விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
SL Vs Aus ODI: 30 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றி கண்ட இலங்கை அணி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 30 வருடங்களுக்கு பின்னர், இலங்கை அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 1992ம் ஆண்டிற்கு பின்னர், இலங்கையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. 1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மூன்று போட்டிகளை கொண்ட தொடரை, இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இலங்கை அணி அப்போது, வெற்றியை தன்வசப்படுத்தியது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இ…
-
- 2 replies
- 491 views
- 1 follower
-
-
புதிய சாதனையை படைத்த வீரர்! டெஸ்ட் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டியபோது அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இங்கிலாந்தின் பேர்ஸ்டோ. நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. லோர்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. 2 வது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசி. தலைவர் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை. நியூசிலாந்து அ…
-
- 0 replies
- 695 views
-
-
ICC மே மாதத்திற்கான சிறந்த வீரராக-மெத்தியூஸ்-தெரிவு! வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மே மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை அறிவித்துள்ளது. அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் ஏஞ்சலோ மெத்தியூஸின் துடுப்பாட்டம் இந்தப் பெயரிடலுக்குக் காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 1 reply
- 416 views
-
-
டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,JONATHAN DIMAGGIO இந்த வருடம் அக்டோபர் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறுகின்றன. டி20 உலகக் கோப்பையில் எத்தனை அணிகள் கலந்து கொள்கின்றன? இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. அதில் 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள நான்கு அணிகள் தகுதிப் போட்டியின் வழியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் குரூப் 1 மற்றும் குரூப் 2ஆக…
-
- 11 replies
- 792 views
- 1 follower
-
-
ஆஸி – இலங்கை அணிகள் மோதும் ...முதலாவது, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று! இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இரவு பகல் ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்த போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய அணி முன்னதாக இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் ஐந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன. https://athavannews.com/2022/1286877
-
- 0 replies
- 265 views
-
-
காமன்வெல்த் 2022: எங்கு எப்போது நடைபெறுகிறது? இந்திய வீரர்கள் யார்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகள் இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இடம்பெறுகிறது. காமன்வெல்த் போட்டிகள் என்றால் என்ன? காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அதனை சார்ந்த பிராந்தியங்களுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியே 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி' என அழைக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 72 நாடுகள் கலந்து கொள்கின்றன. …
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
இந்தியாவின் சவாலை முறியடித்து 7 விக்கெட்களால் தென்னாபிரிக்கா வெற்றி (என்.வீ.ஏ.) டெல்லி, அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) இரவு கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சவாலை முறியடித்து 7 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபிரிக்கா முன்னிலை அடைந்துள்ளது. இந்தியாவின் அதிரடி வீரர் இஷான் கிஷான் குவித்த அதிரடி அரைச் சதம், ரசி வென் டேர் டுசென், டேவிட் மில்லர் ஆகியோரின் அதிரடி அரைச் சதங்களால் வீண் போனது. இந்திய அணியில் வழமையான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, விராத் க…
-
- 1 reply
- 230 views
-
-
2 ஆவது ரி20 போட்டி ஆரம்பம்... அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ளது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் அழைப்பு விடுத்துள்ளார். இந்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா பாரிய வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் …
-
- 1 reply
- 334 views
-
-
மித்தாலி ராஜ் ஓய்வு: இந்திய பெண்கள் கிரிக்கெட் ராணியின் சாதனைகள் என்னென்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 23 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத இடத்தில இருந்த மித்தாலி குறித்த சில முக்கிய தகவல்கள் இங்கே. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 1. 39 வயதாகும் மித்தாலி ராஜ், 232 ஒருநாள் போட்டிகளிலும், 89 டி20 போட்டிகளிலும், 12 டெஸ்ட் போட்டிக…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
இலங்கைக்கு எதிரான கடந்த 5 போட்டிகளிலும் வோர்னர் அசத்தல் : அவுஸ்திரேலியா 10 விக்கெட்களால் இலகு வெற்றி (கெத்தராம அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (07) இரவு நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றி பெற்றது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 134 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன…
-
- 0 replies
- 450 views
-
-
இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி தமிழ் மாணவி கலையரசி: யார் இவர்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KALAIYARASI படக்குறிப்பு, இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி தமிழ் மாணவி கலையரசி இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியிலிருந்து கலையரசி எனும் தமிழ் மாணவியொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இந்த மாணவி மேற்படி அணிக…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (என்.வீ.ஏ.) பாரிஸ், ரோலண்ட் கெரொஸ் அரங்கில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோக்கோவை 2 நேர் செட்களில் இலகுவாக வெற்றிகொண்ட போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். இந்த வெற்றியுடன் 21ஆம் நூற்றாண்டில் மகளிர் டென்னிஸ் சங்க தொடரில் வீனஸ் வில்லியம்ஸ் ஈட்டிய தொடர்ச்சியான 35 வெற்றிகளை இகா ஸ்வியாடெக் சமப்படுத்தியுள்ளார். மேலும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் இகா ஸ்வியாடெக் வென்றெடுத்த 2ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸில் …
-
- 0 replies
- 169 views
-
-
இனவெறித்தாக்குதலால் கோமா நிலைக்கு சென்ற பிரபல வீரர்! பிரித்தானியாவில் தாக்குதலுக்கு உள்ளானதால் கோமா நிலைக்கு சென்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தற்போது குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை இரவு பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் மர்ம நபர் ஒருவரால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமலோ (Mendeley Kumalo) திடீர் தாக்குதலுக்கு உள்ளானார். தாக்குதலில் பலத்த காயமடைந்த குமலோ (Mendeley Kumalo) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வீரர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் என்பதால் அவர் …
-
- 0 replies
- 278 views
-
-
தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தேர்வு: "கடின உழைப்பு தொடர்கிறது" என ட்வீட் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@DINESHKARTHIK தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்த அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 36 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி மற்றும் 32 டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டில் நியூசிலா…
-
- 2 replies
- 345 views
- 1 follower
-
-
ரமேஷ்பாபு பிரக்யானந்தா: உலகின் நம்பர் ஒன் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய இவரின் சிறப்பு என்ன? #Praggnanandhaa பிரதீப் குமார் பிபிசி செய்தியாளர் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI எந்தவொரு ஆட்டத்திலும் உலகின் நம்பர் ஒன் வீரருக்கு ஒரு அடி முந்தியிருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். சில வீரர்கள் தங்களுடைய லட்சியமாக நம்பர் ஒன் வீரரை தோற்கடிப்பதை வாழ்நாள் கனவாகவும் கருதியிருப்பர். ஆனால், யதார்த்தத்தில் எத்தனை வீரர்களும் இந்த விஷயங்களை சாத்தியப்படுத்தியிருப்பார்கள் என்றால் அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இங்கே இந்தியாவில் தமிழ்நாட்ட…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
நிகத் ஜரீன்: உலக பாக்சிங் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த தெலங்கானா வீராங்கனை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை தெலங்கானா வீராங்கனை நிகத் ஜரீன் வென்றார். சீனியர் பிரிவில் உலக சாம்பியனான அவர், இந்த சாதனையை நிகழ்த்திய முதல் தெலுங்கு பெண் என்ற சாதனையை படைத்தார். துருக்கியில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (IBA) உலக சீனியர் பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். வியாழக்கிழமை நடைபெற்ற 52 கிலோ பிரிவு (பிளை வெயிட்) இறுதிப் போட்டியில் நிகத் 5-0 என்ற கணக்கில் ஜிட்பாங் ஜூடாமஸை (தாய்லாந்து) தோற்கடித்தார்…
-
- 2 replies
- 291 views
- 1 follower
-
-
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் உயிரிழப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. சனிக்கிழமை இரவு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தின் டவுன்ஸ்வில்லே பகுதியில் சைமண்ட்ஸ் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. ஐசிசி வெளியிட்ட தகவலின்படி, சைமண்ட்ஸ் காரில் தனியாக பயணித்திருக்கிறார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் , அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தடயவியல் விபத்து பிரிவ…
-
- 4 replies
- 580 views
- 1 follower
-
-
பரி. யோவான் பொழுதுகள்: 2022 Big Match பரி. யோவானில் படித்துக் கலக்கினவங்களை விட, Big Match இல் வெளுத்து கலக்கினவங்களை தான் Johnians சமூகம் தலையில் வைத்துக் கொண்டாடும். அந்தளவிற்கு இந்த “Big Match is a Big deal at St. John’s” என்று இங்கிலீஷில் சொன்னால் தான் Big Match இன் சிறப்பை, பெருமையை உங்களுக்கு விளங்க வைக்கலாம். 2020 மார்ச் மாதத்தில் யாருமே எதிர்பாராத வகையில், பொடிப் பயலுகளான, Baby Brigade என்று வர்ணிக்கப்பட்ட, பரி யோவானின் அணி, பலம் வாய்ந்த பிஸ்தாக்களான யாழ் மத்திய கல்லூரி அணியை Big Match இல் வென்ற கையோடு, கொரனா பெருந்தொற்று முழு உலகையே பூட்டிப் போட்டது. 2020 Big Match உண்மையிலேயே கோலியாத்தை வென்ற தாவீது கதையின் மீளுருவாக்கம் தான். 2021 Big Match ஐயு…
-
- 0 replies
- 464 views
-
-
43 ஆண்டுகளின் பின் வடக்கிற்கு பூப்பந்தாட்ட தொடரில் சம்பியன் May 1, 2022 தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட தொடரில் 43 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான சம்பியன் பட்டத்தை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சற்குணம் காண்டீபன் பெற்றுக் கொடுத்துள்ளார். இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய இவ்வாண்டுக்கான தேசிய ரீதியான 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பூப்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இப் போட்டியில் வடமாகாணம் சார்பில் சற்குணம் காண்டீபன் மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவரை எதிர்த்து விளையாடி சம்பியன் பட்டத்தை தனதாக்கினார். அது வடமாகாணத்திற்கு 43 வருடங்களின் பின் கிடைத்த சம்பியன் பட்டம் என்பது கு…
-
- 1 reply
- 495 views
-
-
முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு சிறைத்தண்டனை (எம்.எம்.எஸ்.) வரி ஏய்ப்பு காரணமாக 20 பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்படி, முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் கடனாக வாங்கிய போரிஸ் பெக்கர் அதை திருப்பிச் செலுத்தாது 2017 ஆம் ஆண்டில் தன்னை திவாலானவராக அறிவித்தார். தற்போது 54 வயதாகும் முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கர், 6 தடவைகள் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவராவார். தற்போது லண்டனில் வசித்து வரும் போரிஸ் பெக்கர் கடந்த 2002 ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியிருந்தார். இதன்போது இவருக்கு விதித்த 2 ஆண்டுகால …
-
- 7 replies
- 1.2k views
-
-
ரஷ்ய, பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டனில் விளையாடத் தடை (என்.வீ.ஏ.) ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீர, வீராங்கனைகளுக்கு விம்பிள்டனில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரேன் மீதான படையெடுப்புக்கு ஆட்சேபமும் எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் அந்த இரண்டு நாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அகில இங்கிலாந்து லோன் டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது. ஆண்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள ரஷ்ய வீரர் டெனில் மெட்வடேவ், பெண்களுக்கான தரவரிசையில் நான்காம் இடத்திலுள்ள பெலாரஸ் வீராங்கனை அரினா சபாலென்கா ஆகியோர் பாதிக்கப்படும் உயரிய நிலை வீர, வீராங்கனையாவர். ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் சகலவிதமான புல்தரை டென்னிஸ் போட்டிகளிலும் அந்த நாடுகளின் வீர, வீர…
-
- 0 replies
- 383 views
-
-
புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழப்பு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள் BBCCopyright: BBC பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அவருடைய ரசிகர்கள், ரொனால்டோவுக்கும் அவருடைய மனைவிக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். போர்ச்சுகல் சர்வதேச அணி மற்றும் பிரீமியர் லீகின் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். இவர் கடந்த அக்டோபர் மாதம் தனக்கும் தன் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்சுக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்க இருப…
-
- 0 replies
- 514 views
- 1 follower
-
-
எம்.எஸ். தோனி - வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் ஆயிரம் வழிகள் சென்னை அணியின் தலைமையில் இருந்து தோனி விலகுகிறார் என்பதைக் கேட்க பலருக்கும் நம்ப முடியாமல் இருக்கிறது, ஆனால் இதை பலரும் எதிர்பார்த்திருந்தனர் தான், இருந்தாலும் அதை ‘நம்ப முடியவில்லை’. அடுத்தொரு ஆண்டு, அதற்குப் பிறகு மற்றொரு ஆண்டும், தோனி தலைமை தாங்கி இருந்தாலும் அவரால் மற்றொரு கோப்பையை சென்னைக்கு வாங்கிக் கொடுத்திருக்க முடியும் என அவர்கள் அறிவார்கள். ஆனால் அவருக்கு வயதாகிக் கொண்டே போகிறது, ஆனாலும் வயதின் எதிர்பார்ப்புகளை மீறி தம்மை ஆச்சரியப்படுத்தும் திறன் படைத்தவரும் அல்லவா தோனி! கடைசியில், ஜடேஜா இனி தலைவராக இருந்தால் என்ன கீப்பராக இருந்து அவரை வழிநடத்துபவராக தோனி …
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
மிஸ்டர் ஐ.பி.எல் தினேஷ் கார்த்திக்… இந்திய அணிக்கு திரும்புவாரா? 2018-2019 காலகட்டத்தில் இந்தியாவுக்கு 6 ஆவது ஆர்டரில் களத்தில் இறங்கி 56.5 சராசரியை வைத்திருந்தவர் தினேஷ் கார்த்திக். ஸ்டிரைக் ரேட் 161.4 வைத்திருந்தார். witter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களித்து வருகிறார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வ…
-
- 0 replies
- 296 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியில் நவீட் நவாஸ்! இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் பங்களாதேஷ் தொடருக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், வேகபந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸும், சுழற்பந்து பயிற்சியாளராக பியல் விஜேதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், களத்தடுப்பு மற்றும் துணை பயிற்சியாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மனோஜ் அபேவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 411 views
-