ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
அமெரிக்க காங்கிரஸில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உள்ளனர் – இலங்கை வெளிவிவகார அமைச்சு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அமெரிக்க காங்கிரஸ் சபையில் உள்ளதாக இலங்கை குற்றம்சாட்டியுள்ளது.அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டெபோரா கே.ரோஸ் உள்ளிட்ட நான்கு உறுப்பினர்கள் அடங்களாக அந்த நாட்டு காங்கிரஸ் சபையில் கடந்த 18ஆம் திகதி இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள H.RES.413 யோசனைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.மே 18 ம் திகதி சபையின் வெளிவிவகார குழுவின் பரிசீலனைக்கு அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தீர்மானத்தில் ஆதாரமற்ற அப்பட்டமான பொய்களை அடிப்பட…
-
- 1 reply
- 287 views
-
-
முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளர் கைது! முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரான முன்னாள் போராளி ஒருவரை இன்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். கட்சியின் பொருளாளராக செயற்பட்டு வந்த நாகலிங்கம் பிரதீபன் என்பவரை மட்பாண்ட வீதி போரதீவு பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். குறித்த நபரை தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிசார் இதில் கை…
-
- 2 replies
- 433 views
-
-
ஐம்பதாயிரம் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா? June 3, 2021 வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கோவிட் தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது எதற்காக? என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (3) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,, ஐம்பதாயிரம் கோவிட் தடுப்பூசிகளும் அரசாங்கத்தின் அறிவிப்பு ஆரம்பத்தில் வட மாகாண மக்களுக்கென தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு செலுத்தி முடிக்கப்பட்டது. யாழ் மாவட்ட மக்களிடம் கொவிட் தொற்…
-
- 1 reply
- 250 views
-
-
அஸ்ட்ராசெனிகா என்ற பெயரில் போலியான தடுப்பூசிகள் வழங்கப்படலாம்..!: விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க (ஆர்.யசி) ஓக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளாது, வியாபாரிகளிடம் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். வியாபாரிகளிடம் பெற்றுக்கொள்ளும் தடுப்பூசிகளில் போலியான தடுப்பூசிகளை கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தொற்றுநோய்கள் குறித்த நிபுணரும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்னாள் ஆலோசகருமான விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார். நாட்டில் ஆறு இலட்சம் பேருக்கு ஓக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்க முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ளதையடுத்து, தடுப்பூசிகளை…
-
- 0 replies
- 168 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னாள் போராளி உயிரிழப்பு! AdminJune 1, 2021 கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ஜெயக்காந்தன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னாள் போராளியான ஜெயக்காந்தன் போரின் போது முள்ளந் தண்டுவடம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார். இருந்தபோதிலும் சமூகச் செயற்பாட்டாளராக தீவிரமாக செயற்பட்டுவந்திருந்தார். தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உயிரிழை என்ற அமைப்பின் முன்னாள் தலைவராகவும் அவர் செயற்பட்டுவந்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பிரதேச சபை உறுப்பினராகவும் அவர் …
-
- 3 replies
- 1k views
-
-
தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன தீக்கிரையான எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 மைல் தொலைவில் இக்கப்பலின் பின் பகுதி மோதியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். UPDATE – மூழ்கும் நிலையில் தீக்கிரையான கப்பல்..! எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலில் நேற்று முதல் நீர் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் கப்பல் இதுவரையில் 50 சதவீதம் கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் ச…
-
- 7 replies
- 874 views
-
-
புதுக்குடியிருப்பில் குண்டு வெடிப்பு; படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் 3 Views முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் 41 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:- தனது காணியில் இருக்கின்ற பனை மரத்துக்கு அருகாமையில் குப்பைகளைக் கூட்டி வைத்து நெருப்பு பற்றவைத்த வேளையில் பாரிய சத்தத்துடன் குண்டொன்று வெடித்தது. இதன்போது குறித்த பெண் படுகாயமடைந்தார். அவர் உடனே புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட…
-
- 0 replies
- 162 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சூழ்ச்சி என முன்னாள் சட்டமாதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்ட கருத்தின் உண்மை தன்மையினை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றவாளிகள் என பெயர் குறிப்பிடப்பட்டவர்களை அரசாங்கம் அரசியல் நோக்கிற்காக பாதுகாக்கிறது. நல்லாட்சி, சுபீடசமான எதிர்காலம் ஆகியவற்றினால் ஏமாற்றமடைந்தது மாத்திரமே மிகுதயாகியுள்ளது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணையினை துரிதப்படுத்தி குற்றவாளிகளை சட்டத்தின…
-
- 1 reply
- 323 views
-
-
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடானது, தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை இப்பயணக்கட்டுபாடு நீடிக்கப்பட்டுள்ளதென, கொரோனா ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Tamilmirror Online || பயணக் கட்டுபாடு திடீரென நீடிப்பு
-
- 0 replies
- 243 views
-
-
யாழ் மாவட்ட பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்தார் அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் எனவே ஏற்கனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளைய தினம் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த பகுதி மக்களுக்கான தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட தடுப்பூசி வந்தவுடன் குறித்த நிகழ்ச்சி நிரலின் படி தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். எனவே பொதுமக்கள் இது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை அடுத்தகட…
-
- 0 replies
- 283 views
-
-
(ஆர்.யசி) கிழக்கு மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகளை பங்கிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிழக்கு மாகாணத்தில் ஒரு தடுப்பூசியேனும் ஏற்றுவதற்கான நடவடிக்கை இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுகாதார தரப்பினர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசிகளை பங்கிடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார். கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடளாவிய ரீதியில் தடுப்பூசிகள் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் பாரிய ப…
-
- 0 replies
- 184 views
-
-
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக நிருவாக அலகிற்குட்பட்ட வாழைச்சேனை பிரிவின் இறப்பு, பிறப்பு மற்றும் ஏறாவூர் கோறளைப்பற்று விவாக (பொது) பதிவாளர் பிரிவில் பதிவு செய்வதற்கு பதிவாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யும் வகையில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாழைச்சேனை பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற பதிவு செய்யும் நடவடிக்கையில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்ஜித், மேலதிக மாவட்ட பதிவாளர் இ.சசிகு…
-
- 0 replies
- 442 views
-
-
நினைவு கூரல்களும், முகநூல் பதிவேற்றங்களும் பயங்கரவாதத்தை மீளுருவாக்கும் என்பது சாத்தியமில்லாததும், முட்டாள் தனமானதுமான ஒரு கருதுகோள்… முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது வாழைச்சேனை படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூருவதும், தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்வதும் பயங்கரவாதச் செயற்பாட்டை மீள உருவாக்கும் என்பது சாத்தியமில்லாததும், முட்டாள் தனமானதுமான ஒரு கருதுகோள். எனவே இவ்வாறு சாத்தியமில்லாத விடயங்களை முன்நிறுத்தி எமது முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தற்போதைய நிலையில் முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியி…
-
- 0 replies
- 235 views
-
-
யாழ் மக்கள் கட்டாயம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும்! யாழ் மாவட்ட மக்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வது அவசியம் என நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி அ. ஜெயக்குமாரன் தெரிவித்தார். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நல்லூர் சுகாதார அதிகாரி பணிமனையினை பொறுத்தவரை தடுப்பூசி வழங்கும் செயற்பாடானது இன்று ஜே110 கிராம சேவகர் பிரிவிலும் யாழ் பல்கலைக்கழகத்திலும் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எம்மைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொருவரும் இந்த கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமான ஒரு விடயமாகும். ஏனெனில் எங்களுக்கு கொரோனா தொற்று ஆப…
-
- 0 replies
- 215 views
-
-
யாழ்.பல்கலையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம் June 2, 2021 யாழ். பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஜனாதிபதியின் விசேட அனுமதியின் கீழ் ஊசி இன்றைய தினம் ஆரம்பமானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏனைய பீடங்களில் 500 பேருமாக மொத்தமாக 2100 கொரோனா பேருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளதன் அடிப்படையில், இன்று காலை யாழ் பல்கலைக் கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது இதற்கமைய இன்றும் , நாளையும் இரு தினங்கள் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி…
-
- 0 replies
- 488 views
-
-
தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை வேண்டும் ; ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் (சி.எல்.சிசில்) கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மத குருமாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் நேற்று(28.05.2021) தொலைபேசியில் உரையாடிய போதே கடற்றொழில் அமைச்சரால் குறித்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கான தடுப்பூசி விநியோகம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டு வருகின்றமையை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, முதற் கட்டமாக 50,000 தடுப்பூசிகள் யாழ். மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப…
-
- 12 replies
- 575 views
-
-
தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள் என்பது பெரும்பான்மையினருக்கு நன்கு தெரியும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரவித்துள்ளார். யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40ஆவது ஆண்டு நினைவு தினம், வவுனியாவில் பிரத்தியேக இடமொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது. இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்.பொது நூலகம் 1981 ஜூன் 1 ஆம் திகதி அதிகாலை எரிக்கப்பட…
-
- 0 replies
- 330 views
-
-
இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு செய்வதற்கான கட்டணம் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்ற திருமணத்துக்கான கட்டணம் 750 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விவாகப் பதிவுக்கான பதிவாளர் உறுதிச்சான்றை வழங்குவதற்கான கட…
-
- 0 replies
- 308 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலப்பெருமாள்குளம் கிராம அலுவலகர் பிரிவில் அம்பலவன் சின்னக்குளத்தின் அலைகரை பகுதியில் குளத்தினை ஆழப்படுத்தி குளத்தினை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து பொதுமக்களின் எதிர்பினையும் மீறி வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி பாரியளவில் காடு அழிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு கிரவல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. குறித்த விடயம் தொடர்பில் கிராமத்தின் பொது அமைப்புக்களால் பல்வேறு உயர் மட்டங்களுக்கு தெரியப்படுத்தியும் துணுக்காய் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் கடந்த மூன்று கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு குறித்த அனுமதியினை வழங்க வேண்டாம் என தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்நிலையில்,…
-
- 2 replies
- 391 views
- 1 follower
-
-
யாழில் தமிழையும், சிங்களத்தையும் புறந்தள்ளிய சீன மொழி 35 Views சாவகச்சேரியில் ‘China State Construction Engineering Corporation’ என்ற சீனாவின் அரச நிறுவனத்தில் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது. அலுவலக பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் முழுமையாக இரு மொழிகளிலும் எழுதியுள்ளதோடு தனியான பெயர் பலகைய்யும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களமும், தமிழும் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது. காத்தான்குடியில் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளதை புத்த பிக்குகளும் ஆளும் கட்சியும் அரபி என்ன இலங்கையின் ஆட்சி மொழியா என்று கேட்டு போராடியவர்கள், இன்…
-
- 5 replies
- 565 views
-
-
மட்டு அரச அதிபர் ஒரு அரசியற் கைதியாக பிள்ளையான், வியாழேந்திரனிடத்தில் சிக்கியுள்ளார் - இரா.சாணக்கியன் சாடல். on Tuesday, June 01, 2021 (துதி மோகன்) மாவட்ட அரசாங்க அதிபர் தான் இந்த மாவட்டத்தில் முதல் அரசியற் கைதி. அவரை நாங்கள் முதலில் விடுவிக்க வேண்டும். அதாவது மாவட்ட அரசாங்க அதிபர் ஒரு அரசியற் கைதியாக பிள்ளையான் வியாழேந்திரனிடத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கொவிட் 19 தொற்று நிலைமையை அரசாங்கம் தனது அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் …
-
- 0 replies
- 259 views
-
-
இலங்கையின் புதிய நியமனங்கள் இடைக்கால நீதிக்கான பொறிமுறைகளை சீர்குலைக்கின்றன - ஜஸ்மின் சூக்கா (எம்.மனோசித்ரா) இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் பொலிஸ் அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டு முன்னைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால நீதிப் பொறிமுறை முழுமையாக இராணுவமயப்படுகின்றது. http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/70809/thumb_large_yasmin_sooka_se18.jpg முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஹப்பு ஆராச்சிகே ஜெயந்த சாந்த குமார விக்ரமரட்ணவின் நியமனம் கடந்த மே மாதம் 20 திகதியன்று பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இடைக்கால நீதி தொடர்பான முன்னணி நிபுணர் ஜஸ்மின் சூக்கா, இந்த ந…
-
- 0 replies
- 179 views
-
-
(ஆர்.யசி) நாட்டில் கைவிடப்பட்ட காணிகளை சீனாவுக்கு விற்கவோ அல்லது வேறு விதங்களில் கொடுக்கவோ நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவில்லை, எனினும் கைவிடப்பட்ட சில பகுதிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதென நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாட்டு மக்களுக்கான வீட்டுத்திட்டமொன்றை உருவாக்கிக்கொடுக்கும் விதமாக நடுத்தர வருமான மற்றும் அடிமட்ட வருமானத்தை பெரும் மக்களுக்கான வீடுகளை சலுகை அடிப்படையில் பெற்றுக்கொடுத்தல், மற்றும் நகர அலங்காரம், நடைபாதை அபிவிருத்தி என்பவற்றையும், தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய நூறு கிராமங்களை தெரிவு செய்து அவற்றை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்ட…
-
- 0 replies
- 241 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் முக்கியத்துவமுடைய பல கட்டடங்களை அரசாங்கம் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றமை உண்மைக்கு புறம்பானதாகும். பிரயோசனம் மிக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது திட்டமிட்ட வகையில் அவை தொடர்பில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் முக்கியத்துவமுடைய பல கட்டடங்களை அரசாங்கம் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். இலங்கையில் தற்போது உபயோகிக்கப்படாத பாழடைந்துள்ள பல கட்டடங்களை இனங்கண்டு அவற்றை மீள்புனரமைத்து அவற்றை வருமானம் ஈட்டக்…
-
- 0 replies
- 205 views
-
-
யாழில்... தடுப்பூசி போடப் பின்வாங்கும் மக்கள்- இன்று 6000 பேரே தடுப்பூசி போட்டனர்! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பின்னடிப்பதாக்த தெரிவிக்கப்படுகிறது. யாழில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் ஆறாயிரத்து 72 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையானது, இன்று தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 60 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாண…
-
- 1 reply
- 460 views
-