வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
391 topics in this forum
-
குவர்னிகா ஓவியம் பாப்லோ பிக்காஸோ 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, ஒரு திங்கள் கிழமையின் பிற்பகல் பொழுது, ஸ்பெயினின் வட எல்லைக்கருகில் உள்ள குவர்னிகா என்னும் சிறிய நகரம் உழைத்துக் களைத்துப் போயிருந்தது. ஏனெனில் அன்று அந்த நகரத்தின் சந்தை கூடும் தினம். கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு ஒரே இடத்தில் கூடுவார்கள். அதனால் காலையிலிருந்து ஜனநெரிசலும், வியாபாரக் கூச்சலுமாக இருந்த நகரம் சற்றே ஆசுவாசம் கண்டிருந்தது. சற்றும் எதிர்பார்த்திராத அந்த வேளையில், சரியாக 4:30 மணிக்கு, மேகங்களுக்கு இடையில் மேகமாக இருந்து திடீரென உருவம் பெற்றதைப் போல ஜெர்மனியப் போர் விமானங்கள் வெளிப்பட்டன. அவற்றின் இரைச்சலை என்னெவென்று பிரித்தறிவதற்குள் அவை சரமாரியாகக் குண்டுகளை…
-
- 0 replies
- 861 views
-
-
எம்.எஸ்.எஸ். பாண்டியன் யார் வரலாறு? இந்தியாவின் பண்டைய இலக்கியங்கள் மட்டுமல்ல, தேசியவாதிகளால் முன்னிறுத்தப்படும் இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறும்கூட மேட்டுக்குடியினரின் ஆதிக்க வரலாறே என்றார் பெரியார். மேல்சாதியினர், தங்கள் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் சவால்களைக் கொடுமையாக அடக்குவதும், முடியாத கட்டத்தில் எதிரிகளோடு இணங்கிப் போவதுமே இவ்வரலாறு என்றுரைத்தார். இந்த வரலாற்றை இந்தியாவின் பழம்பெருமையெனத் தொடர்ந்து சொல்லி வருவதன் மூலம் நிகழ்காலத்திலும் அடித்தட்டு மக்களை அடக்கிவைக்க முடிகிறது என்பது பெரியாரின் கருத்து. பழமை மறையவில்லை; இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது; எல்லோருக்கும் சுதந்திரம், சமதர்மம் என்பதை மறுக்கிறது; எனவே தற்சார்புடைய குடியுரிமை வழங்கும்…
-
- 0 replies
- 721 views
-
-
சாவுகள் மலிந்து கிடந்த ஒரு தேசத்தில் இன்று கொண்டாட்டங்கள் மலிந்து கிடக்கின்றன.நொந்த மனதுக்கு மருந்து தடவும் சிகிச்சை முறையாக இந்தக் கொண்டாட்டங்களைக் கருதவேண்டும் என்ற வாதங்களும் உண்டு. சாவுகள் மலிந்து கிடந்த ஒரு தேசத்தில் இன்று கொண்டாட்டங்கள் மலிந்து கிடக்கின்றன.நொந்த மனதுக்கு மருந்து தடவும் சிகிச்சை முறையாக இந்தக் கொண்டாட்டங்களைக் கருதவேண்டும் என்ற வாதங்களும் உண்டு. துயிரில் இருந்து மீண்டெழுந்து புதிய வாழ்வை நோக்கிப் பயணிக்க வேண்டும் அல்லது தொலைந்த வாழ்வைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற முன்னோக்குதத்துவம் ஏற்புடைய ஒன்றே. ஆனால், எமக்காக எமது பெயரால் நடப்பவற்றை எல்லாம் நன்மையானவை என்று பேசாது ஏமாளிகளாக இருந்து விடமுடியாது. உள்ளூர் கொண்டாட்டங்கள், தேசியக் கொண்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]ஒரு இலங்கைத்தமிழனது பார்வையில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர், தலைவனுக்குத்தலைவன், இதய தெய்வம் என்ற நிலையில் என்றும் மிகப்பெரிய கௌரவத்துடனும், நன்றியுடனும் பார்க்கப்படும் ஒருவர்.[/size] [size=4]எந்தவொரு கலைஞனுக்கும் அடிமைப்பட்டுவிடாத இலங்கைத்தமிழன், எம்.ஜி.ஆர் என்ற நாமத்திற்கு மட்டும் கொண்டாட்டம் எடுத்தகாலங்கள் ஆச்சரியமானது.[/size] [size=4]அதுபோல உலகத்தலைவர் எவருக்கும் சிலைவைத்து வழிபடாத சமுகம், எம்.ஜி.ஆர் என்ற அந்த தலைவனுக்குமட்டும் சிலையெழுப்பி தலைகுனிந்து இன்றும் வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஏனெனின் இலங்கைத்தமிழனின் இன உணர்வுக்கும், விடியல் என்ற பயணத்திற்குமான “ஆணிவேர்” எம்.ஜி.ஆர் என்ற அந்த அன்பு மனிதனே என்பதி…
-
- 0 replies
- 850 views
-
-
சூரியோதயத்தின் அழகான விடிவைப்போல் தமிழரின் வாழ்வும் ஓர் நாள் அழகாய் விடியும். இந்த உதயத்தின் போது வெளியான நிறங்களாக எம் தேசியக்கொடி வானில் பறக்கும்.
-
- 0 replies
- 862 views
-
-
வணக்கம் என் நண்பர்களே எமக்கு கிடைத்த முத்துக்களை பற்றி பத்மலிங்கம் ஒரு அருமையான கர்நாடகா சங்கீத முத்து புத்தூரில் பிறந்து எங்களுக்கு பெருமையை தந்த உன்னதமான ஒரு சொத்து http://www.youtube.com/watch?v=1Sts_4UnJxE நன்றி முகனூல்
-
- 0 replies
- 648 views
-
-
சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடல்தான்! வாலி பிறந்த நாள்: 29 அக்டோபர், 1931 கோடிக் கணக்கான மக்களின் உணர்வுக் கடலில் கரைந்துகொண்டே தனது தனித்துவ ஆற்றலையும் தக்கவைத்துக்கொண்டவர் வாலி. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை அரசியல், வரலாறு, பாலியல், சமய நம்பிக்கைகள் என்ற அனைத்து உணர்வுகளும் பொழுது போக்கு வடிவமான சினிமாவுடன் பின்னிப் பிணைந்தவை. இயல்பான பாலியல் வேட்கைகள்கூடத் தொடர்ந்து ஒடுக்கப்படும் நம் சமூகம், தனது ரகசிய ஆசைகளைத் தொடர்ந்து சினிமா வழியாகவே தீர்த்துக்கொள்கிறது. சாதாரண ஆண்-பெண் நட்புக்கும், காதல் உறவுகளுக்கும் தடைவிதிக்கும் தமிழகம்தான் 24 மணிநேரமும் ஊடகங்கள், நவீனத் தொலைத்தொடர்புச் சாதனங்கள் வழியாகப் பாலுறவைக் கனவு கண்டுகொண்டே இருக்கிறது. வழிபாடு, வன்ம…
-
- 0 replies
- 710 views
-
-
தமிழ் திரை இசை நூலகம் திரு.B.H.அப்துல் ஹமீது அவர்கள் நெகிழ்ச்சியான நினைவுகள்
-
- 0 replies
- 567 views
-
-
வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றிய நினைவு கொள்ளல் கலாநிதி. சி. ஜெயசங்கர் - வர்ணகுலசிங்கம் மாஸ்ரர்என்றபெயர் மிக இளவயதிலிருந்தேஎனக்குப் பரிச்சயமானது. எனது சகோதரிகள் இருவர் இசைக் கலைஞர்களாகவும், எனதுதந்தையார் இசைஆர்வலராகவும் இருந்தமை இந்தவாய்ப்பைத் தந்திருக்கின்றது. ந. சண்முகரத்தினம் மாஸ்ரர், திலகநாயகம் போல் மாஸ்ரர், பொன் புஸ்பரத்தினம் அவர்கள், ச. சண்முகராகவன் அவர்கள் எனதலை சிறந்த இசைக் கலைஞர்கள் வகுப்பெடுப்பதும்;, இசைச் கச்சேரிகளுக்கென பயிற்சிகள் நடப்பதும் எனது வீட்டுச் சூழல். மிருதங்கவித்துவான் இ. பாக்கியநாதன் அவர்களிடம் எனதுசகோதரன் மிருதங்கம் பழகியமை, சர்வேசரசர்மா அவர்களது வீட்டில் வருடாவருடம் நிகழும் நவராத்திரி இசைக் கச்சேரிகள், இசைக் கலைஞர்களின் கலந்துரையாடல்கள் என இ…
-
- 0 replies
- 816 views
-
-
தன்னைத் தானே தகனம் செய்யுமாறு கட்டளையிடுவது அநீதி - லெ.முருகபூபதி இலங்கையில், நீர்கொழும்பு என்ற சிறுநகரத்தில் 1951ல் பிறந்த லெ.முருகபூபதி 1972ல் 'மல்லிகை' இதழில் வெளியான சிறுகதை மூலமாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1977ல் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய முருகபூபதி, நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், இ.மு.எ.சவின் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் செயற்பட்டவர். 1975ல் வெளியான 'சுமையின் பங்காளிகள்' என்ற இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. 2003ல் 'பறவைகள்' நாவலுக்காக முருகபூபதிக்கு சாகித்திய விருது கிடைத்தது. 1985ல் சோவியத் யூனிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
கலைஞனைப் புரிந்துகொள்ளல் May 2, 2014 at 10:22pm ஜா. தீபாவின் மொழிபெயர்ப்பில், உலகத் திரைப்படநெறியாளர் பதினைந்து பேரின் நேர்காணல்களைக் கொண்டதான மேதைகளின் குரல்கள் நூலிலிருந்து, நெறியாளர் ஐவரின் கருத்துகளின் சில பகுதிகளை இங்கு தருகிறேன். படைப்பாளிகளின் நேர்காணல்களை நான் எப்போதும் விருப்பத்துடன்படிப்பது வழக்கம்; அவர்களின் கருத்துலகையும், படைப்புச் செயற்பாடையும் புரிந்துகொள்வதற்குத் துணை செய்பவை அவை! சத்யஜித் ரே (இந்தியா). 1. உங்கள் படத்தின் பெண் கதாபாத்திரங்கள்வலுவானவர்களாக இருக்கின்றனர். வங்காளத்தினுடைய சமூக வரலாற்றின் பாதிப்பா இது? · நான் எந்தக் கதையைப் படமாக எடுக்கிறேனோ அந்தப்படத்தின் எழுத்தாளரின் ‘பார்வை’யைத்தான் ந…
-
- 0 replies
- 691 views
-
-
எனது வேசித் தொழிலில் ஒரு ஆணுடைய பணத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இரண்டாவது ஆணினுடையதை ஏற்றுக்கொள்ளலாகாது ஐயா. மீறினால் என்னை நிர்வாணமாக நிறுத்தி கொல்வார்கள் ஐயா. மேலும் கேடு கெட்டவர்களோடு நான் உடனுறைந்தால் சிவந்த, சூடேறிய கத்தி கொண்டு எனது மூக்கையும் காதையும் அறுப்பார்கள் ஐயா. மாட்டேன், முடியாது. உங்களை அறிந்த பிறகு அதைச் செய்ய மாட்டேன். கட்டுகளற்ற சிவனே, என் சொல் உண்டு. கவிதையை எழுதியவர் கன்னடப் பெண் கவிஞர் சூலே சங்கவா. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கவிஞரான சூலே சங்கவா எழுதியதில் மிச்சமிருப்பது இந்த ஒரு கவிதை மட்டுமே. பெரும்பாலான காலகட்டங்களில் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குதல்களுக்கும் ஆளாக வேண்டியிருந்த பெண்களுக்கு பக்தியும், பக்தியின்பாற்பட்ட காதலுமே சுதந்…
-
- 0 replies
- 707 views
-
-
மாலினி பரமேஸ் மெல்லிசைக்கு மெருகூட்டிய வான்மதி இலங்கையில் சங்கீத கலைஞர்களும் சிறந்த தமிழ் ஒலிபரப்புச் சேவையும் இருந்த போதும் அறுபதுகளில் ஈழத்தில் இசைத்தட்டு என்ற ஒன்று இருக்கவேயில்லை. அதே வேளையில் திருகோணமலையில் வாழ்ந்து வந்த பிள்ளைப்பாட்டுக் கலைஞர் என்ற கெளரவம் பெற்ற யாழ்நூல் யாத்தளித்த சுவாமி விபுலானந்தரின் முதல் மாணவன் வித்தியாதிகாரி மா. பீதாம்பரத்தின் புதல்வர்களான பரமேஸ் கோணேஸ் இசைக் கலைக்கூடம் ஆரம்பித்து 68 முதல் இசைத் தென்றல் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வர ஆரம்பித்தனர். திருகோணமலையில் சென் மேரீஸ் கல்லூரியில் கல்வி கற்று வந்தவர்தான் மாலினி பரமேஸ். 69 முதல் பரமேஸ் கோணேஸ் இசைத்தென்றலின் ரசிகையாக இருந்தவர். இந்த வேளையில் சிவமாலினியின் அன்புத் …
-
- 0 replies
- 1.5k views
-
-
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ் உரைநடையிலும் சிறுகதை களிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். ராம கிருஷ்ணன். உலக இலக்கியங்கள், சர்வதேசத் திரைப்படம் ஆகியவற்றின் மீது தமிழ் சமூகத்தின் கவனத்தைக் குவித்ததில் எஸ்.ராமகிருஷ்ணனுக்குப் பெரும் பங்கு உண்டு. மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய ‘உப பாண்டவம்’ இவரது சிறந்த படைப்புகளில் ஒன்று. இவரது சமீபத்திய நாவல் ‘சஞ்சாரம்’. நாவல், சிறுகதை, சினிமா, பத்திரிகை எழுத்து எனப் பல முகங்களைக் கொண்ட எஸ். ராமகிருஷ்ணனிடம் ‘தி இந்து’ சித்திரை மலருக்காக நடத்திய நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது இன்றுள்ள சிறுகதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்… தமிழுக்கென ஒரு கதை சொல்லும் முறை இருக்கிறது. தமிழில் உள்ள அளவுக்கு வேறு…
-
- 0 replies
- 655 views
-
-
[size=3] ஈழ விடுதலை வரலாறு தமிழ்த் தியாகி விஜயராஜை தன்னுள் வைத்துப் போற்றும் [/size][size=3] தமிழ்த் தாயின் மைந்தன் , வீரமறத் தமிழ் உணர்வாளன்,ஈழம் தமிழகம் என்கிற பேதமில்லா இனத் தமிழன், தமிழினத்திற்கு நிகழ்ந்த பேரவலங்களின் துயர் சுமந்த எங்களின் தமிழ் சகோதரன் ஈகி விஜயராஜ் அவர்களின் உயிர் பிரிந்தமையறிந்து மனம் கலங்குகின்றோம். நீதி கேட்டு தன்னைப் தீயில் போட்டு மாய்ந்த செய்தி ஆறத் துயர் தருகிறது. [/size][size=3] அவர்களின் குடும்பத்தினர் , உறவினர்கள் ,நண்பர்கள், அவரின் மறைவால் துயருறும் அத்தனை தமிழ் மக்களோடும் இப் பெரும் துயரினைப் பகிர்ந்து கொள்கிறோம்.[/size][size=3] -தன் சொந்த இனத்தின் ஒரு பாதியினர்,அருகிலேயே, இயற்கையால் பிரிக்கப்பட்ட இன்னுமோர் நிலப்பரப்பில் இனவ…
-
- 0 replies
- 551 views
-
-
திரையறிவுக்காய் கிளிநொச்சியில் பாலுமகேந்திரா நூலகம்.! ரம்மியா ஹம்சிகா எனும் இரு இளம் ஊடகவியாலா ளினிகள் கிளிநொச்சியிலிருந்து என்னுடன் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்தனர். ஓர் அழைப்பும் விடுத்தனர் “நாங்கள் சிலர் இணைந்து பாலுமகேந்திரா பெயரில் ஓர் நூல் நிலையமும் பயிற்சிக் கூடமும் ஆரம்பிக்கிறோம். 27.12.2020 இல் அதன் ஆரம்ப விழா நடைபெறவுள்ளது அதில் ஓர் சிறப்பு விருந்தினராக நீங்கள் கலந்து கொள்ளவேண்டும். அதில் பாலுமகேந்திராவுடனான உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும்” சரி என ஒப்புக்கொண்டேன் பாலு மகேந்திரா என் ஊரவர். எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் 300 அல்லது 400 யார் தூரம்தான் இடைவெளி, அவர் என்னை விட 4 வயது மூத்தவர் அவரை நாம் மகேந்திரன் …
-
- 0 replies
- 958 views
-
-
நவம்பர் 29: கலைவாணர் பிறந்த தினம் தமிழ் சினிமாவின் முதல் சமூகப்படமான ‘மேனகா’வில் மொட்டைத் தலையுடன் அறிமுகமான என்.எஸ்.கே. எத்தனை சாதனைகள் படைத்திருந்தாலும் காலம் எல்லோரையும் பொக்கிஷமாகப் பொத்தி வைத்துப் பாதுகாப்பதில்லை. நூறாண்டு தமிழ்த் திரைக்கு ஆரம்ப அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டுத்தந்த ஜாம்பவான்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் சினிமா மறக்காத பொக்கிஷம். நகைச்சுவையைச் சமூக மாற்றத்துக்காகப் பயன்படுத்த முனைந்த முதல் முன்மாதிரி. ஒப்புமையும் மாற்றும் இல்லாத அசல் கலைஞன். ‘சிரிப்பு என்பது வியாதிகளை விரட்டும் மருந்து’ என்று மருத்துவர்கள் கண்டறிந்து சொல்லும் முன்பே, மக்களுக்குப் புரிய வைத்தவர். தனது முற்போக்குச் சிந்தனைகளால், கட்டியங்காரனுக்கும் கோமாளிக்கும் நாடக மேடை…
-
- 0 replies
- 700 views
-
-
எஸ்.பி.பாலசுப்ரமணியம் தென்னிந்திய இசைவானின் துருவ நட்சத்திரம். பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய சாதனையாளர். நூற்றுக்கணக்கான இசையமைப்பாளர்களுக்கு எல்லாவிதமான பாடல்களையும் பாடிய இசைச் சித்தர். சாதாரண இசையமைப்பாளர் சுமாராகப் போட்ட மெட்டைக்கூட தனது சங்கதிகள் மூலமும் குரலில் ஏற்படுத்தும் Vibrato எனப்படும் மாற்றங்கள் மூலமும் அந்த மெட்டை உருவாக்கிய இசையமைப்பாளரே திகைக்கும் வண்ணம் அவரது மெட்டில் எதிர்பார்க்காத அழகியல்களை மாற்றங்களைச் செய்ய வைக்கக்கூடிய பிறவிப் பாடகர்… 1990 களில் பாலு உச்சத்தில் இருந்த காலம். அந்தக் காலத்தில்தான் இரவு நேரத்தில் பாடல்களைப் பதிவு செய்யும் கலாசாரம் தமிழ்திரையிசையில் உரு…
-
- 0 replies
- 2.1k views
-
-
துணிச்சல் தன்னம்பிக்கை ரவி மாஸ்ரர் சொல்லும் கதைகள்?????? ஊடகப்பயணத்தில் போர் செய்யும் மனிதன்.
-
- 0 replies
- 727 views
-
-
26.07.2007 கலையரசு சொர்ணலிங்கம் அவர்களது 25வது நினைவு. கலையரசு சொர்ணலிங்கம் (30.03.1889- 26.07.1982) சலனம் இணைத்தில் பதியப்பட்டுள்ள நினைவுக்குறிப்பை இதில் நன்றியுடன் பதிவிடுகிறேன். இவர் தொடர்பான நிகழ்வு 29. 07. 2007 அன்று இலண்டனில் ஏற்பாடாகியுள்ளது. http://www.appaal-tamil.com/index.php?opti...view&id=646 கலையரசு சொர்ணலிங்கம் (எழுதியவர் மூத்த கலைஞர் ஏ. ரகுநாதன்) நாடகமே என் நினைவு நாடகமே என் இன்பம் நாடகமே என் கவலை நாடகக் கலையே ... * இவரது நடிக்கும் திறமையின் முக்கிய குணம் என்னவென்றால் வெவ்வேறு விதமான பலவிதமான பாத்திரங்களை நடித்ததேயாம். இதுவுமன்றி தான் எந்த வேடம் பூண்டாலும் தானே ம்றறொருவர் உதவியின்றி தக்கவாறு வேடம் பூணுவதில் மிக…
-
- 0 replies
- 2.2k views
-
-
இயல் விருது வாங்க கனடா வந்திருந்த எஸ்.பொ விடம் ஒரு இடைமறிப்பு.-கற்சுறா கற்சுறா: 2011 ஜனவரிமாதம் நடந்த கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டினை எதிர்த்து முதற் கொள்ளி வைத்தவர் நீங்கள். கலை இலக்கிய ரீதியாக இலங்கைத் தமிழினத்தை அடிமைப் படுத்தும் ராஜபக்சேவின் திட்டம் தான் உலக எழுத்தாளர் மாநாடு என்றும் சிங்கள மொழி மேலாண்மையை தமிழர்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம் என்றும் சொல்லி அறிக்கை விட்டு மாநாட்டைப் புறக்கணித்தவர் நீங்கள். தற்போது மாநாடு முடிந்து இவ்வளவுகாலத்தின் பின் மாநாடு நடத்திவிட்டு தற்போது ஐந்து லட்சம் நட்டம் என்கிறார்கள். இவ்வளவு நட்டப்பட்டு ஏன் மாநாடு நடாத்துவான் என்று கிண்டலடிக்கிறீர்கள். மாநாடு நடத்தியவர்கள் அரசிடம்…
-
- 0 replies
- 812 views
-
-
முற்போக்கு இலக்கிய முன்னோடி கே. கணேஷ்: சில சிந்தனைகள் லெனின் மதிவானம் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தில் முக்கியமானவர்களில் ஒருவர் கே. கணேஷ் (1920-2004). முற்போக்கு எழுத்தாளர்களுள் சிரேஸ்டர் என வழங்கத்தக்க தனிச் சிறப்பு வாய்ந்தவர். பல்துறை சார்ந்த ஆற்றலும் பயிற்சியும், சிருஸ்டிகர ஆற்றலும் பெற்றவர்கள் வெகு சிலரே உள்ளனர். அவர்களுள் கணேஷ்க்குத் தனியிடமுண்டு. இருப்பினும் அன்னாரின் பல்துறைச் சார்ந்த ஆளுமைகளை வெளிக் கொணரும் வகையிலான ஆய்வுகள் மதிப்பீடுகள் மிகவும் அருந்தலாகவே உள்ளன. அவ்வாறு வெளிவந்த மதிப்பீடுகள் கூட அறிமுகக் குறிப்புகளாகவே உள்ளன. இது ஒரு புறநிலைப்பட்ட உண்மை. எனினும் முற்போக்கு இலக்கியத்திற்கான அவரது பங்களிப்பை உணரத் தொடங்கியிருக்கின்ற இன்றைய காலக்கட்டத்தில்…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழத்து இளந்தலைமுறை ஓவியர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒருவர்.ஓவியத்துக்கான பட்டப்படிப்பை புது டெல்லியிலுள்ள ஓவியக்கல்லூரி ஒன்றிலும் கற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். தற்சமயம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளராக இருக்கின்றார். வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்கள் இவரது ஓவியங்கள் குறித்து விரிவாக கட்டுரைகளும் எழுதி உள்ளனர். சனாதனனின் ஓவியக் கண்காட்சிகள், ஈழம், இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்று பல இடங்களில் நடைபெற்றுள்ளன.. இவரது சில ஓவியங்களை இந்தக் தளத்திலும், http://shanaathanan.blogspot.com/ கண்காட்சிப் படங்களை இங்கேயும் பார்க்கலாம். http://shanaathanan-thegallery.blogspot.com/ நன்றி http://djthamilan.blogspot.com/2006/…
-
- 0 replies
- 1.5k views
-
-
எழுத்தாளர் ர.சு நல்லபெருமாள் கல்கியில் தொடராக வந்து பரிசு பெற்ற கல்லுக்குள் ஈரம் என்னும் சர்ச்சைக்குரிய நாவலை எழுதியவர். ஒரு முறை இந்திய பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது இந்த நாவல் தனக்கு ஒரு தூண்டுகாலாய் இருந்தது என பிரபாகரன் அவர்கள் கூறியிருந்தார். Subramanian: What are the shaping influences on your life? Pirabaharan: Ra. Su. Nallaperumal’s serial Kallukkul Eeram (Its’s wet inside the stone) published in Kalki magazine. I have read it five times. It revolves round the Indian freedom struggle. Mr. Nallaperumal balances the ahimsaic struggle and the armed struggle http://sinnakuddy1.blogspot.com/2007/05/audio_15.html
-
- 0 replies
- 2.6k views
-
-
கவிஞர் மேமன்கவிக்கு இலங்கையில் தேசிய கலாபூஷண விருது! நவம்பர் 10, 2021 –முருகபூபதி இலங்கை அரசின் புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கிறிஸ்துவ மத அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனைத்தும் ஒன்றிணைந்து வழங்கும் தேசிய கலாபூஷணம் விருது இம்முறை எமது இலக்கிய நண்பர் மேமன்கவிக்கும் கிடைத்திருக்கிறது. எம்முடன் நீண்ட நெடுங்காலமாக இணைந்து பயணித்துவரும் இலக்கிய நண்பர் மேமன்கவியை வாழ்த்தியவாறு இந்தப்பதிவைத் தொடருகின்றேன். தாம்பேசும் தாய்மொழிக்கு எழுத்தில் வரிவடிவம் இல்லாத இலட்சசோப இலட்சம் மக்கள் போன்று, இவர் பேசும் மேமன் மொழிக்கும் வரிவடி…
-
- 0 replies
- 653 views
-