஜாங்க அமைச்சராக நாமல் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், அவர் இன்று (வியாழக்கிழமை ) பதவியேற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் நாமல் ராஜபக்ஷ அமைச்சரவை அந்தஸ்துள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இராஜாங்க அமைச்சராக நாமல் – Athavan News

  24. மட்டக்களப்பு- யாழில் சுகாதார ஊழியர்கள் புறக்கணிப்பு போராட்டம் 13 Views மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்று சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று(வியாழக்கிழமை) வைத்தியசாலைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து நாடளாவிய ரீதியில் இந்த பணிபுறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று காலை 7 மணி தொடக்கம் 12 மணிவரை தமது கடமைகளில் இருந்து வெளியேறி 15 அம்ச கோரிக்கையினை முன்வைத்து வைத்தியசாலை நிர்வாக பணிமனைக்கு முன்னால் ஒன்ற…

  25. கொழும்பிற்குள் நுழைய இன்றும் வாகனங்கள் நீண்ட வரிசைகளாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இன்றைய தினத்திலும் கொழும்பு நகரிற்குள் நுழைவதற்கு வாகனங்கள் நீண்ட வரிசைகளாக இருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொட பகுதியில் இன்று காலை நீண்ட வரிசையாக வாகனங்கள் இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். நீர்கொழும்பு - கொழும்பு வீதியில் இருந்த நீண்ட வரிசைகளை வான்வழி காட்சிகள் ஊடாக அவதானிக்க கூடியதாக இருந்தது. வத்தளையில் இருந்து பேலியகொட வரையில் இவ்வாறு நீண்ட வரிசை இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பிற்குள் நுழைய இன்றும் வாகனங்கள் நீண்ட வரிசைகளாக (adaderana.lk)

    • 0 replies
    • 292 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.