Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. போர்நிறுத்த உடன்படிக்கையை குழிதோண்டிப் புதைத்தது யார்?? கீழுள்ள இணைப்பில் சென்று ஒளித்தொகுப்பைப் பார்வையிடவும். (ஒளித்தொகுப்பு ஆங்கில மொழியில் உள்ளது.) http://tamilamutham.net/amutham/index.php?...4&Itemid=49 http://tamilamutham.net/amutham/index.php?...4&Itemid=49

  2. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரதேசங்களிலும் அமைந்திருக்கும் பாதுகாப்புப் படையினரின் முகாம்களை மீது ஒரே வேளையில் தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்றைப் புலிகள் இயக்த் தலைவர்கள் இட்டிருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகவல்களைத் தெடர்ந்து யாழ் முகாம்களை ஒரே வேளை தாக்கி யாழ்ப்பாணத்தைப் பிடிக்க புலிகள் இயக்கத்தினர் தீவிரமாக முயலக்கூடும் என்பதால்,இந்தத் தகவல்கள் வெளியாகிய உடனேயே கடந்த வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்துப் படையினரின் முகாம்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தபட்டுள்ளன. இவ்வாறு புலிகள் இயகத்தினரின் திட்டம் மற்றும் படையினரின் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்ககைகள் பற்றிய தகவல்களை உயர்மட்ட பாதுகாப்புத் துறைப் பிரிவைச் …

  3. கிருலப்பனையில் கருணா? சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு அந்தராவத்தயில் உள்ள கிருலப்பனையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துண இராணுவக்குழுவான கருணா குழுவினருக்கு சொகுசு மாளிகை விற்பனை செய்யப்பட்டிருப்பதால் அங்கே வாழும் மக்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தில் வாழ்கின்றனர். இத்தகலை இன்று புதன்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகமொன்று தெரிவித்திருக்கின்றது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அந்தராவத்தையில் உள்ள இரு மாடிக்கட்டடங்களை உடைய சொகுசு வீடு ஒன்று கருணா குழுவினருக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்கு அண்மையில் புதிதாக அலங்காரம் செய்யப்பட்டு பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீட்டின் முன்பாக இரு வேகத்தடைகள் போட…

  4. ஈழத்துப் பிரகடனம் ஈழப் போராளிகளுடன் செய்த எந்த உடன்பாட்டையும் சிங்கள இனவாத அரசுகள் செயல்படுத்தியதில்லை. உலக நிர்பந்தத்திற்காய் பணிந்து அந்த உடன்பாடுகளில் சிங்கள அரசின் அதிபர்கள் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஆனால் சிங்கள இனவாதக் கட்சிகளின் எதிர்ப்புகளின் காரணமாக, சிங்கள ராணுவத்தின் வெறி காரணமாக, அந்த உடன்பாடுகளை அவர்கள் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். இவைதான் கடந்த பல பத்தாண்டுகளாக ஈழ மக்கள் கண்ட அனுபவம். உடன்பாடுகளால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பது மட்டுமல்ல, தமிழ் இனத்தையே அழிக்கின்ற ஈனச் செயலை சிங்கள அரசும் ராணுவமும் தொடர்ந்து செய்து வருகின்றன. எனவே வேறு வழியின்றி "ஈழப் பிரச்சினைக்குத் தனி ஈழம் தான் தீர்வு" என்று மாவீரர் எழுச்சி நாளில் விடுதலைப் புலி…

  5. வாகரையை இராணுவம் கைப்பற்றிய பின்னர் Channel 4 வில் வந்த ஒரு விபரண வீடியோ. தமிழீழ பிரதேசம் பற்றியும், கருணா குழு பற்றிய குற்றச்சாட்டுக்களையும் வீடியோவில் கொண்டு வந்து ஒரு அலசலை செய்து இருந்தார்கள்.. http://www.channel4.com/player/v2/asx/show...=show:4814:6106 பார்க்க முடியவில்லை எண்றால்... http://www.channel4.com/news/special-repor...age.jsp?id=4515

  6. பாண்டவர்களின் சார்பில் தூது சென்ற பரந்தாமன் பாதி இராச்சியத்தில் இருந்து பஞ்ச கிராமங்கள் வரை துரியோதனனிடம் கேட்டுப்பார்த்தார். ஊசி குத்தும் நிலம் அளவு கூடத் தரமுடியாது என்று விட்டான் துரியோதனன். பாதி இராச்சியம் கோருவது போல் "ஐம்பது ஐம்பதில்" தொடங்கிய சிறுபான்மையினரின் அரசியல் கிளர்ச்சி ஆங்கிலேயர் காலத்தில் அனைத்தும் இல்லை என்று ஆகிவிடவில்லை. காரணம் - துரியோதனர்கள் அப்பொழுது ஆட்சியில் இல்லை! ஆங்கிலேயர் தந்த அரசியல் யாப்பின் பிரிவு 29 சிறுபான்மையினர் பாதுகாப்புக்காக அந்த அரசியல் யாப்பில் ஐக்கியப்படுத்தப்பட்டிருந்த

  7. ஒரு நேயரின் கடிதம் வெரித்தாஸ் வானொலியில் ஒவ்வொரு உலகத்தமிழனும் கேட்கவேண்டிய ஒலிப்பதிவு குரல்-கஸ்பர் அடிகள் நன்றி- http://www.mandaitivu.com மேலதிக விபரங்களுக்கு- http://www.mandaitivu.com/index.php?option...1&Itemid=43

  8. தமிழீழத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக மக்கள் குடியேறுகிறார்கள் : தகவல் வேட்டியும் பறி கொடுத்து கோவணத்தையும் பறி கொடுத்து நிக்கும் சமாதாணம்

  9. வன்னியில் இருந்து ஒரு குடும்பம் கனடாவிற்கு குடிபெயர்ந்துள்ளது . புலம்பெயர் மக்களும் ஈழதமிழ் மக்கள் மற்றும் இந்தியா இந்தோனேசியா மலேசியா சிங்கபூர் தென்னாபிரிக்கா மொறிசியஸ் தீவு வாழ் தமிழர்கள் எல்லோரும் உடனடியாக சிந்திக்க வேண்டிய கால கட்டம் இது ஏனெனில் இந்த பெயர்வானது இன்று இலங்கை விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகரிகளிடம் இருந்து மட்டுமே கசிந்த ?#8220;ர் செய்தியாகும் இது நாளை இலங்கை ஊடகங்களிலும் பின்னர் இந்திய ஊடகங்களிலும் அதன் பின்னர் உலக ஊடகமான் சீ என் என் . பி். பி .பி என்று சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகும் போது அது தமிழர் தரப்பை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கும் அது மட்டுமல்மல ஈழதமிழர் போராட்டதையெ மிகவும் பாதித்து பின் தள்ளி விடும்.பிரித்தானிய இணை அமைச்சர் வர…

  10. கிளிநொச்சியில் இருந்த குடும்பம் ஒன்று வவுனியாவுக்கு இடம்பெயர்ந்ததாக அரச சார்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இக்காலகட்டத்தின் தமிழர் அரசியல் - இராணுவு இருப்பை அதிகம் பாதிக்கக்கூடிய இச்செய்தியை இனிவரும் நாட்களில் சர்வதேச ஊடகங்கள் தீவிரமாக கையிலெடுக்கும் போது புதிய நெருக்கடிக்குள் நாம் உள்ளாகியிருப்பதை காலம்கடந்து உணரும் போது தமிழரின் அரசியல் இலக்கு எமது கையைவிட்டு வெகுதூரம் நகர்த்தப்பட்டிருக்கும். மாறிவரும் உலக மற்றும் இந்திய உபகண்ட அரசியலை உள்வாங்காமல் தமிழர் தரப்பு தொடர்ந்து அடம்பிடிக்குமானால் நாம் இழக்கப்போகும் அரசியல் கையிருப்புகள் எம்மால் என்றுமே மீண்டெடுக்கமுடியாது. ஆக, பிரித்தானிய இணை அமைச்சர் வருகை, கிழக்கு விஜயம், சமாதானம் தீர்வு பற்றிய அவர் தெரிவித்த கருத்து…

  11. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப். கேணல் பொற்கோ அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கருத்து பகிர்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: "போராட்டத்தில் இணைவதற்கு முன்னர் கிறிஸ்தவ பாதிரியாருக்கான கற்கை நெறியில் பொற்கோ இணைந்திருந்தார். அநேகமாக அக்கற்கை நெறியின் நடுப்பகுதியை கடந்த நிலையில் சிங்கள அரசின் இனவெறி தாக்குதலும், 1983 ஆம் ஆண்டின் கொடூரமான இனக்கலவரமும் சேர்ந்து அவரை ஒரு தேசியப் போராளியாக மாற்றியிருந்தது. இன்னும் சொல்வதானால் மக்கள் மீதான ஒரு அன்பு உணர்வினால் அவர் ஆன…

  12. http://video.google.ca/videoplay?docid=-3079296234897669418

  13. இம்மாதம் 22ஆம் நாளுடன் (2007 பெப்ரவரி 22) சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாண்டு நிறைவை எட்டுகிறது. இந்த நிறைவையொட்டி பல கதைகள் உலாவருகின்றன. இவற்றைக் கதைகள் என்பதைவிட கட்டுக்கதை, புனைவு, புழுகு என்றும் சொல்லலாம். ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாட வேண்டுமென்றுதான் இவ்வளவும் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் புலிகள் என்றும், அந்தநாள் வந்த பிறகு ஏதோ நடக்கப் போகிறது என்றும் ஒருகதை. அந்த 'ஏதோ' என்பதைக்கூட சிலர் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அது பெரியதொரு தாக்குதல் என்கின்றனர் சிலர். 'தாக்குதல் கூட இல்லை; நேரடியா ஐ.நா.வில போய் கொடியேத்த வேண்டியது தான் மிச்சம் என்ற ரீதியிலும் சிலரின் கருத்துக்…

    • 28 replies
    • 3.9k views
  14. ஒரே வயிற்றில் பிறந்த தம்பியை எப்படிச் சுடுவது.... 1986ம் ஆண்டு மட்டக்களப்பில் வைத்து ரவிக்குமாரும் அவரது தம்பி அன்ரனியும் ஆற்றுக்கு குளிக்கச்சென்ற வேளை சிங்கள சிறப்பு அதிரடிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். இருவரிடமும் கைத்துப்பாக்கி ஒன்றே இருந்தது. இராணுவம் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்செல்லவும் உரிய சூழல் அங்கில்லை. உயிருடன் பிடிபட்டால் இராணுவத்தின் கொடுமைகள் எப்படி இருக்கும் என்று இருவருக்கும் தெரியும். இதற்கிடையில் தம்பி அன்ரனி தன்னைச் சுடுமாறு அண்ணனுக்கு கூறுகின்றான். ஒரு வயிற்றில் பிறந்து தான் தூக்கி வளர்த்த தம்பியை எப்படிச் சுடுவது, ஆனாலும் ரவிக்குமார் தேச நலனையே சிந்தித்தார். பகைவரிடம் பிடிபட்டு அழிய விரும்பவில்லை சொந்தத் தம்பியைச் …

  15. அன்ரன் பாலசிங்கத்தின் பொறுப்பை ஏற்கமாட்டாராம் அடேல் விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகத் தாம் செயற்பட மாட்டார் என்று திருமதி அடேல் பாலசிங்கம் தெரிவித்தாக லண்டனில் இருந்து வெளிவரும் "த டெய்லி டெலிக்கிராப்' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. மறைந்த அன்ரன் பாலசிங்கம் வகித்து வந்த விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பதவியை அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம் ஏற்றுச் செயற்படுவார் எனச் செய்திகள் சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன. ""தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப் பில் எனது கணவர் வகித்து வந்த பதவியை நான் ஏற்கவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை'' என்று திருமதி அடேல் ""ஒஸ் ரேலியன்'' பத்திரிகைக்கு மின்னஞ்சல் …

  16. போர்களமாடி வீழ்ந்த வரலாறு பதிவாளர்களுக்காக....

  17. அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிகள் கருநா காட்டிக்குடுப்பு கும்பலுடன் சந்திப்பு இதன் நோக்கம் என்ன

  18. மகாத்மா காந்தி 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரையே ஆதரிக்க மறுத்த தமிழ்நாட்டுப் பிராமணர்களும், இந்து பத்திரிகையும் பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் வெறுப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. தமிழ்பேசும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் எதற்காக பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கிறார்களென்ற கேள்விக்குப் பல தமிழர்கள் விடைகாண முயல்வதைக் காணலாம். நானும் கூட பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி அவற்றை நியாயப்படுத்தவும் முயன்றிருக்கிறேன். மகாத்மா காந்தி 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் அவர் அகமதாபாத்தில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்த பின்பு 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே மகாத்மாவையும் அவரது சுதந…

    • 3 replies
    • 1.1k views
  19. வேறு யாரும் ஏற்கனவே பதிந்தார்களோ தெரியது... http://www.youtube. com/watch? v=9cJLD-P0hPQ http://www.youtube. com/watch? v=gGw_QT_ LaTI

    • 1 reply
    • 2.6k views
  20. வாகரை ஒரு பலப்பரீட்சைக்கான களமல்ல| -அருஸ் (வேல்ஸ்)- வாகரையை கடந்த 19.01.2007 அன்று அரச படைகள் கைப்பற்றியதை அடுத்து படை அதிகாரிகளை பாராட்டிய ஜனாதிபதி மகிந்த தனது மகிழ்ச்சியையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். கிழக்கு முழுவதும் மிகவிரைவில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தனது அரசியல் ஆதங்கத்தை தெரிவிக்கத் தவறவில்லை. மாவிலாறு, சம்பூர், வாகரை என மகிந்தவின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. 1995 இல் யாழ். குடாவை கைப்பற்றிய பின்னர் சந்திரிக்கா பாரிய விழா எடுத்திருந்தார். தென்னிலங்கை முழுவதும் நீலக்கொடிகள் பறந்தன, அதற்கான காரணமும் உண்டு. யாழ். குடாவானது சிறிலங்கா இராணுவத்துடனான உக்கிர மோதல்களின் பின்னர் 1984-1985 காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள்…

    • 2 replies
    • 939 views
  21. ஈழநாதம் நாளேட்டில் 25.01.07 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் தமிழருக்கு மட்டுமல்ல...! 'கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக பாரிய மனித அவலத்தைச் சந்தித்து வருகின்றபோதும் சிறிலங்கா அரசோ, சர்வதேச சமூகமோ எதுவித உயரிய நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக்கழித்து வருகின்றன" என்ற யாழ். மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஏற்புடையவையே. ஆனால் இது குறித்துச் சிறிலங்கா அரசிடம் முறையிடுவதாலோ அன்றிக் குற்றம் சுமத்துவதினாலோ பயன் ஏதும் இல்லை. ஏனெனில் யாழ். குடாநாட்டில் ஏற்பட்டுள்ள இம் மனித அவலத்திற்குச் சிறிலங்கா அரசே காரணமாகும். ஒருவகையில் பார்த்தால் சிறிலங்கா அரசால் இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூடக்; கூறலாம். ஆகையினால் சிறி…

  22. வாகரையில் தவறாகிப்போன மதிப்பீடும், இலக்கும்! -ஜெயராஜ்- Thursday, 25 January 2007 Courtesy: TamilNaatham வாகரைப் பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியமையானது விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டனரா?- விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் இராணுவச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா? என்ற கேள்விகளைப் பலர் கேட்கக் காரணமாகியுள்ளது. வாகரைப் பிரதேசத்தின் முக்கியத்துவம், கிழக்கில் ஒரு பிரதேசத்தின் கட்டுப்பாட்டை விடுதலைப் புலிகள் இழந்துள்ளமை போன்ற விடயங்களே இக்கேள்விகள் எழுவதற்கான முக்கியமான காரணியாகும். மேல் சொன்ன காரணங்களின் அடிப்படையில் பார்க்கப் போனால், வாகரைப் பிரதேசத்தை விட்டு விடுதலைப் புலிகள் வெளியே…

    • 4 replies
    • 1.3k views
  23. இந்தக் கட்டுரை எழுதுவதாகச் சொல்லி சில மாதங்கள் போய்விட்டன. இறுதியாக முகமாலை வழியாக ஆனையிறவைக் கைப்பற்ற சிங்களப் படைகள் முயற்சித்து அடிவாங்கிய பொழுதில் நான் இதைச் சொல்லியிருந்தேன். ஓயாத அலைகள் ஐந்துக்கான காலம் நெருங்கிவருகின்ற படியால் கிடைக்கும் கொஞ்சநஞ்ச நேரத்தில் இந்த "ஆய்வுக் கட்டுரை"யை எழுதிவிடவேண்டுமென்று முயற்சித்து எழுதுகிறேன். இந்தக் கட்டுரையை வாசிக்க முன் நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல் ஒன்றேயொன்றுதான். அந்த முகமாலை முறியடிப்புச்சமரில் கொல்லப்பட்ட சிறிலங்காப் படையினரின் சடலங்கள் எழுபத்தைந்து வரையானவை இலங்கை அரசிடம் புலிகளால் கையளிக்கப்பட்டன. அப்படிக் கையளிக்கப்பட்ட அனைத்துச் சடலங்களும் இராணுவச் சப்பாத்துக்கள் அணிந்திருந்தபடியே கையளிக்கப்பட்…

    • 61 replies
    • 6.7k views
  24. ‘Dr’ R Jeyadevan (Self Appointed leader of the little known Tamil Democratic Congress) and his views on Human Rights Violations by the LTTE ‘Dr’ R Jeyadevan (leader of the little known Tamil Democratic Congress) and his views on Human Rights Violations by the LTTE I have just seen extracts, from a letter sent by a man called ‘Dr’ R Jeyadevan to Messers Jeremy Corbyn and John McDonnel, both Labour MPs, who are seeking the lifting of the ban on the LTTE in Britain, in a petition they have submitted to the government. This ‘Dr’ Jeyadevan appears to be opposed to such a move. His actions are surprising judging from his background. . I had not previously heard of…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.