அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சீனாவுக்கு எதிராக அமெரிக்க – இந்திய இராணுவக் கூட்டணி! விளைவுகள் என்ன? Bharati November 3, 2020 சீனாவுக்கு எதிராக அமெரிக்க – இந்திய இராணுவக் கூட்டணி! விளைவுகள் என்ன?2020-11-03T08:39:22+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore பாஸ்கர் செல்வராஜ் அமெரிக்க தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பாக இந்தியா – அமெரிக்கா இடையே துல்லியமான ராணுவ வரைபடங்களையும் ஏவுகணை வழிகாட்டு தொழில்நுட்ப வசதிகளையும் அமெரிக்க ராணுவத்திடமிருந்து இந்திய ராணுவம் பெறுவதற்கான BECA ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அமெரிக்கா எந்த நாட்டுடன் General Security of Military Information Agreement (GSOMIA), Logistics Exchange Memorandum Of Agreement (L…
-
- 0 replies
- 785 views
-
-
அமெரிக்கா 2020: எதிர்பார்ப்புகளும் அதிர்ச்சிகளும்! 2008, 2012 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் எனக்கு நன்கு நினைவிருக்கின்றன. மாலை நான்கு மணிக்கு வாக்களிப்பு சூரியன் முதலில் மறையும் கிழக்குக் கரையில் (நியூயோர்க்) முடிவுக்கு வர ஆரம்பிக்கும் போது, தொலைக்காட்சி உயிர்பெறும். நவம்பர் குளிருக்கு ஒரு இதமான பானமும், சமையலை ஒதுக்கி வைத்து விட்டு பிசாவும் எடுத்துக் கொண்டு குந்தினால் நள்ளிரவு நெருங்கும் போது வெற்றியாளர் யாரென்று தெரியவரும். அந்த இரு ஆண்டுகளும் அமெரிக்காவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகள்: அமெரிக்காவின் முதலாவது ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா வந்த ஆண்டு 2008, அவர் இரண்டாவது தடவையும் பலமான போட்டியாளரான ஜோன் மக்கெய்னை வென்ற ஆண்டு 2012. 2016...…
-
- 12 replies
- 2.1k views
- 1 follower
-
-
இருபது’ கரைசேர்ந்தது எப்படி? திரைமறைவில் நடைபெற்ற பேச்சுக்கள் (பேரங்கள்) என்ன? -நஜீப் பின் கபூர் Bharati November 2, 2020 ‘இருபது’ கரைசேர்ந்தது எப்படி? திரைமறைவில் நடைபெற்ற பேச்சுக்கள் (பேரங்கள்) என்ன? -நஜீப் பின் கபூர்2020-11-02T09:43:40+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore நஜீப் பின் கபூர் 20 கதைக்கு கடந்த வாரம் முற்றுப் புள்ளி வைத்த நாம், இந்த வாரம் புதுக் கதையாக புதிய அரசியல் யாப்புத் தொடர்பான தகவல்களை துவக்கி வைக்கலாம் என்று எதிர் பார்க்கின்றோம். அதற்கு முன்பு இந்த இருபது கரைசேர்ந்த விதம் தொடர்பான நமக்குக்க கிடைத்த சில இரகசியத் தகவல்களையும் நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எதிர்பா…
-
- 0 replies
- 600 views
-
-
இலங்கையில் கொரோனா குறித்த உண்மை மறைக்கப்படுகிறதா ? -என்.கண்ணன் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் கவனம் முழுமையாக ஒன்று குவிக்கப்பட்டிருந்த சூழலில், கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் தனது கைவரிசையைக் காண்பித்து விட்டது. ஒன்றுக்கு இரண்டு மிகப்பெரிய கொத்தணிகள்- அதுவும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியிலேயே உருவாகியிருந்த போதும், அது விஸ்வரூபம் எடுக்கும் வரையில், யாருக்கும் தெரியாமலேயே இருந்து விட்டது. எழுமாற்றான பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த போதும், சந்தேகத்துக்குரியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த போதும், இரண்டு கொத்தணிகளுமே- கையை மீறிச் செல்லும் நிலை ஏற்பட்ட பின்னர் தான் கண்டுபிடிக்கப…
-
- 0 replies
- 438 views
-
-
ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமான நாள் - ட்ரம்பா ? பைடனா ? - சதீஷ் கிருஷ்ணபிள்ளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒட்டுமொத்த உலகிற்கும் மிக முக்கியமான நாள். அன்றைய தினம் அமெரிக்க மக்கள் தமது வரலாற்றின் 59ஆவது ஜனாதிபதித் தேர்தலில் 46 ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கிறார்கள். இந்தத் தேர்தல் 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும். இது அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவாகப் போகிறவர் யார் என்பதைத் தீர்மானிக்கக்கூடிய போட்டி மாத்திரம் அல்ல. மாறாக, சீர்குலைந்த ஜனநாயகத்தில் எஞ்சியிருக்கும் விழுமியங்களைத் தக்க வைப்பதா அல்லது அமெரிக்க தேசம் எதேச்சாதிகார சிக்கலுக்குள…
-
- 0 replies
- 374 views
-
-
மஞ்சள் ஆபத்தும் மஞ்சள் விலை கூடிய ஒரு குட்டித் தீவும் – நிலாந்தன்… November 1, 2020 யார் இந்து சமுத்திரத்தில் கடல்சார் மேலாண்மையை அடைகிறாரோ அவரே அனைத்துலக அரங்கில் முதன்மையான பாத்திரத்தை வகிப்பார்.யார் இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்துகிறாரோ அவர் ஆசியாவின் மீது ஆதிக்கத்தைக் கொண்டிருப்பார். இருபத்தியோராம் நூற்றாண்டில் எழு கடல்களுக்குமான திறப்பு இந்து சமுத்திரமே. இந்த எழு கடல்களுமே உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும். அட்மிரல் அல்பிரட் தயர் மகான்- Admiral Alfred Thayer Mahan “சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக்கிற்காக நாங்கள் ஒன்றாக வேலை செய்வோம்.” ஜனாதிபதியின் அலுவவலகத்தில் உள்ள விருந்தினர் பதிவேட்டில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் பொம்பியோ எழுத…
-
- 0 replies
- 441 views
-
-
முதுகில் குத்துவதைப் பற்றிப் பேச திகாவுக்கு அருகதையில்லை http://static2.tamilmirror.lk/assets/uploads/image_1e8f620702.jpg எம்.செல்வராஜா 'நம்பிக்கை துரோகம்; முதுகில் குத்துவது போன்ற விடயங்களைப் பற்றிப் பேசுவதற்கு திகாம்பரத்துக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது. மத்திய மாகாண சபையினூடாக ஓர் அரசியல் முகவரியை ஏற்படுத்திக்கொடுத்த அமரர் பெ. சந்திரசேகரனின் முதுகில் குத்தியவர் தான் திகாம்பரம். அதன் பின்பு மஹிந்தவின் முதுகிலும் பிறகு ரணிலின் முதுகிலும் குத்தியதோடு, தற்போது ஆளுந்தரப்போடு இணைவதற்கு முயற்சித்து வருகிறார்' என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் சாடியுள்ளார். இது தொடர்பில் அவர் தமிழ்மிரருக்கு வழங்கியுள்ள நேர்காணலின் முழுவடிவம் பின்…
-
- 0 replies
- 375 views
-
-
உயிரீந்தோர் நினைவோடு இலக்கிற்காய் ஒன்றிணைவோம்- அ. தனசீலன் 135 Views முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 11 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழினம் இன்னமும் அதன் தாக்கத்திலிருந்து மீளுவதாக இல்லை. விடுதலையின் வாசலில் வந்து நிற்பதாக நம்பிய எங்களது மக்களுக்கு 2009இல் முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்தேறிய சம்பவங்கள் மனங்களை விட்டு அகலாத ரணங்களாக இன்னமும் இருந்து கொண்டே இருக்கின்றது. அடுத்த ஆண்டிற்கான ஒரு வருடப் பயண வழிகாட்டலை, நெறிப்படுத்தலை ஒவ்வொரு ஆண்டு மாவீரர்நாளின் போதும் தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து பெற்று வந்த எங்களது மக்கள் இன்னமும் சரியான தலைமைத்துவ வழிகாட்டலுக்காக காத்திருக்கின்றார்கள். இந்தக் காத்திருப்பு நியாயமா…
-
- 0 replies
- 222 views
-
-
முஸ்லிம் பிரதிநிதிகள் ஏன் 20 ஆவது திருத்தத்தை ஆதரித்தார்கள்? -நிலாந்தன் October 31, 2020 நிலாந்தன் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை க்கு ஒரு மலையக பிரதிநிதியும் எழு முஸ்லிம் பிரதிநிதிகளும் உதவியிருக்கிறார்கள். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலேயே ஆங்காங்கே விமர்சனங்களை காணக்கூடியதாக இருக்கிறது “முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்” என்று பெரும்பான்மை சமூகத்தினர் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள். இவர்கள் இவ்வாறு விமர்சிப்பதை இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கூறியுள்ளார். முகநூலில் முஸ்லிம் நண்பர்கள் தமது பிரதிநிதிகளைக் கடுமையாகத் திட்டி எழுதும்…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்- ஒற்றையாட்சி இலங்கையை அமெரிக்கா ஆரத் தழுவுகிறது இலங்கை ஆசியாவின் வயது முதிர்ந்த ஜனநாயகம் என்று மைக் பொம்பியோ புகழாரம் ஆசிய நாடுகளுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலும், ராஜபக்ச சகோதரர்களுக்கு மிகவும் நெருக்கமான அததெரன தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலும் வரிக்குவரி இலங்கையின் இறைமை என்ற சொல்லாடலை உச்சரித்திருக்கிறார். பலமான இறைமை பொருந்திய இலங்கை உலகத்துக்குத் தேவை என்று அவர் கூ…
-
- 0 replies
- 802 views
-
-
"Let China sleep, for when she wakes, she will shake the world." -Napoleon Bonaparte 200 வருடத்துக்கு முதல் நெப்போலியன் சொன்னான் அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கும் சீனாவை அப்படியே தூங்க விடுங்கள். அது எப்பொழுது முழித்து எழும்புகிறதோ அப்போது உலகம் தாங்காது என்றான்.சீனாவின் ரகன் இப்போது முழித்துக் கொண்டது.ஏனைய அதிகார பலம் மிக்க நாடுகளாய் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டார்கள்.மீண்டும் ஒரு பனிப் போர் ஆரம்பமாக இருக்கிறது. இந்து சமுத்திரத்தின் வாசலில் இருந்து இலங்கையோடு சேர்த்து இந்து சமுத்திரத்தின் குரல் வளையை இறுக்கப் பிடித்து விட்டது சீன கம்யூனிச பூதம். இனி இதிலிருந்து விடுபடுவதென்பது இலகுவல்ல.பண இராயதந்திரத்தின்(money diplomacy)மூலம் பல ஆசிய நாடுகளை வளைத்து விட்டது சீ…
-
- 0 replies
- 632 views
-
-
பொம்பியோவின் ஓட்டமும் சீனாவினது சீற்றமும்; தடுமாறும் அரசாங்கமும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றது. நவம்பர் 3ம் திகதி அங்கு தேர்தல். ஜனாநாயக் கட்சியும் குடியாரசுக் கட்சியும் அங்கு மாறி மாறி அதிகாரித்தில் இருந்து வருகின்றது. வரலாற்றில் ஒரு முறை ஜோர்ஜ் வொசிங்டன் மட்டும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றார். அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தல் பற்றிய வரலாற்றுச் சுருக்கம் அப்படி இருக்க. ட்ரம்ப் அமெரிக்க வரலாற்றில் ஒரு வித்தியாசமான பாத்திரம் அவரைக் கோமளி என்று அழைப்பதா வம்பன் என்று அழைப்பதா என்று எமக்குத் தெரியாது. என்றாலும் முழு உலகமுமே இந்த மனிதனை வித்தியாசமாகத்தான் பார்க்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
துமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம் -புருஜோத்தமன் தங்கமயில் மனோ கணேசன், தன்னை ஓர் ‘அரசியல்வாதி’ என்று அழைப்பதைக் காட்டிலும், ‘மனித உரிமைப் போராளி’ என்று அடையாளப்படுத்துவதில் கவனமாக இருப்பவர். சட்டத்துக்கு முரணான கொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கப்பம் கோரல் உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாகப் போராடி வந்திருக்கிறார். ஓர் அரசியல்வாதி, மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது அவசியமானது. அதுவும், தான் சார்ந்திருக்கும் மக்களின் குரலாக, ஓங்கி ஒலிங்க வேண்டியது தவிர்க்க முடியாதது. மனோ கணேசன் மக்களின் குரலாக, அநேக சந்தர்ப்பங்களில் செயற்பட்டிருக்கிறார். http://static2.tamilmirror.lk/assets/uploads/image_f79bb2fe94.jpg அத…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கையை மையப்படுத்திய அமெரிக்க – சீன வார்த்தைப் போரின் அடுத்த கட்டம் என்ன? Bharati அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவில் இலங்கைக்கான அதிரடி விஜயம் எதிர்பார்க்கப்பட்டது போலவே சர்ச்சைக்குரிய ஒன்றாக முடிவடைந்து இருக்கின்றது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக இலங்கை அமைந்திருக்கிறது என்பதை இந்த விஜயம் மீண்டுமொருமுறை தெளிவாக உணர்த்தி இருக்கின்றது. பொம்மியோவின் இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கடுமையான அறிக்கை ஒன்றை சீனா வெளியிட்டிருந்தது. இரண்டு வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான போட்டிக்களமாக இலங்கை இருக்கின்றது என்பதை மட்டுமன்றி, பொம்பியோ இலங்கை வருவதை சீனா விரும்பவில…
-
- 2 replies
- 1k views
-
-
வணக்கம் குணா, உங்களின் அனுமதியின்றி இங்கே உங்களின் காணொளியினை இணைத்தமைக்கு. கோபிக்கமாட்டீர்கள் என்கிற நம்பிக்கையோடு இணைக்கிறேன்.
-
- 0 replies
- 591 views
-
-
20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்ஷக்களுக்கு கிடைத்தது என்ன? -அகிலன் 31 Views பெரும் சர்ச்சைகளுடன் நோக்கப்பட்ட அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு விட்டது. எதிர்க் கட்சியைச் சேர்ந்த எட்டுப் பேரின் ஆதரவு கிடைத்ததால் 156 வாக்குகளைப் பெற்று, திருத்தம் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. கட்சிகளின் ஏழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காவிட்டிருந்தால், அரசாங்கத்தின் நிலைப்பாடு தடுமாற்றமானதாகவே இருந்திருக்கும். ஆக, இந்த தனிச் சிங்கள – பௌத்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் சிறுபான்மையினக் கட்சிகளும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளன. ஆனால், இதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகின்றது? …
-
- 0 replies
- 372 views
-
-
வெளிநாட்டு நலனுக்காக சமரசம் செய்ய மாட்டோம்’ – அமெரிக்க செயலரிடம் கோட்டபாய 62 Views “எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டு உறவுக்காக இலங்கையின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது” என்று இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க செயலர் பொம்பெயோவிடம் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பே, இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருடனான பேச்சுக்களின் போது, சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி ட்டிரம் நிர்வாகத்தின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்தச் சந்திப்பின் போது, “எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டு உறவுக்…
-
- 3 replies
- 1.4k views
-
-
இனி, முஸ்லிம்களே பலிக்கடாக்கள் எம்.எஸ்.எம். ஐயூப் அரசாங்கத்தை நிறுவத் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ஆதரவைப் பெறுவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினதும் அதன் நட்புக் கட்சிகளினதும் அரசியல்வாதிகள், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் கூறினார்கள். கூறியதைப் போலவே அவர்கள், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும் பொதுவாகத் தமிழ், முஸ்லிம் சமூகங்களினது ஆதரவின்றியே, ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றார்கள். பின்னர், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கும் போதும், அதற்காகத் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில்லை எனக் கூறினார்கள். ஆனால…
-
- 2 replies
- 954 views
-
-
-
- 0 replies
- 634 views
-
-
இலங்கையின் மீது இந்தியாவின் இரண்டாவது அலை.! - நா.யோகேந்திரநாதன்.! இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்தியா மீண்டும் அக்கறை காட்டத் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. 1980ம் ஆண்டு காலப்பகுதி தொட்டே இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான கரிசனையை இந்தியா காட்டி வந்தாலும் கூட அவை பேச்சுகள், அறிக்கைகள் என்ற வட்டத்துக்குள்ளேயே நின்று விடுவதுண்டு. இதுவரை ஆக்கபூர்வமான எவ்வித பலா பலன்களும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை. ஏறக்குறைய கடந்த 40 ஆண்டுகளாக இலவு காத்த கிளிகளின் நிலையிலேயே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பரிதாப நிலைமையை எட்டியுள்ளன. இந்தியா தமிழ் மக்களின் பிரச்சினைகளில் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டாலும் எமது தமிழ்த் தலைமைகள் இந்தியா பற்றிய நம…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிரிய அகதிகளும் வெளிவிவகார அரசியலும் ஜனகன் முத்துக்குமார் சிரியாவில் மோதலின் தொடக்கத்திலிருந்து சிரிய அகதிகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினையானது சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் அறிக்கைகள், சிரிய மோதலில் ஈடுபட்டுள்ள வகிபங்குதாரர்களின் நடவடிக்கைகள் பற்றி எழுதப்பட்ட பல கட்டுரைகளில் சித்தரிக்கப்பட்டிருந்த போதிலும், அரசியல் நலன்களுக்காக பொதுமக்கள் பணயமாக வைக்கப்படுதலுக்கு ஒரு மோசமான உதாரணம் கிழக்கு சிரியாவில் ஐக்கிய அமெரிக்காவின் விருப்பத்துடன் இணங்கிச் செயற்படும் ஆயுதக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் அல்-டான்ஃப் தளத்தை சுற்றி 55 கிலோ மீற்றர் மண்டலத்துக்குள் அமைந்துள்ள ருக்பான் அகதிகள் முகாம் ஆகும். உத்தியோகபூர்வ தகவல்களின்படி, 50,000 க்கும் மேற்பட்ட …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது- சீன தூதரகம் கடும் குற்றச்சாட்டு Rajeevan Arasaratnam October 26, 2020 இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது- சீன தூதரகம் கடும் குற்றச்சாட்டு2020-10-26T21:38:52+05:30அரசியல் களம் FacebookTwitterMore இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம் குறித்த செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்காவின் தலைமை பிரதி உதவி இராஜாங்க செயலாளர் டீன் தொம்சன் இலங்கை சீன உறவுகளில் வெளிப்படையாக தலையிட்டுள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை தனது வெளிவிவகா…
-
- 0 replies
- 852 views
-
-
20வது திருத்தம் சிங்களவரையே சினம் கொள்ள வைக்கும் இருபதாவது அரசியல் யாப்பு திருத்தம் யாரை பாதிக்கும். இதன் விளைவு எதிர்காலத்தில் என்னவாக இருக்கும்? தமிழ் தரப்பு என்ன செய்ய வேண்டும்? இதனை ஆராய்கிறது இந்தப் பதிவு.
-
- 4 replies
- 1.1k views
-
-
பொம்பியோவின் வருகையும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பும் - யதீந்திரா அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இலங்கை வரவுள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. புதுடில்லியில் இடம்பெறும் இருதரப்பு அமைச்சர்கள் சந்திப்பிற்காக (U.S.-India 2+2 Ministerial Dialogue) வரும் மைக் பொம்பியோ, தொடர்ந்து கொழும்பிற்கும் விஜயம் செய்யவுள்ளார். இந்தியாவில் இடம்பெறும் இருதரப்பு சந்திப்பிற்கென அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பரும் வருகைதரவுள்ளார் ஆனால் அவர் இலங்கைக்கு வருவது தொடர்பில் இதுவரையில் எதுவிதமான தகவல்களும் இல்லை. ஆனால் அண்மையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் எஸ்பர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் தெலைபேசியில் உரையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க…
-
- 8 replies
- 1.4k views
-