ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
சகோதர படுகொலையை நிறுத்தினால்.. பிரபாகரனுடன் பேசுகிறேன் என தெரிவித்திருந்தேன்- டக்ளஸ் சகோதர படுகொலையை நிறுத்த சொல்லுங்கள். அதன்பின் பிரபாகரனுடன் பேசுகிறேன் என தெரிவித்திருந்தேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “ஆயுத போராட்டத்தின் ஊடாகதான் பிரச்சினையை தீர்க்கலாம் என்று நினைத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அந்த வகையில் எமக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் கிடைத்தது. அது ஒரு பொன்னான வாய்ப்பு. அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தியிருந்தால் எவ்வளவோ இழப்புக்கள், துயரங்கள் அனை…
-
- 0 replies
- 361 views
-
-
கருணா வௌியேற உதவியது பயனளித்துள்ளது: அலி ஸாஹிர் மௌலானா தெரிவிப்பு
-
- 0 replies
- 387 views
-
-
கடவுள் இல்லை எனவும், கடவுள் இருந்தால் இப்படி ஒர் அனர்த்தம் ஏற்படுமா எனவும் தேசிய சங்க புத்திஜீவிகள் சங்கத்தின் உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடவுளோ அல்லது பேயோ இருந்திருந்தால் கொவிட்டினால் மனித குலம் எதிர்நோக்கியுள்ள பாரிய அழிவிலிருந்து அவர்களினால் எம்மை மீட்டிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவருடன் கடுந்தொனியில் பேசும் காணொளி ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே ஓமல்பே சோபித தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காளி அம்மா, கதிர்க…
-
- 3 replies
- 582 views
-
-
யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேசபைகளில் சிறப்பான ஆட்சி ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபடவுள்ளார் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் முக்கியஸ்தரும் யாழ்.மாநகரசபை உறுப்பினருமான வீ.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் காணப்பட்ட தடுப்பணை கடலால் அரிக்கப்பட்ட நிலையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் நடவடிக்கையில் மணிவண்ணன் தலைமையிலான அவருடைய ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீங்கள் யாழ்.மாநகரசபை முதல்வராக பதவி ஏற்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன, இந்தச் சம்பவம் உண்மையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியோதே அவர்…
-
- 1 reply
- 949 views
-
-
நீதிமன்ற எரிப்பின் ஊடாக குற்றவாளிகளை பாதுகாக்க ஜனாதிபதி விரும்பமாட்டார் நீதிமன்ற எரிப்பின் ஊடாக குற்றவாளிகளை பாதுகாக்க ஜனாதிபதி பிரதமர் விரும்பியிருக்கமாட்டார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மையில் நீதிமன்றில் தீ வைக்கப்பட்டு குற்றவாளிகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட செயற்பாடாக குற்றம் சாட்டப்படுகிறதே. அதற்கு என்ன பதிலை நீங்கள் கூறுகின்றீர்கள் என அமைச்சரிடம் ஊடகவியலாளர் வினவினார் அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆளும் தரப்பு ஒன்றை சொன்னால் எதிர…
-
- 3 replies
- 977 views
-
-
கொரோனா நோய்த் தொற்றால் மரணித்த முஸ்லிம் மக்களினது சடலங்களை அவர்களது மத நம்பிக்கைகளை உதாசீனம் செய்து கட்டாயத் தகனம் செய்வதும், நாட்டுக்கு வெளியே ஆளரவமற்ற தீவொன்றில் அவர்களது சடலங்களைப் புதைப்பது தொடர்பாக ஆராய்வதும் முஸ்லிம் மக்கள் மீதான இலங்கை அரசாங் கத்தின் பௌத்த, சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையே தவிர சுகாதார நடைமுறை அல்ல என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். கொரோனா நோய்த் தொற்றால் இறந்த முஸ்லிம் மக்களின் சடலங்களைக் கட்டாய எரியூட்டும் இலங்கை அரசாங்கத்தின் நடைமுறை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடு…
-
- 2 replies
- 865 views
-
-
வவுனியாவில் காணாமலாக்கப்படோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதுடன் அந்த சங்கத்தின் தலைவியையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவிக்கு வழங்கப்பட்டுள்ள கட்டளைப்பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா தலமை பொலிஸ் பரிசோதகரினால் இந்த மன்றிற்கு ARI623../2020 கீழ் தாக்கல் செய்த அறிக்கையின்படி நாளையதினம் (2020.12.18) காலை 10.00 மணிக்கு வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் காணாமல் போனவர்களின் உறவினர்களினால் நடாத்தப்படும் உண்ணாவிரத போராட்டம் 1400 நாட்களை கடந்துள்ளமையால் இதுவரையும் இந்த குடும்பத்தினருக்கு தீர்வு கிடைக்காதமை சம்பந்தமா…
-
- 2 replies
- 1k views
-
-
விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை புகழும் பெருமைப்படுத்தும் செயற்பாடுகள் வெளிநாடுகளில் அதிகரித்துள்ளன – தினேஸ் குணவர்த்தன விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை பெருமைப்படுத்தி புகழும் நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக வெளிநாடுகளில் அதிகரித்துள்ளன என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன பிரிட்டன் கனடா தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்த்தன இந்த வாரம் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனையும் கனடா தூதுவர் டேவிட் மக்கினனையும் சந்தித்து இருதரப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் நாடுகளின் பரஸ்பர பாதுகாப்பு குறி…
-
- 11 replies
- 1.3k views
-
-
முஸ்லிம்களின் உடல்கள் தகனம்: மாலைதீவின் பதில் கவலையளிக்கிறது – ஐ.நா. நிபுணர் கொரோனாவினால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வது இலங்கையில் முஸ்லிம் சமூகம் மேலும் விலக்கிவைக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என மத நம்பிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் அஹ்மெட் சஹீட் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு மாலைதீவின் பதில் ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என ஐ.நா நிபுணர் தெரிவித்துள்ளார். இந்த வேண்டுகோள் முஸ்லிம் சமூகத்திடமிருந்தோ அல்லது அவர்களின் சம்மதத்துடனோ வெளியாகவில்லைபோல தோன்றுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கையில் முஸ்லிம் சமூகம் மேலும் ஒதுக்கிவைக்கப்படும் நிலை உருவாகலாம் என குறி…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமைச்சர் வாசுவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள் by : Yuganthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/vasu.jpg எஹெலியகொட- தராபிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகைதந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டமொன்றை இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் நீர் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே வாசுதேவ நாணயக்கார விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, அவ்விடத்திற்கு வந்த அமைச்சருக்கு எதிராக அப்பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் பல சிக்கல்களு…
-
- 0 replies
- 541 views
-
-
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இந்த வருடமும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை – பேராயர் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/12/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88.jpg ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இரண்டாவது வருடமாகவும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாமல் போயுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித…
-
- 0 replies
- 274 views
-
-
கறுப்புச் சட்டையால் வந்த குழப்பம். இரு இராஜாங்க அமைச்சர்களை திருப்பி அனுப்பிய கூட்டமைப்பு. December 16, 20203:04 am மட்டக்களப்பு – கரடியனாறு குசலானமலை கிராமத்தில் தொல்பொருள் தொடர்பாக எழுந்த பிரச்சினையினை ஆராய்வதற்கான கள விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் வன ஜீவராசிகள் மற்றும் தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் அங்கு எழுந்த எதிர்ப்புக்காரணமாக குறித்த பகுதியிலிருந்து திருப்பியனுப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு குசலானமலைப்பகுதியில் இச் சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் காணப்படும் தொல்பொருள்தொடர்பிலான பிரச்சினையை ஆராயச் சென்ற இராஜாங்க அமைச்சர்கள் இருவருக்கும், தமிழ்த் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்…
-
- 1 reply
- 567 views
-
-
மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
-
- 0 replies
- 356 views
-
-
முன் அறிவித்தல் இன்றிய விதுர விக்ரமநாயக்கவின் கிழக்கு பயணத்திற்கு இரா. சாணக்கியன் எதிர்ப்பு
-
- 0 replies
- 359 views
-
-
ஜனாதிபதியும் இராணுவத் தளபதியும் காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு கூற வேண்டியவர்கள் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் அறிவித்துள்ளது. காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இறுதிக் கட்டப் போரில் 330 தமிழர்களும் 1989 இன் இறுதிக் காலாண்டுப் பகுதியில் 154 சிங்களவர்கள் காணாமற் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காணாமற்போனவர்கள் பற்றிய இந்த அலுவலகத்தின் அறிக்கையில் பெரியளவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது…
-
- 0 replies
- 345 views
-
-
வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும் குருமன்காடு பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக முகவர் ஒருவரூடாக இலங்கையில் இருந்து பயணித்துள்ளனர். இந்நிலையில் ஆபிரி்க்காவின் பல்வேறு நாடுகளில் அவர்கள தங்கியிருந்த நிலையில் வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பினை ஏற்படுத்தி கதைத்து வந்துள்ளனர். கோதண்டர் நொச்சிகுளத்தை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் (வயது 23) என்ற இளைஞர் இறுதியாக இம்மாதம் 3 ஆம் திகதி தனது குடும்பத்தின…
-
- 8 replies
- 1.3k views
-
-
கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வருட இறுதி புத்தாண்டு களியாட்ட நிகழ்வை நடாத்திய மட்டக்களப்பிலுள்ள பிரபல சுற்றுலா விடுதியொன்றின் உரிமையாளர் உட்பட நிகழ்வை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனமொன்றின் 46 உறுப்பினர்கள் அடங்கலாக 47பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்லடி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப் தெரிவித்தார். தனிமைப்படுத்தல் சட்டத்தை முழுமையாக மீறி நேற்றிரவு(15.12.2020) 7 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில், மட்டக்களப்பிலுள்ள தனியார் நிறுவனத்தினர் வருட இறுதி களியாட்ட நிகழ்வு நடாத்தப்பட்டபோது, அங்கு சென்ற சுகாதார அதிகாரிகளும் காத்தான்குடி பொலிசாரும் குறித்த விடுதியின் உரிமையாளர் மற்றும் விடுதியில் பணிபுரிவோர் நிகழ்வில் கலந்து கொண்டோர…
-
- 1 reply
- 627 views
-
-
எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (16.12.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவி்கும் போதே இதனைத் தெரிவித்தார். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மேலும் பதில் அளித்த கடற்றொழில் அமைச்சர், அண்மைக்காலமாக இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை கடற்றொழிலாளர்களும் பொறுமை இழந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர…
-
- 0 replies
- 469 views
-
-
மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்டு தொற்று உறுதியான ஒருவர் சென்றுள்ளது கண்டறியப்பட்டதால் கீரிமலை அந்திரட்டி மடம் செவ்வாய்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும்வரை முடக்கப்பட்டுள்ளது. யாழ். மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்ட நபர் தொற்றுறுதியான ஏழாலையைச் சேர்ந்த நபர் அண்மையில் நீத்தார் கடன் நிறைவேற்றச் சென்று திரும்பியமை தெரியவந்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் கீரிமலை தர்ப்பண மடம் உள்ள பகுதியை முடக்குவதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன் குறித்த தினத்தில் கிரியை நிகழ்வை நடத்திய மானிப்பாயைச் சேர்ந்த அந்தனரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, யாழ் அளவெட்டி பிரதேச வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 384 views
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இலங்கையைப் பொறுப்புக் கூற வலியுறுத்தல்: ITJP-JDS 58 Views இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சாவும் இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வாவும் காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு கூற வேண்டியவர்கள் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் (ITJP) மற்றும் JDS அறிவித்துள்ளது. மேற் குறிப்பிட்ட இரு அமைப்புக்களும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இறுதிக் கட்டப் போரில் 330 தமிழர்களும் 1989 இன் இறுதிக் காலாண்டுப் பகுதியில் 154 சிங்களவர்கள் கா…
-
- 0 replies
- 397 views
-
-
மஹர சிறைச்சாலையில் பலியானோரில் நால்வர் சுடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த நால்வரின் பிரேதப் பரிசோதனைகள் உள்ளடங்கிய இரகசிய அறிக்கையொன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மஹர சிறைச்சாலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட அறிக்கையின்படி குறித்த சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கைதிகளின் உறவினர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். சட்டமா அதிபர் …
-
- 0 replies
- 355 views
-
-
சீன மொழி அறிவிப்புப் பலகை நீக்கம் கல்கிசை ரயில் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சீன மொழியிலான அறிவிப்பு பலகையை, ரயில்வே திணைக்களம் அகற்றியுள்ளது. எதிர்காலத்தில், எந்தவொரு ரயில்வே நிலையத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும், அதற்கு ரயில்வே திணைக்கள பொது முகாமையாளரின் அனுமதி வேண்டும் என்று, ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் திலந்த பெர்ணான்டோ தெரிவித்தார். அத்துடன், இது தொடர்பாக, அனைத்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கல்கிசை ரயில் நிலையத்தில், சீன மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் பலகை, கடந்த 2015ஆம் ஆண்டு, பொதுமுகாமையாளரின் ஒப்புதலி…
-
- 0 replies
- 380 views
-
-
4 கைதிகளின் உடல்களை அடக்கம் செய்வதா? இல்லையா? - தீர்ப்பு இதோ! மஹர சிறை மோதலில் உயிரிழந்த நான்கு பேரின் சடலத்தை தகனம் செய்ய வத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று (16) மஹர நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நான்கு பேரின் பூதவுடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு இன்று மதியம வழங்கப்படவிருந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். இந்த மோதல் காரணமாக 11 கைதிகள் உயிரிழந்த நிலையில் அவர்களில் 8 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்து. அதன்படி, குறி…
-
- 0 replies
- 394 views
-
-
விஜயரத்தினம் சரவணன் இலங்கை அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களையும் பட்டினிச் சாவு நெருக்கடிக்குள் தள்ளுவதாகவே அமைந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி (எல்), வனஜீவராசி, வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என்பன தமிழ் மக்களின் வாழ்வாதாரக் காணிகளையும், வளமான பகுதிகளையும் அபகரித்து தமிழ் மக்களின் வழ்வாதாரத்தினை சூறையாடியுள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழ் மக்களின் கடல் வளமும் வேற்று நாட்டவரால் சிதைக்கப்படுகின்றது. இதையும் அமைதியா இருந்து வேடிக்கை பார்கின்றார்கள். இது எமது மக்ளை பட்டினிச்சாவு நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடாகவே தாம் பார்ப்பதாகவும் …
-
- 1 reply
- 650 views
-
-
நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை எதிர்வரும் 18ம் திகதி வரையில் அவர்களின் படகுகளிலேயே தடுத்து வைத்து கண்காணிப்பதற்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 22 பேர் 03 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கொரோனா அபாயம் காரணமாக நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களை பொறுப்பேற்பதில் மிகுந்த சிரமத்தினை எதிர்கொண்டனர். இந்நிலையில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜுட்சனின் வாசஸ்தலத்தில் திணைக்கள அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் குறித்த மனு கையளிக்கப்பட்டது. அதனை விசாரித்த ந…
-
- 7 replies
- 886 views
-