கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை கார் பழுதடைந்திருந்ததால், ஆட்டோவில் பயணித்தாள் சாவித்திரி. இது வரை எத்தனை கர்ப்பிணிப் பெண்களை இலவசமாக பிரசவத்திற்கு அழைத்து போயிருக்கிறாய்? ஆட்டோ டிரைவர் கோவிந்தனிடம் ஆவலோடு கேட்டாள். குறைஞ்சது இருபது பேராவது இருக்குமாம். உன்னோட மனைவி இந்த ஆட்டோவில் ஏறியிருக்காங்களா? தினமும் ஒரு ரவுண்டு வருவா கர்ப்பிணி பெண்கள் அமர்ந்த ஆட்டோவில் உட்கார்ந்தாலாவது ஒரு குழந்தை பிறக்காதாங்கற ஆதங்கம் தான் அதுக்கு காரணம். கோவிந்தனின் பதிலில் நம்பிக்கையும் ஏமாற்றமும் கலந்திருந்தது. அந்த பிரசவ ஆஸ்பத்திரியின் முன் ஆட்டோவை நிறுத்த சொல்லி தன் விஸிட்டிங் கார்டை அவனிடம் கொடுத்தாள். நீ செய்றது பெரிய தொண்டு உன் மனைவியின் நம்பிக்கை வீண் போகாமலிருக்க நீயும்.…
-
- 0 replies
- 782 views
-
-
அந்த கிராம முன்னேற்ற சங்க முன்றலில் வசந்தி நிதானமாக நின்றிருந்தாள். தலைவர் சிவஞானசுந்தரம், அவர் ஒரு ஓய்வு பெற்ற அதிபர். செயலாளர் சுப்பிரமணியம், மாதர் சங்கத் தலைவி பிறேமா உட்பட பன்னிரண்டு பேர் ஊர்ப் பிரமுகர்கள் என்ற போர்வையில் வசந்தியைக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். வசந்திக்கு எதிர்ப்புறமாக முறைப்பாட்டுக்காரனான இராகுலன் உட்கார்ந்திருக்கின்றான். கிட்டத்தட்ட எல்லோரும் கதைத்தாகிவிட்டது. வசந்தியின் பதிலைத் தான் எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் அங்கு குழுமியிருக்கின்றவர்களின் கடமை முடிந்துவிடும். இந்த வாசிகசாலை, விசாரணை, முறைப்பாடு அவளுக்குப் புதிதல்ல. இந்த முறையுடன் மூன்று தடவைகள் இந்த நாடகம் அரங்கேறிவிட்டது. ஊருக்கும் உலகுக்காகவும் அவள் வாழவேண்டி நிர்ப்பந்திக்கப்…
-
- 3 replies
- 780 views
-
-
வீடற்றவன்... - வ.ந.கிரிதரன் - சனிக்கிழமை இரவு. நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. ரொரோண்டோ மாநகரின் உள்நகர்ப் பகுதியின் பொழுது போக்குப் பிரதேசமான ரிச்மண்ட் டங்கன் பிரதேசம் இன்னும் பரபரப்பாகக் காணப்பட்டுக் கொண்டிருந்தது. மூலைக்கு மூலை கிளப்புகள். ஆட்டமும் பாட்டமுமாக யுவன்கள் யுவதிகளால் நிறைந்திருந்தது. 'ஹாட் டாக்' நடைபாதை வியாபாரிகள் பம்பரமாகச் சுழன்று தமது வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். டாக்ஸிச் சாரதிகள் பிரயாணிகளை ஏற்றுவதும், காத்திருப்பதுமாகவிருந்தார்கள். சிலர் நேரத்துடனேயே வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பலர் புதிதாக டாக்சிகளில் கார்களில் வந்து வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். தெரு மூலைகளில் இத்தனைக் களேபரத்திற்குமிடையில் …
-
- 0 replies
- 780 views
-
-
சாயம் by தாட்சாயணி “இவ்வளவு கடை ஏறி இறங்கியாச்சு, இதுகள் ஒண்டிலையும் இல்லாததையோ இனிப் போற கடையில பாக்கப் போறம்…?” உமாராணி அலுத்துப் போய்ச் சொன்னாள். “அது அப்பிடித்தான். வாழ்க்கையில ஒரே ஒருக்கா எனக்கு நடக்கப்போற கொன்வேகேஷனுக்கு என்ரை அம்மாவுக்கு நான் அப்பிடித்தான் உடுப்பு எடுத்துத் தருவன்” “அப்ப, இதோட உம்மட படிப்பு முடிஞ்சுதாமோ…? வேறை படிப்பும் கொன்வேகேஷனும் இல்லையாமோ…?” “அதெல்லாம் வரேக்க இதை விட ‘கிராண்டா’ பாப்பம்” அடுக்கடுக்கான கட்டடங்களோடு மாநகரம் கொஞ்சம் திமிராக நின்றிருந்தது. அந்தத் திமிருக்கு ஈடு கொடுத்தபடி லக்ஷிதாவும் நடந்து கொண்டாற் போலிருந்தது. அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு லக்ஷிதா பாதசாரிக் கடவையால்…
-
- 3 replies
- 778 views
-
-
அப்புக்குட்டி முன்பொரு காலத்தில் ஒரு புல்லாங்குழல் தயாரிப்பவர் தன் மனைவியுடனும், தனது ஏழு மகன்களுடனும் வாழ்ந்து வந்தார். அவ்வேழு மகன்களில் முதல் மகனுக்குப் பத்து வயது, கடைசி மகனுக்கு 7 வயது. அந்தக் குடும்பம் ஏழ்மையில் வாழ்ந்து வந்தது. அதனால் அந்த ஏழு மகன்களுக்கும் உணவளிப்பது கடினமாக இருந்தது. கடைசி மகன் மிகவும் பலவீனமாக இருந்தான். அவனால் சரியாகப் பேசவும் முடியாது. அதனால் அவனை அனைவரும் கேலி செய்து மகிழ்ந்தனர். அவன் பிறந்த பொழுது மிகவும் சிறியவனாக, அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அப்பு கமலைவிட குள்ளமாக ஒருவருடைய கட்டைவிரல் அளவிற்குதான் இருந்தான். அதனால் அவனை அனைவரும் அப்புக்குட்டி என்றே அழைத்தனர். அதனையும் சுருக்கி அப்பு என்றே அழைத்தனர். அப்புவை அனை…
-
- 0 replies
- 777 views
-
-
ஈடுகள் ஐநூறு ரூபாய்க்குப் பக்கமான தொகையை அவர் நீட்டினார். அவன் வாங்கி கொண்டான். ஒரு பரம்பரைச் சொத்தின் மிச்சம் அது! எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய போது அவனைப் பெற்றவள் புதியவாடகை வீட்டின் மோட்டு வளையில் பார்வையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஒரு வகை பயம் கலந்த மௌனத்துடன் ஐநூற்றுச் சொச்சத்தை அவன் அவள் முன்னால் வைத்தான். அவள் அதைத் தொடவேயில்லை. மாறாக விழிகளில் கண்ணீர் கொப்பளிப்புடன் அவனைப் பார்த்தாள். "தயவு செஞ்சு அப்படிப் பார்க்காதம்மா... நான் இப்ப முன்ன மாதிரி இல்ல. மாறினவன்..." - அதைக் கேட்ட அவள் வாய் விட்டுச் சிரிக்க விரும்பி பின் தோற்று மெலிய சிரித்து ஆழ ஒரு பெருமூச்சை …
-
- 1 reply
- 775 views
-
-
வைகறைக்கனவு (சிறுகதை) – தமிழினி ஜெயக்குமாரன் ‘மலரினி ஓடிக் கொண்டிருந்தாள். வேகமாக மிக மிக வேகமாக. பூமி அவளது கால்களுக்கு கீழே ஒரு மின்சார ரயிலின் வேகத்தில் பின்னோக்கி நகர்வதைப் போலிருந்தது. நிலத்தைத் தொட்டும் தொடாமலும் உதைத்தெழும்பும் ஒரு மானின் லாவகத்துடன் அவளது கால்கள் அசைந்து கொண்டிருந்தன. பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காட்டுப் பாதைகளையும் கட்டாந்தரைகளையும் கடந்து காற்றிலே பறக்கும் வேகக் குதிரையாகயாகவே மாறிவிட்டிருந்தாள் அவள். ஆஹா… எத்தனை இனிமையானதொரு அனுபவம் என எண்ணுவதற்குள்ளாகவே அவளது உடல் பாரமாகக் கனப்பதைப் போலிந்தது. ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாதபடி பெரும் பாராங்கல்லொன்றுடன் இறுக்கப் பிணைத்து கட்டி விட்டதைப் போல… “ஆ….ஐயோ…அம்மா” உடம்பு முழுவதையும் கொத்திக்…
-
- 3 replies
- 775 views
-
-
21ஆம் நூற்றாண்டு சின்டரெல்லாவின் கதை சித்தியின் கொடுமைக்கு ஆளாவதும் பிறகு தேவதையின் துணையுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று இளவரசரால் விரும்பப்படுவதும் நாம் அனைவரும் கேட்ட அதே சின்டரெல்லாதான்; ஆனால் அந்த சின்டரெல்லா தற்காலத்தில் அதாவது 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால் அவளின் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும்?! இதோ 21ஆம் நூற்றாண்டுசின்டரெல்லாவின் கதை. சின்டரெல்லாவின் தந்தை வெளியூருக்கு சென்றிருந்தார். அதனால் சின்டரெல்லா யாருக்கும் தெரியாமல் முகநூல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களை தொடர்பு கொண்டிருந்தாள். தனது வீட்டு வேலைகளை செய்து கொண்டே முகநூலில் தனது கவனத்தை செலுத்தி வந்தாள் சின்டரெல்லா; அப்பொழுதுதான் முகநூல…
-
- 0 replies
- 775 views
-
-
ஒரு நிமிடக் கதை: கோலமாவு "இங்க பாருங்க...நீங்க ப்ராடக்ட்டை வாங்கி ஒரு வருஷமாயிட்டுது. ஆமாங்க .... சொன்னோம் ... டேர்ம்ஸ்சை அக்ரீமெண்ட்டுலே பாருங்க .. என்ன ... இல்லையா ... எங்கோ வெச்சுட்டீங்களா .... அதுக்கும் நாங்க தான் பொறுப்புன்னு சொல்லிடப்போறீங்க ... பாருங்க, இது இரு மல்டி நேஷனல் கம்பெனி...வாக்கு கொடுத்தா தவற மாட்டோம். ஒரு வருஷத்திற்கு ஃப்ரீ சர்விஸ் வீட்டுக்கு வந்து செய்து கொடுப்போம்.. . அப்புறம் செய்வது எல்லாம் பெயிட் சர்விஸ் தான். என்ன...உங்களுக்கு வயசாயிடுத்தா.. அதுக்கு நான் என்னங்க செய்ய முடியும்... யாரையாவது திணைக்கு கூட்டிவாங்க.... நான் கம்பெனி வைஸ் பிரெசிடெண்ட்.... இந்த விஷயமெல்லாம் என் கையி…
-
- 0 replies
- 775 views
-
-
ஒரு நிமிடக் கதை: நாணயம் காலை நேர நெரிசலில் குமார் பஸ்ஸில் ஏறினான். தினமும் பைக்கில் அலு வலகம் சென்று வருபவன், அன்று வண்டியை சர்வீஸுக்கு விட்டதால் வேறு வழி இல்லாமல் பேருந்து பயணம். அன்று நல்ல முகூர்த்த நாள் வேறு. பேருந்தில் உட்காரக் கூட இடம் இல்லாமல் நின்று கொண்டே வந்தான். ‘டிக்கெட், டிக்கெட்’ என்றபடி நடத்துநர் வந்தார். குமார் பத்து ரூபாய் தாளை கொடுத்து “முனிசிபல் ஆபீஸ் ஸ்டாப் கொடுங்க” என்றான் . நடத்துநர் டிக்கெட்டையும் , மீதி சில்லறை யும் கொடுத்தவாறு கூட்டத்தில் முன்னே நகர்ந்து விட்டார். குமார் சில்லறையை எண்ணி பார்த்த போது, ஒரு பத்து ரூபாய் தாளும், இரண்டு ரூபாய் நாணயமும் இருந்தது…
-
- 0 replies
- 774 views
-
-
ஜூட் - அனோஜன் பாலகிருஷ்ணன் வீதியிலே எப்போவும் நிற்கும் அந்த நாய், உற்றுப்பார்க்க கொஞ்சம் பயங்கரமாகவே தோன்றும். குறுக்காகவும் நெடுக்காகவும் வீதியைக்கடந்து எப்பவும் ஓடிக்கொண்டிருக்கும். மண்ணிறத்தில் நுனிவாலில் வெள்ளை நிறத்துடன் அந்தநாய் இருந்தது. எப்போதும் ஊட்டத்துடன் ஜொலிப்பாகவே ரௌத்திரமாக திரியும். குறுக்காக போய்வரும் சைக்கிள்களை மட்டுமல்லாது போய்வரும் மோட்டார் சைக்கிள்களையும் நாக்கில் எச்சில் வழிந்து ஒழுகிக்கொண்டிருக்க கால்தொடைகள் படபடக்க பின்னால் மூர்க்கமாக துரத்தும். இந்தநாயின் உபத்திரத்தினால் அவ்வீதியில் ஆட்கள் செல்வது குறைந்து கொண்டிருந்தது . கீர்த்தனாவுக்கு இந்த நாய் கிடைத்தது சுவாரசியமான வரலாறு ஏதும் இல்லாத தற்செயலான ஒன்றாகவே கொள்ளமுடியும். அவசரமாக பல…
-
- 0 replies
- 772 views
-
-
பசி பிப்ரவரி 2019 - பிரதீப் · சிறுகதை அவளின்ர பெயர் கூடத் தெரியாது. அம்பகாமம் காட்டுக்க தான் முதல் முதலா அவள சந்திச்சனான். 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த சண்டைல எல்லாம் ஆமிக்காரனுக்கு பெரிய பலமாவும் எங்களுக்குப் பெரிய தலையிடியாவும் அவங்களின்ர ஆழ ஊடுருவும் படையணி (LRRP) இருந்தது. அம்பகாமம் காடு எங்களுக்கு மட்டுமில்ல, அவங்களுக்கு நல்ல பாதுகாப்பான இடமா இருந்துச்சு. உவங்கள அடிக்கிறதுக்கென்டே ஆமிக்காரன்ட லைனுக்கும் எங்கட லைனுக்கும் இடையில இருக்கிற சூனியப் பிரதேசத்தில, இல்லாட்டி சில நேரம் அவன்ர லைனத் தாண்டி உள்ளுக்க போயும் அம்பூஸ் படுப்பம். அம்பூஸ் படுக்கிறதென்டால் வழமையா அவன் போய்வார பாதையில மறைவா படுத்துக்கிடந்து திடீர் தாக்குதல் நடத்துறது. அப்பிடியொர…
-
- 0 replies
- 770 views
-
-
இருண்ட நிலவு - நிலாதரன் அம்மா பசிக்குது பசிக்குது என்ற குழந்தைகளின், அழுகுரலை இனிமேலும் தாங்கமுடியாது. அது இதுவெண்டு சொல்லி இனியும் சமாளிக்கவும் முடியாது, கடைசியாக மிஞ்சியிருந்த இந்த தோட்டையாவது விற்று சமைக்க வேண்டும். குழந்தைகள் இரண்டையும் பக்கத்து வீட்டு சரஸ்வதியாச்சியோடு விட்டிட்டு கிளிநொச்சி நகருக்குள் வந்து சேர்ந்த போது எல்லாமே அவளுக்கு புதிதாகவும் சூனியமாகவும் இருந்தது. புதிதாக புனரமைக்கப்பட்ட நெடுவீதிகளும் ஆங்காங்கே எழுந்து நிற்கும் புத்தம்புதிய கட்டிடங்களும் புதிபுதிதாய் முளைத்திருக்கும் கடைகளும் அதன் அலங்காரங்களும் பீறேமாவை ஒரு கணம் திக்குமுக்காடச் செய்தது. என்ன தான் இருந்தாலும் கிளிநொச்சி முன்பிருந்த செழிப்பையும் அதன் அழகையும்இ இழந்து செயற்கைத்தனமாய் கா…
-
- 0 replies
- 770 views
-
-
லூக்கா 22:34 அ. முத்துலிங்கம் ஏசு அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். ஆரம்பத்தில் ஒரு துவக்கு இருந்தால் நல்லாயிருக்கும் என்ற எண்ணம் மார்செலாவுக்கு எழவே இல்லை. கனடாவில் அவளுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் ஆரம்பித்தது. ஒரு முடி திருத்தகத்துக்குப் போனால்கூட முதலில் உங்கள் உயரத்துக்கு ஏற்ப நாற்காலியை ஏற்றி இறக்குவார்கள். திருமணத்தில் அப்படி ஒன்றும் செய்வதில்லை. முதல் ஆறு மாதம் சுமுகமாகப் போனது. அதன் பின்னர்தான் தொடங்கியது. காலையில்தான் அவளுக்கு அடி விழும். மற்ற வீடுகளில் நடப்பது போல மாலையில் கணவன் குடித்துவிட்டு வந்து அடிப்பதில்லை. அலுவலகத்துக்குப…
-
- 0 replies
- 769 views
-
-
நினைப்பும்...... நடப்பும்..!!! கொற்றவை நினைப்பு.......... என்னடா உனக்குள்ள சிரிக்கிறாய்? “இங்க பாரன் கூத்தை….மெலிந்த நீண்ட கூந்தல் உள்ள அழகான குடும்ப பாங்கான பெண்தேவை…..” “ம்…..அதுக்கென்ன?சாதாரணம் தானே….” “ஏன்டா….மண்டேக்க சரக்குதேவையில்லயோ…?” “இதுகள வெளியில கூட்டிக்கொண்டு நாலு இடத்துக்கு பேறதில்லையே…?” “ஓ…..உங்கட மனிசி எண்டு எல்லாருக்கும் உடம்ப காட்டி அறிமுகப்படுத்ததான் விருப்பம்…ம்….” “டேய்….டேய்…பைத்தியம் மாதிரி கதைக்காத… “.என்ர மனிசி….இவா இந்த ஒப்பீசில…இன்ன வேலையில இருக்கிறா இன்னது படிச்சிருக்கிறா.. எண்டு சொல்லுக்களன்டா…பெருமையா இருக்கும்…” “பாக்கிறவன் வடிவான மனிசியா எண்டுதான் பாப்பான்...” “அடேய்…..நீங்கள் கறுப்பா குண…
-
- 3 replies
- 769 views
-
-
அழகான வயல் வெளிகளும் உயர்ந்த மரங்களும் நிழல் பரப்பி நிற்க ,சிறு நீரோடைகளும் , விவசாயத்தை நம்பி வாழும் மக்களும் கொண்ட அந்தக்குக் கிராமம். சொக்கனும் அவன் மனைவியும் ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தான். அவ்வூர் மக்கள் மிகுந்த முயற்சி உள்ளவர்கள். ஆடு மாடுகள் மேய்ப்பதும் , தென்னையின் ஓலைகள் பின்னி வியாபாரத்துக்கு அனுப்புவதும் , சிலர் குளங்குட்டை களில் மீன் பிடிப்பதையும் கொண்டவர்கள். சொக்கனும் நெற்பயிர்ச்செய்கையில் மிகுந்த அனுபவமும் ஆர்வமும் உள்ளவன். ஓலையால் வேயப்படட ஒரு வீடும் , சில மாடு கன்றுகளும் தான் அவனுக்கு சொந்தம். அவ்வூரில் சற்று வசதிபடைத்த ஒரு நிலச்சொந்தக் காரரிடம் நாலு வயல் காணிகளை குத்தகைக்கு எடுத்து அவனும் மனைவியும் நெற்பயிர…
-
- 2 replies
- 768 views
-
-
சொர்க்கத்தின் பாவிகள் -நிரூபா நாகலிங்கம் உயிரைக் கையில் ஏந்தியவாறு மண்டியிட்டிருந்தான் அந்தோணியோ. அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவனுக்கு முன்னால் அளவிடமுடியாத உயரத்திலும் அகலத்திலும் எழுந்து நின்றது அந்த சுவர். அவன் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்த சுவரைப் பார்த்தவாறு இருந்தனர். அந்த சுவருக்கு ஒரு கதவும் இருந்தது. அது எப்போது திறக்குமென்றுதான் அவர்கள் காத்திருந்தனர். அந்தோணியோ வருடக் கணக்கில் இங்கு காத்திருக்கின்றான். சுவருக்கு மறுபக்கம் சொர்க்க பூமி இருக்கின்றதென்று அந்தோணியோவும் பல ஏழை மக்களும், யுத்தநாடுகளின் பல அப்பாவி மக்களும் நம்பிக்கொண்டிருந்தனர். அந்தோனியோவைப்பொறுத்தவரையில் அவன் தாங்கிப் பிடித்திருக்கும் அவன் நேசிக்கும் உ…
-
- 0 replies
- 768 views
-
-
அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது. பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர். மறுநாள் - மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது. "குருவே...குருவே.." என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. "இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!" "பந்தயமா? என்ன அது?" என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள். "காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்" என்று சொன்னான் மண்டு. இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவ…
-
- 0 replies
- 768 views
-
-
ஒத்தக் கம்மல் காது - அல்லிநகரம் தாமோதரன் ‘‘ஒத்தக் கம்மல் கோயிந்தனோடக் காத, அவன் குடிபோதை யில சாவடியில விழுந்து கெடந்தப்ப எவனோ ராத்திரியோட ராத்திரியா அறுத்துட்டுப் போயிட்டானாம்! காத அறுத்துட்டுப் போனவனக் கண்டுபுடிச்சு கசாப்பு போட்ற கொல வெறில அவெஞ் சொந்தக்காரய்ங்க மீசைய முறுக்கிக்கிட்டு இருக்காங்களாம். அறுத்தது யாருன்னுட்டு இன்னும் கண்டுபுடிக்க முடியலையாம்...’’ சம்பவம் நடந்து முடிந்து நான்கைந்து நாட்களாகியும்கூட ஊர்க்காரர்கள் வாய் முழுக்க இந்த வார்த்தைகளையே முணு முணுத்துக் கொண்டிருந்தன. கடைவீதி, சலூன்கடை, கிராமத்துக்குப் பொதுவான சாவடி என எல்லா இடங்களிலும் இதே அரட்டைக் கச்சேரிதான் மிரட்டிக் கொண்டிருந்தது. சிவகாமிக்கும் இந்தச் சம்பவம் ஆச்சரியத்திற…
-
- 0 replies
- 767 views
-
-
"பாட்டி சொல்லைத் தட்டாதே" நான் இப்ப வளர்ந்துவிட்டேன். பொறியியலாளராக வேலை செய்கிறேன். ஊர் உலகம் எல்லாம் சுற்றி திரிகிறேன். எத்தனையோ விதம் விதமான மனிதர்களையும் பண்பாடுகளையும் சந்திக்கிறேன். என்றாலும் நான் கண்ட, அனுபவித்த பாட்டி - பேரன் தொடர்பை எனோ எங்கும் முழுமையாக காணவில்லை? நான் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறக்கும் பொழுது என் அம்மம்மாவோ அல்லது அப்பம்மாவோ இல்லை. என்றாலும் எங்கள் உறவினரான ஒரு பாட்டி, தன் மகன் மருமகளுடன் எம் அருகில் வாழ்ந்து வந்தார். அவருக்கு பேரனோ பேத்தியோ இல்லை, ஆகவே நாம் எல்லோரும் அவருக்கு பேரன் பேத்தியே!. நாம் அவரை அப்பாச்சி என்றே அன்பாக கூப்பிடுவோம். நான் சின்னவனாக இருக்கும் பொழுது, பெரிய குழப்படி இல்…
-
- 0 replies
- 767 views
-
-
பப்படத் தோட்டத்தில் தொடங்கிய என் முதல் ஊடக சகவாசம் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோவை உங்களில் சிலர் அறிந்திருக்கலாம் அல்லது கண்டிருக்கலாம். அந்த நாட்களில் கொழும்பில் அனேகமான வீடுகளில் கனெக்ஷ்சன் கொடுத்திருந்தார்கள். ஆனால் எங்கள் வீட்டில் அது இருக்கவில்லை. எனக்கு அது பிரச்சனையாகவும் இல்லை. என்னை எப்போதும் தூக்கிக்கொண்டு திரியும் புஷ்பா அக்கா வீட்டில் றெடிவிஷன் இருந்தது. இந்த ஊடகம் தொடர்பாக பலரையும் திக்குமுக்காட வைக்கும் மட்டற்ற பல கேள்விகள் பாலகனான என்னிடம் அன்று இருந்தன. அதற்கு வரமுதல் றெடிவிஷனைப் பற்றிக் கொஞ்சம் அறிவோம். இதுதான் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோ இதுதான் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோ. முதற் படத்தில் காட்டியவாறு நல்ல பவுத்திரமான இட…
-
- 9 replies
- 766 views
-
-
[size=4] சொல்லமறந்த கதைகள் 10 (அங்கம் 02) முருகபூபதி – அவுஸ்திரேலியா புதுவை இரத்தினதுரை தனது குடும்பத்திற்காக மத்தியகிழக்கு நாடொன்றுக்குச்சென்று உழைத்து திரும்பியபின்னர், விடுதலைப்புலிகளினால் ஈர்க்கப்பட்டு அவர்களின் கலை. பண்பாட்டுக்கழகத்தினை வளர்த்தார். 1986 இல் நான் அவரை இறுதியாகச்சந்தித்தபோது அவருக்கு தனித்தமிழ் ஈழம்தான் கனவு. அவரின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் ஒருகாலத்தில் மாக்ஸீயம், கம்யூனிஸம் பேசியவர். எழுதியவர். அதிலிருந்து முற்றாக விடுபட்டாரா? என்பது எனக்குத்தெரியாது. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையை விட்டும் அதன் கொள்கைகளை விட்டும் இறுதிவரையில் அவர் விடுபடவில்லை. ‘அதிதீவிரவாதிகள் சந்தர்ப்பவாதிகளாக மாறிவிடுவார்கள்’ என்று மேதை லெனின் சொல்லி…
-
- 3 replies
- 766 views
-
-
அகதியின் பள்ளி September 27, 2019 - பா.ரமேஷ் · இலக்கியம் / சிறுகதை டீக்கடை பெஞ்சில் அமர்ந்து பேப்பர் படித்த மணி , ஒரு பெட்டிச் செய்தியை பார்த்து , புருவத்தை அகல விரித்தவன் பேப்பரை வாகாக நாலாய் மடித்து , செய்தியை கண்களால் ஜூம் செய்தான் “ ஏலேய், சிவா இங்க பார்ரா ,பள்ளிக்கூடத்தில பிள்ளைகளை சேக்குறதுக்கு ,டி.சி தேவையில்லையாமுல்ல, பேப்பர்ல போட்டிருக்கான்” என்றான். “ அட ஆமாம்ப்பா 2010 லையே இந்த சட்டம் நடைமுறைக்கு வந்திருச்சுப்பா” , இதுக்கு ஆர்.டி.இ 2009 சட்டமுன்னு பேரு “என்றான் சிவா. “ஏப்பா சிவா , நாம படிக்கிறபோது , ஒரு பள்ளிக்கூடத்தில சேரணுமுண்டா எவ்வளவு கஷ்டமுப்பா .” “அன்னைக்கி, டி.சி இல்லாம எவனாச்சும் சேப்பானா ?” என்றான் மணி. “ ஏய் ,டி.சி மட்…
-
- 0 replies
- 766 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்.. புளொட்டின்.. பாசிசம்..! தொடர்ந்து வாசிக்க: http://kuruvikal1.we...3543/v_p_01.pdf [பக்கம் 10 தொடங்கி 12 வரை] நன்றி விடுதலைப்புலிகள் ஏடு.
-
- 2 replies
- 766 views
-
-
ஊர் திரும்புதல் கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன. “தம்பி குகன்… வீடியோக்கமராவிலை நேரத்தையும் திகதியையும் செற் பண்ணும். கணேஷ் அவுஸ்திரேலியாவிற்கு போகேக்கை வீடியோக்கொப்பி கொண்டு போக வேணும்” மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே பாலன்மாமா தன்னுடன் வந்த குகனுக்குச் சொன்னார். பாலன்மாமா – திருவள்ளுவர் தாடி ; இழுத்து இழுத்து நடக்கும் விசிறினால்போன்ற நடை. பார்ப்பதற்கு வினோதமாக இருப்பார். குகனை எனக்கு முன்னாளில் அறிமுகமில்லை. உமாசுதன், நான் புலம்பெயர்ந்து 16 வருடங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களில் மிகவும் வேண்டப்பட்டவன். நேரம் : காலை 9.20, திகதி :…
-
- 3 replies
- 765 views
-