ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 33 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு – சரத் வீரசேகர 14 Views உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 267 பேரில் 33 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கண்டி தலதா மாளிகையில் நேற்று இடம்பெற்ற வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: “உயிர்த்த ஞாயிறு தினத்தில் 8 இடங்களில் குண்டை வெடிக்கச் செய்தமை தொடர்பான பொலிஸ் விசாரணை நடத்தப்பட்டு, அது தொடர்பான 8 விசாரணை அறிக்கை…
-
- 1 reply
- 365 views
-
-
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்! மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி சுமித் அழககோன் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே தொடர்ந்தும் திணைக்கள பணியில் ஈடுபடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலஞ்ச ஊழல் தொடர்பில் பொது மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/இலஞ்ச-ஊழல்-குற்றச்சாட்டு/
-
- 1 reply
- 614 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் பாரிய பிரச்சினைகள் உருவெடுக்கும். அது முஸ்லிம் இளைஞர்களை ஆயுதமேந்தவும் வைத்து விடலாம் என நீதி அமைச்சர் அலி சப்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைத்தளமொன்றில் இயங்கி வரும் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளார். கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் புதைக்க முடியும் என்றால், அவற்றை ஏன் இலங்கையில் புதைக்க முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வதன் ஊடாகத் தொற்று பரவாது என்பதை தொற்று நோய் மற்றும் வைரஸ் குறித்த பிரபல்யம் வாய்ந்த பேராசிரியர் மலித் பீரிஸ் குறிப்பிட்டுள்ள…
-
- 5 replies
- 814 views
-
-
கிளிநொச்சி கல்வி வலயத்தை 2 ஆக பிரிக்க அங்கீகாரம் கிளிநொச்சி கல்வி வலயத்தினை இரண்டாக பிரிக்க மாவட்ட அபிவிருத்தி குழு அங்கீகாரம் வழங்கியது. நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் தனி கல்வி வலயமாக இருந்த கிளிநொச்சி கல்வி வலயமானது கரைச்சி, பூநகரி கல்வி கோட்டங்களை இணைத்து தனி கல்வி வலயமாகவும், கண்டாவளை பச்சிலைப்பள்ளி கல்வி கோட்டங்களை இணைத்து தனி கல்வி வலயமாகவும் இரண்டாக பிரிக்க நேற்றைய அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதற்கு அமைவாக ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டு்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் நேற்றைய…
-
- 2 replies
- 585 views
-
-
46 ஆவது ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை - அமெரிக்க தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு (ஆர்.ராம்) • 30/1 தீர்மானத்திற்கு மேலதிகமான விடயங்களை தயார்ப்படுத்துமாறும் யோசனை • சிரியா, மியன்மார் விடயப் பொறிமுறைகள் குறித்தும் கவனம் • புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆழ்ந்த கரிசனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணையொன்றையே கொண்டுவருவதற்கு இயலுமானதாக இருக்கும் என்று இலங்கை மற்றும் மாலை தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பே…
-
- 0 replies
- 539 views
-
-
மருதனார்மடம் கொரோனா கொத்தணி 73 ஆகியது – நேற்று ஐந்து பேருக்கு தொற்று உறுதி 14 Views மருதனார் மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் ஐந்து பேருக்குத் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். சுன்னாகம் பொதுச்சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் 110 வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே ஐந்து பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம்பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்ட இருவரும் உடுவில் …
-
- 0 replies
- 229 views
-
-
வவுனியாவில் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் அனுஸ்டிப்பு வவுனியாவில் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கையில் இருந்து பல்வேறு காரணங்களால் வேறு நாடுகளுக்கு, பலரும் புலம் பெயர்ந்து சென்றுள்ள நிலையில், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் புலம்பெயர் தினம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நிலையில் வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று காலை, சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்திற்காக விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கருமாரி அம்மன் ஆலய பிரதம குரு பிரபாகரக்குருக்கள் விசேட வழிபாடுகளை நடத்தியிருந்தார். இதன்போது அண்மையில் வவுனியாவில் இருந்து பிரா…
-
- 0 replies
- 328 views
-
-
சகோதர படுகொலையை நிறுத்தினால்.. பிரபாகரனுடன் பேசுகிறேன் என தெரிவித்திருந்தேன்- டக்ளஸ் சகோதர படுகொலையை நிறுத்த சொல்லுங்கள். அதன்பின் பிரபாகரனுடன் பேசுகிறேன் என தெரிவித்திருந்தேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “ஆயுத போராட்டத்தின் ஊடாகதான் பிரச்சினையை தீர்க்கலாம் என்று நினைத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அந்த வகையில் எமக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் கிடைத்தது. அது ஒரு பொன்னான வாய்ப்பு. அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தியிருந்தால் எவ்வளவோ இழப்புக்கள், துயரங்கள் அனை…
-
- 0 replies
- 363 views
-
-
கருணா வௌியேற உதவியது பயனளித்துள்ளது: அலி ஸாஹிர் மௌலானா தெரிவிப்பு
-
- 0 replies
- 388 views
-
-
கடவுள் இல்லை எனவும், கடவுள் இருந்தால் இப்படி ஒர் அனர்த்தம் ஏற்படுமா எனவும் தேசிய சங்க புத்திஜீவிகள் சங்கத்தின் உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடவுளோ அல்லது பேயோ இருந்திருந்தால் கொவிட்டினால் மனித குலம் எதிர்நோக்கியுள்ள பாரிய அழிவிலிருந்து அவர்களினால் எம்மை மீட்டிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவருடன் கடுந்தொனியில் பேசும் காணொளி ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே ஓமல்பே சோபித தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காளி அம்மா, கதிர்க…
-
- 3 replies
- 585 views
-
-
யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேசபைகளில் சிறப்பான ஆட்சி ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபடவுள்ளார் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் முக்கியஸ்தரும் யாழ்.மாநகரசபை உறுப்பினருமான வீ.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் காணப்பட்ட தடுப்பணை கடலால் அரிக்கப்பட்ட நிலையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் நடவடிக்கையில் மணிவண்ணன் தலைமையிலான அவருடைய ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீங்கள் யாழ்.மாநகரசபை முதல்வராக பதவி ஏற்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன, இந்தச் சம்பவம் உண்மையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியோதே அவர்…
-
- 1 reply
- 962 views
-
-
நீதிமன்ற எரிப்பின் ஊடாக குற்றவாளிகளை பாதுகாக்க ஜனாதிபதி விரும்பமாட்டார் நீதிமன்ற எரிப்பின் ஊடாக குற்றவாளிகளை பாதுகாக்க ஜனாதிபதி பிரதமர் விரும்பியிருக்கமாட்டார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மையில் நீதிமன்றில் தீ வைக்கப்பட்டு குற்றவாளிகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட செயற்பாடாக குற்றம் சாட்டப்படுகிறதே. அதற்கு என்ன பதிலை நீங்கள் கூறுகின்றீர்கள் என அமைச்சரிடம் ஊடகவியலாளர் வினவினார் அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆளும் தரப்பு ஒன்றை சொன்னால் எதிர…
-
- 3 replies
- 982 views
-
-
கொரோனா நோய்த் தொற்றால் மரணித்த முஸ்லிம் மக்களினது சடலங்களை அவர்களது மத நம்பிக்கைகளை உதாசீனம் செய்து கட்டாயத் தகனம் செய்வதும், நாட்டுக்கு வெளியே ஆளரவமற்ற தீவொன்றில் அவர்களது சடலங்களைப் புதைப்பது தொடர்பாக ஆராய்வதும் முஸ்லிம் மக்கள் மீதான இலங்கை அரசாங் கத்தின் பௌத்த, சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையே தவிர சுகாதார நடைமுறை அல்ல என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். கொரோனா நோய்த் தொற்றால் இறந்த முஸ்லிம் மக்களின் சடலங்களைக் கட்டாய எரியூட்டும் இலங்கை அரசாங்கத்தின் நடைமுறை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடு…
-
- 2 replies
- 870 views
-
-
வவுனியாவில் காணாமலாக்கப்படோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதுடன் அந்த சங்கத்தின் தலைவியையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவிக்கு வழங்கப்பட்டுள்ள கட்டளைப்பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா தலமை பொலிஸ் பரிசோதகரினால் இந்த மன்றிற்கு ARI623../2020 கீழ் தாக்கல் செய்த அறிக்கையின்படி நாளையதினம் (2020.12.18) காலை 10.00 மணிக்கு வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் காணாமல் போனவர்களின் உறவினர்களினால் நடாத்தப்படும் உண்ணாவிரத போராட்டம் 1400 நாட்களை கடந்துள்ளமையால் இதுவரையும் இந்த குடும்பத்தினருக்கு தீர்வு கிடைக்காதமை சம்பந்தமா…
-
- 2 replies
- 1k views
-
-
விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை புகழும் பெருமைப்படுத்தும் செயற்பாடுகள் வெளிநாடுகளில் அதிகரித்துள்ளன – தினேஸ் குணவர்த்தன விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை பெருமைப்படுத்தி புகழும் நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக வெளிநாடுகளில் அதிகரித்துள்ளன என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன பிரிட்டன் கனடா தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்த்தன இந்த வாரம் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனையும் கனடா தூதுவர் டேவிட் மக்கினனையும் சந்தித்து இருதரப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் நாடுகளின் பரஸ்பர பாதுகாப்பு குறி…
-
- 11 replies
- 1.3k views
-
-
முஸ்லிம்களின் உடல்கள் தகனம்: மாலைதீவின் பதில் கவலையளிக்கிறது – ஐ.நா. நிபுணர் கொரோனாவினால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வது இலங்கையில் முஸ்லிம் சமூகம் மேலும் விலக்கிவைக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என மத நம்பிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் அஹ்மெட் சஹீட் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு மாலைதீவின் பதில் ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என ஐ.நா நிபுணர் தெரிவித்துள்ளார். இந்த வேண்டுகோள் முஸ்லிம் சமூகத்திடமிருந்தோ அல்லது அவர்களின் சம்மதத்துடனோ வெளியாகவில்லைபோல தோன்றுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கையில் முஸ்லிம் சமூகம் மேலும் ஒதுக்கிவைக்கப்படும் நிலை உருவாகலாம் என குறி…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமைச்சர் வாசுவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள் by : Yuganthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/vasu.jpg எஹெலியகொட- தராபிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகைதந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டமொன்றை இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் நீர் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே வாசுதேவ நாணயக்கார விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, அவ்விடத்திற்கு வந்த அமைச்சருக்கு எதிராக அப்பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் பல சிக்கல்களு…
-
- 0 replies
- 543 views
-
-
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இந்த வருடமும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை – பேராயர் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/12/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88.jpg ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இரண்டாவது வருடமாகவும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாமல் போயுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித…
-
- 0 replies
- 276 views
-
-
கறுப்புச் சட்டையால் வந்த குழப்பம். இரு இராஜாங்க அமைச்சர்களை திருப்பி அனுப்பிய கூட்டமைப்பு. December 16, 20203:04 am மட்டக்களப்பு – கரடியனாறு குசலானமலை கிராமத்தில் தொல்பொருள் தொடர்பாக எழுந்த பிரச்சினையினை ஆராய்வதற்கான கள விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் வன ஜீவராசிகள் மற்றும் தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் அங்கு எழுந்த எதிர்ப்புக்காரணமாக குறித்த பகுதியிலிருந்து திருப்பியனுப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு குசலானமலைப்பகுதியில் இச் சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் காணப்படும் தொல்பொருள்தொடர்பிலான பிரச்சினையை ஆராயச் சென்ற இராஜாங்க அமைச்சர்கள் இருவருக்கும், தமிழ்த் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்…
-
- 1 reply
- 574 views
-
-
மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
-
- 0 replies
- 358 views
-
-
முன் அறிவித்தல் இன்றிய விதுர விக்ரமநாயக்கவின் கிழக்கு பயணத்திற்கு இரா. சாணக்கியன் எதிர்ப்பு
-
- 0 replies
- 360 views
-
-
ஜனாதிபதியும் இராணுவத் தளபதியும் காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு கூற வேண்டியவர்கள் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் அறிவித்துள்ளது. காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இறுதிக் கட்டப் போரில் 330 தமிழர்களும் 1989 இன் இறுதிக் காலாண்டுப் பகுதியில் 154 சிங்களவர்கள் காணாமற் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காணாமற்போனவர்கள் பற்றிய இந்த அலுவலகத்தின் அறிக்கையில் பெரியளவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது…
-
- 0 replies
- 346 views
-
-
வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும் குருமன்காடு பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக முகவர் ஒருவரூடாக இலங்கையில் இருந்து பயணித்துள்ளனர். இந்நிலையில் ஆபிரி்க்காவின் பல்வேறு நாடுகளில் அவர்கள தங்கியிருந்த நிலையில் வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பினை ஏற்படுத்தி கதைத்து வந்துள்ளனர். கோதண்டர் நொச்சிகுளத்தை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் (வயது 23) என்ற இளைஞர் இறுதியாக இம்மாதம் 3 ஆம் திகதி தனது குடும்பத்தின…
-
- 8 replies
- 1.3k views
-
-
கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வருட இறுதி புத்தாண்டு களியாட்ட நிகழ்வை நடாத்திய மட்டக்களப்பிலுள்ள பிரபல சுற்றுலா விடுதியொன்றின் உரிமையாளர் உட்பட நிகழ்வை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனமொன்றின் 46 உறுப்பினர்கள் அடங்கலாக 47பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்லடி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப் தெரிவித்தார். தனிமைப்படுத்தல் சட்டத்தை முழுமையாக மீறி நேற்றிரவு(15.12.2020) 7 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில், மட்டக்களப்பிலுள்ள தனியார் நிறுவனத்தினர் வருட இறுதி களியாட்ட நிகழ்வு நடாத்தப்பட்டபோது, அங்கு சென்ற சுகாதார அதிகாரிகளும் காத்தான்குடி பொலிசாரும் குறித்த விடுதியின் உரிமையாளர் மற்றும் விடுதியில் பணிபுரிவோர் நிகழ்வில் கலந்து கொண்டோர…
-
- 1 reply
- 630 views
-
-
எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (16.12.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவி்கும் போதே இதனைத் தெரிவித்தார். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மேலும் பதில் அளித்த கடற்றொழில் அமைச்சர், அண்மைக்காலமாக இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை கடற்றொழிலாளர்களும் பொறுமை இழந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர…
-
- 0 replies
- 471 views
-