Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 4245ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவிப்பு 23 Views வவுனியா பிரதேசத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப் படவுள்ளதாக வனவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா பிரதேசசெயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் ஏனைய அரசகாடுகளை விடுவிப்ப…

    • 1 reply
    • 636 views
  2. முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறவே சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதித்தது – கோவிந்தன் கருணாகரம் BatticaloaMarch 2, 2021 முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முஸ்லிம் மக்களது இறந்த உடல்களை புதைப்பதா அல்லது எரிப்பதா என்கின்ற நீண்ட நாள் விவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன.உலகத்தில் 190இற்கு மேற்பட்ட நாடுகளில் க…

  3. கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் புரிவதாகவும், அதனால் தாம் அச்சத்தில் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த கிராமவாசிகள் பாரிய அளவில் விவசாயத்தயே தமது தொழிலாக மேற்கொண்டுள்ளனர். தற்போது யானைகள் அங்கு வர ஆரம்பித்துள்ளன எனவும் இதுவரை காலமும் வராத யானனைகள் எவ்வாறு திடீரென வந்தது எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அடர்ந்த காடுகளும் இல்லாத நிலையில் எவ்வாறு இந்த யானைகள் வந்தன எனவும் தமது பயிர் நிலங்களையும், தென்னைமரங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளதாகவும் மக்கள் கவலை தெரித்துள்ளனர். உரிய விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களமும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்…

    • 1 reply
    • 340 views
  4. (எம்.மனோசித்ரா) ஜெனிவா தொடரில் இலங்கைக்கு எதிரான அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது முற்றிலுமே ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இதனை பொய்மையின் உச்சகட்ட நிலைமையாகவே இலங்கை கருதுகின்றது. எனவே தான் நட்பு நாடுகள் பல எம்முடன் இணைந்துள்ளன. அந்த வகையில் ஆசியாவில் இலங்கைக்கு மிக நெருங்கிய நட்பு நாடென்ற ரீதியில், இந்தியா அந்த அநீதியில் ஒத்துழைக்காது என்ற நம்பிக்கை உள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்றது. இதன் போது ஐ.நா மனித உரிமைகள் பேரவை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது. இங்கு …

  5. (எம்.மனோசித்ரா) கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மேற்கு முனைய அபிவிருத்திக்கு இந்தியாவின் அதானி நிறுவனம் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஜப்பான் அது தொடர்பில் அறிவிக்கவில்லை. இவ்வாறான கூட்டு அபிவிருத்தி முயற்சிக்கு பெரும்பாலான தொழிற்சங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றை ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் க…

  6. விவகாரத்தை ஜெனிவாவில் வைத்திருந்து காலங்கடத்தும் யோசனை – தமிழ் சிவில் சமூகம் 47 Views ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தற்போது பிரித்தானியா தலைமையிலான இணைத் தலைமை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது தொடர்ந்து இலங்கை விவகாரத்தை ஜெனீவாவில் வைத்திருந்து நேரத்தை வீணடிக்கும் நே◌ாக்கத்தைக் கொண்டதென தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கை தொடர்பில் பிரித்தானியா, அமெரிக்கா உட்பட்ட நாடுகளைக் கொண்ட குழுமத்தினால் ஐ. நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் அடிப்படையான கோரிக்கைகளை கூட பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி கடிதம் ஒன்று தமிழ் சிவில் சம…

  7. சாணக்கியனால் முதலமைச்சர் ஆக முடியாது ! கிழக்கு மாகாணசபையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றும் By Batticaloa சாணக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியானது சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளினால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை லங்கா பொதுஜன பெரமுன கட்சி மேற்கொள்ளுவதற்கு தயாராக இருக்கின்றது. என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார். இந்த விடையம் குறித்து மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(28) கருத்துத்…

    • 1 reply
    • 414 views
  8. ஒற்றுமை என்பது பத்தாகபிரிந்து கட்சிகளை உருவாக்குவதல்ல ஒன்றாக நிற்பதே ஒற்றுமை - பா.அரியநேத்திரன்,மு.பா.உ. வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழ்தேசிய அரசியல் பயணத்தில் ஒற்றுமை என்ற பெயரில் பல கட்சிகளை பெயரளவில் ஆரம்பித்து்செயல்படுவதை நிறுத்தி எல்லோரும் தமிழ்தேசி கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுவதே உண்மையான ஒற்றுமையாகும் என இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். ஒற்றுமை முயற்சிக்கு தமிழரசு கட்சி தயாரில்லை என தமிழ்தேசிய கட்சி என்ற பெயரில் ரெலோவில் இருந்து பிரிந்து புதிய கட்சியை உருவாக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீகாந்தா தெரிவித்த கருத்து்தொடர்பாக ஊட…

  9. கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தை இந்தியாவுடன் இணைந்து அரச-தனியார் வர்த்தகமாக முன்னெடுக்க அனுமதி கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனம் ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுக அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வர்த்தகமாக முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 35 வருடங்களில் அபிருத்தி செய்து நடைமுறைப்படுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்களுக்கு இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து முதலீட்டாளர்களை பரிந்துரைக்குமாறு கூறியிருந்த நிலையில், இந்தியாவிடமிருந்து மாத்திரம் முதலீட்டாளருக்கான உடன்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://yarl.com/f…

  10. தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா உறுதி – சுதர்ஷனி கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தடுப்பூசி ஏற்றப்பட்டு 3 வாரங்களுக்கு பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். தடுப்பூசி ஏற்றப்பட்டு 3 வாரங்களுக்குள் சிலருக்கு மாத்திரமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரும்புவோர் தங்களின் பொது சுகாதார பரிசோதகரின் உதவியுடன் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்து தடுப்பூசியை…

  11. யாழ்ப்பாண நகரின் பிரதான வெள்ள வாய்க்கால் சுமார் 30 வருடங்களின் பின்னர் யாழ்.மாநகர சபையினரால் துப்புரவு செய்யப்பட்டது. 1990ம் ஆண்டு காலப்பகுதியின் பின்னர் துப்புரவு செய்யப்படாத குறித்த பிரதான வாய்க்கால் நேற்று மாநகர முதல்வரின் நெறிப்படுத்தலில் யாழ் மாநகர சபையின் சுகாதார பணியாளர்களால் துப்புரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ் நகரின் ஸ்டான்லி வீதியிலிருந்த ஆரம்பித்து கடற்கரை வரை செல்லும் இரண்டு கிலோ மீட்டர் நீளமுடைய குறித்த பிரதான வாய்க்கால் யாழ் நகரின் மத்தியின் ஊடாக வீதியின் கீழாக செல்கின்றது. இந்த துப்பரவு பணி மிக கடினமானதாக இருப்பதனால் மாநகர சபையின் நோயாளர் காவு வண்டியும் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த துப்பரவு பணி இன்னு சில நாட்களு…

  12. லங்கை தொடர்பில் பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட குழுமத்தினால் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் அடிப்படையான கோரிக்கைகளை கூட பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி கடிதம் ஒன்று தமிழ் சிவில் சமூக அமையத்தினால் அந்த நாடுகளுக்கு இன்று (1) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆங்கில மூலத்திலான கடிதத்தின் தமிழ் மூல சுருக்கம் பின்வருமாறு: 1. 15.01.2021 தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளடங்கலான பொது அமைப்புக்கள் இணைந்து விடுத்த கோரிக்கையானது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலை உ…

  13. (ஆர்.யசி ) கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய சூனியப் பிரதேசமான தீவு ஒன்றை தெரிவுசெய்ய கொவிட் -19 செயலணிக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது. அதேநேரம் நல்லடக்க வழிமுறைகள் உள்ளடங்கிய வழிகாட்டி அறிக்கையை இந்த வாரம் இறுதிக்குள் வெளியிடவும் சுகாதார பணியகம் தீர்மானித்துள்ளது. கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களில் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கக்கோரி தொடர்ச்சியாக முஸ்லிம் தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில் சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தேசிய அழுத்தங்கள் காரணமாக தற்போது உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனினும் நல்லடக்கம் செய்ய முன்னர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள…

    • 24 replies
    • 3.4k views
  14. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் – ஐ.நா.வுக்கு மகஜர் அனுப்பிவைப்பு! 21 Views ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் வரைபு அல்லது பூச்சிய வரைபில் அவசரமாக மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென சிவில் அமைப்புக்களால் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மகஜர் வாசித்துக்காட்டப்பட்டது. குறித்த மகஜரில், பூச்சிய வரைவு தீர்மானத்தில் அவசர மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். வடக்கு கிழக்கு தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை! …

  15. ஐ.நாவில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும் !நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நாவில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது நாடு கடந்த அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமைத்துவம் எடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்கின்றோம். சிறிலங்கா தொடர்பாக மேற்குலக நாடுகள் முன்னெடுக்கின்ற தீர்மானத்தில், இந்தியா பார்வையாளராக இல்லாமல், ஈழத்தமிழர்களுக்கு நீதியினை பெற்றக் கொடுக்க இந்தியாவே தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என எதிர்பார்கின்றோம். …

  16. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்துள்ள எச்சரிக்கை! இன்றிலிருந்து வெளி மாவட்டத்திற்கான அனைத்து பேருந்து சேவைகளும் நெடுந்தூர பேருந்து நிலையத்தில். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாகாண ஆளுநரின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்தார். நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இ.போ.ச பேருந்துகள் சேவையில் ஈடுபடாத நிலையில் மத்திய பேருந்து நிலையத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி நடத்துநர்களுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து ந…

    • 0 replies
    • 331 views
  17. ஈஸ்டர் தாக்குதல் நாளை ‘கருப்பு ஞாயிறு’ தினமாக அறிவிக்க தீர்மானம் 14 Views ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவித்து கருப்பு ஞாயிறு தினத்தை அறிவிக்க கொழும்பு மறைமாவட்ட பேராயர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, எதிர்வரும் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ´கருப்பு ஞாயிறு´ தினமாக அறிவிக்க கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர்கள் தீர்மானித்துள்ளனர். ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு ஞாயிறு தினம் பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்…

    • 1 reply
    • 251 views
  18. சர்வதேசத்தின் அழுத்தத்தால் இலங்கை அரசாங்கத்தின் சுருதி மாறத் தொடங்கியுள்ளது- ஸ்ரீதரன் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/Sritharan-MP.jpg சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தால் இலங்கை அரசாங்கத்தின் சுருதி மாறத் தொடங்கியிருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில், அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி. ஜனகா நீக்கிலாஸின் ‘நடுகை’ என்ற மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டு விழாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “இன்றைய காலகட்டம் என்பது இலங்கைக்கு மிக முக்கியமானதாக …

    • 0 replies
    • 310 views
  19. செவ்விந்தியர்களின் கதியே தமிழர்களுக்கும் ஏற்படலாம்- ஐங்கரநேசன் எச்சரிக்கை! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/P-Ayngaranesan.jpg தமிழர்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் அமெரிக்காவின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்களின் கதியே எமக்கும் ஏற்படலாம் என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். அத்துடன், முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததோடு யுத்தம் நின்றுவிடவில்லை எனவும், அரசாங்கம் யுத்தத்தைச் சத்தமில்லாமல் இன்னுமொரு வடிவத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லூர் இளங்கலைஞர் மன்றத்…

    • 0 replies
    • 179 views
  20. முல்லையின் கடற்றொழில் அபிவிருத்திக்கு 10 கோடி ரூபா செலவிடப்படும்: அமைச்சர் டக்ளஸ் (சி.எல்.சிசில்) முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழில்சார் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வற்கு, சுமார் 10 கோடி ரூபாவைப் பயன்படுத்தமுடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர், மாவட்டத்தின் பல்வேறு சமூக அமைப்புகளையும் சந்தித்து மாவட்டத்தின் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இந்நிலையில், கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடன் கடந்த சனிக்கிழமை நடத்திய கலந்துரையாடலிலேயே இந்த விடயத்தை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்கள…

  21. யாழ் பேருந்து நிலையத்தில் குழப்பம்! முதல்வர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து, தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் சட்ட வடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் எச்சரித்துள்ளார். புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இன்று காலையில் இருந்து தனியார் துறையினர் சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் குறித்த பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுவதை புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பேருந்து நிலையத்திற்கு யாழ்ப்பாண பொலிஸ் ந…

  22. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று காலை முதல் முன்னெடுத்த சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று முன்தினம் ஆரம்பித்தார். அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடன் இணைந்து, வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள் இருவர் என ஐந்து பேர் இந்தப் போராட்டத்தை நேற்று காலை முன்னெடுத்தனர். அதன் பின்னர் மேலும் பலர் அவர்களுடன் போராட்டத்தில் இணைந்…

  23. இந்தியாவில் இருந்து அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானம்! இந்தியாவில் இருந்து இதுவரை காலமாக பெற்றுக்கொண்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ராசெனகா கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை இனிமேல் பிரித்தானியாவின் பிரதான நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக ஒளடத உற்பத்திகள், விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். இலங்கையில் பொதுமக்களுக்கு பயன்படுத்த வெளிநாடுகளில் இருந்து கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “நாட்டில் தற்போது…

  24. இந்திய விமானப்படையின் 25 விமானங்கள் இலங்கைக்கு வந்தன! இந்திய விமானப்படையின் 25 விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன. இலங்கை விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவு நாளை (செவ்வாய்க்கிழமை) விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பதிரனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. அத்துடன், மார்ச் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை காலி முகத்திடலில் விமானக் கண்காட்சியொன்றும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்திய விமானப்படை விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன. http://athavannews.com/இந்திய-விமானப்படையின்-25-வ/

  25. பிரேரணையை நிறைவேற்றினாலும் எம்மை எதுவும் செய்ய முடியாது! - மஹிந்த இறுமாப்பு.! ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் எத்தனை பிரேரணைகளையும் கொண்டுவரலாம். அவை நிறைவேறினால் என்ன, நிறைவேறாவிட்டால் என்ன? அதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எமது அரசின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டில் நாம் மாற்றம் எதையும் செய்யவேமாட்டோம்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வு நடைபெற்று வருகின்றது. இலங்கை தொடர்பான புதிய பிரேரணை விவகாரமும் சூடுபிடித்துள்ளது. வாக்குரிமையுள்ள 10 நாடுகள் மட்டும் இதுவரை இலங்கைக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக…

    • 4 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.