Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மனிதகுல நீதிக்கான குரல் கொண்ட கௌரவமான தேசிய இனம் நாம் தத்தர் ஜனநாயகக் கண்ணோட்டம் இன்றி உலகக் கண்ணோட்டம் இன்றி ஒரு தேசிய கட்டுமானம் அமைய முடியாது. அதே வேளை 'சரியாக நடந்தால் மட்டும் போதாது சரியாக நடந்ததாகக் கருதப்படவும் வேண்டும்'. பரப்புரை என்பது எதிரியை அம்பலப்படுத்துவதிலும் எம்மை நியாயப்படுத்துவதிலும் அடங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையோடு எதிரி தன்னைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளான். ஆனால் அந்த அம்பலப்பட்டுள்ள நிலையை அரசியல் தீர்மானங்களாக்கவேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. இந்நிலையில் நாம் எம்மை அதிகம் நியாயப்படுத்தி எதிரிக்கெதிரான அரசியல் தீர்மானங்களை உருவாக்கவேண்டும். உலகில் நாம் வெடிகுண்டு வைப்பவர்களாயும், மனித வெடிகுண்டுகளாயும், பயங்கரவாதிகளாயும…

  2. “இலங்கை தொடர்பான கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும், அவ்வாறு மாற்றினால் தான், இலங்கையின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று, கடந்த திங்கட்கிழமை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். எட்டாவது இந்திய - இலங்கை கூட்டுக்குழுக் கூட்டத்துக்காக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த திங்கட்கிழமை, புதுடெல்லிக்குப் புறப்பட்ட சமயத்தில் தான், இந்தப் பேட்டி ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது. மிக முக்கியமான தருணமொன்றில் தான், சுரேஷ் பிரேமச்சந்திரனின் இந்தக் கருத்து வெளியானது. பிரதமநீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னணி, அதுபற்றி இந…

    • 0 replies
    • 750 views
  3. உலக அரசியல் அரங்கு: ஒரு கணக்கெடுப்பு அரசியல் அரங்கின் சுவையே அதன் நிச்சயமின்மையே. அச்சுவையின் அபத்தம் யாதெனில், பல சமயங்களில் அச்சுவாரசியம் அவலச் சுவையுடையது. உலக அரசியல் அரங்கு, நிச்சயமின்மைகளாலும் அவலங்களாலும் நிறைகின்ற காலப்பகுதியில், எதிர்காலத்தை வெறித்துப் பார்த்தபடி எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஒருபுறம், இதுவரை கட்டமைக்கப்பட்ட சமூக அரசியல் விழுமியங்கள், புதிய வாசிப்புகளையும் விளக்கங்களையும் பெறுகின்றன. மறுபுறம், உலகம் எதேச்சாதிகாரத்தின் நவீன வடிவங்களை நோக்கி நகர்கிறது. இவை புதிய கேள்விகளையும் விளக்கங்களையும் வேண்டி நிற்கின்றன. உலகமயமாக்கலின் முடிவு கடந்த அ…

  4. அகிம்சைப்போர் அடக்கப்பட்டதன் பின் ஆயுதப்போர் ஒன்று வெடித்தது அது முடிவாக்கப்பட்ட தாக பேசப்படும் நிலையில் இராஜ தந்திரப்போர் ஒன்றுக்குள் நம்பிக்கை கொண்டி ருக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கைக் குறியீடாக பிள்ளையவர்களின் வருகை அமைந்திருக்கின்றது. நவநீதம்பிள்ளையவர்களின் இலங்கை விஜயமானது தமிழ் மக்கள் மத்தியிலும் அதேவேளை சிங்கள மக்கள் மத்தியிலும் வெவ்வேறு அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கின்ற நிலையில் இந்த விஜயத்தின் பிரதிபலிப்பாக சர்வதேச அளவில் அது எத்தகைய தாக்கத்தைக் கொண்டு வரப்போகின்றது என்பது பற்றியே இன்றைய நிலையில் எல்லோருடைய முணுமுணுப்பாக இருக்கின்றது. பிள்ளையவர்களுடைய வரவு காரணமாக தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் ஒரு திசைப்பட்டதாகவும் அதேேவளை சிங்கள மக்கள் மற்றும் அவர்களின் …

  5. இடையே எந்த அசம்பாவித முடிவுகளும் எடுக்கப்படாதவிடத்து, இந்திய நாட்டின் ஆட்சி பீடத்திற்கான தேர்தலுக்கு இன்னமும் 16 மாதங்களே இருக்கின்றன. பெரும்பாலும் அடுத்த ஆட்சி காங்கிரஸ் அல்லாத கட்சிகளாலேயே அமைக்கப்படும் என்றே கருத்துக்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களும், அதிருப்திகளும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில், காங்கிரசின் பிரதித் தலைவராகவும், அடுத்த பிரதமர் வேட்பாளராகளும் ராகுல் காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸ் கட்சி தற்போது, அவரது குடும்பச் சொத்தாகவே மாற்றம் பெற்றுள்ளது. இதனால், எதிர்வரும் தேர்தல் சோனியா குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தையும் சேர்த்தே நிர்ணயம் செய்யப்…

    • 0 replies
    • 750 views
  6. தமிழ்த் தேசியமும் கறுப்பு ஜூலையும் இலச்சுமணன் கந்தையா / 2020 ஜூலை 23 இலங்கைத் தமிழ் இனத்துக்கு எதிராக, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐ.தே.க அரசாங்கத்தின் உச்சபட்ச ஆசிர்வாதத்துடன், 1983.07.23 அன்று அரங்கேற்றப்பட்ட நாடு தழுவிய, இன வன்முறையாகிய ‘கறுப்பு ஜூலை’ யின் 37 ஆவது நினைவு தினம் இன்றாகும். யாழ்ப்பாணம், திருநெல்வேலி, தபால்பெட்டிச் சந்திக்கு அருகில், தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் எரியூட்டப்பட்டதுடன் வீதியில் போவோர் வருவோர் மீது எழுந்தமானத்துக்குத் துப்பாக்கிப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. இராணுவத்தின் அடாவடித்தனங்கள் மிக மோசமான முறையில் யாழ்ப்பாணத்தில் முன…

  7. மாலேயில் செய்ததை புதுடில்லி கொழும்பில் செய்யமுடியாது - கொன்ஸரான்ரினோ சேவியர் இலங்கையின் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில், உலகின் கண்கள் கொழும்பை மாத்திரமல்ல, புதுடில்லியையும் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றன. அயல்நாடுகளுடனான உறவுகளுக்கு முதன்மை கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது மாலைதீவில் எதேச்சாதிகாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு தலையீடு செய்து வெற்றிகண்டதைப் போன்று கொழும்பிலும் இந்தியா செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனநாயக மீட்சியை நோக்கி நெருக்குதலைப் பிரயோகிக்க இந்தியாவினால் இயலுமாக இருந்தது என்று மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி …

  8. வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் - 'சமூக சிற்பிகளின்' ஆய்வு [ வியாழக்கிழமை, 26 செப்ரெம்பர் 2013, 02:26 GMT ] [ நித்தியபாரதி ] போர் முடிவுற்ற கையோடு சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தமது அடுத்த கட்ட நிலை தொடர்பில் குழப்பமடைந்திருந்தனர். குறிப்பாக தமிழ் மக்கள் தமக்கான அரசியல் எதிர்காலம் தொடர்பில் குழப்பமடைந்திருந்தனர். இவ்வாறு சமூக சிற்பிகள் அடைப்பின் [The Social Architects - TSA.] நிறுவக உறுப்பினர்களான *Gibson Bateman and Rathika Innasimuttu ஆகியோர் [sep 23, 2013] எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி. இவ்வார இறுதியில் சிறிலங்காவின் வடக்கில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட…

    • 2 replies
    • 749 views
  9. அவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா? காரை துர்க்கா / 2019 ஏப்ரல் 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:35 Comments - 0 மக்கள் தங்களுக்குள், “சத்திரசிகிச்சை வெற்றி; ஆனால், நோயாளி இறந்து விட்டார்” என நகைச்சுவையாகக் கதைப்பது வழமை. அது போலவே, இம்மாதம் எட்டாம் திகதி, யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் (தமிழரசுக் கட்சித் தலைவர்) மாவை சேனாதிராஜா, ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரை இணைத் தலைவர்களாகக் கொண்ட, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. படை முகாம்கள் அமைப்பதற்கு, மக்களின் காணிகளை அப(சுவீ)கரிப்புச் செய்ய முடியாது என, அங்கு, அவர்களால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட…

  10. நரேந்திர மோடி- -ராஜீவ் காந்தி வருகையின் ஒற்றுமையும் வேறுபாடும்: அ.நிக்ஸன்:- அன்று ஈழப்போராளிகளை சமாதானப்படுத்தி இந்தியாவின் ஒற்றை ஆட்சி முறை பாதுகாப்புக்காக 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இன்று சீனாவின் செல்வாக்கை குறைத்து பிராந்திய பாதுகாப்புக்கு முன்னுரிமை கோரப்படுகின்றது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதே தயாரிக்கப்பட்ட விடயங்களைத் தான் இந்திய இலங்கை ஒப்பந்தமாக ராஜீவ்- ஜே.ஆர் 1987இல் கைச்சாத்திட்டனர். -அ.நிக்ஸன்- இனப்பிரச்சினை தீர்;வுக்கு இந்தியா செய்த வழிமுறைகள் என்ன? அல்லது எந்த வகையில் இந்தியா இடையூறாக இருந்தது? என்ற இரண்டு கேள்விகள் முக்கியமானது பிரதமர் நாரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இவ்வாறான கேள்விகள் எழுவது இயல்பானது. ஏ…

    • 1 reply
    • 749 views
  11. விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் சுற்றிவளைக்கப்படும் சீனம் ஹிலாரியின் பயணத்துக்குப் பின்னர், இப்போது மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் அகற்றியுள்ளன. இதனால் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் முதலீடுகள் மட்டுமின்றி, இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளும் மியான்மரில் பெருக வாய்ப்புள்ள சூழல் நிலவுவதாக இந்தியப் பெரு முதலாளிகளின் சங்கமான "ஃபிக்கி' பூரிக்கிறது. இவை ஒருபுறமிருக்க, கடந்த ஈராண்டுகளில் பிலிப்பைன்சுக்கும் சிங்கப்பூருக்கும் அதிநவீன போர்க்கப்பல்களை அமெரிக்கா கொடுத்துள்ளதோடு, வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளையும் நடத்தியுள்ளது. சீனாவை அடுத்துள்ள தைவானுக்கு மிகப்பெரும் அளவிலான ஆயுதங்களை அளிக்க முன்வந்துள்ளது. மே…

  12. இலங்கையில் சீனா? - யதீந்திரா அண்மையில் கொழும்பிற்கு வியஜம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ – சீனாவின் கம்யூனிஸ் கட்சியை வேட்டையாடும் தன்மைகொண்டது – அதாவது வேடையாடி புசிக்கும் மிருகம் என்று தெரிவித்திருந்தார். பொம்பியோ இவ்வாறு குறிப்பிட்டு சில தினங்களே ஆகின்ற நிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கட்சிக் கட்டமைப்புக்கள் சார்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இணைய வழி கலந்துரையாடலொன்றை நடத்தியிருக்கின்றனர். மகிந்தவின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவின் தலைமையில் இந்த நிகழ்வு நடந்திருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கைக்கான சீனத் தூதரகம் ஒழுங்கு செய்திருக்கின்றது. பொம்பியோ கொழும்பில் வைத்து தெரிவித்த கருத்துக்…

  13. சவூதி - கனடா முறுகல் நிலை: சவூதியின் வெளிவிவகார கொள்கையின் விளைவு -ஜனகன் முத்துக்குமார் சவூதி அரேபியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான முரண்பாடு குறித்த சவூதி அரேபியாவின் அணுகுமுறை, இராஜதந்திர வட்டாரங்களில் கடந்த வாரம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. குறித்த இந்நிலையானது உத்தியோகபூர்வமாக, சில சவூதி அரேபிய மனித உரிமை ஆர்வலர்கள், சவூதி அரசாங்கத்தால் சில நாள்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக, கனடாவின் வெளிவிவகார அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் வெளியிட்ட கண்டனத்துக்கு எதிரான ஒரு செயற்பாடாக, சவூதி அரேபியா, றியாத்தில் உள்ள கனேடியத் தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறும்; ஒட்டாவாவிலிருந்து தமது தூதரை றியாத்துக்கு திருப்பி அழைத…

  14. மேற்குலகுக்கு எச்சரிக்ைகயாக அமைந்த ரஷ்யாவின் இராணுவ ஒத்திகை கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம் யாழ்.பல்கலைக்கழகம் நடந்து முடிந்த வாரத்தில் உலக அரசியல் போக்கில் ரஷ்யா தலைமையிலான போர்ப் பயிற்சி முதன்மையான செய்தியாக உள்ளது. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர் மிகப் பிரமாண்டமான போர் ஒத்திகை என்ற பிரகடனம் உச்சரிக்கப்படுகின்றது. அவ்வாறே அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும் குறிப்பிடப்படுகிறது. அவ்வகையில் இக்கட்டுரையானது ரஷ்யாவின் மிகப்பிரமாண்டமான போர் ஒத்திகை ஏற்படுத்தக்கூடிய …

  15. சுவா­மியின் ஆட்டம் பலிக்­குமா? இந்­தி­யாவை ஆட்சி செய்யும் பார­தீய ஜனதா கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக உள்ள சுப்­ர­ம­ணியன் சுவா­மியின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வரும் 11ஆம் திகதி புது­டெல்­லிக்குப் பயணம் மேற்­கொள்­ள­வுள்ளார். சுப்­ர­ம­ணியன் சுவா­மியைத் தலை­வ­ராக கொண்ட விராட் ஹிந்­துஸ்தான் சங்கம் என்ற அமைப்­பினால் புது­டெல்­லியில் வரும் செப்­டெம்பர் 12ஆம் திகதி ஒரு கருத்­த­ரங்கு ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது. அந்தக் கருத்­த­ரங்கில் சிறப்புப் பேச்­சா­ள­ராக மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொள்­ள­வி­ருக்­கிறார். இந்தப் பய­ணத்தின் போது, மஹிந்த ராஜபக் ஷ புது­டெல்­லியில் மூன்று நாட்கள் தங்­கி­யி­ருக்கப் போவ­தாக அ…

  16. இலங்கையுடனான இந்திய உறவும், இந்தியாவில் ஈழத்தமிழ் அகதிகளும்… இலங்கையில் தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பான வடக்கு- கிழக்கில் அதிகாரபூர்வமாக ஆயுதப்போர் முடிந்து ஒரு தசாப்தத்தை கடந்து விட்டது. இப்போரின் முடிவு அருகாமையில் இருக்கும் இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கையில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைக்கவில்லை. தமிழகத்தில் அமைந்திருக்கும் நூற்றுக்கும் அதிகமான அகதி முகாம்களில் வசித்து வரும் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே நாடு திரும்பியிருக்கின்றனர். அகதி முகாம்களில் வசிக்கும் தமிழ் அகதிகளின் முன் இருப்பது இரண்டு வாய்ப்புகள் மட்டுமே. அகதியாக இ…

    • 2 replies
    • 748 views
  17. மேலும் ஒரு கோவிலுக்கு ஆபத்து? நிலாந்தன். April 16, 2023 கடந்த திங்கட்கிழமை பங்குனித் திங்களன்று நெடுங்கேணியில் உள்ள நொச்சிக்குளம் அம்மன் கோவிலை வழிபடச் சென்ற பக்தர்களைத் தொல்லியல் திணைக்களம் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளியாகின. பக்தர்களைப் பொறுத்தவரை அது கோவில். தொல்லியல் திணைக்களமோ அதை ஒரு தொல்லியல் அமைவிடமாக கருதுகிறது. நாட்டின் தொல்லியல் சட்டங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் இறுக்கமானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார். ஒரு மக்கள் கூட்டத்தால் தொடர்ச்சியாக வழிபடப்படும் ஒரிடத்தை தொல்லியல் திணைக்களம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்றால் முதலில் அந்த வழிபாட்டிடத்தை நிர்வகிக்கும் தனிநபர் அல்லது நிர்வாக …

  18. ஜே ஆரால் மீண்டெழுந்த ஜப்பான் - என்.சரவணன் இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஏனைய மேற்கத்தையே நாடுகளுக்கும் இடையில் கடும் போர் நிகழ்ந்து வந்தது. இந்தப் போரில் கிழக்காசிய நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக கைப்பற்றி வந்தது ஜப்பான். பல நாடுகளின் மீது போர் தொடர்ந்தும் இருந்தது. 1941இல் அமெரிக்காவையும் தாக்கியது. ஐரோப்பாவில் ஜெர்மனை வீழ்த்துவதில் ரஷ்யா பெரும்பங்கு வகித்தது. அது போல ஜப்பானில் 1945 ஓகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களில் அமெரிக்கா அணுக்குண்டை போட்டு பாரிய மனிதப் பேரழிவை நடத்தியதுடன் மட்டுமன்றி அந்த நாட்டை பெரும் சேதத்துக்கு உள்ளாக்கி சரணடைய வைத்தது. அத்தோடு இரண…

  19. என்ன பாவம் செய்தார் ‘பிரேமலால்’ கார்கள், அதிசொகுசு வாகனங்கள் வீதிகளில் பயணிக்கும் போது, நானும் ஒருநாள் காரில் போக வேண்டுமென நினைக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால், கடந்த 6 நாட்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நிறை வாகன வரிசைகளைப் பார்த்தவுடன் “காராவது”, “பெஜிரோவாவது“ “காலே” போதும் என்று நினைத்தவர்களும் உள்ளனர். சீராகச் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டுநர்களின் ஓட்டங்களுக்கு, “சடன் பிரேக்” போட்ட மாதிரி ஆகிவிட்டது, இந்த ஒரு வார கால நிலைமை. கடந்த வௌ்ளிக்கிழமை முதல், எரிபொருள் நிரப்பு நிலையங்களே தஞ்சமென, மணிக்கணக்கில் காத்துக்கிடந்தனர் வாகன ஒட்டுநர்கள். போதாக்குறைக்கு, போத்தல்…

  20. கேரளப் பெரு வெள்ளம்: தமிழக - கேரள உறவில் மீண்டும் தைத்த முள் எம். காசிநாதன் / வரலாறு காணாத கன மழை, கேரள மாநிலத்தை நிலைகுலைய வைத்து விட்டது. ‘டிசெம்பர் பெருவெள்ளம்’ 2015இல் சென்னை மாநகரையும் புறநகர் சென்னையையும் திணறடித்தது போல், ‘ஓகஸ்ட் பெருவெள்ளம்’ அலை அலையான பாதிப்புகளை, கேரள மாநில மக்களுக்கு ஏற்படுத்தி விட்டது. சேதங்கள் குவியல் குவியல்களாகக் கிடக்கின்றன; மண்சரிவுகள் மலைகள் போல் குவிந்து கிடக்கின்றன. கட்டடங்கள் அப்படியே, பாய்ந்தோடும் வெள்ளத்தில் நகருவதைப் பார்க்க முடிந்தது. வெள்ளமும் வேதனையும் இணைபிரியாமல் தாக்குதல் நடத்தி, கேரள மக்கள், ஓணம் பண்டிகையை, நிம்மதியா…

  21. தமிழ்த் தேசியப் பேரவை ? நிலாந்தன்… November 22, 2020 கடந்த வாரம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருந்து வரும் தமிழ் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கூட்டமைப்பு பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுக்களை உருவாக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு உருவாக்கப்பட்ட நிபுணர் குழுக்களோடு பேசுவதற்கு இந்தியா விருப்பம் கொண்டுள்ளது என்பதே அந்த செய்தியின் சாராம்சம் ஆகும். இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயும் பொருட்டு சில பத்திரிகை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டேன். ஒருவராலும் செய்தியின் மூலத்தை குறிப்பிட முடியவில்லை. இணையத்தில் கண்டெடுத்தது என்று கூறினார்கள்.அதாவ…

  22. புலிகளை பிரதி செய்த உக்ரைன் By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 01:40 PM சுபத்ரா ரஷ்யாவின் கருங்கடல் கப்பல்படையின் தளம் அமைந்துள்ள செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகே கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி தரைதட்டியிருந்த ஆளில்லாமல் இயங்க கூடிய படகு (USV - uncrewed surface vessel) ஒன்றை ரஷ்ய கடற்படையினர் கண்டுபிடித்தனர். செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகேயுள்ள உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு அண்மையாக அந்த படகு காணப்பட்டது. அது உக்ரேனுக்குச் சொந்தமானதென ரஷ்ய கடற்படையினர் கூறுகின்றனர். ஆனால், படகு கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. வெடிம…

  23. வடக்கில் வாழும் தமிழ் மக்களின் நிலங்களை சிறிலங்கா இராணுவத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் அபகரிப்புச் செய்யலாம். ஆனால் இந்த வழியில் எமது மனங்களை ஒருபோதும் சிறிலங்கா அரசாங்கம் அபகரித்துவிட முடியாது" என்கிறார் யாழ்.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியற்துறை பேராசிரியர் ஒருவர். சண்டேலீடர் ஆங்கில வாரஇதழில் நிரஞ்சல்லா ஆரியசிங்கவும், கிரிசாந்தி கிறிஸ்தோப்பரும் இணைந்து எழுதியுள்ள செய்திக்கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். ‘புதினப்பலகை‘க்காக இதனை மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி‘. சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகளும் ஏழு மாதங்களும் கடந்த நிலையிலும் கூட வடக்கு கிழக்கில் வாழும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.