Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கரீபியன் பிரிமீயர் லீக்: இறுதி போட்டி CPL 2017 Final Full Highlights || T. Knight Riders vs St Kitts & Nevis Patriots Final Highlights CPL 2017 Final Last 2 overs 12 off 22 CPL T20 2017 FINAL : Presentation Ceremony | St Kitts and Nevis Patriots vs Trinbago Knight Riders

  2. இலங்கையுடன் மோதும் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு By Akeel Shihab - இலங்கை அணியுடன் மோதவுள்ள சுற்றுலா இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 16 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் இன்று (11) இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் எட். ஸ்மித்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்சமயம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் சர்வதேச தொடர் ஆகிய இரு தொடர்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில…

  3. வில்லியம்சன், மெக்கலம் சதம் :வலுவான நிலையில் நியூசி., பிப்ரவரி 05, 2014. ஆக்லாந்து: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வில்லியம்சன், கேப்டன் மெக்கலம் சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் இன்று துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். அஷ்வின் நீக்கம்: இந்திய அணியில் ‘நம்பர்–1’ ஆல் ரவுண்டர் அஷ்வின் நீக்கப்பட்டார். எதிர்பார்த்தது போல் ரவிந்திர ஜடேஜா வாய்ப்பு பெற்றார். வேகப்பந்து வீச்சில் ஜாகிர் கான் தலைமையில், அனுபவ இஷாந்த் சர்மா, முகமது ஷமி அணியில் இடம் பிடித்தனர். போதிய வெளிச்சமின்மை…

  4. விராட் கோலி அதிகம் உணர்ச்சிவயப்படுகிறார்: ஷாகித் அப்ரீடி இந்திய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விராட் கோலி அதிகம் உணர்ச்சிவசப்படுவராகத் திகழ்கிறார். கேப்டன் பொறுப்பை கையாள அவருக்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரீடி தெரிவித்துள்ளார். தோனி விட்டுச் சென்ற வெற்றிடத்தை கோலி நிரப்ப இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும் என்று தொலைக்காட்சி சானல் ஒன்றில் அப்ரீடி தெரிவித்துள்ளார். “தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்ததை கேள்விப்பட்டு கடும் ஏமாற்றமடைந்தேன், ஏனெனில் அவர் ஒரு போராடும் குணம் படைத்தவர், இந்திய கிரிக்கெட்டின் ஒரு மிகப்பெரிய தலைவராக அவர் திகழ்ந்துள்ளார். அந்த அணியை பலமுறை முன்னே நின்று வழிநடத்திச் சென்றுள்ளார்…

  5. பறந்து வந்த காதலி நவம்பர் 09, 2014. காதலி சொரஜாவை அழைத்து வர தனி ‘ஜெட்’ விமானத்தை அனுப்பி அசத்தினார் பிரேசில் வீரர் நெய்மர். பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர், 22. களத்தில் மட்டுமல்ல, காதல் விளையாட்டிலும் அசத்தி வருகிறார். சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், காயம் காரணமாக காலிறுதியுடன் வெளியேறினார். அப்போது இவருடன் பிரேசில் நடிகை புருனா மார்குயிஜின், 19, என்ற பெண், ‘தோழியாக’ இருந்தார். கடந்த ஆக., மாதம் இருவரும் ஸ்பெயினின் இபிஜா என்ற தீவுக்கு சென்றனர். முதல் சந்திப்பு: இருவருக்கும் என்ன பிரச்னை ஏற்பட்டது எனத் தெரியவில்லை. நெய்மர் புருனாவை பிரிந்தார். இங்கு வைத்து, தன்னை விட 6 வயது மூத்தவரான செர்பிய அழகி சொரஜாவை, 28, நெய்மர் சந்தித்துள்ளார்…

  6. சாய்னா வென்றது தங்கம் இல்லை... தன்மானம்! ஒரு புகைப்படம் சொல்லும் கதை! சாய்னாவின் அந்தப் புகைப்படம் இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை. கைகளைத் தூக்கி, கண்களை மூடிக்கொண்டு, வாய்திறந்து கத்துகிறார். மூடியிருந்த அந்தக் கண்களிலும் ஆக்ரோஷம் வெளிப்படுகிறது. அத்தனை செய்தித்தாள்களிலும் அந்தப் புகைப்படம்தான். அந்தக் கட்டுரைகளின் தலைப்பைப் பார்த்தால், அது காமன்வெல்த் சாம்பியனின் மகிழ்ச்சித் தருணமாக மட்டும்தான் தெரியும். ஆனால், நிச்சயம் அது அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல. அந்த அலறலில் வெளியேறியது சாய்னாவின் இரண்டாண்டு வலி... ரியோவிலிருந்து தன்னைத் துரத்திய கேள்விகளுக்கும், அவமாரியாதைகளுக்குமான பதில், அந்தச் சத்தம். அந்தக் களிப்பு தங்கம் வென்றதுக்காக மட்…

  7. கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் 'புதிய ஆயுதங்கள்' கட்டுரை தகவல் எழுதியவர்,விதான்ஷு குமார் பதவி,விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்தி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI இந்தூரில் நடந்த போட்டியில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து, தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. கூடவே ஐ.சி.சி. ஒருநாள் தர வரிசையில் முதலிடத்தையும் இந்திய அணி பிடித்தது. ஐசிசி தர வரிசையில் இந்தியா 114 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நி…

  8. இவ்வாண்டின் பேஸ்போல் World Series போட்டித் தொடரில், சான் பிறான்சிஸ்கோ ஜயன்ட்ஸ் (San Francisco Giants) அணி வெற்றி பெற்றது. நேற்று அந்தப் போட்டித் தொடரின் ஐந்தாவது போட்டி இடம்பெற்றது. ரெக்சாசில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில், மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் சான் பிறான்சிஸ்கோ அணி, ரெக்சாஸ் ரேஞ்சேர்ஸ் (Texas Rangers) அணியைத் தோற்கடித்தது. அதன் மூலம், நான்குக்கு ஒன்று என்ற போட்டிகளின் அடிப்படையில் சான் பிறான்சிஸ்கோ அணி World Series போட்டித் தொடரில் வெற்றி பெற்றது. 1954 ஆம் ஆண்டின் பின்னர் முதன் முறையாக சான் பிறான்சிஸ்கோ அணி, வேர்ல்ட் சீரிஸ் போட்டித் தொடர் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. [11/2/2010 ] [cmr news bulletin ]

    • 0 replies
    • 734 views
  9. கண்ணை மறைக்கும் ஆத்திரம்: ரபாடாவின் சாதனையும் வேதனையும் சாதனையாளார் ரபாடாவின் அடக்க முடியாத உணர்வு. எதிரில் ஸ்மித். - படம். | ராய்ட்டர்ஸ். போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வாயை அடைக்கும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்காவின் சாதனையாளர் கேகியோ ரபாடா என்றால் மிகையாகாது. 11 விக்கெட்டுகளைச் சாய்த்தார். கேப்டன் ஸ்மித்தே முதல் இன்னிங்சில் ரபாடா வீசிய ஒரு ஸ்பெல்லை ‘ரியல்லி வெரி டிஃபிகல்ட் (உள்ளபடியே மிகக்கடினமானது) என்று வர்ணித்தார், எதிரணியின் கேப்டன்களில் பலர் இப்படி மனம் திறந்து இன்னொரு அணியின் வேகப்பந்து வீச்சாளரைப் பாராட்டுவது அரிது. 28 டெஸ்ட் போட்டிகளி…

  10. குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்காக ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை! போலந்து நாட்டைச் சேர்ந்த ஈட்டு எறிதல் வீராங்கனை தனது குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக தான் வென்ற ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட்டுள்ளார்.போலந்து நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா மக்டெலானா. இவர் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார்.இந்நிலையில் கடந்த வாரம் தனது முகநூல் பக்கத்தில் தனது 8 மாதக் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை விற்பனை செய்வதாக அறிவித்தார். இதன்மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு உடனடியாக அமெரிக்காவில் தனது குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருப்…

    • 3 replies
    • 734 views
  11. மன்னாரில் ஆரம்பமாகியது 41 ஆவது தேசிய விளையாட்டு விழா மன்னாரிலுள்ள வட மாகாண சபை உள்ளரங்க விளையாட்டு அரங்கில் 41 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இவ் தேசிய விளையாட்டு ஆரம்ப விழாவுக்கு மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய பிரதம அதிதியாகவும் தேசிய விளையாட்டுத் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ரி.எம்.எஸ்.பி.பண்டார, மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ஸ்ரணி டீ மெல், வட மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் எஸ்.எம்.ராஜா ரணசிங்க, மன்னார் பிரதேச செயலாளர் வசந்தகுமார், முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் …

  12. 5 ஜாம்பாவான்கள்... அசாத்திய திறமைகள்! நாக் அவுட் நாயகன் முகமது அலி, கிரிக்கெட் பிதாமகர் டான் பிராட்மேன், பீலே, தியான்சந்த் இவர்கள் எல்லாம் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள். விளையாட்டுத் துறையில் இவர்கள் நுழைந்தது குறித்தும், சாதித்தது குறித்தும் சில நினைவலைகள் இங்கே.... மேஜிக்மேன் தியான்சந்த் இந்திய ஹாக்கியில் எத்தனையோபேர் வந்து சென்றிருக்கலாம். சிலர் எப்போதாவது நினைவுக்கு வரலாம். சிலர் காலப் போக்கில் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தியான் சந்த் பெயர் மட்டும் இன்றளவும் மறக்கப்படாமல் உள்ளது. அவரது பெயரில் இன்றளவும் பல விருதுகள் வழங்கபடுகின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில், 1905 ஆகஸ்ட் 29-ம் தேதி, ராணுவக் குடும்பத்தில்…

  13. எச்சில்,வியர்வை பயன்படுத்த தடை ;அவுஸ்திரேலியாவின் முடிவு Leftin May 2, 2020 எச்சில்,வியர்வை பயன்படுத்த தடை ;அவுஸ்திரேலியாவின் முடிவு2020-05-02T09:21:45+00:00விளையாட்டு அவுஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகளின் பந்தை பளபளப்பாக்க எச்சில் அல்லது வியர்வை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலக விளையாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிரிக்கெட்டில் கைகுலுக்குவது ஏற்கனவே தடை செய்யப்பட்டது. தவிர பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த தடை விதிக்கவும், இதற்குப் பதில் வேறு ஏதாவது ஒரு பொருளை பயன்படுத்தலாமா எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே ஆஸ்திரேலிய வ…

  14. ``ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை..!'' - பங்களாதேஷ் போட்டி பரபரப்பு சொல்லும் விஜய் ஷங்கர் #VikatanExclusive அந்தக் கடைசி பாலில் தினேஷ் கார்த்திக் மட்டும் சிக்ஸர் அடிக்கவில்லையென்றால், இந்திய ரசிகர்களிடம் சிக்கி படாதபாடுபட்டிருப்பார் தமிழத்தின் விஜய் ஷங்கர். கடைசி ஓவரில் ஒரு பெளண்டரி அடித்திருந்தாலும், 18-வது ஓவரில் தொடந்து நான்கு பந்துகளில் ரன் அடிக்காமல்விட்டதுதான் விஜய் ஷங்கர் மீது வைக்கப்படும் விமர்சனம். `பங்களாதேஷ் மேட்ச்சில் நடந்தது என்ன?' - விஜய் ஷங்கரிடம் பேசினேன். ``இந்தியாவுக்காக ஆடும் முதல் சீரிஸ். இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக பேட்டிங் ஆடும் முதல் வாய்ப்பு. மிகவும் பதற்றமாக இருந்ததா?'' ``நிச்சயமா இல்லை. நான் மைதானத…

  15. இவ்விரு கல்லூரிகளுக்குமிடையில் கடந்த 1917 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்த வேளை கடந்த  2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை போட்டிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டி மாத்திரம் நடைபெற்றது. இவ்வருடம் 2020 இல் 103 ஆவது வருட இரு நாள் போட்டியும் 28 ஆவது தடவையாக ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 07 திகதி மாரச் மாதம் இடம்பெறவுள்ளது. யா…

    • 5 replies
    • 732 views
  16. தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் வீரர் மில்லரின் மகள் மரணம்… தென்னாப்பிரிக்காவின் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் அன்பு மகள் நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து டேவிட் தனது சமூக வலைதள கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இத்தகவலை தெரிவித்துள்ளார். காவியன் https://thinakkural.lk/article/213996

  17. கடினமான தருணங்களில் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை வளர்த்த இந்தியாவும் பாகிஸ்தானும் - உத்வேகமளிக்கும் கதை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் “சுதந்திரமாக விளையாடுகிறோம். நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. மிகப்பெரிய கிரிக்கெட் வரலாறு எங்கள் தேசத்துக்கும் இல்லை. அதனால் ஒவ்வொரு தவறிலிருந்தும் நாங்கள் கற்று வருகிறோம். 2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசத்திடம் தோற்றோம். 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்தோம். 4 ஆண்டுகளில் எங்களின் பலவீனத்தை அடையாளம் கண்டு அதை வலிமையாக மாற்றியுள்ளோம்” இது ஆப்கானிஸ…

  18. புனித ஜோசப் - புனித பீட்டர் அணிகள் மோதும் 82ஆவது புனிதர்களின் சமர் இன்று ஆரம்பம் (நெவில் அன்­தனி) மரு­தானை புனித ஜோசப் கல்­லூ­ரிக்கும் பம்­ப­லப்­பிட்டி புனித பீட்டர் கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான 82ஆவது வரு­டாந்த ‘புனி­தர்­களின் சமர்’ மாபெரும் கிரிக்கெட் போட்டி பி. சர­வ­ண­முத்து ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் இன்றும் நாளையும் நடை­பெ­ற­வுள்­ளது. புனித ஜோசப் அணி­யினர்: அமர்ந்­தி­ருப்­ப­வர்கள் இட­மி­ருந்­து­வ­ல­மாக ப்ரசான்த ரண­வீர (பொறுப்­பா­சி­ரியர்), ஆசிரி பேரேரா (உடற்­த­குதி பயிற்­றுநர்), மைக்கல் அடம்ஸ் (இரண்டாம் நிலை அணி பயிற்­றுநர்), மல்ஷான் ரொட்­றிகோ, அருட்­தந்தை மிலான் பேர்னார்ட் (விளை­யாட்­டுத…

  19. சச்சின் டெண்டுல்கரின் சாதனைப் புத்தகத்தில் நேற்று மேலும் ஒரு புதிய அத்தியாயம் இடம் பெற்றது. அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் 50,000 ரன்களை நேற்று கடந்தார். இதுவரை உலகத்தில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் படைக்காத புதிய சாதனை இது.நேற்று மும்பை இந்தியன்ஸ், டிரினிடாட் டொபாகோ இடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியின் போதுதான் இந்த புதிய சாதனையை சச்சின் படைத்தார்.சச்சின் கிரிக்கெட் ஆட வந்து 25 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் 50,000 ரன்களை அவர் கடந்திருப்பது புதிய வரலாறும் ஆகும். டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டுவென்டி 20 என மொத்தம் 953போட்டிகளில் இதுவரை சச்சின் ஆடியுள்ளார்.அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 50,009 ரன்களைக் குவித்துள்ளார்.இதில் 307 முதல் தர போட்டிக…

  20. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 13 வயதுடய ஜப்பானிய வீராங்கனை திங்கட்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான முதல் ஒலிம்பிக் ஸ்கேட்போர்ட் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த மோமிஜி நிஷியா வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அறிமுகமான "ஸ்கேட்போர்ட்டிங்" விளையாட்டின் முதலாவது தங்கப்பதக்கத்தை ஜப்பான் நாட்டின் இளம் வீரர் யூட்டோ ஹொரிகோம் வென்ற ஒரு நாள் கழித்து, ஒசாக்காவைச் சேர்ந்த 13 வயதுடைய நிஷியா ஜப்பானுக்கு மீண்டும் தங்க பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளார். நிஷியா 15.26 மதிப்பெண்களுடன் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு ஜப்பானிய வீராங்கனையான 16 வயதுடைய ஃபூனா நகயாமா 14.49 மதிப் பெண்களுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேநேரம் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 13 வயதான ரெய்…

    • 4 replies
    • 731 views
  21. 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து சிம்பாப்வே அணியை ஐ.சி.சி. நீக்கியது [07 - July - 2008] சிம்பாப்வே பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இங்கிலாந்தில் நடக்கும் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து விலக சிம்பாப்வே ஒப்புக்கொண்டது. அதேசமயம், ஐ.சி.சி. உறுப்பினர் அந்தஸ்தில் தொடர்ந்துமிருக்கும். ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாப்வேயில் நிலவும் அரசியல் பிரச்சினை காரணமாக, அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் துண்டித்தன. சமீபத்தில் சர்ச்சைக்குரிய மறுதேர்தலில் ரொபர்ட் முகாபே மீண்டும் சிம்பாப்வே ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். முகாபே அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் இங்கிலாந்து அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 20…

    • 0 replies
    • 731 views
  22. தனது இரட்டைக் குழந்தைகளை வரவேற்றார் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் ஜமைக்காவைச் சேர்ந்த மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட்டுக்கு இரட்டைக் குழந்தைகளாக இரு மகன்மார் பிறந்துள்ளனர். இரட்டைக் குழந்தைகளுக்கு போல்ட் தண்டர் மற்றும் செயிண்ட் லியோ என பெயர் வைத்து அவர்களை வரவேற்றார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரட்டை மகன்களின் பிறப்பை புகைப்படத்துடன் அறிவித்தார் போல்ட். அதில், உசைன் போல்ட் அவரது மனைவி காசி பென்னட், அவர்களின் மூத்த மகள் ஒலிம்பியா லைட்னிங் போல்ட் ஆகியோர் தற்போது பிறந்த இரட்டையர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள். மூத்த மகளான ஒலிம்பியா லைட்னிங் போ…

    • 1 reply
    • 730 views
  23. தோனி, தோனி, தோனி... சேப்பாக்கம் மைதானத்தில் செம்ம்ம்ம்ம அனுபவம்! #VikatanExclusive ‘கிளம்பு, கிளம்பு... இங்க எல்லாம் நிக்கக் கூடாது...’ ‘சார்... ஃப்ரெண்டு டிக்கெட் எடுத்துட்டு வர்றான். அவன் வந்ததும் கிளம்பிருவேன்’ ‘பாஸ்... எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கா? இருந்தா ஒன்னு உஷார் பண்ணுங்களேன். அதுவும் எனக்கில்லை...!’ குரலில் அதிகாரமில்லை. காக்கிச்சட்டையில் மிடுக்கில்லை. இடம்: பட்டாபிராமன் கேட், சேப்பாக்கம் மைதானம். நேரம்: ஞாயிறு மதியம் 12.30. வழக்கத்தை விட வாலாஜா ரோட்டில் ஹெவி டிராபிக். பெல்ஸ் ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு என சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தைச் சுற்றியுள்ள அத்தனை சாலைகளிலும் ஹாரன் சவுண்ட். அங்கிரு…

  24. இங்கிலாந்தின் சசெக்ஸ் அணியில் குலசேகர இங்கிலாந்தின் நெட் வெஸ்ட டி20 தொடரில் சசெக்ஸ் அணிக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர அழைக்கப்பட்டுள்ளார். சசெக்ஸ் அணி பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசூர் ரஹ{மானை ஒப்பந்தம் செய்திருந்தது. எனினும் ஐ.பி.எல் போட்டியின்போது அவருக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதைக் காரணமாக அணிக்கு திரும்ப முடியவில்லை. இதனால் இலங்கை அணியின் குலசேகர சசெக்ஸ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் கென்ட் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இவர் 4 பந்து ஓவர்களில் 28 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கட்டினை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.vir…

  25. குடோ விளையாட்டில் சாதிக்கும் சிறுவன்; சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கத் தகுதி உலகை வெற்றிகொள்ள முயன்றுகொண்டிருப்பவர்களில் 14 வயதான சவுந்தரநாயகன் பவிந்தரவர்சனும் ஒருவர். மாத்தளை – மந்தண்டாவளை இந்து தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் இவர், மாத்தளை நோர்த் 2 ஆம் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்தவர். குடோ விளையாட்டில் அதிசிறந்த ஆற்றல் கொண்டவராகத் திகழும் பவிந்தரவர்சன், மாகாண மற்றும் தேசிய மட்ட குடோ போட்டிகளில் பல பதக்கங்களையும் வென்றுள்ளார். இந்தியாவின் மும்பையில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கவும் பவிந்தரவர்சன் தகுதி பெற்றுள்ளார். ஆனாலும், அந்தப் போட்டிக்கு அவரா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.