விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) புதிய விதிகள் இந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வருகின்றன. இதன்படி, ஐ.சி.சியினால் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ள நான்கு புதிய விதிகள் பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டித் தொடர்களின்போது நடைமுறைக்கு வரும் என ஐ.சி.சி இன்று (26) அறிவித்தது. கிரிக்கெட்டின் புதிய விதிப்படி மைதானத்தில் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் நடுவரால் வெளியேற்றப்படுவார்கள். அத்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
வேகப்பந்து வீச்சு ஆட்டக்களங்களில் இந்திய வீரர்கள் சமாதானக் கொடியை தூக்கிப் பிடிப்பர்: ஸ்டுவர்ட் கிளார்க் கேலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் தோனி விளையாட முடியாததை அடுத்து இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரில் அக்கறை இல்லை என்ற தொனியில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சாடியுள்ளது. சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஒரு பத்தியில் இந்தியா உலகக் கோப்பையையே எதிர் நோக்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அதிக நாட்டம் காட்டுவதில்லை என்று அந்தப் பத்தியில் இந்திய அணியைப் பற்றி சாடப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் நடப்பது பிரிஸ்பன் மைதானத்தில், இந்த மைதானம் உலகிலேயே அதிவேக ஆட்டக்களம் கொண்டது என்பதை அனைவரும் அறிவர். இதில் 26 ஆண்டுகளுக்கு முன்ப…
-
- 1 reply
- 379 views
-
-
Top 25 catches of all time ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆறு விக்கெட் எடுத்தாலும் டோணியிடம் திட்டு வாங்கிய சஹல்.. ஏன் தெரியுமா? பெங்களூர்: எப்போதுமே கூலாக காணப்படும் முன்னாள் கேப்டன் டோணி, நேற்று பவுலர் சஹலிடம் தனது கோபத்தை வெளிக்காட்டி ஆச்சரியமூட்டினார். பெங்களூரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 202 ரன்களை குவித்தது. 203 ரன்கள் வெற்றி இலக்கு என்ற போதிலும், பேட்டிங்கின் சொர்க்கபுரியான பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் அது எட்டக்கூடிய ஒன்று என்பதால் இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கிலும் அலர்ட்டாகவே இருந்தனர். பவர் பிளே ஓவர் என்றபோதிலும், ஆட்டத்தின் 2வது ஓவரை வீசும் பொறுப்பை இளம் சுழற்பந்து வீச்சாளர் சஹலுக்கு கொடுத்தார் கேப்டன் விராட் கோஹ்லி. ச…
-
- 1 reply
- 445 views
-
-
‘நல்ல நினைவுகளைத் தரும்’ கால்லே மைதானத்தில் 50-வது டெஸ்ட்: அஸ்வின் நெகிழ்ச்சிப் பேட்டி ஆர்.அஸ்வின் - கோப்புப் படம். கால்லே மைதானத்தில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் அஸ்வினின் 50-வது டெஸ்ட் போட்டியாகும், இந்த மைதானத்தில் சிறப்பாக வீசிய நல்ல நினைவுகள் மகிழ்ச்சி தருவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய பந்து வீச்சு சாதனைகள பலவற்றை முறியடிக்கும் நிலையில் உள்ள அஸ்வின், தனக்குப் பெருமை சேர்த்த கால்லே மைதானத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவது கனவான ஒரு தருணமாகுமென்று தெரிவித்துள்ளார். “2015-ல் இந்த மைதானத்தில் அருமையாக வீசினேன், அதே மைதானத்துக்கு திரும்பி வருவது கனவு நனவாகும் தருணமாகும். நான் அப்போது …
-
- 1 reply
- 527 views
-
-
இளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19 வயதிலேயே ஒருநாள் பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். #ICCRankings ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர் சமீப காலமாக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயை எதிர்த்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் ஆப்கானிஸ்தான் 4-1 என வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகளில் ரஷித் கான் 1…
-
- 1 reply
- 421 views
-
-
அணி வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எதிர்க்கட்சிகள் கண்டனம் இலங்கை கிரிக்கட் அணி மீது அரச தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையின் அணியின் உப தலைவர் மஹெல ஜயவர்தன மற்றும் முன்னணி வீரர் திலான் சமரவீர ஆகியோர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சுயாதீன தொலைக்காட்சியில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும், குறித்த ஊடகம் கிரிக்கட் வீரர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது…
-
- 1 reply
- 850 views
-
-
பாகிஸ்தான் செல்லும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதியுயர் பாதுகாப்பு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ள பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதியளித்துள்ளது. பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியினர் இம் மாதம் 28ஆம் திகதி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது 2009இல் இடம்பெற்ற பயங்கரவாத துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஒன்று பாகிஸ்தானுக்கு செல்வது இதுவே முதல் தடவையாகும். பங்களாதேஷ், பாகிஸ்தான் மகளிர் அணிகள் இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இரண்டு இருபத…
-
- 1 reply
- 210 views
-
-
கொரானா அச்சுறுத்தலால் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வு, முதல் முறையாக பார்வையாளர்களின்றி நடைபெற்றது. 2020 டோக்யோ ஒலிம்பிக்கிற்கான ஜோதி ஏற்றும் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் நடைபெற்றது. ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற கீரீஸ் வீராங்கனை அன்னா கோராகாக்கிமுதல் நபராக ஒலிம்பிக் ஜோதியை கையிலேந்தினார். இதன் மூலம் முதலாவதாக ஒலிம்பிக் ஜோதியை ஏந்தும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். https://www.polimernews.com/dnews/103498/முதல்-முறையாகபார்வையாளர்களின்றிஏற்றப்பட்ட-ஒலிம்பிக்-ஜோதி
-
- 1 reply
- 533 views
-
-
தந்தை - மகள் பாசத்துக்கு ஒரு கிரிக்கெட் ஸ்கோர்கார்டின் மரியாதை! #MustRead கிரிக்கெட் போட்டிகளில், விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டாலோ, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, அவர் ஓய்வு பெறுவது வழக்கம். அதை,மேட்ச்சின் ஸ்கோர் கார்டில் Retired Hurt என்று குறிப்பிடுவார்கள். காயம் சரியான உடனேயோ,அல்லது நிலைமை சீரான பிறகோ, அந்த ஆட்டக்காரர் மறுபடியும் வந்து ஆடலாம். அப்படி ஆடவில்லையென்றால், மேட்ச்சின் அதிகாரப்பூர்வ ஸ்கோர் கார்டில், அது Retired Hurt என்றே இருக்கும். 1877ஆம் ஆண்டுமுதல் டெஸ்ட் மேட்ச் போட்டிகள் நடந்து வருகின்றன. பல விந்தையான,வியக்கத்தக்க சம்பவங்கள் இந்த 140 ஆண்டுகளில் நடந்துள்ளன. ஆனால், சில பல ஆச்சரியத்தக்க விஷயங்கள…
-
- 1 reply
- 630 views
-
-
ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக்: 105 வருட சாதனையுடன் இணைந்தார் ஸ்டார்க் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி 105 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஸ்டார்க் ஓய்வில் இருந்து வந்தார். தற்போது ஆஷஸ் தொடர் வரவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் உள்ளூர் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் விளையாடி வருகிறார். மிட்செல் ஸ்டார்க், வார்னர், ஸ்மித் போன்றோர் இடம் பிடித்துள்ள ந…
-
- 1 reply
- 578 views
-
-
உலக கோப்பை கால்பந்தில் தோல்வி: கேமரூன் அணி மீது சூதாட்ட விசாரணை உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்த கேமரூன் அணி தனது 3 லீக் ஆட்டத்திலும் தோல்வி கண்டு அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கேமரூன் அணி 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடையும் என்று சூதாட்டத்தில் தண்டனை பெற்ற சிங்கப்பூரை சேர்ந்த புரோக்கர் வில்சன் ராஜ் பெருமாள் தெரிவித்ததாக ஜெர்மனி பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து கேமரூன் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஏதேனும் ஈடுபட்டார்களா? என்பது குறித்து கேமரூன் கால்பந்து சங்கம் விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து கேமரூன் கால்பந்து சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘உலக …
-
- 1 reply
- 484 views
-
-
கேட்ச் பிடிக்க முற்படாத தோனி: நெஹ்ராவின் இரு அனுபவம் ஸ்லிப் திசையிலோ அல்லது லெக் திசையிலோ ஓரளவுக்கு தள்ளி கேட்ச் சென்றால் அதனை பிடிக்க விக்கெட் கீப்பர் தோனி சில காலங்களாக முயற்சி எடுப்பதில்லை. இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பரான தோனி சில வேளைகளில் அத்தகைய கேட்ச்களை அருமையாக பிடித்த தருணங்களும் உண்டு. ஆனால் சமீப காலங்களில் அவர் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் முதலில் 8-0 என்று இரு அணிகளுக்கு எதிராக உதை வாங்கிய போதும் சரி, அதன் பிறகு சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் 3-1 என்று இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி தழுவிய போதும் சரி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டித் தொடரில் பாதியிலேயே ஓய்வு அறிவித்த தோனி பல கேட்ச்…
-
- 1 reply
- 492 views
-
-
கிரிக்கெட்டை தொடர்ந்து ஆகாயத்திலும் தோனி ராஜ்யம் !( வீடியோ) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிக்க பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக ஆக்ராவில் உள்ள பாராட்ரூப்பர்ஸ் பயிற்சி மையத்தில் அவர் பிரத்யேக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று அவர் முதல் முறையாக, பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட்டில் தரையிறங்கி சாகசம் செய்தார். இதற்காக ஏ.என். 32 ரக ராணுவ விமானத்தில், 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தரையை நோக்கி குதித்தார். தரையில் இருந்து ஆயிரத்து 250 அடி உயரத்தில், அவர் பாராசூட்டை இயக்கி மிக நேர்த்தியாக தரையிறங்கினார். தோனியுடன் சில ராணுவ வீரர்களும் பாராசூட்டில் தரையிறங்கினர். இது போன்று இன்னும் 4 முறை அவர் பாராசூட்டில் …
-
- 1 reply
- 727 views
-
-
யூரோ 2016 : பலம் வாய்ந்த நெதர்லாந்து அணி அதிர்ச்சியுடன் வெளியேற்றம்! பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெறவில்லை. நேற்று செக் குடியரசு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததையடுத்து, நெதர்லாந்தின் யூரோ கனவு முடிவுக்கு வந்தது. தகுதி சுற்றில் ' ஏ ' பிரிவில் இடம் பெற்றிருந்த நெதர்லாந்து அணி செக்குடியரசு அணியை எதிர்கொண்டது. இதே பிரிவில் இடம் பெற்றிருந்த துருக்கி அணி மற்றொரு ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியை சந்தித்தது. நெதர்லாந்து அணி 13 புள்ளிகளையும் துருக்கி அணி 15 புள்ளிகளும் பெற்றிருந்தன. 10வது ஆட்டமான நேற்றைய ஆட்டத்தில், நெதர்லாந்து அணி வெற்றி பெற்று துருக்கி அணி தோல்வியடைந்தால் நெதர்லாந்…
-
- 1 reply
- 247 views
-
-
(நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் மத்திய மாகாண பாடசாலைகள் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளன. கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது. 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மன்னார், தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வீராங்கனை ஏ. யதுர்ஷிகா 37.39 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில் மன்னார் மாவட்ட பாடசாலைகள் சார்பாக வீராங்கனை ஒருவர் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும். …
-
- 1 reply
- 502 views
- 1 follower
-
-
கார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பெரிய கார் விபத்தில் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் காயமடைந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டைகர் வூட்ஸுக்கு காலில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரியொருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "கலிபோர்னியாவில் இன்று (செவ்வாய்) காலை டைகர் வூட்ஸ் ஒரு கார் விபத்தில் சிக்குண்டார். விபத்தினால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர் தற்போது அறுவை சிகிச்சையில் உள்ளார், உங்கள் தனியுரிமை மற்றும் ஆதரவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார். பெப்ரவரி 23 காலை 7:12 மணியளவில் லாஸ் ஏஞ…
-
- 1 reply
- 617 views
-
-
எல் கிளாசிகோ- 10 பேருடன் 2-2 என டிரா செய்தது பார்சிலோனா- ரியல் மாட்ரிட் ஏமாற்றம் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் இடையிலான எல் கிளாசிகோ போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. #ELcalsico #barcelona #RealMadrid லா லிகா கால்பந்து லீக்கில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்திற்கு எல் கிளாசிகோ என்று பெயர். இரண்டு முன்னணி அணிகள் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பார்சிலோனா சொந்த மைதானத்தில் தோல்வியடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்திலும…
-
- 1 reply
- 741 views
-
-
கிரிக்கெட்டில் ரன்னர் முறை நீக்கம்: புதிய விதிகள் இன்றுமுதல் அமுல் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல புதிய விதிகள் இன்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றன. துடுப்பாட்ட வீரர் காயமடைந்தால் ரன்னர் ஒருவரை பயன்படுத்தும் முறையும் இதன்மூலம் நீக்கப்படுகிறது. கடந்த மே மாதம் லண்டனில் நடைபெற்ற ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் மாநாட்டின் பின்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் இருபது20 போட்டிகளின் சில விதிகளை மாற்றங்களை செய்ய வேண்டுமென சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. அவ்விதிகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன. இவ்விதிகளின் கீழ் நடைபெறும் முதலாது போட்டியாக எதிர்வரும் 11 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கும் பங்களாதேஷுக்கும் இ…
-
- 1 reply
- 907 views
-
-
ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் ஜோ ரூட் டெஸ்ட் தரவரிசையில் புதிய மகுடம் பெற்ற ஜோ ரூட். | படம்: ராய்ட்டர்ஸ். ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்வதில் முக்கிய பங்கு வகித்த இங்கிலாந்து பேட்ஸ்மென் ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தை கீழிறக்கி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்மித் 3-ம் இடத்துக்குச் செல்ல ஜோ ரூட் முதலிடம் பிடித்தார், ஏ.பி.டிவில்லியர்ஸ் 2-ம் இடத்தில் உள்ளார். டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து நிறுத்தி வைத்து வீழ்த்தினர், ஒரு பவுண்டரியை ஆஃப் திசையில் அடித்த பிறகு பீல்டர் ஒருவரை அதே திசையில் சுமார் 25-30 அடி வலப்புறமாக நகர்த்தியதைக் கவனியாமல் தேநீர் இடைவேளைக்கு 2 பந்துகளே இருக்கும் போது …
-
- 1 reply
- 307 views
-
-
இலங்கை வந்தது மேற்கிந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இன்று கொழும்பை வந்தடைந்தனர். இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் 2 இருபது20 போட்டிகளில் மேற்கிந்திய அணி மோதவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. (படம்:ஏ.எவ்.பி) - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12437#sthash.CeKM5ZhZ.dpuf
-
- 1 reply
- 284 views
-
-
டென்னிஸ் ஆடையிலிருந்து சொக்லேற் ஆடைக்கு..... பிரான்ஸை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான டாட்யானா கொலோவின், சொக்லேற்றுகள் கலந்து தயாரிக்கப்பட்ட ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் அண்மையில் நடைபெற்ற “சொக்லேற் ஆடை” கண்காட்சியில் டாட்யானாவும் கலந்து கொண்டார். 27 வயதான டாட்யானா, 1988 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் மொஸ்கோ நகரில் பிறந்தவர். ஆனால், 8 மாத குழந்தையாக டாட்யான இருந்தபோது அவரின் பெற்றோர் பிரான்ஸுக்கு இடம்பெயர்ந்தனர். பின்னர் பிரான் ஸின் சார்பில் அவர் போட்டி களில் பங்குபற்ற ஆரம்பி த்தார். 2014 பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டிகளில் பிரெஞ்சு வீரர் ரிச்சர்ட் கஸ்கட்டுடன் இணைந்து டாட்யானா சம்பியன…
-
- 1 reply
- 248 views
-
-
ஆஸ்திரேலியா 62 ரன் Friday, 25 January, 2008 09:44 AM . அடிலெய்டு, ஜன.25: அடிலெய்டு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்துள்ளது. அடிலெய்டு டெஸ்ட்டில் நேற்று முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்திருந்தது. . இன்று காலை ஆட்டம் தொடங்கிய நிலையில் 16 ரன்கள் எடுத்திருந்த டோனி, ஜான்சன் பந்துவீச்சில் சைமன்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கருடன் கேப்டன் அனில் கும்ப்ளே ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 359 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரெட் லீ பந்துவீச்சில் ஹாக்கிடம் பிடிகொடுத்து சச்சின் டெண்டுல்கர் 153 ரன்கள…
-
- 1 reply
- 957 views
-
-
இந்தியாவை புகழ்ந்து பேசியது ஏன்? : அப்ரிடி விளக்கம் இந்தியாவை புகழ்ந்து பேசியது ஏன்? என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அப்ரிடி விளக்கம் அளித்துள்ளார். அப்ரிடி கருத்துக்கு எதிர்ப்பு ஐ.சி.சி. இருபது-20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அப்ரிடி கொல்கத்தாவில் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானை விட இந்தியாவில் எங்கள் மீது அதிக அன்பு காட்டப்படுகிறது. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம். இங்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை நாங்கள் ஒருபோதும் உணர்ந்தது இல்லை’ என்று தெரிவித்து இருந்தார். …
-
- 1 reply
- 429 views
-
-
அரை இறுதியில் நுழைந்தது யாழ் புனித பத்திரிசியார் பிருந்தாபன் மூன்று பெனல்டிகளைத் தடுத்து நிறுத்தினார் 2016-09-27 09:53:27 (நெவில் அன்தனி) 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொத்மலை கிண்ண கால் இறுதிப் போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் அணி கோல் காப்பாளர் ஏ.பிருந்தாபன் 3 சமநிலை முறிப்பு பெனல்டிகளை அடுத்தடுத்து தடுத்து நிறுத்தியதன் பலனாக ஹமீத் அல் ஹுசெய்னி அணியை 3–1 பெனல்டி அடிப்படையில் புனித பத்திரிசியார் அணி வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது. சிட்டி புட்போல் லீக் மைதானத்தில் நேற்று பிற்பகல் கடும் உஷ்ணத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப் போட்டியின் 3…
-
- 1 reply
- 413 views
-