அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
சலீல் திருப்பதி ஜூலை நடுப்பகுதியில் ஒரு நாள் பெல்பாஃஸ்டில் இருந்து டப்ளினுக்கு பஸ்ஸில் பயணம் செய்தேன். பெல்பாஃஸ்ட் வட அயர்லாந்தில் இருக்கிறது ; மதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதத்தினால் பளவுபடுத்தப்பட்ட தீவின் ஒரு பகுதியான அயர்லாந்து குடியரசில் டப்ளின் இருக்கிறது.ஆனால், சோதனை நிலையம் எதுவும் இருக்கவில்லை ; வீதி அறிவிப்புகளில் மைல்கள் கிலோமீட்டர்களாக மாறியபோது, விளம்பர பதாகைகளில் விலைகள் பவுண்களில் இருந்து யூரோவாக மாறியபோது, எழுத்துக்களில் அசையழுத்தக்குறியைக் கண்டபோது எல்லையைக் கடந்துவிட்டேன் என்பதை புயிந்துகொண்டேன். இன்னொரு நாட்டில் நான் இருப்பதை எனது கையடக்க தொலைபேசி காட்டியது. பயணம் எந்த தடையும் இடையூறும் இல்லாததாக இருந்தது. 1998 பெரிய வெள்ளி உடன்படிக…
-
- 0 replies
- 414 views
-
-
தொடரும் துரோக வரலாறு செப்டம்பர் 2019 - இரா.முரளி · கட்டுரை ஆகஸ்ட் 4ஆம் தேதி நள்ளிரவு. காஷ்மீர் உறைந்து போனது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர்அப்துல்லா, மஹபூப் முப்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் வீடுகளில் சிறைப்படுத்தப்பட்டார்கள். நாடு முழுவதும் சிறைச்சாலை ஆனது. 70 லட்சம் காஷ்மீரிகள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலை. ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த ராணுவத்துடன் புதிதாக 35000த்துகும் மேற்பட்ட ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அமர்நாத் யாத்திரை சென்றவர்களும், பிற சுற்றுலா பயணிகளும் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்ற பொய்க் காரணம் காட்டி அச்சுறுத்தப்பட்டு, ஏர் இந்தியா விமானத்தில் 50 சதவிகிதம் சலுகை கட்டணத்தில் காஷ்மீரை விட்டு அவசர அவசரம…
-
- 1 reply
- 1.2k views
-
-
காஷ்மீர் 1947-48 சில உண்மைகள் பி.ஏ. கிருஷ்ணன் [ ஐநா தீர்மானத்தின் முக்கியமான பகுதிகள்: முதலாவதாக, இந்தியாவுடன் சேர்வதா அல்லது பாகிஸ்தானுடன் சேர்வதா என்பதைத் தீர்மானிக்க ஜம்மு காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இரண்டாவதாக, வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னால் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியிலிருந்து தனது படையையும் மற்றவர்களையும் அகற்றிக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, பாகிஸ்தான் பகுதியிலிருந்து படை அகற்றப்பட்டுவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டதும், இந்தியாவும் தனது படையை விலக்கிக்கொள்ள வேண்டும்; ஆனால் சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்படுவதற்காக எவ்வளவு படைவீரர்கள் தேவைப்படுகிறார்களோ அவ்வளவு வீரர்களை வைத்துக்கொள்ளலாம். நாலாவதாக, வாக்கெடுப்பு…
-
- 0 replies
- 988 views
-
-
காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1 புதினப்பணிமனைAug 16, 2019 by in கட்டுரைகள் காஷ்மீர் தெற்காசியாவின் அரசியலில் முக்கிய நகர்வு ஒன்றை கண்டிருக்கிறது. முன்பு இருந்த தனித்துவமான அதிகாரங்களை இழந்து இந்திய மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒரு அரசியல் பிராந்தியமாக இருந்த பிரதேசம் இன்று இரண்டு பிரிவுகளாக பிரித்து விடப்பட்டுள்ளது. முன்பு இருந்த காஷ்மீரில் மத்திய அரசினால் எடுக்கப்படும் எந்த தீர்மானத்தையும் மாநில சட்டபேரவையின் ஒப்புதல் இன்றி நடைமுறைப்படுத்த முடியாது என்பது அவற்றில் முக்கியமானது. மேலும் வேற்று மாநிலத்தவர் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. அரச வேலைகளில் வெளிமாநிலத்தவர் தெரிவு செய்யப்பட முடியாது என்பன போன்ற …
-
- 2 replies
- 1.3k views
-
-
காஷ்மீர் பிரச்சனை : மதமா? அரசியலா? இந்தியா சுதந்திரம் பெற்ற போது, இங்கு 500 குறுநில அரசுகள் இருந்தன. இந்த குறுநில அரசுகளுக்கு மூன்று வகையான வாய்ப்புகள் வழங்கப்பட்டன: 1. இந்தியாவுடன் இணைவது 2. பாகிஸ்தானுடன் இணைவது 3. தற்சார்புடன் இருப்பது. அந்த அரசுகளின் பரப்பளவு மற்றும் அந்தந்த மக்களின் விருப்பம் சார்ந்து முடிவுகள் எடுக்க, சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஏறக்குறைய அனைத்து அரசுகளும் தங்கள் முடிவுகளை விரைவாக எடுத்துவிட்ட போதும், அய்திராபாத் மன்னரும், ஜுனாகர் -காஷ்மீர் மன்னர்களும் தயக்கம் தெரிவித்தனர். அய்தராபாத் மற்றும் ஜுனாகர் அரசுகள் ராணுவ நடவடிக்கையின் மூலம் இணைக்கப்பட்டன. ஜம்மு -காஷ்மீர், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக (80 சதவிகிதம்) வசிக்கும் மாநிலமாகும் எனவே, கா…
-
- 0 replies
- 787 views
-
-
காஷ்மீர் மக்களின் குறைகளை கேட்க வேண்டும் | வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது
-
- 0 replies
- 629 views
-
-
காஷ்மீர் யாருக்கு? செப்டம்பர் 2019 - தோழர் தியாகு · கட்டுரை பண்டித ஜவகர்லால் நேருவின் தனி அடையாளங்களில் ஒன்று அவர் எப்போதும் தன் ஷெர்வானி சட்டையில் குத்தியிருந்த ரோஜாப் பூ. ஒவ்வொரு நாளும் இதற்கென்றே காஷ்மீரிலிருந்து ரோஜாப் பூ வருவதாகச் சொல்லிக் கொள்வார்கள். நேருஜியின் உடைகள் இலண்டனில் சலவை செய்யப்பட்ட செய்திபோல் இந்த காஷ்மீர் ரோஜா கதையும் உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கலாம், நாமறியோம். ஆனால் நேரு காஷ்மீரிப் பண்டித (பார்ப்பன) வகுப்பில் பிறந்தவர் என்பதும், எப்படியாவது காஷ்மீரை இந்தியாவில் இணைத்துக் கொள்ளத் தனி அக்கறை எடுத்துக் கொண்டவர் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். ஆனால் காஷ்மீர் பற்றி ஒவ்வொரு நாளும் வேளாவேளைக்கு நமக்குப் பரிமாறப்படும் செய்திகளில் பொய்…
-
- 0 replies
- 560 views
-
-
காஷ்மீர்- குளிர் தேசத்துக்குப் போர்!! பதிவேற்றிய காலம்: Mar 3, 2019 ஜம்மு காஷ்மீரில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கின்ற எல்லை 740 கிலோ மீற்றர் நீளமானதாக இருக்கிறது. இது பனி படர்ந்த மலைகளை ஊடறுத்து எல்லையிடப்பட்ட பிரதேசம். இந்தியாவையும் பாகிஸ்தானையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் இந்த எல்லைக் கோட்டின் இரண்டு பக்கங்களிலும் எந்த நேரமும் தயார் நிலையில் நிற்கின்றனர். அவர்கள் அந்தப் பனி மலைகளின் அழகை இரசிக்கும் நோக்கில் அங்கு நிலைகொள்ளவில்லை. ஒரு முனையிலுள்ளவரை மறு முனையிலுள்ளவர் கொல்லும் நோக்கில் ஆயுதம் தாங்கியவர்களாக வக்கிரத்துடன் காத்திருக்கிறார்கள். இந்தியாவின் …
-
- 0 replies
- 1k views
-
-
காஷ்மீர்: இறையாண்மையும், நிலப்பரப்பும் செப்டம்பர் 2019 - ராஜன் குறை · கட்டுரை As if the actual state were not the people. The state is an abstraction. The people alone is what is concrete. -Karl Marx இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு குடியரசுகளாக பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதியில் 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது, சில மன்னராட்சி பிரதேசங்கள் இரண்டில் எதனுடன் இணைவது என்ற கேள்வியை எதிர்கொண்டன. அதில் காஷ்மீரும் ஒன்று. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அழுத்தத்தில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. ஆனால் இது மன்னரின் இசைவாக இருந்ததே தவிர மக்களின் குரலாக இல்லை. சில தனித்த உரிமைகளை அந்த மாநிலத்திற்குக் கொடுப்பதன் மூலம் மக்களைத் திருப்திபடுத்தவே இந…
-
- 1 reply
- 1.2k views
-
-
காஸா: எரிந்து கொண்டிருக்கும் நேரம் சேரன் கன்னும் பத்து நிமிடங்களில் உங்கள் வீட்டை விட்டு நீங்கள் வெளியேறிவிட வேண்டும். சரியாகப் பதினோராவது நிமிடம் உங்களுடைய வீடு ஏவுகணையால் தகர்க்கப்படும்.” இஸ்ரேல் படையினரிடமிருந்து தொலைபேசியில் இந்த எச்சரிக்கை வந்ததும் மைஸா சலீம் தர்ஸாவின் மாமா, மாமி, உறவினர்கள், குழந்தைகள் என இருபது பேர் அலறியடித்துக்கொண்டு வெளியேறினார்கள். மைஸாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் ஹமாஸ் அமைப்புடனோ அல்லது காஸாவில் இயங்கும் மற்றொரு அமைப்பான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்கும் எத்தகைய உறவும் இல்லை. காஸாவில் இருப்பவை வீடுகள் அல்ல. பெரிய கட்டிடத் தொகுதிகளில் தொடர் குடியிருப்புகள். மாடியிலிருந்து இறங்கித் தெருவுக்கு வருவதற்கே ஆறு அல்லது ஏழு …
-
- 1 reply
- 905 views
-
-
காஸாவின் குழந்தைகள் sudumanal Thanks: Aljazeera கடந்த சில மாதங்களாக எனது கைபேசித் திரையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் காட்சிகள் எனது வாழ்நாளின் எல்லைவரை என்னை துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொண்டே இருக்கப் போகின்றன. காஸாவின் சிறிசுகள், பச்சைக் குழந்தைகள் திரையில் வரும் காட்சிகளைத்தான் குறிப்பிடுகிறேன். மரணித்தவர்கள், காயம்பட்டவர்கள், பசியால் உயிர்பிரிந்து கொண்டிருப்பவர்கள் என்பதான காட்சிகள் அவை. காயம்பட்ட குழந்தைகள் வலியால் கதறுகிறார்கள். தமக்கு பாதுகாப்பாயிருக்கிற தமது அப்பாக்களுக்காக அம்மாக்களுக்காக சகோதரங்களுக்காக என தமது குடும்ப உறவுகளுக்காகவும் சேர்த்து அவர்கள் அச்சப்படுகிறார்கள். குண்டு வீசும் விமானத்தின் பயங்கரம் ஒரு சிறுவனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வ…
-
- 0 replies
- 267 views
-
-
காஸ்ட்ராேவும் தமிழரின் உரிமை போராட்டமும் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், உலகப் புகழ்பெற்ற புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மரணம், உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைப் போலவே, தமிழர்கள் மத்தியிலும் அதன் தாக்கம் உணரப்பட்டிருக் கிறது. ஏனென்றால், இருபதாம் நூற்றாண்டின் பின் அரைக் காலப் பகுதியில் தமிழர்கள் மத்தியில் காஸ்ட்ரோ மிகவும் பிரபலமான ஒருவராகத் திகழ்ந்தவர். தனிநாடு கோரிப் போராட்டம் நடத்திய தமிழ் அமைப்புகளால் முன்னுதாரணம் கொண்ட தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டவர். அதனால் தான், பிடல் காஸ்ட்ரோவின் மரணம் உலகெங்கும், ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே, தமிழர்கள் மத்தியிலும் பலத்…
-
- 0 replies
- 337 views
-
-
[size=4][/size] [size=4]கடைசியில் கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழப் பகிடி மாதிரிப் போயிற்று, கிழக்கு மாகாணசபை ஆட்சி தொடர்பில் மு.கா. தலைவர் எடுத்துள்ள தீர்மானம்! 'முஸ்லிம் காங்கிரஸ் சார்பான முதலமைச்சர்' ஒருவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்தக் கட்சி ஆதரவாளர்கள் மரச் சின்னத்துக்கு வாக்களித்தனர். ஆனால், நஜீப் ஏ. மஜீத் - கிழக்கின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மு.கா. ஆதரவாளர்களுக்கு கடுமையான ஏமாற்றத்தினையும் கொதிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. நாம் ஆசைப்பட்ட 'மு.காங்கிரஸ் முதலமைச்சர்' எங்கே என்று மு.கா. வாக்காளர்கள் கேட்கிறார்கள். 'அவர்தான் இவர்' என்று நஜீப் ஏ. மஜீத்தைக் காட்டுகிறார் அமைச்சர் ஹக்கீம்! கிழக்கு மாகாணசபையில் அரசுடன் மு.கா. இணை…
-
- 2 replies
- 1.2k views
-
-
கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப் August 23, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — 1900 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட நோபல் பவுண்டேசன் அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து நோபல் சமாதானப் பரிசை வழங்கி வருகிறது. 124 வருட வரலாற்றில் அந்த பரிசு இதுவரையில் 97 பேருக்கும் 20 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களில் அமெரிக்க ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அடங்குவர். தியோடர் ரூஸ்வெல்ற் ( 1901 — 1909), வூட்ரோ வில்சன் (1913 — 1921) மற்றும் பராக் ஒபாமா (2009 — 2017) ஆகியோரே பதவியில் இருந்த வேளையில் நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற அமெரிக்க ஜனாதிபதிகளாவர். ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போரை வெற்றிகரமா…
-
- 3 replies
- 206 views
-
-
கிடைத்த சந்தர்ப்பம் தவறிப்போகுமா? -வி. தேவராஜ் ஐ .நா. மனித உமை கூட்டத் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள், வாதப் பிரதிவாதங்கள் என்பன சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை தனக்குச் சாதகமாக 27 நாடுகளின் உதவியுடன் பிரேரணையை நிறைவேற்றிக் கொண்டது. கடந்த வருடம் இடம்பெற்ற மனித உமை கூட்டத் தொடரில் தனக்கெதிராக எவ்விதப் பிரேரணையும் கொண்டு வரப்படாமல் இருப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வெற்றியும் பெற்றது. இலங்கையைப் பொறுத்து சர்வதேசரீதியில் எழும் நெருக்கடிகளை அவ்வப்போது சமாளித்துவிட்டு அதற்கான தீர்வைக் காணாது கிடப்பில் போட்டு விடுவது வழக்கம். இவ்வாறு கிடப்பில் போடப்பட்ட விவகாரமே தற்பொழுது விஸ்வ…
-
- 0 replies
- 497 views
-
-
கிட்டு பூங்காவில் அனுர கூறியதன் பொருள்? - நிலாந்தன் “திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகுவானது. வடக்கில் இதை மையமாக வைத்து செய்யப்படும் அரசியலை விலக்கி வைக்க வேண்டும்.தெற்கில் இதை மையமாக வைத்து செய்யப்படும் அரசியலை விலக்கி வைக்க வேண்டும். திஸ்ஸ விகாரையை மையமாக கொண்ட அரசியலை விலக்கி விட்டு, விகாராதிபதியும் மக்களும் சேர்ந்து பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.” இது கடந்த வியாழக்கிழமை கிட்டு பூங்காவில் அனுர பேசிய பேச்சின் ஒரு பகுதி. தையிட்டி விகாரையில் இருக்கும் தமிழ் அரசியலையும் சிங்கள அரசியலையும் நீக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். மிகத் தவறான ஒப்பீடு. தையிட்டி விகாரை என்பதே ஓர் அரசியல் விவகாரம்தான். அது ஓர் ஆக்கிரமிப்பு; நிலப் பறிப்பு; சிங்கள பௌத்…
-
- 0 replies
- 385 views
-
-
கிட்டுபூங்கா பிரகடனமும் அதன்பின்னும் – நிலாந்தன்! February 6, 2022 இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை அனுப்பும் நோக்கத்தோடு ஆறு கட்சிகள் ஒன்றாக உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், இந்தியாவை நோக்கி ஒரு கொழுக்கியைப் போட வேண்டியதன் அவசியம் குறித்து நான் எழுதியும் பேசியும் வந்தேன். ஆனால் அக்கொழுக்கி 13 ஆக இருக்க வேண்டுமா என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன். அந்நாட்களில் எனது நண்பர் ஒருவர் -அவர் ஒரு சிவில் சமூக செயற்பாட்டாளர்,அதோடு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்- என்னிடம் கேட்டார் இந்தியாவை நோக்கி ஒரு கொழுக்கியைப் போடும் பலம் இந்த ஆறு கட்சிகளிடமும் இருக்கிறதா? என்று. நான் அவருக்குச் சொன்னேன் “இல்லை. இப்…
-
- 0 replies
- 314 views
-
-
கிம் வழியில் செல்லுமா இலங்கை? -கே. சஞ்சயன் இலங்கை அரசியலில், ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து, சிறப்புச் செயலணியின் விசேட தூதுவராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு வரை ராஜபக்ஷ குடும்பம் எந்தளவுக்கு அதிகாரத்தில் இருந்ததோ, அதைவிடக் கூடுதல் ஆதிக்கத்தைப் பெற்றிருக்கிறது. இப்போது, ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சராக சமல் ராஜபக்ஷவும் பதவிவகிக்கையில் இவர்களுடன் பசில் ராஜபக்ஷவும் இணைந்திருக்கிறார். இதையடுத்து, குடும்ப ஆதிக்கம் தலைதூக்கியிருகிறது என்ற பொதுவான குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளாமல், ஆட்சியை வலுப்படுத்துவதில் …
-
- 0 replies
- 605 views
-
-
கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் : பிரான்ஸிஸ் போர்டு கொப்பாலாவுடன் ரோபர்ட் ஸ்டார் உரையாடல் (மொழிபெயர்ப்பு : யமுனா ராஜேந்திரன்) ஞாபக மறதிக்கு எதிரான போராட்டம் என்பது கலைஞர்களும் அறிவாளிகளும் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இருக்கிறது. கியூப சமுகத்தின் மீது வைக்கப்படும் மிகப் பெரும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று அங்கு சுதந்திரம் இல்லை என்பது. பிறிதொரு குற்றச்சாட்டு அங்கு வறுமை நிறைந்திருக்கிறது என்பதாகும். இலத்தீனமெரிக்க நாடுகளின் தொடர்ந்த வறுமைக்கான காரணங்களாக 500 ஆண்டு காலத்திற்கும் மேலான காலனியச் சுரண்டலையும் அதற்குப் பின் இன்று வரை இராணுவச் சர்வாதிகாரிகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஊட்டி வளர்த்ததையும் இன்று வரை கியூப சமூகத்தின் மீது …
-
- 0 replies
- 1.5k views
-
-
கியூபா: மனிதாபிமான மருத்துவமும் அமெரிக்காவின் திட்டமிட்ட இடையூறுகளும் Bharati April 29, 2020 கியூபா: மனிதாபிமான மருத்துவமும் அமெரிக்காவின் திட்டமிட்ட இடையூறுகளும்2020-04-29T23:09:58+00:00Breaking news, அரசியல் களம் ரூபன் சிவராஜா ‘வெள்ளை அங்கி அணிந்த கியூப படையினர்’ – Army of white coats என்ற சொல்லாடல் சூட்டப்பட்ட கியூப சிறப்பு மருத்துவப் பிரிவு 1960 இல் உருவாக்கப்பட்டது. அப்பிரிவிலிருந்தே மருத்துவப்பணியாளர்கள் சிலிக்கு அனுப்பப்பட்டனர். தென் அமெரிக்க, ஆபிரிக்க மற்றும் ஆசியப் பிராந்தியங்களின் 158 நாடுகளுக்கு, 300 000 வரையான மருத்துவப் பணியாளர்களை இதுவரை கியூப பணியில் ஈடுபடுத்தியுள்ளது என்பது கியூப அரசின் தகவல். ஆபிரிக்கா, லத்தீன் அம…
-
- 0 replies
- 467 views
-
-
‘நான் கிரிக்கெட் ஆடியமை ராஜதந்திரம்’ – சுமந்திரன் ‘எமது ஆயுத போராட்டம் ராஜதந்திரம்’ – ஜனநாயகப் போராளிகள் தமிழர் அரசியலில் ராஜதந்திரம் என்பதற்கான விளக்கங்கள் தலையைச் சுற்ற வைக்கின்றன. ராஜதந்திரத்தின் குருவான சாணக்கியன் இன்று உயிருடன் இருந்திருந்தால் ஓட்டைச் சிரட்டைக்குள் தண்ணீர் விட்டு அதற்குள் குதித்து உயிரை மாய்த்திருப்பார். ஒரு பிள்ளை பிறந்ததில் இருந்தே வாய்பேசாமிலிருந்தது. நீண்டகாலம் தவமிருந்து பெற்ற இந்தப் பிள்ளையின் வாயிலிருந்து என்றாவது ஒருநாள் அம்மா என்ற வார்த்தை வராதா என ஏங்கித் துடித்துக் கொண்டிருந்தாள் அன்னை. மீண்டும் ஆலயங்கள், தல விருட்சங்கள் எல்லாவற்றையும் சுற்றி வந்தாள். யார் யாரோ சொன்ன விரதங்கள் எல்லாவற்றையும் அனுஷ்டித்தாள். நம்பிக்கையை மட்டும…
-
- 0 replies
- 1.3k views
-
-
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வாரங்களின் பின்னர், கடந்த 16ம் திகதி, இலங்கையின் இராணுவக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவினால், இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவத் தலைமையகம் கூறியிருந்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இராணுவக் கட்டமைப்பு பெரும் மாற்றங்களைச் சந்திக்கும் என்று முன்னரே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதற்குக் காரணம், முன்னைய மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், இராணுவம் பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது. கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்களும், அவரது விசுவாசிகளும், உயர் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு, தாராளமாகக் கவனிக்கப்பட்டனர். அதைவிட, ஜனாதிபதித் தேர்தலுக்கு மறுந…
-
- 0 replies
- 409 views
-
-
கிரீன்லாந்தை விலைபேசல்; நாடுகள் விற்பனைக்கு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 12:17Comments - 0 காணிகளும் வீடுகளும் வாங்கி விற்கப்படுவது போல, நாடுகளும் வாங்கி விற்கப்படுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவ்வாறு ஒரு நாட்டையோ, அதன் பகுதியையோ விலை பேசுவதும் விற்கச் சொல்லிக் கேட்பதும், அதற்காகத் தயாரித்திருக்கும் பேரமும் அபத்தமாகத் தெரியுமல்லவா? ஆனால், இன்றைய உலக அரங்கு, அபத்தமும் அவலமும் ஆபத்தும் கலந்த கலவையாய் இருக்கின்றது. இதை மெய்யாக்கும் கதை ஒன்றையே, நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். காணிகளையும் கட்டடங்களையும் வாங்கி விற்கும் வியாபாரி, தனது 19ஆம் நூற்றாண்டு நினைவுகளுடன் உலகின் பலம் பொருந்திய நாட்டின் ஜனாத…
-
- 0 replies
- 598 views
-
-
புதன்கிழமை, 06 யூலை 2011, 11:05.14 AM GMT உலக மயமாதலில், யாவும் வணிகமயமாகி மானுட உயர் மதிப்பீடுகள் உடைந்து கொண்டிருக்கும் நிலையில், மனித நேயம் குறித்து உரத்துச் சொல்வது கேலிப் பொருளாகி விட்டது.இந்திய இராணுவத்தை விமர்சித்தார் என்ற காரணத்திற்காக ஒருநாள் சிறைவாசம் அனுபவித்த அருந்ததிராய், ""இந்தியாவில், வெளியில் வாழ்வதை விட, சிறை வாழ்க்கையே மேல்'' என்று கூறியது நினைவிற்கு வருகிறது. அறிவுத் துறையின் காற்றுத்தழுவாத அதிகார வர்க்கத்திடமிருந்து எதனை எதிர்பார்க்க முடியும். இன்று தமிழினம் சிக்கியுள்ள முரண்பாடுகள் பற்றியதான விழிப்புணர்வு, அடிபணிவு அரசியல்வாதிகளாலும், தோல்விகளைத் தமது சுய இருப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களாலும் சிதைக்கப்பட்டுள்ளன. கொடுமையா…
-
- 0 replies
- 696 views
-
-
கிளிநொச்சி இலங்கை வசம்.... கருணாநிதி காங்கிரசார் வசம்..... பொன்னிலா கடந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி ராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள், பாசிச இலங்கை ராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும் இந்த வெற்றியை சுகிக்கும் நிலையில் ராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை. சிங்கள இடது சாரிகளும் இல்லை. இந்த இழப்பின் வேதனைகளையும் வலிகளையும் இழப்புகளையும் சித்திரவதைகளையும் முழுக்க முழுக்க அனுபவிக்கப் போவது வன்னி மக்களே. அவர்கள் இனி கிழக்கைப் போல, யாழ்பாணத்தைப் போல திறந்த வெளிச் சிறைகளில் அடைபடப் போகிறார்கள். அதே சமயம் தமிழ் போராளிகள்…
-
- 4 replies
- 1.5k views
-