Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இடிச்ச சம்பலை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஈழத்தவர்களிடையே மிகவும் பிரபல்யமான உணவு வகை என்பதை தான் முதலில் சொல்ல வேண்டும். இடி சம்பல் / இடிச்ச சம்பல் என செல்ல பெயர்களால் அழைக்கப்படும் இந்த சம்பல் ஈழத்தில் அனைத்து ஊர்களிலும் பிரபலம் (என்ன உறைப்பு தான் ஊருக்கு ஊர் கூடி குறையும்). அதே இது சமயம் தினமும் செய்யும் ஒரு சாதாரண உணவும் கூட. ஈழத்தில் தென்னை மரங்கள் அதிகம் இருப்பதால் சம்பல் தினமும் செய்வது அந்த காலங்களில் ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை. ஆனால் இந்நாளில் தலையில்லாமல் இருக்கும் தென்னை மரங்கள் தானே ஈழத்தில் அதிகம். இடிச்ச சம்பலின் சுவையறியாதவர்கள் (ஈழத்தவர்கள்) இருக்க முடியுமா? இடியப்பம், பிட்டு, பாண், தோசை, இட்லி, ரொட்டி என எந்த ஒரு உணவை எடுத்தாலும் இடிச்ச சம்பல் …

    • 12 replies
    • 7.3k views
  2. Started by nunavilan,

    Butter Chicken ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 2 replies
    • 2.8k views
  3. வணக்கம், இண்டைக்கு அப்பா நல்ல இனிப்புத் தோடம்பழங்கள் கொஞ்சம் கடையுல வாங்கி வந்தார். உறிச்சுச் சாப்பிட அந்தமாதிரி இருந்திச்சிது. நானும் கடையில் தோடம்பழம் வாங்கிறதுதான் ஆனால் நல்ல இனிப்பா கிடைக்காது. எப்பவாவது இருந்திட்டி நல்ல இனிப்பு தோடம்பழம் கிடைக்கும். கடையில தோடம்பழத்த வாங்கேக்க நல்ல இனிப்பானதா எப்பிடி பாத்து வாங்கிறது எண்டு உங்கள் யாருக்கும் தெரிஞ்சால் கொஞ்சம் சொல்லுங்கோ. ஹிஹி நல்ல இனிப்புத் தோடம்பழம் எண்டால் நல்ல செம்மஞ்சள் நிறத்தில இருக்குமோ? தோல் கொஞ்சம் பாரமாக இருப்பதோட உள் பழத்துடன் இறுக்கமாக ஒட்டிப்பிடிக்காமலும் இருக்குமோ? உங்கட ஊருகளில இனிப்புத் தோடம்பழம் வாங்க ஏலுமோ? நன்றி!

    • 6 replies
    • 2.6k views
  4. வீட்டில் அடிக்கடி செய்யும் பதார்த்த என்பதாலேயே என்னமோ சீனிசம்பல் செய்முறை எழுதணும் என தோணவேயில்லை. யாழில் சகோதரன் லீ கேட்டுக்கொண்டதிற்காக செய்முறையை எழுதியே ஆகணும் என தோன்றி எழுதுகின்றேன். சீனிசம்பல் என்றதும் “அடப்பாவிகளா சக்கரையிலுமா சம்பல்?” என என்னிடமே பலர் கேட்டதுண்டு. யாரோ பேர் வச்ச மகராசன் இப்படி வச்சிட்டான். நாங்க இப்ப பதில் சொல்லிட்டு இருக்க வேண்டியிருக்கு. சீனிசம்பல் என பெயர் இருந்தாலும் இதில் வெங்காயம் தான் முதன்மை வகிக்கின்றது. உச்சரிக்கும் போது “சீனிச்சம்பல்” என சொல்லலாம். பொதுவா எந்த வித வெங்காயத்திலும் சீனிசம்பல் செய்யலாம். ஆனால் சின்ன வெங்காயத்தில் செய்வது போல சுவை வேறெதெற்கும் கிடையாது என்றத ஒத்துக்கொண்டே ஆகணும். எங்க அண்டை நாட்டுக்காரங…

    • 14 replies
    • 7.1k views
  5. பொதுவா நாம முட்டை பொறியல் செய்யும் போது வெங்காயம், மிளகாயை சின்னதா அரிந்து அதை முட்டையுடன் போட்டு நல்லா அடிச்சு பொரிப்பம். ஆனால் இதில தனி தனியா செய்யனும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் சுவையில் வித்தியாசம் கட்டாயம இருக்கு. தேவையானது: 3 முட்டை 1 வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 தே.க மிளகுத்தூள் 1/2 தே.க உள்ளி+இஞ்சி விழுது உப்பு தேவைக்கேற்ப கறிவேப்பிலை கொத்தமல்லி இலை [வேணும்னா போட்டுக்கலாம். தப்பில்லை] செய்ய வேண்டியது: 1. ஒரு சட்டியில் எண்ணெயை சற்றே சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாயை 2 நிமிடன்ங்களுக்கு வதக்குங்க. வதங்கிட்டு இருக்கிற நேரத்தில முட்டையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு நன்றாக அடித்து வையுங்க. உப்பு உப்பும், மிளகுத்தூளும் முட்டையோடவே ச…

    • 27 replies
    • 5.6k views
  6. அதென்ன கத்தரி சாம்பார் என்று கேட்பிங்களே? நீங்க கேட்காட்டியும் நான் சொல்லிதான் தீருவேன். வீடுகளில் பொதுவாக வெங்காய சாம்பார் அடிக்கடி வைப்பார்கள். அதே செய்முறையில் வெங்காயத்திற்கு பதில் கத்தரிக்கயை போட்டால் எப்படி இருக்கும் என ஒரு கேள்வி என்னுள்ளே. உடனே அதை பரிசோதித்து தான் பார்த்திடுவமே என ஆரம்பித்தேன். [நீ சமைப்பதே ஒரு பரிசோதனை தானே என்ற கேள்வியெல்லாம் இங்கே வேலைக்காகாது] தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் 1 துவரம் பருப்பு 1/2 கப் மிளகாய் வத்தல் 5 துருவிய தேங்காய் 2 மே.க வெந்தயம் 1/2 மே.க மல்லி 1 மே.க கடலை பருப்பு 1 மே.க மஞ்சள்தூள் 1/2 தே.க புளிகரைசல் 1 மே.க கடுகு 1/2 தே.க கறிவேப்பிலை 1கெட்டு எண்ணெய் 1/2 மே.க பெருங்காயம் - கொஞ்சமா உப்பு [தேவ…

    • 2 replies
    • 2.7k views
  7. இங்கு எந்தவொரு இந்திய உணவகத்திற்கு சென்றாலும் எப்போதும் கிடைக்க கூடியது பாலக் பன்னீர். பன்னீரும், ஸ்பினச் கீரையும் சேர்த்து செய்திருப்பார்கள். சின்ன வயதில் எனக்கு பாலக் பன்னீரை கண்ணிலும் காட்டக் கூடாது. அதற்கு காரணம் பக்கத்து வீட்டு கிழவி தான். என் பெரியண்ணனும், அவரின் பேரனும் நண்பர்கள். ஆக அடிக்கடி கிழவியின் சமையலை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது. பச்சை களியில் பன்னீரை பார்த்தாலே எனக்கு பிடிக்காது. வளரும் பிள்ளைக்கு தேவை என சாப்பிட வைத்து வைத்து பின்னாளில் பலக் பன்னீர் பழகிப்போனது. அம்மம்மா, அப்பாச்சி என யாரும் கூட இல்லாததால், கிழவி மேல் அன்பு அதிகம் தான். கிழவி இப்போ இல்லை. நினைவு வரும் போதெல்லாம் பாலக் பன்னீர் நிச்சயம் செய்வேன். பொதுவாக கீரையும், பன்னீரும் சேர்ப்பார்…

    • 9 replies
    • 4.3k views
  8. தேவையான பொருட்கள் 10 லீற்றர் தண்ணீர் 6 சித்திரோன்(மஞ்சள் எலுமிச்சை) 6 லெமன் ( பச்சை எலுமிச்சை) 6 ஒறேன்ஞ்( சாத்துக்குடி/ஒறேன்ஞ் தோடம்பழம்) சிறிதளவு மின்ஸ் இலை 10 லீற்றர் தண்ணீருக்கு தேள்வையான அளவு தேயிலை தூள். 500 g சீனி/சர்கரை. செய்முறை முதலில் சித்திரோன்,லெமன்,ஒறேன்ஞ் மூண்றினது தோலையும் சீவி, துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் இட்டு, நன்று கசக்கவும். இத்தோடு மின்ஸ் இலையையும் துண்டாக நறுக்கி கசக்கவும். தண்ணீரை அடுப்பில் வைத்து நன்று கொதிக்கவைக்கவும், கொதித்தவுடன் தேயிலை தூளை போட்டு, சீனியுடன் கலக்கவும், சாயம் இறங்கியபின்னர் வடித்து, பழங்களை கசக்கிவைத்த பத்தித்திரத்துக்குள் கொதிக்க கொதிக்க ஊற்றவும், சிறிது நேரத்தின் பின் அதனை மீண்டும் வடித்து…

  9. மீன் முருங்கைக்காய் குழம்பு தேவையான பொருள்கள் மீன் - 1/2 கிலோ முருங்கைக்காய் நறுக்கியது - 150கிராம் மல்லித்தூள் - 100கிராம் சிவப்பு மிளகாய் - 8கிராம் மஞ்சள் தூள் - 2கிராம் மிளகுத்தூள் - 4கிராம் வெந்தயம் - 2கிராம் தேங்காய் எண்ணெய் - 50மிலி தேங்காய் - 1 வெங்காயம் - 300கிராம் கொடும்புளி(Cocum) - 15கிராம் உப்பு - தேவையான அளவு தக்காளி - 80கிராம் இஞ்சி, பூண்டு கலவை - 10கிராம் கடுகு - 3கிராம் கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு சமையல் குறிப்பு விபரம் செய்வது: எளிது நபர்கள்: 4 கலோரி அளவு: NA தயாராகும் நேரம்: 20 (நிமிடம்) சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்) முன்…

    • 9 replies
    • 4.7k views
  10. மலேசியா, சிங்கப்பூருக்கு செல்லும் நேரங்களில் எல்லாம் நான் அதிக நேரம் செலவு செய்வது புத்தகக்கடைகளில் தான். அதுவும் செய்முறை புத்தகங்களில் ஐந்தையாவாது வாங்காமல் வீடு திரும்புவதில்லை. இரு நாட்டிலும் மலே சமையல், சீன சமையல், இந்திய சமையல், இது அனைத்தும் கலந்த ரீ-மிக்ஸ் சமையல் என கிடைக்கும். அதிலும் உடாங் சம்பல் (இறால் சம்பல்), நசி லமக், முட்டை சம்பல் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. இதில் முட்டை சம்பல் மிக விரைவில் செய்துவிடக்கூடியது. பல முறைகளில் ஒரு முறை இது. தேவையானவை: முட்டை - 5 செத்தல் - 3 ஸ்ப்ரிங் ஒனியன் - 3 தடல் உள்ளி,இஞ்சி விழுது - 1 மே.க புளி கரைசல் - 1/2 மே.க சோயா சோஸ் - 3/4 மே.க Prawn Paste - 3/4 மே.க எண்ணெய் - 1 மே.க சீனி - 1 தே.க உப்பு…

    • 15 replies
    • 7.5k views
  11. இனிப்பில் நாட்டம் குறைவாக இருப்பதால், இனிப்பு பலகாரங்களை நான் இப்பொழுது தான் எப்படி செய்வது என்று யோசிக்கவே ஆரம்பித்திருக்கேன். அதிலும் இனிப்பு வகைகள் செய்யும் போதும் கரண்டியும் கையுமாக இருக்க வேண்டும். இல்லையேல் இனிப்பும் போய், சட்டியும் போய், கையும் போய்விடும். இதனாலேயே இனிப்பு வகைகளை சமைக்க பழக நாட்கள் ஆகிவிட்டன. இன்று கிமீக்காவின் டயமன்ட் பர்பியை ஒரு கை பார்த்துவிடுவது என ஆரம்பித்தது, என்ன நடந்தது என்பதை பார்ப்போமா! தேவையான பொருட்கள்: கச்சான் - 1 கப் சீனி - 1 1/2 கப் பால் - 1 1/2 கப் தட்டிற்கு போடுவதற்கு கொஞ்சமா நெய் செய்முறை: 1. பச்சை கச்சானை வறுத்து தோலுறித்தி எடுத்து கொள்ளனும். 2. பாலில் கச்சானை 2 மணித்தியாலங்களுக்கு ஊற வைக்க வேணும். 3.…

    • 11 replies
    • 5.6k views
  12. மிகவும் இலகுவாக, உடனே தாயாரிக்க கூடிய பக்க உணவு என்றால் அது வெங்காய சம்பல் தான். இதையே onion salad / onion raita என்றும் அழைக்கிறார்கள். நாங்க வெங்காய சம்பல் என அழைப்போம். "சம்பல்" என்ற வார்த்தையை மொத்தமா குத்தகைக்கு எடுத்திருக்கமே! அசைவ உணவு வகைகளுக்கு இந்த வெங்காய சம்பல் சுவையை அதிகமாக்கும். பிரியாணி, சப்பாத்தி, ரொட்டி, பூரி என எதுவாகினும் சேர்த்து உண்ண அசைவம் இருக்கும் வேளையில், இந்த வெங்காய சம்பல் போல ஒரு உற்ற தோழன் கிடைக்கமாட்டுது. தேவையானவை: வெங்காயம் 1 மிளகாய் 1 மிளகு தூள் 1 தே.க தயிர் 3 மே.க உப்பு தேவைக்கேற்ப செய்முறை; 1. வெங்காயத்தின் தோலை உறித்து, நீரில் கழுவி, நீளவாக்கில் மெல்லியதாக அரிந்துகொள்ளுங்கள். [என் நேரம் இதையெல்லாம் எழுதிட்டு…

    • 11 replies
    • 9.1k views
  13. இன்று நான் எழுத இருப்பது என் அப்பாச்சியிடம் இருந்து நான் கற்ற ஒரு செய்முறை. பொன்னாங்காணி வறை அப்பாச்சி சமைத்தால், நானும் அப்பப்பாவும் சாப்பிட அழைக்க முன்னரே சாப்பாட்டு தட்டுடன் உட்கார்ந்திருப்பம். அத்தனை சுவை. இதை உண்டவர்களுக்கு தான் அருமை தெரியும். கீரைல அத்தனை சுவையா என கேள்வி கேட்பவர்கள் ஒரு தடவை இதை சமைத்து சாப்பிட்டால் விடை சுலபமா கிடைக்கும். பொன்னாங்காணி என பெயர் வர காரணம் என்ன? "பொன் ஆம் காண் நீ" என்பது மருவி தான் பொன்னாங்காணி ஆகிவிட்டதாம். இதைக் கண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் எனப் பொருள் வருமாம். அது எப்படி என எனக்கு தெரியாது. ஆனால் சுவை அதிகம் தான். இந்த கீரைல சுவையை தவிர என்ன பயன்கள் என பார்த்தால்: கண்ணிற்கு நல்லது, பசியை தூண்டும், மலச்சிக்கலை போக்கு…

    • 29 replies
    • 8.4k views
  14. Started by nunavilan,

    அன்னாசி அல்வா அன்னாசிப்பழம் 1 பால் 200 மி.லி சர்க்கரை ஒன்றரை கப் திராட்சை 8 ஏலப்பொடி சிறிது நெய் 200 மி.லி கேசரிப்பவுடர் கால் தேக்கரண்டி உப்பு ஒரு சிட்டிகை அன்னாசியைத் தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி ஒரு டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு இட்லி பானையில் வைத்து சிறிது நேரம் ஆவியில் வேகவைக்கவும். பழம் வெந்தபின், அவற்றை சிறிது நேரம் ஆறவைத்து, பின் சிறிது பால் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு 100 மி.லி. தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகாக காய்த்துக் கொள்ளவும். பாகு கெட்டியாய் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள அன்னாசி விழுதினைப் போட்டு, ஏ…

    • 3 replies
    • 3.1k views
  15. Started by nunavilan,

    தாளித்த இட்லி ‌மிகவு‌ம் ‌பிரபலமானது இ‌ந்த இ‌ட்‌லி. ‌நீ‌ங்க‌ள் ‌சில இட‌ங்க‌ளி‌ல் இசை சுவை‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். சுற்றுலா செல்பவர்கள் எடுத்துச் செல்வதும் பெரும்பாலும் இந்த வகை இட்லிகள்தான். தேவையானவை இட்லி மாவு - 1/2 கிலோ உளுந்தம் பருப்பு - சிறிதளவு கடலைப் பருப்பு - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 4 தேங்காய் - ஒரு கப் கடுகு - சிறிது கருவேப்பிலை அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகைப் போடவும். பின்னர் காய்ந்த மிளகாய்களை கிள்ளிப் போட்டு தாளிக்கவும். அதிலேயே கருவேப்பிலையையும் போட்டு தாளித்து எடுத்து மாவில் சேர்க்கவும். அதே வாணலியில் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் கைப்பிடி உளுந்து, கைப்பிடி கடலைப் பருப்பைப் போட்டு …

    • 5 replies
    • 3.4k views
  16. இது எங்கள் அண்டை நாடான இலங்கையில் மிகவும் பிரச்சித்தம் பெற்ற ஒரு உணவு பதார்த்தம். மஞ்சள் சாதமும், அசைவ கறி என்றால் நிச்சயம் இது இருக்கும் என்றே சொல்லலாம் என நினைக்கின்றேன். காரணம் இதன் சுவை தான். பல தடவை இதை சாப்பிட்ட அனுபவத்தில் தான் சொல்கின்றேன். சில மாற்றங்களுடன் இந்த செய்முறையை அமைத்துள்ளேன். விருந்தாளிகளுக்கு சமைக்கும் போது இது நிச்சயம் ஒரு சுவையான பதார்த்தமாக இருக்கும். தேவையானவை: கத்தரிக்காய் 250 கிராம் வினிகர் 2 மே.க அரைத்த கடுகு 2 தே.க அரைத்த மிளகு 1 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க உப்பு தேவைக்கேற்ப பொரிப்பதற்கு எண்ணெய் செய்முறை: 1. கத்தரிக்காயை சுத்தம் செய்து இரண்டு இஞ்சிற்கு நீளவாக்கில் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். 2. சட்டியில் எண…

    • 25 replies
    • 8.6k views
  17. அரியதரம் செய்வது எப்படி? நல்ல மென்மையாக இருக்கனும் . தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லித்தரலாமே

  18. மிகவும் புதிதான ஓர் உணவு இது. இணையத்தில் அடிக்கடி எண்ணெய்கத்தரிக்காய் என பலர் பேச கேட்டு, என் கண்ணில் கிடைத்த ஒரு செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். கவனிக்கவும் "கொல்கிறேன்" அல்ல.. தேவையானவை: கத்தரிக்காய் 250 கிராம் புளி கரைசல் 2 மே.க எண்ணெய் 4 மே.க மஞ்சள் தூள் - 1 தே.க வற்றல் மிளகாய் 5 கடலை பருப்பு 1 தே.க துவரம் பருப்பு 1 தே.க உளுத்தம் பருப்பு 1 தே.க பெருங்காயம் 1/2 தே.க உப்பு தேவைக்கேற்ப செய்முறை: 1. முதலில் தூளை செய்ய வேண்டும். ஒரு சட்டியை சூடாக்கி அதில் பருப்பு வகை, வற்றல் மிளகாயையும், பெருங்காயம், உப்பையும் சேர்த்து நன்றாக வறுத்தெடுத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள். 2. கத்தரிக்காயை சுத்தம் செய்து உங்கள் ஆட்காட்டி விரல…

    • 14 replies
    • 5.7k views
  19. "நாங்கெல்லாம் எதுக்கும் யாருக்கும் பயப்பட மாட்டோம்ல" என வீட்டில வசனம் பேசிட்டு இருக்கிற ஆளு நான். எத்தனை தான் துணிவாக இருந்தாலும், பெரிய ரௌடி போல கதை பேசிட்டு திரிந்தாலும்; பாகற்காய்க்கு பயந்து ஓடிய காலம் உண்டு. அதிலும் சின்ன வயதில், அடிக்கடி கனடாவில் இருந்து எங்களை பார்க்க ஒஸ்திரேலியாவிற்கு வரும் பெரியம்மா என்றாலே பயம் தான். சீனிவியாதியால் அவதியுறும் பெரியம்மா என்னையும் பாகற்காயை வைத்து அவதிப்பட வைத்துவிடுவார். ஆனால் பெரியப்பா துணையுடன் என்று எங்க வீட்டு தோட்டத்தில் பாகற்காய் வந்துதோ, அன்றிலிருந்து பாகற்காயிற்கும் நான் பயப்படுவதில்லை. இனி இந்த பாகற்காயை வைத்து நான் பண்ணிய வீரகாவியத்தை பார்க்கலாம்: தேவையானவை: பாகற்காய் 1 வெங்காயம் 1 மிளகாய் 2 தேசிக்காய் புளி …

  20. வல்லாரை கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்கள் ஒன்றரை கப் சிவத்தை பச்சை அரிசி ( நாம் புக்கை செய்யும் அரிசி தான் ) இரண்டு கட்டு வல்லாரை தேசிக்காய் பசுப்பால் ஒரு கப் வறுத்த பயறு நான்கு மேசைக்கரண்டி உப்பு அரிசியையும் பயறையும் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் துப்பரவு செய்த வல்லாரையை சிறிது நீர் விட்டு தண்டுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்கவும் ( தண்டில்தான் கூடிய சத்து உள்ளது ) இப்போது தேவையான உப்பை சேர்த்துக்கொள்ளவும் அரிசி நன்கு வெந்தவுடன் இளம் சூட்டில் அடித்த வல்லாரையையும், பாலையும் விட்டு மூன்று நிமிடத்தில் இறக்கவும் ( கனக்க கொதிக்கவிட்டால் வல்லாரையில் உள்ள சத்து வீணாகிவிடும் ) கோப்பையில் பரிமாறும் போது அவரவர் சு…

  21. Started by aathipan,

    புதினா சட்னி புதினாகீரை(மின்ட்) இரண்டு பிடி செத்தல் மிளகாய் 2 அல்லது 3 உழுந்து ஓரு மேசைக்கரண்டி தேங்காய்ப்பூ இரண்டு கைபிடி உப்பு புளி மிளகு வெங்காயம் புதினா இலையைக்கிள்ளி எடுத்து கழுவி வைக்கவும். சிறிது எண்ணெயில் மிளகாயயைப்பொரித்து தனியாக வைத்துவிட்டு புதினா இலையை வதக்கி எடுக்கவும். பின் வெறும் கடாயில் உழுந்தை பொன்னிறமாக வறுக்கவும். பின் எல்லாவற்றையும் ஒன்றாகபோட்டு ஒன்றாக அரைக்கவும். சுடச்சுட சோற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். தயிருடன் சாப்பிடும்போது புதினாம் சேர்த்து சாப்பிட்ட சுவையாக இருக்கும். இதைச் சொல்லித்தந்த எனது அன்னைக்கு நன்றி.

    • 5 replies
    • 4.1k views
  22. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வல்லாரை கீரையை சாப்பாட்டில் வாரத்திற்கு ஒருமுறையாச்சும் சேர்க்காத நாள் இல்லை எனலாம். வல்லாரை நிறைய சாப்பிட்டா நிறைய ஞாபக சக்தி வரும் என அப்பப்பா சொன்னதை அப்படியே நம்பிட்டேன். [அது நிஜம் என்பது பின்னர் தானே தெரிய வந்தது]. அதிலும் வல்லாரை சாப்பிட்டா தேர்வில நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என என் அண்ணா சொன்னதில இருந்து, வல்லாரை எனக்கு ஆருயிர் தோழன் ஆகிவிட்டது. [மதிப்பெண் பற்றி கேட்கப்படாது]. என்னதான் ஒஸ்திரேலியாவில் வல்லாரை நன்றாக வளரும் என்றாலும், எங்களுக்கு தெரிந்த யாரிடமும் வல்லாரை செடி இருக்கவில்லை. அப்பாவின் நண்பரிடம் இருக்கு என அறிந்து, இதுக்காக நானும் அப்பாவும் 3 மணித்தியாலங்கள் காரில் போய் செடி வாங்கி வந்து வீட்டில் நட்டோம். இப்பொழுது வ…

    • 16 replies
    • 4.7k views
  23. வெஜ் கேசடீயா - மெக்சிகன் முறை (Veg quesadilla - Mexican Style) இது ஒரு மெக்சிகன் உணவு. தேவையானப் பொருட்கள் வீட் அல்லது கார்ன் ரோர்டியா - 4 (Wheat/Corn tortilla) ஃபுரோஸன் சோளம் - 1/4 கப் கறுப்பு பீன்ஸ் (Black beans) - 1/4 கப் வெட்டிய வெங்காயம் - 1/4 கப் உள்ளி- 3 பல்லு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி உப்பு எலுமிச்சை - பாதி சீஸ் கலவை - 1 கப் (பார்மஜான், மொற்சரில்லா, செடார்) ஹலபீனோ ஊறுகாய் - 1/4 கப் எண்ணெய் செய்முறை கறுப்பு பீன்ஸை உப்பு போட்டு அவித்து வைக்கவும். உள்ளியை நசித்து வைக்கவும். வெறும் சட்டியில் ஃபுரோசின் சோளத்தைப் போட்டு வறுத்து வைக்கவும். ரோர்டியாவை தோசைகல்லில் இரு பக்கமும் சுட்டு எடுக்கவும். ஒரு பாத்திரத்த…

    • 1 reply
    • 2.1k views
  24. சமையலில், திறமைசாலிகள் பெண்கள் தான் என்று தானே எண்ணுகிறீர்கள்; அது உண்மையல்ல... ஆண்கள் தான் தான் "சூப்பர் குக்!' சமீபத்தில் , பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. சர்வேயில் கூறியிருப்பதாவது: சமையல் அறைக்கு சொந்தக்காரர்கள் பெண்கள் தான் என்று, ஒரு பொதுவான கருத்து உள்ளது. ஆனால், அதில் உண்மையில்லை என்பது, பல நாடுகளில் நடத்தப்பட்ட சர்வேக் கள் உறுதி செய்துள்ளன. எந்த ஒரு உணவையும் சுவையாக சமைப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்கள் தான்; பெண்கள் அல்ல. அதற்காக, பெண்களை, ஆண்கள் மட்டம் தட்டுவதில்லை.சமையல் மட்டுமல்ல, எந்த ஒரு விஷயத்திலும், தனக்கு சமமான அந்தஸ்த்தை மனைவிக்கு தருகிறனர் கணவர்கள். அதனால் தான் , ஷாப்பிங் போகும் போதும்,பொறுமையாக மனைவியின் பின்னால் காத்திருக்கின…

    • 11 replies
    • 3.1k views
  25. Started by nunavilan,

    லசான்யா (Lasagna) இது இத்தாலியன் சமையல். தேவையானப் பொருட்கள் பிரெட் - 1lb கத்தரிக்காய்(eggplant) - 2 பெரியது பட்டர் - சிறிது ஒலிவ் எண்ணெய் - சிறிது உப்பு மைதா/கோதுமை மா - 1 கப் தக்காளி ஸோஸ் - 4 கப் பாஹ்மஜான்/மோற்சரில்லா சீஸ் - 3 கப் செய்முறை அவனை 400 F இற்கு சூடாக்கவும். கத்தரிக்காயை மெல்லிய வட்டமான துண்டுகளாக வெட்டி உப்பு தண்ணீரில் கழுவி பிழிந்து வைக்கவும். ஒரு பானில்(Pan) பட்டரை உருக்கி அதில் பிரெட் துண்டுகளை இரு பக்கமும் திருப்பி போட்டு டோஸ்ட் செய்யவும். வெட்டிய கத்தரிக்காய் துண்டுகளை சிறிது உப்பில் பிரட்டி மைதா/கோதுமை மாவில் புரட்டி சிறிது ஒலிவ் எண்ணெயில் இரு பக்கமும் திருப்பி போட்டு பொரிக்கவும் (sautée) பின்னர் ஒரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.