விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
படு தோல்வியடைந்த இந்தியா. தென்னாபிரிக்கா, இந்தியாவுக்கிடையிலான முதலாவது துடுப்பட்டத்தில் இந்தியா இன்னிக்ஸினால் தென்னாபிரிக்காவிடம் படு தோல்வியடைந்திருக்கிறது. தென்னாபிரிக்கா 558 ஒட்டங்களுக்கு 6 ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த நிலையில் விளையாட்டை நிறுத்தி இந்தியாவை ஆடப் பணித்தது. இந்தியா 233 ஒட்டங்களை முதல் இன்னிங்கிசிலும், 319 ஒட்டங்களை இரண்டாவது இன்னிங்கிசிலும் பெற்றது. அடுத்து 2வது போட்டி கொல்கத்தாவில் வரும் ஞாயிறு நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறாவிட்டால் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் இடம் என்ற நிலையை இழக்கும் அபாயம் ஏற்படவாய்ப்பிருக்கிறது. http://www.cricinfo.com/indvrsa2010/engine/current/match/441825.html
-
- 5 replies
- 1.1k views
-
-
பிரெஞ்ச் ஓப்பன் டெனிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் ரபெல் நாடல் அதிரடியாக வெற்றிபெற்றார். ஸ்பெயின் வீரர் மோயா, அவுஸ்திரேலியாவின் ஹெவிட் ஆகியோரும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர். பெண்கள் பிரிவில் செரீனா, ஷரபோவா அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர். இந்தியாவின் சானியா மிர்ஷா தோல்வியடைந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கிராண்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது சுற்றுப் போட்டியில் உலகின் நம்பர் - 2 வீரரான ஸ்பெயினின் ரபெல் நாடல், 117 ஆவது இடத்திலிருக்கும் இத்தாலியின் பிளாவியோ சிபோலாவை சந்தித்தார். இதில் அதிரடியாக விளையாடிய நாடல் முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டையும் 6-…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய அணிக்கு பயிற்சியளிக்க அழைப்பு வந்தபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகின்றார் ஹேஸ்டன் [30 - November - 2007] [Font Size - A - A - A] கோடிகளில் புரளும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஒருவழியாக அணிக்கு புதிய பயிற்சியாளரை இனம் கண்டுள்ளது. தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் இடதுகை ஆட்டக்காரரான கேரி ஹேஸ்டனை பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் ஹேஸ்டனின் பெயர் இல்லாதது கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விண்ணப்பித்தோர் பலர் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
நியூசி., வெற்றி : கோஹ்லி சதம் வீண் ஜனவரி 18, 2014. நேப்பியர்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி சதம் வீணானது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேப்பியரில் இன்று துவங்குகியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணிக்கு கப்டில் (8), ரைடர் (18) சொதப்பல் துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த ராஸ் டெய்லர் (55), வில்லியம்சன் (71), இருவரும் அரைசதம் கடந்தனர். பின் வந்த கேப்டன் பிரண்டன் மெக்கலம் (30) ஓரளவு கைகொடுத்தார். ரான்கி (30), நாதன் மெக்கலம் (2) ஏமாற்றினார். கடைசி நேரத்தில் அதிரடியில்…
-
- 10 replies
- 1.1k views
-
-
2019- உலகக் கோப்பை தொடரில் ஜூன் 16-ந் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா மோதல் உலகக் கோப்பை (2019) போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 4- ந் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி தொடங்கும் இந்த போட்டி ஜூலை 14-ந் தேதி நிறைவடைகிறது. கொல்கத்தாவில் ஐ.சி.சி செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டது அதன்படி,பாகிஸ்தான் அணியுடன் ஜூன் 16-ந் தேதி இந்தியா மோதுகிறது. ஓல்ட் ட்ராஃபோர்டில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் முதல் ஆட்டம் ஜூன் 2-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்த பின்னர் 15 நாள…
-
- 3 replies
- 1.1k views
-
-
உங்கள் பொன்னான வாக்குகளை அவுஸ்திரேலியாவுக்கு போடுங்கள் http://news.bbc.co.uk/sport2/hi/cricket/6599659.stm
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் அனைத்து உதவிகளையும் எதிர்வீரசிங்கமே செய்து தருகின்றார் -சுசந்திகா [09 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] `சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு விளையாட்டுத்துறை மூலம் புகழ்தேடித்தந்த வீரர்கள் வரிசையில் சுசந்திகா ஜெயசிங்கவே முதலிடத்தில் இருக்கின்றார். இதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்' இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஜப்பானின் ஒசாக்கா மாநிலத்தில் நடைபெற்ற 11 ஆவது உலகமெய்வல்லுநர் சாம்பியன் போட்டியில் பெண்களுக்கான 200 மீற்றர் ஒட்டத்தில் வெண்கலப் பதக்கம் பெற்ற சுசந்திகாவுக்கு விளையாட்டு அமைச்சரின் தலைமையில் விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வரவேற்பு வைபவத்தில் அமைச்சர் காமினி லொக்குகே…
-
- 0 replies
- 1.1k views
-
-
கோலியை மரியாதையா நடத்தணும்.. இப்படியா கேலி பண்றது? சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கோலி பேட்டிங் செய்ய வந்த போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் "பூ" என சப்தமிட்டு அவரை அவமரியாதை செய்தனர். இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமும் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கும் கண்டித்துள்ளனர். கோலிக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோஷமிடுவது அல்லது திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது புதிதல்ல. ஆஸ்திரேலிய ரசிகர்கள் அட்டகாசம் மேற்கத்திய நாடுகளில் ஒரு பிரபலத்தை கேலி செய்ய, அவமானப்படுத்த "பூ" என் சப்தமிடுவது வழக்கம். கோலி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்றது முதல் பல்வேறு சமயங்களில் அவரை இப்படி சப்தமிட்டு அவமானப்படுத்தி வருகின்றனர் சில ஆஸ்திரேலிய ரசிகர்கள். ரிக்கி பாண்டிங் கண்டனம் பெர்த், ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கேப்டன்! கொழும்பு: உலகக் கோப்பையை வெல்லாமல் வந்ததற்காக இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அந்த நாட்டு அணியின் கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே கூறியுள்ளார். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்ற இலங்கை அணி நேற்று கொழும்பு திரும்பியது. லண்டனிலிருந்து நேரடியாக கொழும்பு வர முடியாமல் தவித்த இலங்கை அணியின் வீர்ரகள் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை கத்தார் ஏர்லைன்ஸ் மூலம் நாடு திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. பின்னர் விமான நிலையத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகம் வரை வீரர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வர…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாவாந்துறை சென்.நீக்கிலஸ் கழகம் உதைபந்தாட்டச் சாம்பியன் [30 - December - 2007] [Font Size - A - A - A] யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக், விளையாட்டுக் கழகங்களிடையே நடாத்திய 5 வீரர்கள் பங்குபற்றிய உதைபந்தாட்ட நொக்கவுட் போட்டியில், நாவாந்துறை சென்.நீக்கிலஸ் கழகம் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. பாஷையூர் சென். அன்ரனிஸ் கழகம் மைதானத்தில் நடாத்தப்பட்ட இப்போட்டியில் 10 இற்கும் மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றின. இறுதி ஆட்டத்தில் நாவாந்துறை சென். நீக்கிலஸ் கழகமும் குருநகர் பாடும்மீன் கழகமும் போட்டியிட்டன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென். நீக்கிலஸ் கழகம் 4-2 கோல்களினால் வெற்றிபெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. இப்போட்டிகளுக்கு அஜந்தன், டீன…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆஸிக்கெதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்குகிறது இலங்கை இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடைபெறுகின்றது. தென்னாபிரிக்க அணியுடனான தொடரை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பாமல் அங்கிருந்து அவுஸ்திரேலியா சென்றடைந்தது இலங்கை அணி. பெரும் நம்பிக்கையுடன் இருக்கும் இளம் இலங்கை அணி,…
-
- 14 replies
- 1.1k views
-
-
டி20-யில் டிவைன் ஸ்மித் 7000 ரன்கள்; பொலார்ட், டேரன் சமி காட்டடி தர்பார்: கரீபியன் பிரிமியர் லீக் துளிகள் 35 பந்துகளில் 83 ரன்கள் விளாசிய கெய்ரன் பொலார்ட். - படம். | கெட்டி இமேஜஸ். கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணி வீரர் டிவைன் ஸ்மித் டி20 கிரிக்கெட்டில் 7,000 ரன்களைக் கடந்தார், பொலார்ட் 35 பந்துகளில் 83 ரன்கள் விளாச எதிரணியினரான செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி தோல்வி கண்டது. முதலில் பேட் செய்த பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுக்க, செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி 15.2 ஓவர்களில் 129/6 ரன்களையே எடுக்க ம…
-
- 11 replies
- 1.1k views
-
-
மூத்த இந்திய வீரர்கள் 'மாபியா கும்பல்' - பயிற்சியாளர் கிரேக் சேப்பல் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மாபியா கும்பல் போல் செயல்படுகிறார்கள் என பயிற்சியாளர் சேப்பல் கூறியுள்ளார். வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறிவிட்ட நிலையில் அணியின் மோசமான தோல்வி குறித்து வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் இந்திய கிரிக்கெட் போர்டு செயற்குழு கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தாக்கல் செய்யப் போகும் அறிக்கை மிக முக்கியமாக கருதப்படுகிறது. 6ம் தேதி அவர் தனது அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த அறிக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பெர்த் டெஸ்ட் மூலம் அவுஸ்திரேலியா பல்வேறு சிறப்புக்களையும் இழந்தது [21 - January - 2008] [Font Size - A - A - A] பெர்த் டெஸ்டின் 3 ஆவது நாளில் அவுஸ்திரேலியா குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. 2 ஓவர்கள் வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இதையடுத்து அந்த அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அபராதம் விதித்துள்ளது. கப்டன் என்ற முறையில் பொண்டிங்குக்கு 20 சதவீதமும் மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் போட்டிக் கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. பறிபோன சிறப்புகள் பெர்த் டெஸ்டில் தோல்வியடைந்ததன் மூலம் அவுஸ்திரேலியா நீண்ட காலம் தக்க வைத்திருந்த பல அரிய சிறப்புகளை இழந்திருக்கிறது. * பெர்த் மைதானத்தில் 10 ஆண்டுகளுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
சீனாவில் ஏன் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை.? சீனாவில் ஏன் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை என்ற கேள்விக்கு,சீன பிரதமர் லீகியாங்கின் பதில்! “நாங்கள் ஒரு நாளில் சிறுபகுதியைத்தான் விளையாட்டிற்கென எடுத்துக்கொள்வோமே தவிர, ஒரு நாளையே விளையாட்டிற்காக எடுத்துக்கொள்வதில்லை. இந்தியர்களின் ஆர்வத்தைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமும், பரிதாபமும்தான் ஏற்படுகிறது”என்பதாகும். சிக்ஸர்களுக்காக எழுந்த இந்திய இளைஞர்களின் கைத்தட்டல்களில் லீகியாங் சொன்ன பதில் ஒருவேளை இந்திய ஊடகங்களில் அமிழ்ந்து போயிருக்கலாம். இங்கு மாதக் கணக்குகளில் கிரிக்கெட் ஆடுவதையும், அதற்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நேரத்தை அர்ப்பணிப்பதையும், மற்றும் கலாச்சார சீரழிவு, ஆபாச நடனம், மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபி…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
தென் ஆபிரிக்கா, இலங்கை மோதும் இருபது 20 தொடர் இன்று ஆரம்பம் தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் செஞ்சூரியன் விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் - தென் ஆபிரிக்க அணித் தலைவர் பர்ஹான் புஹார்தீன் இரண்டு அணிகளும் 2012 முதல் கடந்த வருடம் வரை விளையாடியுள்ள 6 சர்வதேச இருபது 20 போட்டிகளில் 4 – 2 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபிரிக்கா முன்னிலையில் இருக்கின்றது. இதேவேளை தென் ஆபிரிக்காவுக்கு எதி…
-
- 10 replies
- 1.1k views
-
-
''ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்று எங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாட அதிக வசதிகள் இல்லை. தேர்வு செய்வதற்கு என்று ஏராளமான வீரர்களும் இல்லை. எங்கள் நாட்டில் உள்ள இயல்பான விளையாட்டு ஆர்வம் மற்றும் உலக அரங்கில் நாட்டை ஜொலிக்க செய்யவேண்டும் என்ற வீரர்களின் உத்வேகமும் எங்கள் அணிக்கு வெற்றிகளை தருகிறது'' - இது மறைந்த நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோவ் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியது. அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 49 லட்சம் மக்கள்தொகையை கொண்ட நியூசிலாந்து, அளவில் இந்தியாவைவிட 12 மடங்கு சிறிய நாடாகும். தனி தீவு நாடான நியூசிலாந்து அண்மைய காலங்களில் வெளிநாட்டினரை பெரிதும் கவர்ந்து வருகிறது. பொதுவாக வாழத்தகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் 15 இடங்களில் இடம்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360 ஏபி டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஷோன் பொலொக் ஓய்வு பெறுகிறார் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷோன் பொலொக் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித் துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட் டியே தனது கடைசிப் போட்டி எனவும் அவர் தெரிவித்துள்ளார். 35 வயதான பொலொக், ஒரு நாள் 387 சர்வதேச போட்டி களில் விக்கெட்டுகளையும் டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்டுகளையும் வீழ்த்தி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. ""12 வருடகாலமாக எனது நாட்டை பிரதிநிதித்துவப் படுத்து வதற்கு வாய்ப்பளித் தமைக்காக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு நான் நன்றிகூறுகிறேன். மிகச்சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடக் கிடைத் தமை எனது அதிஷ்டமாகும்,, என பொலொக் தெரிவித்துள் ளார். மேற்கிந்திய அணியுடனான மூன்ற…
-
- 1 reply
- 1.1k views
-
-
சர்வதேசக் கிரிக்கெட் சபையின் டுவென்டி டுவென்டி போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேசக் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இலங்கை அணி தொடர்ந்தும் காணப்படுகிறது. சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் நடுவே முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி, முதன்முறையாக ஒரு தொடரின் பின்னர் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. உலக டுவென்டி டுவென்டி தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி ஏனைய அணிகளை விடத் தொடர்ச்சியான, தொடர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. முதலிடத்தில் காணப்படும் இலங்கை அணி, இரண்டாமிடத்தைப் பிடித்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட 6 புள்ளிகள் அதிகமாகப் பெற்று…
-
- 2 replies
- 1.1k views
-
-
காயம் காரணமாக சர்கர் விலகல் November 07, 2015 சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் பங்களாதேஸ் அணியின் நட்சத்திர வீரரான சர்கர். நடப்பு வருடத்தில் இதுவரை 672 ஓட்டங்களை குவித்துள்ள சர்கர் இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளை பங்களாதேஸ் வீழ்த்த முக்கிய காரணமாக திகழ்ந்தவர். தற்போழுது சிம்பாப்வே அணி பங்களாதேஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இரண்டு ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. ஒருநாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதற்காக சர்கர் நேற்றுமுன்தினம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பந்து வீசி பயிற்சி எடுக்கும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக அவர் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுக…
-
- 6 replies
- 1.1k views
-
-
சங்கக்காரவின் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது 2015-08-20 09:38:22 இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொழும்பு பி.சரவணமுத்து அரங்கில் இன்று ஆரம்பமாகவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 63 ஓட்டங்களால் வெற்றியீட்டியதால் தற்போது 1:0 விகிதத்தில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது. அதேவேளை, இப்போட்டியானது இலங்கையின் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் ஒருவரான குமார் சங்கக்காரவின் இறுதி டெஸ்ட் போட்டியாகவும் இலங்கையின் சார்பில் அவர் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாகவும் அமையவுள்ளது. 2000 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு…
-
- 23 replies
- 1k views
-
-
எழிலனின் கனவு நனவானது .. தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினரும் தமது கணவருமான எழிலனின் கனவை தமது பிள்ளைகள் நனவாக்கியுள்ளதாக அனந்தி சசிதரன் நெகிச்சியுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 2007/2008 என்கணவரின் விருப்பத்திற்கு அமைய எங்கள் பிள்ளைகளிற்கு கிளிநொச்சியில் இருந்த தமிழீழ விளையாட்டு கழகத்தினரல் நடாத்தப்பட்ட கராத்தே பயிற்சியை வழங்கியிருந்தேன். போரிற்கு பிற்பட்ட காலத்தில் பல தடைகள் ஏற்பட்டது. ஆயினும் இன்று நல்விழி,எழில்விழி, கல்கி மூன்றுபேரும் கறுப்பு பட்டியை பெற்றுள்ளனர். எங்கள் பலநாள் விருப்பம் நிறைவேறியிருக்கு. நல்ல குருவாக ரேமன் சேர் அமைந்தது ஒரு வரப்பிரசாதம். மிக பொறுமையாகவும் கண்ணி…
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
2022 உலக கோப்பை உதைப்பந்தாட்டத்தில் 5 புதிய விதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
-
- 2 replies
- 1k views
-
-
ஹர்பஜனை குறிவைத்து மீண்டும் அவுஸ்திரேலிய வீரர்கள் தாக்குதல் [28 - February - 2008] இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கை குறி வைத்து அவுஸ்திரேலியர்கள் மீண்டும் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய - அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களிடையே களத்தில் தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகிறது. சிட்னி டெஸ்டில் ஹர்பஜன்சிங் இனவெறியுடன் சைமண்ட்ஸை திட்டியதாக கூறப்பட்ட புகார் பெரும் விஸ்வரூபம் எடுத்து அடங்கியது. அதன் பின் ஐ.சி.சி.தலையீட்டின் பேரில் முக்கோண ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் 9 போட்டிகளும் அமைதியாக நடந்து முடிந்தன. ஆனால், சிட்னியில் இந்தியா- அவுஸ்திரேலியா இடையே நடந்த 10 ஆவது போட்டியின் போது மீண்டும் புகைச்சல் கிளம்பியது. இஷாந்த் ஷர்மா பந்து …
-
- 1 reply
- 1k views
-