அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
ஜுலை 11, 2007. கடைசி கடைசியாக ஓர் ஆட்டம் ஆடிப் பார்த்துவிடலாம் என்று அப்துல் ரஷீத் காஜி முடிவு செய்தபோது, லால் (என்றால் சிவப்பு) மசூதி முற்றிலுமாகச் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. கூரைக்கு மேலே ஹெலிகாப்டர்கள். நிறைமாத கர்ப்பிணி மாதிரி அசைந்து, நகர்ந்து வரும் பீரங்கிகள். ராணுவம் உள்ளே வராது; காட்டுவதெல்லாம் வெறும் பாவ்லா என்றுதான் அந்த வினாடி வரை நினைத்திருந்தார்கள். பாகிஸ்தானின் சூழ்நிலை அப்படி. அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் இந்திரா காந்தி ராணுவத்தை அனுப்பிய மாதிரி இஸ்லாமாபாத்தில் முஷாரஃப் செய்துவிட முடியாது. நிற்கவைத்துக் கழுவிலேற்றிவிட ஒரு மாபெரும் கூட்டம் எப்போதும் தயாராக இருக்கிற தேசம். தவிரவும், அவர்கள் தனிநாடு கேட்கிற கோஷ்டியல்ல. இஸ்லாமியச் சட்டமான ஷரியத்தை,…
-
- 0 replies
- 1.3k views
-
-
கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித் தான் தீர்ப்பது? இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன? இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்ல…
-
- 4 replies
- 1.2k views
-
-
எஸ் எம் வரதராஜன் எனது மதிப்பிற்குரிய நண்பரும் கௌரவ அமைச்சருமான மனோ கணேசன் அவர்கள் பாராளுமன்றத்தில் எடுத்துள்ள படம் எனக்கு பல நினைவலைகளை வாசகர்களுடன் பகிரத் தூண்டியது . வீரகேசரி ஊடகவியலாளர் ஒருவரால் திரு மனோ கணேசன் அவர்கள் பிடிக்கப்பட்டுள்ள இப் படத்தில் அவரின் பின்னணியில் உள்ள சுவர் ஒன்றில் பல பிரமுகர்களின் படங்கள் தெரிவதைக் காணாலாம். பாராளுமன்றம் சென்றவர்களுக்கு இவை என்னவென்று தெரியும். நான் செய்தி சேகரிக்கப்பதற்காகாச் சென்றதில்லை . பல தடவை பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் (தகவல்/ ஊடகம்) பங்குபற்றச் சென்றிருக்கிறேன். இரண்டு அமைச்சர்கள் "மீடியா" அமைச்சர்களாக இருந்த வேளை சுயாதீன தொலைகாட்சி சார்பில் பங்குபற்றியுள்ளேன் . அந்நேரம் தொலைபேசியில் படம் எடுக்கும் வசதிகள…
-
- 0 replies
- 281 views
-
-
சுமந்திரனால் காலியாகும் “வீடு” – அகிலன் October 13, 2024 “வீட்டிலிருந்து வெளியே வர எமக்கு விருப்பமில்லை. ஆனால், அங்கு இப்போது ஒரு தனிநபரின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக் கின்றது. அந்த ஒருவரால் பலா் வெளியேறிக் கொண்டிருக்கின்றாா்கள். இறுதியாக கட்சித் தலைவா் மாவை சேனாதிராஜா கூட பதவியைத் துறந்துவிட்டாா்.” இது யாழ். மாவட்ட முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினா் ஈ.சரவணபவனின் கூற்று. தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனநாயக தமிழரசுக் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை அமைத்து யாழ். மாவட்டத்தில் களமிறங்கியுள்ள இந்தக் கட்சிக்கு பிரபல சட்டத்தரணி கே.வி.தவராஜா தலைமைதாங்குகின்றாா். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை இக்கட்சியின் சாா்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னா் சரவணபவன்…
-
-
- 6 replies
- 696 views
-
-
இலங்கையின் 7வது ஜனாதிபதியாக திரு. கோதாபயா ராஜபக்ஷ அவர்கள் தெரிவு செய்யப்பட்டது நாம் அனைவரும் நன்றாக அறிந்த ஒரு விடயம். இவர் கடந்த காலத்தில் அதாவது திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்க காலத்தில் பல முக்கிய பங்களிப்பினை வழங்கியதன் மூலம் பெரும்பாலான மக்களின் செல்வாக்கினை தன்னகத்தே கொண்டு ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்து வந்தார். இவர் கடந்த காலங்களில் ஒருமுறையேனும் தேர்தலில் போட்டியிடாமல் பல அதி உயர் பதவியில் அரச நிருவாகத்தில் கடமையாற்றி வந்திருந்தார். இவரின் கடந்த கால வெற்றி நோக்கிய திட்டத்தின் காரணமாக மக்கள் இவரை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்க பல அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தனர். அதுமாத்திரமல்லாது அவர் ஒரு பூரண இலங்கைப் பிரஜையா? இல்லையா? போன்ற பல எதிர் வாதங…
-
- 0 replies
- 584 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஒரு பலமான வெளியுறவுக் கட்டமைப்புத் தேவை – நிலாந்தன்.. March 7, 2020 Dan Saelinger illustration for Foreign Policy ஐக்கிய நாடுகள் சபை என்பது அரசுகளின் அரங்கம். ஆனால் இந்த உலகம் அரசுகளால் மட்டும் ஆனதல்ல. அரசுகளுக்கும் வெளியே மிகப்பெரிய பொதுசனத் தளம் ஒன்று உண்டு. அதற்குள் மத நிறுவனங்கள் ஊடகங்கள் படைப்பாளிகள் துருத்திக்கொண்டு தெரியும் முக்கிய ஆளுமைகள் பொது நிறுவனங்கள் சிவில் நிறுவனங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் கருத்துருவாக்கிகள் ஆய்வு நிறுவனங்கள் கொள்கை ஆய்வு நிறுவனங்கள் போன்ற அனைத்தும் இந்தப் பெரும்பரப்பிற்குள் அடங்கும்.அரசுகளை தெரிந்தெடுப்பதற்கு வேண்டிய பொதுசன அபிப்பிராயத்தை இப்பொது சனப் பரப்ப்பே உருவாக்குகின்றது. …
-
- 0 replies
- 380 views
-
-
விஜய்யின் அரசியல் யாருக்கானது? யாருடைய வாக்குகளைக் குறிவைத்தது? 12 Oct 2025, 7:00 AM பாஸ்கர் செல்வராஜ் கரூரில் நடைபெற்ற விஜய் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது எதிர்பாராத விபத்தா? அந்தக் கூட்டத்தைக் கூட்டியவர்களின் பொறுப்பற்ற அரசியல் நோக்கம் செய்த கொலையா? என்றுதான் அந்த விவாதம் சென்று இருக்க வேண்டும். அப்படியான விவாதம் கூட்டத்தை நடத்திய விஜய்யைக் குற்றவாளி ஆக்கி அவரது அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து இருக்கும். அதனைத் தவிர்க்க அரசியல் சமூக ஊடக வலிமையைக் கொண்டு அரசின் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கை குறைபாடுகளால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பதாக விவாதத்தைத் திசைதிருப்பி திமுக அரசைப் பொறுப்பாக்கி முதன்மைக் குற்றவாளி…
-
- 0 replies
- 174 views
-
-
ஐ. நா மனித உரிமை சபையும் ஈழ தமிழரும் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபையின் 32 ஆவது கூட்டத் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், இம் மனித உரிமை சபையில் நேர்மையாக விசுவாசமாக திடகாத்திரமாக தமிழ் மக்களுக்கான நீதிக்கு, அரசியல் உரிமைகளுக்கும் எதிர்காலத்தில் என்ன செய்யமுடியும், என்ன செய்யலாம் என்பது மிகவும் முக்கியம். நாம் கடந்த இரண்டரை தசாப்தங்களாக ஐ.நா.மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது மட்டுமல்லாது, இதனால் ஏற்படும் நன்மை தீமைகளின் பங்காளிகளாகவும், பகைவர்களாகவும் திகழ்ந்து வருகின்றோம். நாம் 1990 ஆம் ஆண்டு இச் செயற்பாடுகளில் ஆரம்பத்திலிருந்து, அன்றும் இன்றும் என்றும் மாறுபட்ட அரசுகள் எம்மை ஓர் பக…
-
- 0 replies
- 392 views
-
-
தேர்தல் சட்ட மீறல்கள், விதி மீறல்கள் பற்றிய சில முறைப்பாடுகள் இருந்தாலும், பொதுவாக நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்திருக்கிறது.[ கடந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாகவும் நீதியான முறையிலும் நடத்தப்பட்டடது போலவே, பொதுத் தேர்தலும், நடத்தப்பட்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பொதுத் தேர்தல் ஒன்று தொடர்பான விவகாரங்களில் ஜனாதிபதியோ பிரதமரோ எந்த தலையீடும் செய்யவில்லை என்று பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி தெரிவித்திருந்தார். இது இலங்கையில் தேர்தல் நடத்தப்படும் முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் காட்டுவதாக இருக்கிறது. ஆனால் இது முழுமையான ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி உள்ளது. பிரதமர் மக…
-
- 1 reply
- 787 views
-
-
இஸ்ரேலிய அடிப்படைவாதிகள் பாலஸ்தீனர்களுடன் நிரந்தரமான அமைதி ஒப்பந்தம் ஒன்றை எழுதி அதில் முறைப்படி கையொப்பமிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர். மேற்கண்ட கருத்தை இப்போதைய இஸ்ரேலிய பிரதமரான பென்ஜமின் நெட்டன்யாகுவின் அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கும் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் அவிக்டோர் லிபர்மான் தெரிவித்துள்ளார். நிரந்தரமான சமாதான ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதைவிட தற்காலிகமான சமாதான ஒப்பந்தம் ஒன்றை எழுதி அதில் கையெழுத்திட்டால் இஸ்ரேலிய யூத அடிப்படைவாதிகளை சமாதானம் செய்ய முடியும் என்று கருத்து வெளியிட்டுள்ளார். ஊல்ரா நாஷனல் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த தை 22ம் திகதி தமது கட்சிக்கு அதிக ஆதரவு கிடைக்காததைத் தொடர்ந்து சிறிய மாற்றமடைந்துள்ளமை தெரிகிறது. வர…
-
- 0 replies
- 642 views
-
-
வெளிக் கிளம்பும் பூதங்கள் கிணறு வெட்டப்போய், பூதம் கிளம்பிய’ கதைபோல, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் எதிர்பாராத, ஆச்சரியமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அளிக்கப்படும் சாட்சியங்கள், இதற்குப் பின்னால் பெரியதொரு வலைப்பின்னலும் மறைகரமும் இருந்திருக்கின்றன என்ற சந்தேகத்தை, மேலும் வலுவடையச் செய்து கொண்டிருக்கின்றன. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் மிகப் பாரதூரமானவை. இதனால் ஏற்பட்ட உயிர், உடமை இழப்புகளும் அதன் பின்னர் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட நம்பிக்கைய…
-
- 0 replies
- 669 views
-
-
மீண்டும் எழுந்துள்ள படைக்குறைப்பு கோரிக்கை இலங்கையில் மேற்கொண்ட பத்து நாட்கள் பயணத்தின் முடிவில் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், வடக்கில் படைக்குறைப்பு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடியா. போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும், வடக்கில் அதிகளவு படையினர் நிலை கொண்டிருப்பதையும், அதனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளையும் அவர் தனது பயணத்தின் போது நேரடியாக கண்டிருக்கிறார். பல்வேறு சந்திப்புகளின் மூலம் கேட்டறிந்து கொண்டிருக்கிறார். இத…
-
- 0 replies
- 495 views
-
-
தமிழ்த் தேசியத்தின் திரிசங்கு நிலை -ஆர்.ராம்- 2020பொதுத்தேர்தலின் பின்னரான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருந்த சேனாதிராஜா சுமந்திரன் ‘அணி’ முரண்பாடுகளும், அதனால் அக்கட்சியின் தலைவராக இருக்கும் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், சுமந்திரன், சிறிதரன் போன்றவர்களுக்கும் இருந்த ‘அரசியல் உறவில்’ ஏற்பட்ட ‘வெடிப்புக்களும்’ பகிரங்கமானவை. சேனாதிராஜா தேர்தலில் பின்னடைவுகளைச் சந்தித்திருந்த சொற்பகாலத்திலேயே தமிழரசுக்கட்சியின் தலைவர் பாத்திரத்திலிருந்தும் அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலில் இருந்தும் அகற்றப்படவுள்ளரா? என்ற சூழல் ஏற்பட்டிருந்தது. இத்தருணத்தில் ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்று பதிலுரைத்து அவர…
-
- 2 replies
- 944 views
-
-
இதயத்தால் சிந்தித்த சில எண்ணங்கள் (இடிந்தகரைக் கடிதம்-2) இடிந்தகரை மார்ச் 28, 2013 அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களே: வணக்கம். கூடங்குளம் போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட 600 நாட்கள் ஆகிவிட்டன. நானும், நண்பர்கள் ராயன், மை.பா., முகிலன், மில்டன், கெபிஸ்டன் உள்ளிட்டோர் இடிந்தகரைக்குள் முடக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் 18-ஆம் நாள், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடந்த அன்று, வைராவிக்கிணறு கிராமம் நோக்கி ஒரு பேரணி நடத்திக் கொண்டிருந்தோம். சரியாக மாலை 4:45 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, “ஆட்சித்தலைவர் டாக்டர் செல்வராஜ் உங்களையும், அருட்தந்தை செயக்குமார்…
-
- 0 replies
- 701 views
-
-
எதை வலியுறுத்துகிறது ரவிராஜ் படுகொலை ‘தீர்ப்பு’? நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகம் மனோ திட்டவெல மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் செயலாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் பிரதான பேச்சாளர்களாகக் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்வொன்று, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றது. ‘நிலைமாறு கால கட்ட நீதி’ என்கிற விடயத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சாத்தியப்பட்டுள்ள மற்றும் சாத்தியப்படாமல் போயுள்ள விடயங்கள் பற்றி அங்கு உரையாடப்பட்டது. அங்கு பார்வையாளராகக் கலந்…
-
- 0 replies
- 399 views
-
-
புத்தரின் பெயரால் தொடரும் ஆக்கிரமிப்பு அரசியல் புருஜோத்தமன் தங்கமயில் குடும்பத்தையும் ஆட்சி உரிமையையும் துறந்து, மெய்ஞான வாழ்வைத் தேடிய சித்தார்த்தன், ஒருநாள் ‘புத்தர்’ ஆனார். “ஆசையே துன்பத்தின் அடிப்படை” என்று, இந்த உலகத்துக்குப் போதித்த புத்தரின் பெயரால், ஆக்கிரமிப்பும் அடாவடித்தனமும் முன்னெடுக்கப்படுவது என்பது, புத்தனின் போதனைகளுக்கு முற்றிலும் முரணானது. வடக்கு, கிழக்கில் வலிந்த சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக, காலங்காலமாக அரச நிறுவனங்களையும் ஆயுதப் படைகளையும் தென் இலங்கை ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றைக்கு புத்தரின் திருவுருவச் சிலைகளையும் ஆக்கிரமிப்புக் கருவியாக முன்னிறுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அரச மரத…
-
- 0 replies
- 508 views
-
-
திருவிழா முடிந்தது: இனி என்ன செய்யலாம்? -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த ஒரு மாத காலமாகக் களை கட்டிய ஜெனீவாத் திருவிழா, ஒருவாறு செவ்வாய்கிழமை (23) முடிவுக்கு வந்துவிட்டது. இதில் வெற்றியாளர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலை நாமறிவோம். அது, நிச்சயமாகத் தமிழர்களோ அரசாங்கமோ அல்ல! ஆசியாவின் மீதான ஆவலின் விளைவால், உதித்துள்ள பூகோளஅரசியல் ஆட்டத்தின் ஒரு கட்டமே ஜெனீவாவில் அரங்கேறியது. வாக்குகள் எவ்வாறு அளிக்கப்பட்டன என்பதைப் பார்ப்பதன் மூலம், அதை இலகுவில் புரிந்துவிட முடியும். இலங்கை, இன்று பாரிய நெருக்கடிக்குள் இருக்கிறது. இதன் மோசமான விளைவுகளை இலங்கையர்கள் அனைவரும் எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக, பொருளாதாரச் சங்கிலியில் கீழ்நிலையில் உள்ளவர்கள், மோசமாகப் பாதிக…
-
- 0 replies
- 670 views
-
-
ஈக்குவடோர்: இன்னொரு லெனினின் வருகை - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நாடுகள் அளவில் சிறியதாய் இருந்தாலும் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பிராந்தியத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிடும். தன்னளவில் அரசியல் ரீதியான கவனம்பெறுவதற்கு, நாட்டின் நிலப்பிரதேசத்தின் அளவோ சனத்தொகையின் அளவோ முக்கியமல்ல என்பதைப் பல உதாரணங்கள் தொடர்ந்தும் நிறுவியுள்ளன. அரசியலில் ‘அலை’ ஒரு முக்கியமான குறிகாட்டி. குறித்த ஒரு திசைவழியில் அரசியல் அலை வீசத் தொடங்குகின்ற போது, அது நாட்டின் எல்லைகளைக் கடந்து வீசும். அவ்வாறான ஒரு சூழலில் அவ்வலைக்கு எதிராகப் பயணித்தல் மிகக் கடுமையான காரியம். அதைச் செய்ய இயலுமானவர்கள், பல தருணங்களில் உலக அரங்கின் எதிர்காலத…
-
- 0 replies
- 487 views
-
-
வடக்கு கிழக்கு இணைப்பு: நிலைமாற கூடாத நிலைப்பாடுகள் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் இழுபறியாகிக் கொண்டிருக்கின்ற ஓர் அரசியல் பின்புலத்தில், அதுபோன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசியமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்ளும் முயற்சியும் பாரிய சவாலை எதிர்நோக்கியிருக்கின்றது. ஆகையால், அதனோடு தொடர்புடைய மற்றைய விடயமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு இன்னும் சாத்திமற்றதாகத் தெரிகின்றது. நிலைமை இவ்வாறிருக்கையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளரும் உத்தேச முஸ்லிம் கூட்டணியின் முக்கியஸ்தருமான எம்.ரி.ஹசன் அலி, இணைந்த வடகிழக்கே முஸ்லிம் கூட்டணியின் இலக்கு எனக் குறிப்பிட்டதாக வெளியான செய்தியும…
-
- 0 replies
- 549 views
-
-
குர்திஷ் பொதுசன வாக்கெடுப்பு: தனிநாடு என்ற சூதாட்டம் ஒடுக்குமுறைக்காளாகிய சமூகங்கள் போராடுகின்றபோது, அதன் இறுதி இலக்காகத் தனிநாட்டைக் கொள்வது இயல்பு. இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்த, கொலனியாதிக்க விடுதலைப் போராட்டங்கள், பலநாடுகள் விடுதலையடையவும் புதிய நாடுகள் தோற்றம் பெறவும் உதவின. கெடுபிடிப்போரின் முடிவு, நாடுகள் பிரிக்கப்பட்டு, புதிய நாடுகள் பலவற்றின் தோற்றத்துக்கும் வழிவகுத்தது. புதிய நாடு இவ்வாறுதான் தோற்றம் பெறவேண்டுமென்ற சூத்திரமெதுவும் இல்லை. கடந்த சில தசாப்தங்களாகப் பல்வேறு காரணங்களினால் நாடுகளில் இருந்து, பிரிந்து சென்று, புதிய நாடுகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. அதேவேளை, சில நியாயமான விடுதலைப் போராட்டங்கள்,…
-
- 0 replies
- 478 views
-
-
மே18 இல் ‘புலிகள்’ ஏன் வந்தார்கள்? -லக்ஸ்மன் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் என்பது சிங்கள மக்களை நிச்சயமாக கிலி கொள்ள வைக்கும் விடயம்தான். ஆனால், ஏன் அதனை இந்த நேரத்தில் இந்தியா செய்தது என்பதுதான் இந்த இடத்தில் கேள்வி. அதே நேரத்தில், அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கும் வகையிலேயே, இந்தப் புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுகிறது என்பதுதான் பொதுவான விமர்சனமாகும். மே18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஷ்டிக்கக்கூடிய நிலைமை உருவாகியிருந்தது. இந்த நிலைமையானது, தமிழ் மக்களின் நீண்டகால போராட்டத்துக்கும் அவர்கள் அனுபவித்த வலிகளுக்கும் ஒரு நிம்மதியான நிலையை ஏற்படுத்தும் என்பது உண்மை. இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொ…
-
- 0 replies
- 419 views
-
-
அண்மையில் யாழ்ப்பாண மாணவர் பேரவை வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் வரும் ஜனாதிபதிதேர்தலை தமிழ்மக்கள் புறக்கணிக்கவேண்டும் எண்டு தெரிவித்திருந்தார்கள்,, இது பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்,,,வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? :!: :?:
-
- 29 replies
- 6.1k views
-
-
சமாதானமும் சுபீட்சமும் மிக்க இலங்கையை உருவாக்குவதே நோக்கம் எமது நாட்டுக்கான அரசியலமைப்புச் சட்டவாக்கம் தொடர்பாக அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்ட வழிகாட்டல் குழுவினால் அரசியலமைப்புச் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை நாம் விவாதித்துக்கொண்டிருக்கின்றோம். இது மிக முக்கியமான ஒரு விவாதமும் வரலாற்றுச் சிறப்பான விவாதமுமாகும். எமது முதலாவது அரசியலமைப்பு சோல்பரி அரசியலமைப்பாகும். அது பிரித்தானியர்களினால் ஆக்கப்பட்டது. - அதன்கீழ் நாம் சுதந்திரம் பெற்றோம். இரண்டாவது அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பாகும்: முதலாவது குடியரசு அரசியலமைப்பு. …
-
- 1 reply
- 411 views
-
-
கூட்டமைப்புக்குள் பிளவு மக்களை பாதிக்குமா? பல மாதங்கள் அல்ல; பல வருடங்களாக நீடித்து வந்த, உட்பூசலொன்றின் உச்சக் கட்டத்தை எடுத்துக் காட்டும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கடந்த வாரம், பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு அறிவித்தது. கடந்த 12 ஆம் திகதி, யாழ்ப்பாண பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் பின்னர், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கூட்டாக ந…
-
- 0 replies
- 293 views
-
-
மோடியின் வெற்றியும் இந்திய-இலங்கை உறவும் - யதீந்திரா நரேந்திர மோடி - இன்றைய சூழலில் இலங்கை அரசியல் சூழலில் மட்டுமல்ல, சர்வதேச அரசியல் சூழலிலும் உன்னிப்பாக நோக்கப்படும் ஒரு பெயராகும். இதற்கு என்ன காரணம்? இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தோல்வியடையும் என்பதும் நரேந்திர மோடியின் தலைமையில் பி.ஜே.பி வெற்றிவாகை சூடும் என்பதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே! ஆனால் பி.ஜே.பி, கூட்டணிக் கட்சிகளின் துணையின்றி தனித்து ஆட்சியமைக்குமளவிற்கு தனிப்பெரும்பான்மையை பெறும் என்பதை எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. மேற்படி வெற்றிதான் அனைவரது பார்வையும் மோடியின் மீது திரும்புவதற்கான காரணமாகும். மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்தியாவின் முற்போக்கு சக்திகள் என்…
-
- 1 reply
- 873 views
-