Jump to content

தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தேர்வு: "கடின உழைப்பு தொடர்கிறது" என ட்வீட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தேர்வு: "கடின உழைப்பு தொடர்கிறது" என ட்வீட்

9 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தினேஷ் கார்த்திக்

பட மூலாதாரம்,@DINESHKARTHIK

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்த அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

36 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி மற்றும் 32 டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடி இருந்தார். அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஐபிஎல் தொடரில் 2018-20 வரையான சீசன்களில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டார் தினேஷ் கார்த்திக். பின்னர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். 2022 ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தினேஷ் கார்த்திக்கை வாங்கியது. அந்த அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.

நடுவே 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்று அங்குள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் வர்ணனையாளராகவும் பணிபுரிந்தார் தினேஷ் கார்த்திக்.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல் சமீப காலமாக எழுந்துவந்தது.

இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜூன் 9ஆம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாகவும், ரிஷப் பந்த் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பண்டியா ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த அணியில் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இந்திய அணிக்கு மீண்டும் தேர்வான நிலையில், தினேஷ் கார்த்திக் தன் ட்விட்டர் பக்கத்தில், "உங்களை நீங்கள் நம்பினால், எல்லாமும் சரியாக நடக்கும். உங்கள் அனைவரது ஆதரவு, நம்பிக்கைக்கு மிக்க நன்றி. கடின உழைப்பு தொடர்கிறது..." என பதிவிட்டுள்ளார். தினேஷ் கார்த்திக்குக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/sport-61547173

  • Like 1
Link to comment
Share on other sites

 Finisher ஆக தினேஸ் கார்த்திக் வருவார், வரவேண்டும் என சில வாரங்களாக கிறிக்கட் விசிறிகளால் பேசப்பட்டது(இது உலக கோப்பைக்காக).

தென் ஆபிரிக்காவில் பரீட்சித்து பார்க்க போகிறார்கள் என நினைக்கிறேன்.
18 பேர் குழுவில் விராட் கோலி, ரோஹித் சர்மா வராதது ஆச்சரியமளிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

 Finisher ஆக தினேஸ் கார்த்திக் வருவார், வரவேண்டும் என சில வாரங்களாக கிறிக்கட் விசிறிகளால் பேசப்பட்டது(இது உலக கோப்பைக்காக).

தென் ஆபிரிக்காவில் பரீட்சித்து பார்க்க போகிறார்கள் என நினைக்கிறேன்.
18 பேர் குழுவில் விராட் கோலி, ரோஹித் சர்மா வராதது ஆச்சரியமளிக்கிறது.

இருவரும் out of form and need rest. இளம் வீரர்களை பரீட்சித்து பார்க்கும் T 20 தொடராக இது இருக்கும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.