ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
கர்ப்பிணி கொலை: மாற்றுத்திறனாளியான சிறுவனின் வீட்டுக்கு பாதுகாப்பு -எம்.றொசாந்த் ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கண்கண்ட சாட்சியாகவுள்ள மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவனின் வீட்டுக்கு, பாதுகாப்பு வழங்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன், இன்று உத்தரவிட்டார். இக்கொலைச்சம்பவம் தொடர்பில் கண்கண்ட சாட்சியாகவுள்ள மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவானின் கவனத்துக்கு கொண்ட…
-
- 0 replies
- 345 views
-
-
மனித உரிமைகள் தொடா்பான பிரச்சினைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும்.! மனித உரிமைகள் தொடா்பான பிரச்சினைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 46-ஆவது உயா்நிலைக் கூட்டம் ஜெனீவா நகரிலிருந்து காணொலி வாயிலாக நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ மனிதகுலத்தை அச்சுறுத்தும் விவகாரங்களில் ஒன்றாக பயங்கரவாதம் தொடா்ந்து இடம்பெற்று வருகிறது. மனித உரிமைகளுக்கு பயங்கரவாதம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு உயிா் வாழ்வத…
-
- 0 replies
- 266 views
-
-
செயல் திறன் மிக்க தாங்கள் - போலிக் காரணங்களினால் ஏற்பட்டிருக்கும் அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து - 'தனித் தமிழ் ஈழம்' அமைத்து, தமிழர்களின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு நிலைபெற்ற புகழ் அடைவீர்கள் என அமெரிக்காவில் இயங்கும் தமிழகத் தமிழர்களையே பெருமளவில் உறுப்பினர்களாகக் கொண்ட உலகத் தமிழர் இயக்கம் (WTO) ஜெயலலிதாவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 381 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று கிளிநொச்சியில் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றது. மேலும் வாசிக்க...http://tamilworldtoday.com/?p=13455
-
- 0 replies
- 612 views
-
-
மட்டக்களப்பில் காணி அபகரிப்பு – மக்கள் போராட்டம் 16 Views மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகளை கண்டித்து ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவடடத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமானமுறையில் அபகரிக்கும் காணி மாபியாக்களின் செயற்பாடுகளைக்கண்டித்து மட்டக்களப்பில் கவணஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கடக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கிரான், ஏறாவூர்பற்று-செங்கலடி, ஆகிய பிரிவுகளில் உள்ள அரசகாணிகளுடன் இணைந்து பொது மக்களின் மற்றும் வெளிநாடுகளில் உள்ள காணிகளை ஒரு குழுவினர் விற்பனை செய்துருவருவதாகவும் அதற்கு அதி…
-
- 3 replies
- 619 views
-
-
இன்றைய தேர்தலுக்கு பின் 'Bloodbath' மிகப் பெரிய பேரவல வெள்ளமாக பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதென பொதுவான பயம் எங்கும் நிறைந்து காணப்படுகிறது. பாதுகாப்புச்சபை உடனடியாகத் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என உலக மன்னிப்புச் சபை கேட்டுள்ளது. இதே நேரம் இலங்கையிலிருந்து வரும் செய்திகளிலிருந்து இந்திய தேர்த்தல் முடிவு வெளிவர முன்னர் விரைந்து போரை முன்னெடுத்து அடுத்த 48 மணித்தியாலத்தினுள் பாதுகாப்பு வலயத்தை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வர இலங்கையும் முடிவெடுத்துள்ளதாம். Source: Fear of 'bloodbath' turning into flood of misery after today, AI calls Security Council to act immediately
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2016ம் ஆண்டு அதிகளவான சுற்றுலா பயணிகள் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதாக யாழ் மாவட்டச் செயலக சுற்றுலாத் துறைப் பிரிவின் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. நீண்டகால யுத்த நிறைவிற்கு பின்னர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சுற்றுலாத் துறையும் அதிகளவான அபிவிருத்தியை கண்டுள்ளது. 2011-2012ம் ஆண்டு 11582 சுற்றுலா பயணிகளும்,2012-2013ம் ஆண்டு 15256 சுற்றுலா பயணிகளும் ,2013-2014ம் ஆண்டு 20054 சுற்றுலா பயணிகளும்,2014-2015ம் ஆண்டு 25580 சுற்றுலா பயணிகளும், வருகை தந்துள்ளனர்.அவற்ற…
-
- 3 replies
- 528 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தியாவின் - பொது உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் [PEOPLE’S UNION FOR CIVIL LIBERTIES - PUCL] கொலைக் களமாகிவிட்ட - வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்ட - இலங்கையின் போர்ப் பிரதேசத்தில் இடம்பெறும் போர்க் குற்றங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளதாகிய செய்தி 15.05.09ல் வெளியாகியுள்ளது. அச் செய்தியில் அவர் மேலும் தெரிக்கையில், இலங்கையின் வட பகுதியில் பாரிய மனிதார்ந்த பிரச்சினையை தோற்றுவித்துள்ள அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்துலக ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு தமது ஆதரவு உண்டு எனவும் அவர் தெரிவித்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கசினோ சூதாட்ட மையங்களை ஆரம்பிக்கும் திட்டமி;ல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்க்கட்சியினர் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கசினோ சூதாட்ட மையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். உண்மை நிலவரம் குறித்து மாஹா நாயக்க தேரர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ள போதிலும் கசினோ சூதாட்ட மையங்கள் ஆரம்பிக்கப்பட மாட்டாதுஎன அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92850/language/ta-IN/artic…
-
- 0 replies
- 384 views
-
-
இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபைக்கு கடந்த ஆண்டு 400 மில்லியன் வருமானம் கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கிய இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை கடந்த 2016ல் 400 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைத் தலைவரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவர் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சங்கப் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடினார். சங்கத்தின் தலைவர் என்.பி.ரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சங்கத்தின் செயலாளர் வீ.பிரதீபன் பாபு உட்பட கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை நிருவாகிகள் மாவட்ட கிரிக்கட் சபை …
-
- 0 replies
- 261 views
-
-
அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி மீட்பு! கைது செய்யப்பட்டுள்ள மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சட்டத்திற்கு முரணான கருத்துக்களை முன்வைத்ததாக குறிப்பிடப்பட்டு, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். சட்டமா அதிபரின் ஆலோசணைக்கமைய அவர் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார். மேலும், உயிர…
-
- 0 replies
- 321 views
-
-
விடுதலைப் போரின் முக்கிய தளபதிகள், போராளிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வஞ்சகமாகக் கொல்லப்பட்டாதாகக் செய்திகள் கிடைக்கப்பெறும் பொழுதுகளில் எங்களை நாங்களே தேற்றிக் கொள்ள முடியாதபடியான ஒரு துக்கம் எங்களைத் தாக்குவது தவிர்க்கப்பட முடியாதது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 577 views
-
-
சிவராத்திரியை முன்னிட்டு யாழில் "தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்" சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணி மனை யின் அனுசரணையில் "தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்" எனும் சிரமதான பயணம் நான்கு இடங்களில் இரு ந்து எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. என சைவமகா சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிம னையின் அனுசரணையில் "தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்" எனும் சிரமதான பயணம் எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை கா…
-
- 0 replies
- 303 views
-
-
"ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழான 'ஆனந்த விகடன்' வலியுறுத்தியிருக்கின்றது. இது தொடர்பாக 'இறக்கமற்ற இறையாண்மை!' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து, வாக்குகளை எண்ணிக்கொண்டு இருந்த அதே நேரம், இலங்கை மண்ணில் செத்து விழுந்த தமிழர்களின் சடலங்களைக் கணக்குப் பார்த்துக்கொண்டே முன்னேறியது சிங்கள இராணுவம். 'முந்தைய தேர்தலைவிட வலுவாக வென்றுவிட்டோம்' என்று ஆளும் கூட்டணியினர் இங்கே வெடி போட்டுக் கொண்டாடிய அதேவேளை... 'இறுதி வெற்றியை நெருங்கிவிட்டோம்' என…
-
- 1 reply
- 1.2k views
-
-
மட்டக்களப்பில் 1500 வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் பேராட்டம் (படங்கள்) மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று காலை மகாம்மா காந்தி பூங்காவில் மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் ஆரம்பமானது. மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நியமனம் வழங்கப்படாமலுள்ள சுமார் 1500 பட்டதாரிகள் இதில் இணைந்திருந்தனர். நிரந்த நியமனம் வழங்குமாறு மாகாண முதலமைச்சரைக் கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். அதிகளவிலான பெண் பட்டதாரிகளும் இதில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். காலவரையறையின்றி எமது போராட்டம் தொடருமென பட்டதாரிகள் சங்க தலைவர் கே.கிரிசாந்த் தெரிவித்தார்…
-
- 0 replies
- 266 views
-
-
மட்டு- ஈரளக்குளம் பகுதியில் பௌத்த பீடம் அமைக்க திட்டம் 167 Views மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் என்னும் பகுதியில் பௌத்தபீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பகுதியானது நூறு வீதம் தமிழர்கள் வாழும் பகுதியாக காணப்படும் நிலையில், சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பௌத்தபீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயற்கை வனப்பும் வயல் நிலங்களும் நிரம்பிய ஈரளக்குளம் பகுதியானது தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவரும் பகுதியாக…
-
- 0 replies
- 418 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் 600 க்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்களை உடனடியாக வெளியேற்றக் கோரியும் சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடைசெய்யக் கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு எதிரே நடைபெறவுள்ளது. இதில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப் படுகின்றது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் சி.அருள்ஜெனிபேர்ட் தெரிவித்ததாவது: தொடர்ந்தும் எமது பகுதியில் உள்ள மீன்களை அத்துமீறி தென்பகுதி மீன…
-
- 1 reply
- 394 views
-
-
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் கத்திக் குத்து : பெண்ணொருவர் படுகாயம் கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில் இன்று பிற்பகல் கத்திக் குத்துக்கு இலக்காகி பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாந்தபுரம் கிராமத்தில் இருந்து இரணைமடு குளத்திற்கு நன்னீர் மீன் தொழில் நடவடிக்கைக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது இரணைமடு இராணுவ தலைமையகத்திற்கு பின்புறமாக காட்டுக்குள் மறைந்திருந்த ஒருவர் திடீரென குறித்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டுள்ளார். இதன்போது பெண் குறித்த நபரை தடுத்து நிறுத்தியதால் கத்தியால் கழுத்தில் குத்தியதாக தெரிவிக்கப்படு…
-
- 0 replies
- 287 views
-
-
நெருக்கடியை தீர்க்க மஹிந்த அழைத்த கூட்டத்தில் சலசலப்பு – வாசு, விமல், கம்பன்பில வெளிநடப்பு 36 Views மொட்டுக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்ட குழப்பத்தைத் தணிக்கும் விதத்தில் இன்று முற்பகல் பிரதமர் தலைமையில் கூடிய கூட்டம் பிசுபிசுத்துப் போனது. பல்வேறு சிறிய கட்சிகளையும் சேர்ந்த பல டசின் பிரதிநிதிகளை இந்தக் கூட்டத்துக்கு பஸில் ராஜபக்ஷ கூட்டி வந்தமையால், பிரதான கூட்டத்தில் பங்குபற்றாமல் விமல் வீரவன்ஸ, உதய கம்பன்பில்ல, வாசுதேவ நாணயக்கார போன்றோர் வெளியேறியமையால் கூட்டம் பிசுபிசுத்துப் போனது. இன்றைய கூட்டத்துக்கு மொட்டுக் கூட்டணியின் பிரதான பத்துக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல், சிறிய சிறிய கட்சிகள், அமைப்புக…
-
- 1 reply
- 847 views
-
-
கருணா தரப்பினர்களிடம் எஞ்சியிருக்கும் ஆயுதங்களை இரகசியமாகக் கையளிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கென இரகசியமானதொரு இடம் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக
-
- 2 replies
- 1.4k views
-
-
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்புக்குள் இழுபறி நிலையே தொடர்கின்றது. http://tamilworldtoday.com/?p=22337
-
- 5 replies
- 877 views
-
-
இலங்கைக்கான ஜப்பானிய சிறப்பு தூதுவர் யசூசி அகாசி மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’இலங்கைக்கான சமாதான கட்டமைப்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பிலான ஜப்பானிய பிரதிநிதி என்ற வகையில் எனது பயணம் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. 2003ம் ஆண்டு பேச்சுவார்த்தையின் போது நாம் 4 பில்லியன் டாலரை அன்பளிப்பாக கொடுத்தோம். துரதிர்ஷ்டவசமாக புலிகள் இதனை புறக்கணீத்தனர்’’என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’இலங்கை தொடர்பான தெளிவு எமக்கு இருந்ததால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை’’என்று தெரிவித்தார். நன்றி நக்கீரன்.
-
- 22 replies
- 3.5k views
-
-
சி.வீ.விக்னேஸ்வரன் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என முன்னாள் நீதியரசரும், வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளருமான சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 1977ம் ஆண்டு வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார் அப்போதைய தமிழ்த் தமிழ்த் தலைவர்கள் கடவுளாலேயே தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என தெரிவித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் இளையவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தினர் என அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் ஆயுதப…
-
- 0 replies
- 460 views
-
-
புட்டினை சந்தித்தார் ஜனாதிபதி..! ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புட்டினை சந்தித்துள்ளார். ரஷ்யாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்நாட்டு ஜனாதிபதி விளாமிடிர் புட்டினை மொஸ்க்கோவில் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் பொது இருநாட்டு வர்த்தக மற்றும் அரசியல் புரிந்துணர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், மேலும் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான 60 வருடகால ராஜதந்திர உறவுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் மொஸ்க்கோவிலுள்ள கெர்மிளின் மாளிகையின், பச்சை அறையில் இடம்பெற்ற குறித்த…
-
- 1 reply
- 264 views
-
-
இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டி உள்ளது -சுரேஷ் பிரேமச்சந்திரன் 56 Views இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைக்கூட மதிக்காமல் நினைவுத்தூபியையும் அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்ததைக் கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டிய துர்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஈழவிடுதலைப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்களை நாங்கள் இழந்திருக்கிறோம். அதேபோல் இறுதி யுத்…
-
- 0 replies
- 458 views
-