ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143634 topics in this forum
-
அரச மரம் புத்தருக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோன்றே குருந்த மரம் சிவனுக்கு முக்கியம் - கோவிந்தன் கருணாகரம் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) அரச மரம் புத்தருக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோன்றே குருந்த மரம் சிவனுக்கு முக்கியம். அதனால்தான் குருந்தூர் மலையில் சிவலிங்கம் தோன்றியுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார், அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதியினால் தொல்பொருள் ஆராய்ச்சிக்கென செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறித்த செயலணி …
-
- 1 reply
- 897 views
-
-
மட்டக்களப்பு – கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த கண்ணப்பன் கணேசன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். கிழக்கு மாகாணத்தில் 7 உள்ளுராட்சி சபைகளுக்கு புதிய தலைவர்கள் தெரிவு இடம்பெற்று வருகிறது. கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் நேற்று வாகரை பிரதேச சபையில் நடைபெற்ற தவிசாளர் தெரிவு தொடர்பான கூட்டத்தின் போது இவர் தெரிவு செய்யப்பட்டார். 18 சபை உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில் 16 உறுப்பினர்களே சமூகமளித்திருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமிருந்த சபையானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வசமானது. (150) வாகரை பிரதேச சபை பிள்ளையான் வசம்! – உதயன் | UTHAYAN (n…
-
- 2 replies
- 458 views
-
-
(நா.தனுஜா) அரசாங்கத்தின் அடக்குமுறைகளால் அதிருப்தியடைந்த தமிழ்மக்களின் உணர்வு ரீதியான வெளிப்பாடே பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணியாகும். எனினும் இனவாதத்தை அடிப்படையாகக்கொண்டு அரசியல் செய்யும் சரத் வீரசேகர போன்றவர்கள், பேரணியில் கலந்துகொண்டவர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமல் அவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்று பேசுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்று, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: …
-
- 1 reply
- 440 views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட அதிகம் பரவும் தன்மை கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (B.1.1.7 பரம்பரை) நாட்டின் பல பகுதிகளி ல் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். குறித்த புதிய வகை கொரோனா வைரஸ் கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (B.1.1.7 பரம்பரை) அதிக பரவும் தன்மை கொண்டது. இலங்கையிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பல பகுதிகளில் அடையாளம் - ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் | Virakesari.lk
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இலங்கை அரசின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள், கடந்த மாதம் கடலில் மீன் பிடிக்கச்சென்றிருந்தனர். ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை கடற்படையின் படகுடன் விபத்திற்குள்ளானதில் இந்திய மீனவர்களின் படகு மூழ்கியது. இதில் 4 மீனவர்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்த கேள்விகள், இந்திய பாராளுமன்றத்தில் நேற்று எழுந்தன. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த துயர சம்பவத்தில், இலங்கைக்கு நாம் நமது கடும் எதிர்ப்பை தெர…
-
- 0 replies
- 328 views
-
-
மூன்று மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்க சீன நிறுவனம் ஒன்றுக்கு யாழ்.குடா நாட்டில் உள்ள மூன்று தீவுகளை வழங்க கடந்த ஜனவரி 18 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியமை தொடர்பில் இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது. நெடுந்தீவு, நாயினாதீவு மற்றும் அனல்தீவு ஆகியவற்றில் மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்க சீன நிறுவனத்திற்கு இடமளித்தமை குறித்தே இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தொலைவில் இருக்கும் தீவுகளை சீனாவுக்கு வழங்குவது தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்தியா கூறியுள்ளது. எனினும் உரிய விலை மனு கோரலின் அடிப்படையிலேயே சீன நிறுவனம் இந்த திட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் மு…
-
- 127 replies
- 11.6k views
- 2 followers
-
-
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடிக்கு அரசாங்கத்திடம் இருக்கும் ஒரே மாற்று வழி சர்வதேச நாணய நிதியத்துடன் நிதி உதவிக்காக இணக்கப்பட்டுக்கு வருவது மாத்திமே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே மாற்று வழி சர்வதேச நாணய நிதியம். அதற்கான காரணத்தை நான் கூறுகிறேன். இலங்கை மத்திய வங்கி திறைசேரி பத்திரங்களை ஏலமிடுவதன் மூலம் கடந்த 10 ஆம் திகதி 40 பில்லியன் ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்த்தது. எனினும் 13 பில்லியன் மாத்திரமே கிடைத்தது. அது எதிர்பார்த்த தொகையில் 40 வீதமாகும். வட்டி வீதம் அதிகரிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. இதன…
-
- 0 replies
- 289 views
-
-
எண்முக தாரா லிங்கம் வெளிப்பட்டதன் மூலம், குருந்தூர்மலை தமிழர்களுடையது என்பது வெளிப்படையாகின்றது – ரவிகரன் 24 Views முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் அகழ்வாராட்சியில் வெளிப்பட்டிருக்கும் லிங்கமானது, எண்முக தாரா லிங்கம் என ஆய்வாளர்கள் பலரும் தெரிவிக்கின்ற நிலையில், குருந்தூர் மலை தமிழர்களுடையது என்பது வெளிப்படையாகின்றது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்களும் காணாமல் ஆக்கப்பட்டிருந்தன. குறிப்பாக எமது மக்கள் குருந்தூர் மலையிலே இறுதியாக கடந்த 01.10.2020அன்று…
-
- 0 replies
- 445 views
-
-
#P2P சர்ச்சைகள் குறித்து வெளிப்படுத்தினார் சுமந்திரன்! By கிருசாயிதன் February 12, 2021 பல்லாயிரக்கணக்கான மக்களின் பேராதரவுடன் நடைபெற்று முடிந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் குறித்து முன்வைக்கப்படும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியினை ஏற்பாடு செய்யும் போது எங்களிடம் 10 விடயங்களை சுட்டிக்காட்டி, இதனை வலியுறுத்தியே பேரணியினை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தனர்.இவ்வாறான நிலையில் ஐந்து…
-
- 0 replies
- 403 views
-
-
கிழக்கில் காணிகளை வழங்கிய அரசிற்கு நட்டம்! February 11, 2021 யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்களுக்குப் பின்னரும், கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் காணியற்று இருக்கின்ற நிலையில், முதலீட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை அரசாங்கம் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நீண்டகால வரி சலுகையின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டம் – குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் ஊடாக அரசுக்கு கிடைக்க வேண்டிய 348 மில்லியன் ரூபாய் நிதியை செலுத்த அவர்கள் தவறியுள்ளதாக காணி அமைச்சர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 294 views
-
-
சர்வதேச உளவுப்பிரிவுகள் நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முனைகின்றன – குணவங்ச தேரர் 19 Views சர்வதேச உளவுப்பிரிவுகள் நாட்டுக்குள் செயற்படுகின்றன என்றும், தேசிய சக்திகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்சதேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:- “தேசிய சக்திகள் இணைந்துதான் இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவந்தன. எனவே, மக்கள், அரசு மற்றும் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்காக மேற்படி சக்திகள் தொடர்ந்தும் செயற்படும். எனவே, தேசிய அமைப்புக்களுக்குள்ளும் பல பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்ப…
-
- 0 replies
- 337 views
-
-
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஐந்தாவது மரணம் பதிவானது! வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தின் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவரே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதேவேளை, மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த மூவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்களில், எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த க…
-
- 0 replies
- 279 views
-
-
சிறீலங்கா விவகாரத்தை ஐ.நாவில் விரிவாக ஆராய,சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல் 28 Views ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது சிறீலங்காவில் இடம்பெற்ற திட்டமிட்ட குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படல், வலுவிழந்துள்ள சட்டத்தின் ஆட்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட வேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் ஐநாவின் 46ஆவது கூட்டத்தொடரில், சிறீலங்கா தொடர்பாக விசாரிக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பான அறிக்கையினை சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்புடன் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்கும…
-
- 1 reply
- 420 views
-
-
குருந்தூரில் மீட்கப்பட்ட சிதைவுகள் அநுராதபுர காலத்திற்குரியவை!– தொல்பொருள் திணைக்களம் By கிருசாயிதன் February 11, 2021 முல்லைத்தீவு – தண்ணீறூற்று குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த பகுதியில் லிங்கத்தை ஒத்த சின்னங்கள் உள்ளிட்ட சில தொல்பொருட்கள் அடையாளம் காணப்பட்டன.குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியின்போதே இவை மீட்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.மேலும் குறித்த சிதைவுகள் அநுராதபுர காலத்திற்குரியவை என்றும் அங்கு பௌத்த தூபி காணப்பட்டமைக்கான சான்றுகள் மீட்கப்பட்டு…
-
- 1 reply
- 530 views
-
-
(எம்.மனோசித்ரா) போதகர்கள் எனக் கூறி போலி பிரசாரங்களை செய்வதோடு , துன்பத்திலிருந்தும் மக்களின் கவலைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கத்தோலிக்க மதத்தை இழிவுபடுத்தும் வகையில் செயற்படும் அடிப்படைவாத குழுவினர் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு - பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , முறையாக பயிற்சிகள் எதனையும் பெறாமல் தம்மை போதகர்கள் என்று கூறி மக…
-
- 2 replies
- 869 views
-
-
இலங்கையின் அதியுயர்ந்த சேவையாகக் கருதப்படும் (SLAS) இலங்கை நிர்வாக சேவையின்(SLAS) மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்தப் பட்டியலின் படி தமிழ் மொழி மூலமான பரீட்சார்த்திகள் எவரும் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையானது திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட இரு பிரிவுகளில் நடைபெறுகின்ற நிலையில் கடந்த வருடம்( 2020ஆம் ஆண்டு) தைமாதம் திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெற்றிருந்தன. 203 திறந்த மற்றும் 53 மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிடங்ளுக்காக பரீட்சை நடைபெற்றிருந்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெயர் பட்டியலை இலங்கை பொத…
-
- 9 replies
- 1.7k views
-
-
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையில் நீதி நிலைநாட்டப்படவில்லையெனில் நியாயத்தை பெற்றுக் கொள்ள சர்வதேசத்தை நாடவும் தயாராகவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். இந்த தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் திருப்தியானவையாக இல்லை. எனவே மக்களுடன் இணைந்து வேறு வழியில் இதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , அந்த நடவடிக்கை என்னவென்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பேராயர் குறிப்பிட்;டார். கொழும்பு - பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொ…
-
- 3 replies
- 513 views
-
-
திருகோணமலையில் 24 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அனுஷ்டிப்பு! By கிருசாயிதன் திருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட் தமிழ் உறவுகளின் 25ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.1996 பெப்ரவரி 11ஆம் திகதி, ஒன்பது பெண்கள், 12 வயதிற்குட்பட்ட ஒன்பது சிறுவர்கள் உட்பட 24பேர் படுகொலை செய்யப்பட்டனர்.இதனை நினைவுகூரும் வகையில், அப்பகுதி மக்கள் அங்குள்ள கோயிலொன்றில் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் பூசை வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத்தூபி அமையப்பெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களது உறவ…
-
- 0 replies
- 458 views
-
-
இந்திய அரசால் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தை கேட்கிறது இராணுவம்..! கடிதமும் அனுப்பட்டது.. இந்திய அரசாங்கத்தினால் யாழ்.நகரில் அமைக்கப்பட்டிருக்கும் கலாசார மண்டபத்தை படையினரிடம் கையளிக்கும்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான நிலத்தில் இந்திய அரசினால் 100 கோடி இந்திய ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டிடத்தினை பராமரிப்பதற்கு சில துறைசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், பொறியிலாளர்கள் உட்பட 60 வரையான பணியாளர்கள் தேவைப்படுவதோடு இந்த பணித் தொகுதிக்கு கட்டிடத்தை அமைத்த இந்தியக் குழுவால் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டியுள்ளது. இவ்வாறு…
-
- 7 replies
- 1.4k views
-
-
அடக்கம் குறித்து இறுதி முடிவு இல்லை கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இறுதி தீர்மானத்தை, இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவே தீர்மானிக்குமென, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த பாராளுமன்றத்தில் நேற்று கூறியிருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இவ்வாறு தெரிவித்துள்ளமை பலரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. Tamilmirror Online || அடக்கம் குறித்து இறுதி முடிவு இல்லை சடலங்கள் அடக்கம் – பிரதமரின் அறிவிப்பிற்கு ப…
-
- 2 replies
- 585 views
-
-
மக்களை அச்சுறுத்தவே படைகளை அரசு ஏவுகின்றது – சி.வி.விக்னேஸ்வரன் 19 Views “எங்களுடைய மக்களைப் பயமடையச் செய்யவேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் தங்களுடைய படைகளையும், காவல் துறையினரையும் ஏவி, பயங்கரவாதச் சட்டம் ஊடான கைதுகள் இடம்பெறுவதாக“ நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சி.வி.விக்னேஸ்வரனை, யாழில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சந்தித்துக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதன்போது, சி.வி.விக்…
-
- 1 reply
- 384 views
- 1 follower
-
-
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட்-19 காரணமாக இறப்பவர்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதியளிப்பதாக அறிவித்தார். கொவிட் -19 கழிவு நீரில் பரவ முடியாது என்று அமைச்சர் சுதர்ஷினி பெர்னாடோபுள்ளேயின் கூற்றைத் தொடர்ந்து கொவிட்-19 நோயாளிகளின் தகனம் குறித்து அறிக்கை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாறு பதில் கூறினார். Thinakkural.lk
-
- 7 replies
- 653 views
-
-
400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg உக்ரைன் மற்றும் கஜகஸ்தானிலிருந்து 400 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இரண்டு விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) நாட்டை வந்தடைந்தன. குறித்த இரண்டு விமானங்களும் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிரங்கியுள்ளன. கஜகஸ்தானிலிருந்து 235 சுற்றுலாப் பயணிகளுடனான விமானமும் 179 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட விமானம் உக்…
-
- 0 replies
- 275 views
-
-
2019 உ/த மாணவர்களின் வெட்டுப்புள்ளி பாதிப்பை நிவர்த்தி செய்ய 540 புதிய மாணவர்களுக்கு பல்கலை அனுமதி (சி.எல்.சிசில்) 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக் கழக இசட் வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் ஒரு தொகுதி மாணவர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளமையை சரி செய்ய 540 புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று பாராளு மன்றில் வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதன்படி, நீதித்துறை நடைமுறைக்கு மதிப்பளிக்கும் …
-
- 0 replies
- 273 views
-
-
தமிழ் மக்களைப் பயமடையச் செய்யவே படைகளையும், பொலிஸாரையும் அரசாங்கம் ஏவுகிறது- சி.வி. by : Litharsan எங்களுடைய மக்களைப் பயமடையச் செய்யவேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் தங்களுடைய படைகளையும், பொலிஸாரையும் ஏவி, பயங்கரவாதச் சட்டம் ஊடான கைதுகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சி.வி.விக்னேஸ்வரனை, யாழில் உள்ள கட்சி அலுவல…
-
- 0 replies
- 251 views
-