Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஆட்சி மாற்றம் என்ற ஒன்றை சாதகமாகக் கொண்டு ஜெனிவா மனித உரிமைச் சபையின் விசாரணைகளை ஒத்திவைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் முயற்சி பயனளித்தாலும் அந்த விவகாரத்தை புதிய அரசாங்கம் எவ்வாறு கையாளவுள்ளது என்பது தொடர்பாக பௌத்த தேசியவாதம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது. -அ.நிக்ஸன்- தற்போதைய அரசியல் சூழலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பிரதானமாக மூன்று விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஓன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது. இரண்டாவது ஜெனீவா மனித உரிமைச்சபையின் அமர்வு ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள். மூன்றாவது வடமாகாண சபையின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணை. புதிய அரசாங்கத்தின் நிலை இந்த மூன்று விடயங்களும் புதிய அரசாங்கத்துக்கு சங்கடத்…

  2. அதிகாரப்பகிர்வுக்கு வந்துள்ள அச்சுறுத்தல் -என்.கண்ணன் ‘அதிகாரப் பகிர்வை சவாலுக்குட்படுத்தி விட்டு, சாதிய முரண்பாட்டைக் கிளறி, தப்பித்துக் கொள்ளும், அளவுக்கு யாழ்ப்பாணத்து அரசியல் சென்றிருக்கிறது’ மாகாண சபைகளை ஒழித்து விட்டு உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்து, தற்போதைய அரசாங்கத்திடம் வலுவாக உள்ள நிலையில், இதே அரசாங்கம் தான், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் காரியத்தில் இறங்கியிருக்கிறது. உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை மதிக்காமல், செயற்படும் மத்திய அரசின் நிர்வாக அமைப்புகள், இதற்கு சவால் விடும் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட ஆரம்பித்துள்ளன. வலிகாமம் கிழக்கு பிர…

  3. உரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம் - கவிஞர் தீபசெல்வன் இந்தப் பந்தியை எழுதத் துவங்கும் பொழுது, ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற நாள். கிளிநொச்சி நகரத்தில் பெரும் குரலுடன் நிரை நிரையாக சனங்கள் செல்லுகின்றனர். கறுப்புக் கொடி ஏந்தியபடி, எமது உறவுகள் எங்கே, கோத்தபாய அரசே பதில் சொல்லு என்ற பெருங்கேள்வி துளைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அரச காவல்துறையினரால் மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுபுறத்தில் கிழக்கில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களுமாக களத்தில நின்று குரல்களை எழுப்புகின்றனர். கிளிநொச்சியில் போராடும் மக்களின் குரல் உக்கிரமாய் இருக்கையில், கிழக்கில் மக்கள் சிங்கள அரசின் கல் எறிகளையும் முட்பொறிகளையும் மிதித்தெறிந…

  4. இலங்கை முன்னென்றும் காணாத அரசியல் பரிசோதனையில் இறங்கும் ஜனாதிபதி ரணில் June 11, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையில் இதுவரையில் நடைபெற்ற எட்டு ஜனாதிபதி தேர்தல்களில் எந்த ஒன்றின்போதும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தற்போது நிலவுகின்றதைப் போன்ற குழப்பகரமான அரசியல் சூழ்நிலையை நாம் கண்டதில்லை. நாட்டு மக்களின் மனநிலையை உண்மையில் அறிந்து கொண்டவர்களாகத்தான் அரசியல்வாதிகள் தேர்தல்களைப் பற்றி பேசுகிறார்களா என்று கேட்கவேண்டியிருக்கிறது. தேர்தல்களைப் பற்றி தினமொரு விசித்திரமான கருத்துக்களை அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். அந்த கருத்துக்களின் தகுதி எத்தகையதாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கும்…

  5. தமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல… திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குப் பொலிஸார் விதித்துள்ள தடை உத்தரவை அடுத்து, தேர்தல் களத்தில் முகம்மாறி, திசைமாறி நின்ற தலைலைமைகள் மீண்டும் ஒன்று கூடி, ஒரு முடிவை எடுத்திருப்பது, புதிய தமிழ் கூட்டுக்கான நல்ல சமிக்ஞை என்று பலராலும் கூறப்படும் நிலையில் ……. தேவை “புதிய கூட்டு” என்ற பெயரிலான ஒட்டுப் போடுவதைப்போன்ற இணைப்பு அல்ல…. தற்போதைய கட்சிகள் அனைத்தையும் கலைத்துவிட்டு, ஒரு புதிய –ஒரேயொரு – தமிழ் அமைப்புஉருவாக வேண்டும் என்ற விடயம், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே முன்வைக்கப்பட்டது.. அது தொடர்பாகக் கடந்த பெப்ரவரி 2020 அன்று தினக்குரல் வார இதழில் , “பேசிப்பார்த்தோம்” என்ற தொடரில் 11வது …

  6. ஜனாதிபதி ‘கோதா’ இன் ஐ நா உரை நிஜமா? போலியா? புலம்பெயர் சமூகத்தின் பணி என்ன? October 2, 2021 — வி.சிவலிங்கம் — இலங்கை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஸ ஐ நா பொதுச் சபையில் ஆற்றிய உரை பலதரப்பட்ட விவாதங்களைத் தூண்டியுள்ளது. ஒரு சாரார் இது சந்தர்ப்பவாதம் எனவும், நாடு மிக மோசமான பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள வேளையில் அதிலிருந்து தப்புவதற்கான ஒரு வகை உத்தியே இது எனவும், நாடு முழுவதும் செயற்படும் சிவிலியன் நிர்வாகங்கள் அனைத்திலும் ராணுவ மேற்பார்வை அதிகரித்த நிலையில் ஜனநாயக மாற்றத்தை நோக்கி அவர் திரும்புவதாக எதிர்பார்ப்பது முற்றிலும் ஏமாற்று வித்தை என ஒரு சாராரும், நாடு மிக மோசமான நெருக்கடிக்குள் சிக்கியுள்ள வேளையில் மாற்று வழியின்றி புதிய ப…

  7. நிதானம் இழக்கும் அரசியல் லக்ஸ்மன் மக்கள் கிளர்ச்சி ஒன்றே தீர்வுக்கான வழி என்ற நிலை தோன்றியிருப்பதாகவே உணரமுடிகிறது. ஆனால் ஆட்சி மாற்றம் நிச்சயமான தீர்வலல்ல என்பது மாத்திரம் உண்மை. இதனை மக்கள் உணரத் தலைப்படவேண்டும். இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானது, நிதானமும் அதனுடன் இணைந்த தீர்மானமுமேயாகும். போராட்டங்கள் வெடிக்கின்றன. அவற்றினை அடக்குவதற்கான வழிகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த வழிமுறைகள் புதியவையல்ல. தமிழர்களின் உணர்வுகளையும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் அடக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட முறைகளே அவை. அவை இப்போது சிங்கள முஸ்லிம் மக்களையும் அடையாளப்படுத்துகின்றன. அதனால்தான், மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பெயரை கொண்டு அடக்க அரசா…

  8. ‘எழுக தமிழ்’: எங்கிருந்து ஆரம்பித்தது, எதனைப் பிரதிபலித்தது? யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி குறிப்பிட்டளவான மக்களின் பங்களிப்போடு முதல்வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின் நீண்ட ஏழரை ஆண்டுகளில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியான கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கு பெருவாரியாக இறங்கிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். தேர்தல் அரசியலில் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து வந்த மக்கள், பொதுத்தள போராட்ட வடிவங்களினூடு ஒருங்கிணைவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதற்கு ‘எழுக தமிழ்’ களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றது. சுமார் 8,000 பேர் முற்றவெளியில் கூடியிருப்பார்கள். …

  9. இரட்டை நிலைப்பாட்டில் தடுமாறும் அரசாங்கம் இலங்கை தேயி­லைக்குப் பெயர் பெற்ற நாடாகும். உலகில் எந்­த­வொரு நாட்­டிலும் தேயி­லையைப் பற்றி குறிப்­பிட்டால், உட­ன­டி­யாக நினைவில் இலங்கை என்ற சின்­னஞ்­சி­றிய நாடே மனதில் நிழ­லாடும். சிலோன் என்று ஆரம்ப காலத்தில் அழைக்­கப்­பட்டு சிறி­லங்கா என பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டுள்ள இலங்கை தேயி­லையின் மறு­பெ­ய­ரா­கவே உலக நாடுகள் பல­வற்­றி­னாலும் கரு­தப்­பட்டு வந்­தது. ஆனால் அந்த நிலை­மைகள் இப்­போது இல்லை. ஆங்­கி­லே­யரின் நாடா­கிய பிரித்­தா­னி­யாவில் இன்னும் இலங்கைத் தேயி­லைக்கு இருந்த மரி­யா­தையும் கௌவ­ரமும் இருப்­ப­தாகக் கருதப்­ப­டு­கின்ற போதிலும், உலக அரங்கில் மனித உரி­மை­களை மீறிய ஒரு நாடா­கவே இப்­போது இலங்கை உ…

  10. இலங்கையில் பெரும்பான்மையினத்திற்கு ஒரு சட்டம்,தமிழருக்கு ஒரு சட்டம்’ -கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு 14 Views ஒரு நாடு ஒரு சட்டம் என ஜனாதிபதி தெரிவிக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டமும் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொள்ளும் பெரும்பான்மையினத்திற்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் குற்றம்சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பகுதியில் மேய்ச்சல் தரை காணிகளை ஊர்காவல் படையினருக்கு முந்திரிகை செய்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை த…

  11. Ranjan and AHRC blame govt for Rizana execution [Friday, 2013-01-11 09:58:36] Opposition Member Ranjan Ramanayake who was among those campaigning for the release of Rizana Nafeek blamed the governemnt for failing to prevent the exeuction. Mr Ramanayake told a press conference held at the Opposition Leaders Office that if it acted seven years ago and proved that the mistake was on the hands of the people who sent this underage girl she would still be alive. "Rizana has paid for this ordeal with her life which the real culprits who sent her (the fake agency) are not punished," he said. MP Ramanayake said that the government took seven years to tra…

  12. காணாமல்போனோர் பிரச்சினையைக் கையாளுதல்: அரசின் நிலைப்பாட்டில் மறுபரிசீலனை அவசியம் ஒரு அரசாங்கம் தன்மீது தானாகக் குற்றம் சுமத்தும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. போரின் முடிவிற்குப் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கத்திற்கும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயற்படுவதற்கு முயற்சித்த முன்னாள் இராஜதந்திரி ஒருவர் முன்னர் ஒருதடவை இவ்வாறு கூறினார். போரின் போது காணாமல்போனோராக அறிவிக்கப்பட்டவர்கள் உண்மையில் இறந்துவிட்டார்கள் என்றும், அவர்களுக்கு நேர்ந்த கதிக்கு அரசாங்கம் பொறுப்பல்ல என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட கருத்து இதுவிடயத்தில் மறுப்பைத் தெரிவித்து வருகின்ற ஒரு நீண்டகாலக் கொள்கையின் தொடர்ச்சியேயாகும். அரசாங்கத்தின்…

  13. இலங்கைத்தீவில் ஆட்சிமாற்றத்தின் பின் தமிழர் விடுதலை மட்டுமல்ல தமிழர் எதிர்காலமே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது. இலங்கைத்தீவில் மட்டுமல்ல அனைத்துலக மட்டத்திலும் தமிழர்களுக்கு எதிராக அனைத்து வழியிலும் காங்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக வருடாவருடம் திருவிழா போல் ஜெனிவாவில் அரங்கேற்றப்பட்டுவந்த ஐநா மனித உரிமை பேரவையின் அறிக்கை போர்களும் கிடப்பில் போடப்படும் கட்டத்தை நெருங்கிவிட்டதை தொடரும் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்ல எமது இதுவரை கால விடுதலைப் போராட்டத்தை இந்த ஐநா விசாரணை பொறிமுறையினூடாக புலிகளையும் குற்றவாளிகளாக்கி நீதியை மடைமாற்றி எமது இதுவரை கால போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய மேற்குலகம் முற்படுவதையும் அவதானிக்கக்கூடியதாக …

  14. முதுகெலும்பில்லையா, விருப்பமில்லையா? இலங்கையின் கிழக்கிலும் மத்தியிலும், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள், அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருண்டதொரு யுகத்துக்கு, நாடு மீண்டும் தள்ளப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை, இவ்வன்முறைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த வன்முறைகளின் உயிரிழப்புகளும் அழிவுகளும் பாதிப்புகளும் கோபத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால், இவ்விடயத்தில் அரசாங்கத்தின் தாமதமான, போதுமற்ற நடவடிக்கைகள், அதிக ஏமாற்றத்தைத் தந்திருக்கின்றன. அண்மைய நாட்களில், அம்பாறையில் ஆரம்பித்த வன்முறைகள், பெருமளவுக்குப் பரவியிருந்தன. பின்னர், கண்டியில் இவ்வன்முற…

  15. தமிழ்க் கட்சிகளின் யாழ். சந்திப்பு: தமிழர்களை 13க்குள் சுருக்கும் முயற்சியா? புருஜோத்தமன் தங்கமயில் அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் சந்திப்பொன்று, தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (02), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் பங்குபற்றின. அத்தோடு, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸும் பங்கெடுத்தன. நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபைத் தேர்தல் அடுத்த …

  16. இலங்கை நாட்டிலே இழைக்கப்பட்ட அட்டூழிங்கள் குற்றச்செயல்களையிட்டு நடந்து முடிந்துவிட்ட சம்பவங்களின் விளைவாக அர்த்தமுள்ள வழக்குகளை நடாத்துவதற்கு வழிவகுக்கும் விதத்திலே, இலங்கைச் சட்டத்துக்குள் சர்வதேசக் குற்றச்செயல்களும் உள்ளடக்கப்படவேண்டும் என நானும் எலியானோர் வெர்மன்ட் என்பவரும் (Eleanor Vermunt) அண்மையிலே பதிப்பிக்கப்பெற்ற கட்டுரையொன்றிலே வாதித்திருந்தோம். ஆயுதப்போர் முடிவுக்கு வந்ததுதொட்டு, சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் மீறல்கள் ஆகியவைகள் தொடர்பாகப் பல்வேறு உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகப்பற்றற்ற குற்றச்சாட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல ஐ.நா. அறிக்கைகளின்படி இந்தக் குற்றச்சாட்டுகள் – அவை நிரூபிக்கப்படும் பட்சத்திலே…

  17. 2022க்கான முன்னோட்டம்: ஒப்புதல் வாக்குமூலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இன்னோர் ஆண்டு எம்மைக் கடந்து செல்கின்றது. 2020ஆம் ஆண்டு போலவே, 2021ஆம் ஆண்டையும் பெருந்தொற்றே நிறைத்தது. ஆனால், நாமும் மெதுமெதுவாகப் பெருந்தொற்றோடு வாழப் பழகி வருகிறோம். மாற்றங்களுக்கு இசைவாக்கமடைவதே மனிதகுலத்தின் மாண்பு என்பதை, நாம் இன்னொருமுறை நிரூபித்திருக்கிறோம். உலகம் மாற்றமடைகிறது; பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த உலகில் நாம் இப்போது இல்லை. உலகில் புதிய சக்திகள் மேலெழுந்துள்ளன; புதிய விடயங்கள் முன்னிலை அடைந்துள்ளன. எனவே, உலகை விளங்கிக்கொள்வதற்குப் புதிய சட்டகங்கள் தேவைப்படுகின்றன. 2022ஆம் ஆண்டை எதிர்பார்த்து நிற்கும் இந்தத் தருணத்தில், அயலுறவுகளையும் அதிகாரப் போட்டிகளையும்…

  18. ஒடுக்க வேண்டியது சமூக வலைத்தளங்களையல்ல, சிங்களப் பேரினவாதப் போக்கையே! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. இலங்கையின் கண்டியின் சில பகுதிகளில் சிங்களப் பேரினவாதிகளால் இஸ்லாமிய மக்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள இனவன்முறைகள் அந்த மக்களை பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளன. ஈழத் தீவு எங்கும் வாழும் முஸ்லீம் மக்கள் இருப்பு குறித்த அபாய உணர்வுடன் வாழ வேண்டிய நிலைக்கு கண்டி வன்முறைகள் தள்ளியுள்ளன. கண்டியில் பற்றி எரியும் வீடுகளும் வியாபார நிலையங்களும் தமிழர்களுக்கு 1983ஐ நினைவுபடுத்துகின்றன. இலங்கையில் முதன் முதலில் இன வன்முறையை எதிர்கொண்டவர்கள் இஸ்லாமியர்கள். 1915ஆம் ஆண்டில் இந்த வன்முறை மேற்கொள்ளப்பட்டத…

  19. மீண்டும் மறக்கப்படுகின்றதா? அரசியல் தீர்வு? நல்­லாட்சி தேசிய அர­சாங்கம் அர­சி­யலில் கடும் நெருக்­க­டி­களை சந்­தித்­து கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அர­சி­யலில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி அனைவர் மத்­தி­யிலும் மேலோங்­கி­யி­ருக்­கி­றது. குறிப்­பாக ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி மற்றும் முறுகல் நிலை­யா­னது தொடர்ந்து வலு­வ­டைந்து வரு­கின்ற நிலையில் தேசிய அர­சாங்­கத்தின் இருப்­பா­னது சந்­தே­கத்­துக்­கி­ட­மா­கவே நீடித்து வரு­கின்­றது. தற்­போ­தைய நிலை­மையில் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் எதிர்­வரும் 10ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள சூழலில் இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டை­யி­லான போட்டி கடு­மை­யாக…

  20. ஜெனீவாவில் காத்திருக்கும் கடிவாளம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் நடந்து கொண்­டி­ருக்கும் போதே, கண்­டியில் இன­வன்­மு­றைகள் தலை­வி­ரித்­தா­டி­யுள்­ளன.. இம்­முறை ஜெனீவா கூட்­டத்­தொ­டரைச் சமா­ளிப்­ப­தற்­காக, அர­சாங்கம் அவ­சர அவ­ச­ர­மாக, காணாமல் போனோர் பணி­ய­கத்­துக்­கான உறுப்­பி­னர்­களை நிய­மித்­தது. காணாமல் போவதில் இருந்து பாது­காப்பு அளிக்கும் சர்­வ­தேச பிர­க­டன சட்­டத்தை நிறை­வேற்­றி­யது. இந்த இரண்­டையும் வைத்துக் கொண்டே இம்­முறை ஜெனீவா கூட்­டத்­தொ­டரைச் சமா­ளித்து விட எண்­ணி­யி­ருந்த அர­சாங்­கத்­துக்கு, ஜெனீவா அமர்வு கடு­மை­யான அழுத்­தங்­களைக் கொடுக்­கலாம் என்ற எதிர்­பார்ப்பு எழுந்­தி­ருக்­கி­றது. எ…

  21. ஐக்கிய நாடுகள் சபையில் கோட்டாவின் அறிவிப்புகளும் அபத்தங்களும் புருஜோத்தமன் தங்கமயில் உள்ளகப் பொறிமுறை ஊடாகப் பாதிக்கப்பட்ட (தமிழ்) மக்களுக்கு நீதி வழங்க முடியும் என்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பிரஸ்தாபித்திருக்கிறார். அத்தோடு, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக, புலம்பெயர் (தமிழர்கள்) தரப்புகள் முன்வர வேண்டும் என்றும் கோரியிருக்கின்றார். ராஜபக்‌ஷர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து நி‌ற்கின்ற நிலையில், கோட்டாவின் இந்த அறிவிப்புகள் கவனம் பெறுகின்றன. தென் இலங்கையில் பேரினவாதத்தின் காவல் முகங்களாக, ராஜபக்‌ஷர்கள் பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் ஆட்…

  22. வெளிநாட்டு நீதிபதிகளும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையும் அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தின்போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில், பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டுமா என்ற சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது. அண்மையில், அந்த விடயம் தொடர்பாகச் சில ஊடக செய்திகள் வெளிவந்த போதிலும், கடந்த மூன்றாம் திகதி, நல்லிணக்கப் பொறிமுறைகளைக் கூட்டிணைக்கும் செயலணி, அதன் அறிக்கையை, முன்னாள் ஜனாதிபதியும் ‘ஒனூர்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா குமாரது…

  23. அஸ்தமனமானது ‘முதலாவது’ சரணாகதி சின்னையா செல்வராஜ் இதுவும் நடந்துவிடவேண்டுமென நினைத்திருந்தவர்களுக்குக் கசப்பாகவும் நடந்துவிடவே கூடாதென எண்ணியிருந்தோருக்கு திகைப்பூட்டியும், ‘ஜனாதிபதி மாளிகை’யைக் களமாகக் கொண்டு, ‘ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு’த் தொடர்பாக, ஜூன் 15ஆம் திகதி வெளிவந்த செய்திகள் அமைந்திருந்தன. அதுதான் ‘முதல்’ முறை என்றாலும், ‘இறுதி’யாகி விடக்கூடாது என்பதே, பலரது கரிசனையுமாகும். ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னரான அறிவிப்புகள், ஜனாதிபதி செயலகத் தரப்பிலிருந்து விடுக்கப்படுவது அரிதாகும். இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெறுமாயின், அவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால், கூட்டமைப்புடனான சந்திப்புத் தொடர்பிலும், …

  24. சொதப்பலான, சிதம்பலான ஒரு வெளியுறவுப் பொறிமுறைக்குள், தொடர்ந்தும் குதிரை விடுமா தமிழ்த்தேசம்? நிலாந்தன்… October 17, 2020 தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை… கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் 13ஆவதுதிருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று கூறியிருக்கிறார். இந்தியா தொடர்பான அக்கட்சியின் வெளியுறவுக் கொள்கையாக இதை எடுத்துக் கொள்ளலாமா? அதாவது இந்திய இலங்கை உடன்படிக்கை எனப்படுவது இந்தியா அதன் பிராந்திய நலன் நோக்கு நிலையிலிருந்து இலங்கையோடு செய்து கொண்ட ஓர் உடன்படிக்கை. எனவே இப்பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக தாங்கள் இயங்கப்போவதில்…

  25. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அரசியல் சூழலிலும் தமிழ்த்தேசிய உணர்வுடன் தமது இறைமை தன்னாதிக்கம் போன்றவதற்கான அங்கீகாரத்துக்குமான ஏக்கங்களோடு ஈழத் தமிழர்கள் கொள்கை மாறாமல் இருக்கின்றனர் என்பதை செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் எடுத்துக் கூறியுள்ளனர். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தடைகள், அச்சுறுத்தல்கள் போன்ற துன்பங்களைத் தான்டி திட்டதிட்டபடி மாவீரர் நிகழ்வுகளில் மக்கள் கலந்துகொண்டனர் அமைப்பு ரீதியான ஒழுங்குபடுத்தல்கள் எதுவுமேயின்றி ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழந்த மக்கள் தாமாகவே முன்சென்று நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தனர். விடுதலைப் புலிகளின் பாடல்கள் இசைகள் ஒதுவும் ஒலிபரப்பக் கூடாது என யாழ் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.