Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “கட்சி அரசியலுக்காக பேரினவாதிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்காமல் தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி ஒன்றுமையாக ஓரணியில் நின்று ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும்”,என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுடன் இன்று (06) காலை கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டபின்னர் ‘ஒற்றுமை’என்ற ஆயுதமே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கின்ற இறுதி அஸ்திரமாகும். எனவே, அந்த ஒற்றுமைய…

    • 0 replies
    • 315 views
  2. ’ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும்’ -எஸ்.நிதர்ஷன் “வட மாகாண சபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், சபை ஒழுங்கு முறைகளை உரிய முறையில் பின்பற்றி நடக்க வேண்டும்” என, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வட மாகாண சபையின் 105ஆவது அமர்வு, கைதடியிலுள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (07) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, சபை அறிவிப்புகளை விடுத்த அவைத் தலைவர் சிவஞானம், சபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சபைச் செயற்பாடுகள் குறித்து கடுமையான அதிருப்தியை வெளியிட்டார். “மாகாண சபையின் முதலமைச்சர், ச…

  3. ’கடமையை மறந்த தமிழ்த் தலைமைகள்’ தற்போது நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது கடமைகளைப் புறக்கணித்துள்ளனர் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சி, குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்தியில் வந்து, அவர்களின் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளவோ அல்லது, அம்மக்களுக்காகக் களமிறங்கி வேலை செய்வதையோ தட்டிக்களித்துள்ளமை, வருத்தமளிக்கிறது என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில், தொ…

  4. நாட்டில் டொலர் பிரச்சினை மிகவும் மோசமாக மாறியுள்ளது. அதன் சுமையை மக்கள் சுமக்க முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேடமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன், வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றார். விவசாயிகள் செய்தவறியாது தவிக்கின்றனர். எனவே இந்தப் பிரச்சினைக்கு உடனடியான தீர்வு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உலக நாடுகள் அனைத்தும் முகம் கொடுத்திருந்தாலும் 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் பல நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தை காட்டியுள்ளதால், நாமும் இந்த பிரச்சனையை தீர்க்கவேண்டும் என வலியுறுத்தினார். எனவே, அரசாங்கத்துக்கு கடமையொன்று உள்ளது உடனடியாக சர்வதேச நாணய நிதியத…

    • 2 replies
    • 416 views
  5. -சுப்பிரமணியம் பாஸ்கரன் நடைபெறவுள்ள மனித உரிமைகள் அமர்வின்போது, இலங்கை அரசாங்கத்துகு கடுமையான அழுத்தங்களை சர்வதேசம் முன்வைக்க வேண்டுமென, வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத் தலைவி கலாரஞ்சனி தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில், சர்வதேசத்திடம் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டுமெனத் தெரிவித்தார்.. ஓ. எம். பி அலுவலகத்தை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோமெனத் தெரிவித்த அவர், அந்த அலுவலகத்தில் தமக்கு நம்பிக்கை இல்லையெனவும் கூறினார். இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் எதையும் தமக்கு செய்யவில்லையெனத் தெரிவித்த அவர், தமது உறவுகள் தொட…

    • 0 replies
    • 433 views
  6. ’கறுப்பு ஆடுகளுக்கு மன்னிப்பே கிடையாது’ -ஜே.ஏ.ஜோர்ஜ் “எந்தச் சீருடை அணிந்திருந்தாலும் என்ன இலட்சினை அணிந்திருந்தாலும் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது. கறுப்பு ஆடுகளைத் தண்டித்து இராணுவத்தினரின் நற்பெயரைப் பாதுகாப்போம்” என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியால், நாடாளுமன்றில் நேற்றுக் கொண்டுவரப்பட்ட ஜெனீவா தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறினார். ஜெனீவா தொடர்பில் பொறுப்புக்கூறக்கூடிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தொடர்ந்து உரையாற்றிய மங்கள, “இலங்கையின் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடும் எந்தவோர் ஒப்பந்தத்திலும் நாங்கள்…

  7. Freelancer / 2022 பெப்ரவரி 09 , மு.ப. 06:05 - 0 - 88 FacebookTwitterWhatsApp வெளிநாடுகளிலுள்ள தனது கறுப்புப் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவது மற்றும் தனக்கு நெருக்கமானவர்களை வழக்குகளில் இருந்து விடுதலை செய்வது ஆகியவற்றையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டு வருகிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் த…

  8. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளில் தலைவர்கள் கையெழுத்திட்டு கடந்த 26ஆம் திகதி அனுப்பிய கடிதத்துக்கு, பதிலளித்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு தேர்தலை நடத்துவதில் விரும்பமின்மை தெரிவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், கொரோனாவுக்கு எதிரான போராடும் இந்த வேளையில் இவ்வாறான சுயலாப அரசியல் விடயங்கள் எதிர்த்தரப்பினரால் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/கலககபப…

    • 3 replies
    • 598 views
  9. -என்.ராஜ் யுத்தம் முடிந்தப் பின்னர், தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களான அப்பன், தெய்வீகன் ஆகியோரை காட்டிக்கொடுத்தோர் யார் என்பது மக்களுக்கு தெரியும் என, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 'தெய்வீகன், அப்பன் போன்றோர் நேரடியாக காட்டிக்கொடுக்கப்பட்டு, கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களை யார் காட்டிக்கொடுத்தார்கள் என்பது தொடர்பில் நான் தற்போது கூற விரும்பவில்லை' எனவும், அவர் கூறினார். யாழில், இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தான் உள்ளிட்டவர்கள், இனப்படுகொலை தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என ப…

  10. ’காணாமல் போனோருக்கு நடந்தது என்ன?’ தான் அறிந்த வகையில், வலிந்து காணாமல் போனோரது குடும்பங்களின் முதல் கேள்வி, முதல் கோரிக்கை யாதெனில், கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதே என்று தான் நினைப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். வடக்குக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும், காணாமல் போனோர் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் “மக்கள் ஒத்துழைத்தால், காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்” என கூறி வந்துள்ளனர் என்று மனோ எம்.பி சுட்டிக்காட்டினார். மேலும் “காணாமல் போனோர் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, அரச வைத்தியசாலைகளில…

  11. காரொன்று மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதே, நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக விமர்சித்த தேசிய மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சமிர பெரேரா, பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், அதனை நிலைநாட்டாது வேறு விடயங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் சாடினார். ஹட்டனில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் நாடகமாகக்கூட இருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவப் பிரச்சினையைத் திசைத்திருப்புவதற்காக, சம்பிக்கவ…

    • 0 replies
    • 418 views
  12. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நாட்டில் ஆங்காங்கே சில இனவாதிகளால் எமது சிறுபான்மை சமூகத்தின் இளைஞர்கள், பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இனவாதத்துக்குத் துணைப்போகும் அனைவருக்கும் எமது எச்சரிக்கை என்றும் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது; ஆனால் வெற்றியின் போதையில் அவர்களின் எல்லையைக் கடந்து செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் ஜனாதிபதியாக, கோட்டபாய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்படும் வெற்றிக்கொண்டாட்டங்களில், சிறுபான்மை மக்கள் வதைக்கப்படுவதாகவும் யாருக்கு வாக்களித்தீர்கள…

  13. ’கிளிநொச்சிக்கு அமைச்சை வழங்குவதை மீள் பரிசீலிக்கவும்’ எஸ்.நிதர்ஷன் வடமாகாண கல்வி அமைச்சு, கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும், என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, அக்கடிதத்தில் மேலும், 'வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிணக்கு ஒரு சமரசத்துக்கு வந்தமையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்காக நானும் என்னால்…

  14. ’கிழக்கின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதில் அதிருப்தி’ கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஆளுநரிடம் முழுமையாக கையளிக்கப்படுவது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியடைவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் "இம்மாதத்துடன் ஆட்சிக்காலம் நிறைவடைந்து கலைகின்ற கிழக்கு மாகாண சபைக்கு, உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே, எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடாகும். எனினும், மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதனால், பு…

  15. ’குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் சி.வி’ Comments - 0 Views - 20 தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட போது முதலமைச்சரை வற்புறுத்தி, மாகாண சபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள். அவர், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு, இன்று (16) அவர் அனுப்பிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தாவது, "இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை…

    • 55 replies
    • 3.1k views
  16. -செ.கீதாஞ்சன் கொழும்பில், சட்டப் புத்தகங்களைச் சுமந்தவர்களே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பலவீனத்துக்குக் காரணமானவர்களென, வடக்கு மாகாண சழபயின் முன்னாள் உறுப்பினர் எஸ்.மயூரன் தெரிவித்தார். முல்லைத்தீவில், நேற்று (15) நடைபெற்ற டெலோ கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கூட்டமைப்பு பலவீனமடைந்து செல்வதற்கு, தமிழீழ விடுதலை இயக்கம் காரணமில்லையெனத் தெரிவித்தார். சட்டப் புத்தகங்களைச் சுமந்தவர்களும் எழுதியச் சட்டங்களை வாசித்தவர்களுமே. இன்று வடக்கில் தமிழ்மக்களுக்காக கதைத்துக்கொண்டிருக்கின்றார்களெனவும், இதை பார்ப்பதற்குக் கேவலமாக இருப்பதாகவும் கூறினார். http://w…

  17. -செ.கீதாஞ்சன் ‘நாடாளுமன்ற தேர்தலில், வடக்கு - கிழக்கு இணைந்த தாயக பகுதியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றிக்காக ஜனநாயக போராளிகள் கட்சி உழைக்கும்” என்று, கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த காலங்களில், ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானங்கள் ஒரு வலுவான தீர்மானங்களாக அமைந்திருந்தால், இன்று இந்த முடிவை இலங்கை அரசாங்கம் எடுத்திருக்காதென்றார். இப்போது எடுத்த இறுக்கமான முடிவு, கடந்த காலங்களில் எடுக்கப்பட்டிருக்க வேண்ட…

    • 0 replies
    • 300 views
  18. ’கேவலமான அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்’ எனது வவுனியா வருகைக்கு பயந்து, பள்ளிவாசல் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்கள். காட்டுத்தர்பார் அரசியல் நடத்தினால்தான் தனக்கு அங்கிகாரம் கிடைக்குமென நம்பிக்கொண்டிருப்பவர்களின் பித்தலாட்டங்களுக்கு விரைவில் முடிவு கட்டப்படவேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்திலுள்ள சின்னப்பள்ளிக்குளம், கோவில்குளம் தமிழ் மகா வித்தியாலயம், மடுன்கந்தை சிங்கள மகா வித்தியாலயம், வவுனியா கல்வியியல் கல்லூரி, பட்டனிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் சாலம்பைக்குளம் போன்ற இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை…

  19. ’கொழும்பிலுள்ள வௌி மாவட்டத்தாரை 20ஆம் திகதிவரை அனுப்ப முடியாது’ கொழும்பில் ஸ்தம்பித்திருக்கும் வெளிமாவட்ட மக்களை இம்மாதம் 20ஆம் திகதிவரை, அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் தமிழ் மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கையில், சுகாதாரத்துறையின் கோரிக்கைப்படி மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்ட மக்களை எதிர்வரும் 20ஆம் திகதிவரை சொந்த ஊருக்கு அனுப்புவதில்லை என அரசாங்கம் முடிவு எடுத்துள்ளதாக, கொழும்பு மாவட்ட…

    • 1 reply
    • 389 views
  20. ’கோப்பை எனது கையில் திணித்துவிட்டனர்’ - - எஸ்.நிதர்ஷன் "ஆளுநரிடம் செல்வதற்கான உள்ளே சென்ற போது, வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானக் கோப்பை (பைல்) என்னுடைய கையில் கொண்டுவந்து திணித்து விட்டார்கள். எல்லோரும் கெட்டிக்காரர்கள்தானே? இல்லாவிட்டால் எப்படி மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாவது?" என, வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் கோப்பாய்த் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில், சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி - பதில் நிகழ்ச்சியும், நீர்வேலி கந்தசுவாமி ஆலய வடக்கு வீதி மண்டபத்தில் இன்று (11) நடைபெற்றது. அங்குவைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், "வடம…

    • 7 replies
    • 771 views
  21. (அப்துல்சலாம் யாசீம்) ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை புறக்கணிக்க வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், "ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள 35 வேட்பாளர்களில் தமிழ் பேசும் மக்களின் பொதுவேட்பாளராக நான் களம் இறங்கியுள்ளேன். பிரதானமான முக்கிய அரசியல் கட்சிகளில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரும் தமிழ் மக்களை படுகுழியில் தள்ளியுள்ளனர்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.l…

    • 3 replies
    • 680 views
  22. ’சஜித்துக்கு ரணில் இடமளிக்க வேண்டும்’ - இரா.சம்பந்தன் பொன்ஆனந்தம் “சஜித் பிரமேதஸ என்பவர் நாட்டில் தெரிவான இளம் தலைவர். அவர் மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒருவர். எனவே முன்னாள் பிரமதர் ரணில் விக்கிரமசிங்க, சஜித்துக்கு வழிவிட்டு, அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு இடமளிக்க வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான இரா.சம்பந்தன், அதேவே, ஜனநாயக மரபாகும் என்றும் வலியுறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தற்போதைய அரசாங்கத்தின் நிலைவரம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள் த…

  23. ’சட்டம், ஒழுங்கு; பொன்சேக்காவுக்கு கிடைக்கும்’ சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, இரண்டு வாரக் காலப்பகுதிக்கே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதெனக் கூறிய கூகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இன்னும் இரண்டு வாரக் காலப்பகுதியில், குறித்த அமைச்சு, பீல்ட் மார்ஷல் சரத் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார். சுகாதார அமைச்சில், இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்தத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்துரையாற்றி அமைச்சர், சரத் பொன்சேகாவை, குறித்த பதவியில் நிறுத்துவதற்கு, பொலிஸ் உயரதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறினார். …

  24. Nirosh / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 07:06 - 0 - 11 FacebookTwitterWhatsApp இலங்கை கடற்பரப்பில் இழுவைமடி வலைத் தொழிலில் ஈடுபடுவதை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியக் கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடன் இன்று(08) நடத்திய காணொளி மூலமான கலந்துரையாடலிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழகத்தில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கையின் துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்த கடற்றொழிலாளர் பிரதிநிதிகள…

    • 3 replies
    • 418 views
  25. ’சண் சீ’ கப்பலில் கனடாவிற்கு வந்த அகதிகளின் விபரங்கள் மாயம் - சிறிலங்காவிலுள்ள உறவுகளுக்கும் ஆபத்து திகதி: 14.09.2010, எம்.வி சண் சீ என்ற கப்பல் மூலம் கனடாவிற்குள் வந்துசேர்ந்த அகதிகள் தொடர்பான விபரங்கள் ரொரன்ரோவிலுள்ள தங்களது பணியகத்திலிருந்து களவாடப்பட்டுவிட்டதாகக் கூறுகிறது கனடாவிலுள்ள முதன்மையான தமிழ் அமைப்பு. இதனால் சிறிலங்காவிலுள்ள இவர்களது உறவுகளது பாதுகாப்புத் தொடர்பாகத் தாங்கள் அதிக கரிசனைகொள்வதாகவும் கனேடியத் தமிழர் பேரவை என்ற இந்த அமைப்பு கூறுகிறது. பெயர் விபரங்கள், பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் மற்றும் எம்.வி சண் சீ என்ற கப்பல் மூலம் கடந்த மாதம் பிரிட்டிஸ் கொலம்பியாவினை வந்தடைந்த 492 தமிழர் அகதிகளின் 'நூற்றுக்கணக்கான' தொலைபேசி இலக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.