விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
2014 உலக கோப்பை உதைபாந்தட்ட அணிகளின் பிரிவுகள் தெரிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஆறாம் திகதி ) பிரேசிலில் நடைபெறவுள்ளது . பார்த்து மகிழுங்கள் .
-
- 2 replies
- 618 views
-
-
இங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நிர்ணயித்து ஆடும் "மேட்ச் பிக்ஸிங்" என்ற மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரித்துக்கொண்டிருக்கும் பிரிட்டிஷ் போலிசார் ஆறு பேரைக் கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் குறைந்தது மூன்று பேர் கால்பந்து விளையாட்டு வீரர்கள். ஆனால் இவர்களில் எவரும் தொழில்முறை கால்பந்து கிளப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள் இல்லை என்று பிபிசிக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த நடவடிக்கையின் கவனம் ஒரு சர்வதேச சட்டவிரோத சூதாட்டக் குழுவினரே என்று போலிசார் கூறுகின்றனர். பிரிட்டனிலிருந்து வெளியாகும் "டெய்லி டெலெகிராப்" பத்திரிகை ரகசியமாக நடத்திய புலன் விசாரணையினை அடுத்து இந்தக் கைதுகள் வருகின்றன. ஆசியாவில் இருந்து இயங்கும் இந்தப் பந்தயச் சூதாடிகள்…
-
- 3 replies
- 744 views
-
-
2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கான அரங்கொன்று வடிவமைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்டாரின் அல் வக்காரா நகரிலுள்ள இந்த கால்பந்தாட்ட அரங்கின் வடிவமைப்பானது பெண்ணுறுப்பை போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டின் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள நகரங்களில் ஒன்றாக அல் வக்காரா விளங்கவுள்ளது. இந்நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள அரங்கின் கணினி மூலமான தோற்றத்த்தை கட்டார் உலகக்கிண்ண ஏற்பாட்டுக்குழு சில தினங்களுக்குமுன் வெளியிட்டது. 45,000 ஆசனங்களைக் கொண்ட இந்த அரங்கின் மேற்புறக் கூரையின் தோற்றத்தைப் பார்த்த சிலர் இது பெண்ணுறுப்பு வடிவில் உள்ளது எனக் கருத்துத் தெரிவித்த…
-
- 0 replies
- 621 views
-
-
ஸச்சின் எனும் ஆச்சரியம் சித்தார்த்தா வைத்தியநாதன் உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். பின், அங்கு சுழன்று கொண்டிருக்கும் மங்கலான எண்ணங்கள், பிம்பங்கள், தொடர்சித்திரங்கள் இவற்றிலிருந்து உங்கள் நினைவாற்றலின் முழு முனைப்புடன் ஸச்சின் ஒரு டெஸ்ட் மாச்சில் பங்குபெற்ற ஒரு தினத்தின் ஞாபகங்களைத் தேர்வு செய்யுங்கள். அது மெல்போர்னில் ஆடிய ஒரு பந்தயமாய் இருக்கலாம். அல்லது போர்ட் ஆஃப் ஸ்பெயினில். ஹராரே அல்லது சென்னையின் ஒரு புழுக்கமான காலையாக இருக்கலாம். இவை எதுவுமேயன்றி ஹெடிங்க்லி மைதானத்தை முறியடிக்க மேகங்கள் அச்சுறுத்திய மாலைப்பொழுதாகவும் இருக்கலாம். எந்த டெஸ்ட், எந்தக் களம் என்று உறுதிப்படுத்திக் கொண்டதும், அந்த ஆட்டத்தில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்த அந்தத் தருணத்தை நினை…
-
- 1 reply
- 1.1k views
-
-
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா அவசியமில்லை - சுட்டெரிக்கும் உண்மைகள் S.Raman,Vellore இது பற்றி மூன்று தினங்கள் முன்பாக சுருக்கமாக எழுதியிருந்தேன். நேற்றும் இன்றும் அலுவலகத்தில் நடைபெற்ற காரசாரமான விவாதங்கள், இணையத்தில் தொடரும் வாதப் பிரதிவாதங்கள் ஒரு நீண்ட கட்டுரைக்கான அவசியத்தை உருவாக்கியது. கிரிக்கெட்டை வெறுப்பதால் சச்சினுக்கு விருது அளிப்பதையும் எதிர்ப்பதாக யாரும் கருத வேண்டாம் என்பதால் ஒரு முன்னுரிமையும் தேவைப்படுகிறது. பிஷன் சிங் பேடி காலத்திலிருந்தே கிரிக்கெட் வர்ணனை கேட்டவன் நான். கான்பூரில் நியூசிலாந்தோடு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நாள் முதல் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டவன். பள்ளி படிக்கையில் பள்ளிக்கு எதிரேதான் வ…
-
- 2 replies
- 854 views
-
-
நாக்பூர்: 14 வயதுக்குட்டவர்களுக்கான அகில இந்திய டென்னிஸ் சங்க சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் வருண் வைகோ. மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அரசியலில் கலக்கினால் பேரன் 'வருண் வைகோ' டென்னிஸில் கலக்குகிறார். தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த பல்வேறு டென்னிஸ் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி வருகிறார் வருண் வைகோ. கடந்த ஞாயிறு அன்று நாக்பூரிலுள்ள சி.பி.டென்னிஸ் சென்டரில் நடந்த போட்டியில் அவர் தனது போட்டியாளரான மல்ஹர் பேகேவை 6-2, 6-1 என்ற செட் கணக்கில் மண்ணைக் கவ்வச் செய்து 14 வயதுக்குட்பட்டோர் போட்டியின் ஆண்கள் பிரிவில் கோப்பையை கைப்பற்றினார். வைகோ அவர்களின் பேரனான வருண் வைகோ தற்போது டென்னிஸ் தர வரிசையில் 6ஆவது இடத்தில…
-
- 3 replies
- 713 views
-
-
'இளவரசி'யை மணக்கிறார் ஸ்ரீசாந்த்... டிசம்பரில் குருவாயூரில் திருமணம்... ! குருவாயூர்: தடை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கும், ஜெய்ப்பூரைச் சேர்ந்த அரச குடும்பத்தைதச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே டிசம்பர் 12ம் தேதி குருவாயூரில் திருமணம் நடைபெறுகிறது. குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெறுகிறது. ஸ்ரீசாந்த்தை மணக்கப் போகும் பெண்ணின் பெயரை இதுவரை வெளியிடப்படாமல் வைத்துள்ளனர். இருப்பினும் இது காதல் திருமணம் என்கிறார்கள். கடந்த 2006ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது அந்தப் பெண்ணும், ஸ்ரீசாந்த்தும் சந்தித்து காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீசாந்த்துக்கு மேட்ச் பிக்ஸிங் சோதனை வந்தபோது அவருக்கு ஆதரவாக இருந்தாராம் இப்பெண். மேலும் தேவ…
-
- 4 replies
- 2k views
-
-
Congress President Sonia Gandhi had recommended Sachin Tendulkar's name for nomination to Rajya Sabha, according to BCCI Vice-President Rajeev Shukla, who also hinted that the government may consider conferring the prestigious 'Bharat Ratna' on the iconic cricketer after his retirement. http://www.mid-day.com/sports/2013/nov/131113-sachin-tendulkar-in-parliament-because-of-sonia-gandhi-rajeev-shukla.htm
-
- 0 replies
- 458 views
-
-
80களின் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன். கோண்டாவிலில் நான் வாழ்ந்து வந்த காலம். உரும்பிராயிலுள்ள நண்பர்களின் வீட்டுக்கு அவ்வப்போது செல்வதுண்டு. பலமுறைகளில் அங்கே ஒரு சிறுவர் பட்டாளம் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்திருந்து பெரும் ஆரவாரத்துடன் ஏதோ ஒரு விளையாட்டை ரசித்துக்கொண்டிருப்பார்கள். எனக்கு அந்த விளையாட்டுப் பற்றித் தெரியாது. அறிந்துகொள்ளும் ஆர்வமும் இருக்கவில்லை. சிலவேளைகளில் எதேச்சையாக அவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்பதும், கபில், சுனில், வென்சாக்கர், குண்டப்பா, சர்மா... என்று பெயர் கொண்டவர்கள் என்றும் கேள்விப்படுவதுண்டு. ஆனால் ஒரு போதுமே அவர்கள் யாரென்றோ அல்லது அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்றோ அறிந்துகொள்ள விரும்பியதில்லை. ஆக கிரிக்கெட…
-
- 19 replies
- 1.5k views
-
-
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரோகித் சர்மா, அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இன்றைய 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளுக்கு 354 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி நேற்று ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று 2வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் மேற்கிந்திய தீவு வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 10 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ரோகித்- டோனி ஜோடி இந்திய அணியின் ரன் எண்ணிக்கை சற்று உயர்த்தியது. 42 ரன்னில் டோனி வெளியேற, அஸ்வின…
-
- 2 replies
- 860 views
-
-
தமிழில் இந்த விளையாட்டை கூடைப்பந்து விளையாட்டு என்று அழைப்பார்கள்..அமெரிக்காவில் American footballக்கு அடுத்ததாய் அதிக மக்கள் விரும்பி பார்க்கும் விளையாட்டு தான் இந்த கூடைப்பந்து விளையாட்டு..அமெரிக்காவில் NBA என்ற கூடைப்பந்து விளையாட்டு மிகவும் புகழ்பெற்ற விளையாட்டு உலகம் பூரா இருக்கும் கூடைப்பந்து ரசிகர்களை கவர்தது தான் இந்த NBA....இந்த விளையாட்டு என்னை மிகவும் கவர்ந்த விளையாட்டு இந்த விளையாட்டுக்கு நான் ஒரு அடிமை என்று கூட சொல்லலாம் ..இந்த விளையாட்டை பெரிய பெரிய கிளப்புவள் விளையாடும் போது தான் இந்த விளையாட்டு இன்னும் சூடு பிடிக்கும் உதாரனத்துக்கு Oklahoma City thunder , Miami Heat போன்ற கிளப்புவள் விளையாடினால் கூடைப்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..இந…
-
- 11 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்தில் சில வருடங்கள் வாசித்ததாலோ என்னவோ இடைக்கிடை அங்கிருக்கும் பழைய நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுப்பது எனது வழக்கம். நான் கனடா வந்து இருபத்தி ஐந்துவருடங்கள் ஆகியும் இங்கிலாந்தில் இருக்கும் நண்பர்கள் போல் கனடாவில் ஏனோ அமையவில்லை. உலக புதினங்கள் தொடங்கி ஊர் புதினங்கள் வரை ஒரே அலைவரிசையில் உரையாட எப்பவும் இங்கிலாந்திற்குத்தான் தொலைபேசி அழைக்க வேண்டிஇருக்கும் .அதுவும் குறிப்பாக கிரிக்கெட் பற்றி எனக்கு மிக பிடித்த வர்ணணையாளர்கள் TONY GREIG, GEOFF BOYCOTT லெவலுக்கு புள்ளிவிபரங்களுடன் அலசி ஆராய அங்கிருக்கும் சில நண்பர்களை கேட்டுத்தான். இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் எம்மவர் பலர் பிரிட்டிஷ்காரர்களின் அந்த பாரம்பரியம் காக்கும் கடமைகளில் தாமும் இ…
-
- 0 replies
- 1k views
-
-
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் பெறுவது இருக்கட்டும். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி இன்று புதுக்கோட்டை மாவட்ட செங்கல் சூளையில் தினக்கூலி 200 ரூபாய்க்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியைத் தெரிந்துகொள்வோம். ஹார்மோன் பிரச்சினையால் சாந்தி பெண்ணா, ஆணா என்ற குழப்பத்தில் அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் பெண்தான் என்று நிரூபிக்கவோ, அவருக்குரிய வாய்ப்புகளை வழங்கவோ இந்திய விளையாட்டுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரைப் போலவே சர்ச்சைக்குள்ளான தென்னாப்பிரிக்க விளையாட்டு வீராங்கனை கேஸ்டர் செமன்யாவை அந்நாட்டு விளையாட்டுத் துறை பெண் என நிரூபித்திருப்பதுடன், லண்டன் ஒலிம்பிக்கில் தென்னாப்ப…
-
- 0 replies
- 630 views
-
-
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வுபெறுவதாக சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற பிறகு சச்சின் டெண்டுல்கர் ஒய்வுபெறுவதாக முடிவு செய்துள்ளார். இது குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது என்றும் கடந்த 24 ஆண்டுகளாக அந்தக் கனவை தான் ஆண்டுதோறும் நனவாக்கி வந்ததாகவும் சச்சின் டெண்டுல்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தனது 11 ஆவது வயதில் இருந்து கிரிக்கெட்டைத் தவிர தனக்கு ஏதும் தெரியாது என்றும், கிரிக்கெட் இல்லாமல் என்ன செய்வது என்பதை நினைக்…
-
- 4 replies
- 718 views
-
-
இந்திய உள் நாட்டு கிரிக்கெட் அணிகளின் டெஸ்ட் அங்கீகாரமும் ஈழத்துக் கிரிக்கெட் அணியும் வினையூக்கி பன்னாட்டு கிரிக்கெட் மன்றத்தின் (ICC) விதிகளின் படி, அதன் துணை / இணை உறுப்பினராக , ஒரு நாட்டைச் சார்ந்த கிரிக்கெட் வாரியமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை . கிரிக்கெட்டிற்காக ஒருங்கிணைந்த நாடுகளின் கூட்டு வாரியமாகவோ கிரிக்கெட் கட்டுமானம் சரியாக அமைந்து, புவியியல் அமைப்பைச் சார்ந்து இருக்கும் வாரியமாகக் கூட இருக்கலாம். (may be from a country, or countries associated for cricket purposes, or a geographical area where cricket is firmly established and organised.) இந்த வாரியங்களின் சார்பில் அணிகள் , ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும். எடுத்துக்காட்டாக , மேற்கிந்திய தீவு…
-
- 0 replies
- 370 views
-
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனைப் புத்தகத்தில் நேற்று மேலும் ஒரு புதிய அத்தியாயம் இடம் பெற்றது. அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் 50,000 ரன்களை நேற்று கடந்தார். இதுவரை உலகத்தில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் படைக்காத புதிய சாதனை இது.நேற்று மும்பை இந்தியன்ஸ், டிரினிடாட் டொபாகோ இடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியின் போதுதான் இந்த புதிய சாதனையை சச்சின் படைத்தார்.சச்சின் கிரிக்கெட் ஆட வந்து 25 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் 50,000 ரன்களை அவர் கடந்திருப்பது புதிய வரலாறும் ஆகும். டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டுவென்டி 20 என மொத்தம் 953போட்டிகளில் இதுவரை சச்சின் ஆடியுள்ளார்.அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 50,009 ரன்களைக் குவித்துள்ளார்.இதில் 307 முதல் தர போட்டிக…
-
- 4 replies
- 730 views
-
-
-
- 3 replies
- 757 views
-
-
இந்த தசாப்தத்தின் சீறந்த வீரர் யார் என்றதுமே பலரது நினைவில் வருபவர் சச்சின் தெந்துல்கார் தான். அதற்குக் காரணம் இன்றைக்கு கிறிக்கெற் உலகில் தனது பணபலத்தாலும் ஊடக பலத்தாலும் கட்டுக்குள் வைத்திருக்கின்ற இந்திய கிறிக்கெற் அதிகார மையம் தான் என்பது இந்தப் பதிவை முழுமையாகப் படிக்கின்ற போது உங்களுக்குப் புரியும். சச்சின் தெந்துல்கர் தன்னுடைய துடுப்பாட்டத்தால் இந்திய துடுப்பாட்டத்தை கிட்டத்தட்ட இருபத்தைந்தாண்டுகளாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஓரளவில் ஏற்றுக் கொண்டாலும் அவரே உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. புள்ளிவிபரங்களின் துணைகொண்டு இது குறித்து ஆராய்வதற்கு முன்பதாக பொதுவான சில விடயங்கள் குறித்தும் கருத்தில் எடுக்க வேண்டிய…
-
- 10 replies
- 1k views
-
-
எந்த நகர் வெற்றி பெறும்? இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடக்கும் என்பது இன்று முடிவாகிறது. போட்டியில் மூன்று நகரங்கள் உள்ளன. இதற்கான வாக்கெடுப்பு அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் போனஸ் ஏரிஸ் நகரில் லண்டன் நேரம் இரவு 7.45 க்கு நடைபெற்று முடிவுகள் ஒன்பது மணிக்கு அறிவிக்கப்படும்.துருக்கி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் நாட்டு தலைநகரங்களான இஸ்தான்புல், டோக்யோ மற்றும் மட்ரிட் ஆகிய நகரங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. மூன்று நகரங்களும் தங்களது தரப்பு வாதங்கள், ஏற்பாடுகள் ஆகியவற்றை படக்காட்சியாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் முன்னர் காட்டி வருகின்றன. கடும் போட்டி துருக்கியில் இதுவரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றதில்லை 2020 ஒலிம்பிக் போட்டியை நடத்தும…
-
- 5 replies
- 1.5k views
-
-
பிரான்சில் முதன்முறையாக இடம்பெற்றிருந்த தமிழீழ வெற்றிக்கிண்ணத்திற்கான துடுப்பெடுத்தாட்ட போட்டியில், பாகிஸ்தான் வீழத்த்தி வெற்றிக்கிண்ணத்தினை தமிழீழ அணி தனதாக்கி கொண்டுள்ளது. தெரிவு அணிகளாக இடம்பெற்றிருந்த இப்போட்டியில் 11 அணிகள் இரண்டு நாள் ஆகளத்தில் துடுப்பாடியிருந்தன. தமிழர் விளையாட்டு; செயலகம் - பிரான்சு நடத்தியிருந்த இந்நிகழ்வில் , நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நாகலிங்கம் பாலசந்திரன் , மகிந்தன் சிவசுப்பிரமணியம் மற்றும் மைக்கல் கொலின்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை பிரென்சு தேசிய துடுப்பெடுத்தாட்ட தேசிய அணிக்கு ஆறு ஆண்டுகள் அணித்தலைவராக பங்காற்றியிருந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த சாசீர் அவர்களும் இந்நிகழ்வில் சி…
-
- 1 reply
- 421 views
-
-
Print this ஜோன் ஆப்ரகாமுடன் இணையும் தோனி ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் இந்திய பேட்மின்டன் ‘லீக்’ போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஐ.பி.எல். போலவே இந்திய கால்பந்து சம்மேளனம் கால்பந்து ‘லீக்’ போட்டியை நடத்துகிறது. அடுத்த வருடம் ஜனவரி 18–ம் திகதி முதல் மார்ச் 30–ம் திகதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடக்கிறது. ஒவ்வொரு அணியில் 22 வீரர்கள் இடம்பெறுவார்கள். 10 வெளிநாட்டு வீரர்கள் உள்பட ஒரு முன்னணி வீரரும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெறுவார்கள். ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடிவு செய்து…
-
- 0 replies
- 455 views
-
-
டென்மார்க் விளையாட்டுத்துறையால் நடாத்தப்பட்ட கரும்புலிகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இருபதாவது ஆண்டு 24.08.2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. டென்மார்க் தேசியக்கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டதுடன் கரும்புலிகள் ஞாபகார்த்த நினைவு கல்லறையில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இச் சுற்றுப்போட்டியில் 16 வயதிற்குட்பட்டோர் மற்றும் 16 வயதிற்கு மேற்ப்பட்டோர் ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் நோர்வேயில் இருந்து 2 அணிகளும் பிரித்தானியாவில் இருந்து 1 அணியும் கலந்து கொண்டன. வெற்றிபெற்ற அணிகள் 16 வயதிற்கு உட்பட்டோர்: 1ம் இடம்: Vejle 2ம் இடம்: Grindsted 3ம் இடம்: Middel…
-
- 0 replies
- 521 views
-
-
எதிர்வரும் 28 ஏப்ரில் முதல் 15 செப்தெம்பெர் வரையிலான கோடை காலத்தில் ஒவ்வொரு ஞாயிறும் மாலையில் (பிப 1 மணி முதல்) பிரித்தானிய தமிழர் கிரிக்கட் லீக் கிரிக்கட் போட்டித்தொடரை ஒழுங்கு செய்துள்ளது. 28 ஏப்ரில் விபரங்கள் பின்வருமாறு பிரீமியர் டிவிஷன் Dollishill TU CC - A vs Merton Boys - A Camedodion Cricket Club, Burtonhole Lane, Burton Oak Close,Milhill, NW7 1AS Wimbledon SC vs Lewisham CC - A Sozo Community Centre 33 Eltham Road, Hamlea Close, London SE12 8ES Eastham CC - A vs Lucky CC Old Parkonians Cricket club Pavilion Forest RoadIlford, IG6 3HD West 3 CC vs Bloomfield …
-
- 16 replies
- 1.3k views
-
-
டென்மார்க்கின் மிகப்பெரிய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2013 ல் பங்குபெறுவதற்காக டென்மார்க் வாழ் தமிழர்களால் முதல் முறையாக உருவாக்கப்பட்ட தமிழீழ அணிகள் களமிறங்கவுள்ளன. இரு அணிகளாக 15 வயதிற்குட்பட்டோர் மற்றும் 13 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டியிடவுள்ளன. இவ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியிற்கான ஆரம்பவிழா 01.08.2013 மதியம் 1 மணிக்கு vildbjerg நகரில் Park Alle எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. இவ் விழாவில் தமிழீழ தேசியக்கொடி அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. ஆகையால் டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு வீரர்களுக்கு உற்சாகம் வழங்குமாறு டென்மார்க் விளையாட்டுத்துறை அழைப்பு விடுக்கிறது. மேலதிக தொடர்புகளுக்கு : 004560471159 Facebo…
-
- 16 replies
- 1.2k views
-
-
சுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழாவின் முதல் நாளான 03.08.2013 சனிக்கிழமை அன்று போட்டியாளர்களின் அணிவகுப்பினைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு சுவிஸ் கொடியேற்றலுடன் தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாவீரர்களுக்காகவும், இறந்த பொதுமக்களுக்காகவும் அகவணக்கம் நடைபெற்றது. அடுத்து விளையாட்டுத்துறை மற்றும் தமிழர் இல்லக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு போட்டியாளர்களின் சத்தியப்பிரமாணம் நடைபெற்றது. தமிழர் இல்ல மாணவர்களின் கராத்தே வெளிப்பாடானது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்ததுடன் அவர்களின் பாராட்டையும் …
-
- 0 replies
- 427 views
-