எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
http://campaigns.amnesty.org/campaigns/security-with-human-rights/tell-the-truth
-
- 1 reply
- 633 views
-
-
செஞ்சோலை படுகொலை நினைவில் …. தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். சோலை மலர்கள் கருகிய …. முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களு…
-
- 15 replies
- 1.6k views
-
-
அம்பாறை வீரமுனையில் முஸ்லிம் காடையர்கள் சிங்கள இராணுவத்தின் துணையுடன் நூற்றுக்கணக்கான தமிழர்களை உயிருடன் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்த நினைவு நாள் இன்று. முஸ்லிம் காடையர்களாலும் தமிழ்ப் பிரதேசங்களில் வன்முறையான தாக்குதல்களும் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட…
-
- 5 replies
- 9.1k views
-
-
|| பூரணம் அம்மா, ஆரையம்பதி, மட்டக்களப்பு. || மட்டக்களப்பின் அந்த வைத்தியசாலையில் குப்பிகடித்து வீரச்சாவடைந்த அந்த இரு இளைஞர்களின் உடல்களையும் சிங்களப்படைகள் கொண்டுவந்து வீசிவிட்டுப் போனபோது, பூரணம் அம்மாவும் அங்கேதான் நின்றிருந்தார். அருகில் சென்றுபார்க்கமுடியாமல் யார்பெற்ற பிள்ளைகளோ என்று குழறி அழுதுவிட்டு சிங்களப்படைகளை திட்டித்தீர்த்து சபித்து வீடு திரும்பியிருந்தவரைச் சந்திக்க, அவர் உணவூட்டி பகையிடமிருந்து மறைத்துப் பாதுகாத்த பிள்ளைகளின் வருகை. வாசல்வரை வந்தவர்களுக்குள் தயக்கம். அன்றுவரைக்கும் இல்லாத தடுமாற்றம். போராடு என்று அம்மாவே அனுப்பிய அவரது ஒரே ஒரு மகன்தான் வைத்தியசாலையில் போடப்பட்டவன் என்பதை எப்படிச் சொல்வது? தாங்குவாவா? சத்தம் போட்டு குழறுவாரா? " அவனைக் …
-
- 1 reply
- 573 views
-
-
புலம்பெந்த தேசத்தில் பிறந்து 8 வயதில் தமிழீழ மண்ணிற்கு சென்று தற்போது நோர்வேயில் வசிக்கும் 17 வயதுடைய மாளவி சிவகணேசன் அவர்கள் தமிழீழ நாட்டின் கட்டமைப்பு மற்றும் மக்கள் ,போராளிகள் பற்றி உலக நாடுகளில் உள்ள இளைய தலைமுறையினருக்கு எடுத்து விளக்கும் விதமாக ஒரு புத்தகத்தினை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் அவருக்கு அனைவரும் ஆதரவு வழங்கி ஊக்குவிப்போம் . I (Malavi Sivakanesan) was born and brought up in Norway and at the crucial moment of the civil war in Sri Lanka, just like many of the Tamils around the world I also participated in demonstrations every single day and sent letter after letter to the politicians in Norway. At one point all the youth who had worked hard to win back…
-
- 5 replies
- 845 views
-
-
பகிரப்படாத பக்கத்திலிருந்து.... முல்லைத்தீவு நகரம் இந்தியஇராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த காலம். நகரிலிருந்து பிரிந்துசெல்லும் ஒவ்வொரு வீதியின் தொடக்கச் சந்தியிலும் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீதிச்சோதனைகளும் வீதிக்கண்காணிப்புகளும் பலமாக இருந்தன. அவனுடைய குடும்பம் சின்னாற்றங்காட்டில் குடியேறி பல ஆண்டுகள் கடந்திருந்தன. தொடக்க நாட்களில் அந்த ஊரின் சூழல், இடைவெளியை ஏற்படுத்தியபோது சில நாட்களிலேயே அந்தச் சூழலோடு அவன் ஒன்றித்துப்போனான். அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, நகரிலுள்ள பள்ளிக்கூடத்துக்குப் புறப்படுவான். அவனுடைய பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து அண்ணளவாக இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருந்தது. ஊரிலுள்ள மாணவர்களும் சாரி சாரியாக வந்துகொண்டிருப்ப…
-
- 0 replies
- 964 views
-
-
தமிழீழம் என்பது ஒரு கோசமோ,சலுகையோ காகிதத்தில் எழுதப்பட்ட விட்டுக்கொடுப்புக்களுக்கு உள்ளாக்கக் கூடிய வெற்று அரசியல் கோரிக்கையோ அல்ல. அது இலங்கைத் தீவில் வரலாற்றக்கு முற்;பட்ட காலம் தொட்டே பல்லாயிரம் தலைமுறைகளாக தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களுடைய மறுக்க முடியாத வரலாற்று உரிமையும் இறைமையும் உள்ள ஒரு நாடாகும். இலங்கைத் தீவில் வாழும் இறைமையுள்ள இனம் என்று சொல்வதற்கு சிங்கள மக்களுக்கு உள்ள உரிமையைவிட தமிழீழத் தமிழ் மக்களுக்குள்ள உரிமை அதிகமாகும்.ஏனெனில் தமிழ் மக்கள் சிங்கள இனம் இலங்கைத் தீவில் தோற்றம் பெறுவதற்கு முன்பிருந்து அங்கு வாழ்ந்து வருபவர்களாகும். இதற்கான தொல்லியல் மானிடவியல் சான்றுகள் நிறையவே இருக்கின்ற போதிலும் தமிழர்களுடைய அரசுகள் என்கின்ற போது கி.பி.13 ம் நூ…
-
- 1 reply
- 631 views
-
-
என்றும் எனக்குள் அழியாத காதலிக்கு....! இதுதான் நான் உனக்கு கடைசியாய் எழுதும் கடிதம் என நினைக்கிறேன். இனிமேல் உன்னை சந்திப்பது என்பது நிட்சயம் அல்ல... ஏனென்றால் எங்களின் இராணுவம் ஒரு போரைத் தொடங்குவதற்கு தயாராகிக்கொண்டிருக்கு, வெல்ல முடியாத அந்த சண்டைக்கு நானும் போகப்போறேன். என்ற வீட்டுக் கஸ்ரமும் , உன்னோடு வாழ வேண்ரும் என்ற ஆசையும் தான் நான் படையில் சேர ஒரு காரணம். இப்ப நான் ஏமாந்து போயிற்றேன் நிமாலி...! உண்மையில் நான் நினைத்தது மாதிரி இங்கு இல்லை. எங்கட நாட்டுக்காக பயங்கர வாதிகளை எதிர்த்து போராட வேண்டும் என்றுதான் அரசாங்கம் சொன்னது. அதற்காகத்தான் நிறைய சம்பளமும் தந்தது. ஆனால்... இங்கே வந்த பின்புதான் தெரிந்தது, இந்த சண்டையே தேவையில்லை என்று.. நான் என்ன செய்கிறது.…
-
- 0 replies
- 944 views
-
-
|| சுதுமலைப் பிரகடனம் .... இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது. நாம் ஆயுதங்கள…
-
- 7 replies
- 1.3k views
-
-
தமிழீழ விழுமிய போரியல் கோட்பாடுகள் மட்டும் சார்ந்து விடியலின் கனவுடனும் வருங்காலத்தின் தாயகம் சார்ந்த தெளிவூட்டளுக்காகவும் அனைத்து தமிழீழ விடுதலை மகுடம் சார்ந்த விடயத்துடன் வீசசெய்துள்ளோம் எம் இணையத்தை ... ஈழப் படுகொலைகள் உயிராயுதங்கள் ஒளிப்பதிவுகள் களங்கள் தமிழீழ படைத்துறைகள் தமிழீழ போராட்ட வரலாறு தமிழீழக் கவிதைகள் தலைவரின் சிந்தனைகள் தாயகம் தியாக தீபம் திலீபன் தேசத்தின் குரல் தேசிய சின்னங்கள் தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரைகள் நாட்டுப்பற்றாளர்கள் நூல்கள் பாடல்கள் போராளிகளின் படைப்புக்கள் விம்பங்கள் விழுதின் வேர்கள் வீரச்சுவடுகள் வீரத்தளபதிகள் வீரவணக்க நாள் ம…
-
- 0 replies
- 713 views
-
-
தமிழரின் பாராம்பரியத்தின் அடையாளம் பறை -அதனை சொல்லும்போதே உடலில் ஏற்படும் அதிர்வை விவரிக்க முடியாது - இது ஒரு ஆவணப் பட்ம் - நிட்சயம் பார்வையிடவேண்டியது. இது ஒரு ஆவணப் பட்ம் - நிட்சயம் பார்வையிடவேண்டியது.
-
- 0 replies
- 562 views
-
-
தமிழர்களின் பாரம்பரியம் மிக்க, அல்லது வீர விளையாட்டு என்று பார்க்கப்படுகின்ற மாட்டுவண்டி சவாரிக்கு மாடுகளை தெரிவு செய்து கொள்வதிலும் யாழ்ப்பாணத்து சமுகத்தினர் கைதேந்தவர்கள். ஒரு காளைமாட்டுக் கன்று பிறந்து சிறிது காலத்தின் பின்னர் அதனை விலை கொடுத்து வாங்கி சவாரிக்காக தயார் செய்வார்கள் நம்மவர்கள். சாஸ்திர முறைப்படி அந்த கன்றினை வாங்கி தங்கள் வீட்டுக்கு கொண்டு வருவார்கள். யாழ்ப்பாணத்தில் சவாரிக்காக விடப்படுகின்ற காளைகளை இனம், நிறம், சுழி என்பவற்றை அடிப்படையாக வைத்து சவாரிக்காரர்கள் பாகுபடுத்துவார்கள். நாட்டான் இனக் காளை, கேப்பை, ஜேசி, சிந்திக்கலப்பை, வடக்கன் எனும் இனக்காளைகள் யாழ்ப்பாண தரவைகளில் இன்று வரைக்கும் ஓடுகின்ற மாடுகள் ஆகும். நாட்டான் இனக் காளைகள் – யாழ்ப்பாணத்…
-
- 8 replies
- 3.9k views
-
-
தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! இந்தக் கட்டுரையை சற்று நிதானமாக வாசியுங்கள். உங்கள் வாசிப்பின் முடிவில், மெல்ல மெல்ல கசக்கும் பெருநெல்லிக்கனியின் இறுதியில் தட்டுப்படும் ஒரு அதீதமான இனிமை தொக்கி நிற்பதை உணரலாம். இந்த கட்டுரைக்கு இதுவே பொருத்தமான உவமானமாகவும் நமக்குத் தெரிகிறது. ================================================ இனி பிரபாகரன் ‘மரணம்’ குறித்த எந்தக் கேள்விகள் வந்தாலும் அவற்றுக்கு இந்தக் கட்டுரையை பதிலாகத் தாருங்கள். இனி ‘கரிகாலன்’ எழுதியுள்ள அந்த முக்கியமான கட்டுரை! ================================================ உலகின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவ இயந்திரங்களின…
-
- 12 replies
- 1.9k views
-
-
இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. இவ் இயந்திரம் சண்டைப்படகுகளிலும் , விநியோகப்படகுகளிலும் ( உள்ளிணைப்பு இயந்திரமாக ) பயன்படுத்தப்பட்டது. கடற்புலிகளில் பல பிரிவுகள் அதில் " சதீஸ் இயந்திரவியல் " ( டோறா ரிம் - டிசல் இயந்திரம் ) என சில ஆண் - பெண் போராளிகளுக்கு இயந்திர பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எம் பிரிவிற்கு லெப் கேணல் கடாபி அண்ணா பொறுப்பாளராக இருந்தார், நாளடைவில் கடலில் காவியமான " தமிழ்முரசு " அண்ணா தனியாக டிசல் பிரிவிற்கு பொறுப்பாளராக நியமிக்க்கப்பட்டார். சொல்லமுடியா சில பணிகள் தாயகத்தில் விரிந்தன சதீஸ் இயந்திரவியல் பட்டறையில்... கடாபி அண்ணா மேற்பார்வையாளரும் இயந்திரப்பி…
-
- 3 replies
- 846 views
-
-
http://www.jimkarygiannis.net/petition_and_action_requests/tamil_genocide
-
- 0 replies
- 674 views
-
-
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் 1008 சங்காபிஸேகம் நாளை மட்டக்களப்பு வரலாற்று புகழ் மிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நாளை காலை கும்பாபிஸேக பூர்த்தி சங்காபிஸேகம் இடம்பெறவுள்ளது. நாளை காலை 9.00மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி 1008 சங்குகளைக்கொண்ட சங்காபிஸேகம் இடம்பெறவுள்ளது. அத்துடன் நாளைய தினம் கும்பாபிஸேக சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டுவைக்கப்படவுள்ளதாக ஆலய தலைவர் அகிலேஸ்வரன் தெரிவித்தார். எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. http://www.maddunews.com/2013/07/1008.html
-
- 0 replies
- 476 views
-
-
1983ம் ஆண்டின் நினைவாக – எனது நினைவுகள் 1980ம் ஆண்டு ஆரம்பத்தில் அட்டனிலிருந்த லிபர்ட்டி கட்டிடத்தின் ஒரு அறைக்கு குடிபெயர்ந்தோம். இந்த லிபர்ட்டி கட்டிடத்தைக் கட்டியவர் வி.கே.டி பொன்னுசாமி. இந்தக் கட்டிடத்தின் பிரதான பகுதி லிபர்ட்டி சினிமா அரங்கம். இதுவே கீழ் தளத்தில் இருந்தது. இதன் உரிமையாளரும் இவரே. இவர் இலங்கையின் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவர். ஏனெனில் “தெய்வம் தந்த வீடு” மற்றும் “ரத்தத்தின் ரத்தமே” என்ற இரண்டு தமிழ் திரைப்படங்களை எடுத்தவர். தெய்வம் தந்த வீடு படம் ஆரம்பிக்கும் பொழுது அட்டன் இந்துமகாசபை அல்லது மாணிக்கப்பிள்ளையார் கோயில் படிக்கட்டுகளில் இவர் கீழ் இறங்கி வருகின்ற காட்சியுடன் ஆரம்பிக்கும். இவரை 1983ம் ஆண்டு கலவரத்தினபோது சிங்கள இனவாதிகளால் வெட்டி கொலை…
-
- 1 reply
- 858 views
-
-
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் புயலாக வீசிய தேசப்புயல்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில்…
-
- 18 replies
- 4.1k views
-
-
ஆடிமாதம் 5ம் திகதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மயிலிட்டிப் பிரதேச இந்து ஆலயங்களுக்கு மக்கள் சென்று வழிபாடு நடத்துவதற்குரிய அனுமதியை தான் ஜனாதிபதி மகிந்தாவிடம் பெற்றுள்ளதாகவும், மயிலிட்டியில் அமைந்துள்ள முருகன், பிள்ளையார், அம்மன் ஆலயங்களில் இன்று தொடக்கம் வழிபாடு நடத்த இராணுவத்தினரும் அனுமதி வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொதுமக்களுக்கு பெருமையுடன் பறைசாற்றினார். இந்த நிலையில் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 20 பஸ்களிலும், வேறு வழிகளிலும் சுமார் 2000 மக்களுக்கு மேல் மாவிட்டபுரம் பகுதிக்கு சென்றிருந்தனர். ஆனால் 200 பேர் மட்டுமே உள்ளே செல்லலாம் என்று படையினர் அறிவித்ததை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அனைத்து மக்களையும் படையினர் உள்ள…
-
- 2 replies
- 1.2k views
-
-
1983 ஆடி 25 ஆமர்வீதிச்சந்திப்பில் மொட்டைமாடியில் நானும் இன்னும் சிலரும் நின்றிருந்தோம் தெமட்டக்கொட பக்கமாக இருந்து 150க்கு மேற்பட்ட காடையர்கள்-சிங்களவரும் முசுலிமுமாக- தமிழரைத்தாக்கியபடியும் தமிழ்க்கடைகளை எரித்தபடியும் வந்துகொண்டிருந்தனர் ஆமர்வீதியின் இருவீதிகளுக்கும் நடுவில் கிட்டத்தட்ட 50 பொலிசார் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர் இதனால் நாங்கள் பயப்படாமல் பதட்டப்படாமல் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தோம் ஒரு 100 மீற்றர் தூரத்தில் அவர்கள் வந்ததும் 50 பொலிசாரும் மறுபக்கமாக திரும்பிச்செல்ல ஆரம்பித்தனர் குளவிக்கூட்டம் போல அவர்கள் எம்மேல் பாய்ந்ததும்..... என் கண்ணால் கண்ட காட்சிகள்...... வெட்டடிப்போடப்பட்ட தமிழர்கள்...... ரயர் போட்டுக்கொளுத்தப்பட்ட தமிழர்கள்...... உயிரோடு எரியும்…
-
- 19 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 909 views
-
-
தமிழர் இனவழிப்பு கறுப்பு ஜூலையின் 30ம் ஆண்டு நினைவில் தமிழீழ தேசம் தமிழர் தாயகத்திலும் – தன் தேசத்திலும் வாழ்ந்த தமிழர்கள் மீது 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவாய் தமிழர்களில் நெஞ்சங்களில் ஆறாத துயராமாய் உறவுகளின் மீள்நினைவுகளுடன் நெஞ்சம் உறைந்து உயிர் கரைகிறது. || உயிரோடு இருக்கும் இனப்படுகொலையின் பதிவு || இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனச்சங்காரமே கறுப்பு யூலை. சிங்க…
-
- 2 replies
- 475 views
-
-
|| மீண்டும் கொலைவெறித் தாக்குதல்! || அதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறிக் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில சிறை உயர் அதிகாரிகள், “”இன்று இவ்வளவு போதும் சென்று ஓய்வெடுங்கள் வீரர்களே! உங்களுக்கு ஒன்றும் நடக்காது” என்று கூறியபோது, அக்கும்பலின் வெறி தற்காலிகமாகத் தணிந்தது. 25.7.1983 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த 6 பேரும் டி-3 பிரிவில் இருந்த 29 பேரும் பலியெடுக்கப்பட்டனர். அதாவது அன்று இரண்டு பிரிவுகளிலும் இருந்த ஒருவரும் தப்பாது மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டனர். அன்று இரவு இப்படுகொலைகளை வழிநடத்திய சிறைக் கைதிகளுக்கு மதுவும் சுவையுணவும் தாராளமாகப் பரிமாறப்பட்டன. இப்படுகொலைகள் நடைபெற்ற மற…
-
- 0 replies
- 691 views
-
-
ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது. தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்…
-
- 4 replies
- 1.4k views
-
-
எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்குப் பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்குக் கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் போன்றவற்றை வெளிக்காட்டிய வரலாறு இலங்கையின் தமிழர் தாயகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்திக்கொண்டு செல்வதில் பெரும்பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. இதனை வரலாறு மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளன…
-
- 0 replies
- 559 views
-