Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சமஸ்டி, தனிநாடு பின்னர் மீண்டும் சமஸ்டி, தற்போது 13வது திருத்தமாவது காப்பற்றப்படுமா? - யதீந்திரா இன்று 13வது திருத்தச்சட்டத்திலும் வெட்டிக் குறைப்புக்கள் செய்வது தொடர்பில் உரையாடப்படுகின்றது. 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழர் தரப்புக்களின் நிலைப்பாடுகள் என்னவாகவும் இருக்கலாம் ஆனால் 13வது திருத்தச்சட்டத்தையாவது பாதுகாக்க முடியுமா அல்லது அதனையும் வெட்டிக் குறைப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதா – என்னும் நிலையிலேயே தமிழ் தேசிய அரசியல், அதன் இயலாமைய பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. விடுலைப் புலிகளுக்கு பின்னரான கடந்த, ஒரு தசாப்தத்திற்கும் மேலான அரசியல் நகர்வானது, நமது தமிழ் தேசிய தரப்புக்களின் இயலாமைக்கான சான்…

  2. பேரவையின் இளைஞர் மாநாடு: விக்னேஸ்வரனைக் கரை சேர்ப்பதற்கான முயற்சி இளைஞர் மாநாடுகளை நடாத்துவது தொடர்பான அறிவித்தல்களை, தமிழ் மக்கள் பேரவையும் தமிழரசுக் கட்சியும் அண்மையில் வெளியிட்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் வாய்ப்புகள் உண்டு. அவ்வாறான சூழலில், இளைஞர் மாநாட்டுக்கான அறிவித்தல்கள் கவனம் பெறுகின்றன. தற்போதுள்ள தமிழ்த் தேசிய அரசியல் களத்தை, (குறிப்பாக தேர்தல் கள அரசியலை) நோக்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முனையிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சி.வி. விக்னேஸ்வரனை முன்மொழியும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இன்னொரு முனையிலும் நிற்கின்றன.…

  3. ஏப்பமிடப்படும் ஏகபிரதிநிதித்துவம் காரை துர்க்கா / 2020 பெப்ரவரி 04 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று, அவர்களுடன் மட்டும்தான் பேச்சு நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அரசாங்கம் இல்லை. மாறாக, வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, அரசாங்கம் தயாராக இருக்கின்றது என, அரசாங்கத்தின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்து உள்ளார். இன்று, இலங்கை, தனது விடிவு தினமான (72வது) சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில், நாட்டின் ஒரு பகுதி மக்கள், தாங்கள் இன்னமும் இருட்டுக்குள் வாழ்ந்து வருவதாவே உணர்கின்றனர். ஆனால், அவர்களது விடியலுக்கான பேச்…

  4. தமிழர் மனித உரிமைகள் செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ் 141 Views எதிர்வரும் வருடத்தின் முற்பகுதியில் ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறீலங்கா மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தாயகத்தில் உள்ள தேசிய நலன்சார் அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதேசமயம், 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 30/1 என்ற தீர்மானத்திற்கு மனித உரிமைகள் அணைக்குழுவின் செயல் அமர்வுகள் தொடர்ந்து கால அவகாசம் வழங்கியபோதும், சிறீலங்காவின் புதிய அரசு அதில் இருந்து விலகியுள்ளது. சிறீலங்கா அரசு விலக…

    • 2 replies
    • 467 views
  5. நேர்பட உரைத்தல் அரசியல் என்பது பெண்களுக்கு மிகவும் சவாலான விடயம் என்பது உண்மைதான். ஆனால், எத்தகைய சவால்களையும் துணிந்து விருப்பத்துடன் ஏற்கும் பெண்களுக்கு அது மிகவும் சுவாரசியமான விடயமும் கூட. ஒரு தேர்தல் களத்தில் போட்டியிடும் பெண்களின் மீது அவரது சமூகத்தின் அனைத்துப் பெண்களையுமே பிரதிநிதித்துவப்படுத்தும் பாரிய பொறுப்பு சுமத்தப்படுகிறது. இதனை சிறப்புற எதிர்கொள்ளுவதற்கு வெறுமனே அரசியலில் ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது அதில் தொடர்ந்து பயணிப்பதற்குத் தேவையான வலுவும் புத்திசாதுர்யமும் துணிவும் ஆண்களைவிட சற்று அதிகமாகவே பெண்களுக்குத் தேவை. இதற்கு முக்கியக் காரணம் இதுவரை காலமும் ஆண்களை மட்டுமே பெரும்பான்மையாகக் கொண்டிருந்த கட்சி அரசியலானது மக்களின் பிரச…

  6. ஸ்ரீலங்கா அரசாங்கம் சீனாவின் பின்புலத்துடன் தொடர்ச்சியாக செல்பட்டுவருவதாக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சுட்டிக்காட்டியிருக்கிறார். சமகால அரசியல் போக்கு தொடர்பில் எமது ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் களம் குறித்தும் மேலும் பல அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் அவர் எம்மோடு பேசியிருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது, https://www.ibctamil.com/srilanka/80/144776?ref=home-imp-parsely

    • 0 replies
    • 467 views
  7. தமிழ் ஈழ ஆயுதப் போராட்டத்திற்கு ஆணிவேராகவும்,அச்சாணியாகவும் இருந்த கடற்புலிகளின் 9 ஆயுத விநியோக மற்றும் வர்த்தக கப்பல்களின் அழிவுக்கும் 160 க்கு மேற்பட்ட ஒப்பற்ற தலைசிறந்த தமிழீழ மாலுமிகளின் சாவுக்கும் முக்கிய சூத்திரதாரியாக இருந்தது சீனா. 2006ஆம் ஆண்டுக்கும் 2008ஆம் ஆண்டின் உறுதிக்கும் இடையில் நடந்த ஆயுதக் கப்பல் மூழ்கடிப்பாகும். இந்தச் சீனாவின் நயவஞ்சகத்தனம் பற்றிய தகவல்கள் மிக அதிர்ச்சிகரமானவை. இவ்வாறு கப்பல் மூழ்கடிப்பு விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு தோள்கொடுத்து தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழிக்க உதவி செய்து இலங்கை அரசை பாதுகாத்த சீனா, இப்போது கடல் தொழிலாளிகளுக்கு வலையும் நிவாரணமும் கொடுத்து தாயகத்தில் தமிழினத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் நயவஞ்சக நோ…

  8. 30 வருட இன மோதல் தொடர்பாக எவரும் மன்னிப்புக் கேட்கவில்லை : கல்கண்டே தம்மானந்த தேரர் ”சிங்கள-பௌத்த கேடயத்தை அதன் அதிகபட்ச நன்மைக்காக அரசாங்கம் பயன்படுத்தியது” *இந்த அரசாங்கம் குண்டர் போன்ற பிக்குகளை வளர்த்தெடுத்து அவர்களுக்கு பதவி உயர்வு அளித்து பல்வேறு இடங்களில்அமர்த்தியிருந்தது. *சில பிக்குகள் உளவியல் ரீதியாக கடுமையான ரணங்களைக் கொண்டிருக்கின்றனர். *குடும்ப வன்முறை, துன்புறுத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றை சமூகம் குணப்படுத்தவில்லை என்றால், அது அதிகரிக்கும். *நல்லிணக்கம் என்பது கருத்தரங்குகளை நடத்துவது, அறிக்கையை வழங்குவது மற்றும் டொலர்களை சம்பாதிப்பதாகவிருந…

    • 2 replies
    • 467 views
  9. வடமாகாண சபைத் தேர்தல்: யாருக்கு நன்மை? யாருக்குத் தீமை? நிலாந்தன் 24 ஜூன் 2013 வடமாகாண சபைத் தேர்தல் நடக்குமா? இல்லையா என்பது பற்றி உரையாடுவது இன்று இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, அத்தேர்தலை நடாத்துவதால் தமிழர்களிற்கும், அரசாங்கத்திற்கும் கிடைக்கக்கூடிய நன்மைகள் எவை? தீமைகள் எவை என்று பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மாகாண சபை அமைப்பெனப்படுவது தமிழர்களுடைய தெரிவு அல்ல. ஏனெனில், அது இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் விளைவாகும். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் தமிழர்கள் ஒரு தரப்பு அல்ல. எனவே, மாகாண சபை உருவாக்கத்தின் போது தமிழர்கள் ஒரு தரப்பாக இருக்கவில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாண சபை உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அது முழு இலங்கைத் தீவுக்குமான அத…

  10. முள்ளிவாய்க்கால் இன்றும், தலைவர்களுக்கு ஓரு சோதனைக்களமா? நிலாந்தன்:- முள்ளிவாய்க்கால் நினைவு கூரலில் சம்பந்தர் அவமதிக்கப்பட்ட பொழுது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ‘குழப்பம் விளைவித்தவர்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாதது அவரது தகுதிக்கும், உயர்த்திக்கும் பொருத்தமானதாகத் தெரியவில்லை’. என்று மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தனது முகநூல்க் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறார். விக்னேஸ்வரன் நினைத்திருந்தால் குழப்பத்தை தடுத்திருக்கலாம் என்று அவர் நம்புவதாகத் தெரிகின்றது. அன்றைய நாளில் எடுக்கப்பட்ட கானொளிகளை உற்றுக் கவனித்தால் ஒரு விடயத்தைக் கண்டுபிடிக்கலாம். சம்பந்தர் உரையாற்ற முன்…

  11. ஜெனீவாவுக்குப் பிறகு, எங்கே கையேந்துவது? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த பத்தாண்டுகளாக, ஈழத்தமிழ் அரசியலின் மையப்புள்ளிகளில் ஒன்றாக ஜெனீவா இருந்துவருகின்றது. ஒருபுறம் இலங்கையில் இருந்து பிரமுகர்கள் அங்கு காவடியெடுக்க, ‘புலம்பெயர் புத்திமான்கள்’ நடைபவனி, பேரணி, ஈருளிப் பயணம் என ஐரோப்பியத் தலைநகரங்களில் இருந்து, ஜெனீவாவை நிறைத்தார்கள். ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு நன்மை விளையாது என, 2010ஆம் ஆண்டுமுதலே, சொல்லி வந்தவர்கள் இருக்கிறார்கள். இலங்கையைத் தங்கள் வழிக்குக் கொண்டுவருவதற்கான ஒரு களமாக, ஜெனீவா பயன்படுகிறது. அதற்கு தமிழர் பிரச்சினை ஒரு துரும்புச்சீட்டு மட்டுமே என்பதை, தொடர்ச்சியாக வலியுறுத்தியவர்களை, அரசியல் தெரியாதவர்கள், உலகறிவு அற்றவர்கள், தேசியத்தின் வி…

  12. ஆப்கானிஸ்தான்: தென்னாசியாவின் புதிய மையப்புள்ளி புதிய நெருக்கடிகள், புதிய தேவைகளை உருவாக்குகின்றன; புதிய தேவைகள், புதிய பங்காளிகளை உருவாக்குகின்றன; புதிய பங்காளிகள், புதிய திட்டங்களை உருவாக்குகிறார்கள்; புதிய திட்டங்கள், புதிய பிரச்சினைகளை உருவாக்குகின்றன; மொத்தத்தில், நெருக்கடிகள் பிரச்சினைகளையும் பிரச்சினைகள் நெருக்கடிகளையும் தோற்றுவிக்கின்றன. இவ்வாறு, தோற்றுவிக்கப்படுபவைகளில் பெரும்பாலானவை, தேவையின் அடிப்படையில் இருப்பதில்லை. ஆனால், நெருக்கடிகள் சில தவிர்க்கவியலாத நடவடிக்கைகளுக்கு வித்திடுகின்றன. அவை வினையை அறுவடை செய்கின்றன. கடந்த வாரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நீண்ட காலமாக எத…

  13. தமிழ்த் தேசிய அரசியலா? தமிழ்த் தேசிய நீக்க அரசியலா? தமிழ் மக்களுக்கு எது தேவை? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றிற்கு அளித்த நேர்காணல் தொடர்பாக பலத்த வாதப் பிரதிவாதங்கள் எழுச்சியடைந்துள்ளன. இதுவரை காலமும் சுமந்திரனை மாற்றுக் கட்சியினரும், கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களுமே அதிகளவில் விமர்சித்தனர். தற்போது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியிடமிருந்து மட்டுமல்ல சொந்தக் கட்சியான தமிழரசுக்கட்சியிடமிருந்தும் பலத்த விமர்சனங்கள் அவரை நோக்கி வந்துள்ளன. யாழ்ப்பாணம் நல்லூரில் அவரின் உருவப்படத்திற்கு செருப்பு மாலையும் போடப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சி கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளமை தெளிவாகத்தொடங்கியுள்…

  14. கியூபா: மனிதாபிமான மருத்துவமும் அமெரிக்காவின் திட்டமிட்ட இடையூறுகளும் Bharati April 29, 2020 கியூபா: மனிதாபிமான மருத்துவமும் அமெரிக்காவின் திட்டமிட்ட இடையூறுகளும்2020-04-29T23:09:58+00:00Breaking news, அரசியல் களம் ரூபன் சிவராஜா ‘வெள்ளை அங்கி அணிந்த கியூப படையினர்’ – Army of white coats என்ற சொல்லாடல் சூட்டப்பட்ட கியூப சிறப்பு மருத்துவப் பிரிவு 1960 இல் உருவாக்கப்பட்டது. அப்பிரிவிலிருந்தே மருத்துவப்பணியாளர்கள் சிலிக்கு அனுப்பப்பட்டனர். தென் அமெரிக்க, ஆபிரிக்க மற்றும் ஆசியப் பிராந்தியங்களின் 158 நாடுகளுக்கு, 300 000 வரையான மருத்துவப் பணியாளர்களை இதுவரை கியூப பணியில் ஈடுபடுத்தியுள்ளது என்பது கியூப அரசின் தகவல். ஆபிரிக்கா, லத்தீன் அம…

  15. விழிப்படைத்த தமிழரசுக் கட்சியும் மாற்று தலைமை பற்றிய பேச்சும் 2009ஆம் ஆண்டு தமிழ் மக்­க­ளது உரி­மைக்­கான ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்ட பின்னர் தமிழ் மக்­க­ளது அபி­லா­சைகள் தேர்தல் நோக்­கிய அர­சி­யலில் தங்­கி­யி­ருக்­கின்­றது. கடந்த எட்­டரை ஆண்­டு­க­ளாக அர­சி­யலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­க­ளது ஆணை பெற்ற கட்­சி­யாக செயற்­பட்டு வரு­கின்­றது. இந்­நி­லையில் அண்­மைக் ­கா­ல­மாக மாற்றுத் தலைமை, புதிய தலைமை என்­கின்ற கருத்­துக்கள் பர­வ­லாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்றன. ஆனால் அவை சாத்­தி­யமா...?, அதற்­கேற்ற நகர்­வுகள் மக்கள் நம்பும் படி­யாக நடக்­கின்­றதா என்ற கேள்­விகள் மீண்டும் மக்கள் மத்­தியில் எழத்­தொ­டங்­கி­யி­ருக்­ கின்­றன. தமிழ்…

  16. வரதரின் மீள்வரவும் பின்னணியும்…..! July 16, 2025 — அழகு குணசீலன் — இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பிரசவமான, வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் மீள்வருகை தமிழ்த்தேசிய அரசியலிலும், ஊடகங்களிலும் பெரும் பேசு பொருளாகியிருக்கிறது. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் அரசியல் தஞ்சம் பெற்று வாழும் வரதர் இந்திய படைகளுடன் கப்பலேறிய பின்னர் இதற்கு முன்னரும் சில தடவைகள் இலங்கை வந்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் இந்த அளவு முக்கியத்துவத்தை தமிழ்த்தேசிய அரசியலும், ஊடகங்களும் அவருக்கு வழங்கவில்லை. அப்படியானால் இப்போது மட்டும் ஏன்? இதன் பின்னணி என்ன? திடீரென்று கடந்த சில தினங்களாக மாகாணசபை தேர்தல் ‘மந்திரம் ‘ கொழும்பு அரசியலிலும், தமிழ்த்தேசிய அரசிய…

      • Like
    • 2 replies
    • 467 views
  17. கோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஓகஸ்ட் 21 புதன்கிழமை, மு.ப. 11:19 Comments - 0 சட்டப்படி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி, இன்னமும் எழுப்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. ஏனெனில், அவர் தமது அமெரிக்கப் பிரஜா உரிமையை இரத்துச் செய்து கொண்டாரா என்பது, இன்னமும் தெளிவாகவில்லை. 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின்படி, வெளிநாட்டுக் குடியுரிமையுள்ள ஒருவர், இலங்கையில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. ஆனால், அவ்வாறான ஒருவர் வேட்பு மனுத் தாக்கல் செய்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நாளில், மற்றொரு வேட்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், மிகக…

  18. 2017 சமாதானத்துக்கான நொபேல் பரிசு: பரிசின் தவறும் தவறின் பரிசும் பரிசுகள் மீதான மதிப்பு தொடர்ச்சியாகக் குறைவடைந்து வந்துள்ளது. ஆனால், பரிசின் மீதான அவாவும் அது யாருக்கும் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் இன்னமும் பரிசுகளைக் கவனிப்புக்குரியவையாக வைத்திருக்கின்றன. இன்னொரு வகையில், ஊடகங்கள் கட்டமைக்கிற பொதுவெளியில் பரிசுகளுக்கான அங்கிகாரத்தின் சமூகப் பெறுமானமும் பரிசுகளை வழங்கவும், பெறவும் வாய்ப்பளித்திருக்கிறது. பரிசுகளின் தன்மையும் அதைப் பெறுபவர்களின் செயல்களும் பரிசைத் தனக்கு அளித்து அவமதிப்பார்களோ என்ற அச்சத்தை சிலருக்கு உருவாக்கியும் இருக்கிறது. இதைப் பரிசின் தவறென்பதா? அல்லது தவறின் பரிசென்பதா? நா…

  19. விக்னேஸ்வரன் முன்னாலுள்ள சவால்கள்? - யதீந்திரா வடக்கு மாகாண சபையில் நிலவிய குழப்பங்கள் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டன. இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் சில எதிர்பார்ப்புக்கள் உருவாகியிருந்தன. எதிர்பார்ப்பு ஒன்று: முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும், இதன் வாயிலாக கூட்டமைப்பு உடைவுறும். எதிர்பார்ப்பு இரண்டு: இலங்கை தமிழரசு கட்சி எதிர்த்தரப்பினருடன் இணைந்து விக்னேஸ்வரனை வெளியேற்றினால், விக்னேஸ்வரனைக் கொண்டு ஒரு புதிய அணியை கட்டியெழுப்பலாம். எதிர்பார்ப்பு மூன்று: விக்னேஸ்வரன் தனது பதவியை துறந்து புதிய அணியொன்றிற்கு தலைமை தாங்க முன்வருவார். ஆனால் இறுதியில் எதுவுமே நிகழவில்லை. இதற்கு காரணம் இவ்வாறான எதிர்பார்ப்ப…

  20. ‘ஹிட்லர்’ மீதான காதல் அடோல்ப் ஹிட்லரின் மனதுக்குள், எந்தளவுக்கு அன்பும் கருணையும் காதலும் இருந்தது என்று தெரியாது. ஆனால், உலக சரித்திரக் குறிப்புகளின்படி, ஒரு சர்வாதிகாரியாகவே ஹிட்லர் பதிவு செய்யப்பட்டிருக்கின்றார். ஈவா பிரவுண் அல்லது ஹிட்லரின் வாழ்க்கையில் வந்த மற்றைய இரு பெண்களும், எந்தளவுக்கு ஹிட்லரைக் காதலித்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ஹிட்லரை வேறு ஒரு கோணத்தில், நல்ல ஆட்சியாளராகப் பார்க்கின்றவர்களும், அவரது போக்கை வரவேற்கின்ற சிலரும், நம்மோடு இருக்கின்றார்கள் என்பதைச் சில சம்பவங்கள் எடுத்துக் கூறுகின்றன. மகாத்மா காந்தி என்கின்ற மிகப் பெரும் தேசபிதாவை, இத்தன…

  21. தமிழ் மக்­களை ஏமாற்ற முனை­ப­வர்கள் இறு­தியில் ஏமாற்­ற­ம­டைவர் எமது நாட்டில் ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்­பெற உள்­ளது. இந்­நி­லையில் ஜனா­தி­பதி தேர்தல் களம் இப்­போது சூடு பிடித்­தி­ருக்­கின்­றது. நாட்டின் அடுத்த ஜனா­தி­பதி தொடர்பில் நாட்டு மக்­களின் எதிர்­பார்ப்பு மேலோங்­கிக்­கா­ணப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய சூழ்­நி­லையில் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் நாட்டு மக்­க­ளுக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளையும் வழங்கி வரு­கின்­றனர். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்­பிலும் கருத்­துகள் இப்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. தேர்தல் வாக்­கு­று­திகள் எந்­த­ள­வுக்கு சாதக விளை­…

  22. சர்ச்­சையைக் கிள­றிய சீனத்­தூ­துவர் இலங்­கைக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான பொரு­ளா­தார உற­வுகள் முக்­கி­ய­மா­ன­தொரு கட்­டத்தை அடைந்­தி­ருக்­கின்ற நிலையில், இரு­த­ரப்பு இரா­ஜ­தந்­திர உற­வு­களில் மீண்டும் ஒரு நெருடல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. சீனத் தூதுவர் யி ஷியாங்­லியாங் கடந்த முதலாம் திகதி கொழும்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் குழு­வொன்­றுடன் நடத்­திய சந்­திப்பில் வெளி­யிட்ட கருத்­துக்­களே இந்த நிலை­மைக்கு முக்­கி­ய­மான கார­ண­மாகும். செய்­தி­யா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு சீனத் தூதுவர் அளித்­தி­ருந்த பதில்கள், சீனாவின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு அப்பால் இலங்கை அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை விமர்­சிக்கும் தொனி­யையும், கேள்வி எழ…

  23. தொடரும் பட்டதாரிகள் போராட்டம் வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் போராட்டம், காணி மீட்பு போராட்டம், காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் போராட்டம், அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான போராட்டம், தனியார் மருத்­துவக் கல்­லூ­ரி­க­ளுக்கு எதி­ரான போராட்டம், இந்­திய மீன­வர்­க­ளுக்­கெ­தி­ரான போராட்டம், ஆசி­ரியர் பற்­றாக்­குறை போராட்டம் மருத்­துவர், தாதியர் போராட்டம், வைத்­தி­ய­சா­லை­களை தர­மு­யர்த்­துங்கள் என்ற போராட்டம், பாலியல் வன்­மங்­க­ளுக்­கெ­தி­ரான போராட்டம் என ஏரா­ள­மான போராட்­டங்­களால் சீர­ழிந்து கொண்­டி­ருக்­கின்ற நாடாக இன்று இலங்கைத் தீவு தத்­த­ளித்துக் கொண்­டி­ருக்­கி­றது. ஊழல், பொரு­ளா­தார நெருக்­க­டிகள் ஆட்­கொல்லி நோய்கள், இயற்கை அன ர்த்­தங்கள், வாகன வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.