துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
641 topics in this forum
-
அடுத்த மாதம் சிறிலங்கா அரசு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறது [புதன்கிழமை, 27 டிசெம்பர் 2006, 13:24 ஈழம்] [பா.பார்த்தீபன்] இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்வை முன்வைக்க அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி குழுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசு தனது தீர்வுத்திட்டத்தை அடுத்த மாதம் முன்வைக்கவுள்ளதாக அனைத்து கட்சிக்குழுவின் தலைவரும் விஞ்ஞான தொழில்நுட்பத்துறை அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்த திட்டம் மாகாணங்களுக்கான தனியான அதிகாரங்களை கொண்டுள்ளது. தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னதாக ஜனவரி இரண்டாம் வாரம் அனைத்து கட்சிக்குழு கூடவுள்ளது. அதன் போது மேலும் விவாதங்கள் நடத்தப்படும். இந்…
-
- 0 replies
- 938 views
-
-
நம்மவர் நிகழ்வுகளில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்கு முன்பாக செய்யவேண்டிய அகவணக்கத்தைத் தொடங்கி வைக்க நிகழ்ச்சி அறிவிப்பாளர் பின்வரும் அறிவிப்பு வாசகத்தைக் கூறி அகவணக்கத்தைத் தொடங்கிவைப்பார்: "தமிழீழ விடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும் சிறிலங்கா இந்தியப்படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்துவோமாக" (அகவணக்கம்) "நிறைவு செய்வோமாக"
-
- 0 replies
- 1.5k views
-
-
அருள்மொழி அரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் காலமானார். ஈழத்தின் பிரபல சமய இலக்கியச்சொற்பொழிவாளரும் மூத்த சைவத்தமிழறிஞருமான திருமதி வசந்தா வைத்தியநாதன் தனது 81 ஆவது வயதில் நேற்று (13.03.2018) காலை காலமானார். கொழும்பு விவேகானந்த சபை, அகில இலங்கைக் கம்பன் கழகம் போன்ற அமைப்புகளின் ஸ்தாபக உறுப்பினரான அம்மையார் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசகராகவும் செயற்பட்டார். ஈழத்திலும் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ஆலய மற்றும் மாநாட்டு சொற்பொழிவுகளை ஆற்றி இம்மண்ணிற்கு பெருமைசேர்த்தவராவார். ஆலயத் திருவிழாக்களை நேர்முக வர்ணனை செய்வதில் தனித்துவம் வாய்ந்தவராகச் செயற்பட்டார். தமிழ்நாடு மயிலாடு…
-
- 0 replies
- 567 views
-
-
வடபோர் முனையில் துப்பாக்கி மோதல் யாழ் முகமாலை வடபோர் முனையில் சிறிலங்கா இன்று அதிகாலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது. இத் தாக்குதலில் இரு உடலங்களையும், ரி-56 ரக துப்பாக்கி ஒன்றையும், பூகோள நிலைகாட்டி ஒன்றையும் தாம் கைப்பற்றியதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எதுவித தகவலும் இதுதொடர்பில் வெளியாகவில்லை http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 847 views
-
-
கொடியுயர்த்தி வாழ்ந்தவொரு குடிவாழ்க்கை இடிவிழுந்து எல்லாமிழந்து இருக்கிறது சூனியமாய் நாளையிது மீண்டும் நிமிரும் மீள அழகொழிரும் -புதுவை இரத்தினதுரை – 1. அமெரிக்க சிந்தனையாளரும் வெள்ளைமாளிகையின் ஆலோசகர்களில் ஒருவருமான பிரான்ஷிஸ் புக்குயாமா வரலாற்றின் முடிவு பற்றிப் பேசினார். 'வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்' (The end of history and the last man) என்ற தனது நூலின் மூலம் மனித வரலாற்றின் முடிவை பிரகடனம் செய்தார். புக்குயாமாவின் கருத்து நிலை ஐரோப்பிய புத்திஜீவித்துவ உலகில் பெரும் சர்ச்சைகளையும் எதிர்வினைகளையும் உருவாக்கியது. எனினும் அவர் தனது வெளிப்பாடு குறித்த விமர்சனங்களை பெரியளவில் பொருட்படுத்தவில்லை என்றே கூறப்படுகின்றது. ஆனால் 2001 செப்டம்பர் 11ல்…
-
- 0 replies
- 1k views
-
-
-
யாழ் அரங்கியல் கலைஞர் ஜி. பி. பேர்மினஸ் காலமானார் : October 9, 2018 திருமறை கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் ஈழத்தின் அரங்க புலத்தில் அரைநூற்றாண்டுக்கு மேல் பணியாற்றியவருமான ஜி. பி. பேர்மினஸ் இன்று காலமானார். அமரர் ஜி.பி.பேர்மினஸ் அறுபது ஆண்டுகளுக்கு மேல் அரங்கப் பணியாற்றியவர். சிறந்த நடிகர், நெறியாளர், தயாரிப்பாளர், வேட உடை விதானிப்பாளர், அரங்கப் பயிற்றுனர், திருமறை கலாமன்றத்தின் தாபக உறுப்பினர் என பன்முகப் பணிகளைப் புரிந்த இவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் திருமறை கலாமன்றத்தில் கலைச்சேவை ஆற்றியுள்ளார். அறுபது நாடகங்களுக்கு மேல் நடித்ததுடன் நாடக அரங்ககல்லூரி உட்பட பல அரங்கநிறுவனஙகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பல நாடகங்களை இயக்கியுள்ளார். திருப்பாடு…
-
- 0 replies
- 458 views
-
-
எழுத்தாளர் செ. கணேசலிங்கன் காலமானார் டிசம்பர் 4, 2021 யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது சென்னை வடபழனியில் உள்ள தனது மகளின் இல்லத்தில் வசித்துவந்த தோழர் கணேசலிங்கன் இன்று (04.12.2021, சனிக்கிழமை) காலை காலமாகினார். இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய எழுத்தாளர் செ.கணேசலிங்கன், 40க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதை, சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தோழர் கணேசலிங்கன் அவர்களின் பூதவுடல் இன்று (04.12.2021, சனிக்கிழமை) பிற்பகல் 5.00 மணியளவில் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. …
-
- 0 replies
- 1k views
-
-
உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி சிதம்பரநாதன் சாவடைந்தார்! AdminSeptember 4, 2021 உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி சிதம்பரநாதன் நேற்றுக் (03-09-2021) காலமானார். அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வர வித்துவான் சிதம்பரநாதன், தவிற்காரர் செல்லத்துரையின் மகனாவார். இவர் தமது நாதஸ்வரக் கலையைக் கும்பழாவளை ஆலயத்தில் இளமைப்பருவத்திலேயே ஆரம்பித்தார். இவருடைய தந்தையாரும் கும்பழாவளை ஆலயத்தில் தவிற்கலையில் ஈடுபட்டிருந்தவர். தந்தையாருடன் இணைந்து கலைத்தொண்டு பேணிய இவர் நாதஸ்வரக் கலையில் மிக நாட்டங் கொண்டவராக விளங்கினார். அக் காலத்தில் பிரபல நாதஸ்வரக் கலைஞராகவிருந்த மாவிட்டபுரம் இராசாவிடம் சாஸ்திர ரீதியில் நாதஸ்வரம் பயின்றார். அதன் மேல் இந்தியாவுக்க…
-
- 0 replies
- 332 views
-
-
இந்திய இராணுவத்திடம் இருந்து நூல்களைக் காப்பாற்றிய நூலகர் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் (30.04.1940- 27.04.2022) May 22, 2022 — என்.செல்வராஜா, நூலியலாளர், லண்டன் — யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தை வளர்த்தெடுத்த நூலகர்களின் வரிசையில் ஆர்.எஸ். தம்பையா, சிற்றம்பலம் முருகவேள், வரிசையில் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் மூன்றாமவராவார். யாழ்ப்பாணத்தில், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் நூலகராகப் பணியாற்றிவந்த வேளையில், திருமதி ரோ.பரராஜசிங்கம் அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. அவ்வேளையில் அவர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகப் பணியாற்றிவந்தார். நூலகவியல் சஞ்சிகையை நான் வெளியிட்டு வந்த வேளையில் அதன் ஆசிரியர் குழுவில் திரு சி.…
-
- 0 replies
- 386 views
-
-
தொழில்நுட்ப கல்வியை வளர்த்த அருட்தந்தை மரணம்! இலங்கையில் தகவல் தொழில்நுட்ப கல்விக்கு பெரும் பங்காற்றிய அருட்தந்தை ரைமன்ட் ஏர்னஸ்ட் அலெக்ஸ்சான்டர் போருதொட்ட இன்று (16) தனது 88வது வயதில் காலமானார். நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார். https://newuthayan.com/தொழில்நுட்ப-கல்வியை-வளர்/
-
- 0 replies
- 619 views
-
-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 34 வது நினைவு தினம் இன்று! AdminDecember 24, 2021 எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஆராதிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்! மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் திகதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்து இன்றுடன் 31 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் எம்.ஜிஆர். பக்தர்கள், அதிமுகவினர் எம்.ஜி.ஆர்…
-
- 0 replies
- 469 views
-
-
முன்னாள் போராளி மாரடைப்பால் மரணம் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளியான சிவநாதன் அருந்ததி ( இன்று அதிகாலை சாவடைந்துள்ளார். கடற்கரை வீதி சத்துருக்கொன்டானை சொந்த முகவரியாக கொன்ட இவர் கடந்த 03.02.1999. அன்று மாங்குளம் பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது ஷெல் வீச்சு காரணமாக விழுப்புண் அடைந்தார். நீண்ட காலமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வாழ்க்கையினை சக்கர நாற்காலியுடனே வாழ்ந்து வந்தவர். இவருடைய கணவரும் ஒரு முன்னாள் போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது (இவரும் மாற்று திறனாளிகள் ) இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் உண்டு. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளி ஒருவர் …
-
- 0 replies
- 476 views
-
-
குமார் ரூபசிங்க - (1943 – 2022) - இடதுசாரித்தனத்திலிருந்து NGO த்தனம் வரை... - என்.சரவணன் குமார் ரூபசிங்க ஞாயிறன்று (20) கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் காலமாகிவிட்ட என்கிற செய்தியை அறிந்தேன். SWRD பண்டாரநாயக்கவின் மூத்த மகளான சுனேத்திராவை 1972 இல் மணந்து கொண்டார். சுனேத்திராவின் இளைய தங்கை சந்திரிகா குமாரணதுங்க, இளைய சகோதரன் அனுரா பண்டாரநாயக்க என்பதை நீங்கள் அறிவீர்கள். குமார் ரூபசிங்கவும் சுனேத்திராவும் சில ஆண்டுகளின் பின்னர் விவாகரத்தாகி வேறு திருமணம் செய்துகொண்டனர். ஒரு காலத்தில் குமார் தீவிரமான சமூக, அரசியல் செயற்பாட்டாளர். அவருக்கு பல தமிழ் நண்பர்கள் இருந்தார்கள். 1958 கலவரம் அவரை மிகவும் பாதித்திருந்தது. அவரின் நெருங்கிய தமிழ் நண்பரும் குடு…
-
- 0 replies
- 594 views
-
-
இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள் . 13.05.95 அன்று வன்னி செட்டிமலையில் நடந்த இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். கப்டன் வேங்கையன் . இராசையா – திவாகரன் . யாழ்ப்பாணம் . லெப்டினன் ஜெயந்தன் மகாலிங்கம் – விக்னேஸ்வரன் திருமலை. லெப்டினன் கருங்கதிர் ஏகாம்பரம் – முத்துலிங்கம் மட்டக்களப்பு. லெப்டினன் யுகந்தன் கந்தசாமி – கரிகரன் கிளிநொச்சி . லெப்டினன் சுமணன் தம்பிபிள்ளை – முரளி மட்டக்களப்பு . லெப்டினன் தர்மராசா முத்துக்குமார் – சிவகுரு வவ…
-
- 0 replies
- 519 views
-
-
முருகனின் தந்தை யாழில் மரணம்; முகம் பார்க்க அனுமதிக்காத அரசு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தை வெற்றிவேல் (75-வயது) இன்று (27) அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளார். தனது தந்தை இறப்பதற்கு முன்னர் வீடியோ கோலில் தந்தையின் முகத்தை பார்க்க சட்டத்தரணி ஊடாக முருகன் விடுத்த கோரிக்கை தமிழக அரசு மறுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தந்தையின் உடலையாவது இறுதியாக பார்க்க அனுமதிக்குமாறு முருகன் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது உறவினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கா…
-
- 0 replies
- 511 views
-
-
எழிலனின், தந்தை... காலமானார். தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை காலமானார். கிளிநொச்சியில் அவர் நேற்று (திங்கட்கிழமை) காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிக்கிரியை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் தலைமையில் எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். எனினும், அவர்கள் தொடர்பான விபரங்கள் வெளிவராத நிலையில், எழிலனின் மனைவியும் வடக்கு மாக…
-
- 0 replies
- 1.6k views
-
-
15 APR, 2024 | 11:14 AM வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் ஞாயிற்றுக்கிழமை (14) காலமானார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த இரண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்டு, வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் இரண்டு தடவை தவிசாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181093
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
லெப் கேணல் நிறோஜன் பாலசுப்பிரமணியம் கிறிஸ்ணபாலன் யாழ்மாவட்டம் கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக் கொண்டிருந்தது. இந்த அலைகளைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்களது நெஞ்சில் அழியாத தடங்களாக பதிந்திருக்கின்றன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி, இவன் சாதனைகளைப் பற்றி, இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் எனபது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும். ஆனால் அவை இப்போது மௌனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனJ எழுதுகோல் ஏற்றுக்கொள்கிறது. தமிழீழத்தின் கடல்நீரை …
-
- 0 replies
- 1.2k views
-
-
உதயன் பத்திரிகைகை நிறுவனத்தின் மீது காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதை அடுத்து ஊடகத்திற்காய் உயிர்நீத்த எமது சக பணியாளர்களான சுரேஸ் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோரது நினைவு அஞ்சலி இன்று காலை 10 மணியளவில் உதயன் பணிமனையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,வடமாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், இ.ஆனல்ட், வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும் - நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவருமான பொ.கனகசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் உதயன் பணியாளர்களும் இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=27…
-
- 0 replies
- 415 views
-
-
வணக்கம், அண்மையில் தாயகத்தில் மிகப்பெரிய ஓர் சேவை - மக்களின் உயிர்காக்கும் சேவை செய்த மருத்துவர் சிவா மனோகரன் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் தாக்குதலில் பலியாகிவிட்டார் என்று செய்தி வந்தது. பலர் அறிந்து இருப்பீர்கள். என்னைப்பொறுத்தவரையில் குறிப்பிட்ட இந்த மருத்துவரையும் ஓர் கரும்புலி என்றே கூறுவேன். அவர் தனக்கு மரணம் ஏற்படும் என்பதை எதிர்பார்த்து காத்து இருந்தார். அவர் நினைத்து இருந்தால் ஓடிபோய் இருக்கலாம். ஓடித்தப்புவதற்கு அவருக்கு இறுதிவரை கால அவகாசம் இருந்தது. ஆனால்... அல்லல்படும் தாயக மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதற்காக கடைசிவரை அங்கு மக்களின் உயிர்களைக் காப்பதற்காக பணி ஆற்றிக்கொண்டு இருந்தார். மக்களோடு மக்களாக இருந்து மிகப்பெரிய சேவைகளை வைத்தியர் செய்துகொண்ட…
-
- 0 replies
- 712 views
-
-
ஈழப் பேராசிரியர் தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தினம் இன்று: சேவியர் தனிநாயகம் அடிகள் எனப்படும் தமிழ் மொழியின் தலைமகனின் பிறந்தநாள் இன்று. இலங்கையில் உள்ள இலங்கையில் உள்ள காம்பொன் ஊரில் ஹென்றி ஸ்ரனிஸ்லால், சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளை தம்பதிக்கு முதல் பிள்ளையாக நூற்றியொரு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார். கல்லூரிக்கல்வியை ஆங்கில வழியில் படித்து முடித்த அவர். இவரின் இயற்பெயர் ஸ்டானிஸ்லஸ் சேவியர் என்றாலும் பின்னர் தமிழ் மீது கொண்ட பற்றால் சேவியர் தனிநாயகம் என்று மாற்றிக்கொண்டார். இலங்கையில் இருந்த திருச்சபை அவரை இத்தாலி போய் படிக்க அனுமதிக்காமையால் மலங்காரச் திருச்சபையில் இணைந்து தி…
-
- 0 replies
- 726 views
-
-
மண்ணைவிட்டு விண்ணுற்ற வண்ணையெனும் மலரவனே வண்ணமலர்ப் பொன்னடியில் வெண்மலரை வைப்பதற்கு எண்ணரிய புண்ணியனே அம்மலரும் வாடுமெனக் கண்ணனைய எம்நெஞ்சைக் காணிக்கை ஆக்குகின்றோம் இந்துமா கடலின் முத்தாய் இலங்கிடு ஈழநாட்டில் சுந்தர வடிவுகொண்டே சுதந்திர தாகம் மேலாய் செந்தமிழ் வீரத்தோடு சிறந்திடு யாழ் மண்மீது விந்தை கொண்டிலங்கு மெங்கள் விழுமிய வண்ணைநகர் சரித்திரம் பலவுங் காட்டி செந்நெறி ஒழுகிநின்று பாரினில் கற்றோர்போற்ற பகர்பெரும் அறிஞனான அண்ணனாம் வண்ணையாரை அடியேனு மறிந்தவாறு கண்ணீரைச் சொரிந்துநின்று கழிவிரக்கச் சொன்மாலை சாற்றுதற்குப் பேறுபெற்று உலகமே மதித்த நின்னை கொண்ட நன்றிக் கடன் கூட்டுவிக்க வண்டுதாச் சொன்மலர்கள் கொண்டு ஆக்குகிறேன் நான் மனையறப…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆளுமையும் விவேகமும் நிரம்பிய மகளிர் அணியின் முதல் தளபதி! மேஜர் சோதியாவின் 16 ஆவது நினைவு தினம் புதன்கிழமையாகும் எம் தாயகத்தின் இதய பூமியென வர்ணிக்கப்படும் அந்தப் பெருங்காடு. அதன் இன்னொரு சிறப்பு வடதாயகத்தையும் தென் தாயகத்தையும் ஒரு சேர அணைத்துக் கொள்வதேயாகும். அந்தக் காட்டின் நடுவே அந்த முகாம். அதை யாரும் அறியவில்லை; அறிவதற்கான நேரமும் கிடைத்திருக்கவில்லை. அந்த முகாம் எப்போதும் கலகலவெனத்தானிருக்கும். காரணம் புலிகளாய்ப் பிறப்பெடுத்த பெண்கள் வாழும் அந்தக் காடு சிறியதோர் நகராய் மாறியதுதான். இங்குதான் மூத்த தளபதியாயும் மருத்துவராயும் விளங்கினாள் சோதியா. பெயர் ஆளுக்கேற்றாற் போல்தான் இருந்தது. சோதியா, சோதியாய் மிகவும் ஆற்றல் மிக்கவராய் விளங்கினார். அண்ணனி…
-
- 0 replies
- 1.3k views
-
-
மூத்த எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் காலமானார்! மூத்த எழுத்தியல் தொல்லியல் அறிஞர், தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் (88) இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியரான ஐராவதம் மகாதேவன் 1930ல் திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் பிறந்தார். 1987-1991 வரை இவர் தினமணி ஆசிரியராக இருந்துள்ளார்.இவர் சிந்தி எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். கல்வெட்டு எழுத்தியல் துறையில் மிக முக்கியமான அறிஞராக பார்க்கப்பட்டார். கல்வெட்டு துறையில் தமிழ் தொடர்பாக இவர் செய்த ஆராய்ச்சி காரணமாக இவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்கள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர், அதில் ஆய்ந்த…
-
- 0 replies
- 378 views
-