Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டனுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான யுத்தம் என்பது ஆகாய கடல் வெளியிலேயே பெரும்பாலும் நடைபெற்றது. பிரிட்டன் றோயல் விமானப்படைக்கும், Luftwaffe க்கும் இடையிலான தொழில் நுட்ப போராகவே அது அமைந்தது. Operation Sealion என்ற பெயரில் ஜேர்மனியால் நடத்தபட்ட பிரிட்டனுக்கு எதிரான யுத்த்தில் இருந்து அன்று பிரிட்டனிடம் இருந்த ராடார் தொழில் நுட்பம் பிரிட்டனை காப்பாற்றியது எனலாம். ஜுலை 10, 1940 ல் பெரும் எடுப்புடன் ஆரம்பிக்கபட்ட யுத்தம் தாக்குதல் திட்டம் வெற்றியளிக்காததால் ஒக்ரோபர் மாதம் ஹிட்லரால் ஒத்திவைக்கபட்டது. ஜேர்மனி ஏறத்தாள 1900 விமானங்களையும் பிரிட்டன் 1700 விமானங்களையும் இந்த யுத்தத்தில் இழந்தன. ஜுன் 18, 1940 அன்று சேர்ச்சில் நாடாளுமன்றத்தில் உரைய…

    • 0 replies
    • 718 views
  2. நல்லாட்சியில் ஓட்டை விழுந்து விட்டதா? மைத்திரிபால சிறிசேன 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, ஒன்றரை ஆண்டுகளில் அரசியல்த் தூய்மைக்கும் ஊழலுக்கும் எதிராகத் தமக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டிருந்தார் என்றால் ஒரே ஒரு உரையின் மூலம் அவரே, அந்த பெயரில் 90 சத வீதத்தைக் களங்கப்படுத்திக் கொண்டார் போல்தான் தெரிகிறது. ஊழலை ஒழித்து, ஊழலற்ற ஜனநாயக நாடொன்றை உருவாக்குவதாகத் தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பெரும் கோஷத்தை எழுப்பினர்; நல்லாட்சியே அவர்களது பிரதான கோஷமாக இருந்தது. எனவேதான், தற்போதைய அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என அழைக்கப்பட்…

  3. வடக்குகிழக்கை இணைப்பது திராவிடதேசமொன்றிற்கு வழிவகுக்கும் என்பதை இந்தியா உணரவேண்டும்- சரத்வீரசேகர 13வது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருவதற்கு இந்தியாவிற்கு எந்ததார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கைநாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் 13 வது திருத்தம் இந்திய இலங்கை உடன்படிக்கையின் வெளிப்பாடு என அர்த்தப்படுத்தப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார். இந்தியா தனது கடப்பாடுகளை நிறைவேற்றாததன் காரணமாகஉடன்படிக்கை குறித்த இந்தியாவின் பங்களிப்பு பற்றி கேள்விகள் உள்ளன எனவும் அவர்தெரிவித்துள்ளார் 13வது திருத்தம் இலங்கையின் உள்விவகாரம் என்பதை புறக்கணித்துவி;ட்டு இந்தியபிரதமர் எங்கள் பிரதமரிடம் …

    • 8 replies
    • 1.4k views
  4. ‘அமெரிக்காவிடமிருந்து இலங்கை தப்ப முடியாது’ என சம்பந்தன் சொன்னது எதற்காக? அதன் அரசியல் விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும்? அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான வருகையைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஒரு பதட்டமான நிலைமை உருவாகி இருக்கின்றது. இதற்கு காரணம் இலங்கை தெளிவாக தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்வதான ஒரு சமிஞ்ஞையை வெளிப்படுதியிருப்பதுதான். இந்தப் பின்னணியில், “பொறுப்பு கூறும் விடயத்தில் இலங்கை அரசு அமெரிக்காவிடம் இருந்து தப்ப முடியாது ” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கின்றார். சம்பந்தன் எதற்காக அவ்வாறு சொன்னார்? அவரது நோக்கம் என்ன? இதனால் உருவாகப்போகும் அரசியல் விளைவு என்ன? தமிழ் தலை…

  5. விடியும்போது நல்ல நல்ல விளையாட்டுக்கள் சூடு­பி­டிக்கும் அர­சியல் கள நகர்­வுகள் ரொபட் அன்டனி ""எலி­வென ஜாமெட்ட ஹொந்த ஹொந்த செல்லம்"" என்று சிங்­க­ளத்தில் கூறு­வார்கள். அதா­வது விடி­யும்­போது நல்ல நல்ல விளை­யாட்­டுக்கள் என்­பதே அதன் அர்த்­த­மாகும். தற்­போது எமது நாட்­டிலும் இவ்­வாறு நல்ல நல்ல அர­சியல் விளை­யாட்­டுக்­களை காண முடி­கின்­றது. காரணம் நாட்டின் அர­சியல் நகர்­வுகள் பர­ப­ரப்­பா­கின்­றன. அர­சியல் காய் நகர்த்­தல்கள் சூடு பிடிக்­கி­ன்றன. அடுத்து அர­சி­யலில் என்ன நடக்­கப்­போ­கின்­றது? முன்னாள் வெளி விவ­கார அமைச்சர் ஜீ.எல். பீரி­ஸினால் ஆரம்­பிக்­கப்­பட்டு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ இணைந்­து­கொண்­டுள்ள சிற…

  6. ஈழம் அடுத்தது என்ன? |

  7. படை குவிப்புக்கு புதிய நியாயம் 2017ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தில் பாது­காப்பு அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு தொடர்­பாக கடந்­த­வாரம் நடந்த குழு­நிலை விவா­தத்தின் போது, பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. உள்­நாட்டு, வெளி­நாட்டு பாது­காப்பு அச்­சு­றுத்­தல்கள் இல்­லாத சூழ­லிலும், முப்­ப­டை­க­ளையும் பலப்­ப­டுத்தும் திட்­டத்தில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது என்­பது இதன் மூலம் தெரி­ய­வந்­தி­ருக்­கி­ றது. அடுத்த ஆண்டு பாது­காப்­புக்கு, 284 பில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. புதிய போர் விமா­னங்­களின் கொள்­வ­னவு, ஆழ்­கடல் கண்­கா­ணிப்புக் கப்­பல்கள் கொள்­வ­னவு, இரா­ணு­வத்தை மறு­சீ­ர­மைக்கும் திட…

  8. டொனால்ட் ட்ரம்பும் இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தமும் ராஜபக் ஷவின் அர­சி­யலும் கொள்­கை­களும் கண்­ட­னத் துக்­குள்­ளா­ன­வை­யாக இருக் காமல் கவர்ச்­சி­யா­ன­வை­யாக இருக்­கக்­கூடும். தற்­போ­தைய அமெ­ரிக்க அர­சாங்கம் ராஜபக் ஷ அர­சாங்­கத்தை கண்­டிக் கின்ற அதே­வே­ளையில் விடு த­லைப்­பு­லி­களை எவ்­வாறு இவர்கள் அழித்­தொ­ழித்­தார்கள் என்­பதை கற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கக்­கூடும் என்று நான் நம்­பு­கிறேன் அமெ­ரிக்­காவின் 45 ஆவது ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் ட்ரம்ப் ஜன­வரி 20 பத­வி­யேற்­றுக்­கொண்டார். அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்கள் நிய­ம­னமும் உயர்­மட்ட நிர்­வாகப்பத­வி­க­ளுக்­கான நிய­ம­னங்­களும் செய்­யப்­பட்டு அவ­ரது அர­சாங்கம் இயங்க ஆரம்­பித்­தி­ருக்­…

  9. பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு -என்.கே. அஷோக்பரன் மூலைக்கு மூலை, ‘உங்கள் பிள்ளைகளைப் பட்டதாரியாக்குங்கள்’ என்று விளம்பரங்கள் நிறைந்து வழியும் காலகட்டத்தில், ‘பட்டப்படிப்பு’ என்பது சமூக அந்தஸ்தின் முக்கிய குறிகாட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில், எப்படியாவது எமது பிள்ளையும் ஒரு பட்டத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற பெற்றோரின் அவாவின் விளைவாக, அதிகளவிலான பட்டதாரிகள் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கல்வியின் இலக்கு, அறிவு என்பதற்குப் பதிலாக பட்டம் என்ற நிலையில்தான் கல்வித்துறை இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்கு கேள்வி இருக்கிறதோ அங்கு, அதற்குரிய நிரம்பலை, வணிகம் வழங்குவது என்பது இயல்பானது. இந்தப் பட்டப்படிப்புக்கான அதீ…

  10.  கிழக்கின் கணக்கு - முகம்மது தம்பி மரைக்கார் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்துக்குள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஏனைய இரண்டும் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளாகும். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் இந்த மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், அடுத்த வரவு - செலவுத் திட்டத்துக்குள் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார். மேற்படி மாகாண சபைகளில் தமிழ் பேசும் மக்களின் ஆளுகைக்குட்பட்டது கிழக்கு மாகாண சபையாகு…

  11. அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள் – அகிலன் July 21, 2021 பசில் ராஜபக்ஷ நிதி, பொருளாதார அமைச்சராகப் பதவி யேற்றியிருக்கும் நிலையில், திருமலைத் துறை முகத்தையும், அதனையடுத்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளையும் குத்தகை அடிப்படையில் 5 வருடங்களுக்கு அமெரிக்காவுக்குக் கொடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டிருப்பதாக செய்தி ஒன்று வெளி வந்திருக்கின்றது. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற சிங்களத் தேசியவாத அமைப் பினர் தான் இந்தச் செய்தியை வெளியிட்டு, கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கின்றனர். அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள் உத்தியோக பூர்வமாக இது குறித்த செய்திகள் வெளிவரவில்லை. தேசப் பற்றுள்ள தேசிய …

  12. இன்ரபோலால் தேடப்பட்ட கேபி எந்த நாட்டில் கைது செய்யப்பட்டார்? எந்த நாட்டு நீதிமன்றத்தால் நாடு கடத்துப்பட்டார்? அல்லது சட்ட விரோதமாக இலங்கை அரசு அவரை கடத்தியதா? அல்லது அவரை காட்டிக் கொடுத்த நாடு தனது நீதிபதிகளை மதிக்க வில்லையா? அல்லது????? சரி எதுவாக இருந்தாலும் இன்ரபோலின் விசாரணை நடந்த பின்னர்தானே அவர் நாடு கடத்தப்பட்டிருக்க வேணும். உண்மையில் என்ன நடந்தது?

    • 5 replies
    • 1.2k views
  13. இந்தியாவின் பதில் என்ன? நிலாந்தன். February 20, 2022 இந்திய பிரதமர் மோடி கொழும்பில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் இந்திய அரசாங்கம் அதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. அவ்வாறு நரேந்திர மோடி இலங்கைக்கு வருவாராக இருந்தால் இங்கே,அவர் தனக்கு ஒரு கூட்டுக்கோரிக்கையை முன்வைத்த ஆறு கட்சிகளையும் சந்திப்பாரா? அவ்வாறு அவர் சந்தித்தால்தான் அந்த ஆறு கட்சிகளும் இந்தியாவை நோக்கி முன்வைத்த கோரிக்கைக்கு ஒரு பொருள் இருக்கும். இல்லையென்றால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறுவதுபோல அந்த ஆறு க…

  14. தமிழர் தரப்புக்கு ஏமாற்றம் அளிக்கும் அரசின் அதிகார பகிர்வுத் திட்டம் Share தமது நீடித்த அர­சி­யல் பிரச்­சி­னைக்கு நிலை­யான அர­சி­யல் தீர்­வைப் பெற்­று­விட வேண்­டும் என்­பதே வடக்­கு,-­கி­ழக்கு தமி­ழர்­க­ளின் அர­சி­யல் பய­ணத்­தின் ஒரே நோக்­கம்.போர் சாத்­தி­யப்­ப­ட­வில்லை.போரால் அதன் இலக்கை அடைய முடி­ய­வில்லை. தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் போர் என்­பது தீர்­வைப் பெறு­வ­தற்­கான போராட்­டத்­தின் ஒரு வடி­வம்­தான்.சாத்­தி­யப்­ப­டா­மல் போனது அந்த வடி­வமே அன்றி, போராட்­டம் அல்ல.அந்த வடி­வம் இப்­போது மாறி, போராட்­டம் தொடர்ந்த வண்­ணமே உள்­ளது. இப்­போ­தைய ப…

  15. சவூதி இளவரசர் முஹமட் பின் சல்மான் எங்கே போகிறார் ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) மத்­திய கிழக்கு அல்­லது மேற்கு ஆசியா எனப் பேசும் போது அர-பு–இஸ்ரேல் பிரச்­சி­னையும், பலஸ்­தீன மக்­களின் துன்­பங்­களும் ஞாப­கத்­திற்கு வரும். 2011 இல் மத்­திய கிழக்கு நாடு­களில் அரபு வசந்தம் எனும் பொது­மக்­களின் போராட்டம் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டது. அரபு வசந்­தத்தின் தாக்கம் பல நாடு­க­ளுக்கும் பர­வி­யது. இதற்­கி­டையில் ஈராக்கின் முன்­னைய இரும்புத் தலைவர் சதாம் ஹுசைனின் ஆட்­சியில் நாச­கார ஆயு­தங்கள் இருப்­ப­தா­கவும் அதன் இருப்பு மானி­டத்­திற்கு பெரும் தீங்­கா­னது என்றும் அமெ­ரிக்­காவும் நேச நாடு­களும் ஐ.நாவின் பாது­க…

  16. ஸ்ரீலங்காவில் கருணைக்கொலை எச்சரிக்கை: இளகிய மனம் படைத்தோர், நடுநிலைவாதிகள், மார்க்சிஸ்டு பூசாரிகள், ஜனநாயகத்தூண்கள், ‘பெண்களாக‘ தம்மைக் கருதுவோர், சமாதானச் சிறகு சுமந்து அலைகிறவர்கள், நல்லவர்கள் இதைக் காணுவதால் மனத்துயரடைய நேரலாம். ஸ்ரீலங்கா அரசு இன்று ஒரு விடுதலையை வழங்கியிருக்கிறது. தமிழர்க்கு வாழ்க்கை ஒரு நீண்ட துன்பமெனில் அதன் பிடியில் இருந்து நால்வரை விடுவித்திருக்கிறது. தனது குழந்தைகள் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு, வயிறு கிழிக்கப்பட்டு கொல்லப்பட்ட நினைவுகளை அவள் விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் சுமந்து அலையும் வேதனையில் இருந்து ஒரு தாய்க்கு விடுதலை வழங்கியிருக்கிறது. தனது மனைவியையும், இளங்குருத்துக்களையும் மிருங்களையும் விட கேவலமான முறையி…

  17. இலண்டன் சம்பவங்கள் சொன்ன செய்தி இலங்கையின் அநேகமான பகுதிகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முழுமையான கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுகளும், தமிழ் மக்களுக்குள்ளே மாத்திரமே சிக்கிக் கொண்டிருந்தன. ஆனால், இலண்டனில் இடம்பெற்ற சம்பவமொன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பார்வையை, சர்வதேச ரீதியாக ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, இலண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் மீது, உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரியொருவர், மரண அச்சுறுத்த…

  18. கொசோவோ: விடுதலையின் விலை விடுதலையின் விலை குறித்த கேள்விகள் தவிர்க்க இயலாதவை. விடுதலைக்காகப் போராடும் அனைவரும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தவறியவர்களை, வரலாறு பாரபட்சமின்றித் தண்டித்திருக்கிறது. அதற்கு நாமும் விலக்கல்ல என்பதை இங்கு நினைவூட்டல் தகும். விடுதலைகள் வெல்லப்பட வேண்டியவையே ஒழிய, இரந்து பெறும் ஒன்றல்ல. வெல்லப்படாத விடுதலைகள் புதிய மேலாதிக்கவாதிகளுக்கு அடிமையாக வழிசெய்துள்ளன. எனவே, விடுதலை வெல்லப்படுவது எவ்வளவு முக்கியமானதோ, அதேயளவு முக்கியமானது, அது எவ்வாறு வெல்லப்படுகிறது என்பதாகும். கொசோவோ, தனிநாடாகத் தன்னை அறிவித்து, பத்து ஆண்டுகள் நிறைவைக் கடந்தவாரம் கொண்டா…

  19. மதமும் கடவுளும் - மண்டேலா தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் தந்தை, தியாகத்திருஉருவம், மாமனிதர் நெல்சன் மண்டேலா ஆங்கிலஇதழொன்றுக்கு மனம் திறந்துஅளித்த பேட்டி இங்கே தமிழில்: கேள்வி: பல்லாண்டுக் கால அடக்குமுறை. சிறைவாசத்தைத்தொடர்ந்து இறுதியில் அரசியல் சுதந்திரம் அடைந்தபோது, நீங்கள்இதயத்தில் பழிவாங்கும் உணர்ச்சி மிக்க ஒரு தலைவராகஇருப்பீர்கள் என மக்கள் கருதியிருக்கக் கூடும். எனினும், நீங்கள்சமரசப் பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள். அந்தப் பாதை எத்தனைசக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம்அடைந்தீர்களா? மண்டேலா: மக்களை நீங்கள் எந்த முறையில் அணுகுகிறீர்களே,அதற்கேற்பத்தான் அவர்களது பதில் அணுகுமுறையும் இருக்கும்.நீங்கள் வன்முறை அடிப்படையில் அணுகினீர்கள் என்றா…

  20. ஆடைகளும் நிர்வாணங்களும் ஒரு கதை சொல்லவா? ‘முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது. இது முஸ்லிம் பாடசாலை என்பதால், எங்களுக்கென்று இங்கு ஒரு கலாசாரம் உள்ளது. எனவே, இங்கு கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் உடுத்தியுள்ளமை போன்று, நீங்களும் ஹபாயா அணிந்துதான் வர வேண்டும். முடியாது விட்டால், எங்காவது இந்துக் கல்லூரியொன்றுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விடுங்கள்” என்று கூறுகிறார். இப்போது, த…

    • 7 replies
    • 2.2k views
  21. ராஜபக்ஷர்களைக் குழப்பும் கேள்வி அடுத்த ஆண்டு இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள சூழலில், இந்தத் தேர்தலில் யார் போட்டியிடுவதென்று, கட்சிகள் பிடுங்குப்படத் தொடங்கி விட்டன. ஐ.தே.க தரப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடும் ஆர்வத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த துமிந்த திசாநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர போன்றவர்கள், மீண்டும் மைத்திரிபால சிறிசேனவே தமது கட்சியின் சார்பில்வேட்பாளராகக் களமிறக்கப்பட வேண்டுன்று, ஒற்றைக்காலில் நிற்கின்றனர். கடந்த மேதின நிகழ்வுகளில், ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன என மூன்ற…

  22. 23 நாள்களில் வரவிருக்கும் ஜனாதிபதியின் தீர்வு எம்.எஸ்.எம் ஐயூப் எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், அதாவது இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக கடந்த மாதமும் அதற்கு முந்திய மாதமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்த போதிலும், அது நிறைவேறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கடந்த நவம்பர் மாதம் வரவு - செலவுத் திட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த வாக்குறுதியை முதன்முதலில் வழங்கினார். வரவு - செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்ததன் பின்னர், தாம் பாராளுமன்றத்தில உள்ள சகல அரசியல் கட்சிகளையும் அழைத்து, இது தொடர்பாகக் கலந்துரையாட…

  23. தேர்தலை நடத்தாது தொடர் போராட்டங்கள் ஓயாது புருஜோத்தமன் தங்கமயில் தொடர் போராட்டங்களால் கொழும்பு ‘அல்லோல கல்லோலம்’படுகிறது. கொழும்பு நகரத்தின் எந்தப் பிரதான வீதியில், எப்போது போராட்டம் ஆரம்பிக்கும், போக்குவரத்து தடைப்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் பல தொழிற்சங்கங்களும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், கட்சிகளும் போராட்டங்களை நடத்துகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை இராணுவத்தையும் பொலிஸாரையும் கொண்டு ரணில் விக்கிரமசிங்க அரசு ஏவுகின்றது. போராட்டங்களில் காலாவதியான கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தப் போராட்டங்களை, கட்டுக்குள் கொண்டுவருவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இந்…

  24. சிலை அரசியல் : அறிவும் செயலும் – நிலாந்தன். March 26, 2023 வடக்கில் கடந்த ஒரு கிழமைக்குள் மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. நடராஜர் சிலை,வள்ளுவர் சிலை, சங்கிலியன் சிலை, என்பவற்றோடு திருநெல்வேலி சந்தையில் மணிக்கூட்டுத் தூபி ஒன்று. இச்சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலை கடந்த வாரக்கட்டுரையில் ஓரளவுக்குப் பார்த்தோம். இச் சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் மத அரசியலைத் தனியாயகப் பார்க்கவேண்டும். இன்று இக்கட்டுரையானது இச்சிலைகளின் அழகியல் அம்சங்களைக் குறித்த விவாதக் குறிப்புகள் சிலவற்றை முன்வைக்கின்றது. பொதுவெளிச் சிற்பங்கள் அவற்றை நிறுவும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களின் விருப்பங்களை மட்டும் பிரதிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.