அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
இந்திய – இலங்கை உறவுகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவாரா மிலிந்த? புதிய திருப்பதை ஏற்படுத்துவாரா மிலிந்த? இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட, எதிர்வரும் 15 ஆம் திகதி புதுடில்லியில் தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே இந்தத் தகவலை கொழும்பில் தெரிவித்திருக்கின்றார். வெறுமனே ஒரு தூதுவர் பதவியேற்பது என்பதைவிட, மிலிந்த மொரகொடவின் பதவியேற்பு முக்கியமானதாகக் கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதனால்தான் அவரது பதவியேற்பு பெருமளவு எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகவும் இடம்பெறுகின்றது. புதிய திருப்பதை ஏற்படுத்துவாரா …
-
- 2 replies
- 507 views
-
-
கணப்பொழுதில் அழிந்தது தென்னிலங்கை 200 இற்கும் அதிகமானோர் பலி, 7 இலட்சம் பேர் பாதிப்பு ஆயிரம் பேர் முகாம்களில் எந்தவொரு மனித செயற்பாட்டிற்கும் பாதுகாப்பு மற்றும் முன்னாயத்தம் உண்டு. ஆனால் இயற்கையின் சீற்றத்துக்கும் அதனால் ஏற்படும் அனர்த்தத்தையும் எந்த வழிகளிலும் மனிதர்களினால் கட்டுப்படுத்த முடியாது. மனித சக்தியை மிஞ்சிய இயற்கையின் பலத்தின் முன்னால் மனிதர்களாகிய நாங்கள் அடிபணித்தாக வேண்டும் என்பதே நியதியாகும். உலகில் ஆண்டு தோறும் மக்கள் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இலங்கையில் காலத்துக்கு காலம் ஏதாவதொரு இயற்கை அனர்த்தம் மக்கள் மனங்களில் அழியா சுவடுகளை ஏற்படுத்தவே செய்கின்றன. சூறாவளிகள், கடும் மழை, வெள்ளம், கடும் வரட்சி, ம…
-
- 0 replies
- 428 views
-
-
நீதியரசரின் நியாயமான நீதி நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் ஒருமுறை தீர்ப்பு எழுதுமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த காலத்தில் அவர் எழுதிய தீர்ப்புகள், சாட்சிகள், ஆதாரங்கள், வாதப்பிரதிவாதங்கள் சார்ந்து எழுதப்பட்டவை. நீதிமன்றங்களில் சட்டமும் அதுசார் அடிப்படைகளுமே பிரதானமானவை. ஆனால், இம்முறை அவர் எழுத வேண்டிய தீர்ப்பு, சட்ட வரையறைகளை மாத்திரமல்ல, தார்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டது. ஏனெனில், அவர் இப்போது தீர்ப்பு எழுதப் போவது மக்கள் மன்றத்தில். அந்தத் தீர்ப்பு, தமிழ் மக்களை மக்கள் மன்றங்களின் மீது நம்பிக்கை கொள்ள வைப்பதாகவும் இலங்கைக்கே முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும். வடக்கு மாகாண அம…
-
- 1 reply
- 424 views
-
-
ஐ.பி.சி பேட்டி April, 6 ,2022 பகுதி 2 நான் நினைக்கிறேன் அமரிக்கா இலங்கையின் அன்னிய செலாவணி நெருக்கடியில் ரணிலை அரசுக்குள் கொண்டுவந்து சர்வதேச நிதி நிறுவனத்தினூடாக தீர்வுகாண தீர்மானித்துவிட்டது.
-
- 0 replies
- 463 views
-
-
தற்போது சிறிலங்காவில் இனப்பிளவுகளால் மட்டும் மோதல்கள் ஏற்படவில்லை. பல்வேறு மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும் மோதல்கள் ஏற்படுகின்றன. பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கும் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மத சமூகங்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு The Platform என்னும் இணையத்தளத்தில் Anupama Ranawana எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் சிறிலங்கா தொடர்பில் அமுல்படுத்தப்பட்ட தீர்மானமானது நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும். அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது சிறிலங்காவில் தொடரப்பட்ட…
-
- 0 replies
- 420 views
-
-
இந்தியத் தேசியவாதமும் ராஜபக் ஷ விசுவாசமும் “2020 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ போட்டியிட்டால், அவரை வெற்றி பெறச்செய்வது தேசப்பற்றுள்ள இந்தியர்களின் கடமை. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தவர் அவர்”என்று கடந்தவாரம் டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம், மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. பா.ஜ.க.வின் மூத்த தலைவராக குறிப்பிடப்பட்டாலும், தமிழகத்தில் சுப்ரமணியன் சுவாமி எப்படிப்பட்ட ஒருவராக மதிக்கப்படுகிறவர் என்பதை இங்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அந்தளவுக்கு அவர் கடுமையான விமர்சனங்களுக்கும், கேலி, கிண்டல்க…
-
- 0 replies
- 548 views
-
-
வட - தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை மக்கள் மனங்களைப் போல் வலியது ஏதுமில்லை. மக்கள் மனது வைத்தால், அனைத்தும் சாத்தியம். எல்லைக் கோடுகளும் வேலிகளும், இராணுவமும், மக்களைப் பிரிக்கவியலாது. இதை, வரலாறு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. காலங்கள் செல்லலாம். ஆனால், மக்கள் இணைவதை, அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கவியலாது. இதன் இன்னொரு கட்டம், இப்போது அரங்கேறுகிறது. அண்மையில், வட கொரியா மற்றும் தென் கொரியத் தலைவர்கள் சந்தித்தமை, வட, தென் கொரியா இணைவின் வாய்ப்புக்கு, புத்துயிர் அளித்துள்ளது. வட கொரியாவையும் தென் கொரியாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதியில் வந்திறங்கிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன…
-
- 0 replies
- 488 views
-
-
பாழும் கிணற்றில் விழுவதற்கு ஒப்பாகும் பிணக்குகள் க. அகரன் பல்வேறு இனக்குழுமங்களுக்கு இடையிலான அரசியல் என்பது, நீருக்குள்ளால் நெருப்பைக் கொண்டு செல்வது போன்றதாகும். இத்தகைய அரசியல் செயற்பாட்டையே இன்றைய அரசியலாளர்கள் பல்வேறு கோணங்களில் செயற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றங்களும், அதனூடாக உருவெடுத்த இனரீதியான கருத்தியலும் இன்று மேலோங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டேயாக வேண்டும். வடபுலத்து அரசியலுக்கு அப்பால், கிழக்கிலங்கையில் மையம் கொண்டுள்ள இனரீதியான அரசியல்போக்குகள், ஆரோக்கியமற்றதும் இனரீதியான விரிசலைத் தோற்றுவிக்கும் தன்மை கொண்டனவாகவுமே காணப்படுகின்றன.…
-
- 0 replies
- 798 views
-
-
தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் (லக்மல் ஹரிஸ்சந்திர, Colombo Telegraph)‘வெறுப்புணர்ச்சி என்பது நாம் தாங்கிக் கொண்டு திரிகின்ற வீண் சுமை. அது வெறுக்கப்படுபவரை விட வெறுப்பவருக்கே அதிக இன்னல் தரும்’ என்பது மேற்கத்தேய தத்துவவியலாளர் ஸ்கொட்கிங் என்பவற்றின் பிரபலமான கூற்றாகும். ஏலவே முஸ்லிம்களுக்கெதிரான இனவாத முன்னெடுப்புக்கள் முன்னெப்போதுமில்லாதளவுக்கு தறிகெட்டுத் தலைவிரித்தாடுகின்ற சமகால இலங்கை சமூகத்தில், புதிதாக முளை விட்டிருக்கின்ற இந்து அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம், இந்து சமூகங்கள் மத்தியில் வெறுப்புணர்வை மேலும் தூண்டி விடும் நோக்கத்தை உட்கிடக்கையாகக் கொண்டவை என்பதை புரிந்து கொள்வதற்கு ஒருவர் ஏவுகணைத் தொழில்நுட்பம் அறிந்திருக்க வேண்டியதில்லை.அண்மையில் திருகோ…
-
- 0 replies
- 717 views
-
-
டிரம்ப் - புட்டின் சந்திப்பு பற்றிய சிந்தனைகள் வேல்தர்மா - ரஷ்யா–உக்ரேன், கிறிமியாவைத் தன்னுடன் இணைத்ததில் இருந்து மோசமடைந்திருக்கும் அமெரிக்க -ரஷ்ய உறவை டொனால்ட் ட்ரம்ப்பால் சீராக்க முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ரஷ்யாவுடன் சிறந்த உறவு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த டொனால்ட் ட்ரம்ப், அவரது வெற்றிக்கு ரஷ்யா உதவியது என்ற குற்றச்சாட்டு வலிமையாக எழுந்ததால் ரஷ்யாவுடனான ஒரு பேச்சு வார்த்தையின் போது விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய முடியாத நிலைக்கு ட்ரம்ப் தள்ளப்பட்டார். ஜூலை 16-ஆம் திகதி டொனால்ட் ட்ரம்பும், விளாடிமீர் புட்டீனும் பின்…
-
- 0 replies
- 437 views
-
-
டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு? யதீந்திரா சில தினங்களாக இப்படியொரு விடயம் நடந்துவிடாத என்னும் அவாவுடன் சிலர், சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களுடனும் சிலர் பேசியிருக்கின்றனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் நன்பர் ஒருவர் ஊடங்களின்; ஆதரவும் இதற்குத் தேவை என்றார். அதே வேளை மேற்படி மூன்று கட்சிகளும் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதை அறிவதில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் சொந்தத் திர்மானங்களில் இயங்கும் நிலைமை உருவாக்கியபோதுதான் அதற்குள் முரண்ப…
-
- 0 replies
- 782 views
-
-
விக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு புருஜோத்தமன் தங்கமயில் / இரா. சம்பந்தனின் அரசியல் அணுகுமுறை என்பது, எப்போதுமே பரபரப்புகளுக்கு அப்பாலானது; மிகமிக நிதானமானது. எந்த விடயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, அவர் கையாண்டது கிடையாது. அதுதான் அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. பெரிய சேதாரங்கள் இன்றி, கூட்டமைப்பை இன்றளவும் கட்டிக்காத்தும் வருகிறது. ஆனால், இந்த அணுகுமுறையே சம்பந்தனை, இப்போது பாரிய சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. 2015 பொதுத் தேர்தல் காலத்தில், கூட்டமைப்புக்கு எதிராக, சி.வி. விக்னேஸ்வரன் முன்னெடுத்த நடவடிக்கைகள், சம்பந்தனை அதிகளவு கோவப்படுத்தியது. அத…
-
- 0 replies
- 549 views
-
-
திசை மாறும் சட்டப் போராட்டம் -கபில் இன்னும் ஒரு மாதம் அமைச்சராக இருந்து டெனீஸ்வரன் எதனைச் சாதித்து விடப்போகிறார்- அல்லது டெனீஸ்வரனை இன்னும் ஒரு மாதம் பதவியில் இருக்க அனுமதிப்பதால் தான் விக்னேஸ்வரனுக்கு என்ன கெடுதல் வந்து விடப் போகிறது? இன்னும் ஒரு மாதத்துக்குப் பின்னர் வடக்கு மாகாணசபை செயலிழந்து போகும். அதற்குப் பின்னர் ஆளுநரின் கையில் அதிகாரம் வரப்போகிறது. அவர் அந்த அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவார் என்ற கேள்வி உள்ளது வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் முடிவடைந்தாலும் கூட, அதன் அமைச்சர் பதவியை முன்வைத்து தொடங்கப்பட்ட சட்டப் போராட்டம் ஓய்வுக்கு வரும் அறிகுறிகள் ஏதும் இருப்பதாகத…
-
- 0 replies
- 762 views
-
-
இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான ஆதிக்கம் யாருக்கு? ஆராய கொழும்பில் சர்வதேச மாநாடு (கூர்மை தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் அனில் சூக்லால் மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதுவர் பீற்றர் தொம்சன் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளனர். ஜப்பான் சார்பில் கொழும்பில் உள்ள தூதரக உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவார்கள். இந்த மாநாட்டுக்கான ஏற்பாட்டை இலங்கை அரசு செய்துள்ளதாக ஊடகங்களுக்கு கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் அழுத்தங்களினால் இந்த மாநட்டை இலங்கை அரசு ஏற்பாடு செய்ததாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. …
-
- 0 replies
- 416 views
-
-
‘கிழக்குத் தமிழர்’ என்னும் மாயவலை அதிரதன் / 2018 நவம்பர் 29 வியாழக்கிழமை, மு.ப. 12:17 Comments - 0 நாட்டின் ஆளும்மன்றம் அல்லோல கல்லோலமாக இருக்கிறது. ‘யம்பர் அரசியலுக்கும், திருஷ்டி கழிப்புக்கும் என, மிக நல்ல விதமாக வளர்ச்சிகண்டு கொண்டிருக்கிறது. எது எவ்வாறிருந்தாலும், கிழக்கைப் பொறுத்த வரையில் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, தமிழ் மக்களுடைய அரசியல் பலத்தை ஒருமுகப்படுத்துவது வரவேற்கத்தக்க தொன்று. ஆனால், இவ்வாறு ஒற்றுமைப்படுத்துவோர் எந்தவிதத்திலும் தமது நலன் கருதாத, முற்றிலும் பொது நோக்குக் கொண்டவர்களாக இருத்தல் அவசியம் என்ற வாதம் முகிழ்ப்பு பெற்று வருகிறது. தமிழர் அரசியலில் பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதன் ஒழுங்கில், 197…
-
- 0 replies
- 747 views
-
-
தம்பிக்காக தேர்தல் வியூகம் வகுக்கும் அண்ணன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் காலத்தை தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்புக்குப் பின்னர் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தமை பலரினதும் கவனததையும் ஈர்த்திருந்தது. ஏனென்றால் அவர் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு தரப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அண்மைக்காலமாக எழுந்திருந்தது. எனினும் தான் மஹிந்த அணிக்கு ஆதரவு தரப்போவதில்லை என அமைச்சரவை கூட்டத்தில் உறுதியாகக் கூறியிருக்கிறார் மைத்திரி. இதே…
-
- 0 replies
- 579 views
-
-
அதிகரித்துவரும் அமெரிக்க அழுத்தங்களும் அரசின் எதிர்தந்திரோபாயமும் அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்டீபன் ரப் கொழும்பு வந்திருப்பதானது, அரசின் மீதான அழுத்தங்களில் மேலும் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். முன்னர் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேசத்தின் கரிசனைகளை முற்றாக நிராகரித்த அரசு, அத்தகைய விசாரணைகளை அனுமதிக்க முடியாதென்றும் கூறிவந்திருக்கிறது. நமக்கு நினைவிருக்கலாம் - ஜ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்த மகிந்த அரசு, நிபுணர் குழு இலங்கையில் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை கோரியபோது அதனை திட்டவட்டமாக மறுத்திருந்தது. ஆனால் இன்று, அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஸ்டீபன் ரப்பின் விஜயத்தை…
-
- 0 replies
- 525 views
-
-
தமிழர் அரசியல் களத்தில் இளைஞர்கள் களமிறங்க வேண்டுமென்றால் சில முதியவர்கள் தாமாக முன்வந்து ஓய்வுபெற வேண்டுமென்று பிரித்தானியாவில் (United Kingdom) இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (D. Dibhakaran) சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 15 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் எந்தவொரு காத்திரமான அரசியலையும் முன்னெடுக்கவில்லை. தமிழர் அரசியல் களம் அழிவின் விளிம்பில் தமிழ் தேசிய கட்டுமானம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் தரப்பில் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள…
-
- 1 reply
- 580 views
- 1 follower
-
-
நன்றி தமிழ்நெட்.
-
- 0 replies
- 1.2k views
-
-
தேர்தல் மனோநிலை -க. அகரன் உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இலங்கையும் சிக்கித் தவித்திருந்தாலும், தற்போது தன்னைக் கம்பீரம் மிக்க நாடாகக் காட்டிக்கொள்ள எத்தனிப்பதாகத் தோன்றுகின்றது. அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்கள் மத்தியில், இலங்கை ஜனநாயகப் போராட்டத்துக்குள் செல்ல முயற்சிக்கின்ற நிலையில், எப்போது தேர்தல் என்ற கேள்வி, பலருக்கும் எழுந்துள்ளது. எனினும், இந்தத் தேர்தலை மக்கள் இயல்பான மனநிலையுடன் எதிர்கொள்வார்களா என்ற சந்தேகம் காணப்பட்டாலும் கூட, சுகாதார அமைச்சினது ஆலோசனையின் பிரகாரம், தேர்தல் ஆணையாளர் மிகவிரைவில் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதாகக் கூறியுள்ளார். இச்சூழலில், வேட்பாளர்களின் செயற்பாடுகளால், வாக்காளர்களின் மனோபா…
-
- 0 replies
- 485 views
-
-
சர்வதேசத்தின் அழுங்குப் பிடிக்குள் இஸ்ரேல் விரைவில் சிறீலங்கா.. சிறீலங்கா 1948 ற்கு பின் நடாத்திய அத்தனை ஆக்கிரமிப்பில் இருந்தும் வெளியேற வேண்டிய நிலை.. இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கைத் தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தூரத்து விளக்கு போல வெளிச்சம் காட்டியுள்ளது. நேற்று முன்தினம் ஐ.நா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை பாலஸ்தீன பகுதியில் நடாத்தியுள்ள அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் கைவிடும் முடிவுக்கு, இஸ்ரேல் உடனடியாக வந்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீன வட்டகையில் இஸ்ரேல் புரியும் நில ஆக்கிரமிப்பு சர்வதேசத்தின் கடும் கோபத்திற்குள்ளாகியிருப்பது சாதாரண விடயமல்ல, சிறீலங்காவிற்கும் பலத்த எச்சரிக்கையாக இறங்கியுள்ளது. மேற்குக் …
-
- 4 replies
- 3.5k views
-
-
பெருந்தொற்றுக் காலகட்டத்தில் மொழியுரிமையும் இலங்கையும் என்.கே. அஷோக்பரன் இலங்கையில் கொரோனா வைரஸின் பரவல்நிலை, அனைத்து மக்களையும் பதற்றம் அடையச் செய்துள்ளது. இந்தப் பெருந்தொற்றுப் பதற்றத்துக்கு, சமூக ஊடகங்கள் பரப்பும் போலிச் செய்திகள், ‘எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றும்’ கைங்கரியத்தைச் செய்கின்றன. இத்தகைய போலிச்செய்திகளின் வலுவைத் தகர்க்கவும் பதற்ற சூழமைவில் இருந்து, மக்களை அமைதிகொள்ளச் செய்யவும், மக்களோடு நேரடியாகவும் வினைதிறனுடனும் அரசாங்கம், தொடர்பாடலை மேற்கொள்ளுதல் அத்தியாவசியமானது. இலங்கை அரசாங்கம், ‘இந்திய-இலங்கை’ ஒப்பந்தத்தில், ‘இலங்கையானது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலாயர்கள் உட்பட்டவர்களைக் கொண்ட பல்லின, பல மொழிகளைக் கொண்ட பன்…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 629 views
-
-
- -கே.சஞ்சயன் ஜெனிவாவில் மீண்டும் ஒருமுறை இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்தமுறை 40 நாடுகளின் இணை அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம், இந்தமுறை 41 நாடுகளின் இணை அனுசரணையுடன் கொண்டு வரப்பட்டது. அதுபோலவே, கடந்தமுறை 24 நாடுகள் ஆதரவு தெரிவித்த தீர்மானத்துக்கு இந்தமுறை 25 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இம்முறை தீர்மானத்துக்கு ஆதரவாக அதிகளவு நாடுகள் வாக்களிக்கும் என்று தகவல்கள் வெளியான போதிலும், கடந்த முறையைவிட ஒரு நாட்டின் வாக்குத் தான் அதிகரித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 25 நாடுகள் மட்டும் ஏற்றுக்கொண்ட இந்தத் தீர்மானத்துக்கு, அதிகளவு நாடுகளின் ஆதரவு கிட…
-
- 0 replies
- 877 views
-
-
மாவீரர் நாளும் பொது நினைவு நாளும் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு வார காலத்தில் தமிழ்ச் சமூக, அரசியல், ஊடகப் பரப்பு குறிப்பிட்டளவான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றது. அதில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருவதற்கான பொது நாளொன்றின் அவசியம் பற்றிய உரையாடல் கவனம் பெற்றது. தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை பொதுவான நாளொன்றின் கீழ் நினைவுகூர வேண்டும் என்கிற கோரிக்கை இன்று எழுந்தது அல்ல. அது, 2000களின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டளவில் எழுப்பப்பட்டது. விவாதிக்கப…
-
- 0 replies
- 495 views
-