Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒரே இரவில் கோடிஸ்வரரான இலங்கையர் டுபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை துறையில் பணிபுரிந்த முஹம்மத் மிஷ்பாக் (வயது-36) எனும் இலங்கையர் "Abu Dhabi Big Ticket" சீட்டிலுப்பில் 12 மில்லியன் திர்ஹமை பணப்பரிசாக வென்றுள்ளார். அவர் வெற்றிபெற்ற தொகை இலங்கை ரூபாவின் அடிப்படையில் 64 கோடி ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க இலங்கைக்கு வந்துள்ள அவருக்கு வெற்றி செய்தி தொடர்பான அழைப்பு தன்னுடைய தொலைபேசி ஊடாக வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றிச்சீட்டுக்காக தனது 20 நண்பர்கள் பங்களித்தாகவும் அதில் தனது பங்கு 600,000 திர்ஹம் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தந்தையை ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த …

    • 4 replies
    • 1.5k views
  2. இலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை http://static2.tamilmirror.lk/assets/uploads/image_2f01cffddc.jpg2021ஆம் ஆண்டில் உலக சிறுநீரக தினத்தில், உலகத்தரம் வாய்ந்த டயாலிசிஸை வழங்க, உலகின் முதற்தர டயாலிசிஸ் நிறுவனத்துடன் இணைந்து கொண்டது. வலமிருந்து இடமாக: டொக்டர் அமல் ஹர்ஷா டி சில்வா (முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், சுகாதார சேவைகள்), பேராசிரியர் ரெஸ்வி ஷெரிப் (ஆலோசகர் நெப்ராலஜிஸ்ட், தலைவர், மேற்கு மருத்துவமனை), டொக்டர் ருஷ்டி நிஜாம் (ஆலோசகர் நெப்ராலஜிஸ்ட், களுபோவில போதனா வைத்தியசாலை) மருத்துவ தாதி குமாரி ராஜபக்ஷ (வெஸ்டர்ன் ஹாஸ்பிடலின் டயாலிசிஸ் பிர…

    • 0 replies
    • 508 views
  3. க.பொ.த. உயர்தரத்தில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியவர்களுக்கு மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்கும் SLIIT 2020 உயர்தரப் பரீட்சையில் பௌதீக விஞ்ஞானம் மற்றும் வர்த்தகத் துறையில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய முதல் மூவருக்கு SLIIT முழுமையான புலமைப் பரிசில்களை வழங்கி கல்விசார் சிறப்பிற்கு வெகுமதியளித்துள்ளது. ஒவ்வொரு புலமைப் பரிசிலும் தலா வருடமொன்றுக்கு கல்விக்கான கட்டணம் மற்றும் வாழ்க்கைக்கான கொடுப்பனவான 160.000 ரூபா வீதம் நான்கு வருடங்களை உள்ளடக்கியதாகவிருக்கும். இந்தப் புலமைப்பரிசில்களின் மொத்தப் பெறுமதி பொறியியல் மாணவர் ஒருவருக்கு 2.6 மில்லியன் ரூபாவும் கணினி மற்றும் வர்த்தகப்பிரிவு மாணவர்களுக்கு 1.72 மில்லியன் ரூபாவுமாகும். வெளிநாட்டு பல்கலைக்…

  4. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்தது! ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்துள்ளது. இதன்படி, முதல் தொகுதியில் 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்தத் தடுப்பூசிகளை பொறுப்பேற்பதற்காக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றிருந்ததுடன் அவரால் பொறுப்பேற்கப்பட்ட தடுபூசிகள் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை நாட்டின் அவசரத் தேவைக்காகப் பயன்படுத்துவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதற்கமைய, ஏழு மில்லியன் த…

    • 0 replies
    • 460 views
  5. வை எல் எஸ் ஹமீட்-எதிர்வரும் 4ம் திகதி கல்முனை உப பிரதேச செயலகத் தரமுயர்த்தல் தொடர்பான கூட்டம் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பிரஸ்தாபிக்கப்படுவதைக் காணமுடிகிறது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக திரு சாணக்கியன் பா உ அவர்களும் இந்த விடயம் தொடர்பாக அதீத அக்கறை காட்டுவதை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது.தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றவகையில் உங்கள் அக்கறையில் யாரும் தவறுகாண முடியாது. அது உங்களது கடமையும்கூட. ஆனால் கல்முனையில் என்ன பிரச்சினை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? என்பதுதான் எனது இந்த ஆக்கத்திற்கான அடிப்படையாகும்.தாங்கள் கல்முனைத் தமிழ்த்தரப்பினரிடம் இது தொடர்பாக அடிக்கடி கலந்தாலோசனை நடாத்துகின்ற செய்திகளைக் காணமுடிகிறது. அதில் தவறில்லை. ஆனால், அ…

    • 0 replies
    • 526 views
  6. இணையதளங்களில் கூறப்படும் கொரோனா தொற்றுக்கான ஆயுள்வேத மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் இணையதளங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான ஆயுள்வேத மற்றும் சுதேச மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் என சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/104853

  7. கட்டாய இடமாற்றத்தை ஏற்க வேண்டாம் – தமிழர் ஆசிரியர் சங்கம்! May 3, 2021 ஆசிரிய இடமாற்ற சுற்றறிக்கைக்கு மாறாக ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது. இதனை ஆசிரியர்கள் ஏற்கத்தேவையில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அது தொடர்பில் குறித்த ஆசிரியர் சங்கம் தெரிவிக்கையில் , சில வலயக்கல்விப் பணிப்பாளர்கள் தமக்குத் தேவையானவர்களுக்கு அவர்கள் விரும்புகின்ற பாடசாலைகளை வழங்குவதற்காக ஏனைய ஆசிரியர்களை கட்டாய இடமாற்றம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற 2007/20 எனும் இலக்கம் கொண்ட சுற்றறிக்கையிலோ, தாபன விதிக்கோவையிலோ எந்த ஏற்பாடுகளும் இல்லை. இவ்விடயம் பல ஆசிரியர்களுக்கு தெரிந்திராததால் வலயக் கல்விப்பணிப்பாளர்களின் தன்னிச்சை…

    • 1 reply
    • 421 views
  8. காங்கேசன்துறையில்... புத்தர் சிலையை, உடைத்ததாக இளைஞன் கைது! யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புத்தர் சிலையை உடைத்ததாக இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், கீரிமலை நல்லிணக்க புரம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் இருந்த புத்தர் சிலையை உடைத்த இளைஞன் அருகில் காணப்பட்ட பழைய இரும்புகளையும் சேகரித்துள்ளார். புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிந்துகொண்ட காங்கேசன்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து சிலையை உடைத்த இளைஞனைக் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். https://athavann…

  9. பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு... எதிராக 800 தகவல்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு! ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர், பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராகக் கொலை, கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான 800 தகவல்களையே சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில் முன்வைத்துள்ளார். இந்தத் தகவலை, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியும் அரச சட்டவாதியுமான நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1213924

  10. கடற்பகுதி தீவிர பாதுகாப்பில்- வேறு நாட்டவர்களுக்கு உதவினால் கைது! நாட்டிற்குள் சட்டவிரோத குடியேறிகளைப் படகில் ஏற்றிவரும் இலங்கை மீனவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் கடல்பகுதியின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளர். இந்நிலையில், கடல் எல்லையின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு வெளிநாட்டவர்களுக்கு உதவி செய்யும் மீனவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என கடற்தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான அனுமதிப்பத்திரமும் இரத்துச் செய்யப்படும் எனவும் அந்தத் திணைக்களம் குறிப்…

  11. சர்வதேச ஊடக சுதந்திர தினம்: படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் அஞ்சலி! சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினையிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழில் நடைபெற்றது. இந்நிகழ்வு, யாழ். ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மௌன அஞ்சலியுடன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை, கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களும் நினைவுகூரப்பட்டதுடன் கொரோனா பெரும் தொற்றலிருந்து மக்கள் மீண்டுவரப் பிரார்த்திக்கப்பட்டது. https://athavannews.com/2021/1213956

  12. தனித் தமிழ் தொகுதி அல்லது முஸ்லிம் தொகுதி என்ற அடிப்படையிலான தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சவாலை வெற்றிகொள்ள முடியாதெனத் தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், இத்தேர்தல் முறைமை மாற்றத்தில், தமிழ்ப் பேசும் சிறுபான்மைச் சமூகம் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது என்றார். இன்று இந்த நாட்டில், புதிய தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பித்திருக்கின்ற நிலையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான முறைமையாக மட்டும் இதனை நோக்க முடியாது என்றும் மாகாண சபை தேர்தலுடன், இனி வரும் பொது த் தேர்தலுக்கான தேர்தல் முறைமையும் இதனுடன் தொடர்புபடுகின்றது என்றும் அவர் எடுத்துரைத்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர…

  13. “இலங்கையில் நாளாந்தம் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளமை தெளிவாகின்றது. அதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்குமாயின் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை இலங்கையிலும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது. எனவே, அந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்கு மக்கள் சார்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும்.” – இவ்வாறு தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவில் தற்போதுள்ள நிலைமையைக் கவனத்தில்கொண்டு இலங்கையில் முன்னாயத்தங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த நிலைமையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும். ஆ…

  14. உதயனில் கொல்லப்பட்ட பணியாளர்களுக்கு அஞ்சலி!!! உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்த துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பணியாளர்களுக்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் தலைமை அலுவலகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கொரோனாத் தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவினருடன் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. உதயன் பத்திரிகையின் குழுமத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஈ.சரவணபவன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உதயன் பணியாளர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். 2006ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி, ஊடக சுதந்திர தினத்துக்கு முதல் நாள் இரவு உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச்…

  15. தமிழர்களின் பூர்வீக இடத்தில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை!! முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக பகுதியான மணலாறு (வெலி ஓயா) பகுதியில் அண்மையில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் சித்த மத்திய மருந்தகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ள சித்த மருந்தகத்தின் பெயர்ப் பலகையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மொழி இரண்டாம் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த திறப்பு விழா நிகழ்விற்கு மதகுருக்களின் சார்பில் பௌத்த மதகுரு ஒருவரே அழைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், …

    • 1 reply
    • 383 views
  16. தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் செங்கலடியில் வைத்து ரி.ஐ.டி.யினரால் கைது 32 Views தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் . நேற்றிரவு 8.00 மணியளவில் செங்கலடியில் வைத்து ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் . முகப்புத்தகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான பதிவுகள் டக் (tag) செய்யப்பட்டமை – அனுப்பப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.ilakku.org/?p=48745 ****

  17. இராணுவ சோதனை சாவடி இருப்பது எமது வசதிக்காகவே-டக்ளஸ் 19 Views இராணுவ சோதனை சாவடி இருப்பது எமது வசதிக்காகவே என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு வருகை தந்திருந்த போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கொரோனா என்பது இலங்கையில் மாத்திரமல்ல எல்லா நாடுகளிலுமே தற்போது பாரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. சில நாடுகளில் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவையும் குறிப்பிடலாம். ஆனால் இலங்கையை பொறுத்தவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் சில கவனக்குறைவு காரணமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது…

    • 3 replies
    • 870 views
  18. முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் பகுதி மகாவலி அதிகார சபை வசம் 94 Views முல்லைத்தீவு மாவட்டத்தின் சுமார் 10 ஆயிரம் ஏக்கர்களுக்கும் அதிகமான தமிழர்களின் பெரும்பகுதி நிலங்கள், தனிச் சிங்களமயமாகும் அபாயத்தில் உள்ளது. அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் 13 கிராம சேவகர் பிரிவுகள் மகாவலி அதிகார சபையின் கீழ் செயல்பட ஏற்பாடு செய்யுமாறு மகாவலி அதிகார சபை வடக்கு மாகாண ஆளுநரிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய வெலிஓயாவில் இருந்து கொக்குளாய் கொக்குத்தொடுவாய், முள்ளியவளை, தண்ணீரூற்று என மாவட்டச் செயலகத்தை அண்மித்த பிரதேசம் வரையில், மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட பகுதியென கடந்…

    • 2 replies
    • 625 views
  19. நாடு திரும்பிய 48 பேருக்குத் தொற்று! வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 48 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய ஒரேநாள் பாதிப்பு ஆயிரத்து 891ஆகப் பதிவாகியுள்ளதுடன் இதுவே நாட்டில் அதிகூடிய ஒரேநாள் பாதிப்பாகும். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 753ஆக அதிகரித்துள்ளது. https://athavannews.com/2021/1213894

    • 1 reply
    • 417 views
  20. தமிழகத்தை ஆளப் போகும் முதல்வரை வாழ்த்தி வரவேற்போம் -மனோ கணேசன் 30 Views தமிழக ஆளும் கட்சியை, தமிழக முதல்வரை வாழ்த்தி வரவேற்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தியா, தமிழக தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திராவிட முன்னேற்ற கழகம் முன்னணியில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் மூலமாக அறியக் கூடியதாக உள்ளது. இந்த நிலையில் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தனது முகநுாலில் கருத்து தெரிவிக்கையில், “தமிழக தேர்தல் முடிவுகள் இன்று. அதில் நேரடியாக தலையிட, நாம் அங்கே வாக்காளர்கள் அல்ல. ஆனால் அதுபற்றி நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது.…

  21. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் அனுமதி! கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1213840

  22. முள்ளியவளை பகுதியில் ஆங்காங்கே வெடிபொருட்கள் - அச்சத்தில் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மூன்றாம் கண்டம் பகுதியில் உள்ள இலிங்கேஸ்வரன் என்பவருடைய வயல் காணியில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வயல் காணிக்குள் கைக்குண்டு இருப்பதை அவதானித்த காணி உரிமையாளரால் முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை பொலிஸார் கைக்குண்டை சென்று பார்வையிட்டுள்ளதோடு நீதிமன்ற அனுமதியைப் பெற்று செயலிழக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபரின் காணியில் இருந்த குண்டை பார்வையிட சென்றவேளை இன்னுமொரு குண்டும் இருப்பது பொலிஸாரால் நேற்று இனம் காணப்பட்டுள்ளது. மக்கள் மேற்கண்ட பகுதிகளில் …

    • 1 reply
    • 395 views
  23. தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள இளைஞர்களுடன் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்! By கிருசாயிதன் (வா.சுதர்ஸ்சன்)இராணுவத் தளபதியின் 'இராணுவ முன்னோக்கு மூலோபாயம் திட்டம் - 2020-2025' க்கு இணங்க புரிதல், இன நல்லிணக்கம் , தேசபக்தி சகவாழ்வு ,பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களிடையே பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஒரு புதிய திருப்புமுனையாக 359 தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள இளைஞர்களுடன் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி செவ்வாய்க்கிழமை (27) யாழ்ப்பாணம்விடத்தல்பலை பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.இந்த ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறியானது 2021 ஓகஸ்ட் மாதம் 27 வரை யாழ்ப்பாண பாதுகாப்புப் …

    • 21 replies
    • 1.6k views
  24. நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரம் வெளியானது நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.இதன்படி, அரச ஊழியர்கள், பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வருகைத்தரவேண்டும். தனியார்துறை ஊழியர்கள் குறைந்தளவானோர் அலுவலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும். பொது போக்குவரத்து சேவைகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்லவேண்டும். மாநாடு, கருத்தரங்கு, கூட்டங்…

  25. 12 வருடங்களாக மகனின் விடுதலையை எதிர்பார்த்திருந்த அரசியல் கைதியின் தந்தை உயிரிழப்பு May 1, 2021 மகனின் விடுதலையை எதிர்பார்த்து 12 வருடங்களாக காத்திருந்த தமிழ் அரசியல் கைதியின் தந்தை ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் செல்லாச்சி அம்மையார் வீதியை சேர்ந்த எஸ்.இராசவல்லவன் (வயது 79) என்பவரே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சோந்த இராசவல்லவன் தபோரூபன் (வயது 39) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கான வழக்கு இடம்பெற்று கடந்த 2019 ஆம் ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. மகன் கைது செய்யப்பட்ட பின்னர் தந்தை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.