ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143278 topics in this forum
-
COVID-19 தொற்றுக்குள்ளான சடலங்களை அகற்றும் முறை தொடர்பில், பொதுச் சுகாதாரம், தொற்றுநோயியல், மருத்துவம் தொடர்பான சட்டம், சட்ட, மண் பகுப்பாய்வு போன்ற சம்பந்தப்பட்ட நிபுணர்களை உள்ளடக்கிய அணியொன்றுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்கவுக்கு இன்று வரையப்பட்ட கடிதத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரான வைத்தியர் ஹரித அலுத்கேயால் வரையப்பட்ட இக்கடிதத்தின் பிரதிகள், சுகாதாரமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர்களுக்கும் பிரதியிடப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/நிபுணர்களுடன்-கலந்துரையாடுக/175-247915
-
- 1 reply
- 403 views
-
-
’நெருக்கடியிலிருந்து விரைவில் மீள முடியாது’ சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருந்தால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து சிக்கலின்றி மீண்டெழ முடிந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வெளியிலிருந்து உதவிகளை பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்தியமை தவறு எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை விரைவில் வழமைக்கு திருப்ப முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார். இலங்கையின் சிறந்த நண்பன் என்ற வகையில் சீனா, ஏனைய கடன் வழங்குநர்களிடமிருந்…
-
- 0 replies
- 216 views
-
-
’பகிடிவதைக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை’ பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளன என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், " பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களை இலக்கு வைத்து புரியப்படும் பகிடிவதைகள் தொடர்பில் சட்டரீதியான கவனம் செலுத்தப்படும். கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற 80 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பகிடிவதையுடன் தொடர…
-
- 0 replies
- 334 views
-
-
’பகிஸ்கரிப்பா அல்லது சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவா?’ தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கொடுத்த கோரிக்கைகள் எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் மக்களிடம் தாங்கள் தேசியத்துக்காக பாடுபடுகின்றோம் என்று நாடகம் ஆடுவதற்காக கொடுக்கப்பட்டவை” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றையும் இன்று (21) வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கொடுத்த கோரிக்கைகள் எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் மக்களிடம் தாங்கள் தேசியத்துக்காக பாடுபடுகின்றோம் என்று நாடகம் ஆடுவதற்காக கொடுக்கப்பட்டவை. …
-
- 0 replies
- 486 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவது குறித்து, இதுவரையில் எவ்விதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்தத் தேர்தலில், பசில் ராஜபக்ஷ போட்டியிடப் போவதில்லை என்று கூறினார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (26) நடத்திய சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், “கோட்டாபய ராஜபக்ஷ வருவார் என தீர்மானிக்கவில்லை. பஷில் வருவார் என்றனர். கோட்டாபய ராஜபக்ஷ வருவார் என்றனர். சமல் ராஜபக்ஷ வருவார் என்றனர். குடும்பத்தில் ஒவ்வொருவர் தொடர்பிலும் மிகப் பெரிய கருத்துக்க…
-
- 1 reply
- 812 views
-
-
’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’ “கண்டி மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவந்த வீட்டுதிட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமையானது பெரும் அநீதியான செயலாகும்”என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல்தான் இந்த அரசாங்கத்தின் பயணம் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன், கண்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
Nirosh / 2022 ஜூலை 28 , பி.ப. 07:09 - 0 - 120 FacebookTwitterWhatsApp அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தி வன்முறைகளை ஒடுக்குவதற்குப் பதிலாக, பலிவாங்கள் செயற்பாடுகளை ஆரம்பித்து வன்முறைச் சம்பவங்களை அரசாங்கம் நாட்டில் மீண்டும் தூண்டுவதாக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இன்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பின் கதவு வழியாக வந்து தவறான வழியில் தான் ஜனாதிபதியாகிருந்தாலும், அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தாது நாட்டு மக்கள் கோர…
-
- 0 replies
- 797 views
-
-
’பணயக் கைதியாக புதிய பிரதமர் ரணில்’ ஜனாதிபதி, இந்த இக்கட்டான காலச் சூழலைத் தாண்டுவதற்கு புதிய பிரதமரை பணயக் கைதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாங்கில் செயற்படுகின்ற அரசியல் நடவடிக்கையையே தற்பொழுது காண்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 19ஆவது திருத்தத்தின் உண்மையான உள்ளடக்கங்களை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இன்னும் ஆட்சியில் நீடித்து கொள்வதற்கான கபடத்தனமான இந்த ஆட்சிக்குப் புதிய பிரதமரும் இணங்கிப் போவாராக இருந்தால் அவரது நிலைமையும் விபரீதமானதாக ஆகிவிடும் என்றும் எச்சரித்தார். நாகவில்லு (எருக்கலம்பிட்டி) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவும்,இளைஞர் காங்கிரஸும் இணைந்த…
-
- 3 replies
- 461 views
-
-
’பந்துல ஒரு கோமாளி’ புலம் பெயர் தமிழர்களின் அழுத்தத்தாலேயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அலரி மாளிகையில் நடைபெற்றக் கலந்துரையாடலைப் புறக்கணித்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மறுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பில் நடைபெற்றக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துக்கொள்வதை புலம் பெயர் தமிழ் அமைப்புக்களால் தடுத்து நிறுத்த முடியவில்லையே. ஆனால் எதிர்க்கட்சிகளை நிறுத்திவிட்டனரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுத் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மன…
-
- 0 replies
- 870 views
-
-
2019 ஓகஸ்ட் 17 சனிக்கிழமை, பி.ப. 01:17 அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை தரவைக் கோவில் வீதி எனும் பெயரை கடற்கரைப் பள்ளி வீதி எனும் பெயராக மாற்றும் பிரேரணை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டிருப்பதால், பழைய பெயர் செல்லுபடியற்றதாகி விட்டது என்று, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று முன்தினம் (15) மாலை மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மேற்படி சர்ச்சைக்குரிய வீதியின் பெயர் தொடர்பில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போதே மேயர் றகீப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நம்மில் பெரும்பாலானோர் தத்த…
-
- 0 replies
- 606 views
-
-
நடராசா கிருஸ்ணகுமார் யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, பால்பண்ணை அமைந்திருக்கும் ஜே/144 கிராமசேவையாளர் பிரிவில் வசிக்கும் மக்களுக்கு, விரைவில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். யாழ். மாவட்ட மக்களுக்கு 50,000 தடுப்பூசிகள் அண்மையில் வழங்கப்பட்டபோதும், அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பால்பண்ணைக் கிராமத்துக்கு தடுப்பூசி வழங்கப்படாதமை குறித்து, அந்தக் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்தே, அமைச்சர் இவ்வாறு உறுதியளித்தார். யாழ். மாவட்டத்துக்கு அடுத்த தொகுதி தடுப்பூசிக…
-
- 0 replies
- 379 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் எண்ணம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். பூநகரி - வாடியடி சந்தைக்கான கட்டடத்தொகுதியைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு, பதவி ஏற்ற நாளிலிருந்து, “சிங்கள - பௌத்த மக்களின் வாக்குகளால் மட்டுமே, நான், இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டேன்” என்கிற மமதையில் கூறிக்கொண்டு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். இதுவரை, வடக்கு மாகாணத்துக்கு ஆளுநரைக் கூட தெரிவுசெய்ய மனம் இல்லாதவர், தமிழர்களுக்க…
-
- 0 replies
- 468 views
-
-
2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:19 -எஸ்.நிதர்ஷன்- நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தங்களிடம் இல்லாததாலேயே புதிய அரசமைப்பு முயற்சி இப்போது தடைப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன், “அடுத்த பொதுத் தேர்தலில் தமது கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைக்கின்ற அதே நேரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். ஆகையினால் தீர்விற்கு ஆதரவளிக்கும் ஏனைய கட்சிகளோடு சேர்ந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் புதிய அரசமைப்பை நிறைவேற்றி இனப்பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்துவோம்” என்றார். யாழ்ப்பாணத்துக்கு விஐயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு ஊடகவியலாளர்களை நேற்றிரவு (16) சந்தித…
-
- 4 replies
- 1.2k views
-
-
’புதிய தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் உருவாக வேண்டும்’ Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 05:11 - 0 - 8 -செல்வநாயகம் ரவிசாந் தமிழ் மக்கள் தங்களுடைய அரசியலில் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டுமாயின், தமிழ் மக்கள் மத்தியில் புவிசார், பூகோள அரசியல் தொடர்பான விளக்கமுடைய புதிய தலைவர்கள் உருவாக வேண்டியது தற்போதைய காலத்தின் தேவையென, பிரபல அரசியல், சமூக ஆய்வாளர் எம். நிலாந்தன் வலியுறுத்தினார். “தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க அரசியல் தலையீடு செய்வோம்” எனும் தொனிப்பொருளில், அரசியல் தீர்வை வலியுறுத்தும் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள கலந்தரைய…
-
- 4 replies
- 663 views
-
-
’புதிய வரைவு இதுவரை அனுப்பப்படவில்லை’ - எஸ். நிதர்ஷன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து நேற்றுக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல், யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றது. கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர், “வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தங்களுக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். வவுனியாவிலும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் தனியார் போக்குவரத்துச் சபைக்கும் இடையில் பல பிரச்சினைகள் உள்ளன. அது தொடர்…
-
- 0 replies
- 225 views
-
-
-என்.ராஜ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புனர்வாழ்வு சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்பட்டு வருவதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தான சத்தியமூர்த்தி தெரிவித்தார். ஜப்பான் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பிரிவில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துரைத்த அவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த சிகிச்சை நிலையமானது, மத்திய சுகாதார அமைச்சால் திறந்து வைக்கப்பட்டு, தற்போது குறித்த சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருவதோடு வடக்கின் பல பகுதிகளிலும் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன், வ…
-
- 2 replies
- 443 views
-
-
’புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து கழுகுப் பார்வை’ க.கமல் மீண்டும் தலைத்தூக்குவதற்குப் புலிகளுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காதெனத் தெரிவித்துள்ள அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க, புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து, கழுகுப் பார்வையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிறுவர் அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் சர்ச்சைக்குரிய அந்த உரை குறித்த விசாரணைகள் நியாயமாக இடம்பெறுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். சிறிகொத்தாவில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கரு…
-
- 0 replies
- 242 views
-
-
இலக்குடன் செயற்பட்டால், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு விரிவானதொரு பங்களிப்பை வழங்கும் இயலுமை பெருந்தோட்டத் துறையிடம் உள்ளதென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவந்து, பொருளாதாரச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்டத்துறைக் கட்டியெழுப்புவதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்து, நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்துரைத்த ஜனாதிபதி, பெருந்தோட்டத் துறையினால் உற்பத்தி செய்யமுடியுமான பல விடயங்கள் அநாவசியமாக இறக்குமதி செய்யப்படுவதாகவும் சுதேச பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் பெருந்த…
-
- 2 replies
- 967 views
-
-
’பொதுக்கூட்டம் நடந்தால் கொவிட் மீண்டும் வரும்’ பொதுக்கூட்டங்கள் கூட்டப்படுவதால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பாக எச்சரித்துள்ள அரசாங்கம், இதுபோன்ற பொதுக்கூட்டங்களை, அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொவிட்-19இன் பதிவுகள் குறைந்து வரும் நிலையில், சிலர் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு முயன்று வருவதாக, அவர் தெரிவித்தார். இந்நிலையில், இவ்வாறான பொதுக்கூட்டங்களை நடத்துவதன் மூலம், சமூகத்துக்குள் கொவிட் - 19 பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டு…
-
- 1 reply
- 576 views
-
-
-க. அகரன் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, சமஷ்டி முறையிலான தீர்வு கிடைக்கும் என்ற வெடிகுண்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வெடிக்க வைத்துள்ளாரென, சிவசக்தி ஆனந்தன் எம்.பி குற்றஞ்சாட்டினார். சமஷ்டி அடிப்படையிலான தீர்வை, பேரம் பேசலுடன் பெறுவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்த போதும், அவை அனைத்தையும் கோட்டைவிட்டு, கடந்த ஆட்சியாளர்களுடன் சரணாகதியடைந்து, நான்கு வருடங்களாக நிஷ்டையில் இருந்து விழித்தவர் போன்று, தமிழ் மக்களை ஏமாற்றும் கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார் என்றும், ஆனந்தன் எம்.பி குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர் அதில், போர் நிறைவுக்கு வந்த பின்னர், ப…
-
- 2 replies
- 941 views
-
-
’போர்க் குற்றச்சாட்டுகளைப் பற்றிக் கவலையில்லை’ இலங்கைக்கு வேண்டுமானதை கொடுப்போம் என்கிறது சீனா மஹிந்த விசேடமானவர் அல்லர் எனவும் அறிவிப்பு - பெய்ஜிங்கிலிருந்து சந்துன் ஏ. ஜயசேகர இலங்கைக்கு வழங்கும் நிதி உதவிகள் தொடர்பாக, பின்னிணைப்புகள் எவற்றையும் சீனா கொண்டிருக்காது என்று உறுதியளித்த சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, மனித உரிமைகள் விசாரணைகளையோ அல்லது போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களையோ, முன் நிபந்தனைகளாகச் சேர்க்காது எனவும் உறுதியளித்துள்ளது. கலாசார, ஊடக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஊடகவியலாளர்க…
-
- 0 replies
- 210 views
-
-
’போலி தொலைபேசி அழைப்புகளுக்கு பலியாகவேண்டாம்’’ வீடுகளில் உள்ள நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்பு மேற்கொண்டு பொலிஸார் என தெரிவித்து மக்களிடம் பணம் கேட்டு அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அவ்வாறான அழைப்புகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன், இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார். ஏப்ரல் - 21 தாக்குதல் சம்பவத்தை தொடர்புபடுத்தி இனந்தெரியாத நபர்களால் இவ்வாறான அழைப்புகள் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு மேற்கொள்ளப்படும் அழைப்புக்களில் அதிகமானவை நிலையான தொலைப்பேசிகளுக்கு மேற்கொள்ளப்படுதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு…
-
- 0 replies
- 323 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் நீங்கியுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளூர் மற்றும் உலக சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வரை பொதுத்தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதை தவிர்க்கும்படி, தேர்தல் ஆணைக்குழுவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று (18) மாலை தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், மாவை.சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். முறையான தேர்தல் பிரசாரம் இடம்பெற்று தேர்தல் நடத்தப்படுவதே முறையான ஜனநாயக நடைமுறை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் தேர்தல…
-
- 1 reply
- 396 views
-
-
“கொரோனா வைரஸ் தாக்கம் அபாயம் உள்ள மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று. இங்கு அதிகளவான மக்கள் வசிக்கின்றனர். இந்த ஆபத்தான நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டுமாயின் சரியான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டும். அதனால் சரியான நிலமை ஏற்படும் வரை ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டியுள்ளது” என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார். “பாதுகாப்புத் தரப்பினரின் அறிவித்தல்களையும் சுகாதாரத்துறையினரின் அறிவுரைகளையும் கேட்டு மக்கள் வீடுகளுக்குள் இருக்கவேண்டும்” எனத் தெரிவித்த அவர், “நோய் அறிகுறிகள் இருந்தால் எந்தவொரு அச்சமுமின்றி பரிசோதனைகளை முன்னெடுக்க முன்வரவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். யா…
-
- 3 replies
- 469 views
-
-
’மட்டக்களப்பிலிருந்து விசேட அதிரப்படிடை வெளியேற வேண்டும்’ மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரைப் பலப்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது. அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், மணல் ஏற்றுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றும் கேள்வியெழுப்பினார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் தொடர்பாக, ஊடகங்களுக்கு இன்று (26) கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "யாழ். நல்லூரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், ந…
-
- 1 reply
- 469 views
-