விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
இவ்வாண்டின் பேஸ்போல் World Series போட்டித் தொடரில், சான் பிறான்சிஸ்கோ ஜயன்ட்ஸ் (San Francisco Giants) அணி வெற்றி பெற்றது. நேற்று அந்தப் போட்டித் தொடரின் ஐந்தாவது போட்டி இடம்பெற்றது. ரெக்சாசில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில், மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் சான் பிறான்சிஸ்கோ அணி, ரெக்சாஸ் ரேஞ்சேர்ஸ் (Texas Rangers) அணியைத் தோற்கடித்தது. அதன் மூலம், நான்குக்கு ஒன்று என்ற போட்டிகளின் அடிப்படையில் சான் பிறான்சிஸ்கோ அணி World Series போட்டித் தொடரில் வெற்றி பெற்றது. 1954 ஆம் ஆண்டின் பின்னர் முதன் முறையாக சான் பிறான்சிஸ்கோ அணி, வேர்ல்ட் சீரிஸ் போட்டித் தொடர் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. [11/2/2010 ] [cmr news bulletin ]
-
- 0 replies
- 734 views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இலங்கை குத்துச்சண்டை வீரர் மஞ்சு வன்னியராச்சி, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி சிக்கியுள்ளார். டில்லியில் 19வது காமன்வெல்த் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற இலங்கை அணி, ஒரே ஒரு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என 3 பதக்கம் மட்டும் வென்றது. இப்போது அந்த தங்கமும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குத்துச்சண்டை "பாண்டம்வெயிட்' பிரிவில் மஞ்சு வன்னியராச்சி (30) தங்கம் வென்று இருந்தார். இது 72 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை அணி பெற்ற தங்கப்பதக்கமாகும். ஆனால் இவர் தடைசெய்யப்பட்ட "ஸ்டெராய்டு' என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து லக்பிமா என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,"" குத்துச்சண்டையில் ஊக்கத்த…
-
- 2 replies
- 883 views
-
-
சிலம்பம் சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. "சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு.எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்…
-
- 1 reply
- 1.3k views
-
-
வர்மக்கலை உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம் குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும் கொற்றம் அமைத்துக் கோலோச்சியதாக வரலாறு இல்லை. பகைவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வோடு, உலகின் ஒவ்வோர் இனமும் வீர விளையாட்டுக்களுக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டன. ஐம்புலன்களையும் அடக்கி, உடலையும் மனதையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த மனித இனங்கள், உயிர்காக்கும் தற்காப்புக் கலைகளையும் உருவாக்கி, அவற்றைப் பேணிடும் வகையில் பாசறைகள் அமைத்துப் பயிற்சிகள் மேற்கொண்டன. இதில் தமிழினமும் அடங்கும். "வாளொடு முன்தோன்றி மூத்தக் குடி" என்னும் செவ்விய கூற்று, தமிழ் இனத்தை ஒரு வீரப்பரம்பரையாகவும், தம…
-
- 0 replies
- 1k views
-
-
ஜேர்மனியில் வளர்ந்து வரும் உதைபந்தாட்ட வீரரான இலங்கைத் தமிழர் ஜெரனுக்கு எதிராக நிறத் துவேசம்! புதன், 20 அக்டோபர் 2010 09:02 . . ஜேர்மனியில் வளர்ந்து வரும் உதைபந்தாட்ட வீரர்களில் ஒருவரான இலங்கைத் தமிழர் ஜெரன் ஜெயபாலன் (வயது14) கறுப்பர் என்கிற காரணத்தால் நையாண்டி செய்யப்பட்டு வருகின்றார். பாடசாலையில் உதைபந்தாட்ட அணி ஒன்றின் தலைவராக ஜெரன் விளங்குகின்றார். வேகமும், விவேகமும் நிறைந்த உதைபந்தாட்ட வீரர். இவர் மைதானத்தில் விளையாடுகின்றார் என்றால் கலகலப்புத்தான். அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் கூட. ஆனால் எதிரணியினர் இவரைப் பலவீனபடுத்தும் வகையில் நிறத் துவேசத்தைக் கக்குகின்றமை வழமையாகி விட்டது. கறுப்பன்.. கறுப்பன் என்று சத்தம் போடு…
-
- 26 replies
- 2.6k views
-
-
மேற்கிந்திய அணியின் புதிய தலைவராக டரின் சமி வீரகேசரி இணையம் -மேற்கிந்திய அணியின் புதிய தலைவராக டரின் சமி தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் கிரிஸ் கேல் அணித்தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியத்தின் உடன்பாட்டுக்கு அவ் அணியின் முன்னாள் தலைவர் கிரிஸ் கேல் உடன்படாமையினால் அணி தலைவர் மற்றும் உபத்தலைவர் பதவியிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ,
-
- 0 replies
- 655 views
-
-
இந்தியாவில் ஆஸ்திரேலியர் வெறியாட்டம்; கிரிக்கெட் தோல்வியால் அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டனர் ஆந்திர பிரதேசம் ஹைதராபாத்தில், பி.எட் படித்த .. பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2010,08:25 IST புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆஸ்திரேலியர்கள், புதுடில்லியில் வெறியாட்ட்டத்தில் ஈடுபட்டனர். விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், இத்தகைய அநாகரிகமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக வந்திருந்த ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், வீரர்களுக்கான கிராமத்தில் தங்கள் வெறியாட்டத்தை அரங்கேற்றினர். காமன்வெல்த் போட்டிகளில் அதிகப் பட்ச பதக்கங்…
-
- 1 reply
- 880 views
-
-
போல் போடுதல், பட் செய்தல் இதில் கடினமானது எது? இன்று தற்செயலாக இந்தக்கேள்வி எனக்குள் உதித்தது. நான் நினைக்கின்றேன் மட்டையால் அடிப்பதுதான் கடினமானது என்று. காரணம்: ஒவ்வொரு தடவையும் பந்தை எதிர்கொள்ளும்போது மட்டையடிவீரர் ஆட்டம் இழப்பதற்கு சாத்தியம் உள்ளது. பந்துவீசும்போது ஒவ்வொரு தடவையும் நாம் மட்டை அடிப்பவரை வீழ்த்துவதற்கு சாத்தியம் உள்ளது, அத்துடன் பந்துவீசும்போது (சில விதிவிலக்குள் தவிர) களவீரர்களை நமக்கு ஏற்றாற்போல் நிறுத்தமுடியும். நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீங்கள்? இப்படி ஓர் கேள்வி தோன்றக்காரணம்.. இன்று சச்சின் தெண்டூர்காரின் மட்டையடி மூலம் பெற்ற ஓட்டவிபரங்களை பார்த்தேன். மட்டையடிவீரராக சாதனை செய்வதா அல்லது பந்துவீச்சாளராக சாதனை செய்வதா கடினமானது எனும் ஓர் கேள்வி …
-
- 25 replies
- 2.3k views
-
-
யோகா -- மூச்சுப்பயிற்சி http://www.wikihow.com/Do-Pranayam --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 2 replies
- 3.5k views
-
-
கராச்சி: ""இனிவரும் காலங்களில், மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட விருப்பம் இல்லை,'' என, பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டி கேப்டன் சயீத் அப்ரிதி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அப்ரிதி இருந்தார். இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைய, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்தார் அப்ரிதி. அதன்பின் சல்மான் பட் தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி, சூதாட்ட சர்ச்சையில் சிக்கி மோசமான தோல்வி அடைந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் "ஆல்-ரவுண்டர்' அப்ரித…
-
- 0 replies
- 533 views
-
-
மொகாலி: மொகாலி டெஸ்டில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் துல்லியமாக பந்துவீச, ஆஸ்திரேலிய "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய வாட்சன் சதமடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 224 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மொகாலியில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், பேட்டிங் தேர்வு செய்தார். பாண்டிங் அரைசதம்: முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சைமன் காடிச் (6), ஜாகிர் வேகத்தில் வெளியேறி மோசமான துவக்கம் கொடுத்தார். பின்னர் இணைந்த ஷேன் வாட்சன், ரிக்கி பாண்டிங் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக…
-
- 8 replies
- 982 views
-
-
ஐ.பி.எல்: இதுவும் ஒரு விளையாட்டுதான் - ராஜ்ப்ரியன் ஐ.பி.எல் என்ற மூன்று எழுத்து, பாரத தேசத்தின் பாராளுமன்றம் முதல் பட்டி தொட்டி வரை பேசும் விஷயமாகிவிட்டது. ஐ.பி.எல் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஒரு அமைச்சரின் பதவியையும் காவுவாங்கியுள்ளது. காரணம் இதன் பின்னால் நடந்த திரை மறைவு விவகாரங்கள் வெளியே வந்தததால்தான். 2008ல் தான் முதன் முதலில் ஐ.பி.எல் 20-20 மேட்ச் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பெங்களுர் ராயல் சேலஜ்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி என 8 அணிகள் உருவாக்கப்பட்டது. இந்த அணிகள் சந்தையில் ஆடு, மாடுகள் ஏலம் விடப்படுவதை போல …
-
- 1 reply
- 580 views
-
-
சிங்கள கிரிக்கெட்டு வீரர்களின் அசத்தலான ஆட்டங்கள்... அரவிந்த டி சில்வா ரொம்ப பிடிக்கும்.... எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது 50 கிந்திய கூட்டமைப்பு சுந்திர தின கோப்பை அன்று அதன் பிறகு நடந்த ஆசிய கோப்பை என அனைத்திலும் வெளுத்து வாங்கினார் சுருக்கமாம சொன்னால் இவர் இன்னோரு நங்கூரம் அதாவது டிராவிட்.... ஏனோ அந்த காணோளிகள் கிடைக்கவில்லை... கிடைத்தவுடன் இணைப்பேன்... அவர் ஆப் சைடில் இரு கால்களையும் உள்ளே வாங்கி அடிக்கும் விதமே தனி அழகு....
-
- 14 replies
- 1.3k views
-
-
-
அருமையான ஒரு பாடல்
-
- 0 replies
- 741 views
-
-
பாகிஸ்தான் அணியினரின் ஆட்டம் ஊழல்மயமானதை விபரிக்கும் காணொளி..! http://www.youtube.com/watch?v=w3Tv2cH1biA
-
- 1 reply
- 1.1k views
-
-
புதிய ஒலிம்பிக் கோபுரம் 2016 - Solar City Tower அடுத்த ஒலிம்பிக் சர்வதேச விளையாட்டுக்கள் 2016 ல் பிரேசில் நாட்டிலுள்ள "ரியோ டி ஜெனிரோ" நகரத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஒலிம்பிக் கண்காணிப்பு கோபுரம் ஒன்று அருகிலுள்ள "கடோந்துபா" தீவில் மிக பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. இது வான்வெளியாகவும், கடல் மூலமாகவும் நகருக்கு வருபவர்களை வரவேற்கவும் பயன்படும். இதில் சிறப்பம்சம் என்னவெனில், பகலில் சூரியஒளிச் சக்தி மூலம் இயக்கப்படும் இறைப்பாண்கள், கடல் நீரை மேலிருந்து அருவியாகக் கொட்டுவதன்மூலம் கிடைக்கும் உந்து சக்தியை விரயமாக்காமல் அதனைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய "டர்பைன்"களை இயக்கி, இரவில் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதுதான். இதில் வணிக வளாகங்கள் கேளிக்கைக…
-
- 1 reply
- 1.2k views
-
-
. வேண்டும் என்றே 'நோ பால்'- ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை கிரிக்கெட் வாரியம் தம்புல்லா: இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடந்த ஒரு நாள் போட்டியின் போது வேண்டும் என்றே நோபால் வீசியதற்காக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவும், இலங்கை கிரிக்கெட் போர்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளனர். இலங்கையில் நடந்து வரும் முத்தரப்புத் தொடரில் முதல் போட்டியில் இந்தியா , நியூசிலாந்திடம் 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் நேற்று நடந்த 2வது போட்டியில் அது இலங்கைக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடியது. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் பிரமாதமாக பந்து வீசினர். இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது. இதனால் 46.1 ஓவர்களில் அனைத்து விக்க…
-
- 16 replies
- 1.8k views
-
-
மெல்போர்ன்: ஒருநாள் போட்டிகளில் புதிய விதிகளை அறிமுகம் செய்யவுள்ள, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (சி.ஏ.,) முடிவுக்கு, இந்திய வீரர் சச்சின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்கு பின், ஒருநாள் போட்டிகளுக்கு வரவேற்பு குறைந்து வருகிறது. இதனால் ஒருநாள் போட்டிகளை, தலா 25 ஓவர்கள் கொண்ட நான்கு இன்னிங்ஸ்களாக விளையாட வேண்டும் என, இந்திய வீரர் சச்சின் கடந்த 2009, செப்டம்பரில் தெரிவித்து இருந்தார். தற்போது இதனை உள்ளூர் தொடரில் நடைமுறைப்படுத்த, புதிய விதிகளுடன் சி.ஏ., களமிறங்கியுள்ளது. இதன்படி 50 ஓவர்களுக்குப் பதில் 45 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்படும் இந்த போட்டி, தலா 20, 25 ஓவர்கள் கொண்ட நான்கு இன்…
-
- 1 reply
- 753 views
-
-
உலக அரங்கில் கால்பந்துக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டது கிரிக்கெட் தான்.விரைவில் கால்பந்துக்கு நிகராக கிரிக்கெட்டுக்கு ரசிகர் பட்டாளம்விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியகாரணம்"டுவென்டி-20' போட்டிகள் தான். இது வளமான வளர்ச்சிஎன்றாலும், மறுபுறம் பாரம்பரியமிக்க டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளன. எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே இருக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பரிமாணம் கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பரிமாணங்கள் இல்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட்,ஒரு நாள் மற்றும்"டுவென்டி-20' என மூன்று பரிமாணங் கள் காணப்படுகிறது. இதில் ஒன்று எழுச்சி பெற்றால், மற…
-
- 28 replies
- 2.4k views
-
-
பயிற்சியாளர் பதவியிலிருந்து மாரடோனா அதிரடி நீக்கம் புதன்கிழமை, ஜூலை 28, 2010, 14:07[iST] பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து டியகோ மாரடோனா திடீரென நீக்கப்பட்டுள்ளார். பிரேசிலில் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கால்பந்துப் போட்டி வரை மாரடோனாவே பயிற்சியாளராக நீடிப்பார் என செய்தி வெளியான சில நாட்களுக்குள் அவரை தடாலடியாக தூக்கியுள்ளது அர்ஜென்டினா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வீரராக அர்ஜென்டினா அணிக்கு பெரும் பலமாக இருந்தவர் மாரடோனா. அந்த அணிக்கு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்தவர் அவர். ஆனால் பயிற்சியாளராக அவர் சோடை போகவில்லை. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்…
-
- 0 replies
- 555 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற பெருமையை முரளிதரன் பெற்றுள்ளார். இந்தியா இலங்கை இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 4 வது நாள் ஆட்ட நேர முடிவின் போது 798 விக்கெட்களுடன் இருந்த முரளிதரன் இன்று 5 வது ஆட்டத்தில் ஹர்பஜன், ஓஜா ஆகிய இருவரின் விக்கெட்களை எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் எடுத்து முரளிதரன் சாதனை படைத்துள்ளார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்களும், 2 வது இன்னிங்சில் 3 விக்கெட்களும் எடுத்து உள்ளார். தனது 133 வது டெஸ்டில் விளையாடும் முரளிதரன் காலே போட்டியுடன் டெஸ்டில் இருந்து விடைபெறுகிறார்.
-
- 29 replies
- 2.7k views
-
-
ரத்த கையெழுத்துடன் டெண்டுல்கர் சுயசரிதை புத்தகம்: விலை ரூ.35 லட்சம் லண்டன், ஜுலை. 21 (டிஎன்எஸ்) இந்தியாவின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கரின் ரத்தம் தோய்ந்த பக்கத்துடன் அவரது சுய சரிதை புத்தகம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவருகிறது. ரத்தம் தோய்ந்த பக்கத்துடன் மொத்தம் 10 பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட உள்ளன. ஒரு பிரதியின் விலை ரூ. 35 லட்சம். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர். டெஸ்ட் போட்டியில் அதிக ரன், அதிக சதம், ஒருநாள் போட்டியில் அதிக ரன், அதிக சதம் என்பது உள்பட பல்வேறு உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். 21 ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் கிரிக்கெட்டின் சகாப்தமாக திகழ்கிறார். தெண்டுல்கரை பாராட்டும் விதமாக, பல்வேறு…
-
- 0 replies
- 752 views
-
-
Jul 17, 2010 / பகுதி: விளையாட்டு / சேரா அடுத்த உலகக்கிண்ணத்தையும் ஸ்பெயின் கைப்பற்றும் பயிற்சியாளர் நம்பிக்கை உலகக்கிண்ணத்தை ஸ்பெயின் வென்றதற்கு வீரர்கள் மட்டு மல்ல அந்த அணியின் பயிற்சியாளர் விசன்டேடெல்பாஸ்கிக்கும் முக்கிய பங்குண்டு. விரர்களுக்கு அவர் கற்றுக் கொடுத்த நுணுக்கங்கள் எந்த நெருக்கடியிலும் மனதளவில் பாதிக்காமல் இருத்தல் போன்றவை நல்ல பலனை கொடுத்ததே கிண்ணத்தை வெல்வதற்கு காரணமாக இருந்தன. பாஸ்கி முன்னணி கால்பந்து கிளப்பான ரியல்மாட்ரிட் அணியில் 4முறை பயிற்சியாளராக இருந்தவர். அவர் திறமையை அறிந்தே ஸ்பெயின் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டார் கிண்ணத்தை வென்றது குறித்து பாஸ்கி கூறியதாவது. எனக்கு முன்பு ஸ்பெயின் பயிற்சியாளராக இருந்த லூயிஸ் அரசான்ஸ் அணிய…
-
- 0 replies
- 487 views
-