நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
உலக தேங்காய் தின நல்வாழ்த்துக்கள்.
-
- 16 replies
- 2.6k views
-
-
ஆறுமுகநாவலரின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு ஆறுமுகநாவலரின் 140 ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா பிரதான சந்தைக்கு அருகில் அமைந்துள்ள ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை உபதவிசாளர் குமாரசாமி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நினைவுத் தூபிக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், திருவுருவச் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா விளைபொருள் உற்பத்தியார்கள் சங்கம் மற்றும் நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வவுனியா தமிழ் சங்கத்தின் அமைப்பாளர் தமிழருவி சிவகுமாரன், பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், நகரசபை உறுப்பினர்கள் தமிழ் விருட்சம் அமைப்ப…
-
- 35 replies
- 3.8k views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 26.09.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய சொற்பொழிவில், அண்டம் எனத் தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் Universe என்பர். Universe ஆகிய இம் மேலை இந்தோ ஐரோப்பியச் சொல்லின் வரலாற்றினை விளக்குவதே இச்சொற்பொழிவாகும். மேலும் ‘ஒன்று-வட்டம்’ ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்களின் திரிபே universe சொல். இக்கருத்தை முனைவர் கு.அரசேந்திரன் மூலமொழி ஆய்வில் விளக்குகிறார். ஒன்று-ஒன்னு என்ற தமிழ் பத்துப் பதினைந்தாயிரம் ஆண்டின் முன் மேற்கில் oi-no என ஓர் தொல் இந்தோ ஐரோப்பிய வடிவமாக(Proto Indo European form) மாறியது. இந்த oi-no பிறகு இலத்தீனி…
-
- 0 replies
- 483 views
-
-
மாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – ஆய்வரங்கம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழர் ஆய்வு மையம் அறிவுசார் தளத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஆளுமைகளிடம் புவிசார் ரீதியில் தமிழ்தேசிய கருத்துருவாக்க ஆய்வரங்கம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக “மாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம்” என்பது தொடர்பான ஆய்வரங்கம் நார்வே முன்னாள் வெளியுத்துறை அமைச்சர் எரிக் சொல்ஹைம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன், இந்திய அரசியல் ஆய்வாளர் அய்யாநாதன் மற்றும் முனைவர் கிருக்ஷ்ணா முத்துகுமரப்பன் ஆகியோரின் கருத்துரைகளுடன் இடம்பெறவுள்ளது. நாள்: 26 செப்டம்பர் 2020 நேர…
-
- 0 replies
- 401 views
-
-
தவ பூமியாகிய “வேலோடும் மலை” முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்த, போகர் பெருமான் தவமியற்றிய அற்புதமான சித்தர்களின் தவ பூமியாகிய “வேலோடும் மலை” இலங்கை மட்டக்களப்பு சித்தாண்டி, இலுக்குச்சேனை முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. 3000 வருடங்களுக்கு முன் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்த, போகர் பெருமான் தவமியற்றிய அற்புதமான சித்தர்களின் தவ பூமியாகிய “வேலோடும் மலை”கணிக்கப்படுகின்றது. இந்த ஆலயத்தினை சூழ சிவலிங்கமும்,18 சித்தர்களின் சிலைகளும் நாகத்தின் ஆலயங்களும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. 12ஆம் திகதி கிரியைகள் ஆரம்பமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆலயத்த…
-
- 0 replies
- 400 views
-
-
புங்குடுதீவு பெருங்காடு கோயில் வயல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் மகாகும்பாபிசேகம்
-
- 0 replies
- 461 views
-
-
மட்டக்களப்புஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை இன்று காலை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமானது. கடந்த புதன்கிழமை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாளை விசேட திருப்பலியுடன் வருடாந்த திருவிழா நிறைவுபெறவுள்ளது. வடக்கில் மடு திருத்தலமும் கிழக்கில் ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா திருத்தலமும் கிறிஸ்தவ மக்களின் பாதயாத்திரைக்கான திருத்தலமாக கொள்ளப்பட்டு வருடாந்தம் இங்கு பாதயாத்திரைகள் மேற்கொள்ளப்பட்டுவருகினறன. இதனை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப…
-
- 0 replies
- 493 views
-
-
வரலாற்று புகழ் மிக்க திருமங்களாய் சிவன் கோவிலை நோக்கிய ஒரு பயணம் – மட்டுநகர் திவா அதிகாலை 4 மணிக்கு அம்மா போட்டு தந்த தேனீரை அருந்திவிட்டு நல்ல குளிர் தாங்கக் கூடிய சேட்டும், அந்த நேரம் கொறோனா என்றதால முகக்கவசமும் போட்டுகொண்டு பகத்து வீட்டு சக்தி அண்ணாவையும் அழைத்துக்கொண்டு மூதூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்தேன். மட்டக்களப்பு – வாழைச்சேனை – நாவலடி சந்தி – வாகரை – செருவில தாண்டி திருகோணமலை பக்கம் வாருகிற நேரம் மூதூர்க்கு செல்ல முதல் நீலாபொல என்று ஒரு பெயர் பலகையோட ஒரு சந்தி வரும். முதல் பாரதி புரம் என்று தான் அந்த இடத்தில் பெயர் பலகை இருந்தது. அதை அகற்றிவிட்டு இப்ப கொஞ்ச நாளாக தான் நீலாபொல என்ற சிங்கள ஊர் பெயர் பலகையை வைத்தார்களாம். (ஊர் மக்கள் தெரிவித்தார்க…
-
- 0 replies
- 481 views
-
-
பெருமளவான மக்கள் கலந்து கொண்ட மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் பண்டைய கால முறையின் படி இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கிவருகின்றது. சூரபத்மனை சங்காரம் செய்வதற்கு முருகன் ஏவிய வேல், ஆறு பகுதியாகப் பிரிந்து சூரனை வதம் செய்த பின்னர் இலங்கையில் கதிர்காம பகுதியிலும் மண்டூர் பகுதியிலும் இருவேல்களாகத் தங்கியதாக கர்ணபரம்பரை கதைகளில் தெரிவிக்கப்படுகின்றன.அத்துடன் சீர்பாத பரம்பரையுடன் தொடர்புபட்டதாகவும் ஆலய வரலாறுகள் கூறுகின்றன. கதிர…
-
- 0 replies
- 330 views
-
-
சந்நிதியான் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது! September 1, 202004 யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர் திருவிழா இன்று (01) வெகு விமர்சையாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், அன்னதானக் கந்தன் என அடியவர்களால் போற்றிச் சிறப்பிக்கப்படுவதுமான செல்வச் சந்நிதியானின் மகோற்சவம் ஓகஸ்ட் 19ம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலய மஹோற்சவம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பாக இடம்பெற்று வருவதுடன் இன்று காலை முத்தேர் பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது. …
-
- 6 replies
- 919 views
-
-
நுழைவாயில் கோபுரம் திறந்து வைப்பு! வவுனியா – செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவின் துட்டுவாகை கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கானதும் கிராமத்திற்கானதுமான நுழைவாயிற் கோபுரம் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் நிதிப்பங்களிப்போது அமைக்கப்பட்ட குறித்த நுழைவாயில் கோபுரத்தினை நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் திறந்து வைத்திருந்தனர். https://newuthayan.com/நுழைவாயில்-கோபுரம்-திறந்/
-
- 0 replies
- 856 views
-
-
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி.! எதிர்வரும் 2020.08.30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமானது உலகளாவிய ரீதியில் பலராலும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. விசேடமாக தமிழ் மக்களுக்கு இந்நாள் துயரத்திலும் துயரமான நாளாகவே பார்க்கப்படுகின்றது. இந்நாளை அனுஸ்டிக்கும் முகமாகவும், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் அதிகவனம் செலுத்தி உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அன்றைய தினம் காலை 10.00 மணியளில் வடமாகாணம் தழுவிய ரீதியில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவிருந்து யாழ் கச்சேரியடி வரையிலும், கிழக்கு ம…
-
- 0 replies
- 416 views
-
-
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருக்கோவில் தங்கரத திருவிழா 24.08.2020
-
- 0 replies
- 428 views
-
-
இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (21)அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது. தானாக தோற்றம்பெற்ற ஆலயமாகவும் கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மகோற்சவத்தையொட்டி கடந்த மூன்று தினங்களாக சாந்தி கர்ம கிரியைகள் இடம்பெற்றுவந்தன. இன்று காலை மூலமூர்த்திக்கு அபிஷேக பூசையுடன் விசேட …
-
- 2 replies
- 788 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற திருவிழா தொகுப்பு
-
- 44 replies
- 4.2k views
-
-
செல்வச்சந்நிதியான் மகோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! வடமராட்சி – தொண்டைமானாறு, செல்வச் சந்நிதி முருகனின் வருடாந்த மகோற்சவம் இன்று (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்படி இன்று தொடக்கம் செப்டம்பர் 2ம் திகதி வரை சந்நிதியான் மகோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது. அன்னதானக் கந்தன் என அடியவர்களால் அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது. தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக சுகாதார நடைமுறைக்கு ஏற்றவாறு கொடியேற்றம் நிகழ்வு இடம்பெற்றது. இம்முறை ஆலயத்தில் அன்னதானம் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு ஆலயத்திற்கு வரும் அட…
-
- 2 replies
- 625 views
-
-
சிறப்புற நடைபெற்ற மடு மாதா அன்னையின் திருவிழா! மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (15) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரம சிங்க, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச் சொரூப பவணி இடம்பெற்றதோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல…
-
- 0 replies
- 539 views
-
-
தமிழே தமிழரின் முகவரி லண்டனிலிருந்து சூம் உரையாடல் .. இலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் பன்னாட்டுக் கருத்தாடல் வலையரங்கத்தின் ஏற்பாட்டில் தமிழே தமிழரின் முகவரி உரையாடல் இடம்பெறவுள்ளது. மேலதிக விபரங்களை உள்ளடக்கிய அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது. சூம் அப்ஸ் ஊடாக இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் மாணவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ள முடியும். https://vanakkamlondon.com/world/london/2020/08/79300/
-
- 0 replies
- 471 views
-
-
தியாகத்திருநாள் என ஏன் அழைக்கப்படுகிறது | ஆசிரியர் சபரிமாலா | History of Bakrid Festival பக்ரீத் பண்டிகை வரலாறு History of Bakrid Festival தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயீல் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளை…
-
- 1 reply
- 841 views
-
-
கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற வேட்பாளர்களின் கருத்துக் களம்.! முதல்வன் ஊடாக வலைமையப்புடன் இணைந்து கிளிநொச்சி மாவட்ட ஊடாகவியலாளர்களின் ஒருங்கிணைப்பில் நெற்றிக் கண் நண்பர்கள் வட்டம் அமைப்பின் அனுசரணையுடன் கட்சி வேட்பாளர்களுக்கான கருத்துக்களம் நேற்று கிளிநொச்சி கூட்டுறவுச்சங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடும் குறிப்பிட்ட சில கட்சிகளது சுயேட்சைக்குழுவினதும் பிரதிநிதிகள் இணைந்து கொண்டு தங்கள் கட்சி;க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் நிகழ்வின் கலந்து கொண்டவர்களது கேள்விகளுக்கும் விடையளித்தனர் இந்நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சைக்…
-
- 2 replies
- 756 views
-
-
கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 4ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளதாக ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இன்று முதல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறவுள்ள ஆடிவேல் உற்சவத்தை பார்வையிட பொதுமக்கள் மற்றும் யாத்திரிகர்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆட…
-
- 0 replies
- 441 views
-
-
யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கெளரவிப்பு விழா.! யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் Covid-19 இடர்காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களுக்கான கெளரவிப்பு விழா தமிழர் தலைநிமிர் கழகமாம் யாழ் இந்துவின் மற்றொரு வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகின்ற நாளாக 12.07.2020 அமைந்தது. கொரோனா இடர்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இந்துவின் சமூகம் பழையமாணவர் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் கிரீன் கிறாஸ் மண்டபத்தில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்விழாவானது கல்லூரி சமூகத்தின் ஒன்றுகூடல் மற்றும் மதியபோசன விழாவுடன் நடைபெற்றது.அத்துடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட 94 பேர் கௌரவிக்கப்பட்டனர். கொரோனா இட…
-
- 5 replies
- 1.2k views
-
-
மாணவர்களை உற்சாகப்படுத்த ’நல்ல பிள்ளை’விருது; ஒரு வித்தியாச முயற்சி.! சக்தி கலாசார அபிவிருத்தி மன்றத்தின் 18வது ஆண்டு நிறைவு வைபவம் அரியாலையிலுள்ள மன்ற வளாகத்தில் எளிமையானமுறையில் அண்மையில் கொண்டாடப்பட்டது. கல்வியிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் சாதனைகளை ஈட்டிய யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனான செல்வன் ரைற்றஸ் துகிஷ் அவர்களுக்கு, இவ்வாண்டுக்கான ’நல்ல பிள்ளை’ விருதினை, முதன்மை விருந்தினர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன் தம்பதியினர் வழங்கிக் கௌரவித்தனர். ஏனைய விருந்தினர்களான, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி கு.கேதீச்வரன்,சுடர் நிலா புத்தகசாலை உரிமையாளர் தி…
-
- 0 replies
- 443 views
-
-
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் நினைவேந்தல். மண்டைதீவு கடலில் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 31 குருநகர் மீனவர்களின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று உறவினர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. குருநகர் சனசமூக நிலைய முன்றிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் இன்று காலை 8 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://jaffnazone.com/news/18408
-
- 0 replies
- 646 views
-
-
லண்டனில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி வருகை தந்து உங்கள் ஆதரவினைத் தாருங்கள்! (ஈழம்- தமிழகம்- புகலிடங்களில் வெளியான முக்கியமான அனைத்து வகை நூல்கள். 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில்.... முதன்முறையாக,ஒரே இடத்தில்.... “நமது பண்பாட்டு, கலாசாரத் தளத்தில் சிறுமாற்றத்தை உருவாக்க இந்த மாதிரியான புத்தக கண்காட்சிகள் முக்கியமானவை. தேடலும் வாசிப்பும் கற்றலுக்குமான சூழலை உருவாக்கும் சமூகப் பணியில், சமூக ஆர்வலர்களுக்கும் கல்வி கற்றவர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும்முக்கிய பங்குண்டு.” 11 மார்ச் 20 (புதன்) நண்பகல் 12 மணி முதல் - மாலை 9 மணி வரையும் 12 மார்ச் 20 (வியாழன்) மாலை 4 மணி முதல் - மாலை 9 மணி வரையும் ..... புத்தக கண்காட்சியும் விற்பனையும் -இரு தினங்கள் ந…
-
- 8 replies
- 2.8k views
-