விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஆறாவது தடவையாக ஹமில்டன் வென்றார் கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக ஆதிக்கம் செலுத்திய, மெர்டிசிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், தனது ஆறாவது வெற்றியைப் பெற்றுக் கொண்டார். தனது ஆதர்ச நாயகனான அயூட்டன் செனாவின், 65 பந்தயங்களை முதலிடத்தில் ஆரம்பித்ததை, கடந்த சனிக்கிழமை (03) சமப்படுத்தியிருந்த ஹமில்டனுக்கு, இது 10ஆவது பந்தயம் என்ற நிலையிலேயே, அவற்றில் ஆறில் வெற்றிபெற்றுள்ளார். பந்தயத்தை ஐந்தாவதாக ஆரம்பித்த றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன், அபாரமாக காரைச் செலுத்தி, பந்தயத்தை இரண்டாவதாக ஆரம்பித்…
-
- 0 replies
- 708 views
-
-
தோனி பங்களிப்பு செய்யாமல் இருந்தால்தான் மாற்று வீரர்களை பரிசீலிக்க முடியும்: எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து தோனி. - படம். | ஏ.எப்.பி. இலங்கை அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ‘தோனி, ஆட்டோமேட்டிக் தேர்வா’ என்று கேள்வி எழுப்பப்பட அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் ‘அப்படியல்ல’ என்று பதிலளித்தார். அதாவது அணித்தேர்வு செய்யும் போது கோலி, தோனி... சரி.. அடுத்தது என்ற ரீதியில் தேர்வு நடைமுறை செல்கிறதா என்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பிரசாத் பதில் அளிக்கும் போது, “நான் இப்போதுதான் ஆந்த்ரே அகாஸியின் புத்தகத்தைப் படித்துக் கொண்டிர…
-
- 0 replies
- 248 views
-
-
இலங்கைக்கு ஆறுதல் வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், மெல்பேணில் இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ஞ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இலங்கையணி சார்பாக துடுப்பாட்டவீரர்கள் கமில் மிஷாரவும், ஜனித் லியனகேயும் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தனர். அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, மத்தியூ வேட்டின் ஆட்டமிழக்காத 43 (27), கிளென் மக்ஸ்வெல்லின் 29 (21), ஜொஷ் இங்லிஷின் 23 (20), டே…
-
- 1 reply
- 344 views
-
-
மெஸ்ஸிக்கு இது முதல் கோல்... நம்பமுடிகிறதா? சாம்பியன்ஸ் லீக் அப்டேட்! பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, உலகின் டாப் மோஸ்ட் கால்பந்து க்ளப்புகள் கலந்துகொள்ளும் 2017-18 சீஸனுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் சுற்று நேற்று தொடங்கியது. ஸ்பெயினின் பார்சிலோனா, ஃபிரான்சின் பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி), ஜெர்மனியின் பேயர்ன் முனிச், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சீ அணிகள் தொடக்க ஆட்டத்திலேயே பட்டையைக் கிளப்பின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்தாலியின் யுவெண்டஸ் அணி, பார்சிலோனாவிடம் மண்ணைக் கவ்வியது.ஸ்பெயினின் அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோமா அணிகளுக்கிடையான ஆட்டம் டிராவில் முடிந்தது. பார்சிலோனா சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி, தன் கரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் குக்: மீண்டும் ஷேன் வார்ன் கடும் விமர்சனம் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் மீது ஷேன் வார்ன் கடும் விமர்சனம் வைத்தார். இம்முறை அலிஸ்டர் குக் கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விலகியிருப்பது நல்லது என்று கூறியுள்ளார். டெலிகிராப் பத்திரிகையில் பத்தி எழுதி வரும் ஷேன் வார்ன் தொடர்ந்து இங்கிலாந்து கேப்டனை கடுமையாக விமர்சனம் செய்து வருவது சர்ச்சைக்குரியதாகி விட்டது. குக், சமீபத்தில் 'இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று கூறியதோடு தனது கேப்டன்சி வெற்றி சுயபுராணத்தையும் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் இலங்கை முதன் முதலாக டெஸ்ட் தொடரில் வீழ்த்தியிருப்பதையடுத்து மேலும் கடுமையான விமர்சனங்களை தனது பத்தியில் எழுப்பியுள்ளார் ஷேன் வார்ன்…
-
- 0 replies
- 456 views
-
-
47-0ல் இருந்து 96-க்கு ஆல்அவுட்: 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ஆஸி. ஸ்பின்னர்! - வீடியோ ஜூனியர் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. Photo: Twitter/ICC நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாகக் கேப்டன் ஜேசன் சங்கா 58 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பாம்பர், பென்னிங்டன் மற்றும் ஜேக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 128 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, வெற்றிபெற்று அரையிற…
-
- 1 reply
- 188 views
-
-
இறுதி போட்டியில் முழு கவனம்: ஜெர்மனி வீரர் குளோஸ் ரியோஜெனீரோ, ஜூலை.11– உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி வருகிற 13–ந்தேதி நடக்கிறது. இதில் 3 முறை சாம்பியன் ஜெர்மனி, 2 முறை சாம்பியன் அர்ஜென்டினா மோதுகின்றன. இறுதி ஆட்டம் குறித்து ஜெர்மனியின் முன்னணி வீரர் குளோஸ் கூறியதாவது:– பிரேசிலுக்கு எதிராக அரைஇறுதி போட்டியை மிகவும் ரசித்து விளையாடினோம். அதில் அபார வெற்றி பெற்றோம். ஆனால் அதையே நினைத்து கொண்டிருக்கவில்லை. 24 மணி நேரத்தில் மறந்து விட்டோம். தற்போது அர்ஜென்டினாவுக்கு எதிராக இறுதிப்போட்டி மீதே முழு கவனம் செலுத்தி வருகிறோம். அதில் எங்களது திறன்களை காட்ட வேண்டியது அவசியம். உலக கோப்பையில் அதிக கோல் அடித்து ரொனால்டோ சாதனையை முறியடித்த பெருமையாக உள்ளது. இருந்தபோ…
-
- 8 replies
- 893 views
-
-
-
- 16 replies
- 3.3k views
-
-
சிறந்த கால்பந்து வீரர் யார்? ரொனால்டோவை விட மெஸ்சி சிறந்த கால்பந்து வீரரெனத் தெரிவிக்கப்படுகிறது. கால்பந்து அரங்கில் முன்னணி வீரர்களாக வலம் வருபவர்கள் கிறிஸ்ரியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்), லியோனல் மெஸ்சி (ஆர்ஜென்ரினா), உலகின் தலை சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை இருவரும் மாறி மாறி கைப்பற்றி வருகின்றனர். ஆனால் கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ரொனால்டோவை விட மெஸ்சிக்கு தான் வரவேற்பு அதிகம் உள்ளது. இதற்கு காரணம் மைதானத்துக்கு வெளியே ரொனால்டோவின் நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகள் தான். இது குறித்து பார்சிலோனா கிளப் அணி வீரரான டேனி ஆல்வ்ஸ் (பிரேசில்) கூறுகையில், "கிறிஸ்ரியானோ ரொனால்டோ திறமைமிக்கவர் என்பதில் மாற்றுக் கருத்தல்லை. ஆனால் இதன் அடி…
-
- 8 replies
- 1.9k views
-
-
உங்கள் ஆறுதல்களும் ஆதரவுகளும் என்னை மிகவும் எளியவனாக்கி விட்டது: ஸ்டீவ் ஸ்மித் நெகிழ்ச்சி ஸ்டீவ் ஸ்மித். - கோப்புப் படம். | ஏ.பி. பந்தைச் சேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கி 12 மாதங்கள் தடைபெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய நிலையில் இன்ஸ்டாகிராமில் உற்சாக ட்வீட் செய்துள்ளார். தற்போது தான் செய்த தவறுகள், ஆஸ்திரேலிய மக்கள் தன் மீது அடைந்துள்ள கோபம், ஆதரவு என்று அனைத்துக்கும் பதில் அளித்து பதிவிட்டுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். “எனக்கு வந்த இ-மெயில்கள், கடிதங்கள், ஆதரவுக்குரல்கள் நம்ப முடியவில்லை. இந்த ஆதரவுக்குரல்கள், ஆறுதல்கள் என்னை எளிய மனிதனாக்கி …
-
- 0 replies
- 501 views
-
-
கேட்ச்களை கோட்டைவிட்ட தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை, ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகித்தது. நல்ல பேட்டிங் பிட்சில் தெ.ஆ. கேப்டன் டிவிலியர்ஸ் முதலில் பீல்ட் செய்ய முடிவெடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.1 ஓவர்களில் 268 ரன்களுக்குச் சுருண்டது. பெய்லிக்கு மட்டும் தவறவிடப்பட்ட 4 கேட்ச்கள்: தென் ஆப்பிரிக்கா அணியின் பீல்டிங் இன்று படு மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் க…
-
- 5 replies
- 868 views
-
-
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வரும் நிலையில் அந்த விருதை சச்சினால் வாங்கவே முடியாது என்கிறார் அரசியல் சாசன சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் என்பவர். ஒரு வேளை சச்சினுக்கு விருது கொடுத்தே ஆக வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால், விருது பெறத் தகுதிடையவர்களுக்காக அரசு நிர்ணயித்துள்ள தற்போதைய விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 1954ம் ஆண்டு பாரதரத்னா விருது ஏற்படுத்தப்பட்டது. அதுமுதல் இதுவரை 41 பிரபலங்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். இருப்பினும் இவர்களில் ஒருவர் கூட விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர் கிடையாது. காரணம், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருதை அளிக்க முடியாது. அப்படி உள்ளன…
-
- 1 reply
- 1.3k views
-
-
டெஸ்ட் போட்டிகளைப் போல மாறுமா ஒருநாள் ஆட்டம்? சுவாரஸ்யம் கூட்ட சச்சின் புதுமையான யோசனை பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மார்ச் 2023 மாற்றம் ஒன்று மட்டுமே எப்போதும் மாறாதது என்ற வார்த்தைகள் கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். ஒருநாள் போட்டிகளின் வருகைக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகள் நெருக்கடியைச் சந்தித்தன. தற்போது டி20 அறிமுகத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகள் சுவாரசியம் அற்றவையாக மாறியுள்ளன. ஒரு நாள் போட்டிகள் இனியும் பிழைத்திருக்குமா? கிரிக்கெட்டின் 3 வடிவங்களையும் தொடர்ந்து தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஜாம்பவான் சச்சின் என்ன சொல்கிறார்? கிரிக்கெட்டின் நூறாண்டுகளுக்கும் மேல…
-
- 0 replies
- 788 views
- 1 follower
-
-
ஐசிசியின் துடுப்பாட்ட தரவரிசையில் வாழ்நாள் சிறந்த நிலையில் திமுத் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்ற, இலங்கை அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன, சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நிறைவில் வெளியிட்டிருந்த டெஸ்ட் தரவரிசையில் திமுத் கருணாரத்ன 720 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்திருந்தார். இந்தநிலையில், தென்னாபிரிக்க அணிக்கு எ…
-
- 0 replies
- 291 views
-
-
திங்கட்கிழமை, 9, மே 2011 (17:39 IST) ஜூலையில் இலங்கையில் எல்.பி.எல்! ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை போல 20 ஓவர் போட்டி நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு இலங்கை பிரிமீயர் லீக் என பெயரிடப்பட்டுள்ளது. ஜுலை மாதம் இறுதியில் தொடங்கும் போட்டி 18 நாட்கள் நடைபெறுகிறது. முதல் கட்ட போட்டியில் 7 அணிகள் இடம்பெற உள்ளன. லெவன் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 7 உள்ளூர் வீரர்கள் இடம் பெறுவார்கள். ஒரு அணி மற்ற அணியுடன் ஒரு முறை மோதும். இதில் தகுதி பெறும் 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். போட்டி கொழும்பு பிரமதேசா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் லீக் 20 ஓவர் போட்டிக்கு தகுதி பெறும். இலங்கை பி…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜாம்பவான்களின் இருபதுக்கு 20 : மஹேலவுக்கு அழைப்பு முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ‘லெஜண்ட்ஸ் பிரிமியர் லீக் இருபதுக்கு20’ தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெ ளியாகியுள்ளது. சச்சின் மற்றும் ஷேன் வோர்ன் ஆகியோர் இணைந்து, ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்த ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். இந்நிலையிலேயே ஜாம்பவான்க ளுக்கான இருபது ஓவர் கிரிக் கெட் போட்டித் தொடரில் விளையாட மஹேலவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari…
-
- 1 reply
- 468 views
-
-
16 FEB, 2024 | 03:22 PM (நெவில் அன்தனி) ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. நியூஸிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் முதலாவது டெஸ்ட் போட்டி 1932இல் நடைபெற்று 92 வருடங்கள் கடந்த நிலையில் தென் ஆபிரிக்காவை டெஸ்ட் தொடர் ஒன்றில் நியூஸிலாந்து வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் 1932இலிருந்து இதுவரை 17 டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றுள்ளதுடன் அவற்றில் 14 தொடர்களில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது. 4 தொடர்…
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறியமையால் அடுத்த தோல்வி இலங்கைக்கு எதிராக இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள லசித் மலிங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணாயனது தென்னாபிரிக்க அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 03 ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் நடத்த முதலாவது ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருக்க, இரண்டாவது ஒருநள் போட்டி இன்று இலங்கை நேரப்படி மாலை 4:30 க்கு செஞ்சூரியனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மலிங்க களத்தடுப்பை தெரிவு …
-
- 0 replies
- 340 views
-
-
மீண்டும் எட்டி பார்க்கிறது டெக்கான் சார்ஜர்ஸ்? ஐ.பி.எல்.தொடரில் விளையாடி வந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி மீண்டும் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் 5 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கடந்த 2009 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் வென்றது. டெக்கான் கிரானிக்கிள் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி. வெங்கட்ராம ரெட்டி, அவரது மகள் காயத்ரி ரெட்டி ஆகியோர்தான் இந்த அணியை நிர்வகித்து வந்தனர். கடந்த 2012ஆம் ஆண்டுவாக்கில் பல்வேறு நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனம், வங்கி கியாரண்டித் தொகையை செலுத்த தவறியது. இதை காரணமாக காட்டி டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் அங்கீகாரத்தை பி.சி.சி.ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தை மையமாக கொண்டு ச…
-
- 0 replies
- 395 views
-
-
ரகானேவின் விருப்பம் என்ன மும்பை: ‘‘இந்திய விமானப்படையில் பணியாற்ற விருப்பம் இருந்தது,’’ என, இந்திய வீரர் ரகானே கூறினார். இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் அஜின்கியா ரகானே, 27. இதுவரை இவர், 18 டெஸ்ட் (1353 ரன்கள்), 58 ஒருநாள் (1705), 13 சர்வதேச ‘டுவென்டி–20’ (273) போட்டிகளில் விளையாடியுள்ளார். இளமை பருவத்தில் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து ரகானே கூறுகையில், ‘‘ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது, எதிரணி வீரர் வீசிய ‘பவுன்சர்’ பந்து எனது தலையில் தாக்கியது. அதன்பின் தொடர்ச்சியாக 5 பவுண்டரி விளாசினேன். இளமை பருவத்தில் இந்திய விமானப்படையில் அதிகாரியாக வேலை பார்க்க விரும்பினேன். ஒருவேளை நான் கிரிக்கெட் போட்டியை தேர்வு செய்யாமல் இருந்திருந்தால்…
-
- 0 replies
- 309 views
-
-
அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து இங்கிலாந்து அணி பதிலளித்தாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் டக்வத் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 209 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் மழை குறுக்கிடுவதற்கு முன்னர் 37.4 ஓவர்கள் ந…
-
- 3 replies
- 342 views
- 1 follower
-
-
இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தார் ஜோ ரூட் (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் இன்று புதன்கிழமை (09) படைத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 71ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலிஸ்டெயா குக்கின் 12472 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்து ஜோ ரூட் முன்னிலை அடைந்தார். கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்டுவரும் அப் போட்டியில் ஜோ ரூட் சதம் குவித்து அசத்தினார். தனது 147ஆவது டெஸ்ட் போட்டியில் விளை…
-
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஹர்பஜனை குறிவைத்து மீண்டும் அவுஸ்திரேலிய வீரர்கள் தாக்குதல் [28 - February - 2008] இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கை குறி வைத்து அவுஸ்திரேலியர்கள் மீண்டும் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய - அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களிடையே களத்தில் தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகிறது. சிட்னி டெஸ்டில் ஹர்பஜன்சிங் இனவெறியுடன் சைமண்ட்ஸை திட்டியதாக கூறப்பட்ட புகார் பெரும் விஸ்வரூபம் எடுத்து அடங்கியது. அதன் பின் ஐ.சி.சி.தலையீட்டின் பேரில் முக்கோண ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் 9 போட்டிகளும் அமைதியாக நடந்து முடிந்தன. ஆனால், சிட்னியில் இந்தியா- அவுஸ்திரேலியா இடையே நடந்த 10 ஆவது போட்டியின் போது மீண்டும் புகைச்சல் கிளம்பியது. இஷாந்த் ஷர்மா பந்து …
-
- 1 reply
- 1k views
-
-
ஆசிய கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் செய்த டோனி December 24, 2015 விஜய் ஹசாரே டிராபி போட்டியில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று பெங்களூரில் விஜய் ஹசாரே டிராபியின் 2வது காலிறுதிப் போட்டியில் டெல்லி- ஜார்க்கண்ட் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் டோனி 70 ஓட்டங்கள் எடுத்தும் ஜார்க்கண்ட் அணி தோல்வியைத் தழுவியது. இருப்பினும் இந்தப் போட்டியில் டோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெல்லி அணியின் ஷிகர் தவானை விக்கெட் கீப்பரான டோனி 27 ஓட்டங்களில் ஸ்டெம்பிங் செய்து ஆட்டமிழக்க செய்தார். இதன்…
-
- 0 replies
- 589 views
-
-
'சூதுகவ்வும்' : 0 ரன் டிக்ளேரும் ஜென்டில்மேன் கிரிக்கெட்டர் வீழ்ந்த கதையும்! ஆஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7-ம் தேதி முடிந்தது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட, இருநாள் போட்டிகள் அரையும் குறையுமாக நடந்தன. கூவி கூவி அழைத்தும் ரசிகர்கள் ஓட்டம் முதலில் பேட்டிங்கை மேற்கிந்திய தீவுகள் அணி பேட் செய்தது. இரண்டாம் நாள் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் 248/7ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு களத்தில் விளையாடியது மழை. ஒரு ஓவர் கூட வீசப்படாமல் இரு நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. எஞ்சியிருப்பது ஒரே ஒருநாள் மட்டும்தான். எப்படியும் ஆட்டம் சமன்தான் என்பது தெரியும். இதன…
-
- 0 replies
- 359 views
-