எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
'இலங்கை ராணுவம் சம்பூரை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும். மறுத்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.' _முதல் முறையாக, பகிரங்கமாக இலங்கை அரசை எச்சரித்திருக்கிறார்கள் புலிகள். 'சம்பூரில் ஊடுருவி, அங்குள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை வெளியேற்றியது, சந்தேகமேயில்லாமல் அரசு பயங்கரவாதச் செயல்தான்' என்று அழுத்தம் திருத்தமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். ‘அதெல்லாம் முடியாது, சம்பூரை விட்டுத்தரமாட்டோம்’ என்று இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டாலும், உள்ளுக்குள் அவர்களுக்கு ஒரு பயம். திரிகோணமலை எண்ணெய்க் கிணறுகளை புலிகள் குறி வைத்துவிட்டால் என்ன செய்வது? இந்தப் பயத்தின் பின்னணியை ஆராய்வோம். இரண்டாம் உலகப் போ…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் சமகால சிரேஷ்ட அரசியல்வாதிகள் என்று வர்ணிக்கப்படக் கூடியவர்களில் அந்த அந்தஸ்துக்குப் பொருத்தமில்லாத வகையில் அடிக்கடி தான்தோன்றித்தனமாகப் பேசுபவர் என்றால் அநேகமாக அது இரு முன்னாள் பிரதமர்களைப் பெற்றோராகக் கொண்ட அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கவாகத்தான் இருக்க முடியும். ஏறத்தாழ 30 வருட காலமாக பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அவர் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் கருத்துகளைத் தெரிவித்த எண்ணற்ற சந்தர்ப்பங்களை எடுத்துக் கூறமுடியும். அத்தகையதொரு சந்தர்ப்பத்தை கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் காணக்கூடியதாக இருந்தது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அநுரா, எவரும் எதிர்பார்க்காத முறையி…
-
- 0 replies
- 1k views
-
-
பதில்கள் இன்னும் தெளிவாகவில்லை ஆனால் வினாக்கள் மிகத் தெளிவாகின்றன! (பீஷ்மர்) [10 - September - 2006] [Font Size - A - A - A] அநுரா பண்டாரநாயக்க நிதானத்துக்கு பேர் போனவர். இல்லையென்றாலும் நல்ல பேச்சாளர், நல்ல விவாத திறமை உள்ளவர். இந்திய ஸ்தானிகர் பற்றி அவர் கூற்றுக்கு பாராளுமன்றத்தில் உடனடியாக எவரும் பதில் குறிப்பாக மறுமொழி எதுவும் சொல்லவில்லை. ஆனால், புதுடில்லியோ அதனை ஒரு பாரதூரமான விடயமாகவே கொண்டது. கொண்டு, ராஜரீக நிலையில் `கடுமையானது' என்று குறிப்பிடத்தக்க ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அப்பொழுதுதான் கொழும்பின் அரசாங்கத்திற்கு நிலைமையின் பாரதூர தன்மை புலனாயிற்று. பதிலாக வெள்ளியன்று மாலை வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர, அநுரா பண்டாரநாயக்காவின் கூற்று அரசாங்கத…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழர் தரப்பு மீது அடுத்த கட்ட நடவடிக்கை ஒன்றினை மிகத் தீவிரமாக அமுல்படுத்த ஐரோப்பிய யுhனியன் தீர்மானித்துவிட்டதாம். முக்கியமாக புலத்தில் சில பாய்ச்சல்கள் நடாத்துவதன் மூலம் தாயகத்தில் புலிகளைக் கட்டுப்படுத்தலாம் என நம்புகின்றார்களாம். இதன்மூலம் தாங்கள் சிறீலங்கா அரசுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தப்போகின்றார் போலுள்ளது.
-
- 0 replies
- 1.1k views
-
-
சம்பூரில் இருந்து வெளியேற்றம் யுத்தத்தில் பின்னடைவல்ல! -ஜெயராஜ்- "சம்பூரை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டோம்" என்பது பெருவெற்றிச் செய்தியாகச் சிறிலங்கா அரசாங்கத்தால் பிரச்சாரப்படுத்தப்பட்டுள்ள
-
- 1 reply
- 1.3k views
-
-
சம்பூர் ஆக்கிரமிப்பு போர்நிறுத்தத்தின் இறுதி அத்தியாயம் -அருஸ் (வேல்ஸ்)- போர் நிறுத்தத்தில் இருந்து அரசு வெளியேறப்போவதில்லை என்ற சொல்லை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு போரை முன்னெடுப்பது தான் அரசின் தற்போதைய தந்திரம். இந்த தந்திரத்திற்குள் தென்பகுதி சிங்கள மக்களை ஏமாற்றுவதற்குரிய கபடத்தனமும் ஒளிந்துள்ளது. சிங்கள மக்களை சிங்கள அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஏமாற்றுவது ஒன்றும் புதிது அல்ல. இது காலங் காலமாக நடைபெறுவது தான். 1995 இன் இறுதியில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி சிங்கக்கொடியை ரத்வத்தை ஏற்றியதுடன், சிங்கக்கொடியை கட்டிக்கொண்டு ஆஐ-24 ரக தாக்குதல் உலங்குவானு}hர்தி நகரத்தை சுற்றி பறந்ததும் எல்லோரும் அறிந்ததே. அதன் பின்னர் 1996 இன் ஆரம்பத்தில் யாழ். குடாவை கைப்பற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சம்பூர் மீதான ஆக்கிரமிப்பு அரசு தலையில் ஆபத்து -சிறீ இந்திரகுமார்- யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டிருக்கும் படையினரைப் பாதுகாக்க வேண்டுமானால் புலிகளின் ஒன்று திரட்டப்பட்ட படைப்பலத்தை சிதைக்கும் பட்சத்திலேயே யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து பாதுகாக்கவும், அங்கு தரித்துள்ள படையினரின் உயிர்களைக் காப்பாற்றவும் முடியுமென்ற நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சிறிலங்கா அரசு வடபாகத்தில் சிக்குப்பட்டிருக்கும் பெரும் படைவளத்தைப் பாதுகாக்கக் கிழக்கில் ஒரு போர் வாசலைத் திறந்து புலிகள் இயக்கத்தை அதற்குள் வீழ்த்த முயன்ற போதும் புலிகள் இயக்கம் தனது மூலோபாயத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படாத வகையில் தன்னைப் பாதுகாத்துச் சிறிலங்கா இராணுவம் அகலக்கால் பத…
-
- 0 replies
- 957 views
-
-
தனது இராணுவ வழங்கலை கடலினூடாகச் செய்வதற்காக சிறிலங்கா அரசு யாழ்க்குடாவில் உள்ள தமிழ் மக்களையும் வன்னியில் உள்ள மக்களையும் பட்டினிச் சாவிற்குத் தள்ளி உள்ளது.தொலை பேசியினூடாக பலரும் தமது உணவுக்கையிருப்பு முடிந்து வருவதாகவும் கடைகளில் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறி வருகின்றனர்.இன்னும் ஒரு சில நாட்களில் மக்கள் சாப்பிடுவதற்கு வழி இன்றி இருக்கப் போகின்றனர்.சிறிலங்கா அரசோ தரைவழிப் போக்குவரத்தைத் தொடர்ந்தும் தடுத்து வருகிறது.மாற்றாக மக்களை மனிதக் கேடயங்களாக்கி கடல் வழியாக தனது இராணுவத்திற்கான வழங்களைச் செய்து கொண்டிருக்கிறது. சர்வதேசமோ இதனைக் கண்டும் காணாமலும் மொவுனமாக இருகிறது.தமிழ் நாட்டு மக்களே நீங்கள் தான் குரல் கொடுத்து இந்திய அரசை இதில் தலையிட்டு தமிழ் மக்கள் பட்டினிச்…
-
- 0 replies
- 979 views
-
-
சம்பூர் இழப்பை இராஜதந்திரப் பின்வாங்கல் என்றுதான் நானும் சொல்கிறேன். ஆனால் அதைவைத்துச் செய்யவேண்டிய இராஜதந்திரத்தை ஏன் இதுவரை செய்யவில்லை? உண்மையில் புலிகள் இதைவைத்து இராஜதந்திர நகர்வைச் செய்வார்கள் என்று நான் நம்பவேண்டுமென்றால் மாவிலாறு விசயத்திலயே செய்திருக்க வேணும். மாவிலாறை ஒரு பிரச்சினையாக்கி நகர்வு செய்யாதவர்கள் சம்பூரை என்ன செய்வார்கள் என்ற கேள்வி இருக்கு. மாவிலாறை விட்டு இராணுவம் பின்வாங்க வேண்டும் என்ற ஒரு வசனத்தை நோர்வேயின் வாயிலிருந்தோ கண்காணிப்புக் குழுவின் வாயிலிருந்தோ வரவைக்க முடியவில்லை புலிகளால். அப்படிச் செய்யாததை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கவில்லை. சரி. புலிகள் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் தொடங்கியதால் மாவிலாறைப் பிரச்சினையாக்கவில்லை என்று…
-
- 7 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் ஜேர்மன் பார்வையில் வாசித்து பாருங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்த படத்தை சங்கதி போட்டு இருந்த்து... இதை பார்த்த எங்களவர்... தமிழ்ச்செல்வன் அண்ணா வைத்திருப்பது விமான எதிர்ப்பு ஏவுகணையா எண்டு குளம்பமுதல் ஒரு சிறு விளக்கம்... இது இலகுரக தாங்கி எதிர்ப்பு எறி குண்டு செலுத்தி (LAW) என்பதாக்கும்.. :wink: :P :P சீனத்தயாரிப்பான 80mm விட்டமுள்ள PF-89 என்பது இதன் பெயர்...!
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவதன் மர்மம் என்ன? பொலிஸ் மா அதிபர் தலைமையில் குழு இயங்குகின்றதா? என சபையில் ஜோன் அமரதுங்க கேள்வி. பாகிஸ்தானிடம் இராணுவ உதவிகளைப்பெறும் ஜனாதிபதி, இந்தியாவிடம் உதவிகளைக் கோருவது எந்தளவு தூரம் சாத்தியமானது என ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.நாட்டில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, கடத்தப்பட்டமை குறித்து அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். குறிப்பாக கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவதன் மர்மம் குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். கடத்தப்பட்டவர்களை விடுவிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய பாராளுமன்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சமாதான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு பிரதேசத்தையே ஆக்கிரமிக்க முடியுமாயின் அதன் பின்னர் சமாதானம் தொடருவதற்கோ முன்னெடுக்கப்படுவதற்கோ வாய்ப்பு இல்லை என்று தமிழீழ அரசியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் கவியழகன் தெரிவித்துள்ளார். தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.09.06) ஒளிபரப்பான நிலவரம் நிகழ்ச்சியில் கவியழகன் இது தொடர்பில் கூறியதாவது: திருகோணமலையின் இன விகிதாசாரத்தில் காத்திரமான செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு பிரதேசம் சம்பூராகும். அந்தப் பிரதேசத்தை அகற்றுவதனூடாக- அந்தப் பிரதேசத்திலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்களவரை குடியேற்றுவது என்பது சிறிலங்காவின் அரசியல் தேவைகளுக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும். வடக்கு-கிழக்கு என்ற தமிழர் தாயகக் …
-
- 2 replies
- 1.6k views
-
-
1658 September 5 The Dutch take Jaffnapatnam, the last Portuguese possession in Ceylon, modern day Sri Lanka. 1658ம் ஆண்டு செப்டம்பர் 5ம் திகதி இலங்கையின் போர்த்துக்கேயரின் கடைசி ஆக்கிரமிப்பு பிரதேசமான யாழ்ப்பாணம் ஒல்லாந்தரால் வென்றெடுக்கப்பட்ட தினம்!
-
- 0 replies
- 1.2k views
-
-
சம்பூர் பொறிக்குள் அகப்பட்டுவிட்ட அனுசரணையாளர்கள் திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையும் ஊடகங்களும் சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். மண்டைதீவில் அழிப்புச் சமரி…
-
- 0 replies
- 903 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் இன்னமும் பாரிய மாற்றமேற்படவில்லையென்றே கூறலாம். சகலரும் கூறுவது போன்று யுத்தத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண இயலுமென்று இந்தியாவும் முன்மொழிகின்றது. மூன்றாவது சக்தி உள்நுழையக் கூடாதென எடுத்த சகல நகர்வுகளும் திசை மாறிப் போவதை கவலையுடன் எதிர்கொண்டவர்கள், சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபடும் மேற்குலகின் அழைப்பினை இதுவரை நிராகரித்தவர்கள், பாகிஸ்தானின் உள்நுழைவுடன் தாமாக முன்வந்து இணைப்பினை ஏற்படுத்த விரும்புகிறார்கள். முன்பு பல தடவை இணைத்தலைமை நாடுகளின் இலங்கை தொடர்பான கூட்டங்களைப் புறக்கணித்த இந்தியா, இன்று தாமாகவே கலந்து கொள்ள எத்தனிப்பதனை மேற்குலகின் இராஜதந்திர வெற்றியாகக் கூடக் …
-
- 0 replies
- 882 views
-
-
ஆயிரம் ஆயிரம் தனி மனித சரித்திரங்கள் சங்கமமாகிய பெரு நதியாக வீறுகொண்டோடும் எம் விடுதலை வரலாற்றில் ஒரு வேவுக் போராளியின் உண்மைக் கதை. ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன. அது ஒரு வலிந்த தாக்குதலக்குரிய நகர்வு. இறுமார்புடன் நிமிர்ந்து நிற்கும் ஆனையிறவுத் தளத்தின் இதயத்திற் பாய்வதற்காக அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆந்த உவர்மண் வெளியில் ஆங்காங்கே காணப்படும் கன்னாப் பற்றைகளை மறைப்பாகக் கொண்டு அவர்களுடைய அணிநகர்ந்துகொண்டிருந்த அணிகளில்இ பிரதான முகாமைத் தாக்கியழிக்கும் சாள…
-
- 0 replies
- 926 views
-
-
அமெரிக்க தமிழர்கள் கைது ஒரு சத்தியத்திற்கு மாறான கொடூர நிகழ்வை அறிந்தவன், அவன் ஒரு கோழையாக இருந்தாலும் அதற்குரிய எதிர்ப்புணர்வை காட்டியே தீருவான். - FBI யின் தரம் குறைந்த புலனாய்வு அணுகுமுறை. தம் சொந்தங்களின் தாங்கமுடியாத இழப்பின் காரணமாக உணர்வுகளால் உந்தப்பட்ட அப்பாவித் தமிழர்கள் சிலரை ஏமாற்றி, தம் சதிவலைக்குள் சிக்கவைத்து அதனை தம் புலனாய்வு வெற்றியாக தம்பட்டமடிக்கும் தரங்குறைந்த புலனாய்வு செயற்பாடொன்றை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சமஷ்டிப் புலனாய்வுப் பணியகம் (FBI) அரங்கேற்றியுள்ளது. இந்த வகையில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முயன்றார்கள் எனக் கூறி எட்டு அப்பாவித் தமிழர்களை (FBI) கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளது. உலகெங்கும் வாழும் த…
-
- 4 replies
- 1.4k views
-
-
பொழுதுபோகமலிருந்த போது சோபா சக்தி என்பவரின் வலைப்பதிவை பார்த்தேன. அதில யாழ்ப்பாண சமூகத்தியல் நிலவிய சாதி ஒடுக்கு முறைகளைக் கிளறி சாதியடிப்படையில் பிரிவினையை தோற்றுவிக்க முனைவது தெரிகிறது. அது சரி தலித் என்றால் என்ன? யாழ்பாணத்தில் நான் வாழந்த 27வருட காலத்தில் அப்;படியொரு சொலலையே நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் பின்னர் தமிழக மற்றும் இந்திய பத்திரிகைகள் மூலம் இந்தச்சொல்லை அறிந்தேன். சோபா சக்தி என்பவர் எனது அயற்கிராமம் ஒன்றை தலித் கிராமம் என குறிப்பிட்டிருக்கிறார். சாதியால் தாழ்த்தப்பட்ட கிராமம் என அதனை நான் அரத்தங்கொள்ளலாமா? அல்லது தலித் என்ற சொல்லுக்கு வேறு பிரத்தியேகமான அர்த்தம் உள்ளதா?
-
- 7 replies
- 9.1k views
-
-
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... ஈழத்தில் IPKF(Innocent People Killing Force) இந்திய இரணுவத்தால் பதிக்கபடாதவர்கள் இல்லை எனலாம் ஆக IPKF ஆல் பாதிக்கபட்டவர்கள் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.இது ஒரு தகவல் பெட்டகமாக உலகதமிழருக்கும் எம் வாரிசுகளுக்கும் இருக்கவேண்டும் என்ற ஒரு நோக்கோடு இவ் கருத்து பிரிவை ஆரம்பிக்கின்றேன் உங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு என நான் நம்புகின்றேன் அன்புடன் ஈழவன்
-
- 66 replies
- 12.3k views
-
-
முறியடிப்பு சமர், தற்காப்பு போரென விடுதலைப்புலிகளும் அரச முப்படைகளும் யாழ். குடாநாட்டில் புதியதோர் போர் முனையை திறந்துள்ளதால் இதுவரைக்கும் 300 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள அதேவேளை, பொது மக்கள் தரப்பிலும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆட்லறிகள், பல்குழல் பீரங்கிகள் (மல்ரிபரல்) மோட்டார்கள், கிபீர் விமானங்கள், எம்.ஐ. 24 சண்டை ஹெலிகள், கடற்படைப் படகுகளென இருதரப்பும் மூர்க்கமாக மோதுவதால் கடந்த ஒரு வாரமாக குடாநாடு குலுங்கிக் கொண்டிருக்கின்றது. முகமாலை முன்னரங்கப் பகுதியில் வெடித்த மோதல், நாகர் கோவில், கிளாலி, மண்டைதீவு, அல்லைப்பிட்டி, ஊர்காவற்றுறையென பரவி இறுதியில் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி முப்படைத்தளம் வரைக்கும் சென்றுள்ளது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
'சென்றார்கள்... வென்றார்கள்... வந்தார்கள்...." மண்டைதீவு தளம் மீதான அதிரடி நடவடிக்கை -சிறீ இந்திரகுமார்- அந்தச் சிறுகாட்டை விசில் சத்தங்கள் சுற்றி வளைத்திருந்தன. விசில் சத்தம் கேட்ட அடுத்த கணம் துப்பாக்கிகள் உரசும் சத்தமும், கோல் சரை இறுகக்கட்டும் அவசரமும் துள்ளிக் குதித்து வேகமாக ஓடும் புூட்ஸ் சத்தங்களுமாய் அந்தப் புலி வீரர்களின் பயிற்சிப் பாசறை சில நாட்களாக சுறுசுறுப்பாகியிருந்தது. காலையில் வாத்தி 'விசில்" அடிச்சா வாத்தி பயிற்சி முடியுமட்டுக்கும் எங்களைப் பயிற்சி எண்டு வாட்டி எடுக்கும் சில நேரங்களில அண்ண சொன்னத பெடியளுக்கு ஞாபகம் வர மறுத்தாலும் வாத்தி வாட்டுற வாட்டுல அண்ணை சொன்னது ஞாபகத்துக்கு வரும். 'கடுமையாகப் பயிற்சி செய் இலகுவாகச் சண்டை…
-
- 0 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரெலிய வரலாற்றில் இவ்வளவு சனக் கூட்டத்தை கண்டு என் மனம் பூரிப்படைந்தது.இருக்கைகளில் இருந்தவரை விட நின்றவரே அதிகம் கிட்டத்தட்ட 800 மக்கள் கலந்து கொண்டனர் விரைவில் படங்களை எதிர்பாருங்கள் அன்புடன் ஈழவன்
-
- 0 replies
- 928 views
-
-
-
- 41 replies
- 9.6k views
-
-
பாருங்கள் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்
-
- 0 replies
- 941 views
-