Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இந்தியா - பாகிஸ்தான்: போரின் மொழி சொல்லும் கதைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மார்ச் 07 வியாழக்கிழமை, பி.ப. 05:43Comments - 0 போரை விரும்புகிறவர்கள் போரில் பங்கேற்பதில்லை; போரில் மரிப்பதில்லை; அவர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. போரின் மொழியை, அவர்களே உரைக்கிறார்கள்; ஊடகங்களில் கூவுகிறார்கள்; அவர்களே, போரை விற்கவும் செய்கிறார்கள். முன்பு, போர்களுக்காக ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இப்போது, உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களை விற்பதற்காகப் போர்கள் உருவாக்கப்படுகின்றன. போர், மிகப் பெரியதொரு வியாபாரம். அது, மரண ஓலங்களையோ, இழந்த அவயவங்களையோ, அநாதைகளையோ அறியாது. அதையே தொடர்ந்தும் சிலர் உரைக்கிறார்கள்; தேசபக்தியின் பெயரால், தேசியத்தின் பெயரால் அ…

  2. இலங்கையின் தலையெழுத்தை தீர்மானித்த இனக்கலவரம் 1983 இல் நடந்தது நமக்குத் தெரியும். இனத்துவ முரண்பாட்டை அடுத்த நிலைக்குத் தள்ளிய அந்த 83 இனப்படுகொலைச் சம்பவம் ஆயுதப் போராட்டத்தை கூர்மையடையச் செய்ததும் நாமறிவோம். ஆனால் அந்த வரலாற்றுத் திருப்புமுனை நிகழ்த்தப்பட்ட ஆண்டில் இருந்து சரியாக 100 வருடங்களுக்கு முன் அதாவது 1883இல் இலங்கையில் முதலாவது வகுப்புவாத கலவரம் நடந்தது. முதலாவது மதக் கலவரமாகவும் அதனைக் குறிப்பிடுவார்கள். இந்த மாதம் மார்ச் 25ஆம் திகதியோடு அந்த கலவரம் நிகழ்ந்து 132 வருடங்கள் நிறைவடைகின்றன. “கொட்டாஞ்சேனை கலவரம்” ஆங்கிலேய ஆட்சி கால அரச பதிவுகளில் “Kotahena Riots” என்றே அழைக்கப்படுகிறது. இந்த கலவரம் நிகழ்ந்து முடிந்த பின்னர் இதனை விசாரிப்பதற்காக ஆங்கிலேய …

    • 1 reply
    • 1.7k views
  3. அதிகாரப் பரவலாக்கல்: 35 வருடங்களில் எத்தனை குழுக்கள்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மார்ச் 06 புதன்கிழமை, மு.ப. 02:34 Comments - 0 பழைய முக்கிய இரண்டு விடயங்கள், மீண்டும் களத்துக்கு வந்துள்ளன. ஒன்று நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை இரத்துச் செய்தல்; மற்றையது அதிகாரப் பரவலாக்கல். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளமையால் அந்த விடயம், மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சித் தலைவர்களுடன் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகக் கலந்துரையாடி, அந்த விடயம் தொடர்பாக, மேலும் ஆராயக் குழுவொன்றை நியமித்துள்ளதை அடுத்து, அந்த விடயமும் மீண்டும் முக்கியத்த…

  4. மன்னார் முரண்பாடுகள்: நாம் என்ன செய்ய வேண்டும்? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மார்ச் 06 புதன்கிழமை, மு.ப. 12:54 Comments - 0 மன்னார், திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு உடைப்பு மற்றும் முரண்பாடுகள், தமிழ்ச் சூழலில் மதவாத, சாதியவாத, பிரதேசவாத, சந்தர்ப்பவாத உரையாடல்களை மீண்டும் தோற்றுவித்து இருக்கின்றன. தமிழ் மக்களிடம் எப்போதுமே, ‘இருகோடுகள் தத்துவம்’ கோலொச்சி வந்திருக்கின்றது. ஒரு பிரச்சினையை மறைக்க, அதைக் காட்டிலும் உணர்ச்சிகரமான இன்னொரு பிரச்சினையைத் தோற்றுவித்தல், திணித்தல் எனும் நிலை. அது, வெளி எதிரிகளால் மாத்திரமல்ல, உள்ளிருக்கும் எதிரிகளாலும் திட்டமிட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அதுவும், வாக்கு அரசியல் கோலொச்ச ஆரம்பித்த புள்…

  5. ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி பேச்சு - வீ.தனபாலசிங்கம் இலங்கையின் மூன்று பிரதான அரசியல் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவருமான மகிந்த ராஜபக்ச ஆகியோர் வருட இறுதியில் நடத்தப்படவேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு தங்களது கட்சிகளைத் தயார்படுத்திக்கொண்டிருக்கும் அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது பற்றியும் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களுடனான சந்திப்பொன்றின்போது எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச …

  6. கிழக்கில் அரசியல் காத்திருப்புக்கு யார் கைகொடுப்பது? Editorial / 2019 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:29 Comments - 0 -இலட்சுமணன் வடக்கு, கிழக்கு இணைந்த மொழிவாரி மாநில சுயாட்சி இல்லாமல், புதிய அரசமைப்பொன்று வருவது, தமிழர்களைப் பொறுத்தவரை தேவையற்றது என்ற கருத்துகள் நிலவுகின்ற போதும், அதற்கான வேலைகள் நடைபெறுவதாகத் தான் காண்பிக்கப்படுகிறது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பெற்ற பதின்மூன்றாவது அரசமைப்புத் திருத்தத்தின் வாயிலாக, ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தின் சரத்துகள், அவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 1987இலிருந்து இன்றுவரை, அதன் நோக்கம் அர்த்தமுள்ள வகையில், அரசியல் விருப்பத்துடன் முழுமையாக அமுல் செய்யப்பட்டு, இன்னும் நிறைவ…

  7. ஆரோக்கியமற்ற அரசியல் தளம்: புஷ்வாணமாகும் கோரிக்கைகள் Editorial / 2019 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:10 Comments - 0 -க. அகரன் சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகிப்போயிருக்கும் தீர்வு விடயங்களில், முன்னேற்றம் காணப்படுகிறதா என்பது சந்தேகம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. தமிழர்கள் கோரி நிற்கும் தீர்வு, அவர்களது அபிலாஷைகள், யுத்தத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அநீதிகளுக்கான தீர்வு என்பனவற்றை நிவர்த்திக்கும் வகையிலானதாக அமைதல் என்பது, தென்னிலங்கை அரசியல்ப் போக்கைப் பொறுத்தவரையில் சாத்தியமானதொன்றாக அமைய முடியுமா என்ற கேள்வி நிறைந்தே உள்ளது. ஜனநாயகத்துக்கான போராட்டம், இலங்கை தேசத்தில் பல தரப்பாலும் முன்னெடுக்கப்படும் நிலையில், இதன் விழுமியங்களைக் க…

  8. ஜெனிவாவில் மீண்டும் கால அவகாசமா? தமிழர்களிடமுள்ள மாற்று வழிமுறை என்ன? யதீந்திரா மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் எதிர்வரும் 5ம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணையை பிரித்தானியா கொண்டுவரவுள்ளது. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியிருக்கின்ற நிலையில், அந்த இடத்தை இம்முறை பிரித்தானியா நிரப்பவுள்ளது. அது எவ்வாறான பிரேரணையாக அமைந்திருக்கும் என்பதுதான் இங்குள்ள கேள்வி? 2015 செப்டம்பரில் இடம்பெற்ற ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் உரையாற்றிய சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மீள நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில்…

  9. ஐ.நா தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறுமா? நிலாந்தன் March 3, 2019 நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்பு கூறல்தான். பாதிக்கப்பட்ட தரப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்திய தரப்பு பொறுப்புக் கூறுவதுதான். இரண்டு தரப்புக்களுக்கும் இடையே நீதியை நிலை நாட்ட விழையும் எல்லாத் தரப்புக்களும் பொறுப்பு கூறுவதுதான். இவ்வாறு நிலைமாறுகால நீதியை இலங்கைத்தீவில் ஸ்தாபிக்கும் நோக்கத்தோடு 2015செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதன் படி நிலை மாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கென்று ஏறக்குறைய 25 பொறுப்புக்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இப் பொறுப்புக்களை …

  10. காஷ்மீர்- குளிர் தேசத்துக்குப் போர்!! பதிவேற்றிய காலம்: Mar 3, 2019 ஜம்மு காஷ்­மீ­ரில் இந்­தி­யா­வை­யும் பாகிஸ்­தா­னை­யும் பிரிக்­கின்ற எல்லை 740 கிலோ மீற்­றர் நீள­மா­ன­தாக இருக்­கி­றது. இது பனி படர்ந்த மலை­களை ஊட­றுத்து எல்­லை­யி­டப்­பட்ட பிர­தே­சம். இந்­தி­யா­வை­யும் பாகிஸ்­தா­னை­யும் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான சிப்­பாய்­கள் இந்த எல்­லைக் கோட்­டின் இரண்டு பக்­கங்­க­ளி­லும் எந்த நே­ர­மும் தயார் நிலை­யில் நிற்­கின்­ற­னர். அவர்­கள் அந்­தப் பனி மலை­க­ளின் அழகை இர­சிக்­கும் நோக்­கில் அங்கு நிலை­கொள்­ள­வில்லை. ஒரு முனை­யி­லுள்­ள­வரை மறு முனை­யி­லுள்­ள­வர் கொல்­லும் நோக்­கில் ஆயு­தம் தாங்­கி­ய­வர்­க­ளாக வக்­கி­ரத்­து­டன் காத்­தி­ருக்­கி­றார்­கள். இந்­தி­யா­வின் …

  11. கடந்து வந்த- 10 வருடங்கள்!! பதிவேற்றிய காலம்: Mar 3, 2019 இலங்­கை­யில் இனப்­பி­ரச்­சினை ஆரம்­பித்த காலத்­தி­லி­ருந்து தமி­ழர்­க­ளில் பல­ரும் காணா­ம­லாக்­கப்­பட்­ட­னர். இது விட­யத்­தில் சிங்­க­ள­ வர்­கள் அல்­லது ஆயு­தம் தாங்­கிய சிங்­க­ள­வர்­கள் முதன்­மைச் சூத்­தி­ர­தா­ரி­க­ ளாக இனங்­கா­ணப்­ப­டு­கின்­ற­னர். 2009 ஆம் ஆண்டு மே 18ஆம் திக­திக்­குப் பின்­பான நாள்­க­ளில் பெருந்­தொ­கை­யா­ன­வர்­களை உயி­ரு­டன் இலங்கை இரா­ணு­வத்­தி­டம் கைய­ளித்த நிலை­யில் அவர்­க­ளுக் என்ன நடந்­தது என்­ப­தாக அவர்­தம் உற­வு­க­ளின் நீண்ட காலத் தேடலே தற்­போது முனைப்­ப­டைந்­துள்ள காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விவ­கா­ர­ம் ஆகும். அந்­தக் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பங்­கள் பத்த…

  12. ஜெனீவாவில் அழுத்தங்கள் சாத்தியமா? கே. சஞ்சயன் / 2019 மார்ச் 01 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:18 Comments - 0 ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி, நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக, பிரித்தானியா அறிவித்திருக்கிறது. பிரித்தானியா, சில வாரங்களுக்கு முன்னரே இதை உறுதி செய்திருந்தது. கடந்த திங்கட்கிழமை, பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அஹமட் பிரபு, இதை மீண்டும் உறுதி செய்திருந்தார். அவர், ஜெனீவாவில் உரையாற்றுவதற்குச் சில மணி நேரம் முன்னதாக, வடக்கில் பாரிய போராட்டங்கள் நடைபெற்றிருந்தன. காணாமல்…

  13. தவறிழைத்த ஒவ்வொருவரையும் பொறுப்புக்கூற வைப்பதே சட்டத்தின் ஆட்சியாகும் - ஜெகான் பெரேரா ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்த்தொடர் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் போரின் முடிவுக்குப் பின்னரான பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் அதன் கவனத்தை மீண்டும் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினைகள் சர்வதேச சமூகத்தின் அக்கறைக்குரியவையாகும். விடுதலை புலிகளை தோற்கடித்த இராணுவ நடவடிக்கைகளின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் உட்பட பொறுப்புக்கூறலுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கோரும் மனித உரிமைகள் பேரவையின் 2015 அக்டோபர் தீர்மானத்துக்கு இலங்கை வழங்கிய இணை அனுசரண…

  14. போர் மேகம் சூழ் உலகு Gopikrishna Kanagalingam / 2019 பெப்ரவரி 28 வியாழக்கிழமை, மு.ப. 02:32 இந்த உலகத்தைப் பல்வேறு வழிகளில் வர்ணிக்க முடியும். ஆனால், ‘போர் மேகம் சூழ் உலகு’ என்று சொல்வது, பொருத்தமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எங்கு பார்த்தாலும் பிரிவினைகளும் பதற்றங்களும் அதிகரித்திருக்கும் சூழல் தான் காணப்படுகிறது. அவ்வாறான ஒரு நிலைமை தான், இலங்கையின் புவியியலில் நெருக்கமான இரு நாடுகளுக்குமிடையிலும் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும், புவியியல் ரீதியாக நெருக்கமானவை மாத்திரமன்றி, அரசியல் ரீதியாகவும் மிகவும் நெருக்கமானவை. இந்த நிலையில் தான், காஷ்மிரில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில், இந்தியாவும் பாகிஸ்…

  15. புல்வமா தாக்குதல்: தேசபக்தியும் தேசவிரோதமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 28 வியாழக்கிழமை, மு.ப. 01:13Comments - 0 பயங்கரவாதத் தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை. ஆயுதப் போராட்டத்தைத் தவிர்க்கவியலாத சூழல்களும் உண்டு. ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்கள் பிரச்சினைக்கான தீர்வல்ல. மக்களைக் குறிவைத்த தாக்குதல்களை, யாருமே நியாயப்படுத்த முடியாது. இவ்வாறான விவகாரங்களில் எது சரி, எது பிழை என்ற தெளிவு, அதற்குப் பொறுப்பானவர்களுக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த இயலாது என்கிற தெளிவு, மக்களுக்கு அவசியமானது. இல்லாவிடின், தேசபக்தி என்பதன் பேரால் அநியாயங்களுக்கும் அல்லல்களுக்கும் துணைபோக நேரும். கடந்த 14ஆம் திகதி, …

  16. அரசமைப்புச் சபை சட்டபூர்வமானது. ஆனால், சட்டத்தின் நோக்கத்துக்கு முரணானது எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 பெப்ரவரி 27 புதன்கிழமை, மு.ப. 01:16 Comments - 0 நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி, நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காகவென உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சபை, பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் இரத்துச் செய்யப்பட்ட அரசமைப்புச் சபையை, 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், மீண்டும் கொண்டு வருவதற்காக, 2015ஆம் ஆண்டு, பெரிதும் முயன்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, அதை இப்போது, கடுமையாகச் சாடி வருகிறார். அதேவேளை, 2010ஆம் ஆண்டு, பழைய அரசமைப்புச் சபையை இரத்துச் செய்வதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு…

  17. புல்வாமா தாக்குதலுக்கு பின் - சுணங்கிப் போன காங்கிரஸ். இந்துத்வா, தேசியவாதம், பாரத் மாதா கீ ஜெய் என சாதுர்யமாக காய் நகர்த்திய பாஜக

  18. வடக்கு ஆளுநரின் வழி, எவ்வழி? காரை துர்க்கா / 2019 பெப்ரவரி 26 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:27 Comments - 0 வவுனியா நகரில் எழுந்தருளி, கருணை மழை பொழியும் கந்தசுவாமி கோவிலின் புதிய சித்திரத் தேருக்கான வெள்ளோட்டம், அண்மையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் புடை சூழ, அமைதியாக, பக்திமயமாக வெள்ளோட்டம் நடைபெற்றது. “எங்கட நிலமெல்லாம் எங்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன; எங்கட இடமெல்லாம் சிங்கள மயமாகின்றன; சொந்த நாட்டிலேயே பல்லாண்டு காலம், நடைப்பிணங்களாக வாழும் நாதியற்ற எங்களுடன், நாட்டாண்மை காட்டுகின்றார்களே; கந்தனே! இதை யாரிட்ட சொல்லி அழ; தமிழ்க் கடவுளே! கண் திறக்க மாட்டாயா; எம்மைக் காக்க உனையன்றி யாருமில்லை” இந்த வேண்டுதல், இங்கு வந்திருந்த பெரியவர் ஒருவரின்…

  19. சாணக்கியபுரியாக மாறிய தமிழகம்! – தேவிபாரதி மக்களவைத் தேர்தல் கூட்டணிகளின் உண்மையான இலக்கு என்ன? வருகிற மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டணிகளை அமைப்பதில் தமிழகக் கட்சிகள் மற்ற மாநிலங்களை முந்திக்கொண்டிருக்கின்றன. அதிமுக, பாஜக, பாமக இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது அதிமுக கூட்டணி. மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெறுவதற்கு வாய்ப்பிருப்பதால் அதிமுகவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இது முக்கியமான தேர்தல். குறைந்தபட்சம் எட்டு சட்டமன்றத் தொகுதிகளையாவது கைப்பற்றாவிட்டால் எடப்…

  20. மன்னிப்பதற்கான உரிமை – நிலாந்தன்… February 24, 2019 1987ல் இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய கால கட்டத்தில் கொழும்பில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் ஜெயவர்த்தனாவும், ரஜீவ்காந்தியும் பங்குபற்றினார்கள். அதில் ஓர் ஊடகவியலாளர் இந்தியா பலவந்தமாக வானத்திலிருந்து உணவுப்பொதிகள் போட்டதைப்பற்றி ஜெயவர்த்தனாவிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ஜெயவர்த்தனா பின்வருமாறு பதிலளித்தார். ‘நான் அதை மன்னிப்பேன் ஆனால் அதை மறக்க மாட்டேன் என்று’ இது வழமைபோல ஜே.ஆரின் தந்திரமான ஒரு பதில். ஒன்றை மெய்யாக மன்னித்துவிட்டால் அதை மறந்துவிட வேண்டும். மன்னித்த பின்னும் மறக்கவில்லையென்றால் அங்கே பழிவாங்கும் உணர்ச்சி அல்லது காயத்தின் தழும்பு மிஞ்சியிருக்…

  21. மறப்போம் மன்னிப்போம் கோரிக்கையும் யதார்த்தமும் பி.மாணிக்கவாசகம் February 23, 2019 மறப்பதும், மன்னிப்பதும் மனித இயல்பு. மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதாக அது அமைய வேண்டும். மனம் திருந்தாமல் மன்னிப்பு கோருவதை மனக்காயங்களுக்கு உள்ளாகியவர்கள் ஏற்பதில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியாது. வடபகுதிக்கு அரச முறையாகப் பயணம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி நடந்தவைகளை மறப்போம். மன்னிப்போம். இணைந்து வாழ்வோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். உண்மையான மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுக்கப்பட்ட அழைப்பாக இதனைக் கருத முடியவில்லை. ஏனெனில் மறந்து, மன்னிக்க வேண்டிய விடயங்களில் அல்லது சம்பவங்களில் என்ன நடந்தது, யார் யாரெல்லாம் பங்கேற்றி…

  22. சட்டத்தின் ஆட்சிக்கு அவசியமான அரசியலமைப்பு பேரவை, சுயாதீன ஆணைக்குழுக்கள் ஜெஹான் பெரேரா அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் சேர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் செய்துவருவதைக்காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நிறுவனங்களினால் பல பாதகமான விளைவுகள் ஏற்படுவதாக அவர்கள் காரணம் கூறுகிறார்கள். ஜனாதிபதியின் விருப்பங்கள் திரும்பத்திரும்ப நிராகரிக்கப்படுவதாகவும் ஊழல்தனமானவையாக இருக்கும் அந்த நிறுவனங்கள் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களுக்கு பக்கச் சார்பாக செயற்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சார்பில் அமைதிகாக்கும் பண…

  23. தமிழ் மக்களுக்குத் தேவை அபிவிருத்தியா, அதிகாரமா ? தமிழ் மக்கள் ஒன்றும் கூடுதல் அதிகாரங்களைக் கேட்கவில்லை. வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தான் அதிகாரப் பகிர்வைக் கேட்கிறார்கள்” இது முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்‌ஷ அண்மையில் கூறியிருந்தார். அவரது அந்தக் கருத்தை அப்படியே பிரதி செய்யும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன. “வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தான், கூடுதல் அதிகாரங்களைக் கேட்கிறார்களே தவிர, அங்குள்ள மக்கள் அல்ல; அங்குள்ள மக்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் பொருளாதார அபிவிருத்தியும் நிம்மதியும் தான்” என்று, அவர் சில நாள்களுக்கு முன்னர் கூறியிருக்கிறார். மஹிந்த ராஜபக்‌ஷ, த…

  24. ஐ.நாவும் ஜெனீவாவும்: அமெரிக்கா எதிர் சீனா தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை, பி.ப. 07:04Comments - 0 உலகப் பொதுமன்றம், என்றும் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது முதல் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இருந்தபோதும், உலக அமைதியைக் காப்பதற்குள்ள ஒரேயொரு மன்றம் என்றவகையில், உலகநாடுகள், அம்மன்றில் அங்கத்துவம் வகித்து வந்துள்ளன. இதுவரை, மூன்றாம் உலகப்போர் ஏற்படவில்லை. ஆனால், அதையொத்த உயிரிழப்புக்களை மனிதகுலம், கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் கண்டுள்ளது. உலகம் பாதுகாப்பான இடமாக இல்லை என்பதை உலகெங்குமுள்ள சாதாரண மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். பட்டினியாலும் பசியாலும், நோ…

  25. இரு தரப்புகளாலும் போர்க்குற்றங்களா? Gopikrishna Kanagalingam / 2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை, பி.ப. 05:49 இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மீது கடந்த சில மாதங்களாகக் காட்டும் அதிகபட்ச கரிசனை தொடர்கிறது. பிரதமர் விக்கிரமசிங்கவின் அண்மைய வடக்கு விஜயம், இந்த நிலைமை தொடர்வதையே காண்பித்திருக்கிறது. ஆனால், கடந்த சில விஜயங்களைப் போலல்லாது இவ்விஜயம், சில சலசலப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இறுதிக்கட்டப் போரில், நாட்டின் இராணுவத்தினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என, பிரதமர் விக்கிரமசிங்க மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் விடயம் தான், இச்சலசலப்புகளுக்குக் காரணம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.