Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.எப்.எம்.பஸீர்) ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதானியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரான் ஹஷீமின், அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்று, தற்கொலை தாக்குதல்கள் உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றதாக கூறப்படும் 6 பெண்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன. பெண்ணொருவரும் அவரது 3 மகள்மாரும், இரு மருமகள்மாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது…

    • 0 replies
    • 562 views
  2. கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்போரை உலகில் உள்ள 197 நாடுகள் அடக்கம் செய்யும்போதுஇ இலங்கையில் மாத்திரம் அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படுவதில்லை எனக் கேள்வியெழுப்பிய இஷாக் ரஹ்மான் எம்.பி, முஸ்லிம்கள் ஈழத்தைக் கேட்கவில்லை. கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை (ஜனாஸாக்களை) அடக்கம் செய்ய வேண்டுமென்றே கேட்கிறார்கள். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படாது என்றார். சுற்றாடல், வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், 'முஸ்லிம்கள் ஒருபோதும் நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை. நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. நாட்டின் அ…

    • 2 replies
    • 484 views
  3. நீண்டகாலம் தண்டனை பெறும் கைதிகளுக்கு மன்னிப்பு – அமைச்சரவை பத்திரத்தை தயார் செய்யும் நீதி அமைச்சு கொரோனா தொற்று காரணமாக சிறைச்சாலையிலிருந்து கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான நிபந்தனைகள் உள்ளடக்கிய அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் தடுப்புக்காவில் உள்ள சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக நீதி அமைச்சு அமைச்சரவை பத்திரத்தை தயாரித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார். மேலும் நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுவித்தல் என்ற அடிப்படையில் கைதிகளின் தண்டனை முடிவடைவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்…

    • 1 reply
    • 590 views
  4. போராளியையும் நினைவு கூரலாம் – பொன்சேகாவின் கருத்துக்கு மனோ பாராளுமன்றத்தில் பதிலடி 13 Views ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, பாராளுமன்றத்தில் நேற்று பதிலடி கொடுத்தார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோகணேசன். மனோ கடும் சினத்துடன் சிங்கள மொழியில் உரையாற்றுகையில் சரத் பொன்சேகாவும் சபையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியினரும் மனோவின் உரையை கவனமாக செவிமடுத் துக்கொண்டிருந்தனர். மனோ கணேசன் ஆற்றிய உரையின் முக்கிய அம்சம் வருமாறு, “2010 ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிட…

  5. ‘கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது என அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அவரது குறித்த கருத்து தொடர்பாக தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் பதிலளிக்கும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். கூட்டமைப்பு ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியாக செயற்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் ஆதரித்தார்கள் என்பதற்காக அதை விடுதலைப…

  6. வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 101 வைத்தியர்கள் நியமனம்! வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 101 வைத்தியர்களுக்கான நியமனம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு சுகாதார அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அவர்களில் 27 வைத்தியர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும் 20 வைத்தியர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் ஏனையவர்கள் ஏனைய மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தவிர்ந்த அனைத்து மாவட்ட, ஆதார மற்றும் பிரதேச வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு 101 வைத்தியர…

  7. சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் கடந்த டிசம்பர் 2ம் திகதி இரவு புரேவி புயலால் கடும் மழை பொழிந்து கொண்டிருந்த வேளை 7 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் இரண்டு பேர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 7 தங்கப் பவுண் நகைகள், 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன. அத்துடன், 3 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன. வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைப் பார்த்து கொள்ளையர்கள் ஐவர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் மூவர் மட்டும் சாவகச்சேரி பொலிஸ் நில…

  8. பயங்கரவாதி தீவிரவாதி குற்றச்செயலில் ஈடுபட்டவர் என தீர்ப்பளிக்கப்பட்ட எவரையும் சட்டத்தின்கீழ் பாதுகாக்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர வலியுறுத்தியுள்ளார். சமூகஊடகத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒரு நாடு ஒருசட்டம் என்பதனை வெறும் வார்த்தைகளிற்கு அப்பால் சென்று உண்மையில் நடைமுறைப்படுத்துவது எப்படி என நாட்டை நேசிப்பவர்கள் சிந்திக்கவேண்டிய தருணம் வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹரசிறைச்சாலை கலவரத்தின் பின்னர் சிறைச்சாலை வாசலில் தாய்மார்கள் கண்ணீர்விட்டு அழுதது தென்பகுதியில் கண்ணீர்விட்ட தாய்மார்களை நினைவுபடுத்தியது என மங்களசமரவீர தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நாங்கள் வடபகுதியின் தாய்மார்களின் கண்ணீரை மாத்திரமில…

    • 2 replies
    • 955 views
  9. 2009 ஜனவரியில் அரசாங்கம் திடீரென அறிவித்த யுத்தநிறுத்தத்தினால் 300 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். 2009 ஜனவரி முப்பதாம் திகதியும் பெப்ரவரி முதலாம் திகதியும் அப்போதைய அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது நான் இதனை எதிர்த்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த குறுகிய காலப்பகுதிக்குள் பயங்கரவாதிகள் இராணுவத்தினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என குறிப்பிட்டுள்ள அவர் அந்த மோதல்களில் 300 படையினர் கொல்லப்பட்டதுடன் படையினர் நான்கு கிலோமீற்றர் தூரம் பின்வாங்கவேண்டிய நிலையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மூன்று கிலோமீற்றர் படையினர்பின்வாங்கவேண்டிய நிலையேற்பட்டிருந்தால் யுத்தத்…

  10. மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் நாளை 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின்பால் இலங்கை கவனம் செலுத்தியிருப்பது வெற்றியென இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், காற்றாலை மின் உற்பத்தியானது சுற்றாடல் நேயமிக்கதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மன்னாரில் காற்றாலை மின்நிலையம்: நாளை திறப்பு விழா!!! | NewUthayan

  11. புரெவி புயலால் முழங்காவில் பிரதேசத்தில் பல ஏக்கர் வாழைத்தோட்டங்கள் அழிந்துள்ளன. கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர் வரையான வாழைத்தோட்டங்கள் புரெவி புயலால் அழிவடைந்துள்ளன என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடும் மழை மற்றும் புயல் காரணமாக குழைகளுடன் வாழை மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கடந்த வறட்சி காலத்திலும் பாதுகாத்து வளர்த்தெடுத்த வாழை மரங்கள் அறுவடைக்கு முன் இவ்வாறு அழிவடைந்துள்ளமை தங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். முழங்காவில் பிரதேசம் அதிகளவு வாழைப் பயிர்ச்செய்கை பிரதேசமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நாசமாகிய வாழைத்தோட்டங்கள் : விவசாயிகள் கவலை | …

  12. பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு வா.கிருஸ்ணா விளக்கமயிலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல், டிசெம்பர் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வழக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (07) நடைபெற்றது. இதன்போது, பிரசாந்தன், சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றுக்கு அழைத்துவராமல், நீதிபதி ஏ.சி.றிஸ்வான் Zoom தொழில்நுட்பம் ஊடாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கடந்த நவம்பர் 09ஆம் திகதி காலை கொழும்பில் இருந…

  13. வலி கிழக்கு பிரதேச சபைத் தலைவர் நிரோஷ் கைது செய்யப்படலாம்? Bharati வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைவர் தி.நிரோஷ் கைது செய்யப்படலாம் என யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. “பிரதேச சபையின் அதிகாரத்தினை நிலைநிறுத்தியமைக்காக என்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நடப்பதாக அறிய முடிகின்றது” என சற்று முன்னர் நிரோஷ் தெரிவித்திருக்கின்றார். வலி வடக்கு பிரதேச சபை முன்பாக கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் பெருமளவுக்குக் கூடியிருப்பதாகவும், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் தெரிகின்றது. வலி கிழக்கு பிரதேச சபைத் தலைவர் நிரோஷ் கைது செய்யப்படலாம்? –…

  14. December 4, 2020 அண்மையில் ச‌ஜித் க‌ட்சியின் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் காவிந்த‌ ஜ‌ய‌வ‌ர்த‌ன‌வை ச‌ந்தித்த‌ ம‌ல்க‌ம் ர‌ஞ்சித் கூறுகையில் முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் ஆனால் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அதனை அர்த்தப்படுத்த முடியாது என்றும், ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லீம‌ள் கருதக்கூடாது எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். க‌ர்தினால் ம‌ல்க‌ம் ர‌ஞ்சித் அவ‌ர்க‌ளின் இக்கூற்று ஷ‌ரீயா ச‌ட்ட‌ம் என்றால் என்ன‌ என்றே ச‌ரியாக‌ அவ‌ர் அ…

    • 4 replies
    • 737 views
  15. கந்தர மீன்பிடி துறைமுகத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பம் கந்தர மீன்பிடி துறைமுகத்தின் கட்டுமான பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 300 மீட்டர் நீளமான பிரதான நங்கூரமிடும் தளத்தை கொண்ட உத்தேச மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 400 பல நாள் மீன்பிடி படகுகள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தலாம். உத்தேச மீன்பிடி துறைமுகத்தை அமைப்பதன் ஊடாக பெரும்பாலான மீனவர்களுக்கு அதன் மூலம் வாழ்வாதாரம் ஏற்படுத்தப்படுவதுடன், அதன் மூலம் மீனவ சமூகத்தினரின் மீனவ நடவடிக்கைகளுக்கு நன்மையளிப்பதாக அமையும். இதன் கட்டுமான பணிகளை 36 மாதங்களுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு 6667 மில்லியன் ரூபாயாகும். குறித்த …

    • 0 replies
    • 322 views
  16. மினுவங்கொட கொரோனா கொத்தணிக்கு உக்ரேன் நாட்டவர்களே காரணம் : சுதர்ஷனி by : Jeyachandran Vithushan மினுவங்கொட ஆடை தொழிற்சாலை கொரோனா கொத்தணி உருவாகுவதற்கு உக்ரேன் நாட்டவர்களே காரணம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) கருத்து வெளியிட்ட அவர், இது தொடரர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் , “மினுவங்கொட கொத்தணி உருவான பிரன்டிக்ஸ் நிறுவன தொழிலாளர்களுக்கு இந்தநோய் பரவிய விதம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெறுகின்றது. வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர்களிடம் இருந்தே இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என தெரியவந்…

    • 0 replies
    • 412 views
  17. சர்ஜுன் லாபீர்) மரணித்த உடல்களை நல்லடக்கம் செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய, கத்தோலிக்க மக்களின் கட்டாய மார்க்க கடமையாகும். கொரோனா தொற்று ஏற்பட்ட பின்பு மரணித்த உடல்களை அடக்கம் செய்வதற்கு பதிலாக எரிப்பதற்கு அரசு தீர்மானித்த போது. பாராளுமன்றத்தில் உள்ள சகல முஸ்லிம் கட்சிகளின் எம்பிக்களும், தலைவர்களும், போர்க்கொடி தூக்கினார்கள். இதற்காக அரசின் உயர்மட்டத்தை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்ய முயன்றனர். போதாக்குறைக்கு வெளிநாட்டு தூதுவர்கள் இராஜதந்திரிகளை சந்தித்து முறையிட்டார்கள். அதே நேரம் இதே மதக்கடமையை செய்யவேண்டிய இன்னுமொரு சமூகமான கிறிஸ்தவ, கத்தோலிக்க சமூகம்…

  18. இலங்கையில் இரண்டாவது அலைக்கு காரணம் என்ன? தொடரும் சர்ச்சை இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பமாகிய மினுவாங்கொடை – பிரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொத்தணியில் எவ்வாறு வைரஸ் ஏற்பட்டது என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க இது குறித்து இவ்வாறு கேள்வி எழுப்பினார். ஒரே தடவையில் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளர்கள் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டமையானது அங்கு ஆரம்பத்திலிருந்தே தொற்று இருந்திருப்பதை அறிய முடிகிறது. அந்த தொழிற்சாலையில் உள்ள மருத்துவ அதிகாரி, ஊழியர்கள் சுகயீனமாகின்ற போது வில்லைகளை வழங்கிய…

  19. “சுதந்திரத்திற்குப் பின் நம்மிடம் இருப்பது தாய்மார்களின் கண்ணீர் கடல் மட்டுமே.” December 6, 2020 ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற வாசகம் அப்படியே சொற்களோடு மட்டும் நின்றுவிடாது, நாட்டை நேசிக்கும் உண்மையான ஒரு தேசபக்தன் அதை எவ்வாறு யதார்த்தமாக்குவது என்று உடனடியாக சிந்திக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பதினொரு கைதிகள் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்த மகர சிறைச்சாலையில் நடந்த சோகம் குறித்து இன்று (டிசம்பர் 06) சமூக வலைத்தளமான trupatriotlk இல் ‘உண்மையான தேசபக்தன்’ என்ற பெயரில் கருத்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டபோது இவ்வாறு கூறியுள்ளார். “பிக்பொக்கட் காரர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவ…

  20. கொரோனா தொற்று: உரிமை கோரப்படாத நிலையில் 12 பேரின் உடல்கள்! கொரோனா தொற்றினால் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் இதுவரை அவர்களது உறவினர்களால் உரிமை கோரப்படவில்லை என சுகாதார அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உரிமை கோரப்படாமல் காணப்படும் உடல்கள் பெரும்பாலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் என அறியமுடிகின்றது. இருப்பினும் உரிமை கோரப்படாத உடல்களை அரசாங்க செலவில் தகனம் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். எவ்வாறாயினும், உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்வதற்கு முன் சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர், முஸ்லிம்களாக இருப்பதால், அரசாங்கம் வழங்கிய வழி…

  21. தெல்லிப்பளை வைத்தியசாலை விகாரம்- போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் 27 Views தெல்லிப்பளை வைத்தியசாலையில் மிகப்பெரிய சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதை தெரியப்படுத்தியும் பொறுப்புவாய்ந்தவர்கள் அதற்கு எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத காரணத்தால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வைத்தியசாலை நிர்வாகம் எச்சரித்துள்ளது. வைத்திய சாலை நிர்வாகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையானது யாழ்மாவட்டத்தில் இரண்டாவது பெரிய வைத்தியசாலையாகவும், வடமாகாணத்தில் மூன்றாவது பெரிய வைத்தியசாலையாகவும், புற்று நோய்சிகிச்சை, உள நல சிகிச்சை ஆகிய சிறப்புப் பிரிவுகளை உள்ளடக்கி ஊழியர்களின் அற்பணிப்பான சேவையினால் வடமாகாண மக்களுக்கு சிறப…

  22. நூருல் ஹுதா உமர் இந்த நாட்டிலே 2012 இலிருந்து முஸ்லிம்களுக்கு ஏதோவொரு வகையில் அடிக்கடி பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றன. மதத்தலைமைகளை விட, கற்றறிந்த சிவில் சமூகத் தலைமைத்துவங்களை விட அரசியல் தலைமைகளையே தலைவர்களாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் பிரச்சினை காலங்களில் இந்தத் தலைமைகளில் நம்பிக்கை இழந்து, அந்த நேரத்தில் தங்கள் எண்ணங்களுக்கேற்ப யார் பேசுகிறாரோ அவரைப் புகழும் உணர்ச்சிக்கு கட்டுப்பட்ட சமூகமாகவே இருக்கிறது. இது அவர்களின் பிழையல்ல. காலத்திற்கு காலம் உணர்ச்சிகளால் ஏமாற்றப்படும் அவர்களைக் குறை கூற முடியாது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவித்துள்ளார். அண்மையில் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ள …

  23. மததீவிரவாதமே மிகவும் ஆபத்தானது மததீவிரவாதிகள் சொர்க்கத்திற்கு சென்று 72 கன்னிப்பெண்களை அடைவதற்காக எதனையும் செய்வார்கள் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சண்டே ஒப்சேவரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவருடைய பேட்டியின் சில பகுதிகள் வருமாறு கேள்வி மததீவிரவாதம் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் புலனாகியுள்ளது- நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் என்ன? பதில்-புலனாய்வு சேவையில் ஏற்பட்ட பின்னடைவே முக்கிய காரணம்; . உதாரணத்திற்கு நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மே 19 2009 இல் வெற்றிபெற்றோம். அவ்வேளை மூன்று புலனாய்வு படைப்பிரிவுகளே காணப்பட்ட…

  24. பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கார்த்திகைப்பூ விவகாரம்: சாரா ஹல்டனை சந்திக்கிறார் வெளிவிவகார அமைச்சர் பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் நவம்பர் 27ஆம் திகதியன்று மாவீரர்களை நினைவு கூர்வது வழமையாகும். இந்நிலையில் குறித்த நாளில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கார்த்திகை பூ, பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஒளிரவிடப்பட்டது. இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனை நாளை அமைச்சில் சந்தித்து குறித்த விடயம் த…

  25. கே.பி.யைப் போல் அர்ஜூன் மகேந்திரனும் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார்- சரத் வீரசேகர கே.பி. என்ற குமரன் பத்மநாதனை அழைத்துவந்தது போல், நாட்டுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி கோடிக் கணக்கிலான நிதி மோசடியைச் செய்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனும் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வெளிநாடொன்றில் வசிக்கும் ஒருவரை நாட்டுக்கு அழைத்து வரவேண்டுமாயின் அதற்காக இரு நாடுகளுக்கு இடையில் சர்வதேச உடன்படிக்கை ஒன்று இருத்தல் அவசியமாகும். இந்நிலையில், இதுதொடர்பாக இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் பிரதானியுடன் நேற்று முன்தினம் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ள அவர், மகேந்திரனை சர்வதேச நியதிகளுக்கு அம…

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.