விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
எந்த நகர் வெற்றி பெறும்? இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடக்கும் என்பது இன்று முடிவாகிறது. போட்டியில் மூன்று நகரங்கள் உள்ளன. இதற்கான வாக்கெடுப்பு அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் போனஸ் ஏரிஸ் நகரில் லண்டன் நேரம் இரவு 7.45 க்கு நடைபெற்று முடிவுகள் ஒன்பது மணிக்கு அறிவிக்கப்படும்.துருக்கி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் நாட்டு தலைநகரங்களான இஸ்தான்புல், டோக்யோ மற்றும் மட்ரிட் ஆகிய நகரங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. மூன்று நகரங்களும் தங்களது தரப்பு வாதங்கள், ஏற்பாடுகள் ஆகியவற்றை படக்காட்சியாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் முன்னர் காட்டி வருகின்றன. கடும் போட்டி துருக்கியில் இதுவரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றதில்லை 2020 ஒலிம்பிக் போட்டியை நடத்தும…
-
- 5 replies
- 1.4k views
-
-
பிரான்சில் முதன்முறையாக இடம்பெற்றிருந்த தமிழீழ வெற்றிக்கிண்ணத்திற்கான துடுப்பெடுத்தாட்ட போட்டியில், பாகிஸ்தான் வீழத்த்தி வெற்றிக்கிண்ணத்தினை தமிழீழ அணி தனதாக்கி கொண்டுள்ளது. தெரிவு அணிகளாக இடம்பெற்றிருந்த இப்போட்டியில் 11 அணிகள் இரண்டு நாள் ஆகளத்தில் துடுப்பாடியிருந்தன. தமிழர் விளையாட்டு; செயலகம் - பிரான்சு நடத்தியிருந்த இந்நிகழ்வில் , நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நாகலிங்கம் பாலசந்திரன் , மகிந்தன் சிவசுப்பிரமணியம் மற்றும் மைக்கல் கொலின்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை பிரென்சு தேசிய துடுப்பெடுத்தாட்ட தேசிய அணிக்கு ஆறு ஆண்டுகள் அணித்தலைவராக பங்காற்றியிருந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த சாசீர் அவர்களும் இந்நிகழ்வில் சி…
-
- 1 reply
- 417 views
-
-
Print this ஜோன் ஆப்ரகாமுடன் இணையும் தோனி ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் இந்திய பேட்மின்டன் ‘லீக்’ போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஐ.பி.எல். போலவே இந்திய கால்பந்து சம்மேளனம் கால்பந்து ‘லீக்’ போட்டியை நடத்துகிறது. அடுத்த வருடம் ஜனவரி 18–ம் திகதி முதல் மார்ச் 30–ம் திகதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடக்கிறது. ஒவ்வொரு அணியில் 22 வீரர்கள் இடம்பெறுவார்கள். 10 வெளிநாட்டு வீரர்கள் உள்பட ஒரு முன்னணி வீரரும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெறுவார்கள். ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடிவு செய்து…
-
- 0 replies
- 448 views
-
-
டென்மார்க் விளையாட்டுத்துறையால் நடாத்தப்பட்ட கரும்புலிகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இருபதாவது ஆண்டு 24.08.2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. டென்மார்க் தேசியக்கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டதுடன் கரும்புலிகள் ஞாபகார்த்த நினைவு கல்லறையில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இச் சுற்றுப்போட்டியில் 16 வயதிற்குட்பட்டோர் மற்றும் 16 வயதிற்கு மேற்ப்பட்டோர் ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் நோர்வேயில் இருந்து 2 அணிகளும் பிரித்தானியாவில் இருந்து 1 அணியும் கலந்து கொண்டன. வெற்றிபெற்ற அணிகள் 16 வயதிற்கு உட்பட்டோர்: 1ம் இடம்: Vejle 2ம் இடம்: Grindsted 3ம் இடம்: Middel…
-
- 0 replies
- 512 views
-
-
எதிர்வரும் 28 ஏப்ரில் முதல் 15 செப்தெம்பெர் வரையிலான கோடை காலத்தில் ஒவ்வொரு ஞாயிறும் மாலையில் (பிப 1 மணி முதல்) பிரித்தானிய தமிழர் கிரிக்கட் லீக் கிரிக்கட் போட்டித்தொடரை ஒழுங்கு செய்துள்ளது. 28 ஏப்ரில் விபரங்கள் பின்வருமாறு பிரீமியர் டிவிஷன் Dollishill TU CC - A vs Merton Boys - A Camedodion Cricket Club, Burtonhole Lane, Burton Oak Close,Milhill, NW7 1AS Wimbledon SC vs Lewisham CC - A Sozo Community Centre 33 Eltham Road, Hamlea Close, London SE12 8ES Eastham CC - A vs Lucky CC Old Parkonians Cricket club Pavilion Forest RoadIlford, IG6 3HD West 3 CC vs Bloomfield …
-
- 16 replies
- 1.3k views
-
-
டென்மார்க்கின் மிகப்பெரிய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2013 ல் பங்குபெறுவதற்காக டென்மார்க் வாழ் தமிழர்களால் முதல் முறையாக உருவாக்கப்பட்ட தமிழீழ அணிகள் களமிறங்கவுள்ளன. இரு அணிகளாக 15 வயதிற்குட்பட்டோர் மற்றும் 13 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டியிடவுள்ளன. இவ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியிற்கான ஆரம்பவிழா 01.08.2013 மதியம் 1 மணிக்கு vildbjerg நகரில் Park Alle எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. இவ் விழாவில் தமிழீழ தேசியக்கொடி அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. ஆகையால் டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு வீரர்களுக்கு உற்சாகம் வழங்குமாறு டென்மார்க் விளையாட்டுத்துறை அழைப்பு விடுக்கிறது. மேலதிக தொடர்புகளுக்கு : 004560471159 Facebo…
-
- 16 replies
- 1.2k views
-
-
சுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழாவின் முதல் நாளான 03.08.2013 சனிக்கிழமை அன்று போட்டியாளர்களின் அணிவகுப்பினைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு சுவிஸ் கொடியேற்றலுடன் தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாவீரர்களுக்காகவும், இறந்த பொதுமக்களுக்காகவும் அகவணக்கம் நடைபெற்றது. அடுத்து விளையாட்டுத்துறை மற்றும் தமிழர் இல்லக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு போட்டியாளர்களின் சத்தியப்பிரமாணம் நடைபெற்றது. தமிழர் இல்ல மாணவர்களின் கராத்தே வெளிப்பாடானது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்ததுடன் அவர்களின் பாராட்டையும் …
-
- 0 replies
- 424 views
-
-
கிளித்தட்டு -------------------------- தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் தமிழரிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே அழிந்து வரும்சூழலில் அவற்றை மீளவும் வெளிக்கொணர ஆங்காங்கே சில முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் அவற்றை ஒரு தொடர்சியான முறையில் நகர்த்திச் செல்வதாயின் அவற்றினுடைய ஆடுகள விதிமுறைகள் தெளிவற்றோ அல்லது முறையாக அறியப்படாமலோ அல்லது ஊருக்கு ஊர் வேறுபட்டதாகவோ உரைக்கப்படுகின்றன. நேற்றையதினம் தமிழ்ப்பாடசாலையொன்று கோடைகால விடுமுறைநாளையிட்டு ஒன்றுகூடிக் கிறில்பாட்டி(தமிழ்ச்சொல்தெரியவில்லை)யொன்றை நடாத்தினர். எனக்கும் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது. அங்கு கிளித்தட்டு விளையாடப்பட்டபோது சிறியோர் இளையோர் முதியோர் என விளையாடினர். அதில் பெரியோருக்கு விதிமுறைகளில்(நானுட்…
-
- 26 replies
- 18.7k views
-
-
இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையை சொந்த மண்ணில் முதல் முறையாக தென்னாப்பிரிக்கா வீழ்த்தியிருக்கிறது. இலங்கையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் அஜந்தா மென்டிஸ் 3 விக்கெட்டுகளும், திசரா பெரேரா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய இலங்கை அணி தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். இந்த தடுமாற்றம் கடைசிவரை நீடித்தது…
-
- 0 replies
- 751 views
-
-
போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா-இலங்கை இடையேயான இறுதி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்துக்குள் பாட்டிலை வீசி எறிந்த ரசிகருக்கு டிரினாட் அண்ட் டொபாகோ கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகால தடை விதித்துள்ளது. இந்தியா- இலங்கை இடையேயான இறுதிப் போட்டி கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்றது. அப்போது விஜய் அவுடிம் என்பவர் பாட்டிலை மைதானத்துக்குள் வீசிவிட்டு தப்பி ஓட முயன்றார். அந்த பாட்டில் இலங்கை வீரர் மலிங்க மீது பட்டது. இதைத் தொடர்ந்து பாட்டிலை வீசிய ரசிகரை கடுமையாக எச்சரித்திருக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் நுழைய 5ஆண்டுகாலத்துக்கு அவருக்கு தடையும் விதித்திருக்கிறது. கரீபியன் தீவுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில்…
-
- 0 replies
- 551 views
-
-
201 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இந்தியாவுக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இந்திய அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 71 ஓட்டங்களையும், லகிரு த்ரிமானே 46 ஓட்டங்களையும், மஹெல ஜெயவர்த்தன 22 ஓட்டங்களையும், சுரங்க லக்மால் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வௌியேறினர். சமிந்த எரங்க ஆட்டமிழக்காமல் 5 ஓட்டங்களைப் பெ…
-
- 14 replies
- 785 views
-
-
இன்று நடந்த Tynwald Hill International Football Tournament போட்டில் சீ லாண்ட் அணியை எதிர்கொண்ட தமிழீழம் 5-3 என்ற கோல்கள் கணக்கில் சீ லாண்ட் அணியை.. வெற்றிபெற்றுள்ளது. நன்றி TYO UK (facebook) வாழ்த்துக்கள் தமிழீழம் கால்பந்து அணிக்கு.
-
- 27 replies
- 1.9k views
-
-
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை தொடக்க வீரர்களாக தரங்காவும், ஜெயவர்த்தனேவும் களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 62 ரன் (13.1 ஓவர்) சேர்த்தனர். தரங்கா 25 ரன்னில் அவுட் ஆனார். ஜெயவர்த்தனே 52 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு மேத்யூஸ் (55 ரன்) தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை. சண்டிமால் 21 ரன், சங்ககரா 17 ரன்னில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். முடிவில் இலங்கை அணி 48.3 ஓவரில் 208 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் ச…
-
- 13 replies
- 750 views
-
-
ஆண்கள் ஒற்றையர் விம்பில்டன் ரெனிஸ் சம்பியன்சிப் 77 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரிட்டனிடம் வந்துள்ளது. கடைசியாக 1936 இல் Fred Perry என்பவரால் இந்த தலைப்பு வெல்லப்பட்டிருந்தது. இன்று வெம்பில்டனில் நடந்த இறுதிப் போட்டியில் உலகின் முதல் தர வீரரான Novak Djokovic ஐ 6-4 7-5 6-4 என்ற செற்களில் தோற்கடித்து ஆன்டி மொரே (Andy Murray) (இவர் ஒரு ஸ்கொட்லாண்ட் வீரர் ஆவார். ஸ்கொட்லாண்ட் 2014 இல் பிரிட்டனில் இருந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்கான வாக்களிப்பை நடத்த உள்ளது) 77 ஆண்டுகள் நீண்ட காத்திருப்பினை முடிவுக்குக் கொண்டு வந்து இந்த வெற்றியை.. பெற்றுக் கொடுத்துள்ளார். வாழ்த்துக்கள் ஆன்டி மொரே. http://www.bbc.co.uk/sport/0/tennis/23217393 https://www.youtube.com/watch?v=…
-
- 1 reply
- 852 views
-
-
ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கிரிக்கெட் விளையாடி வந்த தோனி காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து விலக நேரிட்டுள்ளது. இன்று இலங்கைக்கு எதிராக நடைபெறும் போட்டியில் இதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தோனியைக் கண்டால்தான் இலங்கை நடுங்கும். அந்த அட்வாண்டேஜ் இல்லாமல் போய்விட்டது தற்போது. அவருக்கு பதிலாக அம்பாட்டி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் முதல் போட்டியில் பேட்டிங்கின் போது தசைப் பிடிப்பு காரணமாக தோனி பீல்டிங்கில் களமிறங்கவில்லை. கோலியே கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்த நிலயீல் தோனி முத்தரப்பு தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அம்பாட்டி ராயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். …
-
- 3 replies
- 872 views
-
-
செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளின் நான்காவது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் ஜெர்மனியின் சபீன் லிசீக்கியிடம் 2-6, 6-1, 4-6 எனும் நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்தப் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே சபீன் லிசீக்கியின் ஆளுமை அதிகமாக இருந்தது. துவக்கம் முதலே அவரது ஆட்டம் அதிரடியாக இருந்தது என்று பிபிசிக்காக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் வர்ணனையைச் செய்து வரும் முன்னாள் சாம்பியன் ட்ரேஸி ஆஸ்டின் கூறுகிறார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை ஐந்து முறை வென்றவர் செரீனா வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வ…
-
- 0 replies
- 300 views
-
-
சச்சின் சாதனையை குக் முறியடிப்பார்: சொல்கிறார் பீட்டர்சன் லண்டன்: இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் முறியடிப்பார் என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின், இதுவரை 198 டெஸ்டில் விளையாடி 51 சதம் உள்பட 15,837 ரன்கள் குவித்திருக்கிறார். 28 வயது நிரம்பிய இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் 92 டெஸ்டில் விளையாடி 25 சதம் உள்பட 7,524 ரன்கள் எடுத்துள்ளார். அதாவது டெஸ்டில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருக்க, குக் 31வது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் சச்சினின் டெஸ்ட் சாதனையை அலஸ்டயர் குக்கால் முறியடிக்…
-
- 0 replies
- 448 views
-
-
-
மினி உலகக்கிண்ணம்: இந்தியாவின் வெற்றியும், இலங்கை மீதான கவனயீர்ப்பு போரும்… : – சாய்பிரசாத் By சாய்பிரசாத் 2013ன் மினி உலக கிண்ணதொடர் ஒரு சில முக்கிய சம்பவங்களுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா கிண்ணம் வென்றிருக்கிறது. இது இந்தியாவிற்கு இன்னொரு மைல்கல்.டோனியின் அணி, இரண்டாயிரங்களில் இருந்த வலிமை மிக்க அவுஸ்ரேலிய அணியினை நினைவுபடுத்துகிறது. கொஞ்சம் பந்துவீச்சினை மெருகேற்றினால் போதும் அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. பெரும்பாலான போட்டிகளில் மழை குறுக்கிட்டு கொண்டிருந்தது. இலங்கையின் போட்டிகளில் மழையுடன், ஈழத்தமிழர்களும் குறுக்கிட்டார்கள். இலங்கை வீரர் டில்சானின் முன்னால் தனது எதிர்ப்பு அட்டையுடன் நிற்கும் ஈழத்தமிழனின் …
-
- 1 reply
- 711 views
-
-
தமிழீழ உதைபந்தாட்ட கழகத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் http://tamileelamfa.org/ முகநூல் பக்கம்: https://www.facebook.com/TamileelamFA (முகநூல்)
-
- 3 replies
- 548 views
-
-
சங்கக்கார சதம், குலசேகர அதிரடியால் இலங்கை அபார வெற்றி! செம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து மோதிய நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் இங்கிலாந்து அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து சார்பில் ஜொனதன் டிரொட் 76 ஓட்டங்களையும் ரூட் 68 ஓட்டங்களையும் குக் 59 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மலிங்க, எரங்க, ஹேரத் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்களை வீழ்த்தினர். 294 என்ற வெற்றியிலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி குமார் சங்கக்காரவின் அபார சதம் ம…
-
- 11 replies
- 1.9k views
-
-
ஐபிஎல் சூதாட்ட வழக்கு: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 19 பேருக்கும் பிணை ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதான இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர், மற்றும் இடைத்தரகர்கள், புக்கிகள் என்று மொத்தம் 19 பேருக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பிணை வழங்காமல் இருக்கும்படியான போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிமன்றம் கூரியதாகத் தெறிய வருகிறது. நடந்து முடிந்த 6வது ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேர், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரங்கள், மற்றும் தொலை பேசி உரையாடல்கள் கிடைத்துள்ளதாக கூறி, டெல்லி போலீசார் மூவரையும் அதிரடியாக கைது செய்து விசாரித்து வந்தனர். இவ…
-
- 0 replies
- 599 views
-
-
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐ.பி.எல் போட்டியிலிருந்து நீக்குவது குறித்து விவாதிக்க பி.சி.சி.ஐ-யின் அவசர செயற்குழு கூட்டம் ஜூன் 10ந் தேதி கூடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்தரா சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டதை அடுத்து அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் ஐ.பி.எல் சூதாட்டம் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை இழந்ததாக டெல்லி போலீஸ் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அணியின் மற்றொரு உரிமையாளரும், குந்தராவின் மனைவியான நடிகை ஷில்பா ஷெட்டியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அந்த அணி நீக்கப்படும் என விதி இருப்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து நீக்…
-
- 0 replies
- 342 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்கள் 'ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அங்கீத் சவான் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூதாட்டம் தொடர்பாக முன்னாள் வீரர்கள் 4 பேர், சூதாட்ட தரகர்கள் உள்பட நாடு முழுவதும் 30 பேர் கைதாகி உள்ளனர். 'ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் பெற்ற பணத்தில் ஸ்ரீசாந்த் மாடல் அழகிகளுக்கும் ஏராளமான பரிசு பொருட்களை வாங்கி இருந்தார். அவைகளை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். சூதாட்ட தரகர்களிடம் அவர் பெ…
-
- 0 replies
- 515 views
-
-
ஐபிஎல். சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நடுவர் மும்பையில் உள்ள 2 நட்சத்திர விடுதியில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தரகர் விண்டூ தாரா சிங் கஜகஸ்தான் அழகிகளை சப்ளை செய்துள்ளார் என்ற தகவலும் விசாரணையில் வெளியாகியுள்ளது. விண்டூவுக்கு பல தரகர்களுடன் தொடர்புள்ளது. அவர்களைக் குழிப்படுத்த அழகிகளை சப்ளை செய்துள்ளார் விண்டூ. முக்கியத் தரகர்களாக விளங்கும் பவன் ஜெய்ப்பூர், மற்றும் சஞ்சய் ஜெய்ப்பூர் ஆகியோருக்கு விண்டூ கடும் உதவிகளைச் செய்துள்ளார். இவர்கள் மும்பை ஜுகு கடற்கரையில் உள்ள 2 நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இங்கு பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுஃபும் தங்கியுள்ளார். இவர்களுக்குத்தான் விண்டூ கஜகஸ்தான் அ…
-
- 11 replies
- 925 views
-