விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
வேர்ணன் ஃபிலாண்டர் பந்தை சேதப்படுத்திய காட்சி ஒளிபரப்பப்படுவதை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் 2014-07-22 12:04:55 தென் ஆபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் வேர்னன் ஃபிலாண்டர் பந்தை சேதப்படுத்தியமை தொடர்பான வீடியோ காட்சியை, அச்சம்பவம் இடம்பெற்று 48 மணித்தியாலங்களின்பின் ஒளிபரப்பு செய்யப்படுவதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்துள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 3 ஆம் நாள் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான குறிப்பிட்ட காட்சியை ஒளிபரப்ப வேண்டாம் என ஒளிபரப்பாளர்களான டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு தென் ஆபிரிக்க அணி அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சம்பவம் குறித்து தென் ஆபிரிக்க அணி எவ்வித கருத்தையும் வெளியிட மறுத்துவ…
-
- 1 reply
- 570 views
-
-
பார்ஸிலோனா ரசிகர்களால் சூழப்பட்ட சுவாரெஸ் 2014-07-21 18:45:33 உருகுவேயின் சர்ச்சைக்குரிய கால்பந்தாட்ட நட்சத்திரமான லூயிஸ் சுவாரெஸும் அவரின் மனைவியும் ஸ்பெய்னின் பார்ஸிலோனா நகரில் ரசிகர்களால் சுற்றிவளைக்கப்பட்டதால் சங்கடத்துக்குள்ளாகினர். இங்கிலாந்தின் லிவர்பூல் கழகத்துக்காக விளையாடி வந்த சுவாரெஸ் தற்போது பார்ஸிலோனா கழகத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் பார்ஸிலோனா நகருக்கு தனது மனைவி சோபியாவுடன் சென்ற லூயிஸ் சுவரெஸ் சென்றபோது ரசிகர்கள் பலரால் சுற்றிவளைக்கப்பட்டார். அங்கிருந்து நழுவிச்செல்வதற்கு சுவாரெஸும் அவரின் மனைவியும் பெரும்பாடு பட்டனர். பார்ஸிலோ அணி வீரரான ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லயனல் மெஸ்ஸியின் பெயர் பொறித்த அங்கியொன்றை அணிந்திருந்த ரசிகருக்கு சுவாரெஸ் 'ஆட்…
-
- 1 reply
- 571 views
-
-
பேய்! பீதியால் தடுமாறும் இங்கிலாந்து வீரர்கள் Mon, 07/21/2014 - 16:04 இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் லண்டனில் உள்ள லாங்காம் 5 நட்சத்திர விடுதியில் பேய் நடமாடுவதாக இங்கிலாந்து வீரர்கள் சிலர் அச்சம் தெரிவித்ததோடு, உடனடியாக விடுதியை மாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடுதி 1865 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இப்போது அது மர்ம நடமாட்டம் இருக்கும் விடுதியாக மாறிவிட்டது இனி இங்கு தங்க முடியாது என்று கிரிக்கெட் வீரர்களின் மனைவி, மற்றும் பெண் ஸ்னேகிதிகள் உட்பட வீரர்கள் சிலரே இரவு நேரங்களில் மர்ம நிகழ்வுகள் நடப்பதாக அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஸ்டூவர்ட் பிரோட் வெளிப்படையாக தனது அச்சத்தைத் தெரிவித்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங…
-
- 1 reply
- 743 views
-
-
ரியல் மெட்ரிட்டில் இணைந்தார் குரூஸ் உலகக்கிண்ண அதிரடி இரட்டைக் கோல் வீரர் ஜேர்மனியின் டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் கிளப் அணிக்காக 6 ஆண்டுகாலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பேயர்ன்மியூனிச் அணிக்காக விளையாடி வந்த நிலையிலேயே அவருக்கு இப்புதிய ஒப்பந்தம் கிடைத்துள்ளது. பிரேஸிலில் நடைபெற்று முடிந்துள்ள உலகக்கிண்ண தொடரில் பிரேஸில் அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் 24 வயதான குரூஸ் இரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு கோல்களைப்போட்டு அதிரவைத்தார். அப்போட்டியில் ஜேர்மனிஇ பிரேஸிலை 7–-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டிருந்தது. இந்நிலையிலேயே உலகக்கிண்ண தொடரின் குரூஸின் சிறப்பான திறமை வெளிப்பாடு காரணமாக ரியல் மெ…
-
- 2 replies
- 467 views
-
-
ஜெர்மனி கேப்டன் ஓய்வு ஜூலை 18, 2014. பெர்லின்: ஜெர்மனி கால்பந்து அணி கேப்டன் பிலிப் லாம், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலில், ஜெர்மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இத்தொடரில் ஜெர்மனி அணியின் கேப்டனாக பிலிப் லாம், 30, செயல்பட்டார். இந்நிலையில் நேற்று திடீரென இவர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக, இவரது ஏஜென்ட் ரோமன் கிரில் தெரிவித்தார். சிறந்த தற்காப்பு ஆட்டக்காரரான இவர், ஜெர்மனிக்காக இதுவரை 113 போட்டிகளில் பங்கேற்று 5 கோல் அடித்துள்ளார். பேயர்ன் முனிக் அணியுடனான இவரது ஒப்பந்தம் வரும் 2018ம் ஆண்டு வரை உள்ளதால்…
-
- 1 reply
- 551 views
-
-
இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் கால்பந்தை மறந்து குடும்ப பொறுப்பில் கலக்கி வருகிறார். கால்பந்தில் கலக்கி வந்த பெக்காம் குடும்ப பொறுப்பில் அனைவரின் மனம் கவர்ந்த வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தனது மனைவி விக்டோரியா தன்னுடைய பேஷன் வாழ்க்கையில் பிஸியாக இருப்பதால் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை பெக்காம் பார்த்து வருகிறார். வீட்டுக்கு தேவையான காய்கறி வாங்கி வருவது குழந்தைகளை பள்ளியில் விடுவது என அனைத்தையும் முழு நிறைவுடன் செய்து வருகிறார் பெக்காம். இது பற்றி பெக்காம் கூறுகையில் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறது. இந்த விடயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன். காலையில் கு…
-
- 1 reply
- 537 views
-
-
இந்திய வீரர் ஜடேஜாவுடன் மோதிய அண்டர்சனுக்கு எதிராக ஐ.சி.சி. விசாரணை இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜேம்ஸ் அண்டர்சன், வீரர்களுக்கான ஐ.சி.சியின் ஒழுக்க விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ரவீந்திர ஜடேஜாவுடன் ஜேம்ஸ் அண்டர்சன் மோதலில் ஈடுபட்டமையே இதற்குக் காரணம். இங்கிலாந்தின் நொட்டிங்ஹாம் நகில் நடந்த இப்போட்டியின் இரண்டாவது நாளான கடந்த வியாழனன்று மதிய உணவு இடைவேளைக்காக வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியேறியபோது, ஜடேஜாவை ஜேம்ஸ் அண்டர்சன் திட்டியதுடன் தள்ளிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் வீரர்களுக்கான ஐ.சி.சி. ஒழுக்கக் கோவையின் 2.3.3. விதியை அண்டர்சன் மீறியுள்ளாரென குற்றச்சாட்டு பதிவு செய்ய…
-
- 4 replies
- 623 views
-
-
2014 உலகக் கிண்ண போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட 11 புதிய சாதனைகளின் விபரம்: 2014-07-18 12:07:06 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் ஜேர்மன் அணி வீரர் மிரஸ்லோவ் குளோஸ் தனது 16 ஆவது கோலை அடித்து புதிய சாதனை படைத்தமை தெரியும். ஆனால், 2014 உலகக் கிண்ண போட்டிகளின்போது நிகழ்த்தப்பட்ட ஒரே புதிய சாதனை இதுவல்ல. கின்னஸ் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்களின் தகவல்களின்படி இத்தொடரில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் பலவற்றின் விபரம்: 1) ஜேர்மன் வீரர் மிரஸ்லோவ் குளோஸ் 16 ஆவது கோலை அடித்து உலக கிண்ண போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரரானார். 2) இம்முறை இறுதிப்போட்டியில் விளையாடிய ஜேர்மன் அணி, அதிகக் எண்ணிக்கை உலக கிண்ண இறுதிப்போட்டியில் (8) விளையாடிய அணியாக சாதனை படைத்தது. 3) பெல்ஜி…
-
- 2 replies
- 427 views
-
-
உலக கால்பந்தாட்ட தரவரிசையில் ஜேர்மன் அணி 20 வருடங்களின் பின் மீண்டும் முதலிடம் 2014-07-18 10:09:03 உலக கிண்ணத்தை வென்ற பிலிப் லாஹ்ம் தலைமையிலான ஜேர்மன் கால்பந்தாட்ட அணி சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது. 1990 ஆம் ஆண்டின்பின்னர் உலக கிண்ணத்தை வென்ற ஜேர்மன் அணி கடந்த 20 வருடங்களில் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றமை இதுவே முதல் தடவையாகும். முன்னாள் சம்பியனும் இதுவரை முதலிடத்தில் இருந்த அணியுமான ஸ்பெய்ன் தற்போது 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா 5 ஆவது இடத்திலிருந்து 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து 3 ஆம் இடத்தையும் கொலம்பியா 4 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. பெல்ஜியம் 12 ஆவது இடத்திலிருந்த…
-
- 1 reply
- 463 views
-
-
தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்… அரசியலில் தமக்கு நாட்டமில்லை எனவும், அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏதேனும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், தமது பெயர் அதற்காக பயன்படுத்துவது வழமையாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே மக்களுக்கு சேவையாயற்ற முடியும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு தாம் சேவ…
-
- 4 replies
- 1.6k views
-
-
உலகப் புகழ்பெற்ற பாடகியான ரிஹானா, உலக கிண்ண கால்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை தனது கைகளால் தொட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரின் மரக்கானா அரங்கில் கடந்த ஞாயிறன்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவை தோற்கடித்து சம்பியனான ஜேர்மன் அணியினருடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டார் பாடகி ரிஹானா. இதன்போது, ஜேர்மனி அணி வீரர்களின் கைகளிலிருந்து உலக கிண்ண கிண்ணத்தை ரிஹானாவும் தொட்டுப்பார்த்தார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களும் ஊடகங்களின் வெளியாகின. ஆனால், பாடகி ரிஹானா உலக கிண்ணத்தை தொட்டமை சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்மேளனத்தின் விதிகளின்படி, உலக…
-
- 4 replies
- 981 views
-
-
இலங்கை - தென்னாபிரிக்க முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம் : தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க துடுப்பெடுத்தாடுகின்றது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில் இன்று இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியது. ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 2-1 என வெற்றி கொண்டிருந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொ…
-
- 17 replies
- 744 views
-
-
கோப்பை இழந்ததை மறக்க முடியவில்லை: மெஸ்சி வேதனை உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோற்று அர்ஜென்டினா கோப்பை இழந்தது. அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் கோப்பை இழந்ததை மறக்க முடிய வில்லை. எந்த ஆறுதலும் என்னை தேற்றவில்லை என்று அர்ஜென்டினா கேப்டனும், தங்க பந்து விருது வென்றவருமான லியோனல் மெஸ்சி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:– நான் பெற்ற பரிசு (தங்க பந்து) பற்றி நினைக்கவில்லை. எதையும் பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை. விருதுகள் என்னை ஆறுதல் படுத்தாது. கோப்பையை இழந்ததை மறக்க முடியவில்லை. அர்ஜென்டினா மக்களுக்க…
-
- 0 replies
- 427 views
-
-
நாடு திரும்பிய அர்ஜென்டினா அணிக்கு அதிபர் தலைமையில் உற்சாக வரவேற்பு பிரேசில் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு சாம்பியன் பட்டத்தை இழந்தது. ஆனாலும், இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி போராடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. போட்டியில் இரண் டாம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணி நேற்று நாடு திரும்பியது. தலைநகர் பியூனஸ் அயர்சுக்கு விமா னம் மூலம் வந்திறங்கிய அர்ஜென்டினா வீரர்களுக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் வந்த விமானத்தின் பக்க வாட்டில் வீரர்களின் படம் வரையப்பட்டிருந்ததோடு, அர்ஜென்டினாவுக்கு நன்றி’ என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பேரு…
-
- 1 reply
- 424 views
-
-
வாழ்த்துகள் ஜெர்மனி! எல்லோரும் எதிர்பார்த்ததைப் போலவே ஜெர்மனி அணி உலகக் கோப்பையை வென்றுவிட்டது. பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில், கோல் மழை பொழிந்து 7-1 என்ற கணக்கில் எப்போது அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்ததோ அப்போதே ஜெர்மனியின் வெற்றி உறுதியாகிவிட்டது. இறுதிப் போட்டியில் அது எதிர்கொண்ட அணி அர்ஜென்டினா என்பதால், ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது. அர்ஜென்டினா சாமானியமான அணி அல்ல என்றாலும், ஜெர்மனியைப் பணிய வைக்கும் அளவுக்கு அதனிடம் உத்தி இல்லை என்பது இறுதி ஆட்டத்தில் வெளிப்பட்டுவிட்டது. உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் கோல் மழையை எதிர்பார்த்திருந்த காலங்களெல்லாம் போய்விட்டன. ஆனால், பிரேசிலுக்கு எதிரான ஜெர்மனியின் அசாதாரண ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு, கொஞ்சம…
-
- 1 reply
- 432 views
-
-
இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி' அஞ்சல்தலையை அச்சடித்த ஜெர்மனி அர்ஜென்டீனா உடனான இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி'யை பறைசாற்றும் அஞ்சல்தலையை ஜெர்மனி நாடு அச்சடித்திருக்கிறது. இந்தச் சிறப்பு அஞ்சல்தலைகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது, கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, இந்த தடவை இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே, தனது அணி வீரர்கள் மீதான நம்பிக்கையால் வெற்றியை கணித்த ஜெர்மன் அரசு, வெற்றி முத்திரைக்க…
-
- 0 replies
- 426 views
-
-
தங்கபந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் இல்லை: மரடோனா ரியோடி ஜெனீரோ, ஜூலை 15– உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான தங்க பந்து (கோல்டன் பால்) விருது அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது. அர்ஜென்டினா உலக கோப்பையை வெல்லாததால் அவரும் ஆர்வம் இல்லாமல் ஏமாற்றத்துடனதான் இந்த விருதை பெற்றார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மெஸ்சி இந்த போட்டித் தொடரில் 4 கோல்கள் அடித்து இருந்தார். 4 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்று இருந்தார். இறுதிப்போட்டியில் அவர் கோல் அடிக்க முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமே. இதற்கிடையே தங்க பந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் இல்லை என்று அர்ஜென்டினாவை சேர்ந்த முன்னாள் பிரபல வீரர் டிகோ மரடோனா கூறியுள்ளார். இது குறித்து அவர…
-
- 1 reply
- 465 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் இருந்து மஹேல ஓய்வு தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளை அடுத்து தான் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற போவதாக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன அறிவித்துள்ளார். இது எவராலும் நிர்ப்பந்திக்கப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என மஹேல ஐயவர்தன இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2014/07/14/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B…
-
- 0 replies
- 360 views
-
-
உலகக் கோப்பை கால்பந்து: 4வது முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி!! ரியோடிஜெனிரோ: உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அர்ஜெர்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின. கோல் அடிக்காமலே.... ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தை வேகப்படுத்திய ஜெர்மனி, அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி கொடுத்தது. கூடுதல் நேரம் இதனால் 90 நிமிட முடிவிலும் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்ட நடுவர் கூடுதல் நேரம் வழங்கினார். …
-
- 5 replies
- 579 views
-
-
அடல்வ் ஹிட்லர் காலத்தில் ஜேர்மனி உலகையே உலுக்கிக் கொண்டிருந்தது. போர்க் காலத்தில் . அது ஒரே நாளில் ஹோலாந்தைக் கைப்பற்றியது. போர்ப் பிரகடனத்தை கேட்டதுமே, போரிற்குப் போகாமலே போலந்து ஜேர்மனியிடம் சரன் அடைந்தது. இங்கிலாந்து கூட ஜேர்மனிக்கு பயந்து தன்னைத் தயார் படுத்துவதற்கான நேரத்தைப் பெற பேச்சுவார்த்தையை நடாத்தியே தப்பியது. குடையை ஊன்றியவாறு நடந்த அந்த இங்கிலாந்தின் பிரதமர் ஹிட்லரிற்கு ஜனநாயக உபதேசம் கூடச் செய்து பார்த்தார். இன்று ஜேர்மனி என்றவுடன் ஹிட்லரூடாகவே உலகம் ஜேர்மனியைப் பாரக்கிறது. அதன் இதர பண்டைய அதீத ஆற்றல்களையும் சிறப்புக்களையும் உலகு பார்க்கத் தவறி விடுகிறது. திறமையும் பலமுமுள்ள ஜேர்மனியை மட்டந் தட்ட உலகே ஹிட்லரையே பாவிக்கிறதெனலாம். முழு உலகினது…
-
- 0 replies
- 368 views
-
-
இலங்கை வீரர் செனநாயக்கே பந்து வீச தடை சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து தொடரின் போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் செனநாயக்கேவின் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கியது. அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக நடுவர்கள் கூறிய புகாரை தொடர்ந்து, அவரது பந்து வீச்சு முறைகளை சிறப்பு நிபுணர்கள் மூலம் ஐ.சி.சி. பரிசோதனை செய்தது. இதன் முடிவில் அவரது பவுலிங் விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாகவும், எனவே அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச தடை விதிப்பதாகவும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. பந்துவீச்சில் உள்ள சர்ச்சைகளை களைந்து மறுஒப்புதல் பெற்றால் மட்டுமே அவர் இனி பந்து வீச முடியும். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=125142
-
- 1 reply
- 475 views
-
-
பிரேசிலுக்கு தீராத் துயரம்: நெதர்லாந்துக்கு உலகக் கோப்பை 3-ம் இடம் அரையிறுதிப் படுதோல்வி நினைவுகளும், காயங்களுமே மறையாதிருக்கும் வேளையில், பிரேசில் அணி அடுத்த அடியைச் சந்தித்தது. உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரின் 3ஆம் இடத்திற்கான ஆட்டத்திலும் பிரேசில் அணி படுதோல்வியைச் சந்தித்தது. பிரேசிலியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை ஊதித் தள்ளியது. இந்த முறை அந்த நாட்டின் கால்பந்து ஹீரோ நெய்மார் ஆட்டத்தைப் பார்க்க மைதானத்திற்கு வந்தார். அவர் கண்ணெதிரே இந்த அவலத் தோல்வி ஏற்பட்டுள்ளது பிரேசில் அணிக்கு. அன்று டிஃபென்சில் ஏற்பட்ட இடைவெளி இன்னும் மறையவில்லை. ஆட்டம் தொடங்கி 3-வது நிமிடத்திற்குள் நெதர்லாந்து அபாய வீரர் வான் பெர்சி ப…
-
- 4 replies
- 972 views
-
-
தங்கப் பந்து: இறுதிப் பட்டியலில் நெய்மர் உள்ளிட்ட 10 பேர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தலைசிறந்த வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருதுக்கான (கோல்டன் பால்) இறுதிப்பட்டியலில் பிரேசிலின் நெய்மர் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளனர். அர்ஜென்டீனா தரப்பில் கேப்டன் லயோனல் மெஸ்ஸி, ஜேவியர் மாஸ்கெரனோ, ஏஞ்சல் டி மரியா ஆகியோரும், ஜெர்மனி தரப்பில் கேப்டன் பிலிப் லாம், தாமஸ் முல்லர், டோனி குரூஸ், மேட்ஸ் ஹம்மல்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் மெஸ்ஸி 4 கோல்களையும், முல்லர் 5 கோல்களையும் அடித்துள்ளனர். கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த பிரேசில் வீரர் நெய்மர் 4 கோல்களை அடித்ததன்…
-
- 2 replies
- 574 views
-
-
வரலாற்றை மாற்றுமா ஜெர்மனி? 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த ஜெர்மனியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த வலுவான அர்ஜென்டீனாவும் மோதவிருக்கின்றன. இந்த இரு அணிகளும் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் மோதவிருக்கின்றன. இதற்கு முன்னர் 1986, 1990 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதி ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 1986-ல் அர்ஜென்டீனாவும், 1990-ல் ஜெர்மனியும் வெற்றி பெற்றுள்ளன. வரலாறு மாறுமா? தென் அமெரிக்க கண்டத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அக்கண்டத்தைச் சேர்ந்த (உருகுவே இருமுறை, ப…
-
- 0 replies
- 628 views
-
-
சச்சித்ர சேனநாயக்க பந்துவீசுவதற்கு ஐ.சி.சி. தடை 2014-07-12 19:50:00 இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்ர சேனநாயக்கவின் பந்துவீச்சுப்பாணி விதிகளுக்கு முரணானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. அதனால் சர்வதேச போட்டிகளில் அவர் பந்துவீசுவதற்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. பிரிட்டனின் கர்டிவ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைடுத்து அவர் அனுமதிக்கப்பட்ட சச்சித்ரவுக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 29 வயதான சச்சித்ர சேனநாயக்க 37 சர்வதேச போட்டிகளில் 40 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கடந்த மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டியில் அவர் 13 ஓட்டங்களு…
-
- 1 reply
- 462 views
-