Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வட மாகா­ண­சபை தேர்­தலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு சில­வேளை,­ வெற்றி பெற்று சி.வி. விக்கி­னேஸ்­வரன் முத­ல­மைச்­ச­ரானால் தமிழ் மக்­க­ளுக்கு கண்ணீர், இரத்தம் மற்றும் சுடு­காடு என்­ப­வையே உறு­தி­யாகும் என்று அமைச்­சரும் ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ளரு­மான சம்­பிக்க ரண­வக்க எச்­ச­ரித்தார். மேலும், http://tamilworldtoday.com/?p=25463

    • 0 replies
    • 613 views
  2. யாழ். மாவட்டத்தில் பொலிஸார் வசம் உள்ள காணிகள், வீடுகள் மற்றும் உணவகங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில், பொலிஸார் வசம் உள்ள ஒரு உணவகத்தினை குறுகிய காலத்திற்குள் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க பொலிஸார் இணங்கியுள்ளனர். யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவகம் மற்றும் காங்கேசன்துறையில் மக்களுடைய வீடுகள், பொதுமக்களின் காணிகள் போன்றன பொலிஸாருடைய பயன்பாட்டில் தொடர்ந்தும் இருக்கின்றன. இந்த நிலையில், பொலிஸாரிடம் உள்ள உணவகங்கள், வீடுகளை உரிம…

    • 0 replies
    • 332 views
  3. சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ள அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமான மற்றொரு சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெறவிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1.9 பில்லியன் டொலர்களை சிறிலங்கா அரசு கடன் உதவியாகக் கோரியிருக்கின்றது. இருந்தபோதிலும் சிறிலங்காவில் காணப்படும் மனித உரிமைகள் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தக் கடன் உதவியை வழங்குவதை அனைத்தலக நாணய நிதியம் தாமதப்படுத்தி வந்திருக்கின்றது. இது தொடர்பாக இதற்கு முன்னர் சிறிலங்கா அதிகாரிகள் நடத்திய பேச்சுக்கள் வெற்றி பெறவில்லை. மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்பதை அனைத்துலக நாணய நிதியம் ஒரு நி…

    • 0 replies
    • 460 views
  4. ஈழப்பொர் - தெரியாத நிகழ்வுகள்:.. ஈழப்போராட்டத்தில் நடந்த பல நிகழ்வுகள் எமது விடுதலைபோராட்டத்தை பாதித்திருப்பதை நாம் அறிவோம். ஆணால் அந்த நிகழ்வுகள் பலருக்கு, பொதுவாக போராட்டத்துக்கு ஆதரவு குடுத்த மக்களுக்கு தெரியாது. நான் பலமுறை இது பற்றி நாழில் கிண்டியபோதும், தேசிய நலன் கர்தி யாழ் இதுக்கு அனுமதிக்கவில்லை.. இன்று எமக்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.. கடந்த முப்பது வரிடங்களாக நடந்த எமக்குதெரியத, அரைகுறையாக தெரிந்த விடையங்களி இங்கு அலச விரும்புகிறேன்... தெரிந்தவர்களிடம், எனது முத கேள்வி சூசை பற்றியது.. யாருக்கு என்ன தெரியும்.. நடந்தது உண்மையிலையே படகு விபத்தா? பனங்காய்

  5. அரசியல் பிரச்சினைக்கு தீர்வு : தமிழர் தரப்பு அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் : சம்பிக்க (ஆர்.யசி) நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றால் தமிழர் தரப்பு நேரடியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். அதை விடுத்து சர்வதேசத்தை வரவழைத்து தீர்வு காண நினைத்தால் அது ஒருபோதும் சாத்தியமற்றதாகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கும்இ சர்வதேச அழுத்தங்களுக்கும், பொருளாதார சிக்கல்களுக்கும் தீர்வு காணும்வரையில் நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் தேர்தல்களின் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் பிளவுபடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக…

  6. புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக நாடு கடத்தப்பட உள்ள கனடாவாழ் தமிழர் மேல் முறையீடு கனடா வாழ் ஈழத்தமிழர்கள் ஐந்து பேரை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்திய குற்றத்துக்காக கனடியன் பொலிசார் கைது செய்து விசாரித்தனர். இவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் இவர்களை கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரமணன் மயில்வாகனம் (30) என்பவர் தனது நாடு கடத்தலை எதிர்த்து கனடா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முயற்சி செய்வதாக அறிவிக்கப்படுகிறது. இந்த வழக்கை ஏற்றுக் கொளவதா இல்லையா என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை செய்து வருவதாகவும் இவ்வாறு மேன்முறையீடு செய்வதே மயில்வாகனம் கனடா நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கான கடைசி சந்தர்ப்பம…

    • 2 replies
    • 1.4k views
  7. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பாதிப்புக்கள் 20 வருடங்களுக்கு நீடிக்கும்! June 15, 2021 கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், இன்னும் 20 வருடங்கள் வரையில் காணப்படுமென தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர, இதன் பாதிப்புக்களை டொலர்களில் மதிப்பிட முடியாதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து, கடலில் கலந்த பாரியளவான பிளாஸ்டிக் பொருள்கள் தற்போது 40 கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடலில் இன்னும் எவ்வளவு பிளாஸ்டிக் பொருள்கள் இருக்குமென ஆராய முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஆயிரத்து 486 கொள்க…

    • 1 reply
    • 205 views
  8. சிறிலங்காப் படையில் இருந்து தப்பியோடியவர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் நிறுவனங்களில் மற்றும் அலுவலகங்களில் கடமையாற்றலாம் எனக் கருதும் படைத் தலைமை அவ்வாறானவர்களை தனியார் நிறுவனங்களில் தேடிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. படையில் இருந்து தப்பியோடி தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 150 பேரின் விபரங்களைப் பெறும் நோக்கில் காவல்துறையினர் கொழும்பு மேலதிக நீதவான் ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர். மேற்படி படையினர் 150 பேரினதும் பெயர் மற்றும் முகவரி போன்ற விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. படையில் இருந்து கடந்த சில வருடங்களில் தப்பிச்சென்ற 65 ஆயிரம் பேரில் பெரும்பாலானவர்கள் தனியார்துறை…

    • 0 replies
    • 375 views
  9. 5,000 ஏக்கர் தனியார் காணிகள் குடாநாட்டில் படையினர் வசம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும், முப்படையினர் வசம் 5 ஆயிரம் ஏக்கர் தனியார் காணி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 3 ஆயிரத்து 640 ஏக்கரும், பொலிஸார் வசம் 25 ஏக்கரும், கடற்படையினர் வசம் 800 ஏக்கரும், வான் படையினரின் கட்டுப்பாட்டில் 540 ஏக்கரும் உள்ளது. பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்புத் தொடர்பில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. நெடுந்தீவுப் பிரதேச செ…

  10. விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் விடுத்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. இந்த காலப்பகுதியில் போர் நிறைவுபெற்ற பின்னர் வழக்கமாக மேற்கொள்ளப்படும் போருக்கு பின்னரான அபிவிருத்திகளோ அல்லது பாதுகாப்பு தளர்வுகளோ பெருமளவில் மேற்கொள்ளப்படவில்லை.மாறாக சிறீலங்கா அரசின் படைத்துறை கட்டமைப்புக்களில் பல மாற்றங்களும், மறுசீரமைப்புக்களும், பலப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. படையினாரின் எண்ணிக்கைகளின் அதிகரிப்புக்களுக்கு அப்பால் கட்டமைப்புக்களில் பல மாற்றங்களும், பலப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த வாரம் புதிய தளபதிகள் முப்படையிலும் புதிதாக நியமனம் பெற்றுள்ளதுடன், இராணுவத்தளபதியாக முன்னாள் வன்னி மாவட…

    • 1 reply
    • 1.3k views
  11. காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியை திறக்க சிறிலங்கா இராணுவம் இணக்கம் மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காங்கேசன்துறை – தொண்டைமானாறு இடையிலான வீதியை, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் மீளத்திறந்து விடவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா உறுதியளித்துள்ளார். வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரின் தலைமை…

    • 0 replies
    • 233 views
  12. குரங்கின் கையில் பூமாலையாக மட்டக்களப்பு மாவட்டம் – சாணக்கியன் கவலை மட்டக்களப்பில் இன்று உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று(வியாழக்கிழமை) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று மட்டக்களப்பின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது. மட்டக்களப்பு அரசியல்வாதிகளின் நிலைமை. அதிகாரத்தில் உள்ளவர்களின் நிலைமை. ஏன் என்றால் இன்றைய இந்த கூட்டத்திற…

  13. -மொஹொமட் ஆஸிக் பிக்கு வேடமிட்டு விஹாரைகளுக்குள் சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவரை மாத்தளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். மாத்தளை லக்கல பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சில காலம் பிக்குவாக இருந்துள்ளனர். அதன் பின்னர் துறவரத்தை கைவிட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் நுழைந்ததாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது. தனது குடும்பத்தை வாழ வைப்பதற்காக விஹாரைகளுக்கு சென்று கொள்ளையிடுவதாக விசாரணையின் போது அவர் தெரிவித்துள்ளார் மாத்தளை பொல்கொடுவ பிரதேசத்தில் விஹாரை ஒன்றில் 50,000; ரூபாய் பணம் மற்றம் டிஜிடல் கமரா ஒன்று திருடிய சம்பவம் தொடர்பாக இச் சந்தேக நபரை கைது செய்ததாக தெரிவ…

    • 8 replies
    • 684 views
  14. கொழும்பு லிபர்ட்டி எலைட் திரையரங்கில் நேற்று (24) திரையிடப்பட்ட இலங்கை யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட "மெட்ராஸ் கபே" திரைப்படத்தில் ஆங்கில உபதலைப்பு இல்லாததை அடுத்து படத்தைப் பார்க்க வந்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக "ஸ்ரீலங்கா மிரர்" க்கு தெரியவந்துள்ளது. ஹிந்தி மொழியில் உள்ள இந்த படத்தை ஆங்கில உபதலைப்பு இல்லாமல் பார்க்க முடியாது எனவும் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறியவர்கள் இந்த படத்தைப் பார்ப்பதற்காக செலுத்திய 300 ரூபா கட்டணத்தையும் மீளப் பெற்றுக் கொண்டே சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. என்றபோதிலும் அவர்கள் தங்களுடைய பணத்தை மீள வழங்கும் போது திரையரங்கின் நிர்வாகி, இந்தப் படத்த…

    • 7 replies
    • 753 views
  15. 33ஆவது முதலமைச்சர்கள் மாநாடு, இன்று (06) முற்பகல் ஹபரண சினமன் லொஜ் விருந்தகத்தில் நடைபெற்றது. 0 0 0 G - See more at: http://www.tamilmirror.lk/196139/ம-தலம-ச-சர-கள-ம-ந-ட-#sthash.16cDidVW.dpuf

  16. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் விவசாய நடவடிக்கைகளை தொடர்வதற்கு தேவையான உதவிகளை வழங்கத் தயார் என இந்தியா அறிவித்துள்ளது. வடக்குப் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழுவொன்றை இந்தியா அனுப்பி வைக்கவுள்ளது. இந்திய விவசாய ஆய்வுப் பேரவையின் விஞ்ஞானிகளைக் கொண்ட விசேட குழுவொன்று இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது. நிலத்தின் தன்மை, காலநிலை, என்ன வகையான பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து இந்த விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடாத்த உள்ளனர். எதிர்வரும் பருவ காலத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்திய விஞ்ஞ…

  17. கனடிய கடற்படையின் வின்னிபெக் கொழும்புத் துறைமுகத்தில் கனடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. வின்னிபெக் என்ற கனடிய கடற்படைக் கப்பலே, கூட்டுப்பயிற்சி மற்றும் நட்பு தேவைகளுக்காக நேற்று கொழும்புத் துறைமுகம் வந்துள்ளது. இந்தப் போர்க்கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ள இந்தப் போர்க்கப்பலானது, கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலங்களில் கூட்டுப்பயிற்சி, பரஸ்பர நட்புறவு மற்றும் நட்பு ரீதியான விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துக…

  18. தமிழகத்தைச் சேர்ந்த 27 அரசியல்வாதிகளுக்கு விடுதலைப்புலிகள் நிதியுதவி வழங்கி வந்தார்கள் என்று ஜனதாக்கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளார். இந்தத்தலைவர்கள் மீது இந்திய உளவுப்பிரிவினர் விசாரணைகள் மேற்கொள்ளவேண் டும் என்றும் அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுள்ளார். இலங்கையில் மீள்குடியமர்வு மற்றும் அனர்த்த நிவாரண அமைக்கர் ரிசாத்பதியுதீன் விடுதலைப்புலிகளிடம் பண உதவி பெற்றவர்களின் விவரத்தைச் சமீபத்தில் வெளியிட்டிருந்தார் என்றும் சுப்பிரமணிய சுவாமி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளும் விடுதலைப் புலிகளிடம் இருந்து நிதி உதவி பெற்றுவந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சி.பி. ஐ அமைப்பின் தலைமையில் குழு ஒன…

  19. மத்தளமாய் இருபுறமும் அடிவாங்கும் அரச உத்தியோகத்தர்களும் வடக்கின் தேர்தல் பிரச்சாரமும் அரசாங்கத்தின் தான்தோன்றித் தனமும் 18 செப்டம்பர் 2013 யாழ்.மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுநர்கள்இ விளையாட்டுத்துறை பணியாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்திய அதிகாரிகள் தொடர்பான பெயர் விபரங்கள் தேர்தல் கண்காணிப்பு அலுவலகங்களை சென்றடைந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். பகிரங்கமாகவே அரசிற்கு பிரச்சாரங்களை முன்னெடுக்க பணியாளர்களை நிர்ப்பந்தித்ததாக யாழ்.மாவட்ட சமுர்;த்தி இணைப்பாளர் ஆ.ரகுநாதன் மற்றும் சாவகச்சேரி சமுர்த்தி முகாமையாளர் அன்ரனி ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே போன்று யாழ்.மாவட்ட தேர்தல் பணிகள் முன்னெடுக்…

  20. சம்பூர் கடற்பரப்பில் கூட்டங்கூட்டமாகக் கரையொதுங்கிய திமிங்கிலங்கள் (Video) சம்பூர் கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கூட்டங்கூட்டமாக இன்று காலை கரையொதுங்கியுள்ளன. சுமார் 10 தொடக்கம் 11 அடி நீளமான 40 திமிங்கிலங்கள் கரையொதுங்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று மாலை கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் விட்டுள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக இந்த திமிங்கிலங்கள் கரையொதுங்கி இருக்கலாம் என சம்பூர் கடற்றொழில் பரிசோதகர் மொகமட் ரிஸ்வி தெரிவித்தார். http://newsfirst.lk/tamil/2017/05/சம்பூர்-கடற்பரப்பில்-கூட/

  21. மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார் கோட்டாபய; அதற்கு முன் கூட்டமைப்புடன் பேச்சு? September 6, 2021 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளார். கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த விஜயம் இடம்பெறவுள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 76 ஆவது கூட்டம், நியூயோர்க்கில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதிவரை அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயல…

  22. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தியா ஈழத் தமிழர் விவாகரத்தில் தமிழக மக்களோடு கபடியாடிக் கொண்டிருக்கிறது. வன்னி மீதான போர் உச்சத்தில் இருந்த போது போர் நிறுத்தம் கோரி தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்தார்கள் தமிழக மக்கள். ஆனால் இலங்கை விவாகரத்தில் தலையிட முடியாது என்றும் இலங்கை ஒரு இறையாண்மை உள்ள தேசம் என்றும் போரில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்த வில்லை என்றும். போர் பகுதிக்குள் எழுபதாயிரம் மக்களே சிக்கியிருக்கிறார்கள் என்றும் தொடர்ந்து பொய் சொல்லி வந்தது மத்திய காங்கிரஸ் அரசு. இந்த பொய்யர் கூட்டத்தின் தலைவனான மன்மோகன் சிங்கோ இந்தியா ஈழத் தமிழர்களுக்காக பாடு படும் என்று பாவனை செய்து கொண்டிருக்கிறார். இந்தியா 500 கோடி ரூபாய் நிபாரணம் வழங்கியதா? அந்த நிவாரண யார் மூலமாக எப்போது வழங்கப்ப…

  23. இலங்கையின் வடக்கு தேர்தல் களத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைகள குறித்து கனடா தமது கவலையை வெளியிட்டுள்ளது.வடக்கிலும் ஏனைய மாகாணங்களிலுல் தேர்தல்கள் நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் தேர்தல்கள் இடம்பெற வேண்டும் என்று கனேடிய வெளியுறவு அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் தீபக் ஒப்ராய் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தேர்தல்கள் நடைபெறும் மூன்று மாகாணங்களிலும் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான அத்துமீறல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. அத்துடன் அவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் கொண்டு வரப்படவேண்டும் என்றும் தீபக் கோரியுள்ளார். இந்தநிலையில் வடக்கிலும் ஏனைய மாகாணங்களிலுல் தேர்தல்கள் நியாயமானதாக…

  24. வறட்சி காரணமாக யாழ். மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு யாழ். மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். தீவகப் பகுதிகளான வேலனை, புங்குடுதீவு, ஊர்காவற்துறை, கரம்பொன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலவும் வறட்சியினால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் இப்பகுதி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் குழாய் நீர் விநியோகிக்கப்படுகின்ற போதிலும், நாளொன்றுக்கு அரை மணித்தியாலம் அல்லது ஒரு மணித்தியாலத்திற்கே தற்போது நீர் விநியோகிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். …

    • 3 replies
    • 459 views
  25. ‘கடவுளுக்கே முரண்பாடுகள் உள்ளபோது கட்சிகளுக்கு முரண்பாடு இல்லாமல் போகுமா?’-பா.அரியநேத்திரன் September 14, 2021 முரண்பாடுகள், ஒத்த கருத்துகள், கருத்தொற்றுமை மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுள்களிடமும் இருந்ததுதான் கடவுள் இடத்திலே முரண்பாடுகள் உள்ளபோது கட்சிகளிடையே முரண்பாடுகள் இல்லாமல் போகுமா என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்பை தமிழரசு கட்சிதலைவருமான பா.அரியநேத்திரன். ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக ஒரு கடிதம் அனுப்பவில்லை. பலரும் வெவ்வேறு விதமாக கடிதங்களை அனுப்பியது உங்களிடம் கருத்தொற்றுமை இல்லை என்பதையே வெளிக்காட்டுகிறதே என ஊ…

    • 4 replies
    • 530 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.