அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9210 topics in this forum
-
கிழக்கில் ஜே.வி.பி அலைக்கு எதிர்க்காற்று..! October 27, 2024 — அழகு குணசீலன் — இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஒரு மாதம் கடந்த நிலையில், பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன. முழு இலங்கையையும் போன்றே கிழக்கிலும் என்றும் இல்லாதவாறு அதிகளவான கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றில் சில கட்சிகளும், பெரும்பாலும் அனைத்து சுயேட்சைகளும் வெற்றி வாய்ப்பு அறவே அற்றவை. வெறுமனே வாக்கு பிரிப்பர்கள். இந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், தேர்தலுக்கு பின்னரும் கிழக்கில் ஜே.வி.பி.க்கு இருந்த அலை தொடர்ந்தும் அடிக்கிறதா? அதற்கான காற்று வளம் வீசுகிறதா? என்ற கேள்விகளுக்கான பதிலை வெளிச்சத்தில் தேடுகிறது இப்பதிவு. …
-
- 0 replies
- 339 views
-
-
தமிழ் மக்கள் ஏன் பலூன்களின் பின் போகிறார்கள்? – நிலாந்தன். மருத்துவர் அர்ஜுனா ஊசிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஒரு விருந்தகத்தில் அவர் உணவருந்திக் கொண்டிருக்கும் பொழுது மான் கட்சியை சேர்ந்த ஒரு பெண் வேட்பாளர் அவருக்கு தன்னுடைய துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்கின்றார். அந்த காட்சியை அர்ஜுனா வழமை போல நேரலையில் விடுகிறார். அந்தப் பெண்ணிடம் கேள்வி கேட்கிறார். அந்தப் பெண் ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து விலகிச் செல்கிறார். அர்ஜுனா அந்த வேட்பாளர் வழங்கிய துண்டுப் பிரசுரத்தால் தன் வாயைத் துடைக்கிறார். அதையும் நேரலையில் விடுகிறார். ஒரு சக வேட்பாளரை அந்த மருத்துவர் எப்படி நடத்தியிருக்கிறார் என்பது அவருடைய அரசியல் நாகரீகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கக்கூடிய…
-
- 0 replies
- 275 views
-
-
"இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு இனம் மாறிய சிங்களவர்கள் காரணமா?" / "Are converted Sinhalas responsible for Srilankan Tamil problem?" தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள் மற்றும் மலையாளிகள் என பல தென்னிந்தியர்களும் தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்து சிங்களவர்களுடன் இணைந்தனர். உதாரணமாக, கோட்டே இராச்சியத்தை நிறுவி, தமிழ் யாழ்ப்பாண இராச்சியத்தை எதிர்த்துப் போரிட்ட அழகக்கோனார்கள் மலையாளி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், ஆனால் சிங்களவர்களுடன் இணைந்திருந்தனர். கண்டி இராச்சியத்தின் கடைசி பல மன்னர்கள் தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த மதுரையைச் சேர்ந்த தமிழ் பேசும் நாயக்கர்கள். வெளிப்படையாக அவர்களின் நீதிமன்ற மொழி தமிழ். சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையில் முதல் முதல் இனக…
-
-
- 3 replies
- 538 views
- 1 follower
-
-
(புருஜோத்தமன் தங்கமயில்) இளையோருக்கும் பெண்களுக்குமான அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கிற குரல்கள் தேர்தல் காலங்களில் அதிகமாக கேட்பதுண்டு. இம்முறையும் வேட்புமனுத் தாக்கல் முடியும் நாள் வரையில், அந்தக் குரல்கள் பலமாகவே கேட்டன. அதிலும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இளையோருக்கும் பெண்களுக்குமான இடத்தை பிடித்து வைத்துக் கொண்டு, பெருந்தடையாக இருக்கும் மூத்த அரசியல்வாதிகளும்கூட அந்தக் குரல்களை எழுப்பினர்கள் என்பதுதான் வேடிக்கையானது. வழக்கமாக மூத்த – பழுத்த அரசியல்வாதிகளினால் நிறையும் இலங்கையின் தேர்தல் களம், ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியோடு இளையோர், புதியவர்களுக்கான களமாக இம்முறை மாறியிருக்கின்றது. அதன் பிரதிப…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
இனியும் தும்புத்தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்களா? October 25, 2024 – கருணாகரன் – பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம்? என்ற கேள்வியும் விவாதமும் தமிழ் மக்களிடத்திலே வழமையை விடக் கூடுதலாகக் காணப்படுகிறது. சனங்கள் சற்றுச் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். மாற்றங்களை விரும்புகிறார்கள். பழைய தலைகளை விலக்க வேண்டும் என்ற விருப்பம் சற்றுக் கூடுதலாகத் தெரிகிறது. புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மெய்யாகவே மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, அதற்காகச் செயற்படக் கூடியவர்களையும் நேர்மையானவர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்று பலரும் எண்ணுகிறார்கள். இதனால் இந்தத் தேர்தற் களம் முற்றிலும் வேறாகக் காட்சியளிக்கிறது. …
-
- 1 reply
- 304 views
-
-
*நிகழ்ச்சி நிரல்* 6.30 ஆரம்பம்,அறிமுகம் (9am Toronto 2 pm London UK) 6.35 கனடா அமைப்பாளர் உரை 6.45 கருத்து பகிர்வு *Dr.அருள்கோகிலன்* தேசியபுத்திஜீவிகள் அமைப்பு வடமாகாணம் 7.30 கேள்விபதில்கள் 8.30 நிறைவுரை. Topic: புலம்பெயர் தோழர்களுடன் விசேட கூட்டம் Time: Oct 27, 2024 06:00 PM Colombo Join Zoom Meeting https://gurus-club.zoom.us/j/81920505564?pwd=8Q3PB3qGPqPpqnqGOPq9CvzWJ4B6br.1 Meeting ID: 819 2050 5564 Passcode: 271786
-
- 0 replies
- 1.3k views
-
-
பத்திரிகையாளராக மாறிய போராளி ' தராக்கி ' சிவராம் : கொடூரமான கடத்தலும் கொலையும் - மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் ஜனாதிபதி அநுரா குமாரவின் அரசாங்கம் டி.பி.எஸ் ஜெயராஜ் கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களினால் தடுக்கப்பட்ட அல்லது சீர்குலைக்கப்பட்டு நீதிகிடைக்காமல் போன பாரிய ஊழல் மோசடிகள், படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தனது தேர்தல் பிரசாரங்களின்போது அடிக்கடி வலியுறுத்திக் கூறினார். அண்மைய நிகழ்வுகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஜனாதிபதி திசாநாயக்கவும் அவரது அரசாங்கமும் கரிசனையாக இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுகின்றன. இது தொடர்பில் அவர்கள் அடுத…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
"விழித்தெழு பெண்ணே!" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு] தமிழர் எழுச்சி மற்றும் இலங்கைத் தமிழரின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பகுதியில் இருந்து இன்றுவரை வரலாற்றின் நினைவுகளை கிசுகிசுக்களை வடக்காற்று ஏந்திய யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், தெருக்களில் வெள்ளம் போல் ஓடத் தொடங்கியிருந்த சுவரொட்டிகளைப் பார்த்துக் கொண்டு நின்றாள் நிலா. அவள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றவள், நம்பிக்கையும் உறுதியும் நிறைந்தவள். நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அவளது மனதைக் கனக்கச் செய்தது. நிலா இலங்கையின் சிக்கலான அரசியல் இயக்கவியலை, குறிப்பாக உள்நாட்டுப் போருக்குப் பின்னர் தனது தமிழ் சம…
-
-
- 1 reply
- 593 views
-
-
வீரகத்தி தனபாலசிங்கம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடையப்போகிறது. இந்த ஒருமாத காலத்தில் அவரும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜனதா விமுக்தியின் (ஜே.வி.பி.) முக்கிய தலைவர்களும் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இலங்கை அரசியல் நிலக்காட்சியில் காணப்படக்கூடியதாக இருக்கும் மாறுதல்கள் குறித்து பெருமையாக பேசுகிறார்கள். பல அரசியல்வாதிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் விடுவதற்கு தீர்மானித்ததை ஜே. வி.பி.யின் தலைவர்கள் பெரிய ஒரு மாறுதலாக குறிப்பிடுகிறார்கள். தேர்தல்களில் தோல்வியடைந்தால் அல்லது இறந்து போனால் மாத்திரமே கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் ஓய்வுபெற்ற வரலாற்றைக் கொண்ட இலங்கை…
-
- 0 replies
- 475 views
- 1 follower
-
-
இனப்பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையானால் புதிய அரசியல் கலாசாரம் வெற்றுச் சுலோகமே October 21, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடையப்போகிறது. இந்த ஒருமாத காலத்தில் அவரும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜனதா விமுக்தி பெரமுனயின் (ஜே.வி.பி. ) முக்கிய தலைவர்களும் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இலங்கை அரசியல் நிலக்காட்சியில் காணப்படக்கூடியதாக இருக்கும் மாறுதல்கள் குறித்து பெருமையாக பேசுகிறார்கள். பல அரசியல்வாதிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் விடுவதற்கு தீர்மானித்ததை ஜே. வி.பி.யின் தலைவர்கள் பெரிய ஒரு மாறுதலாக குறிப்பிடுகிறார்க…
-
- 0 replies
- 258 views
-
-
"ஒரு மனிதனின் பயங்கரவாதி மற்றொரு மனிதனின் சுதந்திர வீரன்!" / "One man's terrorist is another man's freedom fighter." "பயங்கரவாதி" என்பது அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை என்றாலும் பலவேளைகளில் சரியான அர்த்தம் இல்லாமலும் பாவிக்கப்படுவதால், அது ஒரு தெளிவான அர்த்தத்தை இன்று இழந்துவிட்டது. "பயங்கரவாத" செயலை வன்முறையின் பயன்பாடு என்று வரையறுப்போம், அங்கு ஒருவர் அநியாயமான முறையில் அப்பாவி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கிறார். ஒரு அரச இராணுவ நடவடிக்கையின் பொழுது பாவிக்கப்படும் வன்முறைகள், அப்பாவி பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்களாம் என்று நியாயமாக எதிர்பார்க்கப்படவில்லை. எனவே, அரச இராணுவ நடவடிக்கைகள் இரு கூறுகளைக் கொண்டுள்ளன. ஒன்று நியாயமான அரச இராணுவ நடவடிக்கை …
-
-
- 2 replies
- 374 views
-
-
37 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் மாபெரும் தவறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர்(dr.s.jaishakar) தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை அவர் சமீபத்தில் வெளியிடப்பட்ட தி இந்தியா வே(The India way ) புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாத்ஃபைண்டர் அறக்கட்டளையால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 'இந்திய மாவத்தை' ('Indian Mawatha')என்ற புத்தகம் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான சில சிறப்புக் குறிப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது சாதாரணமான நடவடிக்கையல்ல ஆரம்பம் முதலே இலங்கை(sri lanka) இந்தியாவுக்கு(india) சவாலாக இருந்தது. நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அக்கறை க…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SLPP MEDIA படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் மகிந்த ராஜபக்ஸ கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாக திகழ்ந்த ராஜபக்ஸ குடும்பம், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்த மண்ணில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளது. ராஜபக்ஸ குடும்பத்தின் சுமார் 87 வருட கால அரசியல் வாழ்க்கையில், சொந்த மண்ணில் அவர்கள் தேர்தலை சந்திக்காமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கையில் 3 தசாப்தங்கள் நீடித்த உள்நாட்டு போர், 2009-ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
விமல் வீரவன்சவும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன். விமல் வீரவன்ச அறிவித்திருக்கிறார்,தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று.ஏனென்றால்,நாடாளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெறக்கூடிய பெரும்பான்மையை பாதிக்கும் விதத்தில் அதற்கு எதிராக போட்டியிட்டு வாக்குகளைச் சிதறடிக்க அவர் விரும்பவில்லையாம். அவர் ஜேவிபியில் இருந்தவர். அதன் தீவிர இனவாத முகம். தனது தோழர்களின் வெற்றிக்காக வழிவிடும் அவருடைய மேற்படி அறிவிப்புக் குறித்து அரசியல் வட்டாரங்களில் வேறு ஒரு விளக்கம் உண்டு.அவனுடைய மனைவி ஒரு வழக்கில் மாட்டுப்பட்டு இருக்கிறார்.அந்த விவகாரத்தை மீண்டும் ஜேவிபியின் அரசாங்கம் கிளறி எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அதனால்தான் ஜேவிபியை சந்தோஷப்படுத்த விமல் அவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பத…
-
- 0 replies
- 367 views
-
-
தமிழருக்கு தேசிய மக்கள் சக்தி காட்டும் திசை தெளிவாக இருக்க வேண்டும் October 19, 2024 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 21.09.2024 அன்று நடைபெற்று முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்காவைத் தெரிவு செய்ததன் மூலம் இந்நாட்டு அரசியலில் ஒரு முறைமை மாற்ற-பண்பு மாற்ற எதிர்பார்ப்பைக் குறிப்பாக ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகமற்ற-சட்டம் ஒழுங்கைப் பாரபட்சமின்றி முறையாகப் பேணக் கூடிய-வாரிசு அரசியலற்ற ஓர் அரசாங்கம் அமைய வேண்டுமென்ற அவாவை தென்னிலங்கைச் சிங்களப் பெரும்பான்மைச் சமூகம் வெளிப்படுத்தியுள்ளது. அதேவேளை வடக்குகிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த ஜனாதிபதித் தேர்தல்களைவிடவும் இம…
-
- 0 replies
- 375 views
-
-
தமிழர்களின் யதார்த்தமான கோரிக்கைகளை NPP மதிக்க வேண்டும் October 20, 2024 — கருணாகரன் — யாராலும் கையாள முடியாத – எவருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் நிற்காத ஒரு நிலையை எட்டியுள்ளது தமிழ் அரசியல். அரசியலில் தமிழ் அரசியல் – சிங்கள அரசியல் – முஸ்லிம் அரசியல் எல்லாம் உண்டா என்று அரசியல் அறிஞர்கள் கேட்கலாம். உண்மையான அர்த்தத்தில் அப்படிச் சொல்ல முடியாதுதான். என்றாலும் பிரயோக நிலையில் அப்படிக் குறித்த சமூகங்கள் தங்களுடைய அரசியலை வரையறுத்து வந்திருப்பதால் இலங்கையின் அரசியலில் இத்தகைய அடையாளம் உருவாகி விட்டது. தமிழ்நாட்டில் திராவிட அரசியல், தலித் அரசியல், இந்தியத் தேசிய அரசியல் அல்லது காங்கிரஸ் அரசியல், காவி அரசியல் எனப்படும் பா.ஜ.க அரசியல் போன்றவற…
-
- 0 replies
- 168 views
-
-
அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை – நிலாந்தன். adminOctober 20, 2024 வியட்நாமின் தந்தை என்று அழைக்கப்படும் கோசிமினின் வாக்கியம் ஒன்று உண்டு”மக்களிடம் செல்லுங்கள். மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள். மக்கள் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்று. மக்களுக்கு உண்மையைச் சொல்வதற்கு தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் தயார்? கடந்த பல தசாப்தங்களில் தமிழ்கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் தமிழ்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன?தமிழ்த்தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்ட விடயங்களில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன? அவை ஏன் நிறைவேற்றப்படவில்லை? எல்லாப் பழியையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மீது சுமத்திவிட்டு தமிழ…
-
- 1 reply
- 336 views
-
-
அலைகளின் நடுவே sudumanal இலங்கை அரசியல் ஜீன் சீக்லர் (Jean Ziegler) அவர்கள் சுவிஸ் இல் ஓர் அறியப்பட்ட இடதுசாரியாவார். பிடல் கஸ்ரோ மரணித்தபோது சுவிஸ் வானொலி அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. அதில் “பிடல் இறந்துவிட்டார். இந்த உலகின் கடைசி புரட்சியாளர் பிடல் என சொல்லலாமா” என கேட்கப்பட்டது. “புரட்சியாளர்கள் ஒவ்வொரு 5 வருடத்துக்கும் பிறப்பதில்லை. பல ஆண்டுகள், சிலவேளை நூற்றாண்டுகள் கூட ஆகலாம்” என்றார். பிடல் கடைசி புரட்சியாளராக இருக்க முடியாது என்றார். அவர் சொன்ன அந்த 5 வருடம் என்பது தேர்தலில் புரட்சியாளர்கள் பிறப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டவே ஆகும். 2019 இல் 3 வீத வாக்குகளை பெற்ற ஜேவிபியின் தலைவர் அநுர 2024 இல் 42 வீத வாக்குளை எடுத்து ஜனாதிபதியாக வருகிறார். …
-
- 0 replies
- 422 views
-
-
கலாநிதி ஜெகான் பெரேரா முக்கியமான தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறை எச்சரிக்கையுடனானதாகவும் முன்னைய அரசாங்கம் தீர்மானித்த திசையில் தொடர்வதாகவும் அமைந்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையையும் அதன் இறுக்கமான நிபந்தனைகளையும் பின்பற்றுவதில் இது தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேசிய கடுமையாக கண்டனத்துக்குள்ளான முக்கியமான அதிகாரிகளே பொருளாதாரத்தைக் கையாளுவதற்கு பதவிகளில் தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் ஜெனீவாவில் தீர்மானத்துக்காக முடிவெடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தின் வடிவில் வந்த மிகவும் உடனடியான சர்வதேச சவாலை எதிர்கொண்டதிலு…
-
- 0 replies
- 421 views
- 1 follower
-
-
தமிழ் மக்களை சீரழித்த தமிழ்த்தேசியக் கட்சிகள் October 18, 2024 — கருணாகரன் — பாராளுமன்றத் தேர்தல் தமிழ்பேசும் சமூகங்களைத் தடுமாற வைத்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதையும் விட தேசிய மக்கள் சக்திக்கான (NPP அல்லது AKD) ஆதரவு அலை அதிகமாகக் காணப்படுகிறது. யாரைப் பார்த்தாலும் தேசிய மக்கள் சக்தி (NPP அல்லது AKD) யைப் பற்றியே பேசுகிறார்கள். “மாற்றத்துக்கு ஒரு வாய்ப்பளித்தால் என்ன?“ என்று கேட்கிறார்கள். இது தமிழ்த்தேசியவாதச் சக்திகள் சற்றும் எதிர்பார்த்திருக்காத நிலையாகும். இப்படியொரு பேரலை வந்து தம்மைத் தாக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இந்த அதிர்ச்சி இரண்டு வகைப்பட்டது. ஒன்று, தேசிய மக்கள் சக்தி என்பது இடதுசாரித்தனமுடையது என்பதால், அதை ஏற்…
-
- 0 replies
- 406 views
-
-
ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதக் காலப்பகுதிக்குள் இலங்கையினால் மீன் இறக்குமதிக்காக மாத்திரம் 24 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரின் ‘வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையை கையாளுங்கள் என்ற பரிந்துரையை அநுரகுமார அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (நிவேதா அரிச்சந்திரன்) இலங்கை தீவைச் சூழ அமைந்துள்ள கடற்பரப்பு நாட்டுக்கு கிடைத்துள்ள அருங்கொடையாக பார்க்கப்படுகிறது. ஆனால் …
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
Courtesy: தீபச்செல்வன் ஜேவிபி (JVP) எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி தற்போது இங்கையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் வாயிலாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணி வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு ஒன்றை முன்வைக்குமா? என்ற பேச்சுகள் ஒருபுறத்தில் எழுந்துள்ளன. அதேவேளை மக்கள் விடுதலை முன்னணி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியின் பெயரில் செயற்பட்டு வருகின்றது. எனினும் அது பெயரளவிலான மாற்றம் மாத்திரமே என்பதை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்து தெளிவுபடுத்தி நிற்கிறது. இந்த நிலையில் இந்த நாள் (16.10…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
"ஆசை கடந்த கூட்டு வேண்டும்!" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு] "கைகளை கோர்த்து நாடகம் போடாதே கைத்தாளம் போட்டு மேடை ஏறாதே கைவசம் பதவியை இறுக்கி பிடிக்க கைமாறு செய்யும் ஊழல் கொண்டு கைவண்ணம் காட்டிடும் ஒற்றுமை வேண்டாம்?" "ஆறு கைகள் ஆராய்ந்து பிடித்து ஆற அமர தெளிவாக முடிவெடுத்து ஆழமான உறவை கொள்கையில் ஏற்படுத்தி ஆக்கமான முடிவில் ஒன்றாக செயற்பட்டு ஆசை கடந்த கூட்டு வேண்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 2 replies
- 332 views
- 1 follower
-
-
அநுரகுமார அலை என்ன செய்யும்? October 13, 2024 — கருணாகரன் — அனுரகுமார திசநாயக்கவின் வெற்றி, புதிய அலையொன்றை அல்லது புதிய சூழலொன்றை உருவாக்கியுள்ளது. அது சிங்களம், முஸ்லிம், தமிழ், மலையகம் என எந்த வேறுபாடுகளும் இல்லாமல் நாடுமுழுவதிலும் உருவாகியிருக்கும் புதிய அலையாகும். இதனால் சிங்களத் தேசியம், தமிழ்த்தேசியம், முஸ்லிம்தேசியம், மலையகத் தேசியம் என்பவற்றைக் கடந்து பெருவாரியான மக்கள் NPP எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரளும் நிலை உருவாகியிருக்கிறது. சரியாகச் சொல்வதென்றால், அனுரவின் பக்கமாகத் திரள்கிறது என்பதே சரியாகும். ஏனெனில் இந்த அலையோ, இந்தத் திரட்சியோ JVP அல்லது NPP என்பவற்றின் சித்தாந்தத்தைப் புரிந்து…
-
- 2 replies
- 751 views
-
-
பாராளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளும் – ஐ.வி.மகாசேனன் October 15, 2024 நவம்பர்-14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி இடப்பட்டு உள்ளது. அதேவேளை அக்டோபர் 04-11ஆம் திகதி வேட்புமனு தாக்கல் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை போன்றே, பாராளுமன்ற தேர்தலிலும் அதிகளவு கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் களமிறங்கியுள்ளன. முழு இலங்கைத்தீவிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 690 குழுக்கள் போட்டியிடப்போவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வடக்கு-கிழக்கும் பொதுத்தேர்தலை மையப்படுத்தி பெரும் குழப்பகரமான சூழலை எதிர்கொண்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் தேசிய எழுச்ச…
-
- 0 replies
- 361 views
-