விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
யாழ்ப்பாணம் வலி. கிழக்கு பிரதேச எல்லே சம்பியனாக வாதரவத்தை தமிழ் நிலா அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. வலி. கிழக்குப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான இவ்வருடத்திற்குரிய குழு நிலைப் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் பிரதேச கழகங்களுக்கிடையிலான எல்லே போட்டிகள் புத்தூர் வீனஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றன. இறுதிப் போட்டியில் வாதரவத்தை தமிழ் நிலா அணியும், புத்தூர் வீனஸ் அணியம் களமிறங்கின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தமிழ்நிலா அணி முதலில் த…
-
- 0 replies
- 765 views
-
-
முரளி பூரண குணமடைந்தால் மட்டுமே அடுத்த இரு போட்டிகளிலும் விளையாடுவார் [10 - October - 2007] [Font Size - A - A - A] இங்கிலாந்து அணியுடனான கடைசி இரு போட்டிகளும் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானதாயுள்ள போதும், காயத்திலிருந்து பூரண குணமடையாத நிலையில் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனைக் களமிறக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஐந்து ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் தற்போது இங்கிலாந்து அணி 2 -1 என்று முன்னிலையிலுள்ளது. தம்புள்ளையில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணியும் அடுத்த இரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியும் வெற்றி வெற்றுள்ளன. கடைசி இரு போட்டிகளும் கொழும்பில் நடைபெறவுள்ளது. இவ்விரு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே இலங்கை அணியால் தொ…
-
- 5 replies
- 1.5k views
-
-
முதல் 3 பந்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்திய இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோ லண்டன்: கிரிக்கெட் உலகில் மிகவும் அரிய நிகழ்வான, பந்து வீச்சை ஆரம்பித்ததும் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்திய சம்பவம் மீண்டும் ஒருமுறை நடந்துள்ளது.இங்கிலாந்து கவுன்டி அணியான ஒர்செஸ்டெர்ஷயர் பந்து வீச்சாளர் ஜோ லீச், நார்த்தாம்ப்டன்ஷயர் அணிக்கு எதிரான போட்டியின்போது பந்து வீச்சைத் தொடங்கியதுமே 3 விக்கெட்களை அடுத்தடுத்த பந்துகளில் வீசி அசத்தினார். இவரது பந்து வீச்சில், ரிச்சர்ட் லெவி, ராக் கியோ, பென் டக்கெட் ஆகியோர் ஆட்டமிழந்தனர். முதல் இருவரையும் விக்கெட் கீப்பர் பென் காக்ஸ் கேட்ச் செய்தார். கடைசி நபரை ஜேக் ஷான்ட்ரி கேட்ச் செய்தார்.கிரிக்கெட் உலகில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவது மிக …
-
- 0 replies
- 248 views
-
-
உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது தென்னாபிரிக்கா! இம்முறையாவது உலகக்கிண்ண தொடரில் சாதிக்க வேண்டுமென்ற ஆசையுடன், உலகக்கிண்ண தொடருக்குள் அடியெடுத்து வைத்த தென்னாபிரிக்கா அணி, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது. பர்மிங்ஹாம்- எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் 25ஆவது போட்டியில், நியூஸிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதின. எதிர்பார்பு மிக்க இப்போட்டியில், நாணய சுழற்சி சுழற்றுவதற்கு முன்னரே மழை குறுக்கிட்டதால், போட்டி 49 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, இ…
-
- 0 replies
- 827 views
-
-
மெஸ்ஸி 100 ஆர்ஜென்ரினா அணியின் தலைவரும் பார்ஸிலோனா அணியின் நட்சத்திர வீரருமான மெஸ்ஸி பார்ஸிலோனா அணிக்காக தனது 100ஆவது ஆட்டத்தினை நேற்றுமுன்தினம் நிறைவு செய்தார். வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் மெஸ்ஸிக்கும் பார்ஸி லோனாவுக்கும் ஏனோ தெரியவில்லை இந்த ஆட்டம் வெற்றியைக் கொடுக்கவில்லை. மெஸ்ஸியின் நூறாவது ஆட்டத்தில் உரோமா அணியுடன் பார்ஸிலோனா மோதியது. இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் பார்ஸி லோனாவின் ஆதிக்கம் இருந்த போதிலும் உரோமாவின் முன்களவீரர் ஒருவர் மைதானத்தின் மத்திய பகுதியில் வைத்து பதில்கோலை விளாச ஆட்டம் 1-1 என்று முடிவடைந்தது. உரோமாவை மிக இலகுவாக பார்ஸிலோனா வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட காரணத்தினால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தமையானது கிட்டத்தட்ட பார்ஸிலோனாவின் தோல்வி…
-
- 2 replies
- 323 views
-
-
தந்தை தந்தைதான்... மகன் மகன்தான்: தோனி, கோலியை ஒப்பிட்டு கபில் ருசிகரம் ஜெய்பூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கபில் தேவ். | படம்: ரோஹித் ஜெயின் பராஸ். கேப்டனாக தோனியின் சாதனைகளை எட்டிப்பிடிக்க கோலி இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். ஜெய்பூரில் ஒண்டர் சிமெண்ட் கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கேற்ற கபில் கூறியதாவது: கேப்டன்சியைப் பொறுத்தவரை தந்தை தந்தைதான்... மகன் மகன் தான். தோனியின் தலைமைத்துவ சாதனைகளை எட்டிப் பிடிக்க கோலி இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். இதைக்கூறும்போது இன்னொன்றையும் தெரிவிக்கிறேன், கோலி ஒரு அபாரமான பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார், இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் சிறப்புறுவார் என்று நான் வலிமையாக நம்புகிறேன். இந்திய…
-
- 0 replies
- 252 views
-
-
"ஊக்க மருந்து பயன்பாடு இதுவரை இல்லாத வகையில் அதிகரிப்பு":ஐஓசி விளையாட்டுத்துறையில் ஊக்க மருந்து பயன்பாடு இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் குற்றச்செயலாக அதிகரித்துள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். பீஜிங் போட்டியில் பங்குபெற்ற பலர் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளனர் ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனி நபர்களுக்கு மட்டுமல்ல, தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என தாமஸ் பாக் கூறியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், அரச ஆதரவுடன் ஊக்க மருந்து பயன்பாடு இடம்பெற்றுள்ளது எனும் குற்றச்சாட்டுகளின…
-
- 0 replies
- 384 views
-
-
கால்பந்து போட்டிகளுக்கு ஓய்வை அறிவித்தார் ஜெர்மனியின் குலோஸ். கால்பந்து போட்டிகளுக்கு ஓய்வை அறிவித்தார் ஜெர்மனியின் குலோஸ். சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்தார் ஜெர்மனியின் பிரபல கால்பந்து வீரர் மிரோசொல்வ் குலோஸ். கால்பந்து உலக கிண்ணப் போட்டிகளில்,கிண்ணம் வென்ற ஜெர்மனி அணியின் முக்கிய வீரராக 38 வயதான குலோஸ் விளையாடியிருந்தார். உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக கோல்கள் பெற்றவர் எனும் பிரேசிலின் ரொனால்டோவின் உலக சாதனையை, இவர் அண்மையில் 16 கோல்கள் பெற்று முறியடித்திருதார். 137 சர்வதேச போட்டிகளில் ஜெர்மன் அணி சார்பில் பங்கேற்ற குலொஸ்,71 கோல்கள் பெற்றுள்ளார். 2018 ரஸ்யாவில் இடம்பெறவுள்ள கால்பந…
-
- 0 replies
- 355 views
-
-
மீண்டும் வருகிறார் முஸ்தபிஸுர் பங்களாதேஷ் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஸுர் ரஹ்மான் 9 மாதங்களுக்குப் பின் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்ப உள்ளார். இவர் தன்னுடைய இடது கை வேகப்பந்து வீச்சால் எதிர் அணிகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் விரைவில் உலகளவில் புகழ்பெற்றார். இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் கடைசியாக விளையாடினார். அதன்பின் ஐ.பி.எல். தொடரில் விளையாடும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் குணமடைந்தவுடன் இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் அணிக்காக விளையாடினார். அப்போது அவரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை …
-
- 0 replies
- 390 views
-
-
ஐபிஎல் சூதாட்ட விவகாரம் கிரிக்கெட் உலகில் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. இதுவரை இந்த விவகாரத்தில் ஸ்ரீசாந்த் உள்பட கிரிக்கெட் வீரர்கள் மட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி துவக்க வீரர் ஒருவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அந்த வீரர் இந்த சீசனில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் சொதப்பலாக ஆடியுள்ளார். அவருக்கு சூதாட்டத்தரகர்களுடன் தொடர்பு இருக்கக்கூடும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஒருவர் மீதும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். போட்டிகளின் போது இல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்த நடுவர் சூதாட்டத்தரகர்களை தொடர்பு கொண்டிருக்கக்கூடும் என போலீசார் http://di…
-
- 0 replies
- 349 views
-
-
ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி தென் ஆப்ரிக்கா தரவரிசையில் முதலிடம்! ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இதில் தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறது.தென் ஆப்ரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று கடைசி போட்டி நடந்தது. இதில் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா. இதையடுத்து 3-2 என தொடரையும் ஜெயித்தது தெ.ஆப்ரிக்கா. "இலங்கை தொடரை வென்றாலும், இந்த தொடர் கடுமையான சவால் அளிக்கக் கூடியதாக இருக்கும். இதை வென்றால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராஃபிக்கு நாம் தயார் என அறிவிக்க முடியும் என நினை…
-
- 1 reply
- 273 views
-
-
'ஓய்வு நெருங்கியுள்ளதால் இறுதிப் போட்டிகளை அனுபவித்து விளையாடுவேன்" என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் என்னுடைய இறுதிப் போட்டிகள் சிலவற்றை அனுபவித்து விளையாடுவேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீற்றர்சன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ‘பிக் பாஷ்’ இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரராக திகழ்ந்த 37 வயதான கெவின் பீற்றர்சன், அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப்பின் சர…
-
- 0 replies
- 374 views
-
-
உலகக்கோப்பையை வென்றால் நெதர்லாந்துக்கு விநோத வெகுமதி :விண்வெளிப் பயணம் உலகக் கோப்பையை நெதர்லாந்து வென்றால் அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் 23 வீரர்கள் மற்றும் பயிற்சியாளரை விண்வெளிக்கு அழைத்துச் செல்வோம் என அந்நாட்டைச் சேர்ந்த விண்வெளிப் பயண ஏற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. 3 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் இன்னும் நெதர்லாந்து கோப்பையை வெல்லவில்லை. அதன் கோப்பை கனவு தொடர்ந்து நழுவிக் கொண்டேயிருக்கிறது. உலகக் கோப்பையை வெல்வதற்கு வீரர் களை ஊக்கப்படுத்தினால் மட்டும்போதாது, அவர் களுக்கு மிகப்பெரிய வெகுமதியை அளிக்க வேண்டும் என நெதர்லாந்தைச் சேர்ந்த விண் வெளிப் பயண ஏற்பாட்டு நிறுவனமான ரியூம்டீவார் பெட்ரிப் எஸ்எக்ஸி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸ்பெயினுக்கு எத…
-
- 1 reply
- 449 views
-
-
உலகம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. காற்பந்தாட்டத்தின் ஜாம்பவான், தொடர்ச்சியாக நட்சத்திரங்களை உருவாக்கிக் கொண்டிருந்த பிரேசிலின் மிகமோசமான தோல்வி, அந்நாட்டு ரசிகர்களை மாத்திரமல்ல, காற்பந்தாட்டத்தின் அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஜேர்மனி அணியினரோ, ரசிகர்களோ கூட இவ்வளவு மோசமான தோல்வியொன்றை பிரேசிலுக்கு பரிசளிப்போம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். அவர்களும் கூட தங்களது பெரு வெற்றி தொடர்பில் ஆச்சரியத்துடனேயே இருப்பார்கள். மனோதிடம் அல்லது ஆன்மபலம் சிறிதாக அடிபடுகின்ற புள்ளி எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு நேற்றைய பிரேசில் அணியே சாட்சி. 5 தடவை உலகக் கோப்பையை வெற்றி கொண்டவர்கள் …
-
- 0 replies
- 584 views
-
-
இனி கால்பந்து மேனேஜர்களுக்கும் ரெட் கார்டு.. இங்கிலாந்து கால்பந்து அமைப்பு அதிரடி! இங்கிலாந்து கால்பந்து அமைப்பான "The FA", தன் கட்டுப்பாட்டில் நடக்கும் கால்பந்து தொடர்களில், அணியின் மேனேஜர்கள் கண்டிக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு ரெட் கார்டு (Red Card) மற்றும் எல்லோ கார்டு (Yellow Card), வழங்க முடிவு செய்துள்ளது. பொதுவாக கால்பந்தில், வீரர்கள் விதிகளை மீறி குறிப்பிட்ட தவறுகளை செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக எல்லோ கார்டும், ஆட்டத்தில் இருந்து வெளியேற ரெட் கார்டும் வழங்கப்படும். மேனேஜர்கள் ஆட்டத்திற்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டால், அவர்களுக்கு நடுவர் எச்சரிக்கை செய்யவும், வெளியேறும் படி கூறவும் முடியும். ஆனாலு…
-
- 0 replies
- 360 views
-
-
இலங்கை அணியினரின் பஸ்ஸில் பெற்றோல் திருட்டு இங்கிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பஸ்ஸிலிருந்து திருடர்களால் சுமார் 700 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பெற்றோல் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடில் செக்ஸ் பிராந்திய அணியுடனான 3 போட்டியின் பின்னர் ஹோட்டலிருந்து வெளியேறியபோது இப்பெற்றோல் திருட்டு குறித்து இலங்கை அணியினர் அறிந்துகொண்டதாக அணியின் முகாமையாளர் அநுர தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கை அணியினர் மேற்கு ட்ரைடன் பகுதியில் கிரவுண் பிளாஸா ஹோட்டலில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதனால் இலங்கை அணியின் எந்தவொரு திட்டமும் பாதிக்கப்படவில்லை எனவும் குறித்த பஸ் கம்பனியினால் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் அ…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரக ருமேஷ் ரத்னாயக்க நியமனம் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/articles/2015/01/28/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%…
-
- 0 replies
- 276 views
-
-
மழையால் பாதிப்பு- முதலாவது ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது இலங்கை இங்கிலாந்து அணிகளிற்கு இடையில் இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக முதலில் பந்து வீசுபவர்களிற்கு வாய்ப்புகள் அதிகம் என கருதியே பந்துவீச தீர்மானித்தாக இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் தெரிவித்தார். எனினும் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் எவ்வித சிரமமும் இன்றி இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டனர் இங்கிலாந்து அணி 49 ஓட்டங்களை ப…
-
- 0 replies
- 368 views
-
-
ஒலிம்பிக்கிலும் இனி கிரிக்கெட். 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறவுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பிடித்தது. அதன் பிறகு விடுப்பட்ட கிரிக்கெட்டை மீண்டும் இணைக்க நூற்றாண்டு கால முயற்சி ஒரு வழியாக வெற்றியின் விளிம்பிற்கு வந்துள்ளது. குறித்த பரிந்துரை பட்டியலில் பிளாக் கால்பந்தாட்டம், பேஸ்பால், சாப்ட்பால் ஆகிய விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. 141-வது சர்வதேச ஒலிம்பிக்…
-
- 2 replies
- 657 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி ராஜினாமா ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது நபி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக கேப்டனாக செயல்பட்ட அவர், தனது மோசமான பார்ம், அணிக்கு பெரிய அளவில் வெற்றி தேடித்தர முடியாதது ஆகிய காரணங்களால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு முகமது நபி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியிருக்கிறேன். அணியின் வெற்றிக்காக என்னால் முடிந்த அளவுக்கு பாடுபட்டிருக்கிறேன். அணியின் சமீபத்திய செயல்பாடு, எனது மோசமான பார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எனது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வீரரா…
-
- 0 replies
- 451 views
-
-
போல்டின் பந்தில் சரணடைந்தது இலங்கை ; 305 ஓட்ட முன்னிலையுடன் நியூஸிலாந்து இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 305 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது. நேற்று கிறிஸ்ட்சர்சில் ஆரம்பமான இப் போட்டியில் நியூஸிலாந்து அணி முதலாவது இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து நேற்றைய தினமே தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 88 ஓட்டத்துடன் இருந்தது. ஆடுகளத்தில் மெத்தியூஸ் 27 ஓட்டத்துடனும், ரோஷான் சில்வா 15 ஒட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இந் நிலையில் போட்டி…
-
- 0 replies
- 368 views
-
-
'மிக முக்கியமானவர் சங்கக்கார' + View all இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும்இ நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார பற்றி வி.வி.எஸ். லட்சுமண் மனம் திறந்து பேசியுள்ளார். கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் சங்கக்காரவிற்கு கடைசி தொடராக அமையும். அவர் ஏற்கனவே இந்த தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சங்கக்கார பற்றி இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரரான வி.வி.எஸ். லட்சுமண் ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில்இ இலங்கை மண்…
-
- 0 replies
- 371 views
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அதிரடி துடுபாட்ட வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரராக களமிறங்கும் ஷிகர் தவான், 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமானார். தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் இடம்பிடித்தார். 24 சதங்கள் இந்திய அணிக்கு சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் ஷிகர் தவான், இந்திய அணிக்காக 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,793 ஓட்டங்களை பெற்றுள்ளார். 68 டி20 போட்டிகளில் 1,759 ஓட்டங்களையும…
-
- 3 replies
- 428 views
- 1 follower
-
-
விலகுகிறது பெப்சி *பிரிமியர் தொடருக்கு சிக்கல் புதுடில்லி: பிரிமியர் தொடர் ‘டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில்’ இருந்து விலக பெப்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2008ல் துவக்கப்பட்டது இந்தியன் பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ கிரிக்கெட். உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடருக்கு ‘டைட்டில் ஸ்பான்சராக’ 2008 முதல் 2012 வரை பிரபல கட்டுமான நிறுவனம் டி.எல்.எப்., (ரூ. 250 கோடி) இருந்தது. பின் 2013 முதல் 2017 வரை ரூ. 397 கோடிக்கு, பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் ஆனது. இன்னும் இரு ஆண்டுகள் மீதமுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக பெப்சி நிறுவனம், இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கடிதம் எழுதியுள்ளது. இதில்,‘ சூதாட்ட பிரச்னைகளால் பிரிமியர் தொடர் மற்றும் க…
-
- 0 replies
- 280 views
-
-
இது ஓர் அணி, இதில் தனி நபர்கள் இல்லை: ரவி சாஸ்திரி இந்த இந்திய அணி உலகத் தரமானது, சிறந்த அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடிய திறமை பெற்றது என்கிறார் ரவி சாஸ்திரி. | படம்: பிடிஐ. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், இந்திய அணிச் சேர்க்கை, ஸ்பின் பந்து வீச்சு, அணியின் மனோநிலை ஆகியவை பற்றி ரவிசாஸ்திரி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி பற்றி கருத்து கூறிய இயக்குநர் ரவி சாஸ்திரி, 'இது ஓர் அணி, இதில் தனிநபர்கள் இல்லை' என்றார். மேலும், 'இந்த அணி நேர்மையான வீர்ர்களைக் கொண்டது. வெற்றிகளைக் கொண்டாடுகிறார்கள், தோல்வியை கவுரவத்துடன் எதிர்கொள்கின்றனர்' என்றார் அவர். …
-
- 1 reply
- 496 views
-