அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9329 topics in this forum
-
எந்தவொரு நாடும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போது அவற்றை நியாயப்படுத்துவதற்காக மற்றைய நாடுகளில் இடம்பெறும் மீறல்களைச் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றது அல்லது பூகோள மூலோபாய பேரம்பேசலில் ஈடுபடுகின்றது என்பதே உண்மையாகும். இவ்வாறு The New Indian Express ஊடகத்தில் Anuradha M chenoy* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மனித உரிமைகள் என்பது எப்போதும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் போட்டியிடுகின்ற ஒன்றாகக் காணப்படுகிறது. மனித உரிமைகள் என்பது வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தக் கூடாது என மூலோபாய வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர். உலக நாடுகள் தமது நாடுகளின் நலன்கள் மற்றும் அதிகாரங்களை மட்டுமே கொண்டிருக்க…
-
- 0 replies
- 777 views
-
-
டேவிட் கமரூனின் யாழ் பயணமும் சில யதார்த்தங்களும் உலகின் மிக சக்திமிக்க தலைவர் ஒருவர் வருகின்றார், தான் வரப் போவதை முன்னதாகவே அறிவிக்கின்றார். இந்த அறிவிப்பு பல பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் உண்டாக்குவதுடன், அவரது சர்வதேச நிலைப்பாடுகள் காரணமாக, அவரது பாதுகாப்பானது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகிறது. அவரது சொந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முடிவின் படி லண்டனில் இருந்து குண்டு துளைக்காத நான்கு லேன்ட் ரோவர் வாகனங்கள் கொண்டு வரப் பட்டன. மேலும் அவரது பயண நிகழ்ச்சி நிரல் அவரை வரவேற்க்கும் அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவின் கையில் தான் இருக்கும். அவர்கள் தான் அவரது பாதை, பாதையில் வரும் தடை நீக்குதல் போன்ற விடயங்களை முடிவு செய்வார்கள். இந்த வகையில், இலங்கை அரச…
-
- 24 replies
- 3k views
-
-
டேவிட் கமரூனின் யாழ் பயணமும் பயன்படுத்தத் தெரியாத தமிழ்த்தரப்பும்! முத்துக்குமார் பொதுநலவாய அமைப்பு என்பது காலனித்துவ முடிவிற்குப் பின்னரும் தனது செல்வாக்கினை அந்நாடுகளில் நிலைநிறுத்துவதற்காக பிரித்தானியாவினால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். பிரித்தானிய மகாராணியாரே அதன் தலைவராக விளங்குகின்றார். பிரித்தானியாவால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்ற வகையில் அம்மாநாட்டிற்குச் செல்லாமல் இருக்க அதனால் முடியாது. இதைவிட அமெரிக்க தலைமையிலான மேற்குலகத்திடம் நேர்மறை அணுகுமுறை மூலம் இலங்கையைப் பணியவைத்தல் என்ற கொள்கை நிலைப்பாடும் இருந்தது. இந்த இரண்டும் தான் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் மாநாட்டில் கலந்துகொண்டதற்க…
-
- 5 replies
- 1.1k views
-
-
வடக்கில் வசந்தம் வீசுகிறதென்றால் வழியில் எதற்கு தடை போட வேண்டும்..? இந்த ஆண்டு கொமன் வெல்த்தின் கதாநாயகன் யார் என்று கேட்டால் அது சனல் 4 நிருபர் கெலும் மக்ரேதான் என்று துணிந்து கூறலாம். அப்படிக் கூறுவதற்கான அனைத்துச் சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன, 2009 வன்னிப்போரில் சிறீலங்கா எவ்வளவு மடைத்தனமான தவறுகளைப் புரிந்து இப்போது கையறு நிலையில் நிற்கிறதோ.. அதைவிட பெரிய தவறை கெலும் மக்ரே விடயத்தில் இழைத்திருக்கிறது. சரியாக நடந்திருந்தால்.. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன் வெல்த் கதாநாயகனாகியிருப்பார்… பாவம் தன்னுடைய வெளிநாட்டு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சிறீலங்கா அனுப்பி அந்த வாய்ப்பை பறிகொடுத்தார். கெலும் மக்ரே சிறீலங்காவில் இறங்கும்வரை கதாநாகனாக இருந்தவர் கனேடிய பிர…
-
- 18 replies
- 2.6k views
-
-
குருதி தோய்ந்த கைகளைச் சுத்தப்படுத்தும் மகிந்த! யுஹான் சண்முகரட்ணம் (தமிழில் ரூபன் சிவராஜா) நோர்வேயின் Klassekampen (The Class Struggle)நாளிதழில் கடந்த வாரம் (09.11.13) வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். கட்டுரையை எழுதிய யுஹான் சண்முகரட்ணம் Klassekampen நாளிதழின் வெளிநாட்டுவிவகாரங்களுக்கான பொறுப்பாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக மோசமான போர்மீறல் குற்றச்சாட்டுகள் சிறிலங்கா அரசதலைவரை நோக்கி முன்வைக்கப்படுகின்ற நிலையிலும் பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தினை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையேற்கவுள்ளார். பிரித்தானிய இளவரசர் சார்ஸ், பிரித்தானியாவின் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் ஆகியோர் உட்பட்ட முக்கிய பிரமுகர்கள் கொழும்ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொமென் வெல்த் மாநாட்டையொட்டி வடக்கில் நடந்த போராட்டங்கள் - நிலாந்தன் 17 நவம்பர் 2013 கொமென் வெல்த் மாநாட்டுக்குச் சமாந்தரமாக வடக்கில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன இப்போராட்டங்களின் மூலம் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஒப்பீட்டளவில் அதிகம் ஈர்க்க முடியும் என்று அவற்றை ஒழுங்குபடுத்தியவர்களும், கூட்டமைப்பினரும் நம்புகின்றார்கள். உள்நாட்டில் அவர்களால் இதைத்தான் இப்போதைக்குச் செய்ய முடியும். அதாவது, அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பது. இதற்குமப்பால் போக அவர்களால் முடியாமலிருக்கிறது என்பதே கள யதார்த்தம். வலி வடக்குத் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் இதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். இத்தகையதொரு பின்னணியில் இப்போராட்டங்களை இரண்டு தளங்களில் வைத்துப்…
-
- 0 replies
- 682 views
-
-
ஈழமும் மிதவாத அரசியலும் தீபச்செல்வன் ஈழத்தில் மிதவாத அரசியலின் தோல்விதான் ஆயுதப்போராட்டத்திற்குக் காரணமாக இருந்தது. சிங்கள மிதவாதத் தலைவர்கள் ஈழ மக்களின் உரிமைப் பிரச்சினையை சிங்களப் பேரினவாத நோக்கத்துடன் பயங்கரவாதமாகவே சித்தரித்து உரிமை மறுப்பு மற்றும் இன அழிப்பு அரசியலை மேற்கொண்டார்கள். அவர்களுடனான அரசியல் நடவடிக்கைகளின்மூலம் எதையும் செய்ய முடியாத நிலை தமிழ் மிதவாதத் தலைவர்களுக்கு ஏற்பட்டது. காலத்திற்குக் காலம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் நடந்தேறிய பொழுதும் சிங்களப் பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு சிறு துறும்பைக்கூட பகிரவில்லை. ஈழம் மிதவாத அரசியால் பல்வேறு பாதிப்புகளையும் மாற்றங்களையும் சந்தித்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழ் மக்கள…
-
- 2 replies
- 1.1k views
-
-
பொது நலவாய மாநாட்டின் மத்தியில் எழுந்துள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் - 16 நவம்பர் 2013 செல்வரட்னம் சிறிதரன்:- பொதுநலவாய அமைப்பின் கொழும்பு மாநாடு, பல்வேறு எதிர்பார்ப்புக்களையும், பலதரப்பட்ட உணர்வுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த மாநாட்டைப் பல உலக நாடுகள் புறக்கணிக்கக் கூடும். இதனால் இந்த மாநாட்டை நடத்துவதில் இலங்கை அரசுக்கு சிக்கல்கள் ஏற்படக் கூடும் என்ற எதிர்பார்ப்புகூட பலதரப்பிலும் நிலவியது. எனினும் இலங்கை அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கத்தக்க வகையில் இந்த மாநாட்டில் பெரும் எண்ணிக்கையிலான நாடுகள் கலந்து கொண்டிருக்கின்றன. இந்த மகிழ்ச்சியில்தானோ என்னவோ உங்கள் மீது போர்க்குற…
-
- 0 replies
- 949 views
-
-
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்... ஸ்ரீலங்கா அரசும் பொதுநலவாயமாநாடும் - சாந்தி சச்சிதானந்தம் 16 நவம்பர் 2013 விருத்தியடைந்து செழிக்கும் ஒன்றுக்குள்ளேயே அதன் அழிவுகளின் விதைகளும் இருக்கும் என்பது இயற்கையின் நியதி. ஸ்ரீலங்கா அரசிற்கு பொதுநலவாய மாநாடு அவ்வகையானதொரு அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டினை இலங்கை ஏற்பாடு செய்தால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு அந்த அமைப்பின் தலைமைத்துவப் பதவியினை அடைந்தால், உலகநாடுகளின் மத்தியில் உருத்துடனும் (with legitimacy) அந்தஸ்துடனும் உலாவலாம் எனக் கனவுகண்டது. இந்நாடுகளின் மூலம் தனக்குக் கிடைக்கப் போகும் அங்கீகாரம் போர்க் குற்றச்சாட்டுக்களைப் புறந் தள்ளும் எனநம்பியது. அதற்காகவே, தனது இ…
-
- 0 replies
- 938 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைப் பற்றி...தமிழ் நாட்டைநோக்கி ஓர் மடல் November 13, 2013 at 11:22pm முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைப் பற்றி அதிகம் கவலைப்படும் உண்மைத் தமிழ்த்தேசிய அன்பர்களுக்கு தமிழ் நாட்டைநோக்கி ஓர் மடல்... இந்த நினைவிடம் நன்றேதான். அது அமைக்கப்பட்டவிதமும் அதற்காக உழைத்த ஓவியர் வீர சந்தானம் போன்றவர்களும் சிற்பிகள் முருகன் குழுவினரும் பாராட்டப் படவேண்டியவர்கள்தான். அவர் தேர்ந்த கல்லும் அதன் நிறமும் “மயமதத்திலோ” “சிற்பசாத்திரத்திலோ” முன்மொழியப்பட்டதைவிட அதிகம் முரண்படாத வகையில் அமைந்தவைதான். நினைவிடத்திற்காகன இருப்பிடமும் அமைந்த திசையும் நன்றேதான். இன்றைக்கான உலகில் தவறைச் செய்துவிட்டு அதை சரியானதாக்க முயல்வதை யாரும் கருணை கொண்டு பார்ப்பதில்ல…
-
- 7 replies
- 1.1k views
-
-
பொதுநலவாய அமைப்பின் மாநாடும் சர்வதேச பிராந்திய சக்திகளின் வியூகங்களும் முத்துக்குமார் பொதுநலவாய அமைப்பின் மாநாட்டுக்கான ஆரவாரங்கள் ஆரம்பித்துவிட்டன. சிறிலங்கா அரசு மாபெரும் விழாவாக இதனைக் கொண்டாடுவதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றது. பொதுநலவாய அமைப்பின் சின்னம் இலங்கை முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றது. தென்னிலங்கை ஊடகங்கள் இம் மாநாட்டிற்கு பாரிய முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றன. எவ்வாறாவது சர்வதேச ரீதியாக இலங்கை மீது படிந்துள்ள கறைகளை அகற்றவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவது தெளிவாகவே தெரிகின்றது. மறுபக்கத்தில் இம் மாநாடு தொடர்பான அமர்க்களங்களை வரலாற்றில் ஒருபோதும் இவ் அமைப்பு சந்தித்ததில்லை. இலங்கை அரசின் ஆரவாரங்கள், தமிழ்நாட்டின் போராட்டங்கள், இந்திய அரசின…
-
- 3 replies
- 1.1k views
-
-
இனப்படுகொலையை மூடிமறைக்கும் சிறிலங்கா – கனடா ஊடகம் [ ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2013, 09:18 GMT ] [ நித்தியபாரதி ] 1000 மக்களைப் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையானது 10 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இதே ஐ.நா பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்களின் இழப்புக்கு காரணமாக உள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு Toronto Star ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் Rosie DiManno எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கண்ணீர்த் துளி போன்ற ஒரு வடிவத்தில் உள்ள ஒரு தீவே சிறிலங்காவாகும். சிறிலங்காத் தீவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது விழுந்த கண்ணீர்த் துளிக…
-
- 1 reply
- 600 views
-
-
மேற்குலகு, அதற்கு போட்டியாகும் எழும் சீனா, இந்திய மாக்கடல் வல்லரசாகும் கனவோடு உலக அரசியலில் எத்தனிக்கும் இந்தியா என இம்மூன்று சக்திகளின் கரங்கள் இத்தோல்வியின் பின்னால் தொழிற்பட்டன -குணா.கவியழகன்*. 01. ஈழப்போராட்டத்தில் ஆயுதப்போரின் தோல்வி வெறும் உள்நாட்டுப் பரிமாணம் கொண்டதல்ல. இருதரப்பு மோதல்களின் முடிவாய் நிகழ்ந்த வெற்றி தோல்விகளும் அல்ல. இத்தோல்வியின் பின்னணியில் அனைத்துலக அரசியல் பரிமாணம் உண்டு. பொதுப்புத்தியில் இதற்கு அனைத்துலக காரணிகள் உண்டு எனத் தெரிந்தாலும் அதன் பரிமாணம் என்ன? எதற்காக நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது? என்ன காரணத்திற்காக நிகழ்ந்தது? என்பது வெகுசன அறிவுக்கு எட்டவில்லை. ஆனால் எட்டவேண்டியது அவசியம். போர் தோற்றாலும் தமிழர்கள் போராட்டத்தில் தோற்றுப்ப…
-
- 5 replies
- 1.1k views
-
-
"திராவிட கட்சிகள் நேர்மையற்று கொள்கையற்று செத்து வீழ்ந்து விட்டது" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆவேசமாக கூறினார். புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விகடன் டாட்காமுக்கு அளித்த சிறப்பு பேட்டி: காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அரசுக்கு தரும் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளாரே? இது காலங்கடந்தது. ‘இசைப்பிரியாவுக்கு இப்படி நடந்துவிட்டது; இனிமேலும் போகலாமா? இதற்கு மேலும் பொறுத்துக் கொண்டிருக்கலாமா? நாம் தமிழர்கள் தானா? இதற்கு மேலும் இந்தியா போகலாமா? என்று கேட்கிறார். இதைத்தானே நாங்கள், ‘இதற்கு மேலும் இந்த அரசில் பங்கேற்கலாமா?’ என்று அன்று கேட்டோம். இன்று எடுத்திருக்கும் நிலைப்பாட்டை அன்…
-
- 0 replies
- 740 views
-
-
இந்திய ஆட்சி மாற்றம் தமிழர் பிரச்சனையில் தாக்கங்களை ஏற்படுத்துமா? யதீந்திரா சமீபத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.ஜே.பி தலைவர்களை சந்தித்து பேசியிருந்தார். அதன் மறுதினமே அவரது சந்திப்பிற்கு பதிலளிப்பது போன்று, இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசமும் பி.ஜே.பியின் சில முக்கியஸ்தர்களை சந்தித்து பேசியிருந்தார். அடுத்த ஆண்டு, இடம்பெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலில், இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி அதிக ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் நரேந்திர மோடி பிரதமராக வரக்கூடிய சாதக நிலைமையும் காணப்படுவதாக நம்பப்படுகிறது. ஆனால், ஒருவேளை நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு கிளம்பினால்…
-
- 1 reply
- 686 views
-
-
வரவேண்டாம், வாருங்கள் - செல்வரட்னம் சிறிதரன்:- 03 நவம்பர் 2013 'பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆள்பவன்தான இறைவன்' என்றொரு சினிமா பாடல் வரியொன்று உள்ளது. பூஜ்ஜியம் என்பது ஒன்றுமில்லை, வெறுமை என்பதுதான் கருத்து. ஒரு வெறுமைக்குள்ளே ஓர் அரசை ஆள்வதென்பது முடியாத காரியம். இந்த முடியாத காரியத்தை அல்லது, இல்லாத ஒன்றைச் செய்வதென்பது, மிகமிக கெட்டித்தனமான செயலாகும். இந்தச் செயலைத்தான், இந்த இராஜதந்திரத்தைத்தான் இறைவன் செய்கின்றான் என்பதையே அந்தப் பாடல் வரி எடுத்துக் கூறுகின்றது. இந்த பூஜ்ஜியத்துக்குள் இராஜ்ஜியத்தை ஆள்கின்ற மாயவித்தையைத்தான், மந்திர விளையாட்டைத்தான், இராஜதந்திரத்தையே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, வடமாகாண சபையின் ஊடாகச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின…
-
- 1 reply
- 650 views
-
-
தமிழ் தேசியப் போராட்டமும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பும் - நிர்மானுசன் பாலசுந்தரம் 01 நவம்பர் 2013 அறிமுகம் கருத்தியல் வேறுபாடுகளுக்கு மத்தியில் புலம்பெயர் தமிழர்களும், அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியில் தமிழக அரசியலும் சிக்குண்டாலும், தமிழர் தேச அரசியலில் அவர்களது பங்களிப்பு மிக முக்கியமானது. அத்தகைய சூழலில், ஈழத்தமிழர் நலனை முன்னிறுத்திய புலம்பெயர் மற்றும் தமிழக அரசியல் செயற்பாடுகளை பலவீனப்படுத்துமாற் போல் சில கருத்துக்களை வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தேர்தலை அண்மித்த காலப்பகுதியில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கள், முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசு 2009 ல் நடாத்திய இனஅழிப்புப் போருக்குப் (Genocidal war) பின்னர், தமிழ…
-
- 0 replies
- 535 views
-
-
தமிழ்பேசும் மக்களின் தற்போதைய பொது எதிரி யார்…? : எஸ். ஹமீத் கட்டுரைத் தலைப்புக்கு பதில் சொல்ல ஆழமான ஆய்வுகள் எவையும் அவசியமில்லை. ஸ்படிக நீரால் நிரப்பப்பட்டிருக்கும் ஒரு நீச்சற் குளத்தில் மிதக்கின்ற பெரிய வண்ணப் பந்து போல அதற்கான பதில் மிகத் தெளிவானது. பந்தை எவ்வளவுதான் நீருக்குள் அமிழ்த்தி வைத்தாலும், அது மீண்டும் மேலே வந்துவிடுகிறது. பந்தைக் காணாதது போலப் பாசாங்கு பண்ணுபவர்கள் அரசியற் குருடர்களாக இருக்க வேண்டும். அவ்வாறே, அதனை மறுத்துரைப்போர் மனசாட்சியை அடகு வைத்துவிட்ட மாபாதகர்களாக இருக்க வேண்டும். கோர நகங்களையும் கொடுமையான பற்களையும் உடைய ஒரு வெறிபிடித்த சிங்கத்தினால் குதறப்படும் அப்பாவி மான்களாகவும் முயல்களாகவும்தான் இலங்கையின் தமிழ்,முஸ்லிம் இனங்கள் தம்ம…
-
- 3 replies
- 1.1k views
-
-
"கூடுவார்கள் ஆனால் கூட்டமைப்பல்ல.. பேசுவார்கள் ஆனால் பொதுமுடிவல்ல.. ஏசாதையுங்கோ இதுதான் TNA" 28 அக்டோபர் 2013 குமரன் கார்த்திகேயன் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கேட்டதா என்பதல்ல தற்போதைய பிரச்சனை, பெருவாரியான மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் நான் கேட்கிறேன் படை அதியாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறியை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கி பொதுவான ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்' என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு சவால் விடுத்துள்ளார். வடக்கின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாக தெரிவானோருக்கு நல்லூர் பிரதேச சபை ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை அவர் தெரிவித்துள்ளார். கடந்த 25ஆம் திகதி இட…
-
- 1 reply
- 459 views
-
-
பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு - 2013: சிறிலங்காவுக்கு நல்வாய்ப்பா, சவாலா? [ திங்கட்கிழமை, 28 ஒக்ரோபர் 2013, 08:58 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவானது தனது நாட்டில் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை நடாத்துவதற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பின் மூலம், தன் மீது அனைத்துலக சமூகத்தால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து விலகிக் கொள்ள முடியும் எனக்கருதுகிறது. இவ்வாறு The Diplomat ஊடகத்தில் Salma Yusuf எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. நவம்பர் 2013ல் சிறிலங்காவில் முதன்முதலாக பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாடானது பிறிதொர…
-
- 1 reply
- 793 views
-
-
முதல் அமர்வில் கூறத் தவறிய விடயங்களும் எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டி பேச்சுக்களும் - அ.நிக்ஸன்- 28 அக்டோபர் 2013 Notes முதலமைச்சரின் அதிகாரங்கள் பற்றிய சட்டரீதியான அனுகுமுறைகளுக்கு எத்தனை உறுப்பினர்கள் ஒத்தழைப்பு வழங்குவார்கள்? மாகாண சபை நிரந்தரமானது என்ற நம்பிக்கையுடன் தமது பதவிகளை மட்டும் உறதிப்படுத்த முற்படும் உறுப்பினர்கள் பாதிப்புகள் தொடர்பான புள்ளி விபரங்களை சேகரிக்க தவறுகின்றனர் வடமாகாண சபையின் முதல் அமர்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை இரண்டு விடயங்களை கூறியது. ஓன்று அரசியல் தீர்வின் முக்கியத்துவம் இரண்டாவது அரசியல் தீர்வுக்காக இலங்கைக்கு வெளியில் நின்று நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழகம் புலம் பெயர்தமிழர்கள் என்ற இரு சமூகங்களின் ஒத்தழைப்பு. 1…
-
- 0 replies
- 336 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் செல்வரட்னம் சிறிதரன் வடமாகாண சபைக்கான தேர்தலில் வாக்களித்துள்ள மக்கள் பல விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அதுகுறித்து அரசியல் விமர்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அந்த மக்கள் வலியுறுத்தியுள்ள முக்கியமான ஒரு விடயம் உடனடியாகத் தீவிர கவனம் செலுத்த வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது. அரசாங்கம் கூறுகின்ற அல்லது வலியுறுத்துகின்ற அபிவிருத்தியை இலக்காக வைத்து அவர்கள் வாக்களிக்கவில்லை. வீதிகள் போடவேண்டும் என்றோ, பாலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றோ, மேலும் பல பகட்டான வசதிகள் வாய்ப்புக்களை வடபகுதிக்குக் கொண்டு வரவேண்டும் என்றோ அவர்கள் கோரவில்லை. அவர்கள் கேட்…
-
- 0 replies
- 478 views
-
-
தமிழரசுக் கட்சி எங்கே நிற்கிறது - கூட்டமைப்பு எங்கே செல்கிறது? விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது?? - யதீந்திரா முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று ஒரு தமிழ் கருத்துண்டு. வடக்கு மாகாணசபை குறித்து சிந்திக்கும் போது மேற்படி கருத்தே நினைவுக்கு வருகிறது. ஏனெனில், அந்தளவிற்கு குழப்பங்களினதும், உள் முரண்பாடுகளினதும் சாட்சியாக தற்போது வடக்கு மாகாணசபை காட்சியளிக்கின்றது. இத்தகைய குழப்பங்களையும், முரண்பாடுகளையும் கடந்து செல்லவேண்டிய நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் காணப்படுகின்றார். அவரால் அது முடியுமா? விடுதலைப் புலிகள் தமிழர் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், தமிழ் மக்களின் அரசியலை கையாளும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமானது. கூட்டம…
-
- 0 replies
- 524 views
-
-
கூட்டமைப்பும் ராஜதந்திரப் போரும் - நிலாந்தன் 27 அக்டோபர் 2013 ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் ஸ்கண்டிநேவிய நாடொன்றிலிருந்து வந்த ஒரு டயஸ்பொறாத் தமிழர் சொன்னார், ''இப்போதிருக்கும் நிலைமைகளே தொடர்ந்தும் இருக்குமாயிருந்தால் அல்லது இவற்றின் இயல்பான வளர்ச்சிப் போக்கின்படி மாற்றங்கள் நிகழுமாயிருந்தால் டயஸ்பொறாவில் உள்ள தமிழர்கள் பொதுப் பணிகளிலிருந்து விலகி தனிப்பட்ட வாழ்வின் சுக துக்கங்களிற்குள் அதிகம் முழ்கத் தொடங்கிவிடுவார்கள்... அடுத்த வசந்த கால விடுமுறைக்கு எங்கே போகலாம். பிள்ளைகளை வேறெந்த உயர்தரமான பள்ளிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் படிப்பிக்கலாம் அல்லது இப்போதிருப்பதை விட வேறெப்படி வசதியாக வாழலாம்... என்பவற்றைப் பற்றியே அதிகம் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள்' என்…
-
- 0 replies
- 484 views
-
-
பொதுநலவாய (கொமன்வெல்த்) அமைப்பிலுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு அடுத்த மாத நடுப்பகுதியில் சிறீலங்காவின் ஹம்பாத்தோட்ட நகரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை நடத்தி தங்கள் மீதுள்ள இனப்படுகொலை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக் கறைகளை அழித்துவிடலாம் என்றெண்ணிய சிங்களத்தின் சிந்தனையில், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடில்லாமல் தற்போது அச்சம் படரத்தொடங்கியுள்ளது. மாநாட்டை சிறீலங்காவில் நடத்தமுனைந்து, வேலியிலை போன ஓணானை மடியிலை பிடித்துக் கட்டியவன் நிலையில் மகிந்த சிக்கித்திணறத் தொடங்கியுள்ளார். கறைகளைக் கழுவிவிடலாம் என்று எதிர்பார்த்த மாநாடு, மேலும் பல கறைகளை தங்கள் மீது ஏற்படுத்திக் கொடுக்கும் மாநாடாக அமைந்துவிடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம். ஏற்கனவே, மனித உரி…
-
- 1 reply
- 890 views
-