Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பெண்களுக்கு எதிரான அவதூறு பேச்சுக்கள் இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் 52 சதவீதமானவர்கள் பெண்களாக இருந்தபோதிலும் பாராளுமன்றத்தில் இவர்களின் பிரதிநிதித்துவம் 5.3 சதவீதமும் மாகாண சபையில் 4 சதவீதமும் உள்ளுராட்சி மன்றத்தில் 23.8 சதவீதமாகவுமே (இது பெண்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 25 வீத கோட்டா வழங்கப்பட்ட பின்னர்) காணப்படுகின்றது. சட்டவாக்கத் தத்துவம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்ட பாராளுமன்றத்தினாலும் மக்கள் தீர்ப்பொன்றின்போது மக்களாலும் பிரயோகிக்கப்பட வேண்டும். மீயுயர் அதிகாரத்தை கொண்ட பாராளுமன்றத்திற்கு மக்கள் தமது ஆணையை வழங்கி பிரதிநிதிகளை தெரிவு செய்யும் செயற்பாட்டில் பெண்கள் அதிகளவில் உள்வாங்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். மக்கள் பிர…

  2. விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்த நாட்கள் – மனோகணேசன் July 30, 2020 விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்த அந்த தருணங்கள் பற்றிய பதிவொன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்புமாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார் புலிகளும் ரணிலும் மகிந்தவும் நானும் கருணாவும் மௌலானாவும் என்ற தலைப்பில் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது- விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு நான் கொழும்பு வந்த அடுத்தநாள் பிரதமர் ரணிலை அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தேன். நான் விடுதலை புலிகள் தலைவரை சந்திப்பதற்கு கிளிநொச்சி சென்ற பொழுது பிரதமர் ரணில் கொழும்பில் இருக்கவில்லை. ஆகவே அப்போத…

  3. விக்கியின் வியாக்கியானங்கள் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், “...சம்பந்தன் எந்தவொரு பிரச்சினையையும் உடனடியாகத் தீர்ப்பதில்லை. ‘பேசுவோம், பார்ப்போம்’ என்று கூறி, விடயத்தைத் தட்டிக்கழிப்பார். அதனாலேயே, பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன...” என்று, தெரிவித்திருக்கிறார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தொடர்பிலான விக்னேஸ்வரனின் மேற்கண்ட கூற்றில், பெருமளவு உண்மையுண்டு. அது, சுய அனுபவங்களின் சார்பில் வருவது. ஏனெனில், இன்றைக்கு விக்னேஸ்வரன் அரசியல் கட்சியொன்றின் தலைவராக, மாற்றுத் தலைமைக்கான போட்டியில் இருப்பதற்கு ஒரே காரணம், சம்பந்தன் மட்டுமே! 2015ஆம…

  4. சிறுபான்மையினர் சுதந்திரமாக வாழ்வதற்கு ‘அரசாங்கத்துக்கு எதிரான ஆட்சி வேண்டும்’ -எஸ்.எம்.எம்.முர்ஷித் சிறுபான்மை மக்களும், சம உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டுமாக இருந்தால், இந்த அரசாங்கத்துக்கு எதிரான, ஓர் ஆட்சி வரவேண்டும். அதற்குப் பொருத்தமான தலைவர், இன்றைய நிலையில் சஜித் பிரேமதாஸதான் என, ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அப்துல் லத்தீப் தெரிவித்தார். இவர், ‘தமிழ்மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்சொன்னவாறு கூறினார். அவர் வழங்கிய செவ்வியின் விவரம் பின்வருமாறு: க…

    • 0 replies
    • 434 views
  5. வேறு கோணத்தில் பார்க்க மாட்டோம்’ அதிரதன் அபிவிருத்தி என்பதை, அரசாங்கக் கட்சியோடு சேர்ந்திருப்பவர்கள் பார்க்கின்ற அதேகோணத்தில், நாங்கள் பார்க்க மாட்டோம். மக்களும் அந்தக் கோணத்தில் பார்த்து மயக்கம் அடைந்துவிடக் கூடாது. ஆக, அரசியல் தீர்வுத் திட்டத்தையும் அபிவிருத்தியையும் உரிமை சார்ந்த அபிவிருத்தி அல்லது, அபிவிருத்தியோடு கூடிய உரிமை அல்லது, பொருளாதார உரிமை என்ற அடிப்படையில், இந்த இரண்டு விடயங்களையும் சமாந்தரமாகக் கொண்டு செல்வோம் என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத் தலைமை வேட்பாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின…

    • 0 replies
    • 534 views
  6. ‘நான் அரசியல்வாதி அல்ல’ சமூகசேவகன் என்கிறார் கலாநிதி வீ. ஜனகன் -ஜே.ஏ.ஜோர்ஜ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தங்களுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கிவிட்ட நிலையில், நாடாளுமன்றில் தமிழ் - சிங்கள - முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் வரவேண்டும் என்ற நோக்கில், கொழும்பில் தமிழ் - முஸ்லிம் பிரதிநிதித்து வத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முக்கியத்துவம் வழங்கியுள்ளார் என, அக்கட்சியில் சார்பில், த…

    • 0 replies
    • 590 views
  7. அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்ள அடிமைப்படுத்தப்பட்ட கருப்பின பெண்கள் Reuters 1515 முதல் 19-ம் நூற்றாண்டின் மத்தியில் வரை 1.25 கோடி ஆப்பிரிக்கர்கள் அமெரிக்க நாடுகளுக்கு அடிமைகளாக அழைத்து வரப்பட்டனர். அமெரிக்க நாடுகளுக்கு 16 முதல் 19-ம் நூற்றாண்டு வரை அடிமைகளாக அழைத்துவரப்பட்ட ஆப்பிரிக்க மக்கள் பற்றிய பல புதிய தகவல்களை மரபணு ஆய்வு ஒன்று வெளிக்கொண்டு வந்துள்ளது. 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அடிமை வணிகம், அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் எத்தகைய ’’மரபணு தாக்கத்தை’’ ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்த கூடுதல் தகவல்களை அறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது. …

  8. தமிழ் மக்கள் கேட்க வேண்டிய மூன்று கேள்விகள் தேர்தல் எங்கள் கண்முன்னே நிற்கின்றது. இன்னொரு தேர்தல் என்று, வெறுமனே புறந்தள்ளிவிட முடியாதபடி, எதிர்காலம் குறித்த கேள்விகளைத் தன்னுள் உட்பொதித்து, இத்தேர்தல் எம்முன்னே வந்து நிற்கிறது. தமிழ் மக்கள், தங்களுக்குள் கேட்கவேண்டிய கேள்விகளும் அதற்கு, அவர்கள் தேட வேண்டிய பதில்களும் உள்ளன. துரதிர்ஷ்டவசமாகத் தமிழ் மக்களின் கேள்விகளுக்கான எந்தவொரு விடையும், தமிழ்த் தேசிய கட்சிகள் என்று தங்களை அறிவித்துள்ள கட்சிகளிடம் இல்லை. ஆனால், தமிழ் மக்கள், சில கேள்விகளைக் கேட்டேயாக வேண்டும். இந்தத் தேர்தல் மூன்று அடிப்படைகளில் தமிழர்களுக்கு முக்கியமானது. அதில் பிரதானமானதும் அவசரமானதும், இலங்கை ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த நெருக்…

  9. யார் யார் இந்த தேர்தலில் வெல்ல வேண்டும்? -தமிழ்க் குரலின் தெரிவு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்கள் யாரை வெல்ல வைக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உரையாடல் பரவலாக இடம்பெற்று வருகின்றது. ஈழத் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் எனப் பலரும் கணிப்புக்களை நிகழ்த்தி வருகின்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் இளைஞர்களும் வெகுசன மக்களும்கூட தமது விருப்பங்களையும் காணிப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளை ஜனநாயக ரீதியில் வெல்ல வைக்கும் போராட்டத்தில் தமிழரின் உரிமைக்குரலாக இயங்கி வரும் தமிழ் குரல், அரசியல்வாதிகளின் அராஜகங்களை இடித்துரைப்பதுடன், அவர்களின் சிறந்த விடயங்களைப் பாராட்டியும் வந்திருக்…

  10. சமஷ்டியும் இரத்த ஆறும் - சத்ரியன் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அரசியலில் ஈடுபடும் கட்சிகளிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் தான், இதுவரை தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருக்கின்ற கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் வழக்கம் போலவே, வடக்கு- கிழக்கு இணைந்த, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசியல் தீர்வு வலியுறுத்தப்பட்டுள்ளது. சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே தமிழர் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக வலியுறுத்தியுள்ள கூட்டமைப்பு, அதனை அடைவதற்காக பாடுபடப் போவதாகவும், அதற்கு மக்களின் ஆணையைத் தருமாறும் கேட்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆணைகளை மீறிவிட்டது- ஒற்றையாட்சித் தீர்வுக்கு உடன்பட்டு விட்…

  11. “உள்ளதை உள்ளபடி சொல்கிறேன்” - சுமந்திரன் -எஸ். நிதர்ஷன் அரசியல் தீர்வு என்பது, எப்பொழுது வருமென்று திடமாகச் சொல்ல முடியாது. ஆகையால், அது வருகிற வரைக்குமாவது எங்களுடைய மக்கள் தன்மானத்தோடு, சிறப்பாக வாழுகின்ற சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆக, மற்றவர்களிடத்தில் கையேந்தி நிற்காமல், தங்களுடைய சொந்தக் காலில் நிற்கிற பொழுது தான், அவர்கள் தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ முடியும். அதற்கான சூழலலை உருவாக்குவதற்கு, தற்சார் பொருளாதாரக் கட்டமைப்பொன்றை நாங்கள் ஏற்படுத்துவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ சுமந்திரன் ‘தமிழ்மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். அவருடனான நேர்காணலில் அவர் மேலும…

  12. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனம் – 2020… July 26, 2020 தமிழ் மொழியினதும் இலங்கை வாழ் தமிழ்ச் சமூகத்தினதும் தொன்மை வடகிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் வாழ்ந்து வந்த இலங்கையின் தமிழ் சமூகமானது இடைக்கற்காலம், பெருங்கற்கால மக்களின் ஒன்று கலப்பில் இருந்து தோன்றியவர்கள். இடைக்கற்கால கலாசாரமானது கிறிஸ்துவுக்கு முன் 28000வருடகால நீண்ட இருப்பைக் கொண்டது. பெருங்கற்கால கலாசார மக்கள் திராவிடர்கள் என்று முன்னைய தொல்பொருளியல் ஆணையாளர் செனரத் பரணவிதான அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். இவர்கள் தென் இந்தியாவின் பல பாகங்களிலும் இருந்து கிறிஸ்துவுக்கு முன் 800ம் ஆண்டளவில் இருந்து இலங்க…

  13. வறுமை ஒழிப்பதில் ஓரவஞ்சனை நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில், நமது நாட்டுக்கு முன்னுதாரமான ஒரு மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது. சகல இனத்தவரும் ஒன்றுகூடி, முரண்பாடுகளின்றி வாழ்வதற்குத் தகுந்த சூழலாகவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான இயற்கை வளங்களை நிரம்பக் கொண்டதுமாகவே இந்த மாவட்டம் அமைந்துள்ளது. குளிரை விரும்புகளின் சொர்க்கபுரியாகவுள்ள நுவரெலியாவுக்கு, சிறிய நியூசிலாந்து என்ற புகழும் உள்ளது. இவ்வாறு, இலங்கையின் அழகியல் அத்தியாயத்தின் மய்யப்பகுதியாகக் காணப்படும் நுவரெலியா, இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் காணப்படுகிறது. இந்த மாவட்டத்தின் அழகுக்குப் பஞ்சம் இல்லை என்றாலும், அந்த மாவட்டத்தின் அழகும் வளமும் குன்றாமல் …

  14. தமிழ் மக்கள் - யார் யாரை வெல்ல வைப்பார்கள்? நிலாந்தன்… July 25, 2020 யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் ? என்று எந்த கட்சியைக் கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று. கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சை குழுக்களும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டம் சுயேட்சைக் குழு தனக்கு 3 ஆசனங்கள் கிடைக்கும் என்று கூறுகிறது. கிளிநொச்சியில் சந்திரகுமாரின் ஆதரவாளர்களும் அங்கே ஒரு மாற்றம் ஏற்படும் என்று முகநூலில் எழுதுகிறார்கள். ஐந்கரநேசனும் தான் வெல்ல முடியும் என்று நம்புகிறார். ஒரு கூர்மையான அவதானி பகிடியாகச் சொன்னார் “இப்படியே எல்லா …

  15. வரலாறு என்பது எப்போதுமே தற்சார்பற்ற குறிக்கோளை கொண்டிருந்ததில்லை, அதிகார வர்க்கத்தின் விருப்பத்திற்கும், நலன்களுக்கும் ஏற்றவாறே தற்சார்பான முடிவுகளை எடுக்கும் விதத்தில் ஆராய்ச்சி முறைமையில் வடிவமைக்கப்பட்டது. தேசியவாத அரசியலில் எம்.ஜி. சுரேஷின் 'யுரேகா என்றொரு நகரம்' நாவல் மிகவும் நாசூக்காகவும், துல்லியமாகவும் தொல்லியலை மையப்படுத்திய வரலாற்றியல் கட்டமைப்பையும் அதன் அரசியலையும் சொல்ல முற்படுகின்றது. வரலாற்றுத் திரிபுகளுக்கு பஞ்சமிருந்ததில்லை வரலாற்றில். வரலாற்றை எழுதுவதற்கு யாரிடம் அதிகாரம் இருந்திருக்கின்றதோ, இருக்கிறதோ என்பதன் அடிப்படையில் வரலாற்றின் முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன. சிறிலங்காவை பொறுத்தவரையில் வரலாற்றுப் புனைவுகள் அறிவுப்புல உத்தியோடும் முறைமையோடும் வரலாற…

    • 1 reply
    • 1.3k views
  16. சிங்கள மகா சபையின் தோற்றமும் மத-மொழித்-தேசியவாதத்தின் எழுச்சியும் (1956: 😎 என்.சரவணன் July 25, 2020 சிங்கள மகாசபை 19.05.1934 ஆம் ஆண்டு கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ‘பௌத்த மந்திரய’வில் வைத்து அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. மகா கவி ஆனந்த ராஜகருணா, குமாரதுங்க முனிதாச, டீ.எம்.ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் தகப்பனார்) பியதாச சிறிசேன போன்றோர் சிங்கள மகா சபையின் ஸ்தாபகர்களாக காணப்பட்டனர். ஆரம்பத்தில் சிங்கள மகா சபை என்கிற பெயர் பண்டாரநாயக்கவால் வைக்கப்பட்டதல்ல. வேறு இனத்தவர்களையும் இத்துடன் இணைத்துக்கொள்ளும் நோக்குடன் அவர் “சுவதேஷிய மகா சபா” (Swadesiya Maha Sabha – சுதேசிய மகா சபை) என்கிற பெயரையே வைக்க விரும்பினார். ஆனால் பிரபல சிங்கள இலக்கியப் பிரம…

  17. தேர்தல் குறித்த ஆர்வம் வடக்கில் எப்படியுள்ளது? கலாநிதி ஜெகான் பெரேரா July 25, 2020 இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தல்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கடந்த வாரம் வெளியிடப்பட்டதேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில், தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்க ளின் ஒன்றிணைந்த வடிவத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு தமிழ் மக்களிடமிருந்து புதிய ஆணை கோரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒரு பிரிக்கப்படாத நாட்டில் நீடித்த அமைதியை உறுதி செய்ய முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளதுஇது சுதந்திரம் பெற்ற ஆரம்ப நாட்களிலிருந்தும் பின்னர் மூன்று தசாப்த கால யுத்தத்திலிருந்தும் தமிழ் அரசியலில் முதலிடம் வகித்த சமூக சமத்துவ பிரச்சினைகளுடன் இணைந்த தொன்றாக…

    • 1 reply
    • 588 views
  18. உலக பௌத்தர்களே சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கண்டிக்க முன்வருவீர்களா? Posted on July 25, 2020 by சிறிரவி 14 0 இலங்கைத்தீவிலே புரையோடிப்போயிருக்கும் சிங்கள உயரினவாத நோயினது தீர்வுக்குத் தடையாக இருப்பது பௌத்தமும் பௌத்தத்தைப் பின்பற்றும்(?) சிங்கள பௌத்த பிக்குகளும் என்பதை நீண்ட வரலாறு பதிவுசெய்தே வருகிறது. 1957இலே ஏற்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை 1958இலே கிழித்ததுமுதல் இன்றுவரை தொடரும் சிங்கள பௌத்த பிக்குகளின் தமிழின அழிப்பிற்குத் துணைநிற்பதைக் கண்டிக்கத் தவறியதன் விளைவே தீவின் துயரத்துக்குக் கரணியமாகவுள்ளதென்பது வெள்ளிடைமலை. ஏன் இவர்களது அடாவடிகளை இலங்கையிலுள்ள ஏனைய மதத் தலைவர்கள்கூடக் கண்டிக்காதிருப்பது அச்சமா அல்லது அசமந்தப் போக்கா …

    • 0 replies
    • 438 views
  19. கிழக்கே ஓர் அஸ்தமனம்.. 1961இல் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை மாவட்டமானது உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அங்கே தமது பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதற்குத் தமிழர் ஒவ்வொருமுறையுமே படாதபாடுபட வேண்டியிருக்கிறது. அறுபது வருடங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டமானது உருவாக்கப்பட்டபோது அங்கு ஏறக்குறைய ஒரு இலட்சம் முஸ்லிம் மக்களும் அறுபதினாயிரம் சிங்கள மக்களும் ஐம்பதினாயிரம் தமிழ் மக்களும் இருந்தனரெனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இறுதியாக 2012இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை புள்ளிவிவரப்படி இங்கே முஸ்லிம்களின் தொகை மூன்றுமடங்கு ஆகியுள்ளதுடன் சிங்களவர்களின் தொகை நான்கு மடங்குக்கும் மேலாக அதிகரித்திருக்கும் அதேவேளை, தமிழர்களின் தொகையானத…

  20. இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டனுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான யுத்தம் என்பது ஆகாய கடல் வெளியிலேயே பெரும்பாலும் நடைபெற்றது. பிரிட்டன் றோயல் விமானப்படைக்கும், Luftwaffe க்கும் இடையிலான தொழில் நுட்ப போராகவே அது அமைந்தது. Operation Sealion என்ற பெயரில் ஜேர்மனியால் நடத்தபட்ட பிரிட்டனுக்கு எதிரான யுத்த்தில் இருந்து அன்று பிரிட்டனிடம் இருந்த ராடார் தொழில் நுட்பம் பிரிட்டனை காப்பாற்றியது எனலாம். ஜுலை 10, 1940 ல் பெரும் எடுப்புடன் ஆரம்பிக்கபட்ட யுத்தம் தாக்குதல் திட்டம் வெற்றியளிக்காததால் ஒக்ரோபர் மாதம் ஹிட்லரால் ஒத்திவைக்கபட்டது. ஜேர்மனி ஏறத்தாள 1900 விமானங்களையும் பிரிட்டன் 1700 விமானங்களையும் இந்த யுத்தத்தில் இழந்தன. ஜுன் 18, 1940 அன்று சேர்ச்சில் நாடாளுமன்றத்தில் உரைய…

    • 0 replies
    • 718 views
  21. தமிழ்த் தேசியமும் கறுப்பு ஜூலையும் இலச்சுமணன் கந்தையா / 2020 ஜூலை 23 இலங்கைத் தமிழ் இனத்துக்கு எதிராக, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐ.தே.க அரசாங்கத்தின் உச்சபட்ச ஆசிர்வாதத்துடன், 1983.07.23 அன்று அரங்கேற்றப்பட்ட நாடு தழுவிய, இன வன்முறையாகிய ‘கறுப்பு ஜூலை’ யின் 37 ஆவது நினைவு தினம் இன்றாகும். யாழ்ப்பாணம், திருநெல்வேலி, தபால்பெட்டிச் சந்திக்கு அருகில், தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் எரியூட்டப்பட்டதுடன் வீதியில் போவோர் வருவோர் மீது எழுந்தமானத்துக்குத் துப்பாக்கிப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. இராணுவத்தின் அடாவடித்தனங்கள் மிக மோசமான முறையில் யாழ்ப்பாணத்தில் முன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.