Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 201 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இந்தியாவுக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இந்திய அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 71 ஓட்டங்களையும், லகிரு த்ரிமானே 46 ஓட்டங்களையும், மஹெல ஜெயவர்த்தன 22 ஓட்டங்களையும், சுரங்க லக்மால் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வௌியேறினர். சமிந்த எரங்க ஆட்டமிழக்காமல் 5 ஓட்டங்களைப் பெ…

    • 14 replies
    • 800 views
  2. இன்று நடந்த Tynwald Hill International Football Tournament போட்டில் சீ லாண்ட் அணியை எதிர்கொண்ட தமிழீழம் 5-3 என்ற கோல்கள் கணக்கில் சீ லாண்ட் அணியை.. வெற்றிபெற்றுள்ளது. நன்றி TYO UK (facebook) வாழ்த்துக்கள் தமிழீழம் கால்பந்து அணிக்கு.

  3. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை தொடக்க வீரர்களாக தரங்காவும், ஜெயவர்த்தனேவும் களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 62 ரன் (13.1 ஓவர்) சேர்த்தனர். தரங்கா 25 ரன்னில் அவுட் ஆனார். ஜெயவர்த்தனே 52 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு மேத்யூஸ் (55 ரன்) தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை. சண்டிமால் 21 ரன், சங்ககரா 17 ரன்னில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். முடிவில் இலங்கை அணி 48.3 ஓவரில் 208 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் ச…

    • 13 replies
    • 762 views
  4. ஆண்கள் ஒற்றையர் விம்பில்டன் ரெனிஸ் சம்பியன்சிப் 77 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரிட்டனிடம் வந்துள்ளது. கடைசியாக 1936 இல் Fred Perry என்பவரால் இந்த தலைப்பு வெல்லப்பட்டிருந்தது. இன்று வெம்பில்டனில் நடந்த இறுதிப் போட்டியில் உலகின் முதல் தர வீரரான Novak Djokovic ஐ 6-4 7-5 6-4 என்ற செற்களில் தோற்கடித்து ஆன்டி மொரே (Andy Murray) (இவர் ஒரு ஸ்கொட்லாண்ட் வீரர் ஆவார். ஸ்கொட்லாண்ட் 2014 இல் பிரிட்டனில் இருந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்கான வாக்களிப்பை நடத்த உள்ளது) 77 ஆண்டுகள் நீண்ட காத்திருப்பினை முடிவுக்குக் கொண்டு வந்து இந்த வெற்றியை.. பெற்றுக் கொடுத்துள்ளார். வாழ்த்துக்கள் ஆன்டி மொரே. http://www.bbc.co.uk/sport/0/tennis/23217393 https://www.youtube.com/watch?v=…

    • 1 reply
    • 859 views
  5. ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கிரிக்கெட் விளையாடி வந்த தோனி காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து விலக நேரிட்டுள்ளது. இன்று இலங்கைக்கு எதிராக நடைபெறும் போட்டியில் இதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தோனியைக் கண்டால்தான் இலங்கை நடுங்கும். அந்த அட்வாண்டேஜ் இல்லாமல் போய்விட்டது தற்போது. அவருக்கு பதிலாக அம்பாட்டி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் முதல் போட்டியில் பேட்டிங்கின் போது தசைப் பிடிப்பு காரணமாக தோனி பீல்டிங்கில் களமிறங்கவில்லை. கோலியே கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்த நிலயீல் தோனி முத்தரப்பு தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அம்பாட்டி ராயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். …

    • 3 replies
    • 880 views
  6. செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளின் நான்காவது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் ஜெர்மனியின் சபீன் லிசீக்கியிடம் 2-6, 6-1, 4-6 எனும் நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்தப் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே சபீன் லிசீக்கியின் ஆளுமை அதிகமாக இருந்தது. துவக்கம் முதலே அவரது ஆட்டம் அதிரடியாக இருந்தது என்று பிபிசிக்காக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் வர்ணனையைச் செய்து வரும் முன்னாள் சாம்பியன் ட்ரேஸி ஆஸ்டின் கூறுகிறார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை ஐந்து முறை வென்றவர் செரீனா வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வ…

  7. சச்சின் சாதனையை குக் முறியடிப்பார்: சொல்கிறார் பீட்டர்சன் லண்டன்: இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் முறியடிப்பார் என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின், இதுவரை 198 டெஸ்டில் விளையாடி 51 சதம் உள்பட 15,837 ரன்கள் குவித்திருக்கிறார். 28 வயது நிரம்பிய இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் 92 டெஸ்டில் விளையாடி 25 சதம் உள்பட 7,524 ரன்கள் எடுத்துள்ளார். அதாவது டெஸ்டில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருக்க, குக் 31வது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் சச்சினின் டெஸ்ட் சாதனையை அலஸ்டயர் குக்கால் முறியடிக்…

    • 0 replies
    • 453 views
  8. மினி உலகக்கிண்ணம்: இந்தியாவின் வெற்றியும், இலங்கை மீதான கவனயீர்ப்பு போரும்… : – சாய்பிரசாத் By சாய்பிரசாத் 2013ன் மினி உலக கிண்ணதொடர் ஒரு சில முக்கிய சம்பவங்களுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா கிண்ணம் வென்றிருக்கிறது. இது இந்தியாவிற்கு இன்னொரு மைல்கல்.டோனியின் அணி, இரண்டாயிரங்களில் இருந்த வலிமை மிக்க அவுஸ்ரேலிய அணியினை நினைவுபடுத்துகிறது. கொஞ்சம் பந்துவீச்சினை மெருகேற்றினால் போதும் அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. பெரும்பாலான போட்டிகளில் மழை குறுக்கிட்டு கொண்டிருந்தது. இலங்கையின் போட்டிகளில் மழையுடன், ஈழத்தமிழர்களும் குறுக்கிட்டார்கள். இலங்கை வீரர் டில்சானின் முன்னால் தனது எதிர்ப்பு அட்டையுடன் நிற்கும் ஈழத்தமிழனின் …

  9. தமிழீழ உதைபந்தாட்ட கழகத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் http://tamileelamfa.org/ முகநூல் பக்கம்: https://www.facebook.com/TamileelamFA (முகநூல்)

  10. சங்கக்கார சதம், குலசேகர அதிரடியால் இலங்கை அபார வெற்றி! ​செம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து மோதிய நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் இங்கிலாந்து அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து சார்பில் ஜொனதன் டிரொட் 76 ஓட்டங்களையும் ரூட் 68 ஓட்டங்களையும் குக் 59 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மலிங்க, எரங்க, ஹேரத் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்களை வீழ்த்தினர். 294 என்ற வெற்றியிலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி குமார் சங்கக்காரவின் அபார சதம் ம…

    • 11 replies
    • 1.9k views
  11. ஐபிஎல் சூதாட்ட வழக்கு: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 19 பேருக்கும் பிணை ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதான இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர், மற்றும் இடைத்தரகர்கள், புக்கிகள் என்று மொத்தம் 19 பேருக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பிணை வழங்காமல் இருக்கும்படியான போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிமன்றம் கூரியதாகத் தெறிய வருகிறது. நடந்து முடிந்த 6வது ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேர், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரங்கள், மற்றும் தொலை பேசி உரையாடல்கள் கிடைத்துள்ளதாக கூறி, டெல்லி போலீசார் மூவரையும் அதிரடியாக கைது செய்து விசாரித்து வந்தனர். இவ…

    • 0 replies
    • 606 views
  12. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐ.பி.எல் போட்டியிலிருந்து நீக்குவது குறித்து விவாதிக்க பி.சி.சி.ஐ-யின் அவசர செயற்குழு கூட்டம் ஜூன் 10ந் தேதி கூடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்தரா சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டதை அடுத்து அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் ஐ.பி.எல் சூதாட்டம் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை இழந்ததாக டெல்லி போலீஸ் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அணியின் மற்றொரு உரிமையாளரும், குந்தராவின் மனைவியான நடிகை ஷில்பா ஷெட்டியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அந்த அணி நீக்கப்படும் என விதி இருப்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து நீக்…

    • 0 replies
    • 351 views
  13. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்கள் 'ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அங்கீத் சவான் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூதாட்டம் தொடர்பாக முன்னாள் வீரர்கள் 4 பேர், சூதாட்ட தரகர்கள் உள்பட நாடு முழுவதும் 30 பேர் கைதாகி உள்ளனர். 'ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் பெற்ற பணத்தில் ஸ்ரீசாந்த் மாடல் அழகிகளுக்கும் ஏராளமான பரிசு பொருட்களை வாங்கி இருந்தார். அவைகளை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். சூதாட்ட தரகர்களிடம் அவர் பெ…

    • 0 replies
    • 521 views
  14. ஐபிஎல். சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நடுவர் மும்பையில் உள்ள 2 நட்சத்திர விடுதியில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தரகர் விண்டூ தாரா சிங் கஜகஸ்தான் அழகிகளை சப்ளை செய்துள்ளார் என்ற தகவலும் விசாரணையில் வெளியாகியுள்ளது. விண்டூவுக்கு பல தரகர்களுடன் தொடர்புள்ளது. அவர்களைக் குழிப்படுத்த அழகிகளை சப்ளை செய்துள்ளார் விண்டூ. முக்கியத் தரகர்களாக விளங்கும் பவன் ஜெய்ப்பூர், மற்றும் சஞ்சய் ஜெய்ப்பூர் ஆகியோருக்கு விண்டூ கடும் உதவிகளைச் செய்துள்ளார். இவர்கள் மும்பை ஜுகு கடற்கரையில் உள்ள 2 நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இங்கு பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுஃபும் தங்கியுள்ளார். இவர்களுக்குத்தான் விண்டூ கஜகஸ்தான் அ…

  15. spot fixing என்றால் என்ன??

  16. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டவன் கிட்டி என்ற உத்தம்ஜெயின். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து போலியான மற்றும் கற்பனையான அடையாள ஆதாரங்களை கொடுத்து செல்போன் சிம்கார்டுகளை பெற்றுள்ளனர். பழைய சிம்கார்டுகளை அழித்து விட்டு மீண்டும் புதிய சிம் கார்டுகளை பெற்று தங்கள் செயல்களை தொடர்ந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட செல்போன் எண்களின் அழைப்பு விவரங்கள், மடிக்கணினி மற்றும் கணினி ஆகியவற்றில் பதிவாகி உள்ள தகவல்கள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த புரோக்கர்கள் தங்களுக்கு சாதகமான வகையில் பெட்டிங் அமைத்து சூதாடுபவர்களை தங்களுக்கு லாபம் ஏற்படும்…

  17. ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்து, அவரது வீட்டுக்கு நேரடியாக வந்து மும்பை போலீசார் சம்மன் வழங்கினார்கள். இதையடுத்து, குருநாத் மெய்யப்பன் போலீசில் ஆஜராவதற்காக விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். பின்னர் மும்பை சென்ற அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மூன்று மணிநேரம் நடைபெற்றது. விசாராணைக்கு பின் குருநாத்தை கைது செய்துள்ளதாக மும்பை போலீஸ் அறிவித்துள்ளது. கூட்டுச்சதி மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குருநாத் மெய்யப்பனை இன்று நீதிமன்றத்தில் …

    • 3 replies
    • 504 views
  18. ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் மற்றும் தரகர்கள் கைதாகி வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் உறவினரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் இதில் தொடர்பு கொண்டிருப்பதாக மும்பை போலீசார் சந்தேகம் அடைந்தனர். சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகர் விண்டு தாராசிங்கின் செல்போனை மும்பை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை அணியின் தலைவர் குருநாத்துடன் விண்டு தாராசிங் பேசிய அடுத்த நிமிடம் அவர், சூதாட்டத் தரகர்களுடனும் பேசியிருப்பதைக் கண்டறிந்தனர். எனவே, இந்த சூதாட்டத்தில் குருநாத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மும்பை போலீசார் சந்தேகப்பட்டனர். அதனடிப்படையில் இன்று காலை சென்னை வந்த 3 மும்பை போலீசார் குருநாத்திடமு…

    • 0 replies
    • 397 views
  19. ஐபிஎல் சூதாட்ட விவகாரம் கிரிக்கெட் உலகில் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. இதுவரை இந்த விவகாரத்தில் ஸ்ரீசாந்த் உள்பட கிரிக்கெட் வீரர்கள் மட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி துவக்க வீரர் ஒருவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அந்த வீரர் இந்த சீசனில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் சொதப்பலாக ஆடியுள்ளார். அவருக்கு சூதாட்டத்தரகர்களுடன் தொடர்பு இருக்கக்கூடும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஒருவர் மீதும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். போட்டிகளின் போது இல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்த நடுவர் சூதாட்டத்தரகர்களை தொடர்பு கொண்டிருக்கக்கூடும் என போலீசார் http://di…

    • 0 replies
    • 349 views
  20. ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் வின்டூ சிங்கிற்கு சென்னை ஐபிஎல் அணியுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகரும் மல்யுத்த வீரருமான தாராசிங்கின் மகன் தான் வின்டூ சிங். சூதாட்டத் தரகர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை மும்பை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வின்டூ சிங்கை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற சென்னை-மும்பை இடையேயான போட்டியில், தோனியின் மனைவி சாக்சியுடன் அமர்ந்து வின்டூ சிங் போட்டியை ரசித்துள்ளார். இதுதவிர விருந்துகளிலும் வீரர்களுடன் அவர் பங்கேற்றிருப…

    • 2 replies
    • 687 views
  21. புதுடெல்லி: தமது நண்பனும், புக்கியுமான ஜிஜூ ஜனார்தன் ஆசைக்காட்டியதால்தான், தாம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் கண்ணீர்விட்டு கதறியபடியே ஒப்புக்கொண்டுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் என 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர் நீதிமன்றத்தில் ஆஜர் இந்நிலையில் கைதான ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களும் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த், தான் ஒரு அப்பாவி என்றும், தன்னை இந்த ஊழலில் சிக்க வைத்துவிட்டனர் என்றும் புலம்பினார். இதனிடையே போலீசார் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். ஆனால் 5 நாட்…

    • 10 replies
    • 915 views
  22. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 6-வது சீசன் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த 1 1/2 மாதங்களாக கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தடவை எந்த அணிக்கு கோப்பை கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர் பார்ப்புகளுடன் இருந்த நிலையில், ஐ.பி.எல். ஆட்டங்களில் சூதாட்டம் நடக்கும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இன்று மும்பையில் 2 தரகர்கள் பிடிபட்டனர். இதுவரை மொத்தம் 22 பே…

    • 0 replies
    • 388 views
  23. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பாட்பிக்சிங்' முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான்,முன்னாள் வீரரும், தற்போது புக்கியாக செயல்பட்டவருமான அமித்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்புடைய 16 புக்கிகளும் மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் கைதான 4 வீரர்களையும் போலீசார் டெல்லியில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டக்காரர்களின் வலையில் வீழ்ந்தது எப்படி என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சூதாட்டக் காரர்கள் சீசனுக்கு தகுந்தபடி செயல்படுவார்கள். அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டின் பொருளாதாரத்தை பற்றியோ கவலையில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக…

    • 0 replies
    • 627 views
  24. பரபரப்பாக நடைபெற்றுவரும் ஆறாவது ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சூதாட்ட புகாரில் ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீசாந்த்துடன் சேர்த்து சண்டிலா, சவான் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருடன் மற்ற வீரர்களான அங்கித் சவான் மற்றும் அஜித் அந்தூலியா ஆகியோரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று ராஜஸ்தான் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிய போட்டியில்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றது. இந்த போட்டி முடிந்த பிறகு ஸ்ரீசாந்த் மும்பையில் உள்ள அவரது நண்பரின் வீட்டிலிருந்தும், பிற வீரர்கள் ராஜஸ்தான் அணி வீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.