விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
பிரேசில் ஜாம்பவான் பீலேக்கு அறுவை சிகிச்சை பிரேசில் ஜாம்பவான் பீலே தனது பெருங்குடலில் இருந்து கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்துள்ளார். "கடந்த சனிக்கிழமையன்று வலது பெருங்குடலில் சந்தேகத்திற்கிடமான கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்தேன், என்று அவர் ஒரு சமூக ஊடக பதிவில்" குறிப்பிட்டார். அத்துடன் தான் உயிரிழந்து விட்டதாக வெளியான தகவல்களையும் மறுத்த அவர், நன்றாகவுள்ளதாகவும் உறுதிபடுத்தினார். பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் பீலே வழக்கமான பரிசோதனைகளின் போது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சாவோ பாலோவில் ஆறு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல உள்ளூர் ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன. 80 வயதான அவர் ஆகஸ்ட் 31 முதல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மரு…
-
- 3 replies
- 519 views
-
-
(நெவில் அன்தனி) அங்குரார்ப்பண லங்கா ப்றீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சம்பியனான ஜவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளர்கள், அதன் உரிமைத்துவத்திலிருந்து கனத்த இதயத்துடன் விலகிக்கொண்டுள்ளனர். 'இது ஒரு கவலை தரும் செய்தியாகும். எமது பணியை மீண்டும் செயல் உருவாக்குவதற்கு நாங்கள் எங்களால் ஆன அதிகபட்ச முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால், அது சாத்தியப்படவில்லை. சுருங்கச் சொல்லின் இப்படி ஒரு முடிவுக்கு வருவோம் என நாங்கள் நிச்சயமாக எண்ணவில்லை' என ஜவ்னா ஸ்டாலியன்ஸ் ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'யாழ்ப்பாணத்தை நேசிப்பதாலும் இலங்கையில் எமது பணி அர்த்தம் மிக்கதாக அமைய வேண்டும் என்பதாலும் எமது உரிமைத்…
-
- 1 reply
- 601 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS நியூசிலாந்து அரசு வழங்கிய பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக பாகிஸ்தானில் விளையாடும் திட்டத்தை ரத்து செய்துள்ளனர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள். பாகிஸ்தானில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவிருந்தன. ராவல்பிண்டியில் வெள்ளியன்று ஒரு நாள் போட்டி தொடர் தொடங்கவிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 10 நாட்கள் பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நியூசிலாந்து அணி தற்போது திட…
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
விராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தான் ஓய்வுபெறவுள்ளதாக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 17 முதல் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமானில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கோப்பை முடிந்த பின்னர், டி 20 களின் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக விராட் கோலி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ன டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் தொடர்ந்து தனது அணியை வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். அண…
-
- 3 replies
- 680 views
- 1 follower
-
-
மலிங்கவும் சர்வதேச கிரிக்கெட் பயணமும் ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த டி-20 பந்து வீச்சாளராக கருதப்படும் லசித் மலிங்க, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லசித் மலிங்க தனது யூடியூப் அலைவரிசை மூலமாக இந்த அறிவிப்பினை நேற்று அறிவித்தார். மலிங்கா இலங்கைக்காக 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி-20 போட்டிகளில் விளையாடி 546 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2004 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான மலிங்க, குறுகிய காலத்திலேயே இலங்கை அணியின் அனைத்து சர்வதேச சுற்றுப் பயணங்களிலும் இடம்பிடித்தார். புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மலிங்க, இலங்கை அணி…
-
- 0 replies
- 442 views
-
-
இலங்கை பாராலிம்பிக் வீரர் அனீக் அஹமட் காலமானார் யூ.எல். மப்றூக், இலங்கை BBCCopyright: BBC அனீக் அஹமட்Image caption: அனீக் அஹமட் புற்று நோய் காரணமாக தனது காலொன்றை இழந்த பின்னரும், விளையாட்டில் தேசிய ரீதியாக தங்கப் பதக்கங்களை வென்று சாதனைகள் படைத்த இலங்கை - கிழக்கு மாகாணம் காத்தான்குடியைச் சேர்ந்த அனீக் அஹமட் இன்று திங்கட்கிழமை காலமானார்.2019ஆம் ஆண்டு கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்ற தேசிய பராமெய் வல்லுனர்போட்டியில் கலந்து கொண்ட அனீக் அஹமட், அதில் 3 தங்க பதக்கங்களை வென்றிருந்தார். அவரின் அந்தச் சாதனை குறித்து அப்போது பிபிசி தமிழ் - கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது.உதைப்பந்து விளையாடும் போது - காலில் ஏற்பட்ட…
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
44 வருடகால பிரிட்டனின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தி எம்மா ரடுகானு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் சனிக்கிழமை நியோர்க்கில் ஆர்தர் ஆஷே அரங்கில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு மற்றும் கனேடிய வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 18 வயதான எம்மா ரடுகானு 6-4 6-3 என்ற கணக்கில் 19 வயது கனேடிய வீராங்கனையை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் எம்மா ரடுகானு பிரிட்டனின் மகளிரிக்கான ஒரு பெரிய கிண்ணத்தின் 44 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். …
-
- 3 replies
- 691 views
- 1 follower
-
-
அமெரிக்க ஓபன் ; பிரிட்டிஷ் இளம் வீராங்கனை எம்மா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரிட்டிஷ் இளம் வீராங்கனை எம்மா ரடுகானு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நியோர்க்கில் வியாழக்கிழமை நடைபெற்ற அமெரிக்க ஓபன் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் கீரிஸின் மரியா சக்காரியை எதிர்கொண்டார் எம்மா ரடுகானு. இந்த ஆட்டத்தில் எம்மா ரடுகானு, 6-1 6-4 என்ற கணக்கில் மரியா சக்காரியை தோற்கடித்து கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 44 ஆண்டுகளின் பின்னர் ஒரு பெரிய தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பிரிட்டிஸ் பெண் இவர் ஆவார். இதேவேளை அமெரிக்க ஓபன் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவின் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் …
-
- 2 replies
- 452 views
- 1 follower
-
-
மகேந்திர சிங் தோனி வருகை: விராட் கோலியுடன் அவர் இணைவதை இந்தியா கொண்டாடுவது ஏன்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஓராண்டுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியை டி20 உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் அழைத்திருக்கிறது இந்திய அணி. இந்த முறை அவரது ஹெலிகாப்டர் ஷாட்களை ரசிகர்கள் பார்க்க முடியாது. மின்னல் வேக ஸ்டம்பிங்குகளும் காணக் கிடைக்காது. ஆனால் மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் அவரது தலைமைப் பண்பை மட்டும் நிச்சயமாகப் பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இப்போது அவர் அணியில் இடம்பெறவில்லை, இந்திய டி-20 அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிர…
-
- 2 replies
- 605 views
- 1 follower
-
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட்: ஓவல் டெஸ்டில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வெற்றி 6 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி நான்காவது டெஸ்ட் போட்டியை வென்றிருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. பெருமை மிக்க ஓவல் மைதானத்தில் 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா பெற்றிருக்கும் முதல் டெஸ்ட்வெற்றி இது. 50 ஆண்டுக் காத்திருப்பு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. 1971-ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணிதான் கடைசியாக ஓவல் ம…
-
- 1 reply
- 456 views
- 1 follower
-
-
மழை காரணமாக 2 ஆவது ஒருநாள் போட்டி 47 ஓவர்களாக குறைப்பு! சுற்றுலா தென்னாபிரிக்கா அணி மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாக இருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் போட்டி பாதிக்கப்பட்டது. அதன்படி, போட்டியை 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த நடுவர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/n…
-
- 0 replies
- 577 views
-
-
ஜெங் தாவோ: நீச்சல் போட்டியில் 6 தங்கப் பதக்கம் - யார் இந்த ஜெங் தாவோ? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ஆண்கள் நீச்சல் போட்டியில் பங்கேற்ற பிறகு ஜெங் தாவோ. சீனாவை சேர்ந்த ஜெங் தாவோவுக்கு 30 வயது. ஒரு மின்சார ஷாக்கில் தமது இரண்டு கைகளையும் இழந்த இவர், டோக்யோ பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளினார். "என்னைப் பார் மகளே, கைகள் இல்லாவிட்டாலும் என்னால் வேகமாக நீந்த முடிகிறது!" என்று ஒரு போட்டிக்குப் பிறகு தமது மகளுக்கு அனுப்பிய ஒரு வீடியோ மெசேஜில் கூறினார் ஜெங். குழந்தையாக இருக்கும்போதே தமத…
-
- 0 replies
- 404 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலிபான் ஒப்புதல் அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் விளையாட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலிபான் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலின் மூலம் நவம்பரில் டாஸ்மேனியாவில் நடைபெறும் அவுஸ்திரேலிய அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மோதும். தலிபானின் இந்த ஒப்புதல் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் வழக்கம் போல் தொடரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹமீத் ஷின்வாரி AFP செய்திச் சேவையிடம், "அணியை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப தலிபான்களிடமிருந்து எங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது" என்று கூறியுள்ளார். 2001 இல் தலிபான்கள் அதிகாரத்திலிர…
-
- 0 replies
- 281 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராக தற்சமயம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மாறியுள்ளார். 2021 செப்டம்பர் முதலாம் திகதி போர்ச்சுகல், அல்கர்கேவ் மைதானத்தில் நடந்த போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டியின்போது அதிக கோல்கள் அடித்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக போர்ச்சுகல் அணித் தலைவர் ரொனால்டோ தனது 110 ஆவது மற்றும் 111 ஆவது கோல்களை அடித்தார். இதன் மூலம் ஆண்கள் சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்த வீரராக காணப்பட்ட ஈரானிய அலி டாய்யின் (109 கோல்) முறியடிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக சர்வதேச போட…
-
- 0 replies
- 244 views
-
-
ஐ.பி.எல். தொடரில் மேலும் இரு புதிய அணிக்கான விலை மனுக் கோரல் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) புதிய அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2000 கோடி இந்திய ரூபா அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) இரண்டு புதிய உரிமையாளர்களுக்கான ஏலங்களை அழைக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்ட பின்னர், பி.சி.சி.ஐ. அலுவலகப் பணியாளர் கிரிக்பஸ்ஸுடம் இருப்பு விலை 2000 கோடி ரூபா என்று உறுதி செய்தனர். தற்போது 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில் அணிகளின் எண்ணிக்கையை 2022 ஆம் ஆண்டில் இருந்து 10 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து புதிய இரு அணிகளுக்கான உரிமத்தை பெற விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்…
-
- 0 replies
- 487 views
-
-
பாராலிம்பிக்ஸில் இலங்கை வீரா் உலகசாதனை August 30, 2021 ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டியில் இலங்கை வீரரான தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளார். F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் தினேஷ் பிரியந்த ஹேரத் இந்தப் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளாா். இதன்மூலம் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2021/165226
-
- 5 replies
- 569 views
-
-
குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்காக ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை! போலந்து நாட்டைச் சேர்ந்த ஈட்டு எறிதல் வீராங்கனை தனது குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக தான் வென்ற ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட்டுள்ளார்.போலந்து நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா மக்டெலானா. இவர் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார்.இந்நிலையில் கடந்த வாரம் தனது முகநூல் பக்கத்தில் தனது 8 மாதக் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை விற்பனை செய்வதாக அறிவித்தார். இதன்மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு உடனடியாக அமெரிக்காவில் தனது குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருப்…
-
- 3 replies
- 705 views
-
-
சிஎன்என்) லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதாக ஸ்பானிஷ் கிளப் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. "கிளப் மற்றும் பிளேயர் ஒரு உடன்பாட்டை எட்டினாலும், இன்று ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர்களின் தெளிவான எண்ணம் இருந்தபோதிலும், நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் காரணமாக இது நடக்காது" என்று பார்சிலோனா தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 34 வயதான அவர், கடந்த மாதம் அர்ஜென்டினாவுடன் தனது முதல் கோபா அமெரிக்காவை வென்றார், 2020 கோடையில் அவர் "ஆண்டு முழுவதும்" வெளியேற விரும்புவதாக ஒப்புக்கொண்டார் மற்றும் அவரது ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்தை அவர் இலவசமாக செய்ய முடியும் என்று கூறினார், ஆனால் இறுதியில் பார்சிலோனா உடன்படாததால் மெஸ்ஸி தங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப…
-
- 14 replies
- 678 views
- 1 follower
-
-
எழிலனின் கனவு நனவானது .. தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினரும் தமது கணவருமான எழிலனின் கனவை தமது பிள்ளைகள் நனவாக்கியுள்ளதாக அனந்தி சசிதரன் நெகிச்சியுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 2007/2008 என்கணவரின் விருப்பத்திற்கு அமைய எங்கள் பிள்ளைகளிற்கு கிளிநொச்சியில் இருந்த தமிழீழ விளையாட்டு கழகத்தினரல் நடாத்தப்பட்ட கராத்தே பயிற்சியை வழங்கியிருந்தேன். போரிற்கு பிற்பட்ட காலத்தில் பல தடைகள் ஏற்பட்டது. ஆயினும் இன்று நல்விழி,எழில்விழி, கல்கி மூன்றுபேரும் கறுப்பு பட்டியை பெற்றுள்ளனர். எங்கள் பலநாள் விருப்பம் நிறைவேறியிருக்கு. நல்ல குருவாக ரேமன் சேர் அமைந்தது ஒரு வரப்பிரசாதம். மிக பொறுமையாகவும் கண்ணி…
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
இங்கிலாந்துடனான 2 ஆவது டெஸ்டில் இந்தியா 151 ஓட்டங்களால் அபார வெற்றி இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 151 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி ஈட்டியது. 272 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து வெறும் 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது. அத்துடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 12 வெற்றிப் புள்ளிகளை இந்தியா பெற்றுக்கொண்டது. மொஹம்மத் ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகிய இருவரும் 2 ஆவது இன்னிங்ஸில் வெளிப்படுத்திய சகலதுறை ஆற்றல்கள் இந்தியாவின் வெற…
-
- 1 reply
- 452 views
-
-
2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான அட்டவணை அறிவிப்பு 2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் ஒக்டோபர் 17 முதல் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி நவம்பர் 14 அன்று துபாயில் நடைபெறும். இதில் சூப்பர் 12 சுற்றின் குழு 2 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் துபாயில் ஒக்டோபர் 24 ஆம் திகதி அரங்கேறவுள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். இறுதியாக இவ்விரு அணிகளும் 2019 இல் ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் ஒன்றையொன்று எதிர்த்து ஆடியது. ஐ.சி.சி. செவ்வாய்க்கிழமை 2021 டி-20 உலகக் கிண்ணத்துக்கான அட்டவணையை அறிவித்ததால் போ…
-
- 0 replies
- 430 views
-
-
ஆண்டர்ஸனில் இருந்து ராகுல் வரை ஆர். அபிலாஷ் லார்ட்ஸில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் நான் மிகவும் ரசித்த ஒரு விசயம் ஆண்டர்ஸனின் பந்து வீச்சு. அதற்கு அடுத்து ராகுலின் ரசிக்கத்தக்க, ரொம்ப ஸ்டைலான மட்டையாட்டம். 1 ) ஆண்டர்ஸன் மிதவேக வீச்சாளர்களிடையே ஒரு உன்னதமான கலைஞன் என்று சொல்லலாம். அவரால் வழக்கமான seam up பந்து வீச்சில் ஈடுபட முடியும். குளிரும் மந்தமான வானிலையும் கொண்ட காலைப் பொழுதில், மாலை வேளையில் நான்காவது ஸ்டம்பில் போட்டு ஸ்விங் பண்ண முடியும். பகற்பொழுதில் ஐந்தாவது ஸ்டம்பில் பொறுமையாக வீசி ரன்களை கட்டுப்படுத்த முடியும். பேட்ஸ்மேனை வைடாக செல்லும் பந்தை துரத்த வைத்து அவுட் ஆக்க முடியும். உள்ளே வெளியே…
-
- 0 replies
- 462 views
-
-
ஒலிம்பிக் போட்டி... இந்தியாவுக்குச் சிறப்பாக அமைந்தது – வெங்கைய நாயுடு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாக அமைந்ததாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். மாநிலங்களைவையில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அதிகமானனோர் பதக்கங்கள் பெற்றதால் மட்டுமல்ல, அதிகமானோர் பதக்கச் சுற்றுக்குச் சென்றாலும் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாக அமைத்துள்ளதாக தெரிவித்தார். ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் பெற்றது நம்மாலும் கூட முடியும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1233316
-
- 2 replies
- 356 views
-
-
நிறைவுக்கு வந்த டோக்கியோ ஒலிம்பிக் : வெறுங்கையுடன் நாடு திரும்பும் இலங்கை - ஒருபார்வை ! டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் ஜப்பானின் மிகப்பெரிய நகரமும் மின்சார நகரம் என்றும் வர்ணிக்கப்படும் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை நடைபெற்றுவந்த 32ஆவது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி விழா இன்று பிரம்மாண்ட நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்தது. 206 நாடுகளை சேர்ந்த ஒலிம்பிக் அணிகள், 11,326 வீரர்கள், 33 விளையாட்டில் 339 போட்டிப்பிரிவுகளில் , 16 நாட்கள் இந்த ஒலிம்பிக் நடந்து முடிந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் நேற்று இரவு ஜப்பான் ரேப்பட்டி 8 மணியளவில் ஆரம்பமானது. வெற்று மைத…
-
- 5 replies
- 793 views
-
-
பார்சிலோனாவின் பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் கண்ணீருடன் மெஸ்ஸி ஞாயிற்றுக்கிழமை காலை தனது பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதி செய்தபோது லியோனல் மெஸ்ஸி கண்ணீர் விட்டார். பார்சிலோனாவை விட்டு வெளியேறுவது தனது வாழ்க்கையில் கடினமான தருணம் என்று 34 வயதான மெஸ்ஸி விவரித்தார். லியோனல் மெஸ்ஸி தனது செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கியபோது கண்ணீரை எதிர்த்துப் போராடினார், அதில் அவர் தனது முழு வாழ்க்கையையும் விளையாடிய கால்பந்து கிளப்பான பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தினார். அவர் ஒரு தொடக்க அறிக்கையை கூறுவதற்கு முன்பு அவர் உணர்ச்சிவசப்பட்டார். "இந்த சமீபத்திய நாட்களில், நான் என்ன…
-
- 0 replies
- 273 views
-