Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. COLUMNS பத்தி OPINION கருத்து சிறீலங்கா: ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ரணிலின் அரசாங்கம் கவிழ்க்கப்படுமா? சிவதாசன் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் சமீபகாலமாக மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. ஜனாதிபதி தேர்தல் இந்த வருட இறுதிக்குள் நடைபெறுமென்று தேர்தல் ஆணையகம் அறிவித்ததிலிருந்து சில கட்சிகள் அதற்குத் தம்மைத் தயார்படுத்தும் பணிகளில் மும்முரமாயிருந்தாலும் வேறு சில கட்சிகளும் அரசியல்வாதிகளும் இன்னுமொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த இரகசியமான பேச்சுவார்த்தைகளிலும் நகர்வுகளிலும் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் கசிகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் யாரை நிறுத்துவது என்பது ச…

    • 0 replies
    • 456 views
  2. இன்­னொரு ஹிட்­லரை அனு­ம­திக்­குமா உலகம்? கோத்­தா­பய ராஜபக் ஷ இரா­ணுவ ஆட்­சியை – கடும்­போக்கு ஆட்­சியை விரும்­பு­பவர். அத­னையே தனது அடை­யா­ள­மாக நிரூ­பிக்­கவும் எத்­த­னிப்­பவர். இது அவரைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். அதனால் தான், அவ­ரது அந்த அடை­யா­ளத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி, அவரை மேல் மட்­டத்­துக்குக் கொண்டு வர முனை­கி­றார்கள். ஆனால், அர­சியல் என்­பது வேறு. அதற்கும் இரா­ணுவ ஆட்­சிக்கும் ஒரு­போதும் ஒத்­துப்­போ­காது. ஜன­நா­யகப் பாரம்­ப­ரி­யங்­களை மதிக்­கின்ற வகை­யி­லான, பண்­பு­களைக் கொண்­ட­வர் க­ளுக்குத்தான் அர­சியல் பொருத்­த­மு­டை­யது ஹிட்­ல­ராக மாறி, இரா­ணுவ ஆட்­ச…

  3. மாவோவின் செஞ்சீனம் ,டெங் சியாவோ பிங்கின் பொருளாதாரக் கொள்கையோடு நிறம் மாறிவிட்டது. தற்போது அந்நாடு ஆசியச் சந்தையை மட்டுமல்ல, உலகச் சந்தையையே வளைத்துப் போடும் வல்லமையைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மொத்த உள்ளூர் உற்பத்தியின் (GDP) அளவினையும் தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது, மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியால், சீனா தென் கொரியா ஆசிய நாடுகளே அதிக நன்மையடைகின்றன. இருப்பினும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்கத்தடை சீனாவையோ அல்லது இந்தியாவையோ பாதிக்கவில்லை. நட்டத்தில் இயங்கியவாறு, பாதீட்டில் தங்கியிருக்கும் மின்சாரசபையையும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும் கொண்ட இலங்கை போன்ற நாடுகளே எண்ணெய்த் தடையால் பெரிதும் பாதிப்புறுகின்றன. சர்வதேசச் சந்தையில் மசகு எண்…

  4. ஜேவிபி பதில் கூறுமா? நிலாந்தன்! அனுரகுமார கவர்ச்சியாகப் பேசுகிறார். மேடையைத் தனது பேச்சினால் கட்டிப்போடவல்ல ஒரு பேச்சாளராக அவர் தெரிகிறார். இனப்பிரச்சினை தொடர்பாக, இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அவர் கவர்ச்சியாகப் பேசுகின்றார். கனடாவிலும் அவர் அப்படித்தான் பேசினார். யாழ்ப்பாணத்திலும் அவர் அப்படித்தான் பேசினார். ஆனால் அவர் இதுவரை பேசிய அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. என்னவெனில், அவர் இனப்பிரச்சினையை, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை, எல்லாவற்றையும் மனிதாபிமானக் கண் கொண்டுதான் பார்க்கின்றார். மாறாக அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தியோடு, அரசியல் பரிமாணத்தோடு, அவற்றை விளங்கி வைத்திருக்கிறாரா என்று கேட்கத்தக்க விதத்தில்தான் இனப்பிரச்ச…

    • 4 replies
    • 456 views
  5. இலங்கை பெண்களுக்கு இட ஒதுக்கீடு - அதிகாரம் தருமா அரசியல் கட்சிகள்? நளினி ரத்னராஜாபெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBUDDHIKA WEERASINGHE/GETTY IMAGES (இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) பல ஐரோப்பிய நாடுகளில் பெண்க…

  6. சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள் சிறிலங்காவிலுள்ள மதில்களில் பரிச்சயமான ஒருவரின் சுவரொட்டிகள் மீண்டும் காணப்படுகின்றன. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவப்படங்களைக் கொண்ட பல ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் மீண்டும் நாட்டில் தென்படுகின்றன. ராஜபக்ச அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணை மற்றும் வெள்ளை வான் கடத்தல்கள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு சிறிலங்காவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தேர்தலில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு மக்கள் தமது வாக்குகளை வழங்காதமை, அவர்களுக்கு அதிர்ச்…

  7. இலங்கைப் பொது­மக்­கள் முன்­னணி சார்­பில் அடுத்த தேர்­த­லில் கள­மி­றங்­கப்­போ­கும் அரச தலை­வர் வேட்­பா­ளர் பாது­காப்பு அமைச்­சின் முன்­னாள் செய­லரும் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் தம்­பி­யு­மான கோத்­த­பாய ராஜ­பக்­ச­தான் என்­பது நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டா­யிற்று. மகிந்த குடும்­பத்­தில் இருந்து அதி­கா­ர நாற்கா­லிக்­காக வந்­தி­ருக்­கக்­கூ­டிய மற்­றொரு நப­ராக மீண்டும் குடும்ப ஆதிக்­கத்­தின் வெளிப்­பா­டாக வந்­தி­றங்­கி­யி­ருக்­கி­றார் கோத்­த­பாய. மகிந்த அணி­யி­லி­ருந்து அடுத்த வேட்­பா­ள­ராக அவர் கள­மி­றங்­கு­வார் என்­கிற எதிர்­பார்ப்­பும் எதிர்­வு­கூ­றல்­க­ளும் நீண்ட நாள்­க­ளா­கவே இருந்து வந்­தி­ருக்­கின்­றன. …

  8. சர்ச்சையில் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிறுத்தப்படுவாரா என்று ஊகங்கள் உலாவிக் கொண்டிருந்த போது, அமைச்சர் சரத் பொன்சேகாவிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர், “சங்கக்கார நல்ல மனிதர்; திறமையான கிரிக்கெட் வீரர் தான். ஆனால், அவருக்கு அரசியல் தெரியாது; நானே, அரசியலுக்கு வந்து, ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் தான், அரசியலைக் கற்றுக் கொண்டேன்” என்று பதிலளித்திருந்தார். இவ்வாறு கூறியிருந்தாலும், அவர் இப்போதும் கூட, அரசியலைச் சரிவரக் கற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மை. …

  9. ஈழத் தமிழ் லொபியின் தோல்வி? - யதீந்திரா யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கழிந்துவிட்டது. இந்தக் காலகட்ட தமிழர் அரசியலை எடுத்து நோக்கினால், பாரபட்சமில்லாமல் அனைத்து தமிழ்த்தேசிய தரப்பினரும் சர்வதேச சமூகம் தொடர்பிலேயே தமது கரிசனையை வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். ‘சர்வதேச சமூகம் எங்களை கைவிடாது’ – என்பதுதான் அனைவரதும் சுலோகமாக இருந்தது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் – கூட்டமைப்பின் கொள்கையை விமர்சித்து வேறு வழியில் சென்றவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. அதே போன்று ஜரோப்பிய மைய தமிழ் புலம்பெயர் அமைப்புக்களான நாடுகடந்த அரசாங்கத்திற்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC) மற்றும் USTAG போன்ற தாராளவாத புலம்பெயர் அமைப்புக்களுக்கும் இடையி…

  10. பாதை திறப்பில் பதுங்கிய அனுரவும் முந்திக்கொண்ட சுமந்திரனும் | இரா மயூதரன்

  11. ஜனாதிபதி வேட்பாளர் திரு. M.K. சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் : சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் இத்தேர்தல் விஞ்ஞாபனம், Nov 09இல் திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் வைத்து வெளியிடப்பட்டது. 1. புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறையை நிராகரித்து, தமிழ்த் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஸ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். 2. இறுதி போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன…

  12. ஈழத்தமிழரின் விடுதலைக்கான அடிப்படை நிறுவன கட்டமைப்புக்கள் தத்தர் ஈழத்தமிழரின் வாழ்வில் பல விடயங்களை அடிப்படையிலிருந்தும் ஆரம்பத்திலிருந்தும் தொடங்க வேண்டியுள்ளன. ஈழத்தமிழரின் விடுதலைக்கான அடிப்படை நிறுவன கட்டமைப்புக்களை அவசர அவசரமாக உடனடியாக தொடங்க வேண்டியுள்ளது. உதிரியாகவும் எதிரும் புதிருமாகவும் நாம் செயற்படுவதன் மூலம் மரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டு அக்கிளையை வெட்டுவதுபோல் எமக்கு நாமே தீங்கை தேடிக்கொண்டிருக்கிறோம். சரியான கருத்தாக்கமும் அதனை செயற்படுத்துவதற்கான நிறுவன அமைப்புக்களும் இருக்குமேயானால் இத்தகைய தவறுகள் தோன்ற இடம் இருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக எம்மிடம் சரியான கருத்து மண்டலம் இருக்கவேண்டும். அவ்வாறான கருத்து மண்டலத்தை உருவாக்குவது என்பது …

  13. தேர்தல் நம்பிக்கை சுவாரசியமானதொரு திசை நோக்கி, அரசியல் சடுதியாகத் திரும்பியிருக்கிறது. நாட்டில் நடாத்தப்பட வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை, விரைவில் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், 20ஆவது திருத்தம் தொடர்பில், உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்திருப்பதாகக் கூறப்படும் பரிந்துரையானது, உடனடியாகத் தேர்தல்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு மீளவும் நம்பிக்கையொன்றை ஏற்படுத்தியிருக்கிறது. பரிந்துரைப்பு கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. வடமத்தி, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைக…

  14. ஜெனீவா: இலாப நட்டக் கணக்கு -மொஹமட் பாதுஷா நேற்று, ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. கொவிட்-19 நோய் பரவல் காரணமாக, வழக்கத்துக்கு மாறாக, இணைவழி மெய்நிகர் முறைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனத் தெரிகின்றது. கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக, மனித உரிமைகள் பேரவையில் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகின்ற தமிழர்கள் மீதான, உரிமைகள் மீறல்கள் தொடர்பாகவும் பொறுப்புக்கூறல் பற்றியும் பாரிய சிக்கல்களை, இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது. அதேநேரம், இரண்டாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் போது, அந்த ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான உரிமை மறு…

  15. போதையால் தள்ளாடும் தமிழ் இளைஞர் சமூகம் புருஜோத்தமன் தங்கமயில் வடக்கில், என்றைக்கும் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் பாவனை, கணிசமாக அதிகரித்திருப்பதாக வைத்தியத்துறையினரும் பாடசாலை சமூகத்தினரும் தெரிவிக்கின்றனர். இதனால், சமூகக் குற்றங்களும் இளவயதினரின் தொடர் மரணங்களும் பதிவாகி வருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும், போதைப்பொருள் பாவனையால் பத்துக்கும் அதிகமான இளவயதினர் நோய்வாய்ப்பட்டும் தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, நூற்றுக்கணக்கானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளிலும், போதை விடுவிப்பு நிலையங்களிலும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான நாள்கள், வடக்கு - கிழக்கில் போதைப…

  16. ஐநாவுக்குக் கடிதம் எழுதும் கட்சிகள் ? நிலாந்தன். March 6, 2022 கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி கூட்டாகக் கடிதம் அனுப்பிய கட்சிகள் இம்முறை ஐநாவுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் கடிதங்களை அனுப்பியுள்ளன. கடந்த ஆண்டு அனுப்பிய கடிதத்தின் விளைவாக என்ன நடந்தது? அக்கூட்டுக் கடிதத்தில் பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று மூன்று கட்சிகளும் கேட்டிருந்தன. கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் அவ்வாறு பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகும் விடயத்தில் உண்மையாக உழைத்த கட்சி எது? இதுவிடயத்தில் தமிழ்க் கட்சிகள் முதலில் தமது மக்களுக்கு பொறுப்புக்கூறுமா? உக்ரைன் விவகாரம் மீண்டும் ஒரு தடவை ஐநாவின் கையாலாகாத்தனத்தை…

  17. நெஞ்சில் நெருப்பைத் தமிழினம் ஏந்திய நாள் -இலட்சுமணன் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் அதன் வரலாற்றுப் பின்புலங்களையும் அறியாதவர்கள், அந்த அரசியல் நீரோட்டத்தில் கலக்காத, சுயநல அரசியல் சார்ந்த செயலொழுங்கில் பயணிப்பவர்களாகவே பெரும்பாலும் இருக்க முடியும். இத்தகையோர், சலுகைகளுக்காக உரிமைகளைத் தாரைவார்த்துக் கொடுத்து, சுயத்தை இழந்து நிற்பவர்களாகவே இருக்கமுடியும். இவர்களுக்கு, முள்ளிவாய்க்கால் ஓர் அஸ்தமனமாகத் தெரியலாம்; ஏன், தமிழ்த் தேசிய போராட்டத்தின் முடிவாகக் கூடக் கருதலாம். 1949ஆம் ஆண்டில் இருந்து, 1975வரை இடம்பெற்ற தமிழர்களின் அஹிம்சைப் போராட்டம் சம்பந்தமாக, ஒரு முழு விளக்கம் தர வேண்டும் என்றும், அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடிய ம…

  18. P2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்? -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது. இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், கருத்து மோதல்கள் ஒருபுறமும், இதற்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது, இன்னொரு புறமுமாக ஈழத்தமிழர் அரசியல் நகர்கிறது. இந்தப் போராட்டத்தில் உணர்வெழுச்சியோடு பங்குபற்றிய எல்லோருடைய கேள்வியும், அடுத்து என்ன என்பதே? இக்கேள்வி மிகவும் முக்கியமானது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு, இந்தப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரும், நடைபெற்ற நிகழ்வுகளை ஆழமாக நோக்க வேண்டியுள்ளத…

  19. அடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் திரிசங்கு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பி.கே.பாலச்சந்திரன் இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் அணுகுமறைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்தவரை அடுத்த கட்டம் குறித்து முடிவெடுப்பதில் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்குகிறது.எடுக்கக்கூடிய எந்தத் தீர்மானமுமே பிரச்சினையைத் தந்துவிடுமோ என்று அதன் தலைவர்கள் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஒரு புறத்திலே, கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டியிருப்பதுடன் அதற்கு முட்டுக்கொடுக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழர்களுக்கு விரோதமானவராக நோக்கப்படுகின்ற முன்னாள் …

  20. இலங்கையின் வெளியுறவில் இந்தியா முதலிடம் என்பது இராஜதந்திரமா.? இலங்கை இந்திய உறவு பற்றிய உரையாடல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதை காணமுடிகிறது. அதிலும் இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜனநத் கொலம்பகே இந்தியா தொடர்பில் அதிக கரிசனையுடன் பொது வெளியில் உரையாடிவருகிறார். குறிப்பாக உள்ளார்ந்த ரீதியில் உரையாடி முடிபுகளை மேற்கொண்டு அமுல்படுத்த வேண்டிய வெளியுறவு தொடர்பிலான நகர்வுகளை வெளிப்படையாக அவர் உரையாடிவருகிறார். வெளியுறவின் மையமே இராஜதந்திரமேயாகும். அத்தகைய இராஜதந்திரம் அமைதியாக நகர்வுகளை மேற்கொள்வதனைக் குறிப்பதாகும். அதிலும் சீனாவின் நட்புக்குள்ளும் இந்தியாவின் அயலுக்குள்ளும் இருக்கும் இலங்கை வெளிப்பமைடயாக இல்லாத போக்கினை அல்லவா கடைப்பிடிக்க வேண்டும். ஆன…

  21. "கூடுவார்கள் ஆனால் கூட்டமைப்பல்ல.. பேசுவார்கள் ஆனால் பொதுமுடிவல்ல.. ஏசாதையுங்கோ இதுதான் TNA" 28 அக்டோபர் 2013 குமரன் கார்த்திகேயன் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கேட்டதா என்பதல்ல தற்போதைய பிரச்சனை, பெருவாரியான மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் நான் கேட்கிறேன் படை அதியாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறியை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கி பொதுவான ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்' என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு சவால் விடுத்துள்ளார். வடக்கின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாக தெரிவானோருக்கு நல்லூர் பிரதேச சபை ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை அவர் தெரிவித்துள்ளார். கடந்த 25ஆம் திகதி இட…

  22. ஆளுமையா? அனுதாபமா? - கௌரி நித்தியானந்தம் “உங்கள் மூன்று விருப்பு வாக்குகளில் ஒன்றையேனும் அந்தக் கட்சியிலுள்ள பெண் வேட்பாளருக்குப் போடுங்கள்” என்ற கோஷமானது என்றுமில்லாதவாறு தற்போதைய தேர்தல் களத்தில் மிகவும் வலுப்பெற்று வருகிறது. இது அனுதாப வாக்குகளாக வெளிக்குத் தோன்றினாலுமே ஆணாதிக்க அரசியலில் ஆளுமையுள்ள பெண்கள் கூட உள்ளே நுழைவதற்கு அனுதாபம் தான் முதலில் தேவையாக இருக்கிறது. இல்லாவிடின் மக்களுக்கு அறிமுகமேயில்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தினால் கூட வடக்கில் பெரும் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் கூடப் பெண் வேட்பாளர் தெரிவு என்று வரும்போது ஆளுமையுள்ள பெண்ணைத் தேசியப் பட்டியலிலும் அனுதாப வாக்குகளைப் பெறக்கூடியவர் என்று கருதுபவரையே களத…

  23. யாழில் சிறீலங்காப் படையினரால் வளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவது தொடர்பாக இப்பகுதியில் பல தடவைகள் வெளியாகியிருந்தன. கடந்தவாரமும் இப்பகுதியில் சிறீலங்காப் படையினரின் ஏற்பாட்டில் வலி வடக்கில் சட்டவிரோத சுண்ணாம்புக்கல் அகழ்வது தொடர்பிலான தகவல்களைத் தந்திருந்தோம். இந்நிலையில் யாழ்குடாவுக்கே தனித்துவம் மிக்க பனை வளமும் சிறீலங்கா படையினரின் பாராமுகத்துடன் தொடர்ந்து அழிக்கப்படுவதாக பனை அபிவிருத்திச் சபையினர் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்படுவதற்கு எதிராக சிறீலங்கா காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பனை அபிவிருத்திச் சபையினர் கவலை வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் பனை மரங்கள் சட்டவிரோதமான முறையில் அழிக்கப்படுவது தொடர்பில் க…

  24. பரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள் -க. அகரன் இலங்கை அரசியல் நிலைமை அண்மைக் காலமாக கொதி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. தென்பகுதி அரசியல், முக்கோண அரசியல் நகர்வில் உள்ள நிலையில், அதையொத்து வடபகுதி அரசியலும் உள்ளமை, மக்கள் மத்தியில் ‘அவதானிப்பு அரசியலை’ அதிகரித்துள்ளது. வெறுமனே அரசியல் தலைமைகளை விமர்சிக்கும் மக்கள் இன்று, அதை ஆராய்ந்து, அவதானித்துத் தீர்மானம் எடுக்கும் செயன்முறையொன்றுக்குள் நகர்ந்திருப்பதானது, ஆரோக்கியமான அரசியலாக உள்ளபோதிலும், அரசியல்வாதிகள் அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலை, முழுநாட்டு மக்களையும் பொறுத்தளவில், ஆரோக்கியமற்றதாகவே உள்ளது. அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அதிகாரப்போட்டி நிலவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.