அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ஆபிரிக்காவின் மைய நீரோட்டத்தில் அதிவலது தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 24 உலகின் பல்வேறு பிராந்தியங்களில் அதிவலதுசாரி, தனக்கேயுரிய தனித்துவமான குணவியல்புகளுடன் செயற்படுகிறது. இதற்கு ஆபிரிக்காவும் விலக்கல்ல! ஆபிரிக்க அரசியல் நிலப்பரப்பானது தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் சொந்த வடிவங்களைக் கொண்டுள்ளது. இதற்கான சிறந்த உதாரணமாகக் சொல்லப்படுவது 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை. இதேபோல, ஆபிரிக்காவெங்கும் அதிவலதுசாரித்துவத்தால் உந்தப்பட்டு, பல வன்முறைகளும் கொலைகளும் நடந்தேறியுள்ளன. ஆபிரிக்க சமூகங்களின் கட்டமைப்பு, சில வழிகளில் அதிவலதுசாரித்துவத்துக்கு வாய்ப்பானதாக உள்ளது. ஆபிரிக்கக் கண்டமானது,…
-
- 0 replies
- 278 views
-
-
ரஷ்யாவின் புதிய காய் நகர்த்தல் -ஜனகன் முத்துக்குமார் ரஷ்யாவைத் தவிர்த்து, மத்திய கிழக்கு விவகாரத்தில் மாற்று நிலைமைகளை ஏற்படுத்துதல் என்பது முடியாத ஒன்றாகும். மேற்கத்தேய நாடுகள், தொடர்ச்சியாக ரஷ்யாவை ஆக்கபூர்வமானதொரு செயற்பாட்டாளராகக் கருதாவிட்டாலும், ரஷ்யாவின் பங்கு, குறித்த விவகாரத்தில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். குறிப்பாக சவூதி அரேபியா, தனது பிராந்திய வல்லரசாண்மையை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், துருக்கி, குர்திஸ் இன மக்களுக்கு ஈராக்கில் ஐக்கிய அமெரிக்கா உதவியதைத் தொடர்ந்தும், ரஷ்யாவுடன் இராஜதந்திர உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டதிலிருந்து, ரஷ்யாவைப் புதியதொரு பங்காளராகப் பார்க்கும் மனப்பாங்கு, மத்திய கிழக்கில் உருவானது எ…
-
- 0 replies
- 678 views
-
-
14 ஆண்டுகளாக தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை? – நிலாந்தன். 2009 மேமாதம் தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மே மாதத்தோடு 14 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 14 ஆண்டுகளில் தமிழ் மக்கள் பெற்றவை எவை? பெறாதவை எவை? அல்லது கற்றவை எவை? கற்றுக்கொள்ளாதவை எவை? 2009 மே மாதம் வரையிலும் தமிழ் மக்களின் பிரதான பேர பலமாகக் கருதப்பட்டது ஆயுதப் போராட்டம்தான்.2009க்குப் பின் தமிழ்மக்களின் பேரபலம் எது? ஆயுதப் போராட்டம் எனப்படுவது இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நிலைகளைத் தாக்கியது.உயிர்களை அழித்தது.நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை குழப்பியது. அந்நிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளைக் குறைத்தது. இவற்றுடன் போர்க்களத்தில் அரசாங்கம் பெருமளவு காசைக் கொட்டி சண்டை போட வேண்டி…
-
- 0 replies
- 277 views
-
-
வடக்கு மாகாணசபை சாதித்தது என்ன? ஒன்றையும் சாதிக்கவில்லை என்பதை விட, இன்னமும் சாதிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தும், அதனை வடக்கு மாகாண சபை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை. அதாவது 400 க்கும் அதிகமான தீர்மானங்களை நிறை வேற்றுவதற்கான களமாக இருந்த வடக்கு மாகாண சபை, தமது அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு ஏற்ற நிலையியல் கட்டளைகளை நிறைவேற்றத்தவறியிருக்கிறது வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதியுடன் முடியப் போகிறது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடந்தவாரம் கூறியிருந்தார். 2013 செப்டெம்பர் 21ஆம் திகதியே வடக்கு மாகாணசபைக்குத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
Published By: VISHNU 23 JUL, 2023 | 06:07 PM கார்வண்ணன் கனடாவுக்கு எதிராக அண்மையில் கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்குப் பின்னர், கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், இந்த வாரம் வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். கனேடிய உயர் ஸ்தானிகர் கொழும்பில் பணியைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், அவர் வடக்கிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இது. இந்தப் பயணத்தின் போது அவர் அரசியல்வாதிகளைச் சந்திப்பதை விட, பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படும் நிலையில் உள்ள சமூகத்தினரைச் சந்திப்பதிலும், அவர்களின் நிலையை அறிந்து கொள்வதிலும் கவனம் செலுத்தியிருந்த…
-
- 0 replies
- 413 views
- 1 follower
-
-
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கபட்டது. . இலங்கை அதிபர் சிறீசேன நாடாளு மன்றத்தைக் கூட்டும்படி ஓயாமல் நச்சரித்துக் கொண்டிருந்த மேற்குலகின் முகத்தில் திடீரென அறைந்துவிட்டார். இன்று சீனாவுக்கு முதல் வெற்றி நாளை என்ன நடக்கும்? மேற்க்கு நாடுகளும் இந்தியாவும் தென் இலங்கையில் சீனாவை வெல்லுதல் சாத்தியமில்லை. ஆனால் சீனாவை வட கிழக்கு இலங்கைக்குள் கால்வைக்கமல் தடுக்க முடியும்
-
- 6 replies
- 1.5k views
-
-
பிரான்ஸ் அரசியல்: தடுமாறுகிறது ஐரோப்பா Editorial / 2018 டிசெம்பர் 03 திங்கட்கிழமை, மு.ப. 01:55 Comments - 0 -ஜனகன் முத்துக்குமார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கான ஆதரவு, உள்நாட்டில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் பேரணிகள் மூலம், அவரது கொள்கைகளுக்கும் அரசாங்கத்துக்கும் எதிர்ப்புகளைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவது தெரிவிப்பது, தொடர்ச்சியாகவே பிரெஞ்சு ஜனாதிபதிக்குக் கடினமானதொரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பிரெஞ்சு அரசியல் விவகாரங்களில் பல ஆய்வாளர்கள், ஜனாதிபதி மக்ரோனின் அரசியல் நிலை பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “அவர், முன்னைய ஜனாதிபதிகளான ஃபொஷ்வா ஹொலான்டே, நிக்கோலா சார்க்கோசி ஆகியோரைக் காட்டி…
-
- 0 replies
- 706 views
-
-
மாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்? யதீந்திரா கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த உரையாடல் ஒரு முடிவற்று நீண்டு செல்கிறது. இதனை இனியும் தொடர அனுமதிக்கலாமா என்னும் கேள்வி பலரிடமும் உண்டு. அவ்வாறானவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு ஒரு ஜக்கிய முன்னணி அவசியம் என்பதை உணர்ந்தவர்கள். அதற்காக பல்வேறு வழிகளிலும் உழைத்தவர்கள். இப்போதும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். அவ்வாறானவர்களுடன் பேசுகின்ற போது, அவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை கூறுகின்றனர். இதற்கு மேலும் யார் தூய்மையானவர் என்னும் விவாதம் தேவையற்றது. இதற்கு மேலும் இந்த விவாதம் நீண்டு செல்லுமாக இருந்தால், அது நிச்சயமாக விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகவுள்ள மாற்றுத் தலைமையை பலவீனப்படுத்தும். ஒரு வ…
-
- 0 replies
- 811 views
-
-
ராஜபக்ஷாக்களின் இரண்டாவது தேர்தல் வெடிகுண்டா?
-
- 2 replies
- 602 views
-
-
முஸ்லிம் சமூகமும் உணர்ச்சி அரசியலும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:17 அரசியல் என்பது விஞ்ஞானமாகும். அதனால், அது அறிவுபூர்மாக அணுக வேண்டிய விவகாரமாகவுள்ளது. மறுபுறம், அரசியலை கலை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரசியல் வியாபாரமாகும். சிலருக்கு அதுவே முழுநேரத் தொழிலாகவும் இருக்கிறது. அரசியலை விஞ்ஞானபூர்வமானதொரு விடயமாக விளங்கிக் கொண்டவர்கள், அதை அறிவு ரீதியாக அணுகுவார்கள். அரசியலை உணர்வுபூர்வமான விடயமாக மட்டுமே புரிந்து வைத்திருப்பவர்களுக்கு, அவர்களின் விருப்பத்துக்குரிய கட்சி, “மதம்” போல் இருக்கும். அரசியலை முற்றுமுழுதாகவே, உணர்வுபூர்வமாக அணுகும் சமூகம், தனக்கான விடிவைப் பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. …
-
- 0 replies
- 1k views
-
-
ஜெனீவா ஏமாற்று வித்தை எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஏப்ரல் 03 புதன்கிழமை, பி.ப. 08:53 Comments - 0 Views - 20 மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், அப்பேரவை விடயத்தில் நாட்டு மக்களுக்கும், குறிப்பாக சிங்கள மக்களுக்கும் உண்மையைக் கூறுவதில்லை. தாம், மனித உரிமைகள் பேரவையின் முன் மண்டியிடுவதில்லை என, அவ்வரசாங்கங்களின் தலைவர்கள், சிங்கள மக்களிடம் கூறி வருகிறார்கள். அதேவேளை, அவர்கள், மனித உரிமைகள் விடயத்தில், பொறுப்புக் கூறல் தொடர்பில் பல நடவடிக்கைகளைத் தாம் எடுத்து வருவதாக, மனித உரிமைகள் பேரவையிடம் கூறி வருகிறார்கள். உண்மைநிலை என்னவென்றால், அவர்கள், மனித உரிமைகள் பேரவையின் நெருக்குவாரத்தின் க…
-
- 0 replies
- 905 views
-
-
-
20 MAY, 2025 | 12:46 PM டி.பி.எஸ். ஜெயராஜ் ஐரோப்பாவில் வாழும் இலங்கை தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் மத்தியில் இன்றைய நாட்களில் பெரிதும் பேசப்படுபவராக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு தலைவரான 'பொட்டு அம்மான்' என்ற சண்முகநாதன் சிவசங்கர் விளங்குகிறார். பெரிதும் அஞ்சப்பட்ட புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவர் போரின் இறுதிக்கட்டத்தில் 2009 மே மாதத்தில் இறந்துவிட்டார் என்ற போதிலும், ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒரு குழுவினர் பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வெளியில் வந்து இயக்கத்துக்கு புத்துயிரளித்து இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்ற…
-
-
- 3 replies
- 887 views
- 1 follower
-
-
காலங்கடந்த ஒற்றுமையின் பயன்? லக்ஸ்மன் நாட்டின் தென் பகுதியிலும், வடக்கு கிழக்கிலும் காலங்கடந்த ஒற்றுமை குறித்த விவாதங்கள் இப்போது பிரபலமாகப் பேசப்படுபவையாக இருக்கின்றன. இவை பயனுடையவைதானா? ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் ஈகோ போர்களைத் தாண்டி, கொழும்பு மேயர் பதவிக்காக ஒன்றிணைவது பற்றிய செய்தி வந்தபோது, இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் அதை ‘மிக மிகக் கால தாமதமானது” என்றுதான் வரவேற்றனர். நாட்டையே ஆட்சி செய்யும் வாய்ப்பிருந்த போதிலும் அதனை நழுவவிட்டு தற்போது கொழும்பு மேயர் பதவியைத் தக்கவைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இணைந்து போராடுகின்றன. இக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால், சஜித்தும் ரணிலும் ஒற்றுமையின் சக்தியை உ…
-
- 0 replies
- 180 views
-
-
தமிழ்த்தேசிய அரசியலில் ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு December 11, 2025 — கருணாகரன் — இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பு ஒன்று கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியத் தரப்புகள் எவ்வாறான அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்வது என்ற அடிப்படையிலேயே இந்தச்சந்திப்பு நடந்ததாக, சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழரசுக் கட்சியின் செயலாளர்எம். ஏ. சுமந்திரனும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந்திரனும் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு இந்தத் தரப்புகள் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியை அமைப்பதற்கான புரிந்துணர்வில் இணக்கம் கண்…
-
-
- 4 replies
- 353 views
-
-
இருண்ட முள்ளிவாய்க்காலில் ஒளிர்விட்ட மெழுகுவர்த்திகள் மு.திருநாவுக்கரசு 'இந்த பூமி அணுகுண்டின் நிழலில் நிறுத்தப்பட்டுவிட்டது' என்று அணுகுண்டு வீசப்பட்டபின் பூமியைவிடவும் பாரமான தன் கருத்தை ஜோர்ஜ் ஓவல் கூறினார். அணுகுண்டைப் பற்றி இதைவிட மேலான கருத்தை யாரும் சொல்லியதாக எனக்குத் தெரியவில்லை. மச்ச நியாயமும், தொழில்நுட்பத்தின் ஆதிக்கமும் இணைந்து மனிதப் பண்பாட்டையும், பூமியின் வாழ்வையும் சிறைப்படுத்திவிட்டதை ஜோர்ஜ் ஓவலின் மேற்படி கருத்து பிரகடனப்படுத்தியது. 'அணுகுண்டை வீசாமல் யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியாதென்று கூறும் நியாயத்தில் ஓரளவு உண்மை இருப்பதுபோல் தோன்றினாலும் அணுகுண்டு வீசியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது' எ…
-
- 0 replies
- 444 views
-
-
தேர்தல் கொள்கை விளக்க உரை 1988- அமிர்
-
- 0 replies
- 528 views
-
-
கனவுகள் சில வேளைகளில் கலைந்து போகக் கூடியது. சில வேளைகளில் நிஜமாக நடக்கக் கூடியது. ஆனால் ஈழத்தமிழர்களின் கனவுகள் எந்த வேளைகளிலும் நிஜமானதாக தெரியவில்லை "கடைசி சண்ட முடிஞ்சு வரேக்க என்ர அப்பா ஆமீட்ட சரணடைஞ்சவர் என்றோ ஒரு நாள் அப்பா வருவார்" என்று கூறிய பிஞ்சுக் குழந்தையின் ஆசைகள் இன்று நிறைவேறாத கனவு போல மாறிவிட்டது. இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பிடுங்கப்பட்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்கள், தங்களின் உணர்வுகள் அழிக்கப்பட்டாலும் பரவாயில்லை உயிர்களை காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் நிலமை இற்றை வரைக்கும் மறைக்கப்பட்ட உண்மையாகவே இருந்து வருகின்றது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தற்போது முக்கியமான ஒரு செ…
-
- 0 replies
- 770 views
-
-
புலிகளுக்குப் பின்னர் தமிழர்களின் எதிர்காலம்….? -கே.சஞ்சயன் வடக்கு, கிழக்கிற்கு தனியான ஆட்சிமுறை என்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில், இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகளில் அரசாங்கம் கொண்டுள்ள இறுக்கமான போக்கை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தான் வலியுறுத்தியிருந்தார். இலங்கையில் இன, மத, மொழி அடிப்படையில் நிர்வாக கட்டமைப்புகள் ஒருபோதும் உருவாக்கப்படமாட்டாது என்று…
-
- 0 replies
- 1.3k views
-
-
மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல் மனித உரிமைப் பேரவை, PP1: ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கம், கொள்கைகள் என்பவற்றால் வழிநடத்தப்பட்டு, மனித உரிமைகள் குறித்த சர்வதேச பிரகடனத்தை மீள உறுதிசெய்து, மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனங்களையும், தொடர்புடைய ஏனைய சாசனங்களையும் நினைவிற்கொண்டு, PP2: இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல் தொடர்பான மனித உரிமைப் பேரவையின் 19/2, 22/1, 25/1, 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களை நினைவிற்கொண்டு, PP3: இலங்கையின் இறைமை, சுதந்திரம், ஐக்கியம், பிரதே…
-
- 1 reply
- 387 views
-
-
ஐ.நா வில் ஈழ அரசியலின் தோல்வியும் எதிர்கால அபாயமும்: சபா நாவலன் உலகின் அத்தனை நிகழ்வுகளையும் மூடிவைத்துவிட்டு புலம் பெயர் நாடுகளின் அரசியல் “ஆய்வாளர்களும்” “அறிஞர்களும்” தாம் யாரையெல்லாம் சந்தித்தோம் எங்கெல்லாம் பேசினோம் என வாதப் பிரதிவாதங்களை நடத்திகொண்டிருக்கிறார்கள். பதினொரு வருடங்களாக இலங்கையிலோ அன்றி உலகின் எந்தப் பகுதியிலுமோ போராட்டங்கள் எதுவும் நடைபெற்றுவிடதாவாறு ஐ.நாவையும் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் நம்பியிருங்கள் என்று நடந்துமுடிந்த இனப்படுகொலையை ஒரு சிறிய வட்டத்தினுள் அடக்கிய இவர்கள் இம்முறை இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஐ.நா மனித உரிமைச் சபையில் தீர்மானம் நிறைவேற்றியதை வெற்றி எனக் கொண்டாடுகிறார்கள். எதுவுமே அற்ற வெற்றுத் தீர்மானத்தை இலங்கை அரசும், ப…
-
- 0 replies
- 581 views
-
-
போரும் வைரசும் ஒன்றல்ல! நிலாந்தன்! August 29, 2021 ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது ஒரு ராஜதந்திரி என்னிடம் சொன்னார் உங்களுடைய நாட்டில் மிக அடிமட்டம் வரையிலும் இறங்கி வேலை செய்யும் ஒரு சுகாதாரக் கட்டமைப்பு உண்டு.வீடுவீடாக வந்து நுளம்புப் பெருக்கத்திற்கான வாய்ப்புக்கள் உண்டா இல்லையா என்பதனை நுணுக்கமாக ஆராய்கிறார்கள்.இது ஒரு முன்னேற்றகரமான சுகாதாரச் செய்முறை என்று. உண்மைதான் இலங்கைத்தீவின் சுகாதார வைத்திய அதிகாரி (MOH)கட்டமைப்பு என்பது தனித்தன்மை மிக்கதாக வர்ணிக்கப்படுகிறது.மிகக் குறைந்த செலவில் மிகக் கூடுதலான வினைத்திறனோடு செயற்படும் ஒரு பொதுச் சுகாதார கட்டமைப்பாக அது போற்றப்படுகிறது.பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறையில் பரவிய…
-
- 0 replies
- 602 views
-
-
மேலும் ஒரு போராட்டத்துக்கு பணிந்த அரசாங்கம்! நிலாந்தன். அரசாங்கம் மேலும் ஒரு போராட்டத்திற்கு பணிந்திருக்கிறது அல்லது தனது தவறான முடிவுகளை மிகவும் பிந்தியேனும் மாற்றியிருக்கிறது. கடந்த வாரத்திற்கு முதல் வாரம் அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு அரசாங்கம் பணிந்தது. மிக நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தொழிற்சங்கங்களோடு ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அதைப் போலவே கடந்த புதன்கிழமை அரசாங்கம் செயற்கை உரம் தொடர்பான தனது முடிவை மாற்றியிருக்கிறது. இயற்கை உரத்தைத்தான் பாவிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் சுற்றுச்சூழல் தொடர்பான இதுபோன்ற விவகாரங்களை எடுத்த எடுப்பில் …
-
- 0 replies
- 372 views
-
-
சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவாரா மகிந்த? எம்.ஐ.முபாறக் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு மாநாடு கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றதிலிருந்து அந் தக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்சியின் ஆட்சியும், அரசுத் தலைவர் பதவியும் சுதந்திரக் கட்சிக்கு இருந்தாலும்கூட,அதைப் பலம்வாய்ந்த கட்சி என்று சொல்ல முடியாது.தற்போதுள்ள அரசியல் நிலவரத்தின்படி,இனி வரும் தேர்தல்களில் அந்தக் கட்சி தனித்துப் போட்டியிட்டால் வெற்றிபெறுவது சந்தேகமே.அதற்குக் காரணம் மகிந்த தரப்பின் செயற்பாடுகள்தான். மகிந்த என்ற பாத்திரம் மைத்திரி எதிர்பார்க்கா…
-
- 0 replies
- 360 views
-
-
வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும் அரசியல் ஆய்வாளரும், ஈழ விடுதலைவரலாற்றில் ஒரு மூத்த பயணியும், முன்னாள் யாழ் பல்கலைக்கழக மணவர் ஒன்றியத்தலைவருமான சட்டத்தரணி திரு ஜோதிலிங்கம் ஐயா SA Jothiஅவர்கள்" வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும்எனும் தலைப்பில் ஆற்றிய உரை.{ "அரசியல் தீர்வில் தமிழர்களின் அடிப்படைகள்எனும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்பட்ட அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் இவ்வுரை நிகழ்த்தப்பட்டது}
-
- 0 replies
- 440 views
-