விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு சிறைத்தண்டனை (எம்.எம்.எஸ்.) வரி ஏய்ப்பு காரணமாக 20 பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்படி, முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் கடனாக வாங்கிய போரிஸ் பெக்கர் அதை திருப்பிச் செலுத்தாது 2017 ஆம் ஆண்டில் தன்னை திவாலானவராக அறிவித்தார். தற்போது 54 வயதாகும் முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கர், 6 தடவைகள் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவராவார். தற்போது லண்டனில் வசித்து வரும் போரிஸ் பெக்கர் கடந்த 2002 ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியிருந்தார். இதன்போது இவருக்கு விதித்த 2 ஆண்டுகால …
-
- 7 replies
- 1.2k views
-
-
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கார்ல்சனுக்கு திருப்பிக் கொடுத்த விஸ்வநாதன் ஆனந்த்! சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான நார்வே வீரர் மாக்னெஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். சவுதியின் ரியாத் நகரில் உலக ரேபிட் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் 9-வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்ஸெனை எதிர்கொண்டார். வெறும் 34 நகர்வுகளில் கார்ல்சனை வீழ்த்தினார். பின்னர் டை பிரேக் (tie-break) முறையில் ரஷ்ய வீரர் விளாடிமிர் ஃபெடோசெவை தோற்கடித்தார். இறுதியில் ஆறு வெற்றிகள், 9 சமன்கள் (draw) என வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம்…
-
- 0 replies
- 372 views
-
-
குத்துச்சண்டை வீரர் முகமது அலி ? துவிச்சக்கர வீரர் நீல் ஆம்ஸ்ராங் ? கூடைப்பந்தாட்ட வீரர் மைக்கல் ஜோர்டன் ? இல்லை 38 வயதான கேலி ஸ்லேட்டர் ??
-
- 2 replies
- 1.2k views
-
-
கேன் வில்லியம்சனின் சதம் வீண்- 4 ரன்னில் இங்கிலாந்து த்ரில் வெற்றி இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சன் கடைசி வரை நின்றும், நியூசிலாந்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. #NZvENG நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மோர்கன் (48), பென் ஸ்டோக்ஸ் (39), பட்லர் (29), மொயீன் அலி (23) ஆகியோரின் ஆட்டத்தால் 50 ஓவரில் 234 ரன்கள் எடு…
-
- 0 replies
- 286 views
-
-
இந்திய அணிக்கெதிராக களமிறங்கவுள்ள இங்கிலாந்து அணி அறிவிப்பு இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றுள்ளார். அணித் தலைவர் அலிஸ்டர் குக்குடன் இணைந்து அலெக்ஸ் ஹேல்ஸ் ஆரம்ப ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ் இதுவரை 32 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளபோதும் ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இப்போதுதான் பெற்றுள்ளார். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவட் பிரோட் முழங்கால் ஏற்பட்டுள்ள உபாதையால் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் அணியில் இடம் பெற்றுள்ளார…
-
- 0 replies
- 342 views
-
-
லாலம்பூர்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக கோலாலம்பூரில் இன்று நடந்து வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்தார். இது அவருக்கு 40வது ஒரு நாள் சதமாகும். இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியை அபாரமாக தோற்கடித்தது. இன்று இந்தியாவுக்கும்,மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டிராவிடும், சச்சின் டெண்டுல்கரும் களம் இறங்கினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சின் களம் இறங்கியதால் ர…
-
- 5 replies
- 2.1k views
-
-
முதல் முறை காதிலிருந்து ரத்தம்; 2ஆம் முறை கை ஒடிந்தது: மிட்செல் ஜான்சனின் ஆக்ரோஷம் ஆஷஸ் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்கிய போது ‘அவர் கையை உடை’ என்றார் மைக்கேல் கிளார்க். ஜான்சன் அதனை ஆண்டர்சனுக்குச் செய்தாரோ இல்லையோ தென் ஆப்பிரிக்காவின் மெக்லாரனுக்குச் செய்து விட்டார். செவ்வாயன்று ஆஸ்திரேலியாவிடம் தென் ஆப்பிரிக்க தோல்வி அடைந்த போட்டியின் போது மிட்செல் ஜான்சன் பவுன்சரில் முன்கையில் அடிபட்டு நூலிழை எலும்பு முறிவினால் மெக்லாரன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சன் பவுன்சர் ஒன்றை வீச அதை எதிர்கொள்ள முடியாது தடுமாறிய மெக்லாரனின் ஹெல்மெட்ட…
-
- 0 replies
- 427 views
-
-
‘பேரழிவுக்குத்தான் 2 புதிய பந்து’: சச்சின் காட்டம்; வக்கார் யூனிசும் ஆதரவு சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம் ஒருநாள் போட்டியை பேரழிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்தான் 2 புதிய பந்துகளை பயன்படுத்துகிறார்கள் என்று கிரிக்கெட் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சச்சின் டெண்டுல்கர் கடுமையாகச் சாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளில் இரு புதிய பந்துகள் இரு அணி பேட்டிங்கின்போதும் பயன்படுத்தலாம் என்ற விதிமுறை கொண்டு வந்தது. கிரிக்கெட்டை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாகவும் அமைய வேண்டும் என்பதற்காக ஐசிசி இந்த விதிமுறையைத் திருத்தி அமைத்தது. …
-
- 1 reply
- 648 views
-
-
கௌஷாலை ஆரம்ப வீரர் ஸ்தானத்தில் அவதானிக்கவுள்ளோம்: தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் திலக்கரட்ன டில்ஷானுடன் ஆரம்ப வீரராக யாரை நிலையாக நியமிப்பது என்பதில் தெரிவாளர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் திலக்கரட்ன டில்ஷான் மாத்திரமே ஆரம்ப வீரராக தனது அனுபவத்தைக் கொண்டு திறமையை வெளிப்படுத்தியிருந்தார். உப்புல் தரங்க, குசல் ஜனித் பெரேரா ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியிருந்தனர். இந்நிலையில் இலங்கை வருகை தந்துள்ள இங்கிலாந்து அணிக்க…
-
- 0 replies
- 462 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 385 views
-
-
தோனியின் மனதில் உள்ளதை அறிய முடியாது: கோலிக்கு கபில் அறிவுரை வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் தலைமையேற்று வழி நடத்தும் விராட் கோலி, தோனியிடமிருந்து கேப்டன்சி பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். மைதானத்தில் உணர்ச்சிகளை வெளிப்படையாக காண்பிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் கோலி இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும் என்கிறார் கபில் தேவ். "கோலி கிரிக்கெட் மைதானத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகிறார், அவரது உணர்ச்சிகள் வெளிப்படையாகத் திரையில் தெரிகிறது. மாறாக தோனியின் மனதில் என்ன உள்ளது என்பது ஒருவருக்கும் தெரியாது. உணர்ச்சிகளை வெளிப்படையாக தோனி காண்பிக்க மாட்டார். முதிர்ச்சி என்பது கிரிக்கெட்டில் மிக மிக முக்கியமான விஷயம். தோனி நிறைய …
-
- 0 replies
- 445 views
-
-
கிரிக்கெட்டில் இப்படியும் சாதனை படைத்த மதுரை மருத்துவ மாணவர்! மதுரை: மருத்துவக்கல்லூரி மாணவர் கிரிக்கெட் மட்டையால் தொடர்ந்து 6 மணிநேரம் 14 நிமிடம் கீழே விழாமல் பந்தை தட்டி புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கவுதமநாராயணன். இவர், மதுரை மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கிரிக்கெட் வீரரான இவருக்கு, வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக இவரது மனதில் இருந்துள்ளது. இதை தொடர்ந்து, பந்து கீழே விழாமல் மட்டையால் தொடர்ந்து தட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அதை நண்பர்கள், உறவினர்கள், கல்லூரி நண்பர்கள், விளையாட்டு பயிற்ச்சியாளர் என எல்லோர் முன்பும் செய்து காட்டினார். இதனால் கவுதமநாராயணனை எல…
-
- 0 replies
- 593 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் (2 பில்லியனுக்கும் அதிக தொகை) நிதியுதவியை ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு மீள வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமையகம் அமைந்துள்ள துபாயில் இன்று இடம்பெற்ற சிறப்பு சந்திப்பின்போதே, இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்ததாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அற…
-
- 0 replies
- 705 views
-
-
ஆஷஸ் முடிந்ததும் மைக்கேல் கிளார்க் ஓய்வு! ஆஷஸ் தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி மோசமாக தோல்வியை சந்தித்து வருகிறது. மேலும் கிளார்க்கின் மோசமான பார்மும் அவருக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்களையும், மீடியாக்களையும் திருப்பி விட்டுள்ளது. கடைசியாக அவர் விளையாடிய 28 இன்னிங்சுகளில் 668 ரன்களைத்தான் எடுத்துள்ளார். இதில் 2 முறை சதமடித்துள்ளார். சராசரி 28.67 ஆகும். இந்த 28 இன்னிங்ஸ்களில் கிளார்க் 23 முறை, 30 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரானத் தொடரில்தான் கிளார்க் அறிமுகம் ஆனார். கிளார்க் அறிமுகமான இந…
-
- 1 reply
- 294 views
-
-
தப்பாக டெலிவரி செய்த ஹோட்டல் ஊழியர்.. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு வியூகம் பேஸ்புக்கில் லீக்கானது செஞ்சூரியன்: நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எந்த மாதிரியான பந்துகளை வீச வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க பவுலர் டேல் ஸ்டெயினுக்கு அனுப்பப்பட்ட ஐடியாக்கள் அடங்கிய டிப்ஸ், வேறு ஒருவரின் கையில் சிக்கி தற்போது அம்பலமாகியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியரினில் நடக்கிறது. இதையடுத்து, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை சமாளிக்க தென் ஆப்பிரிக்க முன்னணி பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு வியூகம் அமைத்து கொடுத்தார் கோச். இதற்காக ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் எந்த இடத்தில் பந்து வீச வேண்டும், அவ…
-
- 1 reply
- 245 views
-
-
மே.இ.தீவுகளை துவம்சம் செய்த வங்கப்புயல் ! மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் அசத்தலாக வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள், மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு டவுன்டனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்தது. 322 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்…
-
- 0 replies
- 714 views
-
-
ஓய்வுபெற்றார் றிச்சி மக்கோ நியூசிலாந்து றக்பி அணியின் தலைவர் றிச்சி மக்கோ, றக்பி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். வெலிங்டனில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, இந்த அறிவிப்பை அவர் விடுத்தார். 34 வயதான றிச்சி மக்கோ, றக்பி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் ஓய்வுபெற விரும்புவதான கருத்தை, அவர் வெளியிட்டிருந்தார். அத்தோடு, 2016ஆம் ஆண்டின் சுப்பர் றக்பி தொடருக்கான கிறசடேர்ஸ் அணியிலும் அவர் இடம்பெற்றிருக்கவில்லை. இந்நிலையிலேயே, தனது ஓய்வை அவர் உறுதிப்படுத்தினார். உலக றக்பி வரலாற்றில், அதிக சர்வதேசப் போட்டிகளில் பங்குப…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை எப்படி இருக்குது?... இந்தியா வந்த ரஃபேல் நடால் கேட்ட முதல் கேள்வி இது சர்வதேச டென்னிஸ் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க இந்தியா வந்த ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால், பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு ஒருநாள் கவுரவ விளையாட்டு ஆசிரியராக பணிபுரிந்தார். அதற்காக டெல்லியில் உள்ள அந்த பத்திரிகை அலுவலகத்துக்கு சென்ற ரஃபேல் நடால், முதலில் எழுப்பிய கேள்வி ''சென்னையில் இப்போது நிலைமை எப்படியிருக்கிறது என்பதுதான்? '' என்று அந்த பத்திரிகை கூறியுள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை நடால் கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில்,'' சென்னை வெள்ளம் குறித்தும் மக்கள் அடைந்த துயரம் குறித்தும் கேள்விபட்டேன். எனக்கு இது மிகவும் வருத்தத்தை அளித்தது. நாம் வி…
-
- 0 replies
- 801 views
-
-
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது. டி20 தொடரை 2-1 எனவும், ஒருநாள் தொடரை 2-0 எனவும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்திய ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையும் 1-0 என வென்று அசத்தியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 699, ஜிம்பாப்வே 586 ஓட்டங்கள் என குவிக்க ஆட்டம் சமன் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னின்ஸில் 157 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போதும், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கானின் அபார பந்…
-
- 1 reply
- 512 views
- 1 follower
-
-
இலங்கையணி கடந்த சில நாட்களாக நியுசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவருவது அறிந்ததே. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கள் ஆகியவற்றில் விளையாடும் இலங்கையணி எதிர்பார்க்கப்பட்டதுபோலவே டெஸ்ட் போட்டிகளில் அவமானகரமான தோல்விகளைச் சந்தித்து இருந்தது குறிப்பிடத் தக்கது. அணியின் தலைவர் ஆஞ்சலோ மத்தியூஸ், சண்டிமால், ஆரம்பத் துடுப்பாட்டக் காரர் கருணாரட்ண ஆகியோரைத் தவிர சிறிது கூட அனுபவம் இல்லாத துடுப்பட்டக்ல் காரர்களையும், வழமைபோல சொதப்பும் பந்துவீச்சாளர்களையும் அள்ளிக் கட்டிக் கொண்டு இலங்கையணி நியுசிலாந்துக்குப் புறப்படும்போதே சர்வதேச கிரிக்கெட் வர்ணணையாளர்கள், இவர்களுக்கு ஏன் இந்த வேலை, பேசாமல் வீட்டில் இருக்கலமே என்று கேட்காத குறையாக விமர்சித்திருந்…
-
- 5 replies
- 795 views
-
-
நாளை ஆரம்பிக்கிறது தென்னாபிரிக்கா-இங்கிலாந்து ஒ.நா.ச.போ தொடர் தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரை, 2க்கு 1 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்த நிலையில், ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர், இலங்கை நேரப்படி மாலை ஐந்து மணிக்கு நாளை ஆரம்பிக்கவுள்ளது. டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில் தடுமாறியிருந்த தென்னாபிரிக்க அணி, இறுதிக் கட்டத்தில் சிறப்பாக விளையாடியிருந்தது மட்டுமல்லாமால், தாம் இறுதியாக பங்கேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியாவை வென்றும் இருந்தது. எனவே அவ்வணி இத்தொடரை மறுபுறம் வெல்லக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. மறுபுறத்தில், ஒருநாள் சர்வதேசப் …
-
- 0 replies
- 379 views
-
-
டென்னிஸ் ஊழலில் 16 வீர வீரராங்கனைகள் சிக்கியுள்ளனர் February 25, 2016 கடந்த 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற டென்னிஸ் போட்டிகளில் 246 போட்டிகளில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக டென்னிஸ் நேர்மை அலகின் தலைவர் நைஜல் வெல்லேர்டன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவற்றுள் மூன்று கிறான்ஸிலாம் போட்டிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,’ வருடம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். கடந்த வருடத்தில் ஊழல் தொடர்பான 246 எச்சரிக்கைகள் எமக்கு கிடைக்கப் பெற்றது. இந்த எண்ணிக்கையானது வருடம் ஒன்றுக்கு நடைபெறும் டென்னிஸ் போட்டிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த எண்ணிக்கை. இது மிகப் பெரு…
-
- 1 reply
- 493 views
-
-
இங்கிலாந்து ஏன் இவ்வளவு சொதப்புகிறது? - சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 1) ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என அத்தனை அணியையும் பஞ்சராக்கிவிட்டு சாம்பியனாக கம்பீரமாக திரும்பி இருக்கிறது இந்திய அணி. முதல் முறையாக இந்தியா, உலகக் கோப்பை டி20 போட்டியை நடத்தும் வாய்ப்பு பெற்றுள்ளது. உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்று இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் கிரிக்கெட் ஜூரம் பரவி வருகிறது. இதுவரை நடந்த ஐந்து உலகக் கோப்பையில், ஐந்து முறையும் வெவ்வேறு அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. உலககோப்பையை நடத்திய நாடு சாம்பியன் ஆனது கிடையாது. இதுபோன்ற வரலாற்று புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை எது தெரியுமா? உலகக் கோப்பையை எந்த அணி வெ…
-
- 0 replies
- 396 views
-
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள் Published By: VISHNU 16 JUN, 2025 | 06:28 PM (நெவில் அன்தனி) சர்வதேச மகளிர் கிரிக்கட் அரங்கில் உயரிதும் உன்னதம் வாய்ந்ததுமான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13ஆவது அத்தியாயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெங்களூருவில் செப்டெம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியுடன் தொடங்கவுள்ளது. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றுவதன் காரணமாக இந்த வருட ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவிலும் இலங்கையிலும் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது. எனினும் இந்தப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற தனி உரிமம் இந்தியாவுக்கே இரு…
-
-
- 34 replies
- 1.4k views
- 1 follower
-
-
மாடல் அழகியை துரத்தும் ஹர்திக் பாண்ட்யா இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார் இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யா. பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டத்தில் இறுதி ஓவரை பாண்ட்யா அற்புதமாக வீசினார். இதனால் இந்தியா ஒரு ஓட்டத்தால் ‘திரில்’ வெற்றி பெற்றது. நாங்கள் வகுத்த திட்டத்தை ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுத்தி இறுதி பந்தை வீசினார் டோனியும் பாண்ட்யாவை பாராட்டினார். அந்த நெருக்கடியான நேரத்திலும் சிரித்த முகத்தோடு எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர் சிறப்பாக பந்துவீசியதை அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் கிரிக்கெட் மூலம் பிரபலமாகத் தொடங்கிவிட்டதால், பாண்ட்யா கொ…
-
- 0 replies
- 711 views
-