Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. விழலுக்கு இறைத்த நீராகும் வடக்கு மக்களின் நம்பிக்கை - செல்வரட்னம் சிறிதரன் 07 டிசம்பர் 2013 அதிகாரப் பரவலாக்கலா அல்லது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதா, எது முக்கியத்துவம் மிக்கது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. வடமாகாண சபையின் மூலம் மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற சேவைகளைச் செய்ய வேண்டிய தேவை முக்கியத்துவமிக்கதாக இருக்கின்றது. மக்களுடைய வாழ்வாதாரம் உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அவசியத் தேவையும் இருக்கின்றது. அதே நேரம் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கும் குறிப்பாக அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டியதும், முக்கியமாகும். ஏனெனில், போருக்குப் பின்னரான காலப்பகுதிய…

  2. வரலாற்றுக்காலத்தில் மக்கள் தமது இனங்களிற்குள் போரினால் படும் துன்பங்களைத் தவிற்பதற்காகச் சில அடிப்படைச் சட்டங்களை வகுத்துக் கொண்டார்கள். இந்தப் போர்கள் சிறிய அளவாக நடந்த போது அந்தப் போரில் கலந்து கொண்ட அணிகள் இந்தச் சட்டங்களை ஏற்றுக் கொண்டன. ஆனாலும் நவீனகால யுத்தங்களின் அளவும் சட்ட மீறல்களும் இந்தச் சட்டத்தை மேலும் இறுக்குவதற்கான வழியை வகுத்துக் கொண்டது. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமும் செம்பிறை இயக்கமும் இணைந்து ஹென்றி டனன்ட் தலைமையில் 1864ம் ஆண்டு முதலாவது மனிதாபிமானச் சட்டத்தினை (Inernational Humanitarian Law) உருவாக்கி அதனைச் சண்டையிடும் அணிகள் பின்பற்ற வேண்டிய அவசியத்தை உருவாக்கினார்கள். 1949ம் ஆண்டிலிருந்து ஜெனிவா உடன்படிக்கையானது. தனது முக்கியமான உடன்படிக்கைகளைத் த…

  3. கிழக்கு மாகாணத்தை மையாகக் கொண்டுதான் பிரச்சினை ஆரம்பித்தது. காணி அபகரிப்பு சிங்கள குடியேற்றங்கள் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட போதுதான் தமிழத்தேசிய கோட்பாடு, தமிழர் தாயம் பற்றிய சிந்தனைகள் எழுந்தன. இறுதிக் கட்ட போர் தொடர்பாகவும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் பேசப்படுகின்றது. ஆனால் கிழக்கு மாகாணம் என்பதும் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி என்ற பேச்சும் நலிவடைந்துள்ளன. தற்போது இனப்பிரச்சினை என்ற பேச்சு வடமாகாண பிரச்சினையாக மட்டும் மாறிவிட்டது. தமிழத்தேசிய கூட்டமைப்பு தமிழத்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில தமிழ் அமைப்புகளும் இனப்பிரச்சினை வடபகுதி பிரச்சினையாக மாறிவிட்டதை நினைத்து கவலைப்படுவதாகவும் இல்லை. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வடபகுதியில் தினமும் நடக்கின்றன. ஆனால…

    • 4 replies
    • 944 views
  4. ‘ராஜபக்ச அச்சத்தில்? – டேவிட் கமரனின் இலங்கைப் பயணம் குறித்த ஆய்வறிக்கை : இனியொரு… நன்றி : அவந்த ஆட்டிகல வன்னிப் படுகொலைகளை நடத்திய வேளையில் அழிக்கும் ஆயுதங்களைச் ’சட்டரீதியான’ மூலங்களூடாகவே மகிந்த பாசிச அரசு பெற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்தானில் பயன்படுத்திய பொஸ்பரஸ் கொத்துக்குண்டுகளிலிருந்து இரசாயன ஆயுதங்கள் வரை இலங்கை அரசு எங்கிருந்து பெற்றுக்கொண்டது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.இது வெறுமனே தமிழின் வாதம் தமிழின உணர்வு என்ற எல்லைகளுக்கு அப்பால் பரந்துபட்ட மக்களை நோக்கிச் செல்லவேண்டும். கொலைகளின் சூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பமும் அதன் ஆதரவாளர்களும் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். அவர்கள் மக்கள் மத்தியில் நடமாடுவதே மனித குலத்திற்கு ஆபத்…

    • 8 replies
    • 1.5k views
  5. இந்தியாவின் பிடியில் இருந்து விலகி சர்வதேச மயப்படும் இலங்கை விவகாரம் - செல்வரட்னம் சிறிதரன் 23 நவம்பர் 2013 மழை விட்டாலும் தூவானம் இன்னும் விடவில்லை என்று சொல்வார்கள் இலங்கையில் நடந்து முடிந்துள்ள பொதுநலவாய மாநாடு தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்த நிலைமையிலேயே இருக்கின்றது. அது மட்டுமல்லாமல், பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையில் பாரதத்தின் பிடிக்குள் அடங்கியிருந்த இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம், இந்திய அரசிடமிருந்து கைநழுவி சர்வதேசமயப்படுகின்றதா என்ற சந்தேகமும், நடந்து முடிந்துள்ள பொதுநலவாய மாநாட்டையடுத்து எழுந்துள்ளது. கொழும்பு மாநாட்டுத் தலையிடி பொதுநலவாய அமைப்பி;ன் உறுப்பு நாடு என்ற வகையில் அந்தஸ்து ரீதியாக கொழும்பில் நடைபெற்ற பொது…

  6. கடந்த வார ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக இரண்டு விவகாரங்கள் காணப்பட்டன. ஒன்று முன்னணி ஊடக நிறுவகம் ஒன்றுக்கு எதிராக மங்கள சமரவீர வழக்குத் தொடுத்துள்ளமை. இரண்டாவது ஊடக சுதந்திரம் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பெருமைப்படுத்துகின்ற அல்லது அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுகின்ற எவரையும் சிறிலங்கா அரசாங்கமானது தடைசெய்யும் என்கின்ற அறிவிப்பு. சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் என்பது தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. தனிப்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் மங்கள சமரவீர, முன்னணி ஊடக நிறுவகத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தமை தொடர்பில் சிலர் தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ள அதேவேளையில், இந்த ஊடகமானது தொழில்சார் ஒருமைப்பாட்டை ம…

  7. 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமும் தமிழ் மக்களும் முத்துக்குமார் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை இலங்கை ஜனாதிபதி நவம்பர் மாதம் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப் பிரதேசங்கள் தொடர்பான பெரிய ஒதுக்கீடுகள் ஏதும் இருக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் சிறப்பு ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசாங்கம் இதுபற்றி அக்கறை எதையும் செலுத்தவில்லை. வழக்கம் போலவே பாதுகாப்பு அமைச்சிற்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கினை பொறுத்தவரை போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரங்களை உருவாக்கவேண்டிய தேவை இருந்தது. குறிப்பாக வீடுகளை கட்டுதல், தொழில்களை உருவாக்குதல், பாடசாலைகள் போன்ற பொது நிறுவ…

  8. பேசாப் புள்ளி விபரங்கள் - நிலாந்தன் 01 டிசம்பர் 2013 போர்க் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்திழப்புகள் ஆகியவை குறித்த ஒரு கணக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒரு சிறப்புச் செயலணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரை முன்னிட்டு அரசாங்கம் செய்துவரும் மற்றொரு வீட்டு வேலையே இது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான போரில் ஏற்பட்ட இழப்பு விபரங்களைக் குறித்து திருத்தமானதும், விஞ்ஞானபூர்வமானதும் அனைத்துலகப் பெறுமனங்களிற்கு அமைவானதுமாகிய புள்ளி விபரங்களைக் காட்டவேண்டிய ஒரு தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. உண்மையை அங்கீகரிப்பதிலிருந்தே நல்லிணக்கம் ஆரம்பமாகின்றது. புள்ளி விபரங்கள் உண்மையின் தவிர்க…

  9. நான் தேசபக்தனா என்கிற கேள்வியை அடிக்கடி கேட்க முடிகிறது.. அவர்களுக்கான எனது சிறுபதிலை பதிவு செய்துகொள்ள விரும்புகிறோம்..... இந்திய தேசத்தின் மீதான பக்தி என்பது மக்கள் மீதானதா அல்லது அரசு இயந்திரத்தின் மீதா என்பதான கேள்வி எழுந்த சமயத்தில் தான் இந்தியா என்பது அதன் அதிகார வர்க்கமும், ஆளும் கட்சிகளும், தனிப் பெரும் நிறுவனங்களும் என்று புரிந்தது.. இந்தியா என்கிற கருத்தியலில் நம்மைப் போன்ற சராசரி மக்களுக்கு இடமில்லை.. நம் கருத்துக்களுக்கோ, நேர்மைக்கோ இடமில்லை.. காந்தியோ, அம்பேத்காரோ, பகத்சிங்கோ இன்னபிற தலைவர்களோ கொடுத்துச் சென்ற அறம், மானுடத்தன்மை போன்றவைகளை கட்டிக்காக்கும் தேசமோ இல்லை இது.. இந்த தேசியம் நமக்காக இல்லை... இந்த ஒட்டுமொத்த கும்பலும் தனது சுயநலத்திற்காக கொள்ளையடி…

  10. எந்தவொரு நாடும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போது அவற்றை நியாயப்படுத்துவதற்காக மற்றைய நாடுகளில் இடம்பெறும் மீறல்களைச் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றது அல்லது பூகோள மூலோபாய பேரம்பேசலில் ஈடுபடுகின்றது என்பதே உண்மையாகும். இவ்வாறு The New Indian Express ஊடகத்தில் Anuradha M chenoy* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மனித உரிமைகள் என்பது எப்போதும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் போட்டியிடுகின்ற ஒன்றாகக் காணப்படுகிறது. மனித உரிமைகள் என்பது வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தக் கூடாது என மூலோபாய வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர். உலக நாடுகள் தமது நாடுகளின் நலன்கள் மற்றும் அதிகாரங்களை மட்டுமே கொண்டிருக்க…

  11. டேவிட் கமரூனின் யாழ் பயணமும் சில யதார்த்தங்களும் உலகின் மிக சக்திமிக்க தலைவர் ஒருவர் வருகின்றார், தான் வரப் போவதை முன்னதாகவே அறிவிக்கின்றார். இந்த அறிவிப்பு பல பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் உண்டாக்குவதுடன், அவரது சர்வதேச நிலைப்பாடுகள் காரணமாக, அவரது பாதுகாப்பானது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகிறது. அவரது சொந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முடிவின் படி லண்டனில் இருந்து குண்டு துளைக்காத நான்கு லேன்ட் ரோவர் வாகனங்கள் கொண்டு வரப் பட்டன. மேலும் அவரது பயண நிகழ்ச்சி நிரல் அவரை வரவேற்க்கும் அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவின் கையில் தான் இருக்கும். அவர்கள் தான் அவரது பாதை, பாதையில் வரும் தடை நீக்குதல் போன்ற விடயங்களை முடிவு செய்வார்கள். இந்த வகையில், இலங்கை அரச…

  12. டேவிட் கமரூனின் யாழ் பயணமும் பயன்படுத்தத் தெரியாத தமிழ்த்தரப்பும்! முத்துக்குமார் பொதுநலவாய அமைப்பு என்பது காலனித்துவ முடிவிற்குப் பின்னரும் தனது செல்வாக்கினை அந்நாடுகளில் நிலைநிறுத்துவதற்காக பிரித்தானியாவினால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். பிரித்தானிய மகாராணியாரே அதன் தலைவராக விளங்குகின்றார். பிரித்தானியாவால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்ற வகையில் அம்மாநாட்டிற்குச் செல்லாமல் இருக்க அதனால் முடியாது. இதைவிட அமெரிக்க தலைமையிலான மேற்குலகத்திடம் நேர்மறை அணுகுமுறை மூலம் இலங்கையைப் பணியவைத்தல் என்ற கொள்கை நிலைப்பாடும் இருந்தது. இந்த இரண்டும் தான் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் மாநாட்டில் கலந்துகொண்டதற்க…

    • 5 replies
    • 1.1k views
  13. வடக்கில் வசந்தம் வீசுகிறதென்றால் வழியில் எதற்கு தடை போட வேண்டும்..? இந்த ஆண்டு கொமன் வெல்த்தின் கதாநாயகன் யார் என்று கேட்டால் அது சனல் 4 நிருபர் கெலும் மக்ரேதான் என்று துணிந்து கூறலாம். அப்படிக் கூறுவதற்கான அனைத்துச் சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன, 2009 வன்னிப்போரில் சிறீலங்கா எவ்வளவு மடைத்தனமான தவறுகளைப் புரிந்து இப்போது கையறு நிலையில் நிற்கிறதோ.. அதைவிட பெரிய தவறை கெலும் மக்ரே விடயத்தில் இழைத்திருக்கிறது. சரியாக நடந்திருந்தால்.. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன் வெல்த் கதாநாயகனாகியிருப்பார்… பாவம் தன்னுடைய வெளிநாட்டு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சிறீலங்கா அனுப்பி அந்த வாய்ப்பை பறிகொடுத்தார். கெலும் மக்ரே சிறீலங்காவில் இறங்கும்வரை கதாநாகனாக இருந்தவர் கனேடிய பிர…

    • 18 replies
    • 2.6k views
  14. குருதி தோய்ந்த கைகளைச் சுத்தப்படுத்தும் மகிந்த! யுஹான் சண்முகரட்ணம் (தமிழில் ரூபன் சிவராஜா) நோர்வேயின் Klassekampen (The Class Struggle)நாளிதழில் கடந்த வாரம் (09.11.13) வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். கட்டுரையை எழுதிய யுஹான் சண்முகரட்ணம் Klassekampen நாளிதழின் வெளிநாட்டுவிவகாரங்களுக்கான பொறுப்பாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக மோசமான போர்மீறல் குற்றச்சாட்டுகள் சிறிலங்கா அரசதலைவரை நோக்கி முன்வைக்கப்படுகின்ற நிலையிலும் பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தினை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையேற்கவுள்ளார். பிரித்தானிய இளவரசர் சார்ஸ், பிரித்தானியாவின் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் ஆகியோர் உட்பட்ட முக்கிய பிரமுகர்கள் கொழும்ப…

  15. கொமென் வெல்த் மாநாட்டையொட்டி வடக்கில் நடந்த போராட்டங்கள் - நிலாந்தன் 17 நவம்பர் 2013 கொமென் வெல்த் மாநாட்டுக்குச் சமாந்தரமாக வடக்கில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன இப்போராட்டங்களின் மூலம் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஒப்பீட்டளவில் அதிகம் ஈர்க்க முடியும் என்று அவற்றை ஒழுங்குபடுத்தியவர்களும், கூட்டமைப்பினரும் நம்புகின்றார்கள். உள்நாட்டில் அவர்களால் இதைத்தான் இப்போதைக்குச் செய்ய முடியும். அதாவது, அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பது. இதற்குமப்பால் போக அவர்களால் முடியாமலிருக்கிறது என்பதே கள யதார்த்தம். வலி வடக்குத் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் இதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். இத்தகையதொரு பின்னணியில் இப்போராட்டங்களை இரண்டு தளங்களில் வைத்துப்…

  16. ஈழமும் மிதவாத அரசியலும் தீபச்செல்வன் ஈழத்தில் மிதவாத அரசியலின் தோல்விதான் ஆயுதப்போராட்டத்திற்குக் காரணமாக இருந்தது. சிங்கள மிதவாதத் தலைவர்கள் ஈழ மக்களின் உரிமைப் பிரச்சினையை சிங்களப் பேரினவாத நோக்கத்துடன் பயங்கரவாதமாகவே சித்தரித்து உரிமை மறுப்பு மற்றும் இன அழிப்பு அரசியலை மேற்கொண்டார்கள். அவர்களுடனான அரசியல் நடவடிக்கைகளின்மூலம் எதையும் செய்ய முடியாத நிலை தமிழ் மிதவாதத் தலைவர்களுக்கு ஏற்பட்டது. காலத்திற்குக் காலம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் நடந்தேறிய பொழுதும் சிங்களப் பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு சிறு துறும்பைக்கூட பகிரவில்லை. ஈழம் மிதவாத அரசியால் பல்வேறு பாதிப்புகளையும் மாற்றங்களையும் சந்தித்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழ் மக்கள…

  17. பொது நல­வாய மாநாட்டின் மத்­தியில் எழுந்­துள்ள மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்­கள் - 16 நவம்பர் 2013 செல்­வ­ரட்னம் சிறி­தரன்:- பொது­ந­ல­வாய அமைப்பின் கொழும்பு மாநாடு, பல்­வேறு எதிர்­பா­ர்ப்­புக்­க­ளையும், பல­த­ரப்­பட்ட உணர்­வு­க­ளையும் ஏற்­ப­டுத்தியிருந்­தது. இந்த மாநாட்டைப் பல உலக நாடுகள் புறக்­க­ணிக்கக் கூடும். இதனால் இந்த மாநாட்டை நடத்­து­வதில் இலங்கை அர­சுக்கு சிக்­கல்கள் ஏற்­படக் கூடும் என்ற எதிர்­பார்ப்­பு­கூட பல­த­ரப்­பிலும் நில­வி­யது. எனினும் இலங்கை அர­சாங்­கத்­திற்கு மகிழ்ச்­சியும், பெரு­மையும் அளிக்­கத்­தக்க வகையில் இந்த மாநாட்டில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான நாடுகள் கலந்து கொண்­டி­ருக்­கின்­றன. இந்த மகிழ்ச்­சி­யில்­தானோ என்­னவோ உங்கள் மீது போர்க்­குற…

  18. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்... ஸ்ரீலங்கா அரசும் பொதுநலவாயமாநாடும் - சாந்தி சச்சிதானந்தம் 16 நவம்பர் 2013 விருத்தியடைந்து செழிக்கும் ஒன்றுக்குள்ளேயே அதன் அழிவுகளின் விதைகளும் இருக்கும் என்பது இயற்கையின் நியதி. ஸ்ரீலங்கா அரசிற்கு பொதுநலவாய மாநாடு அவ்வகையானதொரு அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டினை இலங்கை ஏற்பாடு செய்தால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு அந்த அமைப்பின் தலைமைத்துவப் பதவியினை அடைந்தால், உலகநாடுகளின் மத்தியில் உருத்துடனும் (with legitimacy) அந்தஸ்துடனும் உலாவலாம் எனக் கனவுகண்டது. இந்நாடுகளின் மூலம் தனக்குக் கிடைக்கப் போகும் அங்கீகாரம் போர்க் குற்றச்சாட்டுக்களைப் புறந் தள்ளும் எனநம்பியது. அதற்காகவே, தனது இ…

  19. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைப் பற்றி...தமிழ் நாட்டைநோக்கி ஓர் மடல் November 13, 2013 at 11:22pm முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைப் பற்றி அதிகம் கவலைப்படும் உண்மைத் தமிழ்த்தேசிய அன்பர்களுக்கு தமிழ் நாட்டைநோக்கி ஓர் மடல்... இந்த நினைவிடம் நன்றேதான். அது அமைக்கப்பட்டவிதமும் அதற்காக உழைத்த ஓவியர் வீர சந்தானம் போன்றவர்களும் சிற்பிகள் முருகன் குழுவினரும் பாராட்டப் படவேண்டியவர்கள்தான். அவர் தேர்ந்த கல்லும் அதன் நிறமும் “மயமதத்திலோ” “சிற்பசாத்திரத்திலோ” முன்மொழியப்பட்டதைவிட அதிகம் முரண்படாத வகையில் அமைந்தவைதான். நினைவிடத்திற்காகன இருப்பிடமும் அமைந்த திசையும் நன்றேதான். இன்றைக்கான உலகில் தவறைச் செய்துவிட்டு அதை சரியானதாக்க முயல்வதை யாரும் கருணை கொண்டு பார்ப்பதில்ல…

  20. பொதுநலவாய அமைப்பின் மாநாடும் சர்வதேச பிராந்திய சக்திகளின் வியூகங்களும் முத்துக்குமார் பொதுநலவாய அமைப்பின் மாநாட்டுக்கான ஆரவாரங்கள் ஆரம்பித்துவிட்டன. சிறிலங்கா அரசு மாபெரும் விழாவாக இதனைக் கொண்டாடுவதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றது. பொதுநலவாய அமைப்பின் சின்னம் இலங்கை முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றது. தென்னிலங்கை ஊடகங்கள் இம் மாநாட்டிற்கு பாரிய முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றன. எவ்வாறாவது சர்வதேச ரீதியாக இலங்கை மீது படிந்துள்ள கறைகளை அகற்றவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவது தெளிவாகவே தெரிகின்றது. மறுபக்கத்தில் இம் மாநாடு தொடர்பான அமர்க்களங்களை வரலாற்றில் ஒருபோதும் இவ் அமைப்பு சந்தித்ததில்லை. இலங்கை அரசின் ஆரவாரங்கள், தமிழ்நாட்டின் போராட்டங்கள், இந்திய அரசின…

    • 3 replies
    • 1.1k views
  21. இனப்படுகொலையை மூடிமறைக்கும் சிறிலங்கா – கனடா ஊடகம் [ ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2013, 09:18 GMT ] [ நித்தியபாரதி ] 1000 மக்களைப் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையானது 10 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இதே ஐ.நா பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்களின் இழப்புக்கு காரணமாக உள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு Toronto Star ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் Rosie DiManno எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கண்ணீர்த் துளி போன்ற ஒரு வடிவத்தில் உள்ள ஒரு தீவே சிறிலங்காவாகும். சிறிலங்காத் தீவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது விழுந்த கண்ணீர்த் துளிக…

  22. மேற்குலகு, அதற்கு போட்டியாகும் எழும் சீனா, இந்திய மாக்கடல் வல்லரசாகும் கனவோடு உலக அரசியலில் எத்தனிக்கும் இந்தியா என இம்மூன்று சக்திகளின் கரங்கள் இத்தோல்வியின் பின்னால் தொழிற்பட்டன -குணா.கவியழகன்*. 01. ஈழப்போராட்டத்தில் ஆயுதப்போரின் தோல்வி வெறும் உள்நாட்டுப் பரிமாணம் கொண்டதல்ல. இருதரப்பு மோதல்களின் முடிவாய் நிகழ்ந்த வெற்றி தோல்விகளும் அல்ல. இத்தோல்வியின் பின்னணியில் அனைத்துலக அரசியல் பரிமாணம் உண்டு. பொதுப்புத்தியில் இதற்கு அனைத்துலக காரணிகள் உண்டு எனத் தெரிந்தாலும் அதன் பரிமாணம் என்ன? எதற்காக நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது? என்ன காரணத்திற்காக நிகழ்ந்தது? என்பது வெகுசன அறிவுக்கு எட்டவில்லை. ஆனால் எட்டவேண்டியது அவசியம். போர் தோற்றாலும் தமிழர்கள் போராட்டத்தில் தோற்றுப்ப…

  23. "திராவிட கட்சிகள் நேர்மையற்று கொள்கையற்று செத்து வீழ்ந்து விட்டது" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆவேசமாக கூறினார். புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விகடன் டாட்காமுக்கு அளித்த சிறப்பு பேட்டி: காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அரசுக்கு தரும் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளாரே? இது காலங்கடந்தது. ‘இசைப்பிரியாவுக்கு இப்படி நடந்துவிட்டது; இனிமேலும் போகலாமா? இதற்கு மேலும் பொறுத்துக் கொண்டிருக்கலாமா? நாம் தமிழர்கள் தானா? இதற்கு மேலும் இந்தியா போகலாமா? என்று கேட்கிறார். இதைத்தானே நாங்கள், ‘இதற்கு மேலும் இந்த அரசில் பங்கேற்கலாமா?’ என்று அன்று கேட்டோம். இன்று எடுத்திருக்கும் நிலைப்பாட்டை அன்…

  24. இந்திய ஆட்சி மாற்றம் தமிழர் பிரச்சனையில் தாக்கங்களை ஏற்படுத்துமா? யதீந்திரா சமீபத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.ஜே.பி தலைவர்களை சந்தித்து பேசியிருந்தார். அதன் மறுதினமே அவரது சந்திப்பிற்கு பதிலளிப்பது போன்று, இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசமும் பி.ஜே.பியின் சில முக்கியஸ்தர்களை சந்தித்து பேசியிருந்தார். அடுத்த ஆண்டு, இடம்பெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலில், இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி அதிக ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் நரேந்திர மோடி பிரதமராக வரக்கூடிய சாதக நிலைமையும் காணப்படுவதாக நம்பப்படுகிறது. ஆனால், ஒருவேளை நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு கிளம்பினால்…

  25. வரவேண்டாம், வாருங்கள் - செல்வரட்னம் சிறிதரன்:- 03 நவம்பர் 2013 'பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆள்பவன்தான இறைவன்' என்றொரு சினிமா பாடல் வரியொன்று உள்ளது. பூஜ்ஜியம் என்பது ஒன்றுமில்லை, வெறுமை என்பதுதான் கருத்து. ஒரு வெறுமைக்குள்ளே ஓர் அரசை ஆள்வதென்பது முடியாத காரியம். இந்த முடியாத காரியத்தை அல்லது, இல்லாத ஒன்றைச் செய்வதென்பது, மிகமிக கெட்டித்தனமான செயலாகும். இந்தச் செயலைத்தான், இந்த இராஜதந்திரத்தைத்தான் இறைவன் செய்கின்றான் என்பதையே அந்தப் பாடல் வரி எடுத்துக் கூறுகின்றது. இந்த பூஜ்ஜியத்துக்குள் இராஜ்ஜியத்தை ஆள்கின்ற மாயவித்தையைத்தான், மந்திர விளையாட்டைத்தான், இராஜதந்திரத்தையே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, வடமாகாண சபையின் ஊடாகச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.