Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சென்னை எப்படி இருக்குது?... இந்தியா வந்த ரஃபேல் நடால் கேட்ட முதல் கேள்வி இது சர்வதேச டென்னிஸ் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க இந்தியா வந்த ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால், பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு ஒருநாள் கவுரவ விளையாட்டு ஆசிரியராக பணிபுரிந்தார். அதற்காக டெல்லியில் உள்ள அந்த பத்திரிகை அலுவலகத்துக்கு சென்ற ரஃபேல் நடால், முதலில் எழுப்பிய கேள்வி ''சென்னையில் இப்போது நிலைமை எப்படியிருக்கிறது என்பதுதான்? '' என்று அந்த பத்திரிகை கூறியுள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை நடால் கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில்,'' சென்னை வெள்ளம் குறித்தும் மக்கள் அடைந்த துயரம் குறித்தும் கேள்விபட்டேன். எனக்கு இது மிகவும் வருத்தத்தை அளித்தது. நாம் வி…

  2. ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது. டி20 தொடரை 2-1 எனவும், ஒருநாள் தொடரை 2-0 எனவும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்திய ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையும் 1-0 என வென்று அசத்தியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 699, ஜிம்பாப்வே 586 ஓட்டங்கள் என குவிக்க ஆட்டம் சமன் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னின்ஸில் 157 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போதும், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கானின் அபார பந்…

  3. இலங்கையணி கடந்த சில நாட்களாக நியுசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவருவது அறிந்ததே. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கள் ஆகியவற்றில் விளையாடும் இலங்கையணி எதிர்பார்க்கப்பட்டதுபோலவே டெஸ்ட் போட்டிகளில் அவமானகரமான தோல்விகளைச் சந்தித்து இருந்தது குறிப்பிடத் தக்கது. அணியின் தலைவர் ஆஞ்சலோ மத்தியூஸ், சண்டிமால், ஆரம்பத் துடுப்பாட்டக் காரர் கருணாரட்ண ஆகியோரைத் தவிர சிறிது கூட அனுபவம் இல்லாத துடுப்பட்டக்ல் காரர்களையும், வழமைபோல சொதப்பும் பந்துவீச்சாளர்களையும் அள்ளிக் கட்டிக் கொண்டு இலங்கையணி நியுசிலாந்துக்குப் புறப்படும்போதே சர்வதேச கிரிக்கெட் வர்ணணையாளர்கள், இவர்களுக்கு ஏன் இந்த வேலை, பேசாமல் வீட்டில் இருக்கலமே என்று கேட்காத குறையாக விமர்சித்திருந்…

    • 5 replies
    • 791 views
  4. நாளை ஆரம்பிக்கிறது தென்னாபிரிக்கா-இங்கிலாந்து ஒ.நா.ச.போ தொடர் தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரை, 2க்கு 1 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்த நிலையில், ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர், இலங்கை நேரப்படி மாலை ஐந்து மணிக்கு நாளை ஆரம்பிக்கவுள்ளது. டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில் தடுமாறியிருந்த தென்னாபிரிக்க அணி, இறுதிக் கட்டத்தில் சிறப்பாக விளையாடியிருந்தது மட்டுமல்லாமால், தாம் இறுதியாக பங்கேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியாவை வென்றும் இருந்தது. எனவே அவ்வணி இத்தொடரை மறுபுறம் வெல்லக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. மறுபுறத்தில், ஒருநாள் சர்வதேசப் …

  5. டென்னிஸ் ஊழலில் 16 வீர வீரராங்கனைகள் சிக்கியுள்ளனர் February 25, 2016 கடந்த 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற டென்னிஸ் போட்டிகளில் 246 போட்டிகளில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக டென்னிஸ் நேர்மை அலகின் தலைவர் நைஜல் வெல்லேர்டன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவற்றுள் மூன்று கிறான்ஸிலாம் போட்டிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,’ வருடம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். கடந்த வருடத்தில் ஊழல் தொடர்பான 246 எச்சரிக்கைகள் எமக்கு கிடைக்கப் பெற்றது. இந்த எண்ணிக்கையானது வருடம் ஒன்றுக்கு நடைபெறும் டென்னிஸ் போட்டிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த எண்ணிக்கை. இது மிகப் பெரு…

  6. இங்கிலாந்து ஏன் இவ்வளவு சொதப்புகிறது? - சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 1) ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என அத்தனை அணியையும் பஞ்சராக்கிவிட்டு சாம்பியனாக கம்பீரமாக திரும்பி இருக்கிறது இந்திய அணி. முதல் முறையாக இந்தியா, உலகக் கோப்பை டி20 போட்டியை நடத்தும் வாய்ப்பு பெற்றுள்ளது. உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்று இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் கிரிக்கெட் ஜூரம் பரவி வருகிறது. இதுவரை நடந்த ஐந்து உலகக் கோப்பையில், ஐந்து முறையும் வெவ்வேறு அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. உலககோப்பையை நடத்திய நாடு சாம்பியன் ஆனது கிடையாது. இதுபோன்ற வரலாற்று புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை எது தெரியுமா? உலகக் கோப்பையை எந்த அணி வெ…

  7. ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள் Published By: VISHNU 16 JUN, 2025 | 06:28 PM (நெவில் அன்தனி) சர்வதேச மகளிர் கிரிக்கட் அரங்கில் உயரிதும் உன்னதம் வாய்ந்ததுமான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13ஆவது அத்தியாயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெங்களூருவில் செப்டெம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியுடன் தொடங்கவுள்ளது. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றுவதன் காரணமாக இந்த வருட ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவிலும் இலங்கையிலும் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது. எனினும் இந்தப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற தனி உரிமம் இந்தியாவுக்கே இரு…

  8. மாடல் அழகியை துரத்தும் ஹர்திக் பாண்ட்யா இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார் இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யா. பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டத்தில் இறுதி ஓவரை பாண்ட்யா அற்புதமாக வீசினார். இதனால் இந்தியா ஒரு ஓட்டத்தால் ‘திரில்’ வெற்றி பெற்றது. நாங்கள் வகுத்த திட்டத்தை ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுத்தி இறுதி பந்தை வீசினார் டோனியும் பாண்ட்யாவை பாராட்டினார். அந்த நெருக்கடியான நேரத்திலும் சிரித்த முகத்தோடு எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர் சிறப்பாக பந்துவீசியதை அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் கிரிக்கெட் மூலம் பிரபலமாகத் தொடங்கிவிட்டதால், பாண்ட்யா கொ…

  9.  'இரகசிய அறிக்கை கசிந்தது எவ்வாறு?' பாகிஸ்தான் அணியின் அண்மைக்காலப் பெறுபேறுகள் தொடர்பாகவும் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும், அவ்வணியின் பயிற்றுநர் வக்கார் யுனிஸால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பப்பட்ட இரகசியமானதும் தனிப்பட்டதுமான அறிக்கை, ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது என, வக்கார் யுனிஸ் கேள்வியெழுப்பியுள்ளார். குறித்த அறிக்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரிடமும் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அது எவ்வாறு ஊடகங்களுக்குச் சென்றது எனவும் இது குறித்து பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷரீப், கவனமெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை விட அதிகமாக அரசியல…

  10. இலங்கை இராணுவ தடகள வீரர் அருன்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் தேசிய சாதனை 19 AUG, 2025 | 06:16 PM தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் திங்கட்கிழமை 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் செவ்வாய்க்கிழமை (19) கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீட்டர் மற்றும் 18 சென்டிமீட்டர் உயரம் தாண்டி புதிய இலங்கை சாதனையைப் படைத்தார். இந்த வெற்றியின் மூலம் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கை இராணுவ சாதனை மற்றும் இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் சாதனை இரண்டையும் புவிதரன் தக்கவைத்துக்கொண்டார். https://www.virakesari.lk/article/222900

  11. கைவிடப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடாத்த வாய்ப்பு.! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்ட ஆசிய கிண்ணம்-2020 கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடாத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண போட்டிகள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்த நிலையில் அதனை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்துள்ளது. ஆசிய கிண்ணம்-2020 கிரிக்கெட் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் அனுமதி பெற்றிருந்த நிலையில் இந்திய-பாகிஸ்தான் இடையேயான விரிசல் நிலை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் உலகளாவிய…

  12. ஒரே வீரருக்கு மூன்றுமுறை தவறான ஆட்டமிழப்பை வழங்கிய தர்மசேன இங்­கி­லாந்து மற்றும் பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்­கி­டை­யி­லான முத­லா­வது டெஸ்ட் போட்­டியில், கள நடு­வ­ராக செயற்­பட்ட குமார் தர்­ம­சேன ஒரே வீர­ருக்கு மூன்று முறை தவ­றான ஆட்­ட­மி­ழப்பை வழங்­கி­யமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதுவும் ஒரே பந்­து­வீச்­சாளர் வீசிய பந்­து­களில் ஒரே வீர­ருக்கு மேற்­படி மூன்­று­முறை தவ­றான ஆட்­ட­மி­ழப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்தப் போட்டியில் முதல் இன்­னிங்ஸில் இங்­கி­லாந்து அணி துடுப்­பெ­டுத்­தாடிக் கொண்­டி­ருந்த வேளையில் 26 ஆவது ஓவரை வீசிய சகிப் அல் ஹசனின் பந்­து­வீச்சை இங்­கி­லாந்தின் மொயின் அலி எதிர்­கொண்டார். இதன்­போது விக்­கெட்டை மறைத்…

  13. தோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது ஏன்? சட்ட அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய சாக்‌ஷி! மத்திய அரசின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவதற்கும், ரேஷன் கடைகளில் பொருள்கள் பெறுவதற்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வரப்படுகிறது. வங்கிக் கணக்கு தொடங்குதல், புதிதாக பான் அட்டை பெற, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய எனப் பல்வேறு பணிகளுக்கு ஆதார் எண் தேவைப்படுகிறது. இந்நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், தன்னுடைய ட்விட்டர் தளத்தில் தோனி ஆத…

  14. கெப்ளர் முதல் மோர்கன் வரை... இரு நாடுகளுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்! வாய்ப்புக்காக, திறமையை வெளிப்படுத்துவதற்கான இடம் கிடைக்காத காரணத்துக்காக, பணத்துக்காக, சந்தர்ப்பசூழல்களுக்காக... என, இரு வேறு நாடுகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படி விளையாடிய, விளையாடிக்கொண்டிருக்கும் பத்து கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது. ஜான் ட்ரைகோஸ் (John Traicos) விளையாடிய நாடுகள் : தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே. 1970-களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுகமான ஆஃப் ஸ்பின் பெளலர் ஜான் ட்ரைகோஸ். தென் ஆப்பிரிக்காவில் நிலவிய உள்நாட்டுப் பிரச்னையால் கிரிக்கெட் …

  15. இந்தியா - மே.தீவுகள்: 5ஆவது போட்டி இன்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி, இன்று இடம்பெறவுள்ளது. கிங்ஸ்டனில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு ஆரம்பிக்கவுள்ளது. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும், இந்திய அணி வெற்றிபெற்றது. ஆனால், 4ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற வெற்றி, இந்தத் தொடருக்கு உயிர்ப்பை வழங்கியுள்ளது. எனவே, இன்று இடம்பெறும் போட்டியில் வென்றால் மாத்திரமே, தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நில…

  16. தரப்பட்டுத்தல் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் ஜெர்மனி உலக காற்பந்தாட்ட சம்மேளனம் FIFA நேற்று வெளியிட்ட , தரப்படுத்தல் பட்டியலில் , ஜெர்மனி முதலிடத்தைப் பிடித்துள்ளது . செக் குடியரசுக்கு எதிராகவும் , நோர்வேக்கு எதிராகவும் , இந்த மாதம் விளையாடி வென்ற காரணத்தால் , அதற்கு முன்னணி வகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது . லயனல் மெஸ்ஸியின் ஆர்ஜெண்டீனா , நான்காம் இடத்துக்கு இறங்கி உள்ளது. ரொனால்டோவின் போர்த்துக்கல் அணி , மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. பிரித்தானியாவின் சிறந்த அணியாகி உள்ள வேல்ஸ் ,இங்கிலாந்தை 15ம் இடத்துக்கு தள்ளி விட்டு , 13ம் இடத்துக்கு தாவி இருக்கின்றது. முதல் பத்து இடத்திலுள்ள அணிகளின் பட்டியல் இதோ : ஜேர்மனி , ப…

  17. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகத் தர வரிசையில் இடம்பெறும் தகுதியை ஆப்கானிஸ்தான் அணி புதிதாகப் பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு சில ஆண்டுகள் முன்பே வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி - சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையான ஐசிசியின் தர வரிசையில் 12ஆவது இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பதினோராவது இடத்தில் அயர்லாந்து அணியும், அதற்கு முன்னால் டெஸ்ட் பந்தயங்களில் விளையாடும் தகுதி கொண்ட பத்து நாடுகளும் இந்த தர வரிசையில் இடம்பெற்றுள்ளன. வங்கதேசத்துக்கு எதிராக பெற்ற வெற்றிதான் டெஸ்ட் விளையாடும் நாடொன்றுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெறுகின்ற முதல் ஒரு நாள் வெற்றி ஆகும். ஒன்றாம் தேதியன்று ஃபதுல்லா நகரில் நடந்த ஆட்ட…

  18. ICC மே மாதத்திற்கான சிறந்த வீரராக-மெத்தியூஸ்-தெரிவு! வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மே மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை அறிவித்துள்ளது. அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் ஏஞ்சலோ மெத்தியூஸின் துடுப்பாட்டம் இந்தப் பெயரிடலுக்குக் காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …

    • 1 reply
    • 410 views
  19. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குறித்து ருசிகர விவாதம் மத்தியபிரதேசத்தில் உள்ள புலிகள் சரணாலயத்திற்கு சென்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர்பான புகைப்படங்களை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அஸ்வின் வெளியிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், சக வீரர் விஜய் சங்கருடன் மத்தியபிரதேசத்தில் உள்ள புலிகள் சரணாலயத்திற்கு சென்றார். அங்கு பாதுகாப்பு வாகனத்தில் பயணித்து புலிகளை பார்த்து ரசித்தனர். அது தொடர்பான புகைப்படங்களை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அஸ்வின் வெளியிட்…

  20. மிலன் – ஜுவென்டஸ் போட்டி சமநிலை இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ள இன்டர் மிலன், நடப்பு சீரி ஏ சம்பின்களான ஜுவென்டஸுக்கிடையே நேற்று இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெற்றிருக்கவில்லை. இப்போட்டியில் ஜுவென்டஸின் மரியோ மண்டுஸிக்கின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டிருந்ததுடன், இவரின் பல உதைகளை இன்டர் மிலனின் கோல் காப்பாளர் சமிர் ஹன்டனோவிக் தடுத்திருந்தார். இந்நிலையில், நடப்பு பருவகாலத்தில் அதிக கோல்களைப் பெற்றவரான இன்டர் மிலனின் அணித்தலைவர் மெளரோ இகார்டியின் உதையொன்றை ஜுவென்டஸின் கோல்…

  21. குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது - நார்வே முதலிடம் தென்கொரியாவின் பியாங்சங் நகரில் நடைபெற்று வந்த 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக நிறைவடைந்தன. #WinterOlympics2018 #Closingceremony #Pyeongchanggames பியாங்சங்: 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (23-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்) தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 93 நாடுகளை …

  22. தொடரைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? சர்வதேச கிரிக்கெட் என்பது மலர்ப் படுக்கை அல்ல என்பது இந்திய டெஸ்ட் அணியின் இளைஞர்களுக்குப் புரிந்திருக்கும். இங்கே வெற்றியும் தோல்வியும் ஏற்றமும் சறுக்கலும் மிக விரைவில் மாறிவிடும். திறமை அல்ல, சீராகவும் தொடர்ச்சியாகவும் வெளிப்படும் திறமையே இங்கு முக்கியம். அதுவும் ஒருவரோ இருவரோ திறமை காட்டினால் போதாது. மட்டையிலும் பந்து வீச்சிலுமாகச் சேர்ந்து குறைந்தது ஐந்து பேராவது நன்கு ஆடினால்தான் வெற்றிபெற முடியும். இந்த யதார்த்தத்தை இப்போது இந்திய அணியின் இளைஞர்கள் நன்கு புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்பலாம். முரளி விஜய், அஜிங்க்ய ரஹானேயின் மட்டை வீச்சு, இஷாந்த் ஷர்மாவின் துல்லியமான எகிறு பந்துகள், இங்கிலாந்து மட்டையாளர்களின் பொறுப்…

  23. 50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை அ-அ+ ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனைப் படைத்துள்ளார். #LaLiga #CR7 கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையில் போர்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி, பிரேசிலின் நெய்மர் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களில் மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மெஸ்சி பார்சிலோனாவிற்கும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள். லா லிகாவில…

  24. உலகக் கோப்பை தொடரில் விளையாடுவேன்: மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ நம்பிக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதையொட்டி அந்த வங்கி ‘யெல்லோ ஆர்மி’ என்ற சேமிப்பு கணக்கினை அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், வங்கியின் தலைவர் சஞ்ஜீவ் ஸ்ரீவஸ்தவா, துணைத்தலைவர் விக்னேஷ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய், பிராவோ ஆகியோர் கலந்து கொண்டனர். - படம்: வி.கணேசன் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுவதற்கான வா…

  25. நேமார் மீதான மோசடி குற்றச்சாட்டுகளை கைவிட்டனர் ஸ்பானிய அதிகாரிகள் By DIGITAL DESK 3 01 NOV, 2022 | 05:38 PM பிரேஸில் கால்பந்தாட்ட நட்சத்திரமான நேமார், பார்சிலோனா கழகத்தில் இணைந்தமை தொடர்பாக அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மோசடி குற்றச்சாட்டுகளை ஸ்பானிய அதிகாரிகள் கைவிட்டுள்ளனர். இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில், 30 வயதான நேமார், அவரின் பெற்றோர் உட்பட 8 பேருக்கு எதிராக ஸ்பெய்னின் பார்சிலோனா நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை மற்றும் 10 மில்லியன் யூரோ அபராதம் ஆகியன விதிக்கப்பட வேண்டும் என ஸ்பானிய அதிகாரிகள் முன்னர் கோரியிருந்தனர். எனினும் வியப்பளிக்கும் வக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.