Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழர்கள் தமது கதைகளை தூர நோக்கோடு கூறவேண்டும் Prof- John Galtung தமிழில்… வி . சிவலிங்கம் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா மூன்று தடவைகள் ஜெனிவாவில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. மேற்குலக நாடுகள் இத் தீர்மானத்தைப் பலமாக ஆதரிக்கின்றன. இறுதி தீர்மானத்தின்போது இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்திருக்கிறது. ரஷ்யா, சீனா போன்றன எதிராக வாக்களித்துள்ளன. இப் பிரச்சனையில் பாரிய நாடுகளின் கவனம் திரும்பவதற்குக் காரணம் என்ன? உலகில் 2000 இற்கு மேற்பட்ட தேசியங்கள் உள்ள நிலையில் சுமார் 200 அரசுகள் மட்டுமே உள்ளன. அவ்வாறானால் அரசுகள் இல்லாத தேசியங்கள் மிகப் பெரும் தொகையாக உள்ள நிலையில் இரண்டு பெரும் தேசியங்கள் உள்ள இலங்கையில் எவ்வகையான தீர்வை நோக்கிச் செல்வது? இவ்வாறான…

  2. ஸ்கொட்லாந்தின் அனுபவத்திலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை.. நிலாந்தன்:- 21 செப்டம்பர் 2014 ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து போக வேண்டுமா, இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் பின்னணியில் இக்கட்டூரை எழுதப்படுகிறது. ஸ்கொட்டிஷ; மக்களின் முடிவு எதுவாகவும் இருக்கலாம். ஆனால் தமது தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதற்குரிய ஓர் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே இங்கு முக்கியம். தென்சூடானியர்களுக்கும் கிழக்குத் தீமோரியர்களுக்கும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சில மக்கள் கூட்டத்தினருக்கும் அவ்வாறு தமது தலைவிதியை தாமே தீர்மானிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஈழத்தமிழர்களுக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் வழங்க…

  3. சிவப்பாகும் இலங்கை - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தேவ அபிரா :- 22 செப்டம்பர் 2014 இன்று முகப்புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது வவுனியா இறம்பைக்குளத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழ்ப்பெண் போல் உடையணிந்த சீனப்பெண் ஒருவர் பாடசாலைச் சிறுவர்களுடன் நிற்கும் படத்தைக் காண நேர்ந்தது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்குப் பிறகு தமிழ்ச் சமூகம் வெளி உலகுடன் நேரிடையாகத் தொடர்பாடலை நிகழ்த்தி வருகிறதென்பது வெள்ளிடை மலை. ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் சீனத் தோற்றம் கொண்ட சில பிக்குகள் யாழ்நகர வீதிகளில் றாபானைத்தட்டிக் கொண்டு சென்றது நினைவுக்கு வருகிறது. அவர்கள் அரசின் உளவாளிகள் எனக்கருதப்பட்டுப் போராளிகளால் கைது செய்யப்பட்டதும் நினைவுக்கு வருகிறது. இந்தச…

  4. அதிகாரத்தை பகிர மறுப்பது தமிழீழத்திற்கு வழிவகுக்குமா? வட மாகாண சபை - இன்றுடன் ஒருவருடம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் ஆட்சி அமைத்து இன்றுடன் ஒரு வருடமாகின்றது. வட மாகாண சபையுடன் இனப்பிரச்சினையை முடக்கி விடலாம் என எதிர்ப்பார்த்த இலங்கை அரசின் எண்ணம் ஈடேறவில்லை. இலங்கை இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்கும் முகமாக இலங்கை அந்திய ஒப்பந்தத்தின்படி 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்று அமைக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் 25 வருடங்களின் பின்னர் பிரிக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கான…

  5. ஸ்கொட்லாந்து பிரிவினையின் பின்புலம் – சில குறிப்புக்கள் : சபா நாவலன் அத்லாந்திக் சமுத்திரத்தின் உள்ளே தலையை நுளைத்து பிரித்தானியாவை உதைத்துக்கொண்டிருக்கும் அழகிய குடாநாடு தான் ஸ்கொட்லாந்து. ஏறக்குறைய 790 தீவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அழகான தேசம். பிரித்தானியாவின் இன்னொரு அங்கமான இங்கிலாந்திலிருந்து பயணித்தால் அழகிய நீண்ட மலைகளும் அருவிகளையும் அண்மித்த லேக் டிஸ்ரிக்கைத் தாண்டும் போதே ஸ்கொட்லாந்து எல்லைய அடைந்துவிட்டதாக உணரலாம். எடின்பரோ ஸ்கொட்லாந்தின் தலை நகரம். விசாலமான வீதிகளும், விண்ணைத் தொடத கட்டடங்களும் ஆர்ப்பாட்டமில்லாத தலை நகரம் ஒன்றை அறிமுகப்படுத்தும். கிளாஸ்கோ ஸ்கொட்லாந்தின் தொழில் நகரம். உலகில் அதிகம் பணப்பரிவர்த்தனை நடைபெறும் நகரங்களில் கிளாஸ்கோவைய…

  6. சம்பந்தன் ஜயாவின் காலம் - யதீந்திரா படம் | Monsoonjournal தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களுக்குப் பின்னர் ஒரு அடைமொழியுடன் நோக்கப்பட்ட ஒரு தலைவர் என்றால் அது இராஜவரோதயம் சம்பந்தன் ஒருவரேயாவார். செல்வநாயகம் ‘தந்தை’ என்று விழிக்கப்பட்டது போன்று, சம்பந்தன் ‘ஜயா’ என்று விழிக்கப்படுகின்றார். ஜயாவின் காலத்தில் என்ன நிகழும்? கடந்த அறுபது வருடங்களாக இப்படியொரு கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் உலவியவாறே இருக்கிறது. எப்பொழுதுதான் இதற்கொரு முடிவு வரப்போகிறது? இப்படியொரு கேள்வி தொடர்வதற்கான காரணங்களை நாம் மற்றவர்களுக்குள் தேட முடியாது. ஏனெனில், அதற்கான காரணங்கள் வெளியில் இல்லை. தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் சம்பந்தன் குறிப்பி…

  7. இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை கடிவாளத்தை கையில் எடுத்துள்ளார். தலையணை ஒன்று உறை வித்தியாசம் என்பது போல தமிழ்த் தேசியத்தின் கொள்கையும் கோட்பாடும் ஒன்றே. அந்த வகையில் தேசியக் கட்சிகளின் தலையும் தலைமைத்துவமும் மாறுகின்ற போது ஏற்படக்கூடிய எதிர்பார்ப்பு விடுதலை உரிமைப் போராட்டம் நடத்துகின்ற கட்சிகளுக்கு இருக்க முடியாது. இது ஒருவகை அஞ்சலோட்டம் போன்றது. தடியை மற்றவரிடம் கைமாற்றுகின்ற போது கையிலெடுத்துக் கொள்பவர் ஓட வேண்டியதுதான். வெற்றியில்லாத நீண்ட அஞ்சலோட்டமாக மாறியிருக்கும் தமிழ்த் தேசியப் போராட்டத்தில் சமகாலத்தில் தடியை கையிலெடுத்திருப்பவர் மாவை என்று கூறலாம். தனக்கு ஆப்பு வைப்பதற்கு முன்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியை தம்மகப்படுத்தி காத்துக் கொண்ட ஆனந்…

  8. புலம்பெயர் தமிழர்களுக்கான இந்தியாவின் செய்தி! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பலதரப்பினருக்குமான செய்திகளை கொண்டு வந்திருக்கிறது. ஈழத்திலுள்ள தமிழ் மக்கள், தமிழ் அரசியற்கட்சிகள், இலங்கை அரசாங்கம், புலம்பெயர் தமிழர்கள் என்று எல்லோருக்குமான விசேட செய்திகளை நரேந்திர மோடி அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது வெளியிட்டிருக்கிறது. அந்தச் செய்திகளில் அநேகமானவை இந்தியாவினால் ஏற்கனவே சொல்லப்பட்டதுதான். இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வாக, ‘இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் அதற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிரல்’ என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோள்க…

  9. தமிழரசுக் கட்சி விதித்திருக்கும் காலக்கெடு... - நிலாந்தன் 14 செப்டம்பர் 2014 இவ்வாண்டு முடிவுக்குள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இவ்வாறான அறைகூவல்களை விடுப்பது இது தான் முதற் தடவையல்ல. காலக்கெடு விதித்து ஒரு போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருப்பதும் இது தான் முதற் தடவையல்ல. ரெலோ இயக்கத்தின் தலைவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை தொடங்க போவதாக அறிவித்திருந்ததை இங்கு நினைவுகூரலாம். எனினும் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளில் மிகப்பெரியதும் பல தசாப்த கால வரலாற்றையும் பாரம்பரியத்தையும்; கொண்டிருப்பதுமாகி…

  10. வன்னிப் போரைப் பற்றிய மூன்றாவது கதைக்கூற்று சாந்தி சச்சிதானந்தம் படம் | Eyesrilanka சமீபத்தில் தென்னிலங்கையின் புத்திஜீவிகள் சிலர் ஒன்றிணைந்து வன்னி யுத்தத்தினைப் பற்றி வெளியிட்ட தமது “மூன்றாவது கதைக்கூற்று” (The Third Narrative) தொடர்பாக எழுதலாம் என்று நினைக்கின்றேன். “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என பாரதி சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப வரலாற்றில் நிறுவப்படுவதை நாம் காண்கின்றோம். ஆய்வுகளும் அறிவுருவாக்கமும் நாம் நினைப்பதைப் போன்று நடுநிலையான நடவடிக்கைகளே அல்ல. ஒவ்வொரு ஆய்வும் அதன் மூலம் வெளியிடப்படும் புதிய கோட்பாடுகளும் எல்லாமே ஒரு குறிப்பிட்ட கருத்தியலினை அடிப்படையாக வைத்து புனையப்பட்டவைதான். இந்தக் கண்ணோட்டத்துடன்தான் இப்பொழுது மார்கா ந…

  11. இராஜதந்திர அரசியலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் - யதீந்திரா படம் | Reliefweb பொதுவாக இராஜதந்திரம் என்பதன் பொருள் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. தேசங்களுக்கு இடையிலான பேச்சுகளை நடத்துவதற்கான ஒரு (பயற்சியுடன் கூடிய) கலையே இராஜதந்திரம் எனப்படும். இதனை மிகவும் எளிமைப்படுத்தி கூறுவதானால், ஒரு அரசு தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலனை முன்னிறுத்தி, அந்நிய அரசுகளுடன் மேற்கொள்ளும் உறவை இராஜதந்திரம் என்று வரையறுக்கலாம். இதனை இன்னும் சுருக்குவதானால் அரசுகளுக்கு இடையிலான நலன்களை கையாளும் கலையே இராஜதந்திரம் எனப்படும். எனவே, பொதுவான நோக்கில் இராஜதந்திரம் என்பது அரசுகளுக்கான ஒன்றேயன்றி அரசியல் கட்சிகளுக்கு உரிவையல்ல. ஆனாலும், அரசுகளுக்கும், அரசுகளுக்கும் இடையிலான உறவ…

  12. கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்-கொய்தாவின் தற்போதைய தலைவராக அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளால் கூறப்படும் அய்மான் அல் ஜவாகிரி இணையதளத்தில் அவிழ்த்து விட்ட வீடியோ காட்சி இந்திய தீபகற்பத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பர்மா ஆகிய இந்திய தீபகற்ப நாடுகளில் அல்-கொய்தா இயக்கத்தை வளப்படுத்துவதற்காக இந்தியாவை மையமாக கொண்டு காயிதத்-அல்-ஜிஹாத் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் இந்த அமைப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஆசிம் உமர் தலைமை வகிப்பார் என்றும் அந்த வீடியோ காட்சியில் அய்மான் அல் ஜவாகிரி பேசுவதாக தயார் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவால் கிளப்பி விடப்பட்ட இந்த அல்-கொய்தா சினிமாவிற்கு திரைக்கதை எழுதியது யார், இயக்கியது யார் என்பது…

  13. மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும். மீள்குடியேற்ற நடவபடிக்கைகள் பயனுள்ளதாக மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இனவிகிதாசாரத்தை மாற்றியமைப்பதற்கான அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும். இனப்பிரச்சினைக்கு சர்வதேச பிரசன்னத்துடன் கூடிய, ஆக்கபூர்வமான குறுகிய காலப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு முக்கியமாக வலியுறுத்தியிருக்கின்றது. கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு என்பதற்காகவோ என்னவோ தெரியவில்லை, முக்கியமான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்தத் தீர்மானங்கள் முதலில் பேராளர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட…

  14. இன அழிப்பை தடுக்க சர்வதேச விசாரணை தேவை: தீபச்செல்வன்:- 09 செப்டம்பர் 2014 இலங்கை அரசாங்கம் ஈழ மக்களுக்கு எதிரான யுத்தத்தில் மிகவும் கொடிய போர்க்குற்றங்களை இழைத்து மாபெரும் இனப்படுகொலை ஒன்றை செய்துள்ளது. இதற்கான மிகவும் நம்பகரமான ஆதாரங்கள் பல்வேறு ஊடகங்களால் வெளியிடப்பட்டு அவற்றின் நம்பகத் தன்மை துறைசார்ந்த வல்லுனர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை உலகமெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் குறிப்பிட்டு போராட்டங்களை நடத்தியபோதும் மனித உரிமை மீறல்கள் என்றும் போர்க்குற்றங்கள் என்றுமே ஐ.நாவும் சில நாடுகளும் அடையாளப்படுத்தும் நிலையில் எப்படியான விசாரணையையும் அனுமதிக்க முடியாது என்ற நிலையை இலங்கை அரசாங்கம் பல்வேறு வகையிலும் வெளிப்படுத…

  15. வரதராஜ பெருமாள் - ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டவர். புலிகளின் கொலைப் பட்டியலில் அவர் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் அங்கிருந்து தப்பினார். எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த சூழலில் அவரைச் சென்னையில் சந்தித்தோம். ''இத்தனை ஆண்டுகள் எங்கேதான் இருந்தீர்கள்?'' ''11 வருடங்கள் ராஜஸ்தானிலும் பத்து வருடங்கள் டெல்லியிலும் இருந்தேன். இலங்கையில் இருந்திருந்தால் இப்போது நான் இருந்திருக்க மாட்டேன். ராஜீவ் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக இருந்ததால், என்னைக் கொல்வதும் இந்தியாவை அடிப்பதும் ஒன்று என புலிகள் கருதினார்கள். தலைமறைவாக இரு…

  16. இந்தியா சொன்னது என்ன? - யதீந்திரா நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டடைப்பின் புதுடில்லி விஜயம் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது. இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவல் மற்றும் இந்திய வெளிவிவகார செயலர் சுஜாதா சிங் ஆகியோரை சந்தித்தித்து பேசியிருக்கின்றனர். இதில் பிரதமர் மோடியுடனான சந்திப்பே முக்கியமானது. கூட்டமைப்பின் புதுடில்லி விஜயம் தொடர்பில் தெற்கில் உள்ள அரசியல் விமர்சகர்கள் பல்வேறுபட்ட பார்வைகளை பதிவு செய்திருக்கின்றனர். ஒரு சிலரோ கூட்டமைப்பின் புதுடில்லி விஜயத்தால் அரசு எரிச்சலடைந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். …

  17. தமிழ் புத்திஜீவிகள் தளத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் ஜெரா படம் | Channel4 தமிழ் பரப்பில் இயங்கும் புத்திஜீவிகள் தளம் எப்படியானது? அது தன் பெயரில் முன்னொட்டாகக் கொண்டிருக்கும் புத்தி அதாவது, அறிவுக்கும் அதன் ஜீவித நிலைத்திருப்புக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? கடந்த 30 வருடங்களாக இயங்கும் இந்தப் புத்திஜீவிகள் தளத்தை அவதானிக்கும் ஒருவருக்கு இந்தச் சந்தேகங்கள் எழுவது சாதாரணமான விடயம்தான். புத்திஜீவிகள் யார்? குறித்த ஒரு சமூகத்தின் ஒருவகைப் பிரதிநிதிகள். அதாவது, அரசியல் தலைவர்களுக்கும் அந்த சமூகத்துக்கும் இடையில் நிற்கும் இடையீட்டாளர்கள். அதற்குள் நின்று தொடர்ச்சியாகத் தொழிற்படுபவர்கள். ஒட்டுமொத்த சமூகத்தினதும் அறிவுப் பெட்டகமாகக் கொள்ளத்தக்கவர்கள். அவர்கள் நடம…

  18. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் பதவியேற்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து திருப்தியான கருத்து வெளிவந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன், பக்கச்சார்பின்றி நடந்துகொள்வார் என்றும் இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாகச் செயற்படுவார் என்றும் கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டிருந்தார் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல. அவர் இத்தகைய கருத்து வெளியிட்டதற்கு, கடந்த மாதம் 31ஆம் திகதியுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற நவநீதம்பிள்ளை மீதிருந்த வெறுப்புத்தான் காரணம். இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியான 2008ஆம் ஆண்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பதவியை பொறுப்பேற்ற நவநீதம்…

  19. ராஜதந்திரப் போர் எனப்படுவது - பின்நோக்கிப் பாய்வதல்ல... நிலாந்தன்:- 31 ஆகஸ்ட் 2014 இந்திய பிரதமரை கூட்டமைப்பினர் சந்தித்திருக்கிறார்கள். வழமை போல இந்தியா 13 ஆவது திருத்தத்தையே தீர்வாக முன்வைத்திருக்கிறது. மோடி வந்தால் மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்திருந்த தமிழர்களில் ஒரு பகுதியினர், மோடியும் எங்களை கைவிட்டு விட்டார் என்று வழமைபோல சலிக்கத் தொடங்கி விட்டார்கள். அதே சமயம் மோடி வந்தால் என்ன? யார் வந்தால் என்ன? இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை மாறவே மாறாது என்று தாங்கள் தீர்க்க தரிசனம் உரைத்ததை இன்னொரு தரப்பினர் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் மாவை சேனாதிராஜா கூறுகிறார். மோடியோடு தாங்கள் கதைத்தவை எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது என்ற தொனிப்பட. அதாவது கூட்ட…

  20. மூலம்: globaltamilnews.net Roma Rajpal Weiss தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ஈசா:- Surge of radical Buddhism in South Asia - தெற்காசியாவில் பௌத்தத்தின் தீவிர எழுச்சி- Roma Rajpal Weiss தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ஈசா:- இலங்கையிலும் மியன்மாரிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ள மத வன்முறைகள் பௌத்த மதகுருமார் முஸ்லீம் எதிர்ப்பு வன்முறைகளை தூண்டுவது குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. யூன் 15ம் திகதி இலங்கையின் தென்பகுதியில் பௌத்தர்கள் முஸ்லீம்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களின் போது அளுத்கம, பேருவல, தர்ஹா நகர் பகுதிகளில் 3பேர் கொல்லப்பட்டதுடன் 85 பேருக்கு மேல் காயமடைந்தனர். பௌத்த துறவியை முஸ்லீம் ஒருவர் தாக்கிவிட்டார் என்ற வதந்தி…

  21. இந்தியாவு டன்பேசிய விடயங்களை வெளியிட முடியாது என்கிறார் மாவை இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக இந்தியாவும் வெளியிடமாட்டாது; நாமும் வெளியிட முடியாது. இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய கால கட்டம் இது. அதனைப் பின்பற்றி நாமும் செயற்பட வேண்டியமை மிகவும் அவசியமாகும். - இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. - செய்தி கொழும்பில் பேசிய சுப்பிரமணியசுவாமி வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டுமே தமிழர் கூட்டமைப்பை சந்திப்பார். பிரதமர் சந்திக்க மாட்டார் எனக் கொக்கரித்திருந்தார். இதுவே ராஜபக்சவினதும் சில அயல்நாட்டு அதிகாரிகளினதும் எதிர்பார்ப்பு. இப்போது மேல்மட்டச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்தியா அம…

    • 1 reply
    • 774 views
  22. மேற்குலக ஏகபோக அரசுகள் தமிழர்களுக்குப் போதிக்கும் இலங்கை அரசின் ஜனநாயகம் :செங்கோடன் தமிழ்த் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையைப் புறக்கணித்து தமிழர்களை ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே திணித்து இலங்கைக்கு போலிச் சுதந்திரத்தை வழங்கிய பிரித்தானிய அரசாங்கம், காலனியத்திற்குப் பிந்திய காலப்பகுதி முழுவதும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்வாதிகளாலும் பௌத்த மதகுருக்களாலும் பௌத்த தீவிரவாதம் வளர்க்கப்பட்டு ஈழ தமிழின மக்கள் அரச படைகளாலும் பிக்குகள் மற்றும் தென்னிலங்கை இனவாதிகளாலும் கொடுமைப்படுத்தப்பட்டு, பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி, எரிக்கப்பட்டு, கடத்தி சித்திரைவதைகளிற்கு உள்ளாக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்படும் போதும் அவர்களுடைய வரல…

    • 2 replies
    • 583 views
  23. சீமானும் தமிழ்த் தேசியமும் - நிலாந்தன்:- 24 ஆகஸ்ட் 2014 இரண்டு திரைப்படங்கள் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஓன்று புலிப்பார்வை, மற்றது கத்தி இவ்விரு திரைப்படங்களுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த காரணத்தால் சீமானும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த சீமானின் சடுதியான எழுச்சியோடு ஒப்பிடுகையில் அண்மை வாரங்களில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும் சடுதியானதே. சில வாரங்களுக்கு முன்புவரை முகநூலில் ஒரே அணியில் மிக நெருக்கமாக நின்று எதிர்த்தரப்பை ஈவிரக்கமின்றி தாக்கிய நண்பர்ககள் இப்பொழுது ஒருவர் மற்றவரை ஈவிரக்கமின்றி தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இன மான அரசியலில் சீமானின் எழுச்சி எனப்படுவது ஏனைய தமிழகத் தலைவர்களோடு ஒப்பிடுகை…

    • 2 replies
    • 801 views
  24. இந்திய தேசியமும் தமிழ் தேசியமும் B.R. மகாதேவன் இந்தியாவுக்கு 1947-ல் சுதந்தரம் தரும்போதே, அது நீண்ட காலம் சுதந்தர நாடாக நீடிக்காது/ நீடிக்கக்கூடாது என்பதே பிரிட்டிஷ் உள்ளிட்ட மேற்குலகின் எண்ணமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு சமஸ்தானமும் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேரலாம்; விரும்பினால் தனியாகவும் இருந்துகொள்ளலாம் என்று மிகவும் தாராள மனதுடன்தான் இந்தியாவை விட்டு வெளியேறியிருந்தார்கள். பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் கூட்டமானது விரைவிலேயே தமக்குள் அடித்துக்கொண்டு மடியும். பிரிட்டிஷாரின் மேலான ஆட்சியை வேண்டாம் என்று எதிர்த்தவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய முடியாது, அமைந்துவிடக்கூடாது என்பதே அந்த கனவான்களின் பெருவிருப்பமாக இருந்தது. ஏற்கெனவே இஸ்லாமியர்கள…

    • 3 replies
    • 874 views
  25. நிர்க்கதியான அரசியற்கைதிகளும் தமிழரின் போராட்டத்தின் போக்கும் – பாகம் 1 - 23 ஆகஸ்ட் 2014 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக இனியவன்:- இன்று அரசியற்கைதிகள் என்றால் யார் என்று கேட்குமளவிற்கு போரின் பிந்திய தமிழரின் அரசியற்போக்கு இருக்கும் இந்தக் கேவலமான சூழ்நிலையில் அரசியற்கைதிகள் என்றால் யார் என்ற கேள்வியிலிருந்தே இப்பத்தியினை எழுத வேண்டும். சுருங்கக்கூறின் சிங்களப் பேரினவாத அரசு யாரையெல்லாம் பயங்கரவாதச் சந்தேக நபர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் பட்டியற்படுத்தி சிறைகளிலும் தடுப்பு நிலையங்களிலும் அடைத்து வைத்திருக்கின்றதோ அவர்கள் எல்லோரும் அரசியற்கைதிகளாவார்கள். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஆயிரக்கணக்கான அரசியற் கைதிகள் மகசீன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.